BK Murli 3 April 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 3 April 2016 In Tamil

    03.04.2016  காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 29.03.1981  மதுபன்

     “ஞானத்தின் சாரம் “நான் மற்றும் என்னுடைய பாபா”


     பாப்தாதா அனைத்து குழந்தைகளை சம்பன்ன சொரூபமாக ஆக்குவதற்காக தினசரி வெவ்வேறு முறையில் ஞானத்துளிகளைக் கூறிக் கொண்டே இருக்கிறார். அனைத்து துளிகளின் சாரம் – அனைத்தையும் சாரத்தில் கொண்டு வந்து புள்ளி ஆகிவிடுங்கள். இந்த பயிற்சி நிரந்தரமாக இருக்கிறதா? எந்தக் காரியத்தையும் செய்து கொண்டே நான் ஜோதி பிந்து, இந்த கர்மேந்திரியங்கள் மூலமாக இந்தக் காரியத்தை செய்விப்பவன் என்ற நினைவு இருக்கிறதா? இந்த முதல் பாடத்தை சொரூபத்தில் கொண்டு வந்திருக்கிறீர்களா? தொடக்கமும் இது தான் மேலும் முடிவிலும் இதே சொரூபத்தில் நிலைத்திருந்து செல்ல வேண்டும். அப்படி ஒரு நொடியின் ஞானம், ஒரு நொடியில் ஞான சொரூபமாக ஆகியிருக்கிறீர்களா? விஸ்தாரத்தை சுருக்கமாக ஒரு நொடியில் கொண்டு வருவதற்கான பயிற்சி இருக்கிறதா? எந்தளவு விஸ்தாரத்தில் வருவது சுலபமாக இருக்கிறதோ, அந்தளவு சார சொரூபமாவது சுலபமாக அனுபவம் ஆகிறதா? சார சொரூபத்தில் நிலைத்திருந்து பின்பு விஸ்தாரத்தில் வர வேண்டும் என்ற இந்த விஷயத்தை மறந்து விடுவதில்லையே? சார சொரூபத்தில் நிலைத்திருந்து விஸ்தாரத்தில் வருவதினால் எந்த விதமான விஸ்தாரத்தின் ஈர்ப்பு இருக்காது. விஸ்தாரத்தைப் பார்த்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, வர்ணனை செய்து கொண்டே ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அனுபவம் செய்வீர்கள். அந்த மாதிரி பயிற்சி எப்பொழுதுமே நிலைத்திருக்க வேண்டும். இதைத் தான் சுலபமான நினைவு என்று கூறுவது.



    ஞான வாழ்க்கையிலும் அஞ்ஞான வாழ்க்கையிலும், ஒவ்வொரு காரியத்திலும் இரண்டு வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன. அவை யாவை? “நான் மற்றும் என்னுடையது”. இந்த இரண்டு வார்த்தைகளில் ஞானத்தின் சாரமும் இருக்கிறது. நான் ஜோதி பிந்து மற்றும் சிரேஷ்ட ஆத்மா பிரம்மா குமார் அல்லது குமாரி மற்றும் என்னுடையவரோ ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. என்னுடைய பாபா இதில் அனைத்தும் வந்துவிடுகிறது. என்னுடைய பாபா என்றால், என்னுடைய ஆஸ்தியும் அதில் வந்துவிடுகிறது. அப்படி இந்த நான் மற்றும் என்னுடைய என்ற இரண்டு வார்த்தைகளோ உறுதியாக இருக்கிறது தான் இல்லையா? என்னுடைய பாபா என்று கூறுவதினால் அனேக விதமான என்னுடையது என்பவை உள்ளடங்கிவிடுகிறது. அப்படி இரண்டு வார்த்தைகளை நினைவில் கொண்டு வருவது கடினமா அல்லது சுலபமா? இதற்கு முன்பும் இந்த இரண்டு வார்த்தைகளைப் பேசினீர்கள், இப்பொழுதும் இதே இரண்டு வார்த்தைகளை கூறுகிறீர்கள். ஆனால் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? ‘’நான் மற்றும் என்னுடையது” என்ற இந்த முதல் பாடத்தை மறக்க முடியுமா? இதையோ சின்னக் குழந்தை கூட நினைவு செய்ய முடியும். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? அப்படி ஞானம் நிறைந்தவர்கள் இரண்டு வார்த்தைகளை நினைவு செய்ய முடியாது என்று இருக்க முடியுமா என்ன? இதே இரண்டு வார்த்தைகளினால் மாயாவை வென்றவர், தடையற்றவர், மாஸ்டர் சர்வசக்திவான் ஆக முடியும். இரண்டு வார்த்தைகளை மறக்கிறீர்கள் என்றால் மாயா ஆயிரம் ரூபங்களில் வருகிறது. இன்று ஒரு ரூபத்தில் வரும், நாளை இன்னொரு ரூபத்தில் வரும். ஏனென்றால், மாயாவின் என்னுடையது என்னுடையது என்பது மிக நீளமானது. மேலும் என்னுடைய பாபாவோ ஒரே ஒருவர் தான். ஒருவரின் எதிரில் மாயாவின் ஆயிரம் ரூபங்களும் முடிவடைந்துவிடுகிறது. அந்த மாதிரி மாயாவை வென்றவர் ஆகிவிட்டீர்களா? மாயாவிற்கு விவாகரத்து கொடுப்பதில் ஏன் காலம் எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒரு நொடிக்கான விஷயம், இதில் பல வருடங்கள் ஏன் ஆகிறது? விட்டீர்கள் என்றால் விடுபடும். என்னுடைய பாபா பிறகு அவரின் நினைவிலேயே மூழ்கியிருங்கள். தந்தைக்கு அடிக்கடி இதே பாடத்தைத் தான் கற்பிக்க வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கவும் செய்கிறீர்கள். இருந்தும் மறந்துவிடுகிறீர்கள். மற்றவர்களுக்கு நினைவு செய்யுங்கள், நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறீர்கள். பிறகு நீங்களே ஏன் மறந்துவிடுகிறீர்கள்? மறக்காதவராக ஆவதற்கு எந்த தேதியை நிர்ணயம் செய்வீர்கள். அனைவருக்கும் ஒரே தேதி இருக்குமா அல்லது வேறு வேறாகவும் இருக்க முடியுமா? எத்தனை பேர்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்களோ அத்தனை பேர்களுக்கும் ஒரே தேதியாக இருக்க முடியுமா? பிறகு (தேவையற்ற, வீணான) விஷயங்களைப் பேசுவது முடிந்துவிடும். குஷியான விஷயங்களைக் கண்டிப்பாகக் கூறுங்கள். ஆனால் பிரச்சனைகளைப் பேசாதீர்கள். எப்படி கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளைச் செய்கிறீர்கள் என்றால், திறப்பு விழாவிற்காக கத்திரிக்கோல் மூலம் மலர் மாலையை வெட்ட வைக்கிறீர்கள். அப்படி இன்று என்ன செய்வீர்கள்? நீங்களே கத்திரிக்கோலைக் கையில் எடுப்பீர்கள் அதிலேயும் (கத்திரிக்கோலிலும்) இரண்டு பக்கமும் ஒன்றாக இணையும் போது ஏதாவது ஒன்று வெட்டப்படுகிறது. அப்படி ஞானம் மற்றும் யோகா இரண்டின் இணைவது மூலம் மாயாவின் பிரச்சனைகளின் பந்தனம் அழிந்துவிட்டது என்ற இந்த குஷியான செய்தியைக் கூறுங்கள். இன்று இதே பிரச்சனைகளின் பந்தனத்தை துண்டிப்பதற்கான நாள் ஆகும். ஒரு நொடிக்கான விஷயம் தான் இல்லையா? தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? யார் யோசித்த பிறகு இந்த பந்தனத்தை துண்டிப்பீர்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள். பிறகோ அனைத்து வெளிநாட்டினரும் தீவிர முயற்சி செய்பவர்களின் பட்டியலில் வந்துவிடுவார்கள். கேட்கும் நேரத்திலேயே அனைவரின் முகம் மாறிவிட்டது. அப்படி எப்பொழுது நிரந்தரமாக ஆகிவிட்டீர்கள் என்றால் என்னவாகி விடும்? அனைவரும் நடைமுறையில் போகும்போதும் வரும்போதும் அவ்யக்த வதனத்தின் பரிஷ்தாக்களாகத் தென்படுவீர்கள். பிறகு சங்கமயுகம் பரிஷ்தாக்களின் யுகமாக ஆகிவிடும். இதே பரிஷ்தாக்கள் மூலமாக பின்பு தேவதைகள் வெளிப்படுவார்கள். பரிஷ்தாக்களை தேவதைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதைகளின் பிரவேசம் சம்பன்ன உடலில் ஆகும் இல்லையா? இவர்கள் 16 கலைகள் நிரம்பியவர்களாக ஆகட்டும். பிறகு வரமாலையை அணிவிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை கலைகள் தயாராகி இருக்கின்றன? சூட்சும வதனத்தில் சம்பன்ன பரிஷ்தா சொரூபம் மற்றும் தேவதைகளின் சந்திப்பின் காட்சி மிக நன்றாக இருக்கும். பரிஷ்தாக்களுக்குப் பதிலாக எப்பொழுதும் முயற்சி செய்யும் நிலையே இருக்கிறது என்றால், தேவதைகளும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நேரத்திற்கு ஏற்றாற்போல் அருகில் வந்து கொண்டும், சம்பன்னமாக இல்லாத காரணத்தினால் பின் தங்கியும் விடுகிறார்கள். இந்த வரமாலை அணிவிக்கும் தேதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த தேதி எதுவாக இருக்கும்? தேதி நிச்சயிக்கப்படுவதினால் எப்படி இலட்சியமோ அப்படி இலட்சணம் வந்துவிடுகிறது. அந்த தேதியோ இன்றாக ஆகிவிட்டது. அப்படி இதுவும் அருகாமையானதாக ஆகிவிட்டது இல்லையா? ஏனென்றால், தடையற்றவர் ஆகுக! என்ற நிலை சிறிது காலம் இடைவிடாதிருக்க வேண்டும். அப்பொழுது தான் வெகு காலம் தடையற்ற இராஜ்யம் செய்ய முடியும். இப்பொழுதோ பிரச்சனைகள் மற்றும் சமாதானத்தின் ஞானம் நிறைந்தவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். எந்த விஷயத்தை யாரிடம் கேட்கிறீர்களோ அதற்கு முன்பு ஞானத்தின் ஆதாரத்தினால் இது இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள். மற்றவர்களுக்காக கஷ்டப்படுவதற்குப் பதிலாக, நேரத்தை இழப்பதற்குப் பதிலாக அதே ஞானத்தின் லைட் மற்றும் மைட்டின் (ஞான ஒளி மற்றும் சக்தி) ஆதாரத்தில் ஒரு நொடியில் முடித்துவிட்டு ஏன் முன்னேறிச் செல்லக்கூடாது. என்ன நடக்கிறது என்றால் மாயா தூரத்திலிருந்தே அந்த மாதிரி நிழல் போடுகிறது. அதன் மூலம் பலமற்றோராக ஆக்கிவிடுகிறது. நீங்கள் அந்த நேரத்திலேயே தொடர்பை சரி செய்யுங்கள். தொடர்பை சரி செய்வதினால் மாஸ்டர் சர்வசக்திவானாக இயல்பாகவே ஆகிவிடுவீர்கள்.



    மாயா தொடர்பைத் தான் தொய்வாக்குகிறது, அதன் பாதுகாப்பை மட்டும் செய்யுங்கள். எங்கேயோ தொடர்பு தொய்வான காரணத்தினால் தான் பலமின்மை வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். என்ன ஆனது, ஏன் ஆனது என்று இதை யோசிக்காதீர்கள். ஏன் என்பதற்குப் பதிலாக தொடர்பையே சரி செய்து விட்டீர்கள் என்றால் அனைத்தும் முடிந்துவிடும். சகயோகத்திற்காக நேரம் கொடுங்கள் அது ஒன்றும் பாதகம் இல்லை. யோகத்தின் வாயுமண்டலம், வைப்ரேஷனை உருவாக்குவதற்காக சகயோகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றபடி மற்ற வீணான விஷயங்கள் பேசுவது மற்றும் விஷயத்தின் விஸ்தாரத்தில் செல்வது. இதற்காக யாருடனும் ஒத்துப் போகாதீர்கள். அது நற்சிந்தனையாளராக ஆக்கிவிடும் இதுவோ பரசிந்தனை ஆகிவிடும். அனைத்து பிரச்சனைகளுக்குமான மூல காரணம் தொடர்பு தொய்வாகுவது. இந்த ஒரு விஷயம் தான் இருக்கிறது. நாடகத்தில் எனக்கு இல்லை, எனக்கு சகயோகம் கிடைக்கவில்லை, எனக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்ற இவை அனைத்தும் வீணான விஷயங்கள். அனைத்துமே கிடைத்துவிடும், நீங்கள் தொடர்பை சரியாக வைத்தீர்கள் என்றால் அனைத்து சக்திகளும் உங்கள் எதிரில் சுற்றிக் கொண்டே இருக்கும். எங்காவது செல்வதற்குக் கூட நேரமே கிடைக்காது. பாப்தாதாவின் எதிரில் சென்று அமர்ந்துவிட்டீர்கள் என்றால் தொடர்பை இணைப்பதற்காக பாப்தாதா உங்களுடைய சகயோகி ஆகிவிடுவார். ஒருவேளை ஓரிரு விநாடி அனுபவம் ஆகவில்லை என்றாலும் குழப்பம் அடைந்து விடாதீர்கள். துண்டிக்கப்பட்டிருக்கும் தொடர்பை இணைப்பதில் ஒரு விநாடி அல்லது நிமிடமும் ஆகலாம். எனவே தைரியத்தை இழக்காதீர்கள். நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை அசைக்காதீர்கள். மேலும் நிச்சயத்தை இன்னும் அதிகமாக பரிபக்குவம் ஆக்குங்கள். பாபா என்னுடையவர், நான் பாபாவினுடையவன் என்ற இதே ஆதாரத்தினால் நிச்சயத்தின் அஸ்திவாரத்தை இன்னும் உறுதியாக்குங்கள். தந்தையையும் தன்னுடைய நிச்சயத்தின் பந்தனத்தில் கட்டிப் போட முடியும். தந்தையும் செல்ல முடியாது. இந்த அளவு அதிகாரம் குழந்தைகள் உங்களுக்கு இந்த நேரம் கிடைத்திருக்கிறது. அதிகாரத்தை ஞானத்தை உபயோகியுங்கள். குடும்பத்தின் சகயோகத்தை உபயோகியுங்கள். புகார் எடுத்துக் கொண்டு இங்கு வராதீர்கள். சகயோகம் வேண்டும் என்றும் கேட்காதீர்கள். நிகழ்ச்சியை நிர்ணயம் செய்யுங்கள், என்ன செய்வேன், எப்படிச் செய்வேன் என்று பயப்படாதீர்கள். ஆனால் சம்மந்தத்தின் ஆதாரத்தில் சகயோகத்தின் ஆதாரத்தினால் செல்லுங்கள். புரிந்ததா? ஒரு நொடியில் கீழே இறங்குவது, ஒரு நொடியில் மேலே செல்வது என்ற இந்த சம்ஸ்காரத்தை மாற்றம் செய்யுங்கள். இரட்டை வெளிநாட்டினர் கீழே இறங்குவதிலும் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். மேலே செல்வதிலும் விரைவாகச் சென்றுவிடுகிறார்கள். நடனமும் அதிகம் ஆடுகிறார்கள். ஆனால் பயப்படும் நடனத்தையும் நன்றாக ஆடுகிறார்கள். இப்பொழுது இதையும் பரிவர்த்தனை செய்யுங்கள். நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள், பிறகு இந்த நடனத்தை ஏன் ஆடுகிறீர்கள்?



    உண்மை மற்றும் தெளிவு என்ற லிஃப்ட்டின் காரணமாக முன்னேறிக் கொண்டும் இருக்கிறீர்கள். இந்த விசேஷம் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. இந்த விசேஷத்தைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். இப்பொழுது பயப்படும் நடனத்தை மட்டும் விட்டு விட்டீர்கள் என்றால் மிக வேகமாக முன்னேறிச் செல்வீர்கள். வரிசை எண்ணை மிக முன்னுக்கு எடுத்துவிடுவீர்கள். இறுதியில் வந்தவரும் வேகமாகச் செல்வார், வேகமாகச் சென்று முதலில் வருவார் என்ற இந்த விஷயமோ அனைவருக்கும் உறுதியாக இருக்கிறது தான் இல்லையா? குஷியின் நடனத்தையோ வேண்டும் என்றால் நன்றாக ஆடுங்கள். தந்தையின் கையை விடுகிறீர்கள் என்றால், இவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார் என்று தந்தைக்கும் பிடிப்பதில்லை. தந்தையின் கையோடு கை கோர்த்திருந்தது என்றால் பிறகு பயப்படும் நடனமோ இருக்கவே முடியாது. மாயாவின் கரத்தை எப்பொழுது பிடிக்கிறீர்களோ அப்பொழுது தான் அந்த நடனம் இருக்கிறது. தந்தைக்கு உங்கள் மேல் அந்தளவு அன்பு இருக்கிறது அதன் காரணமாக நீங்கள் இன்னொருவருடன் செல்வதைப் பார்க்கவும் முடியாது. எவ்வளவு அலைந்து திரிந்து கடினங்களைச் சந்தித்து பிறகு தந்தையிடம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்று தந்தை தெரிந்திருக்கிறார் என்றால், குழப்பமடைய எப்படி விடுவார்? சாகார ரூபத்திலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஸ்தூலமாகவும் குழந்தைகள் எங்காவது செல்கிறார்கள் என்றால் பாப்தாதா குழந்தைகளிடம் வா குழந்தையே, வா குழந்தையே . . . என்று கூறினார். எப்பொழுது மாயா தன்னுடைய ரூபத்தை காண்பிக்கிறது என்றால், இந்த வார்த்தையை நினைவு செய்யுங்கள்.



    அமிர்தவேளையின் நினைவை சக்திசாலியாக ஆக்குவதற்காக முதலில் தன்னுடைய சொரூபத்தை சக்திசாலி ஆக்குங்கள். புள்ளி ரூபமாக ஆகி அமர்ந்தாலும் சரி அல்லது ஃபரிஷ்தா ரூபத்தில் அமர்ந்தாலும் சரி. என்ன காரணம் என்றால் சுயம் தன்னுடைய ரூபத்தை மாற்றுவதில்லை. தந்தையை மட்டும் அந்த ரூபத்தில் பார்க்கிறீர்கள். தந்தையை புள்ளி ரூபத்தில் அல்லது ஃபரிஷ்தா ரூபத்தில் பார்ப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள் ஆனால் எதுவரை நீங்களே அந்த மாதிரி ஆகவில்லையோ அதுவரை சந்திப்பை செய்ய முடியாது. தந்தையை மட்டும் அந்த ரூபத்தில் பார்ப்பதற்கான முயற்சி செய்வதோ பக்தி மார்க்கத்திற்குச் சமமாக ஆகிவிடுகிறது. எப்படி அவர்கள் தேவதைகளை அந்த ரூபத்தில் பார்க்கிறார்கள். மேலும் அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பார்கள். அந்த நேரம் வாயுமண்டலம் குஷியானதாக இருக்கும் கொஞ்ச நேரத்திற்கு பிரபாவம் ஏற்படும். ஆனால் அந்த அனுபவம் ஆவதில்லை. எனவே முதலில் சுய சொரூபத்தை மாற்றுவதற்கான பயிற்சி செய்யுங்கள். பிறகு மிக சக்திசாலியான நிலை அனுபவம் ஆகும்.



    தாதிகளுடன் –

    விதவிதமானவர்களைப் பார்த்து குஷி ஏற்படுகிறது தான் இல்லையா? இருந்தாலும் இவர்கள் நல்ல தைரியம் உள்ளவர்கள். தன்னுடைய அனைத்தையும் மாற்றம் செய்வது மேலும் மற்றவர்களை தன்னுடையவர்களாக ஆக்குவது, இதுவும் இவர்களுடைய தைரியம் தான். அந்த அளவு மாறிவிட்டார்கள்! அவர்கள் நம்முடைய பரிவாரத்தை சேர்ந்தவர்கள் என்று தென்படுகிறார்கள். இதுவும் நாடகத்தில் இவர்களுடைய விசேஷ பங்காகும். என்னுடையவர்கள் என்ற உணர்வின் மூலமாகத் தான் இவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் பார்த்து குஷி ஏற்படுகிறது. முதலிலோ ஒரே பாரதத்தைச் சேர்ந்தவர்களாக அனேக மரங்கள் அடங்கிய ஒரு கெட்டி மரமாக இருந்தது. ஆனால் இப்பொழுது உலகின் நாலாபுறங்களில் உள்ள மூலைகளில் சென்று அனேக சம்ஸ்காரம், அனேக மொழிகள், அனேக உணவு பழக்கவழக்கங்கள் உடைய அனைத்து ஆத்மாக்களும் ஒரே மரத்தினுடையவர்களாக ஆகிவிட்டார்கள். இதுவும் அதிசயம் தான். அனைவரும் ஒன்றாக இருந்தார்கள், மேலும் இருக்கிறார்கள், இன்னும் இருப்பார்கள். அந்த மாதிரியே அனுபவம் செய்கிறார்கள். அனைவரின் அன்பு விசேஷமாக கிடைத்தே விடுகிறது.



    பாண்டவர்களுடன் –

    அனைவரும் பெரும் வள்ளல்கள் தான் இல்லையா? யாருக்காவது குஷி கொடுப்பது - இது அனைத்தையும் விட மிகப்பெரிய புண்ணிய காரியம். இது சேவை ஆகும். பாண்டவர்களோ எப்பொழுதும் ஒரே சீரான நிலையில், ஒற்றுமையில் இருக்கக்கூடிய சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் தான் இல்லையா? அனைத்து பாண்டவர்களும் மகிமைக்குத் தகுதியானவர்கள், பூஜைக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். பக்தர்களுக்காகவோ இப்பொழுதும் பூஜைக்குரியவர்களாகத் தான் இருக்கிறீர்கள், பிரத்யக்ஷ்மாக மட்டும் ஆகவில்லை (பாண்டர்வகளின் பூஜை கணேசர் மற்றும் ஹனுமானின் ரூபத்தில் மட்டும் தான் நடக்கிறது) இல்லை. இன்னும் தேவதைகளும் இருக்கிறார்கள். கணேசர் யார் என்றால், யார் அனைத்து விஷயங்களையும் வயிற்றுக்குள் நிரப்பி வைப்பவர். ஹனுமான் வால் மூலமாக அசுர சம்ஸ்காரங்களை எரிப்பவர். வாலும் சேவைக்காகத் தான் இருக்கிறது. கேட்க வேண்டும் என்ற வால் இல்லை. விஷயத்தை உள்ளடக்கி வைப்பவர்கள், அங்கு இங்கு பரப்புபவர்கள் இல்லை என்ற விசேஷம் பாண்டவர்களினுடையது. அனைவரும் எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறீர்கள் தான் இல்லையா? பாண்டவபதி மற்றும் பாண்டவர்கள் எப்பொழுதும் இணைந்த ரூபத்தில் இருக்கிறார்கள். பாண்டவபதி பாண்டவர்களின்றி எதையும் செய்ய முடியாது. எப்படி சிவசக்தி இருக்கிறார்களோ அதே போல் பாண்டவபதியை முன்னுக்கு வைத்திருக்கிறோம். அப்படியானால் இணைந்த ரூபம் எப்பொழுதும் நினைவில் இருக்கிறதா? எப்பொழுதாவது தன்னை தனிமையில் இருப்பதாக உணர்வதில்லையே? நண்பன் யாராவது வேண்டும் என்று அப்படி உணரவில்லையே? யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற அந்த நிலை இல்லையே? யார் எப்பொழுதும் இணைந்த ரூபத்தில் இருக்கிறாரோ அவர் எதிரில் பாப்தாதா நடைமுறையில் அனைத்து உறவுகளினால் எதிரில் இருக்கிறார். எவ்வளவு ஈடுபாடு இருக்குமோ அந்த அளவு விரைவில் தந்தை எதிரில் இருப்பார். அவரோ நிராகாரமானவர், ஆகாரமாக இருக்கிறார், அவருடன் எப்படி பேசுவது என்று அப்படி இருக்க வேண்டாம். யார் அவர்களுக்குள் பேசிக் கொள்வதிலும் நேரத்தை செலவிடுவார்களோ அவர்கள் தேடுவார்கள். இங்கேயோ தேடுவதற்கும் மற்றும் நேரம் கொடுப்பதற்கான அவசியமே இல்லை. எங்கே அழைத்தாலும் அங்கே ஆஜராகிவிடுவார். எனவே தான் அழைத்தேன் வந்தார் என்று கூறுகிறார்கள். அந்த மாதிரி அனுபவம் ஆகிறதா? இப்பொழுது நாளாக நாளாக எப்படி நடைமுறையில் இன்று பாப்தாதா வந்தார், எதிரில் வந்து கையைப் பிடித்தார், புத்தியால் அல்ல, கண்களால் பார்ப்பீர்கள், அனுபவம் ஏற்படும் அந்த மாதிரி அனுபவம் ஏற்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் இதில் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற பாடம் மட்டும் உறுதியாக இருக்க வேண்டும்.



    எப்பொழுதாவது எல்லைக்குட்பட்ட வைராக்கியம் வருவதில்லையே? எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியமோ இருக்க வேண்டும். அனைவரும் யக்ஞ சேவையின் பொறுப்பு என்ற சவாலை எடுத்துக் கொண்டீர்கள். இப்பொழுது நாம் அனைவரும் ஒருவர், நம் அனைவரின் அனைத்துக் காரியமும் ஒன்று என்பது மட்டும் நடைமுறையில் தென்பட வேண்டும். இப்பொழுது ஒரு ரிக்கார்டை (நடப்பதை பதிவது) தயார் செய்ய வேண்டும், அது என்ன? அந்த ரிக்கார்ட் வாயினுடையது அல்ல. ஒவ்வொருவருக்கும் ரிகார்டு (மரியாதை) கொடுப்பதின் ரிக்கார்ட். இந்த ரிக்கார்ட் தான் (இசைத்தட்டு) நாலாபுறங்களிலும் ஒலிக்கும். மரியாதையைக் கொடுக்க வேண்டும் மரியாதை பெற வேண்டும். சிறியவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும், பெரியவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இந்த மரியாதையைக் கொடுக்கும் இசைத்தட்டு உருவாக வேண்டும். இப்பொழுது நாலாபுறங்களிலும் இந்த இசைத்தட்டிற்கான அவசியம் இருக்கிறது.



    சுயமுன்னேற்றம் மற்றும் உலக முன்னேற்றம் இரண்டிற்குமான திட்டம் சேர்ந்தே இருக்க வேண்டும். தெய்வீக குணங்களின் மகத்துவத்தை சிந்தனை செய்யுங்கள். ஒவ்வொரு குணத்தையும் கடைபிடிப்பதில் என்ன பிரச்சனை வருகிறது என்று சிந்தியுங்கள். அதை அகற்றிவிட்டு குணத்தைக் கடைபிடித்து நாலாபுறங்களிலும் அனைவரும் அனுபவம் செய்யும் அளவிற்கு நறுமணத்தை பரப்புங்கள். புரிந்ததா?



    வரதானம்:

    “ஒரே பலம் மற்றும் ஒரே ஒருவர் மேல் உள்ள நம்பிக்கையின்” ஆதாரத்தில் அடைய வேண்டிய இலக்கை அருகில் அனுபவம் செய்யக்கூடிய தைரியம் உள்ளவர்கள் ஆகுக!



    உயர்ந்த இலக்கை சென்றடைவதற்கு முன்பு சூறாவளி, புயல் வரத்தான் செய்யும், படகு அக்கறை செல்வதற்கு முன்பு இடையில் நீர்ச்சுழிகளை கடந்து செல்லத்தான் வேண்டும். எனவே அவசரத்தில் பயப்படாதீர்கள், களைப்படையாதீர்கள் மற்றும் நிற்காதீர்கள். துணைவனை துணையாக வைத்துக் கொண்டீர்கள் என்றால் ஒவ்வொரு கடினமும் சுலபம் ஆகிவிடும், தைரியம் உள்ளவராகி தந்தையின் உதவிக்கு பாத்திரமானவர் ஆகுங்கள். ஒரே பலம் ஒரே நம்பிக்கை என்ற இந்த பாடத்தை எப்பொழுதும் உறுதியாக வைத்துக் கொண்டீர்கள் என்றால் இடையில் உள்ள நீர்ச்சுழிகளை சுலபமாக கடந்து சென்றுவிடுவீர்கள். பிறகு அடைய வேண்டிய இலக்கு அருகில் அனுபவம் ஆகும்.



    சுலோகன்:

    யார் இயற்கையையும் சேர்த்து ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சுபபாவனை வைக்கிறாரோ அவர் தான் உலகிற்கு நன்மை செய்பவர்.



    ***OM SHANTI***