BK Murli 29 June 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 29 June 2016 Tamil

    29.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது உண்மையிலும் உண்மையான இராஜயோகிகள். நீங்கள் இராஜரிஷி என்றும் சொல்லப்படுகிறீர்கள். இராஜரிஷி என்றாலே தூய்மையானவர்கள்.



    கேள்வி :

    குழந்தைகள் நீங்கள் மனிதர்களை மாயா என்ற இராவணனின் சேற்றிலிருந்து எப்போது வெளிக் கொண்டுவர முடியும்?



    பதில் :

    எப்போது நீங்கள் தாங்களே அந்தச் சேற்றிலிருந்து வெளிவந்து விடுகிறீர்களோ, அப்போது தான் மனிதர்களை வெளியேற்ற முடியும். சேற்றிலிருந்து வெளிவருகிறவர்களின் அடையாளமாவது - இச்சா மாத்திரம் அவித்யா (ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை). ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமே நினைவு வரக் கூடாது. நல்ல துணிமணி அணிய வேண்டும், நல்ல பதார்த்தங்களை உண்ண வேண்டும்- இதுபோன்ற பேராசை இருக்கக் கூடாது. நீங்கள் முழுமையாக வனவாசத்தில் இருக்கிறீர்கள். இந்த சரீரத்தையும் கூட மறந்தவராக, என்னுடையது எதுவுமே இல்லை, நான் ஆத்மா - இது போன்ற ஆத்ம அபிமானிக் குழந்தைகள் தான் இராவணனின் சேற்றில் இருந்து மனிதர்களை வெளியில் கொண்டுவர முடியும்.



    பாடல் :

    நீ அன்புக் கடலாக இருக்கிறாய்......



    ஓம் சாந்தி.

    சில சமயம் பாடல் இசைத்த போது குழந்தைகளிடம் பாடலின் அர்த்தம் கேட்கப்பட்டது. இப்போது சொல்லுங்கள், நீங்கள் எப்போதிலிருந்து வழியை மறந்து விட்டிருக்கிறீர்கள்? (துவாபர யுகத்திலிருந்து எனச் சிலர் சொன்னார்கள். சத்யுகத்தில் இருந்து எனச் சிலர் சொன்னார்கள்). துவாபரயுகத்தில் இருந்து என்று யார் சொன்னார்களோ, அது தவறு. சத்யுகத்தில் இருந்தே வழியை மறந்து விட்டனர். வழியைச் சொல்பவரோ இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ளார். சத்யுகத்தில் வழி சொல்பவர் பற்றி அறியாதிருப்பார்கள். அங்கே யாருக்கும் தந்தையைப் பற்றியே தெரியாது. அவர்கள் மறந்து விட்டார்கள் என்றாகிறது. மறப்பதும் கூட டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. மீண்டும் இப்போது வழி சொல்பவர் வந்து விட்டார். எனவே பிரபு ! வழி சொல்லுங்கள் என்று சொல்கின்றார்கள் இல்லையா, நாம் சத்யுகத்தில் இருந்தே தந்தையை மறந்து விட்டோம். பாபா கேள்வி கேட்கிறார் என்றால் அது புத்தியைப் பயன் படுத்துவதற்காக. இந்த ஞானமே தனிப்பட்டது இல்லையா? ஞானக்கடலாக இருப்பவர் தந்தை தான். தந்தை நேராக வந்து புரிய வைக்கிறார். ஞானக்கடல், சுகத்தின் கடல் நான் மட்டுமே! நீங்களும் அறிவீர்கள்-பதீத பாவனரும் ஒரே ஒரு தந்தை மட்டுமே! இதை பக்தி மார்க்கத்திலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தூய்மையான உலகம் என்பது சாந்திதாமம் மற்றும் சுகதாமம். இப்போது சுகதாமம் மற்றும் துக்கதாமம் பாதிப் பாதி உள்ளன. இதையோ குழந்தைகள் நல்லபடியாக அறிந்துள்ளனர். தந்தை அன்புக்கடலாக இருப்பவர். அதனால் தான் அனைவரும் அவரை அன்புக்கடல் எனச் சொல்லி அழைக்கின்றனர். ஆனால் அவர் யார், எப்படி வருகிறார் என்பதை மறந்து விடுகின்றனர். 5000 ஆண்டுகளின் விசயம். நிச்சயமாக இந்த தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. சத்யுகத்தில் இருப்பது சத்கதி. பிறகு துர்கதி எப்படி ஏற்படுகின்றது என்பதை யார் சொல்வது? பாபா தான் வந்து புரிய வைக்கிறார். துவாபர யுகத்திலிருந்து உங்களுக்கு துர்கதி ஏற்பட்டுள்ளது, அதனால் தான் அழைக்கிறீர்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இது ஒன்றும் புது விசயம் கிடையாது. பாபா கல்ப-கல்பமாக வருகிறார். இப்போது நிராகார் தந்தை ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். யாருமே தனது ஆத்மா பற்றி அறிந்திருக்கவில்லை. என் ஆத்மாவுக்குள் நடிப்பின் பாகம் முழுவதும் அடங்கியுள்ளது என்று ஒரு போதும் யாரும் சொல்ல மாட்டார்கள். அநேக தடவை இது போல் ஆகியிருக்கிறேன், பார்ட்டை நடித்திருக்கிறேன் என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள். டிராமாவைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இலட்சக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் என்று அவர்கள் சொல்லலாம், ஆனால் பிறகும் கூட டிராமாவோ உள்ளது இல்லையா? டிராமா திரும்பவும் நடக்கிறது. இப்படி சொல்வார்கள் இல்லையா? இந்த ஞானத்தை பாபா தான் குழந்தைகளுக்கு நேரிடையாகத் தருகிறார். வாயின் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், நம்மை சிவபாபா பிரம்மாவின் மூலம் தம்முடையவர்களாக ஆக்கி, பிராமணர்களாக ஆக்கியிருக்கிறார். சிவபாபாவுக்கு இவர் (பிரம்மா) குழந்தையாகவும் உள்ளார். துணைவியாகவும் உள்ளார். பாருங்கள், எவ்வளவு குழந்தைகள் பராமரிக்கப் படுகின்றனர். தனியாக ஆணாக இருக்கும் காரணத்தால் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக சரஸ்வதி உதவியாளராக ஆக்கப் பட்டுள்ளார். இந்த விஷயங்கள் சாஸ்திரங்களில் கிடையாது. இது நடைமுறையில் உள்ள விஷயமாகும். பாபா தான் இராஜயோகம் கற்பிக்கிறார். யாருக்கு இராஜயோகம் கற்பித்தாரோ, அவர்கள் இராஜாக்களாக ஆயினர். 84 பிறவிகளில் வந்தனர். பைபிள், குரான், வேத-சாஸ்திரங்களையோ அநேகர் படிக்கின்றனர். ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் ஒன்றும் தத்துவயோகி கிடையாது. உங்களுக்கோ பாபாவிடம் நினைவின் தொடர்பு உள்ளது, அதாவது பாபாவின் நினைவு உள்ளது. நீங்கள் இப்போது இராஜயோகி, இராஜரிஷி, அதாவது யோகிராஜ். தூய்மையானவர் தான் யோகி எனச் சொல்லப் படுகிறார்.



    சொர்க்கத்தின் இராஜ்யத்தைப் பெறுவதற்காக நீங்கள் யோகி ஆகியிருக்கிறீர்கள். பாபா முதல்-முதலில் சொல்கிறார்-தூய்மையாகுங்கள். யோகி என்ற பெயரே (தூய்மையாக ஆகின்ற) அவர்களுடையது. நீங்கள் அனைவரும் இராஜயோகிகள். இது பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய உங்களைப் பற்றிய விசயமாகும். உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் ஆகிறீர்கள் இல்லையா? மாணவர்கள் எப்போதாவது ஆசிரியரை மறந்து விடுவார்களா என்ன? சிவபாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். ஆனால் மாயா பிறகும் கூட மறக்கடித்து விடுகின்றது. நீங்கள் உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை மறந்து விடுகிறீர்கள். பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் – இதைப் புரிந்து கொண்டால் தான் போதை அதிகரிக்கும். பள்ளிக்கூடத்தில் ஐ.சி.எஸ். படிக்கின்றனர் என்றால் எவ்வளவு நஷா உள்ளது! குழந்தைகள் நீங்களோ 21 பிறவிகளுக்காக இந்த இராஜயோகத்தின் படிப்பைப் படிக்கிறீர்கள். படிப்பதோ பிறகும் கூட நடைபெறுகின்றது. அரசியலுக்கான கல்வியும் படிக்க வேண்டும், மொழிகள் முதலியவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.



    குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், சத்யுகத்திலிருந்து நாம் இந்த வழியை மறக்கத் தொடங்கி யிருக்கிறோம். பிறகு ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியிலும் கீழே இறங்குகின்றனர். இப்போது உங்களுக்கு முழு நினைவு உள்ளது. எப்படி நாம் உயர்கிறோம், எப்படி நாம் கீழே இறங்குகிறோம்? இந்த ஏணிப்படியை நல்லபடியாக நினைவு செய்யுங்கள். 84 பிறவிகள் முடிந்தது, இப்போது நாம் செல்ல வேண்டும். ஆக, குஷி ஏற்படுகிறது. இது எல்லையற்ற நாடகம். ஆத்மா எவ்வளவு சிறியது! பார்ட் நடித்து-நடித்து ஆத்மா களைத்துப் போகிறது. அப்போது சொல்கின்றனர், பாபா, வழி சொல்வீர்களானால் நாங்கள் ஓய்வு பெறுவோம், சுகம்-சாந்தி பெறுவோம். நீங்கள் (குழந்தைகள்) சுகதாமத்தில் இருக்கும் போது உங்களுக்காக அங்கே சுகம்-சாந்தியும் உள்ளது. அங்கே எந்தவிதமான தொந்தரவும் கிடையாது. ஆத்மாவுக்கு சாந்தி உள்ளது. சாந்திக்கான இருப்பிடங்கள் இரண்டு உள்ளன - சாந்திதாம் மற்றும் சுகதாம். துக்கதாமத்தில் அசாந்தி உள்ளது. இது படிப்பு. நீங்கள் அறிவீர்கள், நம்மை பாபா சாந்திதாம் வழியாக சுகதாமத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் சொல்வதற்கான தேவை இல்லை. நீங்கள் அறிவீர்கள், நாம் இங்கே பார்ட்டை நடிப்பதற்காக வந்துள்ளோம். பிறகு செல்ல வேண்டும். இந்தக் குஷி உள்ளது. சாந்தியின் குஷி இல்லை. நமக்கு மகிழ்ச்சி வருகிறது, குஷி வருகிறது. அறிந்திருக்கிறோம், தந்தையை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசமாகும். எனக்கு மனதின் சாந்தி வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். இந்த வார்த்தையே தவறானதாகும். விகர்மங்கள் விநாசமாக வேண்டும் என்பதற்காக நாம் தந்தையை நினைவு செய்கிறோம். சாந்தமாகவோ மனம் இருக்கவே முடியாது. கர்மம் இல்லாமல் இருக்க முடியாது. மற்றப்படி நாம் உணர்ந்து கொள்கிறோம், நாம் பாபாவிடமிருந்து சுகம்-சாந்தியின் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம், அதனால் குஷி இருக்க வேண்டும். இதுவோ துக்க உலகம். இதில் சுகம் இருக்க முடியாது. மனிதர்கள் சாந்திதாம், சுகதாமத்தை மறந்து விட்டுள்ளனர். ஆக, யாருக்கு அதிகம் பணம் உள்ளதோ, அவர்கள் சுகத்தில் இருப்பதாக நினைக்கின்றனர். சந்நியாசிகள் வீடு-வாசலை விட்டுவிட்டுக் காட்டுக்குச் செல்கின்றனர். எந்த ஒரு தொந்தரவும் கிடையாது. ஆக, சாந்தமாகவோ ஆகி விடுகின்றனர், ஆனால் அது அல்ப காலத்திற்காக. ஆத்மாவின் சுயதர்மம் சாந்தியாக உள்ளது. அதில் நீங்கள் சாந்தியில் இருக்கிறீர்கள். இங்கோ செயல்பாட்டில் (கர்மத்தில்) வந்து தான் ஆக வேண்டும். பார்ட் நடித்தே ஆக வேண்டும். இங்கு வருவதே கர்மம் செய்வதற்காகத் தான். கர்மத்திலோ ஆத்மா அவசியம் வந்தே ஆக வேண்டும். குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்-இந்தப் புரிதலை எல்லையற்ற தந்தை தந்து கொண்டிருக்கிறார். நிராகார் பகவான் வாக்கு-இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மா, நம்முடைய தந்தை பரம ஆத்மா. பரம ஆத்மா என்றால் பரமாத்மா. அவரை இந்த ஆத்மா அழைக்கின்றது. அந்தத் தந்தை தான் இந்த அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். இப்போது தந்தை சொல்கிறார்-குழந்தைகளே, தேகி (ஆத்ம) அபிமானி ஆகுங்கள். இதில் தான் முயற்சி இருக்க வேண்டும். அரைக்கல்பமாகப் படிந்துள்ள கறையானது இந்த நினைவினால் தான் நீங்கும். நீங்கள் உண்மையான தங்கமாக ஆக வேண்டும். எப்படி உண்மையான தங்கத்தில் உலோகம் சேர்த்துப் பிறகு நகை செய்கின்றனர். நீங்கள் அசலில் உண்மையான தங்கமாக இருந்தீர்கள். பிறகு உங்கள் மீது கறை படிகின்றது. இப்போது உங்கள் புத்தியில் உள்ளது, நாம் பார்ட் நடித்துள்ளோம். இப்போது நாம் தந்தை வீட்டுக்குச் செல்கிறோம். எப்படி வெளிநாட்டிலிருந்து தந்தை வீட்டுக்குத் திரும்புகின்றனர் என்றால் குஷி இருக்கிறது. உங்களுக்கும் குஷி உள்ளது. நீங்கள் அறிவீர்கள், பாபா நமக்காக சொர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார். எல்லையற்ற தந்தையின் பரிசு - எல்லையற்ற இராஜ்யம், அதாவது சத்கதி. சந்நியாசிகளுக்கு முக்தியின் பரிசு பிடிக்கும். யாராவது இறந்து போனாலும் சொர்க்கவாசி ஆகி விட்டதாகச் சொல்கின்றனர். சந்நியாசிகள் சொல்வார்கள், ஜோதியோடு ஜோதியாகி விட்டார் - இதில் அனைவரும் கலந்து விடுவார்கள். அதுவோ வசிப்பதற்கான இருப்பிடம். அங்கே ஆத்மாக்கள் நாம் வசிக்கிறோம். மற்றப்படி ஜோதி அல்லது நெருப்பு எதுவும் கிடையாது, அதில் அனைவரும் கலந்து விடுவதற்கு. பிரம்ம மகதத்துவத்தில் ஆத்மாக்கள் உள்ளன. தந்தையும் அங்கே தான் இருக்கிறார். அவரும் கூட பிந்தி (புள்ளி). பிந்தியின் சாட்சாத்காரம் யாருக்காவது கிடைக்குமானால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகள் அநேகர் சொல்கின்றனர், பாபா, நினைவு செய்வதில் கஷ்டம் உள்ளது. பிந்தி ரூபத்தை எப்படி நினைவு செய்வது? அரைக்கல்பமாகவோ பெரிய லிங்க ரூபத்தை நினைவு செய்தீர்கள். அதையும் பாபா புரிய வைக்கிறார். பிந்திக்கோ பூஜை நடத்த முடியாது. இவருக்கு கோவில் எப்படிக் கட்டுவீர்கள்? பிந்தியையோ பாôக்கவும் முடியாது. அதனால் சிவலிங்கத்தை மிகவும் பெரியதாக உருவாக்குகின்றனர். மற்றப்படி ஆத்மாக்களின் சாலிகிராம்களையோ மிகவும் சிறிது-சிறிதாக உருவாக்குகின்றனர். முட்டை வடிவத்தில் உருவாக்குகின்றனர். பரமாத்மா ஒரு புள்ளியைப் போல் உள்ளார் என்று முதலிலேயே ஏன் சொல்லவில்லை எனக் கேட்பார்கள். பாபா சொல்கிறார் - அந்தச் சமயத்தில் இதைச் சொல்வதற்கான பார்ட்டே இல்லை. அட, நீங்கள் ஐ.சி.எஸ்.-ஐ ஆரம்பத்தில் இருந்தே ஏன் படிக்கவில்லை? படிப்பிற்கும் கூட விதிமுறை உள்ளது இல்லையா? யாரேனும் இது போல் கேட்டால் நீங்கள் சொல்ல முடியும்- நல்லது, பாபாவிடம் கேட்கிறோம் அல்லது எங்களை விடப் பெரிய ஆசிரியர் இருக்கிறார், அவருக்கு எழுதிக் கேட்கிறோம். பாபா சொல்ல வேண்டுமானால் சொல்வார், அல்லது இன்னும் போனால் புரிந்து கொள்வீர்கள் எனச் சொல்வார். ஒரே நேரத்திலேயே சொல்ல மாட்டார். இவை அனைத்தும் புதிய விஷயங்கள். உங்கள் வேத-சஸ்திரங்களில் என்ன உள்ளதோ, அந்த சாரத்தை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். இதுவும் பக்தி மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது. பிறகும் கூட நீங்கள் படிக்கத் தான் வேண்டும். இந்த பக்தியின் பார்ட்டை நடிக்கத் தான் வேண்டியதிருக்கும். தூய்மையை இழப்பதற்கான பார்ட்டையும் நடிக்க வேண்டும். பக்தி என்ற சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளனர் எனச் சொல்கின்றனர். வெளியில் இருந்தோ பார்க்க அழகாகவே தோன்றுகிறது. எப்படி கானல் நீரின் உதாரணம் சொல்கின்றனர். பக்தியின் கவர்ச்சியும் அதிகம். பாபா சொல்கிறார், இது கானல் நீராகும். கானல் நீருக்கு சமமான இந்தச் சேற்றில் சிக்கி விடுகின்றனர். பிறகு அதிலிருந்து விடுபடுவதே கஷ்ட மாகி விடுகின்றது. முற்றிலும் சிக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களை வெளிக் கொண்டு வருவதற்காகச் செல்கின்றனர். ஆனால் தாங்களே சிக்கிக் கொள்கின்றனர். இது போல் அநேகர் சிக்கிக் கொள்கின்றனர். ஆச்சரியப்படும் படியாக கேட்கின்றனர், சொல்கின்றனர், மற்றவர்களை விடுவிக்கின்றனர், போகப்போக பிறகு தாங்களே சிக்கிக் கொள்கின்றனர். எவ்வளவு நல்ல-நல்ல முதல் தரமானவர்களாக இருந்தனர்! பிறகு அவர்களை வெளியில் கொண்டு வருவது மிகவும் கஷ்டமாகி விடுகிறது. பாபாவை மறந்து விடுகின்றனர். ஆக, சேற்றிலிருந்து விடுவிப்பது எவ்வளவு கடினமாகி விடுகிறது! எவ்வளவு தான் புரிய வைத்தாலும் புத்தியில் பதிவதில்லை. இப்போது நீங்கள் புரிந்து கொள்ள முடியும், நாம் மாயா என்ற இராவணனின் சேற்றில் இருந்து எவ்வளவு விடுபட்டிருக்கிறோம்? எவ்வளவுக்கெவ்வளவு விடுபட்டுக் கொண்டே செல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு குஷி இருக்கும். யார் தாங்கள் வெளியேறி இருப்பார்களோ, அவர்களிடம் மற்றவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான சக்தி இருக்கும். பாணம் எய்தக்கூடியவர்கள் சிலர் சிறந்தவர்களாக இருக்கலாம், சிலர் பலவீனமாக இருக்கலாம். மலைஜாதியினர் மற்றும் அர்ஜுனன் உதாரணமும் உள்ளது இல்லையா? அர்ஜுனன் கூடவே இருப்பவனாக இருந்தான். அர்ஜுனன் ஒருவனல்ல. யார் பாபாவுடையவர்களாக ஆகி பாபாவுடன் கூடவே இருக்கின்றனரோ, அவர்கள் அர்ஜுனன் எனச் சொல்லப் படுகின்றனர். கூடவே இருப்பவர் மற்றும் வெளியில் இருப்பவர்களுக்கு இடையில் பந்தயம் நடத்தப் படுகிறது.. மலைஜாதியினர் என்றால் வெளியில் வசிப்பவர்கள் தீவிரமாகச் சென்று விட்டனர். ஒருவர் மட்டும் உதாரணமாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் விஷயமோ அநேகருடையது. அம்பும் கூட ஞானத்தினுடையது. ஒவ்வொருவரும் தன்னைப் புரிந்து கொள்ள முடியும்-நாம் எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறோம்? வேறு யாருடைய நினைவும் வராமல் இருந்ததா? நல்ல பொருளை அணிந்து கொள்ள வேண்டும் அல்லது உண்ண வேண்டும் என்ற பேராசை இல்லாமல் இருக்கிறதா? இங்கே நன்கு அணிந்து கொள்வார்களானால் அங்கே அது குறைந்து விடும். நாமோ இங்கே வனவாசத்தில் இருக்க வேண்டும். பாபா சொல்கிறார், நீங்கள் உங்களுடைய இந்த சரீரத்தையும் கூட மறந்து விடுங்கள். இதுவோ பழைய தமோபிரதான சரீரம். நீங்கள் சொர்க்கத்தின் மாலிக் ஆகிறீர்கள். இச்சா மாத்திரம் அவித்யா (ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை).



    பாபா சொல்கிறார்-நீங்கள் நகைகள் முதலியவற்றையும் கூட அணியாதீர்கள். இது போல் ஏன் சொல்கிறார்? இதற்கும் கூட அநேகக் காரணங்கள் உள்ளன. யாருடைய நகையாவது மறைந்து போனால் அங்கே பி.கே.க்களிடம் கொடுத்து விட்டு வந்துள்ளனர் என்று சொல்வார்கள். பிறகு திருடர்களும் கூட வழியில் செல்லும் போது அபகரித்துக் கொள்கின்றனர். தற்சமயம் தாய்மார்களும் கூட கொள்ளையடிப்பவர்களாக அதிகம் வெளிப்பட்டுள்ளனர். பெண்களும் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். உலகத்தின் நிலையைப் பாருங்கள், என்னவாக ஆகியுள்ளது! நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த உலகம் முற்றிலும் வேஷ்யாலயமாக (விகாரி உலகமாக) உள்ளது. நாம் இங்கே சிவபாபாவுடன் கூடவே சிவாலயத்தில் அமர்ந்துள்ளோம். அவர் சத்தியம், சைதன்யம், ஆனந்த சொரூபமாக உள்ளார். ஆத்மாவுக்குத் தான் மகிமை. ஆத்மா தான் சொல்கிறது, நான் குடியரசுத் தலைவராக ஆகியுள்ளேன். நான் இன்னார் என்பதாக. மேலும் ஆத்மா நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் பிராமணர்கள் என்று. பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம். ஆத்ம அபிமானத்தில் இருக்க வேண்டும். இதில் தான் முயற்சி உள்ளது. இவர் என்னுடைய இன்னார், இவர் என்னுடையவர்.... இது நினைவிருக்கிறது, நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்கள் என்பதை மறந்து விடுகின்றனர். இங்கே எனது-எனது என்பதை மறக்க வேண்டியுள்ளது. நான் ஆத்மா, இவருடைய ஆத்மாவும் அறிந்துள்ளது. பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் நான் கேட்கிறேன். நானும் கூட சொல்ல முடியும் என்றாலும் குழந்தைகளின் நன்மைக்காகச் சொல்கிறேன் - நீங்கள் எப்போதுமே புரிந்து கொள்ளுங்கள், சிவபாபா புரிய வைக்கிறார். விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டியது குழந்தைகளின் கடமை. எப்படி நீங்கள் செய்கிறீர்களோ, அது போல் நானும் செய்கிறேன். இல்லையென்றால் முதல் நம்பரில் எப்படிச் செல்ல முடியும்? ஆனால் தன்னை குப்தமாக வைத்துக் கொள்கிறேன். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1) எனது-எனது என்பதையெல்லாம் விட்டு, தன்னை ஆத்மா என உணர வேண்டும். ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். இங்கே முற்றிலும் வனவாசத்தில் இருக்க வேண்டும். எதையும் அணிந்து கொள்வதற்கான, உண்பதற்கான இச்சா மாத்திரம் அவித்யா ஆசை இல்லாதவர்களாக ஆக வேண்டும்.



    2) நடிப்பை நடித்துக் கொண்டே, கர்மம் செய்து கொண்டே தனது சாந்தியாகிய சுயதர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். இந்த துக்கதாமத்தை மறந்து விட வேண்டும்.



    வரதானம் :

    (சுயஸ்திதி) தன் நிலையை அறிந்திருப்பதன் மூலம் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளக் கூடிய அசரீரி நிலையை பயிற்சி செய்பவர் ஆகுக !



    எப்போது அவ்யக்த ஸ்திதியின் அப்பியாசம் பழக்கமாகி விடுகிறதோ, அப்போது சுயஸ்திதி மூலம் ஒவ்வொரு பரிஸ்திதியையும் எதிர்கொள்ள முடியும். மேலும் இந்தப் பழக்கம் நீதிமன்றம் (தர்மராஜர் தர்பார்) செல்வதில் இருந்து பாதுகாக்கும். அதனால் எப்போது இந்த அப்பியாசத்தை இயல்பானதாகவும் இயற்கையாகவும் ஆக்கி விடுகிறீர்களோ, அப்போது இயற்கைச் சேதங்கள் நடைபெறும். ஏனென்றால் எப்போது எதிர்கொள்பவர்கள் சுயஸ்திதி மூலம் பரிஸ்திதியைக் கடந்து செல்வதற்கான சக்தியை தாரணை செய்து விடுகிறார்களோ, அப்போது திரை விலகும். இதற்காக பழைய பழக்கங்களில் இருந்து, பழைய சம்ஸ்காரங்களில் இருந்து, பழைய விசயங்களில் இருந்து முழு வைராக்கியம் வேண்டும்.



    சுலோகன் :

    தன்னை ஒரு கருவி, செய்பவர் என உணர்ந்தீர்களானால் எந்த ஒரு கர்மத்திலும் களைப்பே இருக்காது.



    ***OM SHANTI***