BK Murli 22 May 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 22 May 2016 Tamil

    22.05.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ் 02.10.1981  மதுபன்

     '' எப்பொழுதும் சந்திப்பின் ஊஞ்சலில் ஆடுவதற்கான ஆதாரம் ''


    இன்று உலகின் நாலாபுறங்களிலும் நினைவில் இருக்கும் குழந்தைகளை பாப்தாதா சாகாரம் (ஸ்தூல உடலில்) மற்றும் ஆகாரத்தில் (சூட்சும உடலில்) நேரெதிரில் பார்த்துக் கொண்டே, அவர்களுடைய நினைவிற்குப் பிரதிபலனாக பல கோடி மடங்கு அன்பு நினைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிலர் உடலால், சிலர் மனதால் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், ஒருவரின் நினைவிலேயே நிலைத்திருக்கிறார்கள். பாப்தாதாவோ கஜானாக்களை ஏற்கனவே கொடுத்து விட்டார். சாகார பாபா மூலமாக மற்றும் ஆகார அவ்யக்த ரூபம் மூலமாக அனைத்து கஜானாக்களின் அதிபதிகளாக உங்களை ஆக்கி விட்டார். எப்பொழுது அனைத்து கஜானாக்களின் அதிபதியாக ஆகி விட்டீர்கள் என்றால் இன்னும் மிச்சம் வேறு என்ன இருக்கிறது? ஏதாவது இருக்கிறதா? பாப்தாதாவோ எஜமானர்களுக்கு சலாம் (வணக்கம்) செய்வதற்காக வந்திருக்கிறார். பார்க்கும்பொழுது மாஸ்டர் ஆக ஆகியே விட்டீர்கள், இன்னும் மிச்சம் என்ன இருக்கிறது?



    கேட்பதின் கணக்கைப் போட்டு பாருங்கள் மற்றும் கூறுபவரின் கணக்கையும் பாருங்கள். அளவற்று கேட்டு விட்டீர்கள், அளவற்று கூறிவிட்டோம். கேட்டு - கேட்டு கூறுபவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். அப்படி யானால் மற்றவர்களுக்கு கூறுபவர்கள் என்ன கேட்க வேண்டும். உங்களுடைய பாடலே இருக்கிறது, அனுபவத்தின் பாடலைப் பாடுகிறீர்கள் 'என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம் - இன்னும் அடைவதற்கு மிச்சம் என்ன இருக்கிறது'. இது யாருடைய பாடல் பிரம்மா பாபாவினுடையதா அல்லது பிராமணர்களின் பாடலாகவும் இருக்கிறதா? உங்களுடைய பாடல் இது தான் இல்லையா? எனவே தந்தையும் இன்னும் செய்ய வேண்டிய வேலை மிச்சம் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். தந்தை உங்களில் நிரம்பி விட்டார், மேலும் நீங்கள் தந்தையில் நிரம்பிவிட்டீர்கள், எப்பொழுது நிரம்பிவிட்டீர்கள் என்றால் மிச்சம் என்ன பாக்கி இருக்கிறது? நிரம்பிவிட்டீர்களா அல்லது நிரம்பிக் கொண்டிருக்கிறீர்களா? என்ன சொல்வது? நிரம்பிவிட்டீர்களா அல்லது நிரம்பிக் கொண்டிருக்கிறீர்களா? நதி மற்றும் கடலின் சந்திப்போ நடந்தே விட்டது தான் இல்லையா? நிரம்புவது என்றால் சந்திப்பது. அப்படி சந்தித்து விட்டீர்கள் இல்லையா? கடல் கங்கையை விட்டு விலகி தனியாக இல்லை மற்றும் கங்கை கடலை விட்டு விலகி தனியாக இல்லை. கங்கை மற்றும் கடலின் அழியாத சந்திப்பு. நிரம்பிவிட்டார்கள் என்றால் சமமாக ஆகிவிட்டார்கள். சமமாக ஆகுபவர்களுக்கு பாப்தாதாவும் அன்பின் வாழ்த்துக்களைக் கூறுகிறார்.



    இந்த தடவை பாப்தாதா பார்ப்பதற்கு மட்டும் வந்திருக்கிறார். எஜமானர்களின் கட்டளையை ஏற்றுக் கொண்டு சந்திப்பதற்காக வந்து விட்டோம். எஜமானர்களிடம் முடியாது என்று சொல்ல முடியாது. ஆக 'வந்தேன் ஐயா' என்ற பாடத்தை படித்து வந்து விட்டோம். அதே போல் நீங்களும் தான். பாப்தாதா தொடக்க காலத்திலிருந்தே 'நீங்களும் அந்த மாதிரி ஆகுங்கள்' என்ற வரதானத்தைத் தான் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எண்ணம் மற்றும் சொரூபம் இரண்டிலும் நீங்களும் அதே போல் ஆகுக என்ற வரம் பெற்றவர்கள். தர்மம் மற்றும் கர்மம் இரண்டிலும் அதே போல் ஆகுக என்ற வரம் பெற்றவர்கள். அந்த மாதிரி வரம் பெற்றவர்கள் எப்பொழுதும் நெருக்கம் மற்றும் சமநிலையின் அனுபவியாக இருப்பார்கள். பாப்தாதா அந்த மாதிரி நெருக்கமான மற்றும் சமமான குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அமிர்தவேளையில் தொடங்கி நாளின் முடிவு நேரம் வரை ஒரே ஒரு வார்த்தையை மட்டும் தர்மம் மற்றும் கர்மத்தில் கொண்டு வந்தீர்கள் என்றால் எப்பொழுதும் சந்திப்பின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த சந்திப்பின் ஊஞ்சலில் இயற்கை மற்றும் மாயா இரண்டுமே உங்களுடைய ஊஞ்சலை ஆட்டுபவர்களாக, வேலைக்காரர்களாகி விடுவார்கள். அனைத்து கஜானாக்கள் உங்களுடைய இந்த உயர்ந்த ஊஞ்சலின் அலங்காரம் ஆகிவிடும். சக்திகளை, குணங்களை கடின முயற்சி செய்து தாரணை செய்ய வேண்டியதாக இருக்காது. ஆனால் இவை உங்களுடைய அலங்காரமாகி உங்களின் எதிரில் இயல்பாகவே தந்தை மற்றும் உங்களின் சந்திப்பு என்ற ஊஞ்சலில் சமநிலையில் அதாவது நிரம்பியிருப்பவர்களாக இருப்பீர்கள். அந்த மாதிரி ஊஞ்சலில் எப்பொழுதும் ஆடுவதற்கான ஆதாரம் 'தந்தைக்குச் சமமான நிலை' என்ற ஒரே வார்த்தை தான்.



    சமமாக இல்லை என்றால், தன்னுள் நிரப்பிக் கொள்ள முடியாது. ஒருவேளை அவ்வாறு நிரப்பத் தெரியாது என்றால், சங்கமயுகத்தை இழந்தீர்கள். ஏனென்றால் சங்கமயுகம் தான் நதி மற்றும் கடல் ஒன்றரக் கலப்பதற்கான சந்திப்பாகும். சந்திப்பு என்றால், நிரப்பிக் கொள்வதாகும். சந்திப்பை செய்ய வேண்டும். அப்படியானால் அவ்வாறு நிரப்பிக் கொள்ளத் தெரியுமா? சந்திப்பை செய்யவில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்? குழப்பம் செய்கிறீர்கள். ஆக ஒன்று சந்திப்பு ! இல்லை என்றால் குழப்பம், பிரச்சனை ! குழந்தைகள் தனியாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் தனியாக ஆகவே கூடாது என்று தந்தை கூறுகிறார். எதை தனிமை என்று கூறுகிறீர்களோ அதிலேயும் உடன் இருக்கிறார். சங்கமயுகமே இணைந்திருப்பதற்கான யுகம். தந்தையிடமிருந்தோ பிரிந்து தனியாக ஆக முடியாது தான் இல்லையா? நிரந்தரமான துணைவன் ஆவார். மற்றபடி சின்னஞ்சிறு குழந்தைகள் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள். பிரச்சனைகளும் ஒன்றல்ல அனேகம் இருக்கின்றன. சந்திப்பு ஒன்று மற்றும் பிரச்சனைகள் அனேகம். சந்திப்பில் இருந்தீர்கள் என்றால் பிரச்சனைகள் முடிவடைந்து விடும். இப்பொழுதோ நிரம்பிய நிலையில் பிராப்தி அடைந்தவராக ஆகுங்கள். அற்ப காலத்து பிராப்திக்கு முடிவு கட்டி, சம்பன்ன நிலையின் நிரம்பிய பிராப்தியை அனுபவத்தில் கொண்டு வாருங்கள். நல்லது.



    அந்த மாதிரி தந்தைக்குச் சமமான, எப்பொழுதும் தந்தையுடன் சந்திப்பு செய்வதின் ஊஞ்சலில் ஆடக்கூடிய, என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம் என்று அந்த மாதிரி அனைத்து பிராப்தி சொரூபமான, எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணம் மற்றும் சொல்லில், காரியத்தில், சரிங்க அப்படியே ! மற்றும் நான் ஆஜராகி விட்டேன் ஐயா ! என்று சொல்லக்கூடிய, அந்த மாதிரி மிக உயர்ந்த ஆத்மாக்களுக்கு ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக சந்திப்பை செய்பவர்களுக்கு, பாரதம் மற்றும் வெளிநாட்டின் அனைத்து குழந்தைகளுக்கு, இன்று குழந்தையாக இருப்பவர்கள் நாளை எஜமானர்களாக ஆகக்கூடிய எஜமானர்களுக்கு தந்தையின் சலாம் மற்றும் அன்பு நினைவுகள் !, கூடவே உயர்ந்த ஆத்மாக்களுக்கு நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் உயிருக்கும் மேலான அவ்யக்த பாப்தாதாவின் இனிமையான சந்திப்பு



    கர்நாடகா மண்டலம் :



    1) நீங்கள் அனைவரும் எப்பொழுதும் சாட்சி நிலையில் நிலைத்திருந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்களா? யார் சாட்சியாகி காரியம் செய்கிறாரோ அவர்களுக்கு இயல்பாகவே தந்தையின் துணையின் அனுபவம் ஆகிறது. சாட்சியாக இல்லை என்றால் தந்தையும் துணைவனாக இல்லை. எனவே எப்பொழுதும் சாட்சி நிலையில் நிலைத்திருங்கள். தன்னுடைய உடலிலிருந்தும் சாட்சியாக இருக்க வேண்டும். எப்பொழுது உடலின் சம்மந்தம் மற்றும் உடலின் சாட்சியாகி விடுகிறீர்களோ பின்பு இயல்பாகவே இந்த பழைய உலகத்திலிருந்தும் சாட்சியாகி விடுகிறீர்கள். பார்த்துக் கொண்டும், தொடர்பில் வந்து கொண்டும் எப்பொழுதும் விலகியிருப்பவராகவும் அன்பானவராகவும் இருப்பீர்கள். இந்த நிலை தான் சகஜயோகியின் நிலையை அனுபவம் செய்விக்கும். அப்படி எப்பொழுதும் சாட்சியாக இருப்பது என்ற இதைத் தான் உடன் இருந்து கொண்டும் ஒட்டாமல் (பற்றற்று) இருப்பது என்று சொல்வது! அப்படியானால் எப்பொழுதும் அந்த நிலையில் நிலைத்திருக்கிறீர்களா? எந்த விதமான மாயாவின் தாக்குதலும் இருக்கக் கூடாது. தந்தைக்கு பலியாகுபவர்கள் மாயாவின் தாக்குதலிலிருந்து எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார்கள். பலியாகுபவர்கள் மேல் தாக்குதல் இருக்க முடியாது. அப்படித் தான் இல்லையா? எப்படி முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதே போல் பலியாவதிலும் மற்றும் மாயாவின் தாக்குதலிலிருந்து விலகியிருப்பதிலும் முதல் எண்ணில் இருக்க வேண்டும். முதல் என்பதின் அர்த்தமே வேகமாகச் செல்வது. அப்படி இந்த நிலையில் எப்பொழுதும் முதலில் இருப்பவர். எப்பொழுதும் குஷியர்க இருங்கள். எப்பொழுதும் அதிர்ஷ்டசாலியாக இருங்கள்.



    2) எப்படி தந்தையின் குணங்களை வர்ணனை செய்கிறீர்கள், அதே போல் தன்னுள்ளும் அந்த அனைத்து குணங்களை அனுபவம் செய்கிறீர்களா? எப்படி தந்தை ஞானக்கடல், சுகத்தின் கடலாக இருக்கிறாரோ, அதே போலவே தன்னிலும் ஞான சொரூபம், சுக சொரூபமாக அனுபவம் செய்கிறீர்களா? ஒவ்வொரு குணத்தின் அனுபவம், வர்ணனை மட்டும் இல்லை, ஆனால் அனுபவம் இருக்க வேண்டும். எப்பொழுது சுகசொரூபமாக ஆகிவிடுவீர்களோ அப்பொழுது சுகசொரூப ஆத்மா மூலமாக சுகத்தின் கிரணங்கள் உலகில் பரவும். ஏனென்றால் நீங்கள் மாஸ்டர் ஞான சூரியன் ஆவீர்கள். எப்படி சூரியனின் கிரணங்கள் முழு உலகிலும் செல்கிறதோ. அதே போல் ஞான சூரிய குழந்தைகள் உங்களுடைய ஞானம், சுகம், ஆனந்தத்தின் கிரணங்கள் அனைத்து ஆத்மாக்கள் வரை சென்றடையும். சொல்வது, கேட்பதையோ மிக அதிகம் செய்தாகிவிட்டது, இப்பொழுது அனுபவத்தை அதிகரியுங்கள். சொல்வது என்றால் சொரூபம் ஆவது, கேட்பது என்றால் சொரூபம் ஆவது.



    3) எப்பொழுதும் குஷியின் கஜானாக்களுடன் விளையாடுபவர்கள் தான் நீங்கள் இல்லையா? குஷிமம் ஒரு கஜானா. அந்தக் கஜானா மூலமாக அனேக ஆத்மாக்களை அனைத்தும் நிறைந்தவர்களாக ஆக்க முடியும். விசேஷமாக இன்றைய நாட்களில் இந்தக் கஜானாவின் அவசியம் இருக்கிறது. மற்ற அனைத்தும் இருக்கிறது. ஆனால் குஷி இல்லை. உங்கள் அனைவருக்கும் குஷியின் சுரங்கமே கிடைத்திருக்கிறது. எண்ணிலடங்கா கஜானாக்கள் கிடைத்திருக்கின்றன. குஷியின் கஜானாவிலும் பல வகைகள் இருக்கின்றன. சில நேரம் சில விஷயத்தின் குஷி மற்றும் சில நேரம் வேறு சில விஷயத்தின் குஷி இருக்கிறது. சில நேரம் குழந்தைத்தனத்தின் குஷி என்றால், சில நேரம் எஜமானத்தன்மையின் குஷி இருக்கிறது. எத்தனை விதமான குஷியின் கஜானா கிடைத்திருக்கிறது அவற்றை வர்ணனை செய்தே மற்றவர்களையும் அனைத்தும் நிரம்பியவர்களாக ஆக்க முடியும். எனவே இந்த பொக்கிஷங்களை எப்பொழுதும் நிலைத்து வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் எப்பொழுதும் கஜானாக்களின் அதிபதி ஆகுங்கள்.



    எப்பொழுதும் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் சக்திகளை காரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள். தந்தையோ சக்திகளைக் கொடுத்து விட்டார். இப்பொழுது அவற்றை காரியத்தில் கொண்டு வாருங்கள். கிடைத்து விட்டது என்ற இந்த குஷியில் மட்டும் இருக்காதீர்கள். ஆனால் என்ன கிடைத்திருக்கிறதோ அதை தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் உபயோகப்படுத்தினீர்கள் என்றால் எப்பொழுதும் அனைத்தும் நிறைந்தவராக அனுபவம் செய்வீர்கள்.



    அவ்யக்த முரளியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட மகாவாக்கியங்கள் (கேள்வி - பதில்)



    கேள்வி :

    முந்தைய ஜென்மங்களின் கணக்கு வழக்கின் சுமையை முடிப்பவர்கள் கூட தற்சமயம் எந்த சுமையை தன் மேல் ஏற்றிக் கொள்கிறார்கள்?



    பதில் –

    ஒருவேளை தன்னை பிரம்மா குமார், குமாரி மற்றும் விஷ்வ சேவாதாரி என்று கூறிக்கொண்டு, ஏதாவது தீய எண்ணம் மற்றும் பாவம் செய்கிறார் என்றால் நூறு மடங்கு சுமை ஏறிவிடுகிறது. சிலர் தன்னுடைய சம்ஸ்காரத்தின் வசமாகி, சுபாவத்தின் வசமாகி ஞானத்தின் புத்தியின் அபிமானத்தின் வசமாகி, பெயர், புகழின் சுயநலத்தின் வசமாகி, தனக்கான வசதிகளை அடைவதின் வசமாகி, அலட்சியம் மற்றும் சோம்பலின் வசமாகி . . . அந்த மாதிரி அனேக சுமைகளை தூக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் ஒருவேளை சேவை செய்பவர் என்று கூறிக்கொண்டு ஏதாவது அந்த மாதிரி தவறான காரியம் செய்து சேவைக்கு இடையூறான சூழ்நிலை மற்றும் அதிர்வலைகளைப் பரப்புவதற்கு காரணமாகிறார் என்றால், ஒரு தடவை சேவைக்கு இடையூறான காரியம் செய்யும் போது அது 10 மடங்கு செய்த சேவையை (புண்ணிய கணக்கை) முடித்து விடுகிறது. நான் மிகுந்த சேவை செய்கிறேன் என்று அவர் நினைத்தாலும் அவருடைய கணக்கு காலியாக இருக்கும்.



    கேள்வி :

    யாருடைய கணக்கு காலியாக இருக்கிறதோ அவருடைய அடையாளம் எப்படி இருக்கும்?



    பதில் –

    அவருக்கு பாபாவின் நினைவில் சக்தி மற்றும் பிராப்தியின் அனுபவம் ஆகாது. மனதில் திருப்தி இருக்காது. ஒவ்வொரு நேரமும் ஏதாவது ஒரு சூழ்நிலை, நபர், இயற்கை மற்றும் சாதனம் அவரது மன நிலையை குழப்பத்தில் கொண்டு வருவதற்கு மற்றும் குஷி, சக்தியை அழிப்பதற்கு காரணமாக அமையும். வெளிமுகமாக குஷி நிறைந்தவராக மற்றும் முயற்சி செய்பவராக நினைத்துக் கொள்வார் ஆனால் உள்மனதில் முற்றிலும் குழப்பத்தில் இருப்பார்.



    கேள்வி :

    ஒருவேளை பெயர், புகழின் கணக்கு நிரம்பி இருக்கிறது, ஆனால் கஜானாக்களின் கணக்கு அனுபவங்களின் கணக்கு காலியாக இருக்கிறது என்றால் அதனுடைய அடையாளமாக எப்படி இருக்கும்?



    பதில் –

    அந்த மாதிரியான ஆத்மா அவரே தடைகளின் வசமாக இருக்கும் காரணத்தினால் சேவைக் காரியத்தில் தடை ரூபம் ஆகிவிடுவார். 2) சுமை அதிகரிக்கும் காரணத்தினால் அனேக விதமான மனதின் வீணான சிந்தனை மற்றும் மன அமைதியின்மை என்ற அனேக நோய்கள் உருவாகின்றன. 3) அவருடைய முயற்சி செய்யும் வேகம் அதிகமாக இருக்க முடியாது. அவர் இதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று திட்டமிடுவார், ஆனால் வெற்றி அடைய முடியாது. 4) அந்த மாதிரி சுமையுள்ள ஆத்மாக்கள் யார் தடை ரூபமாக மற்றும் சேவைக்கு இடையூறு செய்வதற்கு காரணமானவர் ஆகிறாரோ, தந்தையிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட தன்னுடைய உடல், மனம் மற்றும் ஈஸ்வரிய சேவைக்காக கிடைத்திருக்கும் பணம், செல்வத்தை தன்னுடைய தடைகளின் காரணமாக வீணாக்குகிறார்கள், அதாவது பயனுள்ளதாக ஆக்க முடிவதில்லை என்பதால், அவ்வாறு வீணாக்குவதின் சுமையும் ஏறிவிடுகிறது. எனவே பாவங்களின் ஆழமான விளைவுகளை நன்றாகத் தெரிந்து, வீணாக்காதீர்கள் மற்றும் சுமையைக் குறையுங்கள். தர்மராஜ்புரிக்குச் செல்வதற்கு முன்பு தன்னுடைய தர்மராஜாவாக ஆகுங்கள். நல்லது. ஓம் சாந்தி.



    வரதானம் :

    காரணத்தை நிவாரணத்தில் மாற்றம் செய்து எப்பொழுதும் முன்னேறிச் செல்லக்கூடிய சக்தி சொரூபமானவர் ஆகுக !



    ஞான மார்க்கத்தில் எவ்வளவு முன்னேறிச் செல்வீர்களோ அந்த அளவு மாயா பற் பல ரூபங்களில் சோதனை செய்வதற்கு வரும், ஏனென்றால் இந்த சோதனைகள் தான் முன்னேறிச் செல்வதற்கான சாதனமே அன்றி, கீழே விழத் தள்ளுவதற்கானது அல்ல. ஆனால் நிவாரணத்திற்குப் பதிலாக காரணத்தை யோசிக்கிறீர்கள் என்றால் நேரம் மற்றும் சக்தி வீணாகிறது. காரணத்திற்குப் பதிலாக நிவாரணத்தை யோசியுங்கள் மற்றும் ஒரு தந்தையின் நினைவிலேயே முழுமையாக மூழ்கியிருந்தீர்கள் என்றால் சக்தி சொரூபம் ஆகி தடையற்றவர் ஆகிவிடுவீர்கள்.



    சுலோகன் :

    யார் தன்னுடைய பார்வை, உள் உணர்வு மற்றும் நினைவின் சக்தி மூலம் அமைதியின் அனுபவத்தை செய்விக்கிறாரோ அவர் தான் மகாதானி !



    ***OM SHANTI***