BK Murli 25 June 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 June 2016 Tamil

    25.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான அறிவாளி குழந்தைகளே! நான் அழிவற்ற ஆத்மா, நான் பாபாவுடன் சேர்ந்து முதல் தளத்திற்குச் (பரந்தாமம்) செல்ல வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.



    கேள்வி:

    எந்தவொரு முயற்சியை நீங்கள் ஒவ்வொரு குழந்தைகளும் கட்டாயம் செய்ய வேண்டும்?



    பதில்:

    பாபா நமக்கு எவ்வளவு ஞானத்தைத் தருகின்றார்! அதனை தனது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளுக்குள் அதனை சிந்தனை செய்து ஜீரணம் செய்யுங்கள். அதன் மூலம் சக்தி கிடைக்கும். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டும். யார் அப்படி குப்தமான முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனக்கு படிப்பு கற்ப்பிப்பவர் யார்? என்ற போதை அவர்களுக்கு இருக்கும். நாம் யாருக்கு எதிரில் அமர்ந்துள்ளோம்.



    ஓம்சாந்தி.

    இதனை யார் கூறியது? இரண்டு முறை கூறுகின்றார் ஓம்சாந்தி, ஓம்சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகின்றார், மற்றொன்று பிரம்மா பாபா கூறுகின்றார். இந்த பாப்தாதா இணைந்தேயிருக்கின்றார்கள். எனவே இருவருக்கும் சொல்ல வேண்டியுள்ளது ஓம்சாந்தி, ஓம்சாந்தி. இப்பொழுது முதலில் கூறியது யார்? பிறகு கூறியது யார்? முதலில் சிவபாபா கூறுகின்றார் ஓம்சாந்தி, நான் சாந்தியின் கடலாக இருக்கின்றேன். பிறகு கூறியது யார்? தாதா (மூத்த சகோதரர் - பிரம்மா) வினுடைய ஆத்மா கூறுகின்றது. நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளேன். ஒருபோதும் தேக அபிமானத்தில் நான் வருவதில்லை. ஒரேயொரு பாபா தான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக உள்ளார். பிரம்மா விஷ்ணு, சங்கர் அப்படி சொல்வதில்லை. பிரம்மா விஷ்;ணு, சங்கரருக்கு சூட்சம ரூபம் இருக்கின்றது. ஓம்சாந்தி சொல்லக்கூடியவர் ஒரேயொரு சிவபாபாதான். அவருக்கு சரீரம் இல்லை. பாபா உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கின்றார் மேலும் கூறுகின்றார், நான் ஒரே ஒரு முறை தான் வருகின்றேன், நான் எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக இருக்கின்றேன். அவர் ஒரு போதும் தேகத்தில் வருவது இல்லை, அதாவது தேக அபிமானத்தில் வருவதில்லை. நல்லது பிறகு அதற்குச் கீழே வாருங்கள் சூட்சம வதனம். அங்கு பிரம்மா விஷ்ணு, சங்கர் இருக்கின்றார்கள். சிவனுடைய பெயர், ரூபம் பார்ப்பதற்குத் தெரிவதில்லை. சித்திரங்கள் உருவாக்குகின்றார்கள், ஆனால் ஒருபோதும் அவர் சாகாரத்தில் வருவதில்லை. பூஜை கூட நிராகராமானவருக்குத் தான் நடைபெறுகின்றது. குழந்தைகளின் புத்தியில் முழுமையான ஞானம் இருக்கின்றது. பக்தி கூட செய்திருக்கின்றீர்கள். குழந்தைகள் சித்திரங்களையும் பார்த்து இருக்கின்றீர்கள். சத்திய யுகம், திரேதா யுகத்தில் சித்திரங்களுக்கும் (உருவ வழிபாடு) பக்தி நடைபெறுவதில்லை, விசித்திரமானவருக்கும் நடைபெறு வதில்லை என்பது நமக்குத் தெரியும். பரம்பிதா பரமாத்மா விசித்திரமானவர் என்பது புத்தியில் உள்ளது. அவருக்கு ஸ்தூலமான சித்திரமோ, சூட்சமமான சித்திரமோ கிடையாது. துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தருபவர், பதீத பாவனன் என்ற மகிமை அவருக்குத்தான் பாடப்படுகின்றது. நீங்கள் வேறு எந்த சித்திரத்தையும் பதீத பாவனன் என்று கூற முடியாது. இந்த விஷ்யங்கள் வேறு எந்த மனிதனின் புத்தியிலும் கிடையாது. பிரம்மா விஷ்ணு, சங்கர் கூட சூட்சம வதனவாசிகள் தான். முதல் தளம், பிறகு இரண்டாவது தளம். உயர்ந்ததிலிலும் உயர்ந்த முதல் தளத்தில் வசிக்கக்கூடியவர் பரம்பிதா பரமாத்மா. இரண்டாவது தளத்தில் சூட்சம சரீரத்தையுடையவர்கள் இருக்கின்றார்கள். மூன்றாவது தளத்தில் ஸ்தூலமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இதில் குழப்பமடைய வேண்டியதில்லை. இந்த விஷயங்களை பரமபிதா பரமாத்மாவைத்தவிர வேறு யாரும் புரியவைக்க முடியாது. மேலே இருக்கும் உலகம் ஆத்மாக்களுடைய உலகம். அதனைத்தான் சொல்லப்படுகின்றது நிராகாரமான உலகம், ஆத்மாக்களுடைய உலகம். பஞ்ச தத்துவங்களைக் கடந்த உலகம். பிறகு ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்குட்பட்ட உலகிற்கு வருகின்றார்கள். அங்கு ஆத்மாக்கள், இங்கு ஜீவாத்மாக்கள் இருக்கின்றார்கள். இது புத்தியில் இருக்க வேண்டும். நாம் நிராகார பாபாவின் குழந்தைகள் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாம் கூட நிராகாரமான பாபாவுடன் தான் இருந்தோம். நிராகாரமான உலகத்தில் தான் ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இதுவரையில் நடிப்பை நடிப்பதற்காக சாகாரத்தில் வந்துகொண்டிருக்கின்றார்கள். அது நிராகாரமான பாபாவினுடைய வதனம். நாம் ஆத்மாக்கள் என்ற போதை இருக்க வேண்டும். அழிவற்ற பொருளினுடைய போதை இருக்க வேண்டும். அழியக்கூடிய பொருளின் மீது இருக்க வேண்டுமா என்ன? தேகத்தினுடைய போதையுடையவரை தேக அபிமானத்தில் உள்ளவர் என்றுதான் சொல்லமுடியும். தேக அபிமானம் நல்லதா? ஆத்ம அபிமானம் நல்லதா? அறிவாளி யார்? ஆத்ம அபிமானிதான் அறிவாளியாவார். தேகம் அழியக்கூடியது. நான் 84 ஜென்மம் எடுக்கின்றேன் என்று ஆத்மா கூறுகின்றது. நான் ஆத்மா பரந்தாமத்தில் பாபாவுடன் இருக்கக்கூடியவன். அங்கிருந்து நடிப்பு நடிப்பதற்காக வந்துள்ளேன். ஓ! பாபா என்று ஆத்மா கூறுகின்றது. சகார உலகத்தில் சகார பாபா இருக்கின்றார். நிராகார உலகத்தில் நிரகார பாபா இருக்கின்றார். இது மிகவும் சகஜமான விஷயம். பிரம்மாவை சொல்லப்படுகின்றது பிரஜாபிதா பிரம்மா என்று. அப்படியென்றால் அவர் இங்குள்ளாரல்லவா? அங்கு நாம் ஆத்மாக்கள் அனைவரும் ஒரு பாபாவின் குழந்தைகள் சகோதரர்கள். தந்தையாகிய சிவனுடன் இருக்கக்கூடியவர்கள். பரமாத்மாவின் பெயர் சிவன். ஆத்மாவினுடைய பெயர் சாலிக்கிராம் ஆகும். ஆத்மாவைக்கூட படைப்பவர் வேண்டுமல்லவா? மனதில் எப்பொழுதும் உரையாடிக்கொண்டேயிருங்கள். என்ன ஞானம் கிடைத்துள்ளதோ? அதனை மனதில் நிறைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். ஆத்மாதான் சிந்தனை செய்கின்றது. நான் ஆத்மா பரமாத்மாவுடன் இருக்கக்கூடியவன் என்பதை முதலில் நிச்சயம் செய்யவும். நான் அவருடைய குழந்தை என்றால், அவசியம் அவரிடமிருந்து ஆஸ்தியடைய வேண்டும். இது ஆத்மாக்களுடைய மரம் என்றால் இதற்கு முதலில் விதை இருக்க வேண்டும் என்பது கூட நமக்குத்தெரியும். எப்படி வம்சாவளிகள் உருவாகின்றார்கள், முதலில் பெரிய தந்தை பிறகு 2,3 குழந்தைகள் பிறக்கின்றார்கள். பிறகு அவர்களிடமிருந்து மற்றவர் வெளிப்படுகின்றார்கள். ஒவ்வொருவராக விருத்தியாகி மரம் பெரியதாகிவிடுகின்றது. கிளைகள் மூலமாக தெரியவருகின்றது வம்சத்தினரின் படம் இருக்கும். இன்னார் மூலம் இவர் வந்தார் என்று தெரிய வருகின்றது.



    மூலவதனத்தில் அனைத்து ஆத்மாக்களும் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கான சித்திரம் கூட இருக்கின்றது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பாபா தான். பாபா இந்த சரீரத்தில் வந்துள்ளார் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். ஆன்மீகத் தந்தை இவருக்குள் வந்து ஆத்மாக்களுக்கு படிப்பு கற்றுத் தருகின்றார். சூட்சம வதனத்தில் கல்வி கற்பிப்பது இல்லை. சத்திய யுகத்தில் கூட இந்த ஞானம் யாருக்கும் இருப்பதில்லை. பாபாதான் இந்த சங்கமயுகத்தில் வந்து இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். இந்த மனித சிருஷ்டி மரத்திற்கான ஞானம் வேறு யாரிடமும் இல்லை. கல்பத்தினுடைய ஆயுளையும் நிறைய காட்டி விட்டார்கள். குழந்தைகளே! இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை இப்பொழுது பாபா புரிய வைக்கின்றார். அதுதான் ஆத்மாக்களுடைய வீடு. பாபா மற்றும் குழந்தைகள் இருக்கின்றார்கள். அனைவரும் சகோதரர்கள். எப்பொழுது சரீரத்தை எடுக்கின்றோமோ அப்பொழுதுதான் சகோதரன் சகோதரி என்று சொல்லப்படு கின்றது. நாம் ஆத்மாக்கள் அனைவரும் சகோதர, சகோதரர்கள். சகோதரர்களுக்கு அவசியம் தந்தை இருக்க வேண்டுமல்லவா? அவர் பரம்பிதா பரமாத்மா ஆவார். அனைத்து ஆத்மாக்களும் சரீரத்தில் இருந்துகொண்டு அவரைத்தான் நினைவு செய்கின்றன. சத்தியயுக, திரேதா யுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. பதீத உலகில் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள் ஏனென்றால் அனைவரும் இராவணனின் சிறையில்; உள்ளார்கள். ஹே! இராமா, என்று சீதை அழைத்தார். இராமர் என்றால், திரேதா யுகத்தினுடைய இராமர் நினைவிற்கு வருவதில்லை என்று பாபா புரிய வைக்கின்றார். இராமர் என்று பரம்பிதா பரமாத்மாவைத்தான் நினைவு செய்கின்றார்கள். ஆத்மாதான் அழைக்கின்றது. இப்பொழுது நமக்குத் தெரியும் அரை கல்பம் நாம் யாரையும் அழைக்க மாட்டோம், ஏனென்றால், நாம் சுகதாமத்தில் இருப்போம். இந்த சமயம் பாபாதான் புரிய வைக்கின்றார், ஏனென்றால், வேறு யாருக்கும் தெரியாது. ஆத்மாவே பரமாத்மா, ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மா அழியாதது என்று பாபா புரிய வைக்கின்றார். ஒரு ஆத்மாக்கூட அழிவதில்லை. எப்படி பாபா அழிவற்றவரோ அப்படி ஆத்மாவும் அழிவற்றது. இங்கு ஆத்மா பதீதமாக, தமோபிரதானமாகிவிட்டது, பாபா மீண்டும் சதோபிரதானமாக பவித்திரமாக்குகின்றார். முழு உலகமும் தமோபிரதானமாகியே தீரவேண்டும். பதீத உலகை பாவனமாக்க பாபா வர வேண்டியதாக உள்ளது. இறை தந்தை என்று அவருக்குத்தான் சொல்லப்படுகின்றது. பாபா அழிவற்றவர், நாம் ஆத்மாக்கள் கூட அழிவற்றவர், நாடகமும் அழிவற்றது. இந்த உலகத்தின் சரித்திர, பூகோளம் எப்படி மறுபடியும் சுழல்கின்றது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இந்த நான்கு யுகத்திலும் நம்முடைய பார்ட் நடக்கின்றது. நாம் சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சத்தை சார்ந்தவர்களாகின்றோம். சந்திரவம்சம் என்பது இரண்டாவது தகுதி பெற்றவர்கள்;. 14 கலைகள் உடையவர்கள். உண்மையில் அவர்களை தேவதை என்று கூற முடியாது. தேவி தேவதை சம்பூர்ண நிர்விகாரியாவார்கள். 16 கலைகள் நிறைந்தவர்கள். இராமரை 14 கலைகள் சம்பன்னமானவர் என்று தான் கூறுகின்றார்கள் (நிறைந்தவர்). உங்களுக்குத்தான் 84 பிறவிகளின் கணக்கு வழக்கு புரிய வைக்கப்படுகின்றது. பதிய பொருள் பழயைதானால் அதில் சந்தோஷம் இருக்காது. முதலில் சம்பூர்ண பவித்திரமாக இருக்கின்றீர்கள், பிறகு சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு பழையது என்று தான் சொல்லுவார்கள். கட்டிடத்தின் உதாரணம் கொடுக்கப்படுகின்றது. அப்படித்தான் ஒவ்வொரு பொருளும் இருக்கின்றது. இந்த உலகமே மிகப்பெரிய மண்டபமாக உள்ளது. இந்த ஆகாய தத்துவம் மிகப்பெரியது, இது முடிவையடைய முடியாது. இதற்கு முடிவு எங்கிருக்கின்றது? இதனை வெளிப்படுத்த முடியாது. சென்று கொண்டேயிருந்தாலும் முடிவைக் கண்டறிய முடிவதில்லை. பிரம்ம மகத்தத்துவத்திற்கும் முடிவில்லை. இந்த அறிவியல் வல்லுனர்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றார்கள் ஆனால் முடிவைக் கண்டறிய முடியவில்லை. பிரம்ம தத்துவம் மிகப்பெரியது. முடிவை கண்டறிய முடியாது. நாம் ஆத்மாக்கள் மிக சிறிய இடத்தில் தான் அங்கு இருக்கின்றோம். இங்கு கட்டிடங்கள் எவ்வளவு பெரிய அளவில் கட்டுகின்றார்கள். இடம் பூமியில் நிறைய உள்ளது. வயல் வெளிகள் கூட வேண்டுமல்லவா? அங்கு ஆத்மாக்கள் மட்டும் தான் இருக்கின்றார்கள். ஆத்மா சரீரம் இல்லாமல் எப்படி சாப்பிடும். அங்கு எதையுமே அனுபவிப்பதில்லை. சாப்பிடுவதற்கு, அனுபவிப்பதற்கு எந்த பொருளுமே அங்கு இருப்பதில்லை. இந்த ஞானம் குழந்தைகளுக்கு ஒரே ஒரு முறைத்தான் கிடைக்கின்றது. பிறகு கல்பத்திறகுப் பிறகுதான் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றது. எனவே போதை இருக்க வேண்டுமல்லவா? நாம் தான் தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் கூட கூறுகின்றீர்களல்லவா? பாபா, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புக்கூட சூத்திரனிலிருந்து பிராமணன் ஆக உங்களிடம் வந்திருந்தோம். இன்று மறுபடியும் உங்களிடம் வந்துள்ளோம். அவர் நிராகராமாக உள்ளதால் நீங்கள் தாதாவிடம் வந்துள்ளோம் என்று கூறுகின்றீர்கள். பாபா இவருக்குள் பிரவேசம் ஆகியுள்ளார். எப்படி நீங்கள் இந்த உடலை எடுத்து நடிப்பை நடிக்கின்றீர்கள், அப்படி நானும் இந்த உடலை ஆதாரமாக எடுத்து வருகின்றேன். இல்லையென்றால் எப்படி நடிப்பு நடிப்பேன்? சிவஜெயந்திக்கூட கொண்டாடுகின்றார்கள். சிவன் நிராகாரமானவர். அவருக்கு ஜெயந்தி எப்படி கொண்டாக முடியும். மனிதர்கள் ஒரு உடலை விட்டு மற்றொன்றை எடுக்கின்றார்கள். நான் எப்படி வந்து குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பிப்பேன். மனிதனிலிருந்து தேவதையாக்கக்கூடிய இராஜயோகத்தை பாபா வந்து தான் கற்பிக்கின்றார். என்னைத் தான் பதீதபாவனன், ஞானக்கடல் என்று சொல்கின்றார்கள். எனக்கு மரத்தின் ஆதி, மத்ய, இறுதியின் ரகசியம் தெரியும்.



    பாபா இவருக்குள் பிரவேசமாகி நமக்கு அனைத்து ஞானத்தையும் புரிய வைக்கின்றார் என்பது நமக்குத் தெரியும். பிரம்மா, விஷ்ணு, சங்கரருடைய நடிப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் பதீத பாவனன் என்று பாபாவை புரிந்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய மகிமையும் காரியங்களும் தனிப்பட்டது. பிரசிடென்ட், முதல் மந்திரி வரை ஆகின்றார்கள். இது என்னுடைய சரீரம் என்று சொல்வது கூட ஆத்மா தான். நான் முதல் மந்திரியாக இருக்கின்றேன். ஆத்மா சரீரத்தில் இல்லையென்றால் பேச முடியாது. சிவபாபா கூட நிராகாரமாகதான் உள்ளார். அவர் பேசுவதற்கு சரீரத்தை ஆதாரமாக எடுக்க வேண்டியுள்ளது. எனவே தான் வாயிலிருந்து கங்கை வெளிப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. சிவன் புள்ளியாக உள்ளார். அவருக்கு வாய் எங்கிருந்து வர முடியும். இவருக்குள் பிரவேசமாகி அமர்ந்து இவர் மூலம் ஞான கங்கையை ஓட வைக்கின்றார். ஹே! பதீத பாவனா வாருங்கள் என்று பாபாவைத்தான் அனைவரும் நினைவு செய்கின்றார்கள். எங்களை இந்த துக்கத்திலிருந்து விடுபட வையுங்கள். அவர்தான் மிகப்பெரிய டாக்டராக உள்ளார். அவருக்குள்தான் பதீத ஆத்மாக்களை பாவனமாக்கும் ஞானம் உள்ளது. அனைவரையும் பதீத்ததிலிருந்து பாவனமாக்குபவர் ஒரேயொரு டாக்டர் அவர்தான். சத்தியயுகத்தில் அனைவரும் நோயற்றவராக இருப்பார்கள். இந்த இலட்சுமி நாராயணன் சத்திய யுகத்தின் எஜமானன். அவர்கள் நிரோகியாகும் அளவிற்கு கர்மத்தைக் கற்றுக் கொடுத்தது யார்? பாபா வந்துதான் சிரேஷ்ட கர்மத்தைக் கற்றுத்தருகின்றார். இங்கு கர்ம வினைகளைத் தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்மம் இப்படியிருக்கின்றது என்று சத்தியயுகத்தில் யாரும் கூற மாட்டார்கள். அங்கு எந்த துக்கமோ வியாதியோ இருப்பதில்லை. இங்கு ஒருவருக்கொருவர் துக்கத்தைத்தான் கொடுத்து கொள்கின்றார்கள். சத்தியயுக, திரேதா யுகத்தில் துக்கத்தின் விஷயமே இருக்காது. கர்மத்தின் வினையை அனுபவிக்கின்றோம் என்று யாருமே கூற மாட்டார்கள். கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியத்தை யாருமே புரிந்து கொள்ள முடியாது. சதோபிரதானம், பிறகு சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வருகின்றீர்கள். சத்தியயுகத்தில் 5 தத்துவங்களும் சதோபிரதானமாக உள்ளது. நம்முடைய சரீரம் கூட சதோபிரதான இருக்கும் பிறகு 2 கலைகள் குறையும் போது சரீரமும் அப்படியே கிடைக்கின்றது. உலகத்திலும் இரண்டு கலை குறைந்துவிடுகின்றது. இவை யனைத்தையும் பாபா வந்துதான் புரிய வைக்கின்றார். வேறுயாரும் புரிய வைக்க முடியாது. நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட, செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள். நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) இப்பொழுதிலிருந்தே பாபாவினுடைய ஸ்ரீமத்படி சிரேஷ்டமான செயல்கள் செய்ய வேண்டும். பிறகு ஒருபோதும் கர்மத்தின் கணக்கை அனுபவிக்கக் கூடாது. அதாவது தண்டனையடையக் கூடாது.



    2) எந்தவொரு அழியக்கூடிய பொருளின் நஷா இருக்கக்கூடாது. இந்த சரீரம் கூட அழியக்கூடியது. இதனுடைய போதை கூட இருக்கக்கூடாது, அறிவாளியாகவும்.



    வரதானம்:

    ஸ்தூலம், மற்றும் சூட்சமத்திலும் தன்னை பிஸியாக வைக்கக்கூடிய மாயாஜீத், வெற்றியாளன் ஆகுங்கள்.



    தன்னை சேவாதாரி என்று புரிந்து கொண்டு ஆர்வத்துடன், உற்சாகத்துடன் சேவையில் ஈடுபாட்டுடன் இருந்தால் மாயாவிற்கு வாய்ப்பு கிடைக்காது. எப்பொழுது எண்ணத்தில், புத்தியினால் மேலும் ஸ்தூலமான கர்மத்தில் ஓய்வாக இருந்தீர்களென்றால் மாயை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றது. ஆனால் ஸ்தூலமாகவும் சூட்சமமாகவும் சேவையில் சந்தோஷமாகவும், பிஜியாகவும் இருந்தால் சந்தோஷத்தின் காரணத்தால் நம்மை எதிர்ப்பதற்கு மாயை துணிவு கொள்ள முடியாது. எனவே தனக்குத்தானே ஆசிரியராகி புத்தியை பிஸியாக வைக்க அட்டவணையிடுங்கள் மாயாஜீத், வெற்றியாளன் ஆகிவிடுவீர்கள்.



    சுலோகன்:

    பாபா என்னுடன் இருக்கின்றார் என்று நிச்சயத்துடனும், பெருமிதத்துடனும் சொல்லுங்கள், மாயை அருகில் கூட வர முடியாது.



    ***OM SHANTI***