BK Murli 26 May 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 26 May 2016 Tamil

    26.05.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகி இருங்கள். நடக்கும் போதும், திரும்ப வரும்போதும், அமரும் போதும், எழும் போதும் இதே பயிற்சியை செய்தபடி இருந்தீர்கள் என்றால் மிகவும் முன்னேற்றம் ஏற்படும்.



    கேள்வி:

    தந்தையின் துல்லியமான நினைவு எந்தக் குழந்தைகளின் புத்தியில் இருக்கும்?



    பதில்:

    தந்தையை சரியான முறையில் அறிந்த குழந்தைகளின் புத்தியில் இருக்கும். புள்ளியை எப்படி நினைவு செய்வது என பல குழந்தைகள் கேட்கின்றனர். பக்தியிலோ அகண்ட ஜோதி என புரிந்து கொண்டு நினைவு செய்து வந்தோம், இப்போது புள்ளி என சொல்வதனால் குழம்பிப் போகின்றனர். ஆகையால் தந்தை அகண்டஜோதி அல்ல அவர் அதி சூட்சுமமான ஒளிப்புள்ளி என்பதை முதன் முதலாக நிச்சயப்படுத்த வேண்டும், அப்போது துல்லியமான நினைவு இருக்க முடியும்.



    ஓம் சாந்தி.

    அனைத்து குழந்தைகளும் நினைவில் அமர்ந்துள்ளனர். மன்மனாபவ. இது உண்மையில் சம்ஸ்கிருத வார்த்தை அல்லவே அல்ல. தந்தை சகஜ இராஜயோகம் கற்றுக் கொடுத்தபோது இந்த சம்ஸ்கிருத வார்த்தையை சொல்லவில்லை. இவருக்கு (பிரம்மாவுக்கு) சம்ஸ்கிருதம் தெரியவே தெரியாது. தந்தை இந்தியில்தான் புரிய வைக்கிறார். இந்த ரதம் (பிரம்மா) இந்தி, சிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை அறிவார், ஆனால் தந்தை இந்தியில் புரிய வைக்கிறார். யார் எந்த தர்மத்தவர்களோ, அவர்களுக்கு தம்முடைய மொழி இருக்கும். இங்கே இந்தி மொழிதான் நடக்கிறது. இந்த மொழியை புரிந்து கொள்வது சகஜமாகும், மேலும் இந்தப் பள்ளிக் கூடம் மிகவும் அதிசயமானது. இதில் காகிதம், பென்சில், பேனா முதலானவற்றின் அவசியமும் கிடையாது. இங்கேயோ ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும் அதாவது தந்தையை நினைவு செய்யுங்கள். இறைவனை அல்லது ஈஸ்வரனை அல்லது பரமபிதா பரமாத்மாவை யாரும் நினைவே செய்வது கிடையாது இது கடினமான விசயமாகும், அனைவரும் நினைவு என்னவோ செய்கின்றனர், ஆனால் அவருடைய சரியான அறிமுகம் கிடையாது. தந்தையே வந்து தம்முடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார். சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் இவ்வளவு அதிகப்படுத்தி எழுதியுள்ளதை தந்தை வந்து புரிய வைக்கிறார். மிகப் பெரிய விசயமும் கிடையாது. அகலிகைகள், மூதாட்டிகளாக உள்ள மாதர்கள் எதைப் புரிந்து கொள்வார்கள். இது மிகவும் சகஜமானதாகும். சிறு குழந்தைகள் யாராவது இருந்தாலும் கூட புரிந்து கொள்வார்கள். பாபா (அப்பா) என்னும் வார்த்தை ஏதும் புதிதல்ல. சிவனின் கோவிலுக்குச் சென்றார்கள் என்றால் இவர் சிவத் தந்தை, இவர் நிராகாரமானவர் என புத்தியில் வருகிறது. அனைத்து மனிதர்களுமே பாபா என சொல்கின்றனர். நான் அனைத்து ஆத்மாக்களின் ஒரே ஒரு தந்தை ஆவேன். சரீரத்தில் வாசம் செய்திருக்கும் அனைத்து ஜீவாத்மாக்களும் தந்தையை நினைவு செய்கின்றனர். அனைத்து தர்மத்தை சேர்ந்தவர்களும் கூட பரமபிதா பரமாத்மாவை கண்டிப்பாக நினைவு செய்கின்றனர். அவர் பரமதாமத்தில் வசிக்கக் கூடிய தந்தை ஆவார். நாமும் கூட அங்கே வசிப்பவர்களே. ஆக இப்போது தந்தையை நினைவு மட்டும் செய்ய வேண்டும். நாம் தூய்மையடைய வேண்டும் என விரும்புகின்றனர். ஓ தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே என அழைக்கவும் செய்கின்றனர். புதிய உலகம் தூய்மையாக இருந்தது, இப்போது மீண்டும் பழையதாக ஆகியுள்ளது, இதனை யாரும் புதியது என சொல்ல மாட்டார்கள். புதிய பாரதத்தில் தேவி தேவதைகள் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர் என பாரதவாசிகள் அறிவார்கள். புதிய பாரதம் இருந்தபோது அதற்கு முன்பு என்ன இருந்தது? சங்கமம். இதைப் பற்றியும் எளிதாக புரியும்படி சொல்ல வேண்டும். புதியதற்கு முன்பு பழையது இருந்தது. சங்கமத்தை மனிதர்கள் இவ்வளவு சகஜமாக புரிந்து கொள்ள முடியாது. புதிய உலகம், பழைய உலகம், பிறகு இவை களுக்கிடையில் சங்கமம் என சொல்கிறோம். ஓ பதித பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள், நாங்கள் தூய்மையற்றவராக ஆகியுள்ளோம் என தந்தையைத்தான் சொல்லி அழைக்கின்றனர். புதிய உலகத்தில் யாரும் கூப்பிட மாட்டார்கள். இந்த பாரதம் தூய்மையாக இருந்தது என உங்களுக்கு இப்போது புரிந்து விட்டது. ஓ பதித பாவனா வாருங்கள் என பல காலமாக அழைத்தபடி வந்துள்ளனர். தூய்மையற்ற உலகம் எப்போது முடியும் என அவர்களுக்குத் தெரியாது. இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் கலியுகம் (தூய்மையற்ற உலகம்) நடக்கும் என சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். முற்றிலுமே அடர்ந்த காரிருளில் உள்ளனர். இப்போது நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். தந்தை இப்போது உங்களை வெளிச்சத்தில் கொண்டு வந்துள்ளார். 5 ஆயிரம் வருடங்களில் இந்த சிருஷ்டியின் சக்கரம் முடிவடைகிறது. நேற்றைய விசயமாகும். நீங்கள் இராஜ்யம் செய்து கொண்டிருந்தீர்கள், இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது, சொர்க்கம் இருந்தது. தூய்மையான உலகத்தில் எந்த உபத்திரவமும் (தொந்தரவும்) இருக்க முடியாது. உபத்திரவம் இராவண இராஜ்யத்தில் ஏற்படுகிறது. இங்கே தந்தை உங்களுக்கு புரிய வைக்கிறார், நீங்கள் நேரடியாக காதுகளால் கேட்கிறீர்கள். யார் கேட்பது? ஆத்மா. ஆத்மாவுக்கு மிகவும் குஷி ஏற்படுகிறது, தந்தை மீண்டும் வந்து நம்மை சந்தித்திருக்கிறார். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்திருந்தோம், இப்போது தந்தை சொல்கிறார்- என்னை நினைவு செய்யுங்கள். இதில் எழுதக் கூடிய, படிக்கக் கூடிய விஷயம் எதுவுமில்லை. யாராவது வந்தால் நீங்கள் எதற்காக வரவேண்டியதாயிற்று? என கேட்கப் படுகிறது. இங்குள்ள மஹாத்மாவைச் சந்திப்பதற்காக வந்துள்ளோம் என சொல்வார்கள். ஏன்? உங்களுக்கு என்ன வேண்டும்? ஏதாவது தருமம் தேவையா என சொல்லுங்கள்? சன்னியாசி என்றால் ரொட்டித் துண்டு தேவை. சன்னியாசிகள் யாரிடமாவது சென்றாலோ வழியில் சந்தித்தாலோ, தார்மீக மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர் - இவர் தூய்மையானவர், இவருக்கு உணவு கொடுப்பது நல்லது. இப்போதோ தூய்மையும் கூட இல்லை. முற்றிலுமே தமோபிரதானமான உலகம், இதில் மிகவும் அசுத்தம் (நிறைந்து) உள்ளது. மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர். இங்கே கஷ்டப்பட வேண்டிய விஷயம் எதுவுமில்லை. எழுதுவது செய்வது போன்ற விஷயம் கூட எதுவுமில்லை. இந்த கருத்துகள் முதலானவைகளைக்கூட தாரணை செய்வதற்காக எழுதுகின்றனர். மருத்துவர்களிடமும் கூட எவ்வளவு மருந்துகள் இருக்கின்றன, அவ்வளவு மருந்துகளின் பெயர்களும் நினைவிருக்கிறது. வக்கீலின் புத்தியில் எவ்வளவு சட்டத்தின் விசயங்கள் நினைவிருக்கின்றன. நீங்கள் எதை நினைவு செய்ய வேண்டும், ஒரே ஒரு விசயத்தை, அதுவும் கூட எளிதானதே. ஒரு சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். சிவபாபா எப்படி வருவார் என அவர்கள் கேட்கின்றனர். இதுவும் கூட உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஈஸ்வரன் எங்கே? என்றால் அவர் பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லது எங்கும் நிறைந்தவர் என சொல்லி விடுகின்றனர். இரண்டு வார்த்தைகளில் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. பெயர் ரூபத்திற்கும் அப்பாற்பட்ட எந்த பொருளும் இல்லை. பிறகு நாய், பூனை என அனைத்திலும் பரமாத்மா இருக்கிறார் என சொல்லி விடுகின்றனர். இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர்மாறான விசயங்களாக ஆகி விட்டன. ஆக, தந்தை தனது அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, தந்தையான என்னை நினைவு செய்யுங்கள் என சொல்கிறார். சகஜ இராஜயோகம் என பாடவும் படுகிறது. பாபா சொல்கிறார் - யோகம் என்ற சொல்லை தவிர்த்து விடுங்கள், நினைவு செய்யுங்கள். சிறு குழந்தை தாய் தந்தையைப் பார்த்ததுமே சட்டென அணைத்துக் கொள்கிறது. என்னுடைய தாய் தந்தை தானா என யோசிக்குமா என்ன? இல்லை, இதில் யோசிக்க வேண்டிய விசயமே இல்லை. நீங்களும் கூட சிவபாபாவை நினைவு மட்டும் செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட நீங்கள் சிவனுக்கு மலர்களை சூடியபடி வந்தீர்கள். சோம்நாத் கோவில் எவ்வளவு பெரிதாக கட்டப்பட்டுள்ளது, அதனை பிறகு முகம்மது கஜனி வந்து கொள்ளையடித்தார். சோம்நாத் கோவில் பாரதத்தில் புகழ் வாய்ந்தது. அனைவருக்கும் முன்னதாக சிவனின் பூஜை நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த அனைத்து விசயங்களும் இப்போது புத்தியில் வந்துள்ளது. பூஜை முதலானதெல்லாம் செய்தபடி வந்தீர்கள், ஆனால் இது ஜட சித்திரம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பாக சைதன்யத்தில் (உயிரோட்டமாக) வந்திருக்க வேண்டும், ஆகவேதான் வருடா வருடம் சிவ ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். சிவ பரமாத்மா நிராகாரமானவர் எனவும் சொல்கின்றனர். நாம் கூட நிராகாரமானவர்களே என ஆத்மாவுக்குத் தெரியும். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகிறீர்கள், மிகவும் எளிது தான். அவர் நம்முடைய பாபா ஆவார். ஞானக் கடல், சுகக் கடல், பதித பாவனர் ஆவார். அவருக்கு நிறைய மகிமைகள் உள்ளன. பிரம்மா விஷ்ணு சங்கரருக்கு இவ்வளவு மகிமைகள் இல்லை. ஒருவருடைய மகிமையைத்தான் பாடுகின்றனர். பாபா வந்து நமக்கு ஆஸ்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். லௌகிக தந்தை குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார், கற்பிப்பதில்லை. படிப்புக்காக பள்ளிக்குச் செல்கின்றனர், பிறகு வானபிரஸ்த நிலையில் குருவை பின்பற்றுகின்றனர். இன்றைய நாட்களில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் குருவை ஏற்பாடு செய்கின்றனர். இங்கே சிவபாபாவை நினைவு செய்யுங்கள், அனைவருக்கும் உரிமை உள்ளது என குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்லப்படுகிறது. அனைவரும் என்னுடைய குழந்தைகள். உங்களிலும் கூட சிலர் என்னை நல்ல விதமாக நினைவு செய்கின்றனர். சிலர் கேட்கின்றனர் - பாபா, யாரை நினைவு செய்வது? புள்ளியை எப்படி நினைவு செய்வது? ஆகவே பெரிய பொருள் நினைக்கப்படுகிறது. நல்லது, நீங்கள் நினைவு செய்யக் கூடிய பரமாத்மா, அவர் என்ன பொருளாக (வடிவத்தில்) இருக்கிறார்? என கேட்டால் அவர் அகண்ட ஜோதி சொரூபம் என்று சொல்லி விடுகின்றனர். ஆனால் அப்படி அல்ல. அகண்ட ஜோதியை நினைவு செய்வது தவறாகி விடுகிறது. நினைவு துல்லியமாக இருக்க வேண்டும். முதலில் சரியான முறையில் தெரிந்திருக்க வேண்டும். தந்தைதான் வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார், பிறகு குழந்தைகளுக்கு சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் செய்தியை சொல்கிறார். விரிவாகவும் மற்றும் சுருக்கமாகவும் சொல்கிறார். இப்போது தந்தை சொல்கிறார் - குழந்தைகளே நீங்கள் தூய்மை அடையவேண்டும் என்றால் அதற்கென இப்போது ஒரே உபாயம்தான் உள்ளது - என்னை நினைவு செய்யுங்கள், என்னை பதீத பாவனர் என்றுதானே சொல்கிறீர்கள். ஆத்மா தூய்மையடைய வேண்டியுள்ளது. நாங்கள் பதீதமாக (தூய்மை யற்றவர்களாக) ஆகி விட்டோம் என ஆத்மாதான் சொல்கிறது. நாங்கள் தூய்மையாய் இருந்தோம், இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளோம். அனைவரும் தமோபிரதானமாகியுள்ளனர். அனைத்து பொருட்களுமே முதலில் சதோபிரதானமாகவும் பின்னர் தமோபிரதானமாகவும் ஆகின்றன. ஆத்மா தானே சொல்கிறது – நான் தூய்மையற்றிருக்கிறேன், என்னை தூய்மையாக்குங்கள். சாந்தி தாமத்தில் பதிதமாக ஆவதில்லை. இங்கே தூய்மையற்றவராக ஆகியுள்ளதால் துக்கமிக்கவர்களாக உள்ளனர். தூய்மையானவராக இருக்கும்போது சுகம் மிக்கவர்களாக இருந்தனர். ஆக ஆத்மாதான் சொல்கிறது - எங்களை தூய்மையாக்கினீர்கள் என்றால் நாங்கள் துக்கத்திலிருந்து விடுபடுவோம். ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாதான் நீதிபதி, வக்கீல் முதலானவர்களாக ஆகிறது. ஆத்மாதான் சொல்கிறது - நான் ராஜா, நான் இன்னார். இப்போது இந்த சரீரத்தை விட்டு வேறொன்று எடுக்க வேண்டும். இது ஆத்ம-அபிமானி எனப்படுகிறது. தேகம் இருந்தாலும் ஆத்ம-அபிமானி. இராவணனின் இராஜ்யத்தில் தேக-அபிமானிகளாக ஆகின்றனர். இப்போதுதான் தந்தை ஆத்ம-அபிமானியாக ஆக்குகிறார். இந்த சமயம் ஆத்மா தூய்மையற்று துக்கம் மிக்கதாக உள்ளது, எனவே ஓ பாபா வாருங்கள் என கூக்குரலிடுகிறது. நாடகத்தின் திட்டத்தின்படி தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராகவும், தூய்மையானவரிலிருந்து தூய்மையற்றவர்களாகவும் ஆகியபடி வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எப்படி நம்முடைய 84 பிறவிகள் ஏற்பட்டன என்பது இப்போது உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. இப்போது இந்த விசயத்தை மறக்காதீர்கள். சுயதரிசன சக்கரதாரிகளாகி இருங்கள். அமரும் போதும், எழும்போதும், நடக்கும் போதும், சுற்றும் போதும் நமக்கு புத்தியில் இந்த முழு ஞானமும் இருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து நாம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு தந்தையைத்தான் நினைவு செய்ய வேண்டும் என தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். தந்தையை நினைவு செய்ய வேண்டும், ரொட்டித் துண்டு சாப்பிட வேண்டும், அவ்வளவுதான்.



    இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுத்த செல்லக் குழந்தைகளுக்கு தந்தை அடிக்கடி சொல்கிறார் - குழந்தைகளே, வயிற்றுக்கு ரொட்டித் துண்டு மட்டும் உண்ண வேண்டும். வயிறு ஏதும் அதிகமாக உண்பதில்லை. கால் படி மாவின் ரொட்டியை உண்ணுகிறது. பருப்பு, ரொட்டி அவ்வளவுதான், 10 ரூபாயிலும் மனிதர்களின் வயிறு நிரம்புகிறது எனில் 10 ஆயிரம் ரூபாயிலும் வயிற்றை வளர்க்கின்றனர். ஏழைகள் என்னதான் சாப்பிடுகின்றனர்? என்றாலும் பலசாலிகளாக இருக்கின்றனர். வித விதமான உணவு வகைகளை மனிதர்கள் சாப்பிட்டார்கள் என்றால் இன்னும் கூட நோயாளிகளாக ஆகி விடுகின்றனர். மருத்துவர் களும், ஒரே விதமான உணவை உட்கொண்டீர்கள் என்றால் நோய்வாய்ப்பட மாட்டீர்கள் என சொல்கின்றனர். கிடைத்ததை உண்டு குஷியன்டமங்கள். பருப்பு-ரொட்டி போன்ற உணவு வேறு எதுவும் இல்லை. அதிகமான ஆசையும் இருக்கக் கூடாது சன்னியாசிகள் என்ன செய்கின்றனர்? வீடு வாசல் விட்டு காட்டுக்குச் சென்று விடுகின்றனர். தத்துவத்தை பரமாத்மா என எண்ணி நினைவு செய்கின்றனர், பிரம்மத்தில் ஐக்கியமாகி விடலாம் என புரிந்து கொள்கின்றனர். ஆனால் அப்படி கிடையாது. ஆத்மாவோ அமரனாக உள்ளது. ஐக்கியமாகும் விஷயம் கிடையாது. மற்றபடி ஆத்மா தூய்மையாகவும், தூய்மையற்றதாகவும் ஆகிறது. உங்களுக்கு எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது. நீங்கள்தான் பலனை அனுபவிக்கிறீர்கள், பிறகு இந்த ஞானம் மறந்து விடுகிறது. பிறகு ஏணியில் இறங்க வேண்டியிருக்கும். இப்போது உங்கள் புத்தியில் முழு ஞானமும் அமர்ந்து விட்டுள்ளது. நாம் 84 பிறவிகளை எப்படி அனுபவம் செய்கிறோம். இந்த நடிப்பு ஒருபோதும் யாருடையதும் நின்று போகாது. இது உருவாகி உருவாக்கப்பட்ட நாடகம், இது சுற்றிக் கொண்டேதான் இருக்கும். பகவான் எப்போது, எப்படி, எங்கே அமர்ந்து உருவாக்கினார் என கேட்க முடியாது. இல்லை. இது நடந்தபடிதான் வருகிறது. உலகின் வரலாறு-புவியியல் மீண்டும் மீண்டும் நடந்தபடிதான் இருக்கும். இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. நீங்கள் அறிவீர்கள் - நாம் நாடகத்தின் திட்டப்படி வந்தோம். இப்போது மீண்டும் நாடகத்தின்படி இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த விசயங்களை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நாடகம் சர்வசக்திவானா அல்லது பாபாவா? என்று கேட்கப்படுகிறது. ஈஸ்வரன் சர்வசக்திவான் என சொல்கின்றனர். அவர் அனைத்தும் செய்ய வல்லவர் என புரிந்து கொள்கின்றனர். தந்தை சொல்கிறார் - நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன். தூய்மை இழந்தவர்களை மீண்டும் தூய்மைபடுத்த நான் வர வேண்டியுள்ளது. நீங்கள் சத்யுகத்தில் சுகம் மிக்கவர்களாக ஆகி விடுகிறீர்கள். நானும் கூட பரமதாமத்தில் சென்று ஓய்வில் இருக்கிறேன். நீங்கள் மிகவும் உயரத்தில் ஏறி விடுகிறீர்கள். உங்களுடைய சவாரி சிங்கத்தின் மீதாகும். ஒவ்வொரு வினாடியும் நடப்பது அனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நல்ல ஞானம் உள்ளது. இப்போது தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள். போதும். காகிதம், பென்சில் முதலானவற்றின் அவசியம் இல்லை. பிரம்மா பாபாவும் படிக்கிறார், இவர் எதையும் வைத்துக் கொள்வதே இல்லை. தந்தையை மட்டும் நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும். எவ்வளவு சகஜமானது. நினைவின் மூலம் நீங்கள் எப்போதும் ஆரோக்கியம் மிக்கவராக ஆகி விடுகிறீர்கள். இது தாரணையின் விஷயமாகும். எழுதுவதன் மூலம் என்ன லாபம் இருக்கப் போகிறது. இவையனைத்தும் வினாசமாகி விடும். ஆனால் சிலர் நினைவு வைத்துக் கொள்வதற்காக எழுதுகின்றனர். ஏதாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முடிந்து வைத்துக் கொள்வது போல. நீங்களும் முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் - சிவபாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். இது மிகவும் சகஜமானதேயாகும் - யோகம் அதாவது நினைவு. பாபா நினைவு நிலைப்பதில்லை என சொல்கின்றனர். யோகத்தில் எப்படி அமருவது? அட, லௌகிக தந்தையின் நினைவு எல்லா சமயத்திலும் இருக்கிறது, நீங்களும் நினைவு மட்டும் செய்யுங்கள். அவ்வளவுதான், படகு கரை சேர்ந்துவிடும். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்

    1. சுயதரிசன சக்கரதாரி ஆகி 84 பிறவிகளின் சக்கரத்தை புத்தியில் சுற்றியபடி இருக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைய வேண்டும், தூய்மையானவராக ஆக வேண்டும்.



    2. எந்தப் பொருளின் மீதும் ஆசை வைக்கக் கூடாது, கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ரொட்டித் துண்டு சாப்பிட வேண்டும், தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.



    வரதானம் :

    முழுமையாக சமர்ப்பணம் ஆவதின் மூலம் புத்தியை சுத்தமாக ஆக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களாலும் நிரம்பியவர் ஆகுக.



    ஞானத்தின், உயர்வான சமயத்தின் பொக்கிஷத்தை சேமிப்பது, ஸ்தூல பொக்கிஷங்களை ஒன்றிலிருந்து இலட்சம் மடங்காக ஆக்குவது அதாவது சேமிப்பது . . . இந்த அனைத்து பொக்கிஷங்களால் நிறைந்தவராக ஆவதற்கான ஆதாரம் சுத்தமான புத்தி மற்றும் உண்மையான உள்ளம். ஆனால் புத்தியின் மூலம் தந்தையை சரியாக அறிந்து கொண்டு, அதனை தந்தையின் முன்பாக சமர்ப்பணம் செய்து விடும்போது புத்தி சுத்தமாக ஆகிறது. சூத்திர புத்தியை சமர்ப்பணம் செய்வது அதாவது அர்ப்பணம் செய்வது தான் திவ்ய புத்தியை பெறுவதாகும்.



    சுலோகன் :

    ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற இந்த விதியின் மூலம் எப்போதும் முன்னேற்றம் அடைந்தபடி இருங்கள்.



    ***OM SHANTI***