BK Murli 31 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 July 2016 Tamil

    31.07.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ் 29.10.1981  மதுபன்
     

     '' தந்தை மற்றும் குழந்தைகளின் ஆன்மீக சந்திப்பு ''

    ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆன்மீக சந்திப்பை குழந்தைகள் நீங்கள் மட்டும் தான் செய்ய முடியும். ஒரு தந்தையுடன் ஒரே நேரத்தில் இந்த சந்திப்பை செய்ய முடியும். நீங்கள் அனைவரும் தீபாவளித் திருவிழாவைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள். விழாவில் ஒன்று கொண்டாடுவது, இரண்டாவது ஒருவர் இன்னொருவரை சந்திப்பது, மூன்றாவது ஏதாவது (பரிசு) கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது. மேலும் நான்காவது விளையாடுவது. நீங்கள் அனைவரும் கூட இந்த நான்கு விஷயங்களையுமே செய்திருக்கிறீர்கள். சந்திப்பு விழாவிலோ வந்திருக்கிறீர்கள். ஆனால் கொண்டாடுவது என்றால், எப்பொழுதும் அழியாத உற்சாகம் நிரம்பிய, ஊக்கம் நிரம்பிய வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதற்கான திட எண்ணம் வைப்பது. இந்த ஆன்மீக சந்திப்பு விழாவை கொண்டாடுவது, அழியாத உற்சவத்தைக் கொண்டாடுவது ஓரிரு நாட்களுக்காக மட்டுமில்லை. ஆனால் சங்கமயுகமே எப்பொழுதும் உற்சவம் அதாவது உற்சாகத்தை அதிகரிப்பது. அப்படி தீபாவளி கடந்து சென்று விடவில்லை ஆனால் தீப ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. நிரந்தரமாக புது வருடம் வந்திருக்கிறது. ஒவ்வொரு நேரமும் உங்களைப் பொருத்தளவில் புதியது. எப்படி புது வருடத்தில் அதே நாளில் விசேஷமாக புதுப்புது ஆடைகள், புதுப்புது அலங்காரம், புதிய ஊக்கம் மற்றும் விசேஷ குஷிக்கான நாள் என்று புரிந்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள், இனிப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஆன்மீக குழந்தைகள் உங்களைப் பொருத்தளவில் சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கான மற்றும் அனைவருக்கும் எப்பொழுதும் இனிப்பு வழங்குவதற்கான நாள் ஆகும். அந்த மாதிரி எப்பொழுதும் உற்சாகத்தில் இருங்கள், மேலும் மற்றவர்களுக்கும் உற்சாகம் கொடுங்கள். எப்பொழுதும் வாயில் இனிமையான வார்த்தைகள் வருவது, என்பது தான் இனிப்பு வழங்குவது, மேலும் மற்றவர்களுக்கும் இனிமையான வார்த்தைகள் மூலமாக இனிமையான தந்தையின் நினைவூட்டுவது, சம்மந்தத்தில் கொண்டு வருவது, இது தான் இனிப்பு வழங்குவது. அப்படி எப்பொழுதுமே வாய் இனித்துக் கொண்டிருக்கிறதா? இனிமையான வார்த்தை என்ற இனிப்பு எப்பொழுதும் உங்கள் வாயிலிருக்கிறது மற்றும் எப்பொழுதும் மற்றவர்களுக்கும் அருந்தக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் உயர்ந்த நிலை அதாவது ஒவ்வொரு நாளும் தன்னில் புதுமையை தாரணை செய்து கொண்டே இருக்கிறீர்கள். ஒரு விநாடி சென்றது மேலும் புதிய நிலை. ஒரு விநாடிக்கு முன்பு என்ன நிலையாக இருந்ததோ அது இரண்டாவது விநாடியில் முன்னேறும் கலையின் அனுபவத்தின் காரணத்தினால் எப்பொழுதும் உயர்ந்ததாக மற்றும் புதியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையை தாரணை செய்வது என்றால், புதிய ஆடையை அணிவது. சத்யுகத்திலோ ஸ்தூலமாக எப்பொழுதும் புதிய ஆடை அணிவீர்கள், உலக மகாராஜா மற்றும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த ஆடையை அணிய மாட்டீர்கள். இந்த சம்ஸ்காரத்தை இராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் இங்கேயே நிரப்ப வேண்டும். ஒவ்வொரு நேரத்தின் புதிய நிலை மற்றும் ஒவ்வொரு நேரம் பாப்தாதா மூலமாக ஞானம், யோகா மூலமாக புதிய அலங்காரம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்படி மிக அதிக செல்வம் உடையவர்கள் எப்பொழுதும் புதுப்புது அலங்காரம் செய்வார்கள். அப்படி அனைவரையும் விட உயர்ந்த சம்பன்னமான தந்தை, உயர்ந்த சம்பன்ன குழந்தைகள் உங்களுக்கு தினசரி புதிய அலங்காரம் செய்கிறார் இல்லையா? அப்படி தினசரி புதிய வருடம் ஆனது இல்லையா! புதிய ஆடை, புதிய அலங்காரம், புதிய உற்சவம் அதாவது உற்சாகம் மற்றும் எப்பொழுதுமே வாய் இனித்துக் கொண்டிருப்பது. நிரந்தரமாகவே வாயில் இனிப்பை அனுபவம் செய்விக்கும் இனிப்பு இருக்கிறது. எனவே தந்தையும் தினசரி என்ன கூறுகிறார்? (இனிமையிலும் இனிமையான குழந்தைகளே) இது உறுதியாக நினைவில் இருக்கிறது இல்லையா? தந்தையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! என்று கூறுகிறார். மேலும் குழந்தைகளும் என்ன கூறுகிறார்கள்? (இனிமையிலும் இனிமையான பாபா) அப்படியானால் வாயில் என்ன ஆயிற்று? அப்படி தினசரி புதிய வருடம் ஆகிவிட்டது இல்லையா? புதிய வருடம் என்றால், புதியது என்ன புதிய நேரம் ஆகிவிட்டது. அப்படி இந்த விதமாக கொண்டாடினீர்களா? அல்லது உற்சவம் சென்று விட்டது, கூடவே உற்சாகமும் சென்று விட்டதா? அப்படி அற்பகாலத்திற்கு கொண்டாடவில்லையே? இங்கு ஆன்மீக மேளா (சந்திப்பு) என்றால் அழியாத மேளா, இன்னொரு விஷயம் கொண்டாடுவதின் கூடவே சந்திப்பது. அப்படி ஆன்மீக சந்திப்பு செய்வது என்றால், தந்தைக்குச் சமமாக ஆவது. இது ஸ்தூலமான சந்திப்பு இல்லை, ஆனால் குணங்களால் சந்திப்பது, சம்ஸ்காரங்களால் சந்திப்பது. சந்திப்பது என்றால் சமம் ஆவது, எனவே தான் சேர்க்கையின் பிரபாவம் இருக்கிறது என்ற மகிமை பாடுகிறார்கள். அந்த மாதிரி ஆன்மீக சந்திப்பை செய்தீர்களா? அல்லது ஒவ்வொருவருக்கும் கை கொடுத்தீர்கள், மேலும் கட்டி அணைத்தீர்கள் என்பது மட்டும் தானா? குணங்களின் சந்திப்பு மற்றும் சம்ஸ்காரங்களின் சந்திப்பு, இது நிரந்தரமானது தான் இல்லையா? தினசரி சந்திப்பைக் கொண்டாடுவது. அப்படி மேளாவில் வந்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாதிரி சந்திப்பை செய்தீர்களா?



    மூன்றாவது விஷயம், வாங்குவது மற்றும் கொடுப்பது. உலகியல் முறையில் கூட ஏதாவது திருவிழாவிற்குச் செல்கிறீர்கள் என்றால் பணம் கொடுப்பீர்கள், ஏதாவது பொருளை வாங்குவீர்கள். அவசியம் ஏதாவது வாங்குவார்கள். மேலும் பொருளைப் பெறுவதற்கு முன்பு கொடுப்பதோ இருக்கவே இருக்கிறது. அப்படி எப்பொழுதுமே எடுக்கிறீர்களா? ஒவ்வொருவரிலும் கூட எப்பொழுதும் ஒவ்வொருவரின் விசேஷம் மற்றும் குணங்களை எடுக்கத்தான் செய்கிறீர்கள். எப்பொழுதுமே எடுக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுது எடுக்கிறீர்கள் என்றால், தனக்குள் தாரணை செய்கிறீர்கள். அப்படி எப்பொழுது விசேஷத்தை தாரணை செய்தீர்கள் என்றால், அதற்குப் பதிலாக சாதாரண நிலை இயல்பாகவே அகன்று விடுகிறது. குணத்தை தாரணை செய்கிறீர்கள் என்றால், அந்த குணத்தை தாரணை செய்வதினால் என்ன பலஹீனம் இருந்ததோ அது தானாகவே அகன்று விடுகிறது. அப்படி இது தான் கொடுப்பதாக ஆனது. அப்படி குஜராத்தை சேர்ந்தவர்கள் எடுத்தார்களா மற்றும் கொடுத்தார்களா? கொடுப்பது மற்றும் பெறுவதை செய்தீர்களா? இந்த கொடுப்பது மற்றும் எடுப்பது ஒவ்வொரு நேரமும் நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விநாடியும் எடுக்கிறீர்கள் மற்றும் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், எடுப்பதினால் கொடுப்பதும் அதனோடு சேர்ந்து இருக்கிறது. அப்படி கொடுப்பதிலும் பரந்த மனமுடையவர்களாக இருக்கிறீர்களா அல்லது கஞ்சனாக இருக்கிறீர்களா? பரந்த மனமுடையவர் தான் இல்லையா? மேலும் கொடுப்பது கூட என்ன கொடுக்கிறீர்கள். எதனால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ அதைத் தான் கொடுக்கிறீர்கள்.



    எப்பொழுது அனைத்துக் குழந்தைகளும் முற்றிலும் காலியாகி விடுகிறார்களோ அப்பொழுது தான் தந்தை வருகிறார். உடலின் சக்தியும் இல்லை, மனதின் சக்தியும் இல்லை, பணம் செல்வத்தின் சக்தியும் இல்லை. உடலின் சக்தியில் காலியாகி இருக்கிறார்கள் - இதனுடைய நினைவாக சிவனின் ஊர்வலத்தை எப்படிக் காண்பித்திருக்கிறார்கள்? மேலும் மனதின் சக்தி அழிந்ததின் அடையாளமாக - 'எப்பொழுதும் கூவி அழைத்துக் கொண்டிருப்பது' என்பது நினைவாக இருக்கிறது. தினசரி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் இல்லையா? பணம் செல்வத்தின் காலியானதின் அடையாளம் - இப்பொழுது பாருங்கள் கொஞ்சம் தங்கமும் இருக்கிறது. அதன் மீது எப்பொழுதும் அரசாங்கத்தின் பார்வை இருக்கிறது. பயந்து பயந்து அணிகிறார்கள். ஒருவேளை பணம் இருக்கிறது என்றாலும் அதனுடைய பெயர் என்னவாக இருக்கிறது? 'கருப்பு பணம்'. பெயரளவில் எவ்வளவு பெரிய செல்வந்தனோ, அந்த அளவு 90 சதவிகிதம் கருப்பு பணம் இருக்கும். அப்படி பெயரளவில் பணம் இருந்ததா? அல்லது உபயோகத்திற்கானதாக இருந்ததா? அப்படி எப்பொழுது அனைத்து தரப்பிலிருந்தும் காலியாகி விடுகிறீர்களோ, குசேலரின் காய்ந்த அவல் மட்டும் எப்பொழுது இருந்து விடுகிறதோ, அப்பொழுது தந்தை வருகிறார். காய்ந்த அவல் சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஆகிவிடும். அவல் மட்டும் கொடுக்கிறீர்கள். அதுவும் காய்ந்தது. மேலும் என்ன பெறுகிறீர்கள்? அனைத்து குணங்கள், அனைத்து சக்திகள், அனைத்து பொக்கிஷங்கள். 36 விதங்களையும் விட அதிக வகைகள் என்றால் பெறுவதாக ஆனதா? அல்லது கொடுப்பதாக ஆனதா? காய்ந்த அவல் கூட மண் படிந்ததைக் கொண்டு வருகிறீர்கள். மண்ணின் நினைவு தான் இருக்கிறது இல்லையா? இப்பொழுதோ மாறி விட்டீர்கள். ஆனால் எப்பொழுது தந்தையிடம் வந்தீர்களோ அப்பொழுது மண் பூசப்பட்டவராகத் தான் இருந்தீர்கள். மண்ணை பார்ப்பது, மண்ணோடு விளையாடுவது மற்றும் வேறு என்ன செய்தீர்கள்? ஆனால் இப்பொழுது இரத்தினங்களோடு விளையாடுகிறீர்கள். அப்படி கொடுப்பது மற்றும் பெறுவது எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். கொடுப்பது கூட மண் நிரம்பிய காய்ந்த அவல். இருந்தும் சில குழந்தைகள் மிகுந்த முரண்டு செய்கிறார்கள். கொடுத்து விட்டேன் என்று இன்று சொல்வார்கள். ஆனால் குசேலர் மாதிரி அதை இடுப்பில் மறைத்து வைத்திருப்பார்கள். தந்தையோ எடுக்க முடியும், ஆனால் கொடுப்பவருக்கு புண்ணிய கணக்கு உருவாகுமா? ஒருவேளை பிடுங்கி எடுத்து விடுகிறோம் என்றால், கொடுத்து எடுப்பது என்பதில் குறை ஏற்பட்டு விடும். கொடுப்பது ஒன்று மற்றும் பெறுவது பலமடங்கு. அப்படி சுய இச்சை அதாவது திட எண்ணத்தோடு ஒன்று கொடுப்பது, பல மடங்கு பெறுவது! எனவே நீங்கள் தான் கொடுக்க வேண்டும் ஏனென்றால் கொடுப்பதில் தான் நன்மை இருக்கிறது. அப்படி கொடுப்பது, பெறுவது என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா?



    எப்பொழுது அந்த மாதிரி கொண்டாடுவது, சந்திப்பது மற்றும் கொடுக்கல், வாங்கல் ஆகிவிடுகிறது என்றால் என்ன ஆகிறது? எப்பொழுதும் தந்தையுடன் குஷியாக விளையாடுவது. எப்பொழுதும் அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடுவது. அந்த மாதிரி மேளாவை (சந்திப்பை) கொண்டாடினீர்களா? இந்த ஆன்மீக மேளாவை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டே இருங்கள். மேலும் ஒவ்வொரு நாளும் மேளா தான். புரிந்ததா? நல்லது.



    அந்த மாதிரி ஒவ்வொரு விநாடியும் மேளாவை கொண்டாடக்கூடிய, எப்பொழுதும் தன்னுடைய மற்றும் அனைவரின் வாயை இனிப்பாக்கக்கூடிய, எப்பொழுதும் புதிய உற்சாகம் வைக்கக்கூடிய அதாவது எப்பொழுதும் உற்சவத்தைக் கொண்டாடக்கூடிய, ஒவ்வொரு விநாடியும் முன்னேறும் கலையின் புதிய நிலை அதாவது புதிய ஆடை அணிந்த புதிய அலங்காரம் தரித்த, எப்பொழுதும் தந்தையுடன் குஷியில் விளையாடக்கூடிய, அந்த மாதிரி எப்பொழுதும் ஆன்மீக மேளாவைக் கொண்டாடக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    தம்பதிகளுடன் சந்திப்பு -

    தன்னுடைய விசேஷத்தைத் தெரிந்திருக்கிறீர்களா? இந்த குரூப்பின் விசேஷம் என்ன? இந்த குரூப் சன்னியாசி, மகாத்மாக்களையும் தலை வணங்க வைப்பவர்கள். சன்னியாசி என்றால் இன்றைய நாட்களில் மகான் ஆத்மாக்கள். அப்படி இன்றைய நாட்களின் மகாத்மாக்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் தன்னுடைய வாழ்க்கை மூலமாக அறிமுகம் கொடுப்பவர்கள் நீங்கள். இதே விசேஷத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு காரியமும் சரித்திரமாகிவிடும். எப்படி பிரம்மாவின் ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்தின் ரூபத்தில் வர்ணனை செய்கிறீர்கள் இல்லையா? இங்கே மதுபன்னில் பிரம்மா பாபாவின் சரித்திர பூமி என்று புரிந்து வருகிறீர்கள் தான் இல்லையா? பிரம்மா பாபாவின் ஒவ்வொரு காரியம் சரித்திரம் ஆகிவிட்டது. ஏனென்றால், உயர்ந்த காரியமாக இருந்தது, அந்த மாதிரி இந்த குரூப்பின் விசேஷமானது ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்திற்கு சமமாக ஆக்குபவர்கள். ஏனென்றால் இப்பொழுது ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள், ஆன்மீகமாகி விட்டார்கள். பிரம்மாகுமார், குமாரியின் ஆன்மீக உறவு ஏற்பட்டு விட்டது. ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகள் மற்றும் ஆன்மீக காரியம். ஆன்மீகக் காரியத்தைத் தான் சரித்திரம் என்று கூறுவோம். முழு நாளும் அமிர்தவேளையில் தொடங்கி இரவு வரையிலும் ஒவ்வொரு காரியமும் சரித்திரமாக இருக்கட்டும், சாதாரணமானதாக இருக்க வேண்டாம். ஆன்மீகமானதாக இருக்கட்டும். ஆன்மீக வாழ்க்கை உள்ளவர் சாதாரண காரியம் செய்யவே முடியாது.



    அனைவரின் இரண்டு சக்கர வண்டி சரியாகச் சென்று கொண்டிருக்கிறது தான் இல்லையா? எப்பொழுதாவது ஏதாவது சக்கரம் மேலேயோ, கீழேயோ செல்வதில்லையே! ஒரு சக்கரம் முன்னுக்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னொரு சக்கரம் பின்னாலேயே இருந்து விடவில்லையே? உங்கள் அனைவரின் விசேஷமே ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு இருங்கள், மேலும் ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைப்பவராகவும் இருக்கிறீர்கள் என்பது தான்! ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைப்பது தான் முன்னால் இருப்பது. நான் ஆண் மற்றும் அவர் தன்னை சக்தி என்று நினைக்கிறார் என்று அப்படியும் வேண்டாம். ஒருவேளை நீங்கள் சக்தி என்றால் அந்த பாண்டவர்களும் குறைந்தவர்கள் அல்ல, சக்திகளும் குறைந்தவர்கள் அல்ல. இருபாலாருமே தந்தையின் சகயோகிகள்! எனவே பாண்டவர்கள் முன்னுக்கு இருக்கிறார்களா அல்லது சக்திகள் முன்னுக்கு இருக்கிறார்களா என்ற இதையும் கூற முடியாது. சக்திகளை கேடயம் என்று ஏன் கூறுகிறோம் என்றால், அவர்கள் தன்னை வெகுகாலமாகத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்து வந்திருக்கிறார்கள். எனவே போதை ஏறுவதற்காக முன்னுக்கு வைத்திருக்கிறோம். சக்திகளை முன்னுக்கு வைப்பதில் தான் பாண்டவர்களுக்கு லாபம். சக்திகள் பின்னால் இருக்கிறார்கள் என்றால், உங்களையும் பின்னால் இழுத்து விடுவார்கள். ஏனென்றால் சக்திகளிடம் கவர்ந்திழுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே சக்திகளை முன்னுக்கு வைப்பது தான் நீங்கள் முன்னுக்கு இருப்பதாகும். பொதுவாகவே சக்திகள் பாண்டவர்களின் கேடயம். பாண்டவர்கள் எங்காவது இந்த மாதிரி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் என்றால், தடியடி பெற வேண்டியதாக இருக்கும். பொதுவாக கீதா பாடசாலை திறக்கிறீர்கள் என்றால் சகோதரியை அனுப்புங்கள் என்று கூறுகிறீர்கள். மாதா குரு ஆவார், எனவே மாதர்களில் பாவனை சுலபமாக வந்து விடுகிறது. பிரம்மா பாபாவும் முதுகெலும்பாக இருந்தார். மேலும் சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் நீங்களும் பிரம்மாவைப் போன்றவர்கள் தான். எப்படி தந்தை சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் வெற்றி கிடைத்தது அதே போல் நீங்களும் சக்திகளை முன்னுக்கு வைத்தீர்கள் என்றால் வெற்றி கிடைத்து விடும்.



    இல்லறத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுவதில்லையே? எப்பொழுதாவது ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தோடு மோதுவதோ இல்லையே. ஏனென்றால் ஏதாவது சப்தம் எழுகிறது என்றால் என்ன கூறுவார்கள்? பகவானின் குழந்தைகள் மேலும் பாத்திரம், பாத்திரத்தோடு மோதுகிறது. பொதுவாகவே பாத்திரம் பாத்திரத்தோடு மோதுகிறது என்றால் அவசியம் சப்தம் எழும். ஆனால் இங்கு சப்தம் எழ முடியாது. ஏன்? ஏனென்றால் இங்கு இடையில் தந்தை இருக்கிறார். எங்கு இடையில் தந்தை வந்து விட்டாரோ அங்கு சப்தம் இருக்குமா? எப்பொழுது இடையிலிருந்து தந்தையை அகற்றி விடுகிறீர்களோ அப்பொழுது மோதல் ஏற்படுகிறது, சப்தம் எழுகிறது. எனவே எப்பொழுதும் தந்தையை உடன் வைத்துக் கொள்ளுங்கள். தந்தை உடன் இருக்கிறார் என்றால், ஏதாவது ஒரு விஷயம் நடந்தது என்றாலும் சரியாகி விடும். பொதுவாகவே இரண்டு பேர்களின் விஷயத்தில் மூன்றாவது நபர் இடையில் வருகிறார் என்றால் விஷயம் முடிந்து விடுகிறது இல்லையா? அதுபோலவே தந்தையை இடையில் வைத்தீர்கள் என்றால் விஷயம் வளராது, முடிவு ஏற்பட்டு விடும்.



    இல்லறத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் உடலின் சம்மந்தத்தில் விலகியவராக இருங்கள், அப்பொழுது தான் தூய்மையான இல்லற மார்க்கம் என்ற பங்கைச் செய்ய முடியும். நான் ஆண், இவர் பெண் என்ற இந்த உணர்வுகள் கனவில் கூட வர முடியாது. ஆத்மா சகோதரன் சகோதரன் என்றால், ஆண், பெண் எங்கிருந்து வந்தார்கள். தம்பதியோ நீங்கள் மற்றும் தந்தை தான் இல்லையா, பிறகு இவர் என்னுடைய ஜோடி (யுகல்) என்று அப்படி எப்படி கூற முடியும்? இதுவோ ஒரு காரணத்திற்காக சேவைக்காக மட்டும் இருக்கிறது மற்றபடி இணைந்த ரூபமோ நீங்களும் தந்தையும் தான். இருந்தாலும் தைரியம் வைத்ததற்காக பாப்தாதா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். தைரியத்துடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள், மேலும் சென்று கொண்டே இருப்பீர்கள். இந்த தைரியத்திற்கு வாழ்த்துக்கள்!



    குமாரர்களுடன் -

    தன்னை எப்பொழுதும் இராஜரிஷி என்று நினைக்கிறீர்களா? அதிகாரி மற்றும் ரிஷி அதாவது தபஸ்வி. சுயத்தின் இராஜ்யம் பிராப்தி ஆவதினால் இயல்பாகவே தபஸ்வி ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால், எப்பொழுது சுயத்தின் இராஜ்யம் இருக்கிறது என்றால் சுயத்தை ஆத்மா என்று புரிந்து கொள்வதால் தந்தையின் குழந்தை ஆவதால், இதுவே தபஸ்யா ஆகிவிடுகிறது. ஆத்மா தந்தையின் குழந்தை ஆனது என்றால் தபஸ்வி ஆனது. அப்படி இராஜ்யமும் இருக்கிறது மேலும் ரிஷியர்கமம் இருக்கிறீர்கள். அனைவரும் சுயராஜ்ய அதிகாரியாக ஆகியிருக்கிறீர்களா? எந்தவொரு கர்மேந்திரியமும் தன் பக்கம் ஈர்க்கக்கூடாது, எப்பொழுதும் தந்தையின் பக்கம் ஈர்க்க வேண்டும். எந்தவொரு நபர் மற்றும் பொருளின் பக்கம் கவர்ச்சி செல்ல வேண்டாம். அந்த மாதிரியான இராஜ்ய அதிகாரி தபஸ்வி குமாராக இருக்கிறீர்களா? முற்றிலும் வெற்றி அடைபவராக இருக்க வேண்டும். ஏனென்றால், வாயுமண்டலமோ கலியுகம் தான் இல்லையா? மேலும் உடன் இருப்பவர்களும் அன்னப்பறவை மற்றும் கொக்குகளாக இருக்கிறார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துகொண்டே சுயராஜ்ஜியம் உடையவராக இருந்தீர்கள் என்றால் தான் பாதுகாப்பாக இருப்பீர்கள். கொஞ்சம் கூட உலகின் வைப்ரேஷனின் ஈர்ப்பு இருக்கலாகாது. எந்த புகாரும் இன்றி எப்பொழுதும் முழுமையானவராக இருக்க வேண்டும். குமாரர்களின் புகார் வருகிறது. ஒருவேளை குமார் வெற்றி அடைபவர் ஆகிவிடுகிறார் என்றால், அனைவரையும் விட மகான் ஆகிவிடுகிறார் ஏனென்றால் அரசாங்கமும் இளைஞர்களை முன்னேற்றுகிறது. அதிலேயும் குமாரர்கள் அதிகமாக இருப்பார்கள். குமார் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் மிகுந்த சக்தி இருக்கிறது. ஆனால் சக்தியை வீணாக இழக்கவில்லையே. எண்ணம் மற்றும் கனவில் தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்றிருந்தால் தான் நம்பர் ஒன் குமார் என்று கூறுவோம். குமார் தடையற்றவர் ஆகிவிடுகிறார் என்றால் அனைவரையும் தடையற்றவராக ஆக்க முடியும். குமாரர்களின் பட்டமே விக்ன விநாஷக். எந்த விதமான விக்னம் அதாவது தடை - எண்ணம், சொல், செயல் அப்படி எந்த விதமான விக்னத்தின் வசமானவராக இருக்க வேண்டாம். எனவே தான் குழந்தைகளின் பட்டம் விக்ன விநாஷக். கணேஷ் குழந்தை தான் இல்லையா. அப்படி உங்களுடைய நினைவாக விக்ன விநாஷக் என்ற பெயர் பிரசித்தி ஆகி இருக்கிறது. நடைமுறையில் இருந்திருக்கிறீர்கள் அதனால் தான் நினைவுச் சின்னமும் உருவாகியது. விக்ன விநாஷக் ஆவதினால் இயல்பாகவே மனதின் எண்ணங்கள் மூலமாக சேவை நடந்து கொண்டே இருக்கும். வாயுமண்டலமும் தடையற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். எப்படி தத்துவங்கள் காரணமாக பருவமும் மாறுகிறது அதே போல் விக்ன விநாஷக் குழந்தைகள் காரணமாக வாயுமண்டலமும் மாறி விடும். எனவே நாலாபுறங்களிலும் விக்ன விநாஷக்கின் அலை பரவி விட வேண்டும். நான் வெற்றி அடையும் வாயுமண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தையே எப்பொழுதும் வையுங்கள். எப்படி சூரியன் அதுவே சக்திசாலியாக இருக்கிறது என்றால் நாலாபுறங்களிலும் தன்னுடைய சக்தி மூலமாக பிரகாசத்தைப் பரப்புகிறது, அந்த மாதிரியே சக்தி நிறைந்தவராக ஆகுங்கள். குமாரர்களுக்கு அவசியம் ஏதாவது ஒரு வேலை தேவையாக இருக்கிறது. ஒருவேளை குமார் எந்த வேலையுமின்றி இருக்கிறார் என்றால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. குமார் பிஸியாக இருக்கிறார் என்றால், அது அவருக்கும் நன்மை, உலகிற்கும் நன்மை! எனவே விக்ன விநாஷக் ஆகி, வாயுமண்டலத்தை உருவாக்குவதில் பிஸியாக இருங்கள். தன்னுடைய விசேஷத்தை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். ஒவ்வொரு குமாரும் அனேகர்களுக்கு சஞ்சீவினி மூலிகை கொடுக்கக்கூடிய மகாவீர் அதாவது மூர்ச்சையாகி இருப்பவர்களை மீண்டும் உணர்வில் கொண்டு வருபவர்களாக இருக்க வேண்டும். தன்னுடைய இந்தக் காரியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எப்படி உலகீய வேலை மறப்பதில்லையோ அதே போல் இந்த ஆன்மீக வேலையும் எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். சங்கமயுகத்தில் தந்தை மூலமாக என்னவெல்லாம் பட்டம் கிடைத்திருக்கின்றனவோ அதன் நினைவில் இருங்கள். பட்டம் நினைவில் வருவதினால் இயல்பாகவே ஞானம் மற்றும் ஞானத்தை வழங்குபவர் இருவர்களின் நினைவு வந்து விடும். நல்லது.



    வரதானம் –

    தன்னுடைய சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்வதின் (வர வழைப்பதின்) மூலமாக வருவது போவது என்ற சக்கரத்திலிருந்து விடுபடக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆகுக.



    இப்பொழுது தன்னுடைய சம்பூர்ண நிலை மற்றும் சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்யுங்கள். பிறகு அதே சொரூபம் எப்பொழுதும் நினைவில் இருக்கும். பின்பு சில நேரம் உயர்ந்த நிலை, சில நேரம் தாழ்ந்தை நிலையில் வந்து போவதற்கான சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கிறது, அடிக்கடி நினைவு மற்றும் நினைவிழந்த நிலையின் சுழற்சியில் வருகிறீர்கள், இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அவர்கள் பிறப்பு இறப்பின் சக்கரத்திலிருந்து விடுபட விரும்புகிறார்கள், மேலும் நீங்கள் வீணான விஷயங்களிலிருந்து விடுபட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆகிவிடுகிறீர்கள்.



    சுலோகன்:

    ஏதாவது தடையின் வசம் ஆவது என்றால், வைரத்தில் கரை ஏற்படுத்துவது!


    ***OM SHANTI***