BK Murli 12 June 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 12 June 2016 Tamil

    12.06.2016  காலை முரளி  ஓம் சாந்தி   ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 04.10.1981  மதுபன்

     '' பிரம்மா பாபாவின் ஒரு நல்விருப்பம் ''


    இன்று பாப்தாதா வெற்றி இரத்தினங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்று பக்தர்கள் விஜயதசமியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள் செய்வது எரிப்பது மற்றும் குழந்தைகள் உங்களுடையது சந்திப்பைக் கொண்டாடுவது. எரித்த பிறகு சந்திப்பைக் கொண்டாட வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட இராவணனை எரித்த பிறகு அதாவது வெற்றி அடைந்த பிறகு, எந்த சந்திப்பை காண்பிக்கிறார்கள்? பக்தியின் விஷயங்களையோ மிக நன்றாக தெரிந்திருக்கிறீர்கள். இராவணன் இறந்த பிறகு என்ன நிலை ஆகிவிடுகிறது? அதற்கான அடையாளம் என்ன? 'பரதனை சந்திப்பது'. இது சகோதரத்துவத்தின் நிலை. சகோதரன் சகோதரனின் திருஷ்டியின் (பார்வை) அடையாளம் - சேவை மற்றும் அன்பு. அன்பின் அடையாளமாக தீபமாலையைக் (தீபாவளியை) காண்பித்திருக்கிறார்கள். சேவையின் வெற்றிக்கான ஆதாரம் சகோதரத்துவத்தை காண்பித்திருக்கிறார்கள். இது இல்லாது தீபாவளியைக் கொண்டாட முடியாது. தீபாவளி இன்றி இராஜதிலகமும் இட முடியாது. எனவே இன்றைய நினைவாக விஜயதசமியைக் கொண்டாடுகின்றனர். இதற்கான ஆதாரம், முதலில் அஷ்டமியை கொண்டாடுவார்கள், அஷ்டமி இன்றி வெற்றி கிடையாது. ஆக நீங்கள் எதுவரை வந்து அடைந்துள்துள்ளீர்கள்? அஷ்டமியை கொண்டாடினீர்களா? நீங்கள் அனைவரும் நவதுர்கா ஆகிவிட்டீர்களா? அஷ்ட சக்திகள் மற்றும் ஒரு சக்திவான்!. சர்வ சக்திவான் தந்தையுடன் அஷ்ட சக்தி சொரூபம், அந்த மாதிரி நவதுர்காவாக ஆகிவிட்டீர்களா? துர்கை என்றால், துர்குணத்தை (தீயகுணத்தை) அழித்து, அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆவது ! அப்பொழுது தான் தசரா கொண்டாட முடியும். அப்படி குழந்தைகள் தசராவைக் கொண்டாடினார்களா என்று பார்ப்பதற்காக பாப்தாதா வந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் நான் தசரா கொண்டாடினேனா? அல்லது அஷ்டமியை கொண்டாடினேனா என்று நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் மற்றும் ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள். அழியாத பற்றவைக்கும் குச்சியை ஏற்றினீர்களா அல்லது சிறிது நேரம் எரியும் குச்சியை ஏற்றினீர்களா? இராவணனை எரித்தீர்களா அல்லது அனைத்து வம்சத்தையும் எரித்தீர்களா? இராவணனை அழித்தீர்களா மற்றும் இராவணன் இராஜ்ஜியத்தையும் அழித்தீர்களா?



    இன்று சூட்சும வதனத்தில் பிரம்மா பாபாவின் ஆன்மீக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. எந்த நேரத்தில்? (வகுப்பு நேரத்தில்). பாப்தாதாவும் குழந்தைகளின் ஆன்மீக உரையாடலைக் கேட்கிறார்கள். பெரும்பான்மையான அனைத்து குழந்தைகளும், தசராவை கொண்டாடினீர்களா என்ற கேள்வி எப்பொழுது கேட்கப்படுகிறதோ அப்பொழுது இல்லை என்பதிலும் கை உயர்த்துவதில்லை, ஆம் என்பதிலும் கை உயர்த்துவதில்லை. ஒருவேளை எழுதுகிறார்கள் என்றால் கூட பதில் தருவதிலும் மிகவும் சாதுர்யமானவர்கள். பொய்யும் எழுதுவதில்லை ஆனால் தெளிவாகவும் எழுதுவதில்லை. அனைவரிடமிருந்தும் மூன்று, நான்கு பதில்கள் வருகின்றன. மேலும் அந்த பதில்களிலிருந்தே ஏதாவது ஒரு பதிலைக் கொடுப்பார்கள். அப்படி பிரம்மா பாபாவின் ஆன்மீக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பிரம்மா பாபாவோ வீட்டின் கதவுகளின் திறப்பு விழாவிற்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைய கேள்விக்கான அனைவரின் பதில் காகிதத்தின் மேல் எழுதப்படவில்லை, ஆனால் மனதின் எண்ணம் மூலம் தந்தையின் எதிரில் தெளிவாக இருக்கிறது. வகுப்பு நேரத்தில் குழந்தை (தாதி) கேள்வி கேட்டார்கள், மேலும் அனைவரின் பதிலை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். பதிலின் சாரத்தையோ கூறிவிட்டோம், கூறுவதற்கும் அவசியம் இல்லை, தந்தையை விட நீங்கள் அதிகம் தெரிந்திருக்கிறீர்கள். பதிலைப் பார்த்துக் கொண்டே பிரம்மா பாபா என்ன செய்தார்? மிக நல்லதொரு விஷயத்தைக் கூறினார். பிரம்மா பாபாவின் விசேஷம் நிரம்பிய சம்ஸ்காரத்தை அறிவீர்கள். விசேஷத்தின் சம்ஸ்காரத்தின் பாகத்தைத் தான் நடித்து வந்தார். அது என்னவாக இருக்கும்? அந்த விஷயத்தின் சம்மந்தம் பிரம்மா பாபாவின் ஆரம்ப காலத்து பிரவேசத்தின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. எப்பொழுது ரிசல்ட்டை பார்த்தாரோ உடன் ஒரு நொடிக்காக பிரம்மா பாபா மிகுந்த யோசனையில் ஆழ்ந்து விட்டார். இன்று எமது ஒரு விஷயத்தை நிறைவேற்ற வேண்டும் என்ன அது? என்று கூறினார். பிரம்மா பாபா கூறினார். 'இன்று என்னிடம் சாவியைக் கொடுத்து விடுங்கள்'. எந்த சாவி? அனைவரின் புத்தியை மாற்றம் செய்வதற்கான, சம்பன்னம் (முழுமை) ஆக்குவதற்கான சாவி. எப்படி தொடக்கத்தில் கூட சாவியின் போதை இருந்தது, கஜானா இருக்கிறது, சாவியும் இருக்கிறது. திறக்க மட்டும் தான் செய்ய வேண்டும். அந்த மாதிரி பிரம்மா பாபா இன்றும் சம்பன்னமாக ஆக்கும் சாவியை தந்தையிடமிருந்து வேண்டும் என்று கேட்டார். அந்தக் காட்சியை இவ்வுலகில் கண்ணெதிரே அனுபவம் செய்யக் கூடியவர்கள் பிரம்மா பாபா மற்றும் தந்தையிடையே எந்த ஆன்மீக உரையாடல் நடந்தது என்று புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது பிரம்மா பாபாவிடம் சாவியை கொடுக்க முடியுமா? மேலும் பிரம்மாவிடம் தந்தை இல்லை, முடியாது என்று கூற முடியுமா? குழந்தைகளும் முடியாது என்று சொல்வதில்லை, ஆம் என்றும் சொல்வதில்லை.



    ஆனால் பிரம்மா பாபாவிற்கு குழந்தைகளை எப்பொழுதும் சம்பன்னமானவர்களாக பார்ப்பதற்கான ஆவல் அதிகமாக உள்ளது என்பது உண்மை. ஆக வேண்டும் என்றில்லாமல், இப்பொழுதே ஆகி விட வேண்டும். எப்பொழுதெல்லாம் குழந்தைகளின் விஷயங்கள் பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரம்மா பாபாவின் முகம் தீப மாலை மாதிரி ஆகிவிடுகிறது, அந்த மாதிரி தீவிரமான ஊக்கம் மற்றும் மாஸ்டர் கடலுக்கு சமமாக உயர்ந்த அலை உருவாகிறது. அந்த ஊக்கம் என்ற உயர்ந்த அலையில் அனைவரையும் சம்பன்னமாக ஆக்கி, தீப ஒளியில் ஏற்றி விட வேண்டும். பிரம்மா பாபாவின் சாகார சரித்திரத்திலும், பிரம்மா பாபாவிற்கு பிறந்ததிலிருந்தே ஒரு வார்த்தை பிடிக்காது என்ற இதையும் அனுபவம் செய்திருக்கிறீர்கள். அது எது? தன்னுடைய காரியத்திலும் அது பிடிக்காது, குழந்தைகள் காரியத்திலும் அது பிடிக்காது. 'எப்பொழுதாவது செய்து விடுவோம்' என்ற இந்த வார்த்தை பிடிக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் அப்பொழுதே செய்தார் மற்றும் செய்வித்தார். சேவையின் திட்டத்தில் பாருங்கள், மாற்றத்தில் பாருங்கள், இப்பொழுதே செல்லுங்கள், இப்பொழுதே செய்யுங்கள், ரயில் புறப்படும் சிறிது நேரம் தான் உள்ளது என்றாலும், செல்லுங்கள், செல்லுங்கள், ரயிலுக்கு தாமதமாகி விடும் என்று கூறுவார். அப்படி எந்த சம்ஸ்காரமாக இருந்தது. இப்பொழுதே செய்ய வேண்டும், பிறகு என்பது இல்லாமல் இருந்தது. எப்படி 'இப்பொழுதே' என்ற விசேஷ வார்த்தைதான் கேட்டீர்கள். அதே போல் இன்று கூட சூட்சும வதனத்தில் இப்பொழுதே நடக்க வேண்டும் என்ற இந்த மொழி தான் இருந்தது. இன்னும் ஒரு சிரிப்பூட்டும் விஷயத்தைக் கூறுகிறோம், அது என்னவாக இருக்கும்? பிரம்மா பாபா அவரே சம்பன்னமாக இருக்கும் காரணத்தினால் குழந்தைகள் 'எப்பொழுதாவது' என்று ஏன் கூறுகிறார்கள் என்று பார்க்க முடிவதில்லை. எனவே அடிக்கடி தந்தையிடம் இவர்கள் ஏன் மாறுவதில்லை, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று கூறுகிறார். இதுவரையிலும் இதை ஏன் கூறுகிறார்கள்? அவருக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. நாடகத்தின் விஷயம் வேறாக இருந்தது, இது ரமணீகரமான சிரிப்பூட்டும் விஷய மாகும். நாடகத்தை தெரிந்திருக்கவில்லை என்று அப்படியில்லை. ஆனால் பார்த்து பார்த்து, அன்பின் காரணமாக தந்தையுடன் சிரித்துக் கொள்கிறார். தந்தையுடன் சிரிப்பூட்டும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ அனுமதி இருக்கிறது தான் இல்லையா. தந்தையும் புன்முறுவலிட்டுக் கொள்கிறார். அப்படி இப்பொழுது பிரம்மா பாபா என்ன விரும்புகிறார் என்பதையோ தெரிந்து விட்டீர்கள் இல்லையா? இப்பொழுது விடுபட்டவராகி, முக்திதாமத்தின் வாசலைத் திறப்பதற்காகத் தந்தையுடன் துணைவர்களாக ஆகுங்கள். இது தான் குழந்தைகள் மேல் உள்ள பிரம்மா பாபாவின் நல் விருப்பம் ஆகும். முதலில் தந்தையின் நல் விருப்பம் என்ற தீபத்தை ஏற்றி தீபாவளி கொண்டாடுங்கள். இந்த ஒரு தீபத்தின் மூலமே தீபாவளி இயல்பாக ஆகிவிடும். புரிந்ததா? நல்லது. பிறகு பரதனின் சந்திப்பின் இரகசியத்தைக் கூறுவோம். நல்லது.



    அந்த மாதிரி பாப்தாதாவின் உயர்ந்த எண்ணத்தை நடைமுறையில் கொண்டு வரக்கூடிய, அழியாத திட எண்ணம் என்ற தீக்குச்சியை ஏற்றி அழியாத வெற்றி அடைபவராக ஆகக்கூடிய, சாகார தந்தைக்குச் சமமாக, எப்பொழுதும் 'இப்பொழுதே' என்ற பாஷையை காரியத்தில் கொண்டு வரக்கூடிய, பின்னர் எப்பொழுதாவது என்பதை அழித்து, அனைவருக்கும் சாகார தந்தையின் உருவம் மற்றும் முகத்தைக் காண்பிக்கக்கூடிய அந்த மாதிரி வெற்றி இரத்தினங்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    குமாரிகளுடன் –

    குமாரிகளோ பறக்கும் பறவைகள். ஏனென்றால், குமாரிகள் எப்பொழுதும் இலேசாக இருப்பவர்கள். குமாரி என்றால், எந்த சுமையும் இல்லாதவர். இலேசான பொருள் மேலே பறக்கும் இல்லையா. எப்பொழுதும் மேலே செல்பவர் என்றால் உயர்ந்த நிலைக்குச் செல்பவர். நீங்கள் அப்படித் தான் இல்லையா? எதுவரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். யார் தந்தையின் ஸ்ரீமத்தின் அனுசாரம், அதே கோட்டிற்கு உள்ளே எப்பொழுதுமே இருப்பவர்களோ அவர்கள் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டே இருப்பார்கள். அப்படி கோட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் யார்? உண்மையான சீதை. அப்படி நீங்கள் அனைவருமே உண்மையான சீதைகள் தான் இல்லையா? உறுதியாகவா? கோட்டிற்கு வெளியே கால் வந்தது என்றால், இராவணன் வந்து விடுவான். யாராவது காலை வெளியில் வைத்தார்கள் என்றால், நான் கடத்தி சென்று விட வேண்டும் என்று இராவணன் காத்துக் கொண்டிருக்கிறான். அப்படி குமாரிகள் என்றால் உண்மையான சீதைகள். இங்கிருந்து வெளியில் சென்ற பிறகு மாறி விடாதீர்கள். ஏனென்றால், மதுபன்னில் வாயுமண்டலத்தின் வரதானத்தின் பிரபாவம் இருக்கிறது, இங்கு அதிகப்படியான லிஃப்ட் கிடைக்கிறது. அங்கே கடின உழைப்பு செய்து நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். குமாரிகளைப் பார்த்து பாப்தாதாவிற்கு ஆயிரம் மடங்கு குஷி ஏற்படுகிறது. ஏனென்றால், கசாப் கடைகாரனிடமிருந்து தப்பித்து விட்டார்கள். எனவே குஷி இருக்கும் இல்லையா? நல்லது. இப்பொழுது திடமான உறுதிமொழி எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.



    பாண்டவர்களுடன் –

    அனைத்து பாண்டவர்களும் சக்தி சொரூபமாக இருக்கிறீர்கள் இல்லையா? சக்தி மற்றும் பாண்டவர்கள் இணைந்திருக்கிறீர்களா? சர்வ சக்திவானின் எதிரில் சக்தி ஆகிவிடுகிறார்கள் மற்றும் தனது பங்கைச் செய்வதில் பாண்டவர்கள். சர்வ சக்திவானை சக்தியாகி, நினைவு செய்யவில்லை என்றால், மகிழ்ச்சி ஏற்படாது. ஆத்மா சீதை அவர் ராம் ! அப்படி இந்த பங்கை செய்வதிலும் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது. இந்த பங்கு தான் சங்கமயுகத்தின் அனைத்தையும் விட அதிசயமான ஒன்றாகும், இதில் பாண்டவர்கள் சக்திகளாகிவிடுகிறார்கள் மற்றும் சக்திகள் சகோதரர் ஆகிவிடுகிறார்கள். இதிலிருந்து தேக உணர்வை மறந்து விட்டார்கள் என்பது நிரூபணமாகிறது. ஆத்மாவில் இரண்டு சம்ஸ்காரமும் இருக்கிறது ஏனென்றால், சில நேரம் ஆணின் பங்கையும், சில நேரம் பெண்ணின் பங்கையும் செய்திருக்கிறீர்கள் தான் இல்லையா? சங்கமயுகத்தில் காதலி ஆகி காதலனை நினைவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது. சக்தியாகி சர்வ சக்திவானை நினைவு செய்ய வேண்டும். சீதையாகி ராமை நினைவு செய்ய வேண்டும்.



    தாய் மார்களுடன் –

    சக்தி சேனை எப்பொழுதும் ஆயுதங்கள் தரித்தவர்கள் தான் இல்லையா? சக்திகளின் அலங்காரமே ஆயுதங்கள் தான் ! யார் எப்பொழுதுமே ஆயுதம் ஏந்தியவரோ அவர் தான் எப்பொழுதும் மகாதானி, வரதானியாக இருக்கிறார். அனைத்து ஆயுதங்களும் தன்னிடம் எப்பொழுதும் இருக்கின்றனவா? சில நேரம் மட்டுமல்ல, எப்பொழுதுமே ! சக்திகளின் தபஸ்யா சர்வ சக்திவானை இங்கே கொண்டு வந்தது. இப்பொழுது சக்திகள் சர்வ சக்திவானை பிரத்யக்ஷம் (வெளிப்படுத்த) செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும் வரதானங்கள் கொடுத்து கொண்டே செல்லுங்கள், சுபபாவனையுடன் அனைவருக்கும் வரதானம் கொடுக்க வேண்டும்.



    சுகக்கடலின் குழந்தைகள் எப்பொழுதும் சுகசொரூபத்தில் இருக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுதும் சந்திப்பு கொண்டாட்டத்தின் குஷியில் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் தான் இல்லையா? உணவு சாப்பிட்டுக்கொண்டும், அருந்திக் கொண்டும், சென்று கொண்டும் கூட எண்ண அளவில் கூட சோகம் மற்றும் துக்கத்தின் உணர்வு வர வேண்டாம். எப்பொழுதும் சுகசொரூபமானவர்கள். துக்கத்திற்கு விவாகரத்து கொடுப்பவர்கள். ஏனென்றால், துக்கமான உலகில் அரைக் கல்பம் இருந்தோம், இப்பொழுதோ சுகமாக இருப்பதற்கான வாய்ப்பு. சுகக்கடல் கிடைத்திருக்கிறார் என்றால், எதற்காகத் துக்கம் இருக்கும். எப்பொழுதுமே சுகமானவர் என்ற இந்த வரம் தான் தந்தையிடமிருந்து நிரந்தரமாக கிடைத்து விட்டது. நல்லது.



    கேள்வி –

    எப்பொழுது ஸ்தூல சாதனம் முடிவடைந்து விடுமோ அந்த நேரம் சேவை செய்வதற்காக  இப்பொழுதிலிருந்தே எந்த விஷயத்தின் மேல் கவனம் வேண்டும்?



    பதில் –

    தன்னுடைய எண்ணங்களை சக்திசாலியாக ஆக்குவதில் கவனம் வேண்டும். அதன் மூலம் அதனுடைய பிரபாவம் வெகு தூரம் வரை சென்றடைய வேண்டும். எண்ணத்தில் அந்த அளவு சக்தி வந்து விட வேண்டும். அதன் மூலம் நீங்கள் இங்கே எண்ணத்தை உருவாக்கினீர்கள், மேலும் அங்கு பலன் கிடைத்தது. எப்படி தந்தை பக்தியின் பலனைக் கொடுக்கிறார், அதே போல் உயர்ந்த ஆத்மாக்கள் நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தில் சகயோகத்தின் பலனைக் கொடுங்கள், மேலும் அந்த பலனின் விதவிதமான அனுபவம் செய்யுங்கள். தற்பொழுது இம்மாதிரி சேவையைத் தொடங்குங்கள்.



    கேள்வி –

    பாப்தாதா மூலமாக எந்தெந்த அழியாத கஜானாக்கள் கிடைத்திருக்கின்றன? அந்த கஜானாக்கள் மூலமாக என்ன பிராப்திகள் ஆகியது?



    பதில் - 1)

    முதலில் மிகப்பெரிய கஜானாவான ஞானச் செல்வம். அதன் மூலம் பழைய உடல் மற்றும் உலகத்திலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தி நிலையின் பிராப்தி கிடைக்கிறது. மேலும் முக்திதாமம் செல்கிறோம். 2) யோகாவின் கஜானா மூலம் அனைத்து சக்திகளும் பிராப்தி ஆகிறது. 3) தாரணை செய்யும் கஜானா மூலம் அனைத்து குணங்களின் பிராப்தி ஆகிறது. 4) சேவையின் கஜானா மூலம் ஆசீர்வாதங்களின் கஜானா, குஷியின் கஜானா பிராப்தி ஆகிறது. 5) சங்கமயுகத்து நேரத்தின் கஜானா அனைத்தையும் விட மிகப்பெரிய விலைமதிக்க முடியாத கஜானா, அதன் மூலம் அனைத்து கஜானாக்களையும் சேமிக்க முடிகிறது.



    கேள்வி –

    சங்கமயுகத்தின் காலம் ஏன் விலைமதிக்க முடியாதது?



    பதில் –

    ஏனென்றால், சங்கமயுக காலத்தில் தான் பரமாத்ம தந்தை மற்றும் பரமாத்ம குழந்தைகளின் இனிமையான சந்திப்பு நடக்கிறது, அது வேறு எந்த யுகத்திலேயும் கிடையாது. 2) சங்கமயுக காலத்தில் தான் பாப்தாதா மூலமாக அனைத்து கஜானாக்களும் பிராப்தி ஆகின்றன. மேலும் வேறு எந்த யுகத்திலும் சேமிப்பு கணக்கு, சேமிப்பு செய்வதற்கான வங்கியே இல்லை. 3) சங்கமயுக காலத்தில் ஒரு பிறவியில் அனேக பிறவிகளுக்கான கஜானாவை சேமிக்க முடியும்.



    கேள்வி –

    கஜானாக்களை கொடுப்பவர் ஒருவர், அனைவருக்கும் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் கொடுக்கிறார், ஆனால் கஜானாவை தாரணை செய்வதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள், ஏன்?



    பதில் –

    ஏனென்றால், தாரணை செய்வதில் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்ற முயற்சி இருக்கிறது. ஒன்றோ தன்னுடைய முயற்சி மூலம் பிராப்தியை உருவாக்க முடியும், இரண்டாவது எப்பொழுதும் சுயம் தான் திருப்தியாக இருப்பது மற்றும் அனைவரையும் திருப்திளப்படுத்துவது. அப்படி திருப்தியின் விசேஷம் மூலம் கஜானாவை சேமிக்க முடியும். மேலும் மூன்றாவது, சேவை மூலமாக குஷியின் கஜானாவை பிராப்தி செய்ய முடியும்.



    கேள்வி –

    உறவு தொடர்பில் வந்து கொண்டே எந்த விஷயத்தின் கவனம் இருந்தால் சேவையில் புண்ணியம் மற்றும் ஆசீர்வாதங்களின் கணக்கை மிகச் சுலபமாக சேமிப்பு செய்ய முடியும்?



    பதில் –

    எப்பொழுதும் தான் ஒரு கருவி என்ற உணர்வு, பணிவாக இருப்பது, சுயநலமற்று இருப்பது, ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்கள் இருந்தது என்றால், சேவையில் அல்லது உறவு தொடர்பில் வந்து கொண்டே புண்ணியத்தின் கணக்கு மற்றும் ஆசீர்வாதங்களின் கணக்கை மிக சுலபமாக சேமிக்க முடியும். நல்லது.



    வரதானம் :

    ஒரு தந்தையில் முழு உலகத்தை அனுபவம் செய்யக்கூடிய எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் ஆகுக !



    யார் தந்தையை மட்டும் தன்னுடைய உலகம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர்களாக ஆக முடியும். யாருக்கு தந்தை தான் உலகம் என்றிருக்கிறதோ, அவர் தன்னுடைய உலகத்தில் மட்டும் தான் இருப்பார், மற்றதில் செல்ல மாட்டார் என்றால் சுலபமாகவே விலகிவிடுகிறார்கள். உலகத்தில் நபர் மற்றும் பொருள்கள், சாதனங்கள் அனைத்தும் வந்து விடுகிறது. தந்தையின் செல்வமாக இருப்பது என்னுடைய செல்வம். இந்த நினைவில் இருப்பதினால் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவராக ஆகிவிடுவார். யாரையும் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்கள். தென்படவே மாட்டார்கள்.



    சுலோகன் :

    சக்திசாலியான நிலையை அனுபவம் செய்வதற்காக ஏகாந்தம் மற்றும் ரமணீகரத்தின் சமநிலை வையுங்கள்.


    ***OM SHANTI***