BK Murli 27 September 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 27 September 2016 Tamil

    27.09.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! நீங்கள் அறிவாளியாக ஆகி உள்ளீர்கள் என்றால் சம்பாத்தியத்தில் மிக மிக ஆர்வம் இருக்க வேண்டும். தொழில் ஆகியவற்றிலிருந்து கூட நேரத்தை ஒதுக்கி தந்தையை நினைவு செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் சம்பாத்தியம் ஆகிக் கொண்டே இருக்கும்.



    கேள்வி:

    எப்பொழுதுமே கிடைக்காத எந்த ஒரு அப்பேர்ப்பட்ட ஸ்ரீமத் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கிடைக்கிறது?



    பதில்:

    (1) இனிமையான குழந்தைகளே ! அதிகாலை எழுந்து தந்தையின் நினைவில் அமர்ந்தீர்கள் என்றால் முழு ஆஸ்தி கிடைக்கும் என்று இச்சமயத்தில் தந்தை உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார். (2) இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தாமரை மலர் போல இருங்கள் என்ற அப்பேர்ப்பட்ட ஸ்ரீமத் மற்ற சத்சங்கங்களில் ஒரு பொழுதும் கிடைக்க முடியாது. அந்த சத்சங்கங்களில் தந்தை மற்றும் ஆஸ்தியின் விஷயம் கிடையாது.



    பாடல்:

    தந்தையும் நீயே, தாயும் நீயே.. .. ..



    ஓம் சாந்தி.

    இந்த பாரதத்தில் குறிப்பாக மற்றும் பொதுவாக முழு உலகத்தில் அநேக விதமான சத்சங்கங்கள் இருக்கின்றன. நாம் இந்த ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது மனிதர்களின் புத்தியில் இருக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு சத்சங்கம் அல்லது சர்ச் அல்லது கோவிலும் கிடையாது. இங்கு குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். நாம் நமது தந்தையிடமிருந்து சுகதாமத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையுடன் எல்லா சென்டர்களிலும் தங்களுடைய எல்லையில்லாத தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளார்கள். இது போல வேறு எந்த சத்சங்கம் அல்லது சர்ச் ஆகிய இடங்களில் புரிந்திருக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் தான் உள்ளது. நாம் எல்லையில்லாத தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். புதிய உலகமான சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இத்தனை ஏராளமான குழந்தைகள் விருத்தி அடைந்து கொண்டே இருக்கிறார்கள். அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் ஸ்ரீமத் கிடைக்கிறது. நாம் பாபாவிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெறக் கூடியவர்கள் ஆவோம். நாம் அந்த தந்தையினுடையவராக ஆகி உள்ளோம். தந்தையிடமிருந்து ஆத்மாவிற்கு இப்பொழுது அறிமுகம் கிடைத்துள்ளது. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை வழிகாட்டுகிறார். மேலும் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல தூய்மையாக இருங்கள். எல்லோருமே இங்கு வந்து ஒன்றும் அமர வேண்டியதில்லை. பள்ளிக் கூடத்தில் படித்து விட்டு பின் அவரவர் வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். ஒவ்வொரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் தங்களுடைய ஆசிரியரிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியும். இதுவும் அவ்வாறே ஆகும். தினமும் படித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்று தாராளமாக தொழில் ஆகியவைகளைச் செய்யுங்கள். நீங்கள் இல்லற விவாகரங்களிலும் இருக்கிறீர்கள். பின் மாணவர்களும் ஆவீர்கள். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல ஆக வேண்டும். இது போல எந்த சந்நியாசி ஆகியோரும் கூறுவதில்லை. இங்கு நீங்கள் பிராக்டிகலாக (நடைமுறையில்) அமர்ந்துள்ளீர்கள். இல்லறத்தில் இருந்தபடியே தூய்மை ஆகிறீர்கள். தூய்மையாக ஆகி பரமபிதா பரமாத்மாவை வேறு யாரும் நினைவு செய்வதில்லை. கீதை கேட்கிறார்கள், படிக்கிறார்கள் என்றாலும் கூட நினைவோ செய்வது இல்லை அல்லவா? சொல்வதிலும் செய்வதிலும் வித்தியாசம் உள்ளது. நமது தந்தை ஞானம் நிறைந்தவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரிடம் முழு நாடக சக்கரத்தின் ஞானம் உள்ளது. இப்பொழுது நமக்கு கூட ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சக்கரம் மிகவும் நன்றாக உள்ளது. இது புருஷோத்தம யுகம் ஆன காரணத்தால் உங்களுடைய இந்த ஜன்மம் கூட புருஷோத்தமமானது ஆகும். கூடுதலான மாதம் இருக்கிறது அல்லவா?



    நாம் உண்மையில் தந்தை மூலமாக புருஷோத்தமர் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் மீண்டும் மரியாதா புருஷோத்தமராக ஆகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் 84ன் சக்கரம் சுற்றினோம் என்னும் ஞானம் புத்தியில் உள்ளது. வேறு எந்த சத்சங்கத்திலும் இதை புரிய வைப்பதில்லை. நாம் இது போல ஆக வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அவ்வாறு ஆக்குபவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இந்த இலட்சுமி நாராயணரின் படத்தின் மீது நீங்கள் மிகவும் நல்ல முறையில் புரிய வைக்க முடியும். உண்மையில் பிரம்மா மூலமாக யோக பலத்தினால் இவர்கள் இந்த பதவியை அடைந்துள்ளார்கள். இது போல புத்தியில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரம்மா சரஸ்வதி, இலட்சுமி நாராயணரின் இரண்டு ரூபங்கள் காண்பித்துள்ளார்கள். பிரம்மா சரஸ்வதி பிறகு பிரஜைகளும் காண்பிக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு விஷயத்தின் மீதும் நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் இது போல ஆவீர்கள் என்று பிரம்மாவிற்கும் கூறுகிறார். அதாவது என்னை நினைவு செய்யுங்கள் என்று பிரம்மா முகவம்சாவளி அனைவருக்கும் கூறினார். எப்படி நினைவு செய்ய வேண்டும் என்பது கூட புத்தியில் உள்ளது. படங்களும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது புரிய வைப்பது மிகவும் சுலபம் ஆகும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கண்காட்சியில் கூட இது பற்றிப் புரிய வையுங்கள். உண்மையில் இவர் அனைவரின் எல்லையில்லாத தந்தை ஆவார் என்ற நிச்சயம் ஏற்படுகிறது. இந்த கணக்குப்படி நமக்கு எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்க வேண்டும். நிராகாரி ஆத்மாக்களாகிய நாமோ சகோதர சகோதரர்கள் ஆவோம். சாகாரத்தில் வரும் பொழுது நாம் சகோதர சகோதரி ஆகிறோம். அப்பொழுது தான் படிக்க முடியும். பிரம்மாவின் குழந்தைகள் தான் சகோதர சகோதரி ஆகிறார்கள். ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. இதை புத்தியில் பதிய வைக்க வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் புரிய வையுங்கள். முதலில் தந்தையின் அறிமுகம் கொடுங்கள். நாம் சகோதரர்கள் ஆவோம். சர்வவியாபி என்று கூறினால் எல்லோரும் தந்தை ஆகி விடுகிறார்கள். பின் தந்தையர்களுக்கு ஆஸ்தி எங்கிருந்து கிடைக்கும். தந்தை தந்தை என்று கூறி விழுந்து கொண்டே வந்துள்ளார்கள். ஆஸ்தி எதுவும் இல்லை. இப்பொழுது சகோதரத்துவம் என்று உணரும் பொழுது தான் ஆஸ்தி கிடைக்கும். எனவே அது பற்றி நல்ல முறையில் புரிய வைப்பதால் புத்தியில் பதிந்து விடும். அஷ்ட தேவதைகள் போன்ற விஷயங்கள் எல்லாம் நீங்கிப் போய் விடும். இரண்டு தந்தையர்கள் உள்ளார்கள் என்று கூறுங்கள். எந்த ஒரு ஆன்மீக தந்தையிடமிருந்து அனைவருக்கும் சத்கதி கிடைக்கிறதோ, அவரே சுகம் சாந்தியின் ஆஸ்தி கொடுக்கிறார். எல்லோருமே சுகமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். அவருக்கு ஹெவென்லி காட்ஃபாதர், சொர்க்கத்தை படைப்பவர் என்று கூறப்படுகிறது. முதலில் தந்தையின் தாக்கத்தை புத்தியில் பதிய வைக்க வேண்டும். இவர் ஆத்மாக்களின் எல்லையில்லாத தந்தை ஆவார். அவருக்கு பதீத பாவனர் என்று கூறுகிறார்கள். ஆத்மாவாகிய நீங்கள் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் ஆவீர்கள். இந்த நிச்சயத்தைப் பக்குவப்படுத்துங்கள். அடிப்படை விஷயமான இதை முதலில் புத்தியில் பதிய வைக்க வேண்டும். இதை புரிந்து கொண்டீர்கள் என்றால் குஷியின் அளவு அதிகரிக்கும். மேலும் நாங்கள் தந்தையை அவசியம் நினைவு செய்வோம் என்று கூறுவார்கள். நாம் தந்தையை நினைவு செய்து உலகத்தின் அதிபதி ஆகிடுவோம் என்று எங்களுக்கு நிச்சயம் ஏற்படுகிறது. இந்த குஷி நிறைய இருக்கும். அறிவுள்ளவராக இருக்கிறார். மேலும் புத்தியில் முழுமையாக நிச்சயம் இருந்தது என்றால் முதலில் தாதாவில் (பிரம்மா) இது போல வரக் கூடிய எல்லையில்லாத தந்தையை சந்திக்க வேண்டும் என்று கூறுவார். சிவபாபா பிரம்மா மூலமாகத் தான் நம்மிடம் பேச முடியும். ஆத்மாவாகிய நீங்கள் அவரை சந்திக்கவில்லை என்றால் எப்படி நினைவு செய்ய முடியும். குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டால் தான் நினைவு இருக்கும். தத்து எடுக்கப்படவே இல்லை என்றால் எப்படி நினைவு இருக்கும்? முதலில் அவருடையவர் ஆகுங்கள். அப்பேர்ப்பட்ட தந்தையுடன் உடனே சந்திக்க வேண்டும். நீங்கள் தங்களை ஆத்மா என்று நினைக்கிறீர்களா என்று தந்தை கூட அதையே தான் கேட்பார். நான் ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை ஆவேன். சிவபாபா உங்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். எனது ஆத்மாவின் தந்தையே உங்களுடைய தந்தையும் ஆவார். உண்மையில் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் ஆவார் என்று உங்களுக்கு நிச்சயம் உள்ளதா? என்று அவர் கேட்கிறார். அவரே தான் ஆஸ்தி அளிப்பார். தூய்மையாகவும் ஆக வேண்டும். அவரைத் தவிர மற்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும். ஆத்மாவாகிய நீங்கள் வீட்டிலிருந்து தனியாக வந்திருந்தீர்கள் அல்லவா? எந்த ஒரு தேக, சம்பந்தமும் இருக்கவில்லை. ஆத்மா சரீரத்தில் பிரவேசம் செய்து பெரியவர் ஆகும் பொழுது தான் இவர் உங்களது தந்தை ஆவார். இவர் இன்னார் ஆவார் என்று அவருக்கு புரிய வைக்கப்படுகிறது. ஆத்மாவோ அனைத்து சம்பந்தங்களிலிருந்தும் விலகியது ஆகும். ஆத்மா சென்று விட்டால் நீங்கள் இறந்தால் உலகமே இறந்து விட்டது என்று கூறப்படுகிறது. இன்னொரு உடல் கிடைக்கும் வரையும் பந்தனமற்றதாக ஆகி விடுகிறது. தாயின் கர்ப்பத்தில் சென்று வெளியில் வந்த பிறகு அறிவுள்ளவர் ஆகும் பொழுது தான் சம்பந்தத்தின் விஷயமே வருகிறது. எனவே இங்கு கூட குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். உயிருடனிருந்தே அனைத்தையும் மறந்து விட வேண்டும். ஒரு தந்தையை நினைவு செய்வது - இது கலப்படமற்ற (அவ்யபிசாரி) நினைவு ஆகும். இதற்குத் தான் யோகம் என்று கூறப்படுகிறது. இங்கோ மனிதர்களுக்கு அநேகரின் நினைவு இருக்கும். உங்களுடையது (அவ்யபிசாரி) கலப்படமற்ற நினைவு ஆகும். இதற்கு தான் யோகம் என்று கூறப்படுகிறது. இந்த சரீரத்தின் சம்பந்தங்கள் அனைத்தும் முடியப் போகிறது என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. நமது சம்பந்தம் ஒரு தந்தையுடன் உள்ளது. தந்தையை எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ, விகர்மங்கள் விநாசமாகும். நண்பர்கள், உறவினர்களை நினைவு செய்வதால் ஏதாவது விகர்மம் ஆகி விடும் என்பதும் அல்ல. இல்லை. ஏதாவது அப்பேர்ப்பட்ட தவறான செயல் செய்வதால் தான் விகர்மம் ஏற்படும். மற்றபடி வேறு யாரையோ நினைவு செய்வதால் விகர்மம் ஆகாது. ஆம். நேரம் அவசியம் வீணாகும். ஒரு தந்தையை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசம் ஆகும். இது பாவங்களை அழிப்பதற்கான யுக்தி (வழி முறை) ஆகும். மற்றபடி சம்பந்தங்கள் ஆகியவையோ நினைவு இருக்கும். சரீர நிர்வாகத்தின் பொருட்டு தொழில் ஆகியவை எல்லாம் செய்யுங்கள். ஆனால் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் நினைவு செய்துக் கொண்டே இருங்கள். அப்பொழுது துரு நீங்கி போய் விடும். அடிப்படை விஷயமே இது தான். பதீத நிலையிலிருந்து பாவனம் எப்படி ஆவது என்பதை உள்ளுக்குள்ளேயே சிந்தனை செய்யுங்கள். தந்தையை நினைவு செய்ய வேண்டி உள்ளது. இல்லற விவகாரங்களில் இருக்க வேண்டும். சந்நியாசிகள் கூட சரீரத்தை விட்டு பின்னர் கிருஹஸ்திகளிடம் போய் ஜென்மம் எடுக்கிறார்கள். அப்படியின்றி ஜன்ம ஜன்மாந்திரத்திற்கு பாவனம் ஆகி விடுகிறார்கள் என்பதல்ல. இப்பொழுது நிர்விகாரி உலகமோ கிடையாது. இது விகாரி உலகம் ஆகும். இதிலிருந்து யாரும் வெளியேற முடியாது. விகாரி உலகத்தில் இருக்கும் காரணத்தால் ஏதாவது குறைகள் அவசியம் இருக்கும். மற்றபடி உலகமோ இருப்பதே இரண்டு. விகாரி உலகம் மற்றும் நிர்விகாரி உலகம். பாவன உலகத்தில் தேவதைகள் இருந்தார்கள். எனவே புரிய வைப்பது மிகவும் சுலபமாக இருக்கும். இந்த பதீத உலகம் இப்பொழுது அழியப் போகிறது. விநாசம் ஆவதற்கு முன்னதாக எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். தேகத்தின் சம்பந்தத்தை விடுத்து தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். மேலும் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் பாவனமாக ஆகி விடுவீர்கள். நீங்கள் என்னை பதீத பாவனர் என்று கூறுகிறீர்கள் அல்லவா? என்று தந்தை கூறுகிறார். கங்கையில் முழுக்கு போடுபவர்களோ நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பாவனம் ஆகி விடுவார்களா என்ன? கண்காட்சியில் மிகவும் நல்ல முறையில் புரிய வைக்க வேண்டி உள்ளது. பிரஜாபிதாவோ இங்கு தான் வேண்டும். கீழே இந்த பிரம்மா மற்றும் பிரம்மாகுமார் குமாரிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த விஷயங்களை நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். எவரொருவருக்கும் ஆணித்தரமாக புரிய வைக்க வேண்டும். திக்கி திணறி கூறினார்கள் என்றால் பெயரை கெடுத்து விடுவார்கள். எங்காவது நாம் குழம்புகிறோம் என்று பார்த்தீர்களானால் சரி கொஞ்சம் இருங்கள், நாங்கள் இன்னொரு சகோதரியை அனுப்புகிறோம் என்று கூறுங்கள். ஒருவரை விட ஒருவர் கூர்மையாக இருப்பார்கள் அல்லவா? கண்காட்சி மேளாவில் சரியாகப் புரிய வைக்கிறார்களா என்று மேற்பார்வையும் செய்ய வேண்டும். யாரும் வாதாடுவதில்லையே? நுழைவாயிலில் கூட அறிமுகம் உடையவர் இருக்க வேண்டும். அநேகவிதமானோர் வருகிறார்கள் அல்லவா? பெரிய மனிதர்களுக்கு அவசியம் மதிப்பு கொடுப்பார்கள். வித்தியாசமோ அவசியம் இருக்கும். இதில் இவர் மீது அன்பு இருக்கிறது. இவர் மீது இல்லை என்று வரக் கூடாது. இரண்டு விதமான பார்வை இருக்கிறது என்பதல்ல. இதற்கு இரண்டு விதமான பார்வை என்று கூறப்படுவதில்லை. இங்கு பெரிய மனிதர்களுக்கு உபசாரம் செய்யப்படுகிறது என்று நினைக்கிறார்கள். சேவை செய்யக் கூடியவர்களுக்கு உபசாரம் செய்வார்கள் அல்லவா? யாராவது வீடு கட்டினார் என்றால், அவசியம் உபசாரம் செய்வார்கள். உங்களுக்காகத் தானே வீடு அமைக்கிறார்கள் ! யார் உழைத்து ராஜா ஆகிறார்களோ அவர்களுக்கு பிரஜைகள் இயல்பாகவே உபசாரம் செய்வார்கள் அல்லவா? குறைந்த பதவி உடையவர்களை விட உயர்ந்த பதவி உடையவர்களுக்கு உபசாரம் கிடைக்கும் அல்லவா? முழு உலகத்தில் ஆத்மாக்கள் எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். ஆனால் பாரதத்தில் ஜன்மம் எடுத்துள்ளார். முதலில் உயர்ந்தவர்களாக இருந்த பாரதவாசிகள் இப்பொழுது தாழ்ந்தவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். எனவே நான் படிப்பிக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். நான் பாரதத்தில் வரும் பொழுது எல்லோருக்கும் நன்மை ஆகி விடுகிறது. குறிப்பாக மற்றும் பொதுவாக என்று இருக்கிறது அல்லவா? இப்பொழுது பாரதம் தான் நரகமாக உள்ளது. பிறகு சொர்க்கம் ஆகப் போகிறது. எனவே பாரதத்தில் தான் செல்வார் அல்லவா? வேறு இடங்களுக்கு போய் என்ன செய்வார். பாரதத்தில் தான் பக்தி மார்க்கத்தில் முதன் முதலில் சோமநாத்தின் பெரிய மேன்மையான கோவில் அமைத்திருந்தார்கள். எப்படி வெளி நாடுகளில் பெரியதிலும் பெரிய சர்ச் அமைக்கிறார்கள். ஏனெனில் போப் மூலமாக பெறப்பட்ட இராஜ்யம் ஆகும். எல்லா சர்ச்களும் ஒன்று போல இருப்பதில்லை. வரிசைக்கிரமமாகவோ இருக்கும் அல்லவா? சோமநாத்தின் கோவில் எவ்வளவு வைரம் வைடூரியங்களால் நிரம்பி இருந்தது. முகம்மதியர்கள் ஆகியோர் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்கள். மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள் சர்ச்லிருந்து என்ன கொள்ளையடிக்க முடியும். மனிதர்கள் பணத்திற்கு பின்னால் போகிறார்கள் அல்லவா? கஜினி முகம்மது எவ்வளவு எடுத்துக் கொண்டு சென்றார். பிறகு ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்கள் கூட இங்கிருந்து பணத்தை அவர்கள் நாட்டிற்கு அனுப்பிக் கொண்டே சென்றார்கள். நிறைய செல்வம் எடுத்துக் கொண்டு சென்றார்கள். இப்பொழுது அது உங்களுக்கு திரும்பக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் கொடுக்கிறார்கள். இவை எல்லாம் நேரம் வரும் பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது. கணக்கு இல்லை என்றால் இவ்வாறு எப்படி நடக்கும். இந்த நாடகம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். இந்த கொடுக்கல் வாங்கலின் கணக்கு எப்படி உள்ளது. பிறகும் குழந்தைகளாகி நீங்கள் இப்பொழுது சொர்க்கத்தின் அதிபதியாக வேண்டும். இந்த உலக சரித்திரம் - பூகோளம் எப்படி சக்கரம் சுற்றி வருகிறது என்பது கூட குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். பிறகும் குழந்தைகளே மன்மனாபவ என்று கூறுகிறார். இவை எல்லாமே மீண்டும் நடைபெறும். ஒவ்வொரு பொருளும் சதோ நிலையிலிருந்து தமோபிரதானமாக ஆகி விடும். பகலில் தொழில் ஆகியவை செய்கிறீர்கள். அந்த நேரத்தை விடுங்கள். மீதி எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ என்னை நினைவு செய்யுங்கள். தொழில் ஆகியவற்றில் கூட அவ்வப்பொழுது நேரம் கிடைக்கிறது. ஒரு சிலருடைய சேவை எப்படி இருக்கிறது என்றால் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். அவ்வளவு தான். இப்படி கூட மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். பிறகும் இரவோ நம்முடையது தான். பகலில் சரீர நிர்வாகத்திற்காக சம்பாத்தியம் செய்கிறீர்கள். இரவில் பிறகு இந்த சம்பாத்தியம் செய்யுங்கள். இது வருங்கால 21 பிறவிகளுக்கானது ஆகும். ஒரு நாழி அல்லது அரை நாழி கூடுமானவரையும் தந்தையின் நினைவில் இருந்தீர்கள் என்றால், உங்களுக்கு நிறைய சம்பாத்தியம் ஆகும். அறிவுள்ளவராக யார் இருக்கிறார்களோ அவர்கள் உண்மையில் நிறைய சம்பாத்தியம் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருப்பார்கள். நாங்கள் இவ்வளவு நேரம் நினைவு செய்தோம் என்று ஒரு சிலர் சார்ட் கூட எழுதுகிறார்கள். அஞ்ஞான காலத்தில் ஒரு சிலர் தங்கள் தினசரியை எழுதுகிறார்கள். நீங்கள் கூட சார்ட் எழுதினீர்கள் என்றால் கவனம் இருக்கும். எந்த ஒரு நேரமும் வீணாகி விடுவது இல்லையே? எந்த ஒரு விகர்மமும் செய்யவில்லையே? நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. வேற்றுமையின் பாவனையை நீக்கி அனைவர் மீதும் மதிப்பு கொள்ள வேண்டும். எவரொருவருக்கும் உள்ளப்பூர்வமாக புரிய வைக்க வேண்டும். சம்பாத்தியத்தில் மும்முரமாக இருக்க வேண்டும்.



    2. உயிருடனிருந்தே அனைத்தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். சரீர நிர்வாகத்தின் பொருட்டு கர்மம் கூட செய்ய வேண்டும். கூடவே அறிவுள்ளவர் ஆகி அழியாத சம்பாத்தியம் கூட சம்பாதிக்க வேண்டும். நினைவின் சார்ட் வைக்க வேண்டும்.



    வரதானம்:

    தனது பவர்ஃபுல் உள்ளுணர்வு மூலமாக பதீதமான வாயு மண்டலத்தை பரிவர்த்தனை செய்து விடும் மாஸ்டர் பதீத பாவனி ஆவீர்களாக.



    எப்பேர்ப்பட்ட வாயுமண்டலம் இருந்தாலும் சரி, ஆனால் சுயத்தினுடைய சக்திசாலி விருத்தி (உள்ளுணர்வு) வாயுமண்டலத்தை மாற்றி விட வேண்டும். வாயுமண்டலம் விகாரியாக இருக்கலாம். ஆனால் சுயத்தின் உள்ளுணர்வு நிர்விகாரியாக இருக்க வேண்டும். யார் பதீதர்களை பாவனமாக ஆக்கக் கூடியவர்களோ அவர்கள் பதீதமான வாயுமண்டலத்திற்கு வசப்பட்டு போய் விட முடியாது. மாஸ்டர் பதீத பாவனி ஆகி சுயத்தின் சக்திசாலி விருத்தி மூலமாக அபவித்திரமான அல்லது பலவீனமான வாயுமண்டலத்தை நீக்கி விடுங்கள். அதனை வர்ணித்து வாயுமண்டலத்தை உருவாக்காதீர்கள். பலவீனமான அல்லது பதீத வாயு மண்டலத்தை வர்ணனை செய்வது கூட பாவம் ஆகும்.



    சுலோகன்:

    இப்பொழுது பூமியில் பரமாத்ம அறிமுகம் என்ற விதையை போட்டீர்கள் என்றால் பிரத்யட்சதா (வெளிப்பாடு) ஆகி விடும்.



    ***OM SHANTI***