BK Murli 27 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 27 July 2016 Tamil

    27.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே ! இந்த மகாபாரத போரில் பழைய மரம் அழியப்போகின்றது. ஆகையால் போருக்கு முன்பு பாபாவிடமிருந்து முழுமையிலும் முழுமையாக சொத்தை (ஆஸ்தி) எடுத்துக் கொள்ளுங்கள்.



    கேள்வி :

    பாபாவுக்கு தாய்மார்களினுடைய குழு வேண்டும். ஆனால் அந்த குழுவினுடைய விசேஷ தன்மை என்னவாக இருக்க வேண்டும்?



    பதில் :

    ஆத்ம அபிமானியாக ஆவதற்காக முழுமையிலும் முழுமையாக முயற்சி செய்யக்கூடிய குழுவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியான போதை இருக்க வேண்டும். நாங்கள் தூய்மையாக மாறி தூய்மையான உலகத்தை உருவாக்குவோம். தூய்மையற்றவர்களாக ஆகக்கூடாது. பற்றற்று இருக்கக் கூடிய குழு ஏதாவது அதிசயம் செய்து காண்பிப்பார்கள். யார் மீதும் பற்றுதல் இருக்கக்கூடாது. மோகம் மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.



    ஓம் சாந்தி.

    இனிமையான தந்தை நம்மை சொர்க்க வாசியாக மாற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறார் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தெரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இது குழந்தைகளுடைய புத்தியில் இருக்கிறது. நாம் ஆத்மா. இந்த நினைவினுடைய யாத்திரையினால் தூய்மையாக மாறுகிறோம் என்பதை ஒவ்வொருவருக்கும் புரியவைக்க வேண்டும். எவ்வளவு எளிமையான வழியாக இருக்கிறது, பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பாபா ஒரு வினாடியில் முக்தி-ஜீவன் முக்தியினுடைய சொத்தை கொடுக்கிறார் என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது அனைவரும் ஜீவன் பந்தனத்தில் இருக்கின்றனர், இராவண இராஜ்ஜியத்தினுடைய பந்தனத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை பாபா தெரிந்திருக்கிறார் மற்றும் குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். வேறு யாரும் தெரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் இருக்கின்றது. எல்லையில்லாத தந்தையை நாம் நினைவு செய்யும் பொழுது ஆத்மாவிற்கு உள்ளுக்குள் மிகவும் குஷியாய்யிருக்க வேண்டும். எந்த தந்தையை அரைகல்பமாக நினைவு செய்தீர்களோ - அந்த தந்தை கிடைத்துவிட்டார். துக்கத்தில் தந்தையை நினைவு செய்து கொண்டு இருக்கின்றனர். நீங்கள் கூட நினைவு செய்துகொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் துக்கமடைந்து நினைவு செய்வது கிடையாது. யாரை முழு உலகமும் நினைக்கிறதோ, அந்த தந்தை வந்திருக்கிறார், இதை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். பாபா அடிக்கடி புரிய வைக்கிறார் - இங்கே நீங்கள் உட்கார்ந்து இருக்கும் போது நாங்கள் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். பாபா பரந்தாமத்தில் இருந்து வந்திருக்கிறார். கல்ப கல்பமாக தன்னுடைய உறுதிமொழியின்படி வருகிறார். நீங்கள் எப்பொழுது கூப்பிடுவீர்களோ மற்றும் அரைக்கல்பம் எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது தான் நான் வரவேண்டியிருக்கிறது என்பது பாபாவினுடைய உறுதி மொழி. கலியுகத்திற்கு பிறகு சத்யுகம் வரும் பொழுது நான் வரவேண்டியிருக்கிறது. இது சங்கமயுகமாக இருக்கின்றது. பாபா வந்து விட்டார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் தெரிந்திருக்கிறீர்கள். குழந்தைகள் நீங்கள் கூட சேவை செய்கிறீர்கள், நாளுக்கு நாள் அறிமுகம் கொடுத்துக் கொண்டே செல்கிறீர்கள். பாபாவினுடைய அறிமுகம் அனைவருக்கும் கிடைக்கின்றது. இங்கே உட்காந்து கொண்டே, எல்லையில்லாத தந்தை சிவபாபா நமக்கு மீண்டும் எல்லையில்லாத சொத்தை கொடுப்பதற்காக வந்திருக்கிறார் என்பதை தெரிந்துள்ளீர்கள். நீங்கள் பாபா-பாபா என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா. நாம் சிவபாபாவிடம் வந்திருக்கிறோம் நான் சாதாரண உடலில் வந்திருக்கிறேன், கல்பத்திற்கு முன்பு போலவே என்று சிவபாபா கூட கூறுகின்றார். இதை மறக்கக்கூடாது. மாயா இப்படிப்பட்ட தந்தையினுடைய நினைவை மறக்க வைத்துவிடுகிறது, எனவே பதீதத்திலிருந்து பாவனமாக ஆக வேண்டியிருக்கின்றது. அனை வருக்கும் சத்கதி கொடுக்கக்கூடிய வள்ளல் ஒரே ஒரு சத்குருவாக இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சீக்கியர்கள் கூட மகிமை செய்கின்றனர். சத் ஸ்ரீ அகால், பதீதபாவனன் தான் சத்குரு என்று சொல்லப்படுகின்றது. ஏ, பதீதபாவனனே! என்று அழைக்கின்றனர். ஆத்மா அழைக்கிறது. நாம் இங்கே வந்திருக்கின்றோம் பாபாவை நேரடியாக சந்திக்க என்பதை இப்பொழுது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பெரிய பெரிய மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதற்காக செல்கின்றனர், அவர்களுக்கு எவ்வளவு மகிமை ஏற்படுகிறது. கோலாகலமாக வரவேற்பதற்காக பேண்டு வாத்தியங்கள் முதலானவைகளை குஷிக்கர்க வாசிக்கின்றனர். இங்கே மறைமுகமான வேடத்தில் யார் வந்திருக்கிறார், இதை நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். தூர தேசத்தில் வசிக்கக்கூடிய பயணி எனறு அவருக்குத்தான் சொல்லப்படுகிறது. நாம் ஆத்மாக்கள் பரந்தாமத்தில் வசிக்கக்கூடியவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இங்கே பயணியாகி நடிப்பை நடிப்பதற்காக வந்திருக்கின்றனர். ஒவ்வொரு வார்த்தையும் பாபா என்ன புரிய வைக்கின்றாரோ, உலகத்தில் அதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் பாபாவிடம் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். இதை நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும். பாபா புரிய வைக்கின்றார், நீங்கள் அனைவரும் இந்த கர்ம ஷேத்திரத்தில் பயணியாக இருக்கிறீர்கள். நாம் சாந்திதாமத்தில் வசிக்கக்கூடியவர்கள். பிறகு இங்கே சப்தம் நிறைந்த உலகத்திற்கு வந்திருக்கின்றோம். நாம் சாந்திதாமத்தினுடைய பயணியாக இருக்கின்றோம், 84 ஜன்மங்களுடைய நடிப்பை இங்கே நடிக்கின்றோம். இது கடைசி நேரமாக இருக்கின்றது. பழைய சிருஷ்டியை புதியதாக மாற்றுவதற்காக பாபா வந்திருக்கிறார். இதை கூட நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். படங்கள் கூட தெளிவாக இருக்கிறது, சிவபாபா பிரம்மா மூலமாக புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். கிருஷ்ணர் மூலமாகவோ, விஷ்ணு மூலமாகவோ ஸ்தாபனை செய்கிறார் என்பதெல்லாம் கிடையாது. பாபா, பிரம்மா மூலமாக சொர்க்கத்தை படைப்பதற்காக வந்திருக்கின்றார். பாபா சாதாரண உடலில் வந்திருக்கின்றார். இது பதீத உலகம் ஆகும். ஒருவர் கூட பாவனமாக இல்லை. முதல் நம்பரில் இருந்த லட்சுமி நாராயணன் கூட பதீதமாகி யிருக்கின்றார்கள். யார் பாவனமாக இருந்தார்களோ அவர்களே பதீதமாகியிருக்கின்றார்கள். முழு உலகமும் பதீதமாகியிருக்கின்றது. தெய்வீக தர்மத்தை சார்ந்தவர்களாக இருந்த நீங்களே இப்பொழுது சூத்திர தர்மத்தைச் சார்ந்தவர்களாக மாறியிருக்கின்றீர்கள். அமெரிக்காவில் பெரிய பெரிய பணக்காரர்கள் இருக்கலாம். ஆனால் சத்யுகத்திற்கு முன்பு அமெரிக்கா ஒன்றும் இல்லை. இது அனைத்தும் கடைசியில் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இது அல்ப காலத்தின் பகட்டு ஆகும். வினாசம் நடந்து தான் ஆக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக போதை இருக்க வேண்டும். சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றக்கூடிய தந்தையை குழந்தைகள் நினைவு செய்யவில்லை என்றால் எவ்வளவு அதிசயமாக இருக்கிறது. மாயை நினைவு செய்ய விடுவதில்லை. பாபா மாயை எங்களை நினைவு செய்ய விடுவதில்லை என குழந்தைகளாகிய நீங்களே கூறுகின்றீர்கள். அட, பாபா 21 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றார். அவரை நீங்கள் நினைவு செய்ய முடியாதா? பிரஜைகள் கூட சொர்க்கதிற்கு அதிபதியாகிறார்கள் அல்லவா? அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். இப்போது அனைவரும் துக்கத்தில் இருக்கின்றனர். பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆகியோருக்குக் கூட இரவும் பகலும் கவலை இருந்து கொண்டேயிருக்கின்றது. சண்டையில் எவ்வளவு பேர் இறந்து கொண்டேயிருக்கின்றனர். மகாபாரதப் போர் பிரசித்தமானது என உங்களுக்குத் தெரியும். ஆனால் அதில் என்ன நடந்தது. இது யாருடைய புத்தியிலும் இல்லை. உங்களுக்கு பாபா புத்தியில் பதியவைத்திருக்கிறார். மகாபாரதப் போரில் அனைவரும் இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய மனித சிருஷ்டியாக இருக்கின்றது. ஆத்மாக்களினுடைய மரம் இருக்கின்றது. மரம் முதலில் புதியதாக இருக்கும் போது சிறியதாக இருக்கிறது. பிறகு வளர்ந்து கொண்டே போகிறது. தெய்வீக தர்மம் இருந்த போது எவ்வளவு சிறிய மரமாக இருந்தது என நீங்கள் அறிகிறீர்கள். ஆதிசனாதன தேவதா தர்மம் இருந்தது. இப்போது எத்தனை விதமான தர்மங்கள் இருக்கின்றது. இந்த மகாபாரத போர் மூலமாக அனைவருக்கும் அனைத்தும் அழியப்போகிறது. ஆனால் இந்த ஞானம் யாருக்குள்ளும் இல்லை. இது அதே போர் என்று கூறுவார்கள். ஆனால் இதனால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இப்போது நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். வினாசம் நடக்கப்போகிறது என்பது தெரிந்தது. ஆகையால் போருக்கு முன்பாக தங்களுடைய சொத்தை அடையுங்கள். விஷயம் மிகவும் எளிதாக இருக்கிறது. பவித்திரமாகுங்கள் மற்றும் பாபாவை நினையுங்கள். பல குழந்தைகள் கொடுமைபடுத்தப் படுகின்றார்கள். தாய்மார்களாகிய உங்களின் குழு ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் நிச்சயமாக ஆத்ம அபிமானி ஆகவேண்டும். நாம் பாவனமாக வேண்டும். உறுதியான போதை வேண்டும். இவ்வாறு போதையில் இருக்கக்கூடியவர்கள் தான் புரிய வைக்க முடியும். நாம் படைக்கக்கூடிய தந்தை மற்றும் படைப்பின் சக்கரத்தை அறிகின்றோம் இப்போது பாபாவிடமிருந்து நாம் புது உலகம் சத்யுகத்தின் ஆஸ்தியை அடையவேண்டும். நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கின்றோம் என்பதை புரியவைத்துக் கொண்டேயிருங்கள். என்னை நினைவு செய்தால் உங்களுடைய பாவங்கள் அழிந்து போகும் என பாபா புரியவைக்கின்றார். இங்கே புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். தந்தையாகிய என்னை நினைத்தால் 21 பிறவிக்கு ஆஸ்தி அடையலாம். யார் மீதும் மோகத்தின் அடையாளமே இருக்கக்கூடாது. நஷ்டமோகா ஆகவேண்டும். இந்த சரீரத்தின் மீது கூட மோகம் இருக்கக்கூடாது. இது பழைய தோல் ஆகும். ஆனால் இதைப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் படிப்பை படிக்க முடியும். துன்பம் ஏற்பட்டால் ஒட்டுபோட வேண்டும் (சிகிச்சை அளிக்க வேண்டும்). இது பழைய அழுகிய உடல் என நீங்கள் அறிகிறீர்கள். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிக்கொண்டேயிருக்கின்றது. ஆத்மாவிற்கு துக்கம் ஏற்படுகிறது. இப்போது இந்த உடலை விடவேண்டும் என அறிகிறீர்கள். யோக பலத்தினால் இதைத் தாங்க வேண்டும். பாபாவை நினைவு செய்து கொண்டே யிருக்க வேண்டும். தன்னை ஆத்மா என நினைத்து பாபாவை நினைக்க வேண்டும். வேறு எந்த லௌகீக சம்பந்தமும் நினைவு வரக்கூடாது. நான் தேகம் இல்லை ஆத்மா. நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு சொத்து கொடுக்க வந்துள்ளேன் என பாபா கூறுகின்றார். ஆத்மா பவித்திரமாகினால் பிறகு சரீரமும் நன்றாக கிடைக்கும். இப்போது நம்முடைய ஆத்மா பாவனமாக வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் பாவனமாக இருந்த போது லட்சுமி நாராயணன் போன்று இருந்தோம். இந்த லட்சுமி நாராயணன் 84 பிறவிகள் எடுக்கின்றனர். சூரிய வம்சத்தினர் அனைவரும் 84 பிறவிகள் எடுக்கின்றனர். சந்திரவம்சத்தினருக்கு 84 என்று கூறமுடியாது. ஆம் யார் சூரிய வம்சத்தில் முதன் முதலில் வேலைக்காரர்களாக இருந்தார்களோ அவர்கள் பிறகு திரேதாவில் சிறிய பதவியைப் பெறுவார்கள். அவர்களுக்கு 84 பிறவிகள் எனலாம். இராஜா இராணி பிரஜை யாரெல்லாம் தாச தாசிகளாக சூரிய வம்சத்தில் வருகிறார்களோ, அவர்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இவ்வாறெல்லாம் தனக்குத் தானே பேசிக்கொள்ள வேண்டும், 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கின்றோம் என விசார சாகர மந்தனம் செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ பாபாவை மற்றும் சொத்தை நினையுங்கள். போகும் போதும் வரும் போதும் நாம் பாபாவின் குழந்தைகள் என புரிந்து கொள்ளுங்கள். யார் கிடைத்தாலும் அவர்களுக்கு பாபாவின் அறிமுகம் கொடுங்கள். இந்த சித்திரங்களில் அனைத்து ஞானமும் இருக்கிறது. அனைத்தையும் கூறுங்கள். பாபா பிரம்மாவின் உடலில் வந்திருக்கின்றார். நாம் அனைவரும் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் அல்லவா? பி.கு ஆகிய நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்ற தந்தை வந்திருக்கின்றார். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே! நாம் பிரம்மா குமார் குமாரிகள் ஆவோம். அவரவர் கார்டு கூட காண்பிக்கலாம். அலுவலகங்களில் கூட கார்டை கொடுக்கலாம். ஆனால் பி.கு யார் என புரிந்து கொள்ள மாட்டார்கள். பலவிதமான தடைகள் வருகின்றது. அரசாங்கத்திற்கு கூட புரிய வைக்கப்படுகிறது. இது நம்முடைய குடும்பம் தாதா (பிரம்மா), தந்தை இருக்கின்றார். தாதா மூலமாக நாம் ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கிறோம். இந்த நினைவினால் குஷி இருக்க வேண்டும். சொத்து தாத்தாவினுடையதாகும். பேர குழந்தைகளுக்கு உரிமை இருக்கின்றது. முழுமையாக கணக்கிட்டு பங்கிட்டு அடைகிறார்கள். சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலமாக நாம் சொத்தை அடைகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். படிக்க வேண்டும் பிறகு படிக்க வைக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது தந்தையின் கடமையாகும். குமார் குமாரிகள் இளைஞர்கள் ஆகும் வரை தந்தை அவர்களை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் வேலை படிப்ப தாகும். தனது காலில் நிற்பதற்காக படிக்கின்றார்கள். பாபா 21 பிறவிகளுக்காக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு நாம் நமது காலில் நிற்போம். எவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவோம். நாம் இங்கே ஸ்ரீ லட்சுமி அல்லது ஸ்ரீ நாராயணன் ஆவதற்காக வருகிறோம் என நீங்களே கூறுகிறீர்கள். இது சத்திய நாராயணனின் கதையல்லவா? இந்த லட்சுமி, நாராயணன் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ராதையின் பக்தர்கள் என்றால் எங்கு பார்த்தாலும் ராதையாகவே இருப்பதாகவே கூறுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் இராதை இராதையாகவும், கிருஷ்ணர் கிருஷ்ணராகவும், சிவனே சிவனாகவும் இருக்கிறது. இது குடு குடுப்பை மாதிரி கூறிக் கொண்டே இருக்கிறார்கள். மிகவும் சுவையாக இருக்கிறது. ஈஸ்வரன், இராதை, கிருஷ்ணர் அனைவரும் சர்வ வியாபிகள். இது அனைத்தும் ஈஸ்வரனின் ரூபமாக இருக்கிறது. பகவான் இந்த ரூபத்தை தாரணை செய்கிறார். எங்கு பார்த்தாலும் நீயே நீ...... முற்றிலும் முட்டாளாகியிருக்கின்றனர். இது விகார பதீத உலகம் ஆகும். சத்யுகம் நிர்விகார பாவன உலகம் ஆகும். விகாரமற்ற உலகத்தின் பொருளே சொர்க்கம் ஆகும். அங்கே குழந்தைகள் இருக்கிறார்களா என கூறுகிறார்கள். அங்கே எப்படி பிறப்பார்கள் என கேட்கிறார்கள். இந்த கேள்வியைத்தான் கேட்கிறார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் இந்த சிருஷ்டி எப்படி பெருகும் என கூறுவார்கள். ஒவ்வொருவரிடமும் மக்கள் தொகை கணக்கெடுத்தால் எவ்வளவு மனிதர்கள் அதிகமாகியிருக்கிறார்கள். இத்தனை பேர் இறந்துவிட்டனர் என கூறுவதில்லை. எனவே குழந்தைகள் தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா என்பதை முதலில் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பாபாவை நினையுங்கள். கடைசி காலத்தில் நாராயணனை நினைத்தால்..... இப்போது நாராயணனை நினைப்பது என்ற வார்த்தை பொய்யாக எழுதியிருக்கிறார்கள். கடைசி காலத்தில் சிவபாபாவை நினைத்து..... அதே கவலையில் யார் இறக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நாராயணன் ஆகிறார்கள். கடைசி காலத்தில் நாராயணா என்று ஏன் கூறுகின்றார்கள். கிருஷ்ணர் ஞானம் கொடுத்தார் என்று கூறுகிறார்கள். பிறகு கிருஷ்ணரை ஏன் நினைக்கவில்லை. கிருஷ்ணரை நினைக்கிறார்கள். நாராயணரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணரின் ஜயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் இராதை ஜெயந்தி எங்கே ? கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடுகிறார்கள். நாராயணன் எங்கே உலகத்தின் இராஜா இராணியாகிய லட்சுமி நாராயணனை யாருக்கும் தெரியவில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் முக வம்சாவளி அல்லவா? எங்கே போனார்கள். பிராமணன் தேவி தேவதா நமக! என்று கூறுகிறார்கள். பிரம்மாவின் முக வம்சாவளியாக இருந்தனர் அல்லவா? பிரம்மா மூலமாக சிவபாபா பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். பிராமண தர்மத்தை பிரம்மா படைக்கவில்லை. ஆனால் சிவபாபா படைக்கிறார். இப்போது இவர் பிரம்மா ஆகியிருக்கிறார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்

    1. இந்த பழைய உடலில் இருந்து கொண்டே படிப்பை படித்து 21 ஜென்மங்களுக்கு வருமானத்தை சம்பாதிக்க வேண்டும். ஆகையால் இதைப் பாதுகாக்க வேண்டும். மற்ற படி இதில் பற்று இருக்கக்கூடாது.



    2. கடைசி காலத்தில் ஒரு சிவபாபாவின் நினைவில் இருக்க வேண்டும். வேறு யாருடைய சிந்தனையும் இருக்கக் கூடாது. இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும். தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும்.



    வரதானம்:

    சப்தத்தைக் கடந்த ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ குணங்களையும் அனுபவம் செய்யக்கூடிய மஸ்டர் விதை வடிவம் ஆகுக.



    எப்படி விதைக்குள் முழு மரமும் அடங்கியுள்ளதோ, அதைபோல் சப்தத்தைக் கடந்த ஸ்திதியில் சங்கமயுகத்தின் அனைத்து விஷே குணங்களும் அனுபத்தில் வரும்.  மாஸ்டர் விதை வடிவம் ஆவது என்றால் வெறும் சாந்தி மட்டும் இல்லை, ஆனால் சாந்தியோடு கூடவே ஞானம், அதிந்திhpய சுகம், அன்பு, ஆனந்தம், சக்தி முதலிய அனைத்து முக்கிய குணங்களையும் அனுபவம் செய்கின்றனா;. ஒரு குணத்திலேயே சற்வ குணங்களும் நிறைந்திருக்கும்.



    சுலோகன்:

    நல்லதை மட்டுமே தாரணை செய்யுங்கள், ஆனால் நல்லதில் பிரபாவம்(வசம்) ஆகி விடாதீர்கள்.



    ***OM SHANTI***