BK Murli 29 May 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 29 May 2016 Tamil

    29.05.2016  காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 04.01.1981  மதுபன்

     “எண்ண சக்தியின் மகத்துவம்''


    பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் இறுதி நிலை அதாவது சம்பன்னம் மற்றும் சம்பூர்ண நிலை என்ற இந்த சக்திசாலி நிலையின் அனுபவம் தான் செய்விக்கிறார். அந்த நிலையில் எப்பொழுதும் மாஸ்டர் சர்வ சக்திவான், மாஸ்டர் ஞானக்கடல், அனைத்து குணங்களும் நிரம்பிய, ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு விநாடியும் எப்பொழுதும் பார்வையாளர் நிலையில் இருந்து தந்தையின் துணையின், பிராமண குடும்பத்தின் அனைத்து உயர்ந்த ஆத்மாக்களின், அன்பு, சகயோகத்தின் துணையின் அனுபவம் எப்பொழுதுமே இருக்கும். அந்த அனுபவம், எப்படி அறிவியல் சாதனங்கள் மூலமாக தூரத்திலிருக்கும் பொருள் அருகில் இருப்பதாக அனுபவம் ஆகிறதோ அந்த மாதிரி அனுபவம் ஆகும். அந்த மாதிரி திவ்ய புத்தி மூலமாக எவ்வளவு தான் தூரத்திலிருக்கும் ஆத்மாக்களையும் அருகில் அனுபவம் செய்வீர்கள். எப்படி ஸ்தூலமாக உடனிருக்கும் ஆத்மாவை தெளிவாகப் பார்க்கிறீர்கள், பேசுகிறீர்கள், சகயோகம் கொடுக்கிறீர்கள், பெற்றுக் கொள்கிறீர்கள், அதே போல் அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் ஆத்மாவாக இருந்தாலும், திவ்ய திருஷ்டி மூலமாக, திவ்ய திருஷ்டி என்றால் ட்ரான்ஸ் இல்லை, ஆனால் ஆன்மீகம் நிறைந்த திவ்ய திருஷ்டி. அந்த திருஷ்டி மூலமாக இயற்கையான ரூபத்தில் ஆத்மா மற்றும் ஆத்மாக்களின் தந்தை தென்படுவார். ஆத்மாவை நான் பார்க்க வேண்டும் என்ற இந்த கடின முயற்சி இருக்காது, உழைப்பு இருக்காது. ஆனால் நான் ஆத்மாவே ! மேலும் பிற அனைவரும் ஆத்மாக்களே !. எப்படி துவாபர்யுகத்திலிருந்து ஆத்ம உணர்வு மறைந்து விட்டதோ உடலின் உணர்வு அந்த மாதிரி மறைந்திருக்கும் ஆத்மாவைத் தவிர வேறு எதுவுமே தென்படாது. ஆத்மா நடந்து சென்று கொண்டிருக்கிறது, ஆத்மா செய்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நெற்றியின் மணியின் பக்கம் உடலின் கண்களும் மற்றும் மனதின் கண்களும் செல்லும். தந்தை மற்றும் ஆத்மாக்கள்-இதே நினைவு நிரந்தரமாக, இயற்கையாக இருக்கும். அந்த நேரத்து மொழி என்னவாக இருக்கும்? உயர்ந்த எண்ணத்தின் மொழியாக இருக்கும். பேசும் மொழியாக இராது, ஆத்மீக ஈர்ப்பு செய்வதாக இருக்கும். பேசுவதினால் அல்ல, ஆனால் மனநிலை மூலமாக உயர்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு மூலமாக சுலபமாகவே சொரூபத்தை அனுபவம் செய்விக்கும். வாய்க்குப் பதிலாக கண்களே சொரூபத்தை அனுபவம் செய்விக்கும் சாதனம் ஆகிவிடும். கண்களின் மொழி எண்ணத்தின் பாஷை ஆகும். எண்ணத்தின் சக்தி உங்களுடைய வாயிலிருந்து வரும் பேச்சின் வேகத்தை விட மிக அதிவேகமாக காரியம் செய்யும். எனவே உயர்ந்த எண்ணத்தின் சக்தியை அந்த மாதிரி கொஞ்சம் கூட வீணான அசுத்தம் இல்லாத அளவிற்கு சுத்தமானதாக ஆக்குங்கள். இதைத் தான் லைன் கிளியர் அதாவது மார்க்கம் தெளிவாக இருக்கிறது என்று சொல்வது.

     

    இந்த எண்ணத்தின் சக்தி மூலமாகத் தான் காரியம் வெற்றி அடைவதின் சித்தியை அனுபவம் செய்வீர்கள். எந்த ஆத்மாக்களுக்கு, எந்த ஸ்தூல காரியங்களை அல்லது உறவு தொடர்பில் வரக்கூடிய ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களை வாய்மொழி மூலமாகவோ பிற சாதனங்கள் மூலமாகவோ மாற்றிக் கொண்டு சம்பூர்ண வெற்றியை அனுபவம் செய்வதில்லை. அந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் எண்ணத்தின் சக்தி மூலமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது போல் வெற்றி கிடைத்து விடும். நாலாபுறங்களிலும் எப்படி ஸ்தூல ஆகாயத்தின் விதவிதமான நட்சத்திரங்களைப் பார்க்கிறீர்கள். அதே போல் உலகின் வாயுமண்டலத்தின் ஆகாயத்தின் நாலாபுறங்களிலும் வெற்றி நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருப்பதாகக் காண்பீர்கள். தற்சமயம் நம்பிக்கை நட்சத்திரங்கள் மற்றும் வெற்றி நட்சத்திரங்கள் இரண்டும் தென்படுகின்றன. ஆனால் இறுதி நேரம், இறுதி நிலையில் தந்தையின் நினைவின் எல்லையில் மூழ்கியிருக்கும் உயர்ந்த நிலையில் வெற்றி நட்சத்திரங்கள் தான் இருப்பார்கள். இந்த ஆன்மீகக் கண், இந்த ஆன்மீக உருவம் அந்த மாதிரி தெய்வீகக் கண்ணாடி ஆகிவிடும், அந்த கண்ணாடியில் ஒவ்வொரு ஆத்மாவும் கடின உழைப்பு மற்றும் முயற்சியின்றி ஆத்மீக சொரூபத்தைத் தான் பார்ப்பார்கள். ஒரு நொடியில் இந்தக் கண்ணாடி மூலமாக ஆத்மீக சொரூபத்தின் அனுபவம் செய்யும் காரணத்தினால் தந்தையின் பக்கம் ஈர்க்கப்பட்டு, ஆஹா பிரபு ! என்ற பாடலை பாடிக்கொண்டே, தேக உணர்விலிருந்து சுலபமாகவே அர்ப்பணம் ஆகிவிடுவார்கள். ஆஹா, உங்களுடைய பாக்கியமே ! ஆஹா, என்னுடைய பாக்கியமே ! என்ற இந்த பாக்கிய அனுபவத்தின் காரணமாக உடல் மற்றும் உடலின் சம்மந்தத்தின் நினைவை தியாகம் செய்து விடுவார்கள். ஏனென்றால், பாக்கியத்தின் எதிரில் தியாகம் செய்வது மிக சுலபம்.

     

    நீங்கள் அனைவரும் கூட இந்த சகஜ தியாகம் மற்றும் பாக்கியத்தை பெற விரும்புகிறீர்களா அல்லது கொடுப்பவராக ஆக விரும்புகிறீர்களா? இவ்வளவு வருடங்களின் கடின உழைப்பு மூலமாக இறுதி நேரத்தில் சுலபமாக தியாகம் மற்றும் பாக்கியம் நிறைந்தவராக ஆகிவிடுவோம் என்று அப்படி யோசிக்கவில்லையே? என்ன விருப்பம்? இறுதி நேரத்தில் சுலபமாக அவசியம் அனுபவம் செய்வீர்கள். ஆனால் எவ்வளவு காலத்திற்கு அனுபவம் ஆகும்? எவ்வளவு குறைந்த காலத்தின் அனுபவமோ அந்த அளவே கொஞ்ச காலத்திற்காகப் பிராப்தி இருக்கும். நீங்கள் அனைவரும் நீண்ட காலத்தின் துணைவர்களாகவும் மற்றும் நீண்ட காலத்து இராஜ்ய அதிகாரிகளாகவும் இருக்கிறீர்கள். இறுதி நேரத்தின் பலஹீனமான ஆத்மாக்களுக்கு மகாதானி வரதானி ஆகி, அனுபவத்தின் தானம் மற்றும் புண்ணிய காரியத்தை செய்யுங்கள். இந்த ஒரு நொடியின் சக்திசாலியான நிலை மூலமாக செய்த புண்ணியம் தான் அரைக் கல்பத்திற்க பூஜைக்குரியவராகவும், மகிமைக்குத் தகுதியான வராகவும் ஆக்கிவிடும். ஏனென்றால், இறுதி காலத்தில் ஆத்மாக்களின் இறுதி நேரத்தில் சம்பூர்ண ஆத்மாக்கள் உங்கள் மூலமாக பிராப்தியின் அனுபவம் மற்றும் சம்பூர்ண சொரூபத்தின் பிரத்யக்ஷத்தின் சம்பன்ன சொரூபம், இந்த இறுதி அனுபவத்தின் சம்ஸ்காரத்தைத் தான் ஆத்மாக்கள் எடுத்துக்கொண்டு அரைக்கல்பத்திற்காக தன்னுடைய வீட்டில் ஓய்வாக இருப்பவராக இருப்பார். சிலர் பிரஜை ஆவார்கள், சிலர் பக்தர்கள் ஆவார்கள். எனவே இறுதி நேரத்தின் இறுதி நினைவின் மூலமாக துவாபர்யுகத்தில் பக்தி நிறைந்த வாழ்க்கையில் அதாவது உயர்ந்த பக்த மாலையில் உயர்ந்த மணி ஆத்மாக்களாக ஆகிவிடுவார்கள். சிலர் உலக அதிகாரியின் ரூபத்தில் பார்ப்பார்கள், சிலர் பிரஜை ஆவதின் சம்ஸ்காரத்தின் காரணமாக உங்களுடைய இராஜ்யத்தில் பிரஜை ஆகிவிடுவார்கள். சிலர் மிக உயர்ந்த பூஜைக்குரிய சொரூபத்தில் பார்க்கிறார்கள் என்றால் பக்த ஆத்மாக்கள் ஆகிவிடுவார்கள். அந்த மாதிரி உயர்ந்த நிலை மூலமாக அந்த அளவு சித்தியை அடைந்து விடுவீர்கள், அந்த மாதிரி உயர்ந்த நிலையின் அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்களா? எண்ணத்தின் கஜானாவின் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டு உயர்ந்த எண்ணத்தின் சக்தியை சேமித்துக் கொண்டிருக்கிறீர்களா? இறுதி நிலை என்னவென்று புரிந்து கொண்டீர்களா? பாப்தாதாவும் சப்தத்திலிருந்து விலகிச் செல்வாரா அல்லது சப்தத்திலேயே வருவாரா? சப்தத்தில் குறைவாக வர வேண்டும் என்ற பயிற்சி செய்தீர்கள் என்றால், சப்தத்திலிருந்து விலகியிருக்கும் நிலை இயல்பாகவே ஈர்ப்பதாக இருக்கும். சப்தத்திலிருந்து விலகிச் செல்லும் வாசல் தான் முதலில் திறக்கும் இல்லையா? அப்படியானால் வாசலைத் திறக்கும் திறப்பு விழாவை எப்பொழுது செய்வீர்கள். மற்ற திறப்பு விழாவையோ அதிகமாக மதுபனில் செய்கிறீர்கள் இல்லையா? இதன் திறப்பு விழாவை பாப்தாதா தனியாகச் செய்வாரா அல்லது உங்களுடன் சேர்ந்து செய்வாரா? அப்படியானால் தயாராக இருக்கிறீர்களா? நல்லது. பிறகு அடுத்த தடவை இதனுடைய கணக்கை எடுப்போம். கணக்கை எடுக்க வேண்டும் தான் இல்லையா? நல்லது.

     

    அந்த மாதிரி அனைத்து சித்தி சொரூப ஆத்மாக்களுக்கு எண்ணத்தின் சக்தி மூலமாக அனைவரின் உயர்ந்த விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய, தன்னுடைய சம்பன்ன கண்ணாடி மூலமாக அனைத்து ஆத்மாக்களுக்கும் இயற்கையான சொரூபத்தைக் காண்பிக்கக்கூடிய, தந்தையை வெளிப்படுத்தி அனைத்து சக்திகளின் வரதானி சொரூபம் உள்ள புண்ணிய ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் !

     

    டீச்சர்களுடன் –

    இது சேவாதாரி குரூப். டீச்சர்கள் இல்லை சேவாதாரிகள். தந்தையும் முதன்முதலில் சேவாதாரி ஆகி வருகிறார். அனைத்தையும் விட உயர்ந்த பட்டமாக உலக சேவகன் என்பதைத்தான் தந்தை தன் மேல் வைத்திருக்கிறார். எப்படி தந்தையின் பட்டமோ, அதே போல் தான் குழந்தைகளினுடையதும் இருக்கிறது. சேவாதாரி என்று புரிந்து கொள்வதினால் இயல்பாகவே தடையற்றவர் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால், சேவாதாரி என்றால் தியாகி மற்றும் தபஸ்வி. எங்கு தியாகம் மற்றும் தவம் இருக்கிறதோ அங்கு பாக்கியம் அவரது எதிரில் வேலைக்காரன் போல் கண்டிப்பாக வரும். அப்படி நீங்கள் அனைவரும் சேவாதாரிகள் தான் இல்லையா? டீச்சர் ஆகி இருக்க வேண்டாம், சேவாதாரி ஆகி இருங்கள். இல்லை என்றால் என்ன ஆகிறது, ஒருவேளை நீங்கள் உங்களை டீச்சர் என்று நினைத்தீர்கள் என்றால், வருபவர்கள் கொஞ்சம் முன்னேறிச் சென்றார்கள் என்றாலும், தன்னை டீச்சர் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். டீச்சர் என்று நினைப்பதால் ஏதாவது ஆசனம் கிடைக்க வேண்டும், ஏதாவது ஸ்தானம் (பதவி) கிடைக்க வேண்டும் என்று சூட்சும விருப்பம் உருவாகிறது இதுவும் மாயாவின் மிகப் பெரிய தடை ஆகும். டீச்சராக இருக்கிறேன் என்றால் இருக்கை வேண்டும், மரியாதை வேண்டும், மதிப்பு வேண்டும் ஆனால் சேவாதாரியோ பெறுபவராக அன்றி கொடுப்பவராக இருப்பார். எனவே எப்படி பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்கள் நீங்கள் இருப்பீர்களோ அதே போலவே உங்களைப் பார்த்து பிற சேவாதாரிகளும் எப்பொழுதும் இருப்பார்கள். பின்பு நாலாபுறங்களிலும் தியாகம், தவத்தின் சூழ்நிலை இருக்கும். எங்கு தியாகம் மற்றும் தவத்தின் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு எப்பொழுதும் தடைகளை அழித்து வெல்கின்ற நிலை இருக்கும். நீங்கள் அனைவரும் சேவாதாரிகள் தான் இல்லையா? டீச்சர் என்று கூறுவதினால் நாங்களும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்று மாணவர்கள் கூறுகிறார்கள். எனவே தன்னையும் சேவாதாரி என்று நினையுங்கள் மற்றும் அவ்வாறு புரிந்து, நடக்கவும் செய்யுங்கள். அனைத்து தடைகளின் வேராக இருப்பது தன்னை ஆசிரியர் என்று நினைத்து மேடையில் அமர்வது. பின்பு டீச்சரை பின்பற்றுபவர்களாக ஆவார்களேயன்றி, தந்தையைப் பின்பற்றுபவர்களாக ஆக மாட்டார்கள்.

     

    வளர்ச்சியையோ அடைந்து கொண்டே இருக்கிறீர்கள், இப்பொழுது வளர்ச்சியின் கூடவே விதிப்பூர்வமான வளர்ச்சியை அடைந்து கொண்டே செல்லுங்கள். விதியில் குறை இருக்கிறது என்றால் வளர்ச்சியிலும் அதிக தடை இருக்கும். எனவே விதிப்பூர்வமான வளர்ச்சியை அடைபவராக ஆகுங்கள். நன்றாகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

     

    பார்ட்டிகளுடன் சந்திப்பு –

    அனைவரும் எப்பொழுதும் சுகக்கடல் தந்தையின் நினைவில் இருந்து கொண்டே சுகசொரூபத்தின் அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால் நீங்கள் சுகக்கடலின் குழந்தைகள். எனவே எப்படி தந்தை சுகத்தின் கடலாக இருக்கிறாரோ அதே போல் குழந்தைகளும் சுகசொரூபமாக இருக்கிறார்கள். மாஸ்டர் தான் இல்லையா? அப்படி துக்கமான உலகத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் சுகசொரூபமாக இருக்கிறீர்கள். ஒருபொழுதும் துக்கத்தை உணர்வதில்லையே? உலகத்தில் எவ்வளவு தான் துக்கத்தின், அமைதியின்மையின் பாதிப்பு இருந்தாலும், நீங்கள் விலகியிருப்பவராகவும், அன்பானவராகவும் இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சுகக்கடலின் உடன் இருக்கிறீர்கள். அந்த மாதிரி எப்பொழுதும் சுகமானவராக, எப்பொழுதும் சுகங்களின் ஊஞ்சலில் ஆடுபவராக தன்னை அனுபவம் செய்கிறீர்களா? எண்ணத்தில் கூட துக்கம் இல்லை. துக்கத்தின் எண்ணம் வருவது கூட மாஸ்டர் சுகக்கடலின் குழந்தைகளுக்கு இல்லை. ஏனென்றால், ஆத்மா துக்கத்தின் உலகிலிருந்து பிரிந்து வந்து சங்கமயுகத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். விட்டு விட்டீர்கள் தான் இல்லையா?. விட்டு விட்டீர்களா அல்லது துக்கமான உலகத்தில் இருக்கிறீர்களா? ஏதாவது கயிறு கட்டப்பட்டிருக்கவில்லையே? அனைத்து கயிறுகளும் அறுந்து விட்டனவா? எப்பொழுது அனைத்து கயிறுகளும் அறுந்து விட்டனவோ சுகத்தின் கடலில் நீந்திக்கொண்டே இருங்கள்.

     

    2) நம்பர் ஒன் அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மாவின் அடையாளங்கள்

     

    1) நம்பர் ஒன் அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மா அனைத்து பிராப்தி சொரூபமாக இருப்பார்.

    2) அவர் சர்வ குணங்கள், சர்வ கஜானாக்கள், அனைத்து சக்திகளின் பிராப்தி எனும் ஊஞ்சலில் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருப்பார்.

    3) இப்பொழுதிலிருந்து அவருடைய வாழ்க்கையில் பிராப்தி இல்லாத பொருள் ஒன்றுமே இருக்காது. ஒவ்வொரு விநாடி ஒவ்வொரு மூச்சு, ஒவ்வொரு எண்ணமும் அளவில்லா கஜானாக்களை பிராப்தி செய்விப்பதாக இருக்கும்.

    4) அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் முன்னேறும் கலையின் அனுபவம் இருக்கும்.

    5) அவர்களுக்கு நாலாபுறங்களிலும் அனேக விதமான கஜானாக்களே கஜானாக்கள் தான் தென்படும்.

    6) அவருக்கு ஒவ்வொரு ஆத்மாவும் மிக அன்பான, அனாதி சம்மந்தத்தின் (சகோதரன் - சகோதரன்) சொரூபத்தில் தன்னுடையவராக அனுபவம் ஆகும்.

    7) அவருடைய மனதில் ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் இந்த அனைத்து ஆத்மாக்களும் எப்பொழுதும் சுகமானவர்களாக மற்றும் அமைதி நிறைந்தவர்களாக ஆகி விட வேண்டும் என்ற சுபபாவனை மற்றும் நல்ல விருப்பங்கள் தான் வெளிப்படையான ரூபத்தில் இருக்கும்.

    8) அவர் எல்லைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பார். எனவே எல்லைக்கு அப்பாற்பட்ட சம்மந்தம், எல்லைக்கு அப்பாற்றபட்ட ஞானம், எல்லைக்கு அப்பாற்பட்ட உள்உணர்வு, எல்லைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அன்பு இருக்கும் காரணத்தினால் சுக சொரூபம் இருக்கும்.

    9) ஆன்மீக ஞானத்தின் காரணமாக ஒவ்வொரு ஆத்மாவின் கர்ம கதையின் பங்கின் சம்ஸ்காரங்களின் லைட் மற்றும் மைட் (சக்தி) இருக்கும் காரணத்தினால், என்னென்ன பார்க்கிறாரோ, கேட்கிறாரோ, தொடர்பு சம்மந்தத்தில் வருகிறாரோ ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் விலகியிருப்பவராகவும் மிகவும் அன்பானவராகவும் இருப்பார்.

    10) ஒவ்வொருவருடனும் ஆன்மீக சம்மந்தம் இருக்கும் காரணத்தினால் புத்தியின் ஒருமித்த நிலை இருக்கும். மேலும் ஒருமித்த நிலையின் காரணமாக நிர்ணய சக்தி, உள்ளடக்கும் சக்தி, எதிர்நோக்கும் சக்தி இருக்கும். எனவே ஆத்மாவின் பங்கு மற்றும் தன்னுடைய பங்கை மிக நல்ல முறையில் தெரிந்து பங்கில் வருவார்கள். அவருடைய நிலை உறுதியானதாகவும் மற்றும் சாட்சி நிலையிலும் இருக்கும்.

    11) அந்த மாதிரி அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மா ஒவ்வொரு எண்ணம் மற்றும் காரியத்தை ஒவ்வொரு விஷயத்தை மூன்று காலத்தையும் தெரிந்தவர் என்ற நிலையிலிருந்து பார்ப்பார்கள். எனவே கேள்விக்குறி இருக்காது. எப்பொழுதும் முற்றுப்புள்ளி இருக்கும்.

    12) அவர்களுக்கு எந்த விஷயத்திலும் என்ன ஆனது, ஏன் ஆனது என்ற ஆச்சரியமும் இருக்காது. எப்பொழுதும் ஒன்றும் புதிதல்ல என்ற நிலை இருக்கும். இது தான் நம்பர் ஒன் அதிர்ஷ்டம் நிறைந்தவரின் அடையாளங்கள்.

     

    3) மகாவீரர்களின் உயர்ந்த சேவையின் சொரூபம் மற்றும் அவர்களின் விசேஷ சேவை –

    மகாவீரர்களின் விசேஷ சேவை - எண்ணத்தின் சக்தி மூலமாக சேவை செய்வது. எப்படி முந்தைய காலத்தில் பறவைகள் மூலமாக செய்தி அனுப்பினார்கள், நீங்கள் எண்ணத்தின் சக்தி மூலமாக எந்தவொரு ஆத்மாவிற்காகவும் சேவை செய்ய முடியும். எண்ணத்தின் பொத்தானை அழுத்தியவுடன் செய்தி சென்றடைந்து விடும். எப்படி சூட்சும உடல் மூலமாக சேவை செய்ய முடியும், அதே போல் எண்ணத்தின் சக்தி மூலமாக அனேக ஆத்மாக்களின் பிரச்சனைகளைத் தீர்வு செய்ய முடியும். தன்னுடைய உயர்ந்த எண்ணத்தின் ஆதாரத்தினால் அவர்களுடைய வீணான மற்றும் பலஹீனமான எண்ணத்தை பரிவர்த்தனை (மாற்றம்) செய்ய முடியும். இந்த விசேஷ சேவை, நேரத்திற்கு தகுந்தாற்போல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நல்லது.

     

    வரதானம் :

    மாஸ்டர் சர்வ சக்திவானின் நினைவு மூலமாக மாயாவை வென்றவரிலிருந்து உலகை வென்றவர், வெற்றி அடைபவர் ஆகுக !

     

    எந்தக் குழந்தைகள் மாயா ஏன் வந்துவிட்டது தெரியவில்லை என்று அதிகமாக யோசிக்கிறார்களோ, மாயாவும் அவ்வாறு பயந்திருப்பவரைப் பார்த்து தாக்குதல் செய்து விடுகிறது. எனவே யோசிப்பதற்கு பதிலாக எப்பொழுதும் மாஸ்டர் சர்வ சக்திவானின் நினைவில் இருந்தீர்கள் என்றால், வெற்றி அடைபவர் ஆகிவிடுவீர்கள். வெற்றி இரத்தினமாக ஆக்குவதற்கு காரணமானதே இந்த மாயாவின் சிறு சிறு ரூபமாகும். எனவே தன்னை மாயாவை வென்றவர், உலகை வென்றவர் என்று புரிந்து மாயா மீது வெற்றியை அடையுங்கள், பலஹீனமானவராக ஆகாதீர்கள். சவால் விடுபவராக ஆகுங்கள்.

     

    சுலோகன் :

    ஒவ்வொரு ஆத்மாவிடமிருந்தும் நல் ஆசீர்வாதங்களை அடைய வேண்டும் என்றால், எல்லைக்கப்பாற்பட்ட சுபபாவனை மற்றும் சுபவிருப்பத்தில் நிலைத்திருங்கள்.

     

    ***ஓம் சாந்தி***