BK Murli 18 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 18 July 2016 Tamil

    18.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே ! தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருந்து தங்களுக்குள் அன்போடு ஒருவருக்கொருவர் ஓம்சாந்தி சொல்லவும். இது கூட ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்பதாகும்.



    கேள்வி :

    பக்தியில் கூட பகவானுக்கு பிரசாதம் படைக்கிறார்கள். இங்கு குழந்தைகளாகிய நீங்களும் படைக்கிறீர்கள். இந்த பழக்கம் ஏன்?



    பதில்:

    ஏனென்றால் இது கூட அவருக்கு மரியாதை அளிப்பதாகும். சிவபாபா நிராகாரர், எதையும் அனுபவிக்காதவர் என்பது உங்களுக்கு தெரியும். சாப்பிடுவதில்லை. ஆனால் வாசனை சென்றடைகிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், பதீத பாவனர் பாபா ஆவார். எனவே நிச்சயமாக அவருக்கு பிரசாதம் வைக்க (படைக்க) வேண்டும்.



    பாடல் :

    நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது.....



    ஓம் சாந்தி.

    குழந்தைகளின் மனதிலிருந்தும் கூட ஓம் சாந்தி எழுகிறது. யாருக்காவது நமஸ்காரம் கூறினால் அவர்களும் திரும்ப நமஸ்காரம் என்கிறார்கள். இங்கே தந்தை ஓம் சாந்தி என்றார். ஆகவே, அனைத்து குழந்தைகள், இவருடைய ஆத்மா உட்பட அனைவரின் மனதிலிருந்தும் ஓம்சாந்தி என்றால் நாம் ஆத்மா சாந்தி சொரூபமானவர்கள் என்பது வரும். பதில் மரியாதை அளிக்க வேண்டும் அல்லவா. இது பதிலாகிவிட்டது அல்லவா ! வேறு யாரும் இவ்வாறு பொருளுடன் கூற முடியாது. பாபா ஞான சூரியன் ஓம் சாந்தி என்கிறார். ஞான சந்திரன் கூட ஓம் சாந்தி என்கிறார். ஞான நட்சத்திரங்கள் கூட ஓம் சாந்தி என்கிறார்கள். நட்சத்திரங்களில் அனைவரும் வந்து விட்டனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சுய தர்மம் பற்றி தெரிந்து விட்டது. அதாவது நாம் சாந்தி சொரூபமானவர்கள், சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இது உங்களுக்கு நிச்சயமாகி விட்டது. நீங்கள் ஆத்மாவை சரியாகத் தெரிந்துக் கொண்டீர்கள். மகான் ஆத்மா, பாவ ஆத்மா என்று கூட கூறப்படுகிறது. ஆத்மா தான் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது. ஆனால் ஆத்மாவின் உண்மையான அறிமுகம் யாருக்கும் இல்லை. ஆத்மாக்களாகிய நாம் இவ்வளவு சிறியதாக இருக்கிறோம். 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம். இது உங்களுக்கும் தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியவில்லை. இப்போது நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தையை தன்னுடையவராக்கி கொண்டீர்கள். குழந்தைகள் சொத்து அடைவதற்காக தந்தையை தன்னுடையவராக மாற்றிக் கொள்கிறார்கள்.



    ஆத்மாக்களாகிய நம்முடைய எல்லையற்ற தந்தை இந்த பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார், பிரம்மாவின் உடலில் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை உருவாக்குகிறார்கள் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். போன கல்பத்தில் கூட ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் அதாவது சூரிய வம்சத்தின் தர்மம் ஸ்தாபனை ஆகியது. இந்த ஸ்தாபனை காரியத்தை கல்ப கல்மாக பாபா தான் செய்கிறார். அவருக்கு பகவான் என்று கூறப்படுகிறது. துக்கத்தை நீக்கி சுகம் கொடு என்று அனைவரும் பகவான் தந்தையிடம் கேட்கிறார்கள். சுகம் கிடைத்து விடுகிறது என்றால் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே கேட்கிறார்கள். ஏனென்றால் துக்கம் இருக்கிறது. அங்கே எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்தையும் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். ஆகையால் சத்யுகத்தில் யாரும் பாபாவை நினைப்பதில்லை. குழந்தைகளை நான் சுக உலகிற்கு அதிபதியாக்குகிறேன் என பாபா புரிய வைக்கிறார். இந்த பாபாவிடமிருந்து நாம் மீண்டும் சுகதாமத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தை அடைகிறீர்கள். பக்தி மார்க்கம் எப்படி நடக்கிறது என்று உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. மனித சிருஷ்டி என்ற மரம் எவ்வாறு உருவாகிறது, வளர்கிறது, அழிகிறது அல்லது நாடகத்தின் முதல், இடை, இறுதி என்ன? இது சாகார உலகம் ஆகும். அது நிராகார உலகம் ஆகும். நாம் முழுமையாக அரைக் கல்பம் பக்தி செய்தோம் என குழந்தைகள் புரிந்துக் கொண்டீர்கள். இப்போது கலியுகத்தின் முடிவாகும். சங்கமத்தில் சொத்து கிடைக்கிறது. இதை குழந்தைகளுக்கு நன்கு புரிய வைக்க வேண்டும். இப்போது நாம் சங்கமத்தில் இருக்கின்றோம். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துக் கொள்கிறீர்கள். எது வரை அறிமுகம் கொடுக்கவில்லையோ அது வரை வேறு யாரும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் சங்கம யுகம் வருகிறது. அப்போது பழைய உலகம் புதியதாக மாறுகிறது. இது முழுவதும் பழைய உலகம் ஆகும். இதற்கு கலியுகம் என்று பெயர். முதன் முதலில் முழு உலகத்திலும் ஒரேயொரு தர்மம் தான் இருக்கிறது என்பதை கூட நீங்கள் அறிகிறீர்கள். புது உலகத்தில் பாரத கண்டம் மட்டுமே இருக்கிறது. மிக சில மனிதர்களே இருக்கிறார்கள். புதிய உலகிற்கு தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் புது உலகில் புதிய பாரதம் இருந்தது என்பது நிரூபணம் ஆகிறது. இப்போது பழைய உலகத்தில் பழைய பாரதம் இருக்கிறது. புது உலகம் புதிய பாரதம், புதுடில்லி வேண்டும் என காந்தி கூட கூறினார். இப்போது புதிய பாரதம் அல்லது புது டில்லி இல்லை. புதிய பாரதத்தில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இப்போது அதே பாரதத்தில் இராவணனின் இராஜ்யம் இருக்கிறது. புதிய உலகம், புது டில்லி, இந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பதை கூட எழுத வேண்டும். புது உலகத்தை உருவாக்கக் கூடியவர்களே இதை புரிந்துக் கொள்வார்கள். பிரம்மா மூலமாக புது உலகம் சொர்க்கம் ஸ்தாபனை ஆகின்றது. அந்த சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவதற்காக நீங்கள் வருகிறீர்கள். பாபா உங்களுக்கு யுக்தியை தெரிவிக்கிறார். மேலும் முயற்சி செய்விக்கின்றார். எதிரில் சந்திக்கவும் வருகிறீர்கள். மேலும் அங்கேயும் அமர்ந்து படிக்கிறீர்கள். நேரடியாக சந்திக்க மனம் விரும்புகிறது. அந்த மனிதர்கள் மனிதர் களை நேரடியாக சந்திக்கிறார்கள். இங்கே நீங்கள் சிவபாபாவை சந்திப்பதற்காக நாங்கள் செல்கிறோம் என கூறுவீர்கள். அவரோ நிராகார் அல்லவா ! ஆத்மாக்களாகிய நாமும் நிராகாரர், நாமும் இங்கே நடிப்பதற்காக வருகிறோம் அல்லவா. யாருக்கு பெயர் (பாகம்) இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் நடிகர்கள் ஆவர். பகவானுக்கும் பெயர் (பார்ட்) இருக்கிறது அல்லவா. நிராகாரர் சிவனை தான் பகவான் என்று அழைக்கிறோம். வேறு யாருக்கும் பகவான் என்று கூற முடியாது. பகவான் நிராகாரர் என்று பாடப்படுகிறது. அவருக்கும் பூஜை நடக்கிறது. ஆத்மாக்களுக்கும் பூஜை நடக்கிறது. ருத்ர யக்ஞத்தை படைக்கிறார்கள் அல்லவா. அவர்கள் மண்ணினால் சாலிகிராமத்தை உருவாக்குகிறார்கள். கல்லினால் உருவாக்குங்கள் அல்லது மண்ணினால். மண்ணினால் செய்ததை உடைப்பது எளிதாக இருக்கின்றது. உலகத்தினருக்கு இந்த விஷயங்கள் பற்றி தெரியவில்லை. ருத்ர வேள்வியில் எத்தனை ஆத்மாக்களுக்கு பூஜை செய்ய முடியும். குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பக்தர்கள் அனைவரும் பகவானின் குழந்தைகள் ஆவார்கள். பாபாவை நினைக்கிறார்கள். சிவபாபா பாரதத்தில் தான் வருகிறார் என பாபா புரிய வைக்கிறார். நீங்கள் சில குழந்தைகளே அவருடைய உதவியாளர்களாக, இறை தொண்டர்களாக மாறுகிறீர்கள். அவர்களுடைய பூஜையை தான் பக்தர்கள் சாலிகிராமமாக உருவாக்கி செய்கிறார்கள். வேள்விகள் படைக்கிறார்கள். அதில் சிறிய வேள்விகள் கூட இருக்கிறது. பெரியது கூட இருக்கிறது. மிகப் பெரிய பணக்காரர்கள் பெரிய வேள்வியை படைக்கிறார்கள். லட்சம் லட்சம் உருவாக்குகிறார்கள். சிறிய வேள்வியாக இருந்தால் 5-10 ஆயிரம் உருவாக்குவார்கள். சேட் எப்படியோ அப்படி வேள்விகளையும் அதில் சாலிகிராமங்களையும் உருவாக்குகிறார்கள். ஒரு சிவன் மற்றவை சாலிகிராமம் உருவாக்குகிறார்கள். பிறகு அவ்வளவு பிராமணர்கள் வேண்டும். பல பேர் வேள்விகளை பார்த்திருப்பீர்கள். பாபா குழந்தைகளாகிய நமக்கு சேவை செய்கின்றார் என அறிகிறீர்கள். பிறகு நாம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறோம். ஆகவே தான் பூஜை நடக்கிறது. இப்போது நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். பாபா தாங்கள் எப்போதும் பூஜைக்குரியவர் என ஆத்மா கூறுகிறது. எங்களையும் பூஜைக்குரியவராக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பூஜைக்குரிய ஆத்மா சரீரம் தரிக்கிறது, அப்போது பூஜைக்குரிய தேவ - தேவதைகள் ஆகின்றன. ஆத்மாதான் பூஜைக்குரியதாகவும் பூஜாôரியகவும் ஆகிறது. பாபா ஒரு முறை தான் வருகிறார். பிறகு ஒரு போதும் பாபா ஆத்மாக்களை படிக்க வைக்க மாட்டார். இது நடக்காது. ஆத்மா தான் கேட்கிறது. ஆத்மா எப்படி உடல் மூலமாக கேட்கிறதோ அது போல பரம்பிதா பரமாத்மா, சுப்ரீம் ஆத்மா கூட சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து இவர் மூலமாக கேட்கின்றார். இவர் மூலமாக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு கூட தங்களுக்கு என்று சூட்சும உடல் இருக்கிறது. இங்கேயோ அனைவருக்கும் அவரவருக்கென்று உடல் இருக்கிறது. இது சாகார உலகம் ஆகும். சிவபாபா நிராகார் ஆவார். அவர் ஞானக்கடல், சுகக்கடல், அன்புக்கடலாக இருக்கிறார். அவர் வந்து அனைவரையும் அழுக்கிலிருந்து தூய்மையாக மாற்றுகிறார். இதில் தூண்டுதலின் எந்த விஷயமும் கிடையாது. நான் ஒரு வேளை தூண்டுதலினால் தூய்மையாக மாற்ற வேண்டும் என்றால் பிறகு இங்கே வந்து ரதத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? சிவனுடைய கோவிலில் முன்னால் காளை மாட்டை வைக்கிறார்கள். மனிதர்களின் புத்தி முற்றிலும் கல் புத்தியாக இருக்கின்ற காரணத்தால் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. காளை மாட்டை சிவனுக்கு முன்னால் ஏன் வைக்கிறார்கள். கோ சாலை என்ற பெயரை கேட்டதும் காளை மாட்டை வைத்து விட்டனர். இப்போது காளை மாட்டின் மீது யார் சவாரி செய்தது. கிருஷ்ணரின் ஆத்மா சத்யுகத்தில் இருக்கிறது. விலங்கில் வந்து அமர்வதற்கு அவருக்கு என்ன இருக்கிறது. எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு திரௌபதி கிடையாது. நிறைய பேர் அழைக்கிறார்கள். அவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி விட்டனர். ஸ்ரீகிருஷ்ணர் புடவைகளை கொடுத்துக் கொண்டே போகிறார். பொருள் எதுவும் புரிய வில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிக்கு நிர்வாணம் ஆகக் கூடாது என புரிந்துக் கொள்கிறீர்கள். எவ்விடத்தின் விஷயத்தை எங்கே கொண்டு சென்று விட்டனர். பக்தி மார்க்கத்தில் பல கதைகள் இருக்கின்றது. இந்த கதைகள் அனைத்தும் அனாதியாகும் என்று கூறுகிறார்கள். மறுபிறவி எடுத்து கேட்டுக் கொண்டே வந்துள்ளனர். அனாதி என்றாலும் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பது தெரியவில்லை. இராவண இராஜ்யம் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பதும் தெரியவில்லை. அதை பற்றி எந்த வர்ணனையும் இல்லை. நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள். அந்த சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவைகள் இருக்கின்றது. சத்யுகத்திலும் இருக்கின்றது. இப்போதும் இருக்கின்றது, அதை மாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் நிமித்தமாக இருக்கிறீர்கள். பாரதத்தினரை தான் மீண்டும் இருளில் இருந்து எடுத்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்திற்கு காரிருள் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு மகிமைகள் இருக்கிறது. நீங்கள் பூலோக நட்சத்திரங்கள். நட்சத்திரம் இருக்கிறது என்றால் சந்திரன், சூரியன் கூட இருக்க வேண்டும்.



    இது உங்களுடைய ஆன்மீக தீர்த்தமாகும். நீங்கள் பிறகு மரண உலகத்திற்கே வருவதில்லை. அது போன்று யாத்திரைக்கு செல்கிறீôகள். இப்போது இது மரண உலகம் ஆகும். பிறகு இங்கேயே தான் அமர லோகம் உருவாகும். துவாபர யுகத்திலிருந்து மரண லோகம் ஆரம்பம் ஆகியது. இப்போது நீங்கள் உண்மையிலும் உண்மையான அமர கதையை அமர லோகத்திற்குச் செல்வதற்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக் களாகிய நம்முடைய யாத்திரை தனிப்பட்டது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்து யாத்திரைக்குப் போவதற்கு முயற்சி செய்கிறீர்கள். நினைவினால் தான் உங்களுடைய விகமர்ங்கள் அழியும். அந்த யாத்திரைக்குச் செல்கிறார்கள். விகர்மம் எங்கே அழிகின்றது? குடிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்றால் மறைத்து கூட நிச்சயம் எடுத்து செல்கிறார்கள். இன்றோ யாத்திரையில் மிகவும் அழுக்கானவர்கள் கூட இருக்கிறார்கள். அனைவருமே அழுக்கானவர்கள் அல்லவ.ô. பிராமணர்கள் எப்படி அழுக்காக இருக்கிறார்களோ அப்படியே யாத்திரை செய்பவர்களும் அழுக்காக இருக்கிறார்கள். வழிகாட்டிகள் யாத்திரை செய்விக்கிறார்கள். அவர்களே தூய்மையாக இல்லை. நீங்கள் தூய்யைமாக இருக்கிறீர்கள் நீங்களே உண்மையான பிராமணன். உங்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கிறது. நினைவு யாத்திரையினால் தான் நீங்கள் தூய்மையாகிறீர்கள். சதோபிரதானம் ஆக வேண்டும். பாபா அடிக்கடி இனிமையான குழந்தைகளே என எழுதுகிறார். இந்த சிவபாபா ஆத்மாக்களுக்கு எழுதினார்- என்னை நினைத்தால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகி சதோபிரதானமான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். அவ்வளவு தான், ஒரேயொரு டைரக்ஷன் தான் முக்கியமாக இருக்கிறது. எவ்வளவு எளிதாக இருக்கிறது. நினைவினால் தான் பாவங்கள் அழியும் நினைக்கவில்லை என்றால் பாவங்கள் அழியாது. பிறகு தண்டனை அடைவீர்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் வருமானத்தை சம்பாதிக்கலாம் என பாபா கூறுகின்றார். உட்கார்ந்தாலும் எழுந்தாலும், சாப்பிட்டாலும் பாபாவை மட்டும் நினையுங்கள். உங்களுடையது வருமானம் ஆகும். குழந்தைகளுக்கு இன்னும் எளிதாகும். இதில் எந்த ஒரு கவனத்தின் விஷயமும் கிடையாது. ஸ்ரீநாத் கோவிலில் ஸ்ரீநாத்தின் நினைவில் அமர்கிறார்கள். பிரசாதம் படைக்கிறார்கள். இருப்பினும் கற்சிலை அல்லவா. பிரசாதம் கூட யாருக்கு படைக்க வேண்டும். ஒரு சிவபாபா தான் அதிகாரி ஆவார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் பதீத பாவனர் அவரே. நான் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என பாபா கூறுகின்றார். நீங்கள் என் மீது தண்ணீர் கலந்த பாலை ஊற்றுகிறீர்கள். இந்த பிரசாதத்தை படைக்கிறீர். ஏன்? நானோ நிராகாரன் எதையும் அனுபவிக்காதவன் என்ன பூஜை செய்கிறீர்கள்? என் முன்னால் பிரசாரதம் வைத்தீர்கள். ஆனால் பக்தர்கள் பிரசாதம் வைக்கின்றனர், அவர்களே பங்கிட்டு உண்கின்றனர். சிவபாபாவிற்கு நிச்சயம் பிரசாதம் படைக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு பங்கிட்டு நீங்கள் உண்ணுகிறீர்கள். இதுவே ஒருவருக்கு மரியாதை அளிப்பதாகும். நான் சிவபாபாவிற்கு பிரசாதம் படைக்கின்றோம், சிவபாபாவின் பொக்கிஷம் அல்லவா. யாருடைய பொக்கிஷமோ அவருக்கு நிச்சயம் பிரசாதம் வைக்க வேண்டும். நீங்கள் பிரசாதம் படைக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தான் உண்ணுகிறீர்கள். இந்த பிரம்மா உண்ணுகிறார். நான் உண்பதில்லை. மற்றபடி வாசனை வருகிறது அல்லவா. மிகவும் நன்றாக பிரசாதம் செய்யப்பட்டிருக்கிறது. சொல்வதற்கு கூட உடல் வேண்டும் அல்லவா. இந்த பிரம்மா சாப்பிட முடியும். இந்த உடல் இவருடையது அல்லவா. நான் இவருக்குள் மட்டும் பிரவேசம் ஆகிறேன். வாயை பயன்படுத்துகிறேன். குழந்தைகளாகிய உங்களை அழுக்கிலிருந்து தூய்யைமாக்குவதற்காக. பசு வாய் என கூறுகிறார்கள் அல்லவா. உண்மையில் பசுவும் இருக்கிறது, இதிலிருந்து தான் குழந்தைகளாகிய உங்களை தத்தெடுக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். இங்கே தாய் தந்தை இருவரும் இருக்கிறார்கள். ஆனால் தாய்மார்களை யார் பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் சரஸ்வதியை நிமித்தமாக நாடகத்தின் படி வைத்தனர். மாதா குருவின் மகிமைகள் கூட வேண்டும் அல்லவா. குரு முதல் நம்பரில் பிரசித்தமானவர். குரு பிரம்மா என்பது சரியாகும். எப்படி தந்தையோ அப்படியே குழந்தைகள். பிராமணர்களாகிய நீங்களும் உண்மையான குரு ஆகிறீர்கள். அனைவருக்கும் சொர்க்கத்தின் உண்மையான வழியை காட்டுகிறீர்கள். ஆத்மா தான் வாய் மூலமாக மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற வழியைக் காட்டுகிறது. தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் அதே வழியை தெரிவிக்கிறார்கள். இங்கே நீங்கள் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். நினைவு இருக்கிறது. பிறகு வீட்டிற்குச் சென்றதும் மறந்து போய்விடுகிறது. இங்கே ஆனந்தம் வருகிறது. பாபாவிடம் வந்திருக்கிறோம், சுயதரிசன சக்கரதாரி ஆகி முக்தி தாமம், பாபாவை மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. தங்களுக்குள் ஒருவர் மற்றொருவருக்கு மற்றும் தந்தைக்கு உண்மையான மதிப்பளிக்க வேண்டும். பாபா எதையும் அனுபவிக்காதவர் ஆவார். ஆனால் யாருடைய பண்டாராவிலிருந்து பாலனை நடக்கிறதோ அவருக்கு முதலில் நிச்சயம் படைக்க (போக்) வைக்க வேண்டும்.



    2. பூஜைக் குரியவராக ஆவதற்கு இறை தொண்டர் ஆக வேண்டும். பாபாவுடன் சேவையில் உதவியாளராக வேண்டும். எப்போது ஆத்மா உடல் இரண்டும் தூய்யைமயாகிறதோ அப்போது பூஜை நடக்கும்.



    வரதானம் :

    அதிகாரி (உரிமையுடையவர்) என்ற நினைவு மூலமாக அனைத்து சக்திகளையும் அனுபவம் செய்யக் கூடிய பிராப்தி சொரூபம் ஆகுக !



    புத்தியின் சம்மந்தம் ஒரு தந்தையிடம் இருந்தால் அனைத்து சக்திககளும், ஆஸ்திகளும் அதிகாரத்தின் வடிவமாக கிடைக்கிறது. யார் அதிகாரி என புரிந்துக் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்கிறார்களோ அவர்களுக்கு சொல்வதிலும், எண்ணத்திலும் கூட கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அதிகாரி என்ற நினைவு தான் அனைத்து சக்திகளையும் பிராப்தியையும் அனுபவம் செய்விக்கிறது. அனைத்து சக்திகளும் நம்முடைய பிறப்புரிமை என்ற பெருமிதம் இருக்கட்டும். அதிகாரி ஆகி நடந்தால் அடிமைத்தனம் முடிந்து போகும்.



    சுலோகன் :

    தன்னுடனேயே இயற்கையும் தூய்மையாக மாற்ற வேண்டும் என்றால் முழுமையாக பற்றிலிருந்து விடுபடுங்கள்.


    ***OM SHANTI***