BK Murli 1 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 July 2016 Tamil

    01.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! தந்தையைப் போன்று அகங்காரமற்றவர் மற்றும் எந்த பலனையும் எதிர்பாராமல் சேவை செய்பவர் வேறு யாரும் கிடையாது, முழு உலக இராஜ்யத்தையும் குழந்தைகளிடம் கொடுத்து விட்டு சுயம் வானபிரஸ்த நிலையில் அமர்ந்து விடுகிறார்.



    கேள்வி:

    தந்தையின் எந்த செய்தியை நீங்கள் முழு உலகிற்கும் கூற வேண்டும்?



    பதில்:

    நீங்கள் துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவரின் குழந்தைகள், நீங்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது, சுகம் கொடுக்கும் வள்ளலை நீங்கள் நினைவு செய்யுங்கள், அவரை பின்பற்றுங்கள், அப்போது நீங்கள் அரை கல்பத்திற்கு சுகதாமத்திற்கு சென்று விடுவீர்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். இந்த செய்தி அனைவருக்கும் கூற வேண்டும். யார் இந்த செய்தியை வாழ்க்கையில் கடைபிடிப்பார்களோ அவர்கள் 21 பிறவிகளுக்கு மாயையின் மயக்கத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள்.



    பாட்டு:

    நமது தீர்த்த யாத்திரை தனிப்பட்டது .......



    ஓம் சாந்தி.

    இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்த பாட்டின் பொருளை புரிந்து கொண்டீர்கள். ஆத்மாக்களாகிய நமக்கு அவர் தந்தை ஆவார். முக்கியமானது ஆத்மா. எனது ஆத்மா பரம்பிதா பரமாத்மாவின் எதிரில் அமர்ந்திருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். உங்களது ஆத்மா சுப்ரீம் ஆத்மாவின் எதிரில் அமர்ந்திருக்கிறது. உங்களுக்கென்று சரீரம் இருக்கிறது, இவருக்கு தத்தெடுக்கப்பட்டிருக்கும் சரீரம் இருக்கிறது. குருக்கள் மனிதர்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பல குருக்கள் உள்ளனர். பாரதத்தில் மனைவி தனது கணவனை குரு என்றும், ஈஸ்வரன் என்றும் புரிந்து கொள்கிறாள். தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - நீங்கள் குழந்தைகள் அல்லவா! நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை புரிந்திருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடத்தில் மீண்டும் எல்லையற்ற ஆஸ்தி அடைவதற்காக வந்திருக்கிறீர்கள், இப்போது நாம் சத்கதி அடைய வேண்டும். இந்த நம்பிக்கை இருக்கிறது அல்லவா! முழு உலகமும் துர்கதியில் இருக்கிறது, தூய்மை இழந்த நிலையில் இருக்கிறது. தூய்மை ஆவதற்கு அழைக்கின்றனர் எனில் பாரதத்தில் எவ்வளவு குருக்கள் இருக்கின்றனர்! சிலரை 100 பேர் பின்பற்றுகின்றனர், சிலரை 500 பேர், சிலருக்கு 50 பேரும் இருக்கின்றனர். சிலருக்கு இலட்சம், கோடிக்கணக்கானவர்களும் இருக்கின்றனர். எவ்வாறு (கோஜோ) அரண்மனை பணியாளர்களுக்கு ஆகலகான் குருவானவர்! அவருக்கு எத்தனையோ பேர் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்! அவருக்கு எவ்வளவு மரியாதை செலுத்து கின்றனர்! பிறகு எது வேண்டுமென்றாலும் செய்யட்டும், அவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! பக்தி மார்க்கத்தில் பல குருக்கள் உள்ளனர், அவர்களும் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர். சிலரது வருமானம் பல மடங்கு ஏற்படுகிறது. கோஜோக்களின் குருவிற்கு அதிக வருமானம். அவர்களது சீடர்கள் அவருக்கு வைரத்தினால் துலாபாரம் செய்தனர். தராசில் ஒருபுறம் வைரம், மற்றொருபுறம் அவர்களது குரு. வைரத்தை தானம் செய்கின்றனர், எவ்வளவு வைரம் இருந்திருக்கும்! இன்றைய நாட்களில் பலருக்கு எடைக்கு எடை தங்கத்தினால் தானமாக கொடுக்கின்றனர். மற்றொன்று பிளாட்டினம், அது தங்கத்தை விட விலை உயர்ந்தது ஆகும். அதையும் தானமாக கொடுத்து விடுகின்றனர். குருவின் பதவி எவ்வளவு உயர்வாக இருக்கிறது பாருங்கள்! இப்படிப்பட்ட குருக்கள் பலர் இருக்கின்றனர். இப்போது இந்த சத்குருவிற்கு நீங்கள் என்ன கொடுப்பீர்கள்? அவருக்கு துலாபாரம் செய்வீர்களா? வைரம் துலாபாரமாக கொடுப்பீர்களா? அவருக்கு துலாபாரம் செய்ய முடியுமா? அவர் சுயம் சுமையற்றவராக இருக்கின்றார். சிவன் இருப்பதோ புள்ளி. அவருக்கு நீங்கள் என்ன துலாபாரம் செய்ய முடியும்? உங்களது இந்த குரு எவ்வளவு அதிசயமானவர்! அனைவரையும் விட இலேசானவர். முற்றிலும் சூட்சுமமானவர். உங்களது குரு ஒரே ஒருவர் ஆவார். சிவபாபா வள்ளல் என்பதை நீங்கள் அறிவீர்கள். பகவான் ஒருபோதும் எதையும் வாங்க மாட்டார். அவர் கொடுக்கக் கூடியவர். ஈஸ்வரன் பொருட்டு அனைவரும் தானம் செய்கின்றனர் எனில் இதற்கு பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆசை வைக்கின்றனர். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். இவர் போன்று பலன் எதிர்பாராமல் யாரும் சேவை செய்ய முடியாது. எப்படிப்பட்ட சுயநலமற்ற சேவை செய்கிறார்? குழந்தைகளை உலகிற்கு, சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். பாபா சுயம் உலகிற்கு எஜமானராக ஆவது கிடையாது. சுகத்தின் கடல், அமைதியின் கடல், தூய்மையின் கடல் என்று அவர் கூறப்படுகின்றார். குழந்தைகள் ஒவ்வொரு விசயத்தையும் நன்றாகப் புரிய வைக்கப்படுகின்றனர். ஒரே ஒரு தந்தையிடமிருந்து உங்களுக்கு ஜீவன்முக்தி கிடைத்து விடுகிறது. பாபாவிட மிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. நம்பிக்கை ஏற்பட்டது, அவ்வளவு தான். பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். இவர் தான் ஞானக் கடல் என்று கூறப்படுகின்றார். முழு கடலையும் மை ஆக்குங்கள், முழு காட்டையும் பேனா ஆக்குங்கள் ..... அப்போதும் மகிமையை எழுதி முடியாது. நீங்கள் ஆரம்பத்திலிருந்து எழுதிக் கொண்டே சென்றால் அதிக புத்தகங்கள் ஆகிவிடும். இந்த ஞானம் மிகவும் மதிப்பு வாய்ந்தது ஆகும், இதை தாரணை செய்ய வேண்டும். இது பரம்பரையாக நடைபெறுவது கிடையாது என்பதை அறிவீர்கள். இப்போது உங்களுக்கு மந்திரம் கிடைக்கிறது. தந்தை வந்து குழந்தைகளுக்கு தனது அறிமுகம் கொடுக்கின்றார், அதுவே போதுமானதாகும். தந்தையின் அறிமுகம் கொடுப்பதன் மூலம், படைப்பவரை அறிந்து கொள்வதன் மூலம் படைப்பின் ஞானமும் வந்து விடுகிறது. யார் சத்யுகத்தில் வருவார்களோ அவர்களது பிறப்பு அதிகமாக இருக்கும் என்று புத்தி கூறுகிறது. சக்கரத்தில் யார் முதலில் வருவார்களோ அவர்கள் தான் வருவார்கள். இந்த சக்கரத்தையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நமது தீர்த்த யாத்திரை தனிப்பட்டது என்று பாட்டும் கேட்டீர்கள். அந்த தீர்த்த யாத்திரைகளை பல பிறவிகளாக செய்து வந்தீர்கள். இது உங்களது ஒரே ஒரு பிறவிக்கான யாத்திரை ஆகும். இந்த ஆன்மீக யாத்திரையில் சிறிதும் எந்த கஷ்டமும் கிடையாது. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு சத்குரு ஆவார். சத்கதி மற்ற யாருக்கும் ஏற்படுவது கிடையாது. அவர் சுப்ரீம் ஞானக் கடல் ஆவார், நம் அனைவருக்கும் சத்கதி ஏற்பட்டு விடுகிறது. வேறு என்ன வேண்டும்! தத்துவமும் சதோ பிரதானமாக ஆகிவிடும். இங்கு தமோ பிரதானமாக இருப்பதால் காற்று போன்றவைகளும் தமோ பிரதானமாக இருக்கிறது. பூகம்பம் போன்றவைகள் எவ்வளவு ஏற்படுகின்றன! சத்யுகத்தில் துக்கம் கொடுக்கும் எந்த பொருளும் இருக்காது. தந்தை துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர் ஆவார். நீங்கள் அவரது குழந்தைகள் ஆவீர்கள், யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. சுகத்தின் ஆஸ்தி அடைவதற்கான வழியை அனைவருக்கும் கூற வேண்டும்.



    நீங்கள் சுகம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். பாபா உங்களுக்கு அரைக் கல்பத்திற்கு அங்கே துக்கம் என்ற பெயரே இல்லாத அளவிற்கு சுகம் கொடுக்கின்றார். தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தியடைவதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மாணவர்கள் அல்லவா! சிவபாபாவிடமிருந்து சொர்க்கத்தின் சுகத்தை அடைகிறோம் எனில் அனைத்து துக்கமும் தூர விலகி விடும் என்று உங்களது உள்ளத்தில் இருக்கிறது. விழிப்படைவதற்கான சஞ்சீவினி மூலிகையை பாபா நமக்கு கொடுக்கின்றார். பிறகு 21 பிறவிகளுக்கு ஒருபோதும் மயக்கமடையமாட்டீர்கள். அந்த சஞ்சீவினி மூலிகை மன்மனாபவ ஆகும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் நிராகாரமானவர், அகங்காரமற்றவர் என்று கூறப்படுகின்றார். எந்த சரீரத்தில் வருகிறாரோ அவரும் சாதாரணமானவர். செல்லக் குழந்தைகளே! நான் உங்களது கீழ்படிந்துள்ள தந்தை என்று தந்தை கூறுகின்றார். பெரிய மனிதர்கள் எப்போதும் இப்படித்தான் எழுதுவர் - நான் கீழ்படிந்துள்ள சேவகன். தன்னை ஒருபோதும் ஸ்ரீ என்று எழுதிக் கொள்ளமாட்டார்கள். இன்றைய நாட்களில் ஸ்ரீ ஸ்ரீ இன்னார் என்று எழுதிக் கொள்கின்றனர். தனக்குத் தானே ஸ்ரீ ஸ்ரீ என்று எழுதிக் கொள்கின்றனர். அந்த தந்தை நிராகாரமானவர், அகங்காரமற்றவர். இப்போது நீங்கள் அவரது எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். அவர் நமது தந்தை, ஆசிரியர், சத்குரு என்பதை அறிவீர்கள், மற்றபடி பக்தி மார்க்கத்தில் பல குருக்கள் இருக்கின்றனர். குருக்களுக்கும் குரு இருப்பர். இவருக்கு எந்த குருவும் கிடையாது. அவர் சத்தியமான பாபா, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குரு ஆவார்.



    ஆத்மா தான் சம்ஸ்காரத்தை தாரணை செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவும் ஆத்மா அல்லவா! அவரிடத்திலும் குணங்கள் உள்ளன. உங்களது குணங்கள் தனித்தனியாக ஆகிவிடுகிறது. இந்த நேரத்தில் உங்களிடத்தில் என்ன குணங்கள் இருக்கிறதோ அதுவே தந்தையின் குணங்களாகும். பிறகு சத்யுகத்தில் உங்களிடத்தில் தெய்வீக குணங்கள் இருக்கும். தந்தை ஞானக் கடலாகவும், அன்புக் கடலாகவும் இருக்கின்றார். கிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது. சிவபாபாவை 16 கலைகள் நிறைந்தவர் என்ற கூற முடியாது. அவர் நிரந்தரமானவர் ஆவார். இந்த பட்டம் நீங்கள் எனக்கு கொடுக்க முடியாது என்ற தந்தை கூறுகின்றார். சர்வ குணங்கள் நிறைந்தவர் ஆவதற்கு நான் விகாரியாக ஆவது கிடையாது. எனக்கு மகிமை இவருடையதைப் போன்று செய்வது கிடையாது. இந்த ஞானத்தை யார் கல்பத்திற்கு முன்பு கேட்டார்களோ அவர்களே வருவார்கள். வந்து தந்தையிடத்தில் கேட்பார்கள், மேலும் தந்தையை நினைவு செய்வார்கள். கடைசியில் ஐயோ ஐயோ என்ற கூறி அழுவார்கள், பிறகு வெற்றி ஏற்பட்டு விடும். இப்போது நீங்கள் யாத்திரையின் ரகசியத்தையும் புரிந்து கொண்டீர்கள். இந்த யாத்திரையின் மூலம் நீங்கள் ஒருபோதும் மரண உலகத்திற்கு திரும்பி வரமாட்டீர்கள். அந்த யாத்திரை செய்து முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்பி விடுவார்கள். நதிகளில் குளிப்பதற்காக எவ்வளவு மனிதர்கள் செல்கின்றனர்! பக்தியின் விஸ்தாரம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பாருங்கள்! எப்படி மரம் மிகவும் பெரியதாக இருக்கிறதோ! விதை முற்றிலும் சிறியதாக இருக்கும். அதே போன்று பக்தியின் விஸ்தாரமும் எவ்வளவு இருக்கிறது! ஒரே ஒரு துளி ஞானக் குளியலும் சத்கதி ஏற்படுத்தி விடும். பக்தியில் இறங்கி இறங்கி அரைக் கல்பம் ஆகிவிடுகிறது. இங்கு ஏணியில் ஏறுவதற்கு உங்களுக்கு ஒரு விநாடி ஏற்படுகிறது - லிப்ட் எவ்வளவு நன்றாக இருக்கிறது! கீழிருந்து ஒரேயடியாக மேலே, தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. இது தான் முன்னேறும் கலையில் சென்றால் அனைவருக்கும் நன்மை என்று கூறப்படுகிறது. அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்போது ஞானத்திற்கும் பக்திக்கும் உள்ள வைராக்கியத்தைப் பாருங்கள்! ஞானம், பக்தி, வைராக்கியம் அல்லவா! சந்நியாசிகளுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். இரண்டு வகையான வைராக்கியம் - ஒன்று எல்லைக்குட்பட்ட வைராக்கியம், இதன் மூலம் யாருக்கும் சத்கதி ஏற்படுவது கிடையாது, மற்றொன்று எல்லையற்ற வைராக்கியம் – இதன் மூலம் உங்களுக்கு சத்கதி ஏற்பட்டு விடுகிறது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். இப்போது சத்கதிக்காக, சிரேஷ்டத்திலும் சிரேஷ்டம் ஆவதற்காக குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. இப்போது ஸ்ரீமத் மூலம் சிரேஷ்ட உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த தரம் தாழ்ந்து விட்ட உலகம் இராவணின் வழியில் இருக்கிறது. நாம் சிரேஷ்டமாகிக் (உயர்ந்து) கொண்டிருக்கிறோம் என்ற விசயத்தை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். உலகத்தினர் முற்றிலும் அறியாமல் இருக்கின்றனர். பிரம்மா குமாரிகள் விநாசம் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று உங்களை கூறுகின்றனர். உண்மையில் விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். இதன் மூலம் தான் நன்மை ஏற்படும். கல்யாணகாரி தந்தை வருகின்றார் எனில் மகாபாரத யுத்தம் ஏற்பட்டு விடுகிறது. பிரம்மா குமாரிகள் விநாசம் செய்வார்கள் என்று நாம் கூறியிருந்தோம் அல்லவா என்று கூறுவர். உண்மையில் விநாசம் ஆகியே தீர வேண்டும். பழைய உலகம் விநாசம் ஆகிவிடும். நாம் புது உலகம் ஸ்தாபனை செய்கிறோம். பழையவற்றிற்குப் பிறகு அவசியம் புதிது ஏற்படும். கல்ப கல்பம் விநாசம் ஏற்படுகிறது, அப்போது தான் பாரதத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஆனால் அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? நாளடைவில் அதிகம் புரிந்து கொள்வார்கள். தந்தை வருகின்ற போது முழு பழைய உலகமும் விநாசம் ஆகிவிடும். உங்களது இந்த யக்ஞம் மிகவும் ஆச்சரியமானது, இதில் ஆஹுதி ஏற்பட வேண்டும். இதையும் நீங்கள் மட்டுமே அறிவீர்கள், வேறு யாரும் அறியவில்லை. வெற்றி பாண்டவர்களுக்கு ஏற்பட வேண்டும், மற்ற அனைவரும் அழிந்து விடுவர். பாண்டவர்களாகிய நீங்கள் மட்டுமே இருப்பீர்கள், பிறகு புது உலகில் இராஜ்யம் செய்வீர்கள். இந்த ஞானம் மிகவும் அதிசயமானது. அனைவரின் துக்கத்தையும் நீக்கி சுகம் கொடுப்பவர், சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். தந்தை எவ்வளவு இனிமையானவராக, எவ்வளவு அன்பானவராக இருக்கின்றார்! இனிய பாபா, நீங்கள் வரும் போது உங்களிடம் நாம் பலியாகி விடுவோம் என்று கூறி வந்தோம். எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை. வீட்டை விட்டு விட்டு இங்கேயே வந்து அமர்ந்து விட வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல! குடும்ப விவகாரத்தில் இருங்கள், 7 நாள் பாடம் எடுத்துக் கொண்டு பிறகு எங்கு சென்றாலும் - மன்மனாபவ! தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் ஆஸ்தியடைய வேண்டும். நினைவு யாத்திரையிலேயே இருக்க வேண்டும், இதன் மூலம் தான் படகு கரை சேர முடியும். தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அசுத்த உணவுகளை சாப்பிடக் கூடாது. முரளி கிடைக்கவே செய்கிறது. சில நேரங்களில் முரளி கிடைக்காது, ஆபத்துக்கள் வரும், குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் போது முரளி கிடைக்காது. நீங்கள் இந்த கண்களினால் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள் இருக்காது, அனைத்தும் பஸ்பம் ஆகிவிடும். பிரளயம் ஏற்படுவது கிடையாது. உலகம் ஒன்றே ஒன்று தான், புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. புது உலகம், பழைய உலகம் என்ற கூறப்படுகிறது. இந்த உலகம் பழையது, இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது என்று கூறுவீர்கள். கல்பத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று அவர்கள் கூறுகின்றனர். இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கிறது என்று கலியுகத்தைப் பற்றி கூறுகின்றனர். உண்மையில் 5 ஆயிரம் ஆண்டிற்கான சக்கரமாகும். உங்களது புத்தியில் முழு ஞானம் இருக்கிறது. மனிதர்கள் முற்றிலும் கல்புத்தியாக இருக்கின்றனர். நடிகனாக இருந்து கொண்டு நாடகத்தை படைத்தவர், டைரக்டரை அறிந்து கொள்ளவில்லையெனில் அவர்களை என்னவென்று கூறுவது? உலக சரித்திர, பூகோளம் எப்படி திரும்பவும் நடைபெறுகிறது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! யார் நன்றாக புரிந்திருக்கிறார்களோ, புத்தியில் தாரணை செய்து மற்றவர்களுக்கும் செய்விக்கிறார்களோ அவர்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைகின்றனர். தந்தை கூறுகின்றார் - எந்த ஞானம் என்னிடத்தில் இருக்கிறதோ அதை நான் உங்களுக்கு இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நாடகப்படி நான் திரும்பவும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கும் நாடகத்தில் பாகம் இருக்கிறது. பக்தி மார்க்கத்திலும் எனது பாகத்தை நடித்திருக்கிறேன், இப்போது உங்களிடம் வந்து எனது மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் அறிமுகம் கொடுக்கிறேன். நானும் நாடகத்தின் பந்தனத்தில் இருக்கிறேன். நான் ஒரே ஒரு முறை தான் வருகிறேன். எனது அறிமுகம் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்க வருகிறேன். நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) தந்தைக்குச் சமமாக கீழ்படிந்துள்ளவர்களாக ஆக வேண்டும். ஒருபோதும் எந்த விசயத்திலும் தனது அகங்காரத்தைக் காண்பிக்கக் கூடாது. நிரகாரியாகவும், நிர்அகங்காரியாகவும் இருக்க வேண்டும்.



    2) தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவின் வித்தியாசத்தை புரிந்து கொண்டு நிச்சயபுத்தி உடையவர்களாகி ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஆன்மீக யாத்திரையில் இருக்க வேண்டும்.



    வரதானம்:

    தனக்காகவும், அனைத்து ஆத்மாக்களுக்காகவும் சட்ட திட்டங்களுடன் இருக்கக் கூடிய சட்டத்தை உருவாக்குபவர் மற்றும் புது உலகை உருவாக்குபவர் ஆகுக.



    யார் தனக்குத் தானே சட்டத்தை நன்கு அறிந்தவர்களாக ஆகிறார்களோ அவர்களே மற்றவர்களையும் சட்டத்தை அறிந்தவர்களாக ஆக்க முடியும். யார் சுயம் சட்டத்தை மீறுகிறார்களோ அவர்கள் மற்றவர்கள் மீது சட்டத்தை செலுத்த முடியாது. ஆகையால் அதிகாலையிலிருந்து இரவு வரை மனதின் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில் சம்மந்தம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் அல்லது சேவைகளில் ஒருபோதும் சட்டத்தை மீறவில்லை தானே? என்று தன்னைத் தான் பாருங்கள். யார் சட்டத்தை உருவாக்குபவர்களோ அவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக ஆக முடியாது. யார் இந்த நேரத்தில் சட்டத்தை உருவாக்குவார்களோ அவர்களே அமைதி உருவாக்குபவர், புது உலகை உருவாக்குபவராக ஆக முடியும்.



    சுலோகன்:

    காரியங்கள் செய்தாலும் காரியத்தின் நல்லது அல்லது கெட்டதின் பாதிப்பில் வராமல் இருப்பது தான் கர்மாதீத் நிலை அடைவதாகும்.



    ***OM SHANTI***