BK Murli 4 September 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 4 September 2016 In Tamil

    04.09.2016    காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ்     11.11.1981    மதுபன்

    '' பிந்துவின் (புள்ளியின்) மகத்துவம் ''


     இன்று அன்புக்கடல் தந்தை தன்னுடைய அன்பிற்குரிய, சினேகமான குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். தந்தை மேல் இருக்கும் அன்பின் காரணமாக தொலைதூரங்களிலிருந்து சந்திக்கும் இடத்திற்கு ஓடி வந்து சேர்ந்து விட்டார்கள். பாப்தாதாவும் அந்த மாதிரி அன்பாக இருக்கும் ஆத்மாக்களின் அன்பிற்கான பிரதிபலனாக அன்பு மற்றும் சகயோகத்தை எப்பொழுதும் அளிக்கிறார், இப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

     

    அனைத்து ஸ்தானங்களில் இருக்கும் அன்பு நிறைந்த ஆத்மாக்கள் இப்பொழுதும் சூட்சும ஃபரிஷ்தாக்களின் ரூபத்தில் இந்த சந்திப்பு நடக்கும் சபையில் நேரெதிரில் இருக்கிறார்கள். பாப்தாதா இரண்டு சபைகளை பார்க்கிறார். ஒன்று ஸ்தூலமான உடலில் இந்த பூமியில் அமர்ந்திருப்பவர்கள், அடுத்தவர்கள் ஒளிவடிவமான உடலில் இருப்போர். அவர்களுக்கு இந்த பூமியின் அவசியம் இல்லை, பூமியிலிருந்து மேலே ஒளி ரூபத்தில் ஒளி வடிவமான உடலில் இருப்பவர்கள். அந்த மாதிரியானவர்கள் குறைந்த இடங்களில் அதிகமாக தென்படுகிறார்கள். ஆக அந்த மாதிரி இரண்டு சபைகளையும் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

     

    பாப்தாதா குழந்தைகளின் அன்பின் சக்தியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்பின் சக்தியின் ஆதாரத்தில் ஒரு நொடியில் எவ்வளவு தான் தூரமான இடத்திலிருந்தும் அருகில் வந்து சேர்ந்து விடுகிறார்கள். எந்த அளவு அன்பின் சக்தி மகானாக இருக்கிறதோ, அந்த அளவே நேரெதிரில் வந்து சேர்வதற்கான வேகமும் மகானாக இருக்கிறது. எத்தனை விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் எதிரில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இரத்தினத்தின் மகிமையும் மகானாகும். எந்தெந்த மகாரதியை வர்ணனை செய்வது ! விளக்கொளியின் மேல் விட்டில் பூச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து குழந்தைகளுக்கும் எப்பொழுதும் சகஜயோகி ஆகுக என்ற வரதானத்தை பாப்தாதா கொடுக்கிறார். ஒரு பிந்தியை (புள்ளியை) மட்டும் நினைவு செய்யுங்கள். மிகவும் எளிதாக இடப்படும் மாத்திரை புள்ளி. பாப்தாதா புள்ளியின் கணக்கைத் தான் கூறுகிறார். நீங்களும் பிந்து ரூபம் ஆகுங்கள், நினைவும் பிந்துவை செய்யுங்கள். மேலும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் தெரிந்து, செய்த பிறகு புள்ளி மாத்திரை இட்டு விடுங்கள். ஒரு பிந்துவின் மாத்திரையில் நீங்கள், தந்தை மற்றும் படைப்பு, அனைத்தும் வந்து விடுகிறது. அப்படி தெரிந்து கொள்ள வேண்டியதே எது? 'பிந்து'. செய்ய வேண்டியதும் எது? 'பிந்துவை நினைவு செய்வது'. இந்த பிந்துவின் மாத்திரையின் மகத்துவத்தை தெரிந்து நிரந்தர சகஜயோகி ஆக முடியும். எவ்வளவு தான் பெரிய விஸ்தாரமானதாக இருந்தாலும் எல்லாம் அடங்கியிருப்பது ஒரு பிந்துவில். விதை பிந்து, அதில் தான் முழு மரமும் அடங்கியிருக்கிறது. ஆத்மா பிந்து, அதில் தான் 84 ஜென்மங்களின் சம்ஸ்காரம் நிரம்பியிருக்கிறது. 5000 வருடங்களின் நாடகத்தை இப்பொழுது சங்கமயுகத்தின் இறுதி நேரத்தில் முடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நாடகத்தின் சக்கரம் முழுமையானது அதாவது சக்கரத்தில் என்ன நடந்து முடிந்து விட்டதோ அதற்கு முற்றுப்புள்ளி அதாவது பிந்தி இடுங்கள். பிந்தி ஆகி இப்பொழுது வீடு செல்ல வேண்டும். பிந்துவுடன் பிந்து ஆகி செல்ல வேண்டும். வீடும் அனைத்து பிந்துக்களின் வீடு. எண்ணம், காரியம், சம்ஸ்காரம் அனைத்தும் உள்ளடங்கி அதாவது புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. முடிந்தது என்பதின் மாத்திரையே பிந்து. அனைத்து குணங்கள், அனைத்து ஞானத்தின் பொக்கிஷங்களின் கடல் . . . ஆனால் கடலும் பிந்துவாக இருக்கிறார். உறவு மற்றும் தொடர்பிலும் வருகிறீர்கள் என்றால் அனைவரின் நெற்றியில் எது மின்னிக்கொண்டிருக்கிறது. பிந்து. அனைத்து காரியங்களையும் செய்வது எது? பிந்து தான் இல்லையா? பூமியிலிருந்து சந்திரன் வரை சென்றடைந்தாலும் கூட சென்றடைந்தது பிந்து தான் இல்லையா ! நீங்கள் அமைதியின் சக்தி மூலம் மூன்று உலகங்கள் வரை சென்றடைந்தாலும் கூட, சென்றடைந்தது யார்? பிந்து. அறிவியலின் சக்தி அல்லது அமைதியின் சக்தி, படைக்கும் அல்லது உருவாக்கும் சக்தி மற்றும் நிர்வாணத்தில் (பரந்தாமம்-சரீரத்தைக் கடந்து) செல்வதற்கான சக்தி என்றால், பிந்து தான் இல்லையா? விதையிலிருந்து இந்த அளவு மரம் வளர்ச்சியை அடைகிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த பிறகு எதில் சென்று உள்ளடங்குகிறது? விதை அதாவது பிந்துவில். எனவே தொடக்கமும் முடிவுமற்றது மற்றும் அழியாதது பிந்துவே தான் இல்லையா? நீங்களும் மூன்று காலங்களின் ஞானம், மூன்று உலகங்களின் ஞானத்தை பிராப்தியாக அடைகிறீர்கள். ஆனால் பிராப்தி செய்வது யார்? 'பிந்து'. தொடக்கத்திலிருந்து இறுதி வரை விதவிதமான பங்கைச் செய்தீர்கள். ஆனால் பங்கைச் செய்பவர் யார்? யார் இந்த கதாபாத்திரத்தைச் செய்தார்? பிந்து இல்லையா? அப்படி அனைத்து மகத்துவமும் பிந்துவிற்குத் தான். மேலும் பிந்துவைத் தெரிந்து கொள்வது என்றால் அனைத்தையும் தெரிந்து கொள்வது. அனைத்தையும் அடைந்தீர்கள். பிந்து ரூபத்தில் நிலைத்திருந்து எந்த எண்ணத்தை உருவாக்குகிறீர்கள், என்ன பாவனை வைக்கிறீர்கள், என்ன வார்த்தை பேசுகிறீர்கள், என்ன காரியம் செய்கிறீர்களோ, எப்படி பிந்து மகானாக இருக்கிறதோ, அதே போல் அனைத்து விஷயங்களும் மகான் ஆகிவிடுகிறது. அதாவது இயல்பாகவே உயர்ந்ததாக ஆகிவிடுகிறது.

     

    ஆத்மீக சக்தியும் பிந்து. எது ஸ்தாபனையின் சக்தி மற்றும் விநாஷம் செய்யும் அணு சக்தியும் பிந்து. விநாஷமும் பிந்து மூலம் நடக்கிறது, ஸ்தாபனையும் பிந்து மூலம் நடக்கிறது. சிருஷ்டி சக்கரத்தின் தொடக்கத்திலும் பிந்து ஆகி கீழே இறங்குகிறீர்கள். மேலும் இறுதியிலும் பிந்து ஆகிவிடுகிறீர்கள். அப்படி தொடக்கம் மற்றும் இறுதியின் சொரூபமும் பிந்து ஆனது. எவ்வளவு சுலபமாகிவிட்டது. ஒரு பிந்துவை நினைவு செய்வது கடினமா என்ன? பள்ளியில் கூட சிறு குழந்தைகள் சுலபமாக பிந்து மாத்திரையை இட முடியும். எங்கேயாவது பென்சிலை வைத்தார்கள் என்றால் பிந்து இடப்பட்டு விடும். இந்த அளவு சுலபமான மாத்திரை நினைவில் இருப்பதில்லையா? இதை விட சுலபமானது வேறு என்ன கூற முடியும் ! இதை விட சுலபமானது வேறு ஏதாவது இருக்கிறதா? பக்தியிலோ மிகப்பெரிய ரூபத்தை நினைவு செய்கிறார்கள். புத்தியின் பாவனை மூலமாக சித்திரத்தை உருவாக்குகிறார்கள், அப்பொழுது பக்தி சித்தி ஆகிறது. இங்கோ ஞானம் மூலமாக எதை மட்டும் எதிரில் வைக்கிறோம்? பிந்து. இந்த பிந்துவின் நினைவு மூலமாக நீங்களே சித்தி சொரூபம் ஆகிவிடுகிறீர்கள். அப்படியானால் சுலபமானதாக எது ஆனது? புத்தியில் புள்ளி வைப்பதா அல்லது உருவத்தை வெளிப்படுத்துவதா? எனவே சகஜயோகி ஆகுங்கள். பிந்துவைத் தெரிந்து கொண்டீர்கள் என்றால் எப்பொழுதும் சகஜம். அப்படி அன்பின் பிரதிபலனாக சுலபமான வழி மூலமாக சகஜயோகி ஆகுக ! அப்படியானால் அனைவரும் சகஜயோகி ஆகிவிட்டீர்கள் இல்லையா? விஸ்தாரத்தில் செல்கிறீர்கள் என்றால், கடினத்தில் சென்று விடுகிறீர்கள். ஏனென்றால் விஸ்தாரத்தில் செல்வதினால் கேள்விக்குறி அதிகமாக விழுந்து விடுகிறது. எனவே கேள்விக்குறி எப்படி வளைந்து நெளிந்து இருக்கிறது. அதே போல் என்ன என்ன என்ற கேள்விக்குறியின் வளைந்து நெளிந்த மார்க்கத்தில் சென்று விடுகிறீர்கள். பிந்து ஆகி விஸ்தாரத்தில் சென்றீர்கள் என்றால் சாரம் கிடைத்து விடும். பிந்துவை மறந்து விஸ்தாரத்தில் செல்கிறீர்கள் என்றால் காட்டில் சென்று விடுகிறீர்கள். அங்கு எந்த சாரமும் இருப்பதில்லை. பிந்து ரூபத்தில் நிலைத்திருப்பவர் சாரம் நிறைந்த, யோகம் நிறைந்த, யுக்தி நிறைந்த சொரூபத்தின் அனுபவம் செய்வார்கள். அவர்களின் நினைவு, பேச்சு மற்றும் காரியம் எப்பொழுதும் சக்தி நிறைந்ததாக இருக்கும். பிந்து ஆகாமல் விஸ்தாரத்தில் செல்பவர் எப்பொழுதும் ஏன், என்ன என்பதின் வீணான பேச்சு மற்றும் காரியத்தில் நேரம் மற்றும் சக்திகளையும் வீணாக இழப்பார்கள். ஏனென்றால் காட்டிலிருந்து வெளியேற வேண்டியதாக இருக்கிறது. அப்படியானால் எப்பொழுதும் என்ன நினைவில் வைத்துக் கொள்வீர்கள்? ஒரே ஒரு விஷயம் - பிந்து ! சுலபம் தான் இல்லையா? இதில் பாஷையை தெரிந்திருக்கிறீர்களோ அல்லது இல்லையோ, ஆனால் பிந்துவோ அனைத்து பாஷைகளிலும் இருக்கிறது. மேலும் வேறு எதையும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிந்து எனும் வார்த்தையையாவது தெரிந்து கொள்வீர்கள் !

     

    என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? பிந்து என்ற வார்த்தை தான் அற்புதம் செய்யும் வார்த்தை. மந்திர சக்தி நிறைந்த வார்த்தை. பிந்து ஆகுங்கள், மேலும் கட்டளை இட்டீர்கள் என்றால் அனைத்தும் தயாராக இருக்கும். எண்ணத்தின் கை தட்டினீர்கள் என்றால், மற்ற அனைவரும் தயார் ஆகிவிடுவார்கள். ஆனால் பிந்துவின் கைதட்டலை இயற்கையும் கேட்கும், அனைத்து கர்மேந்திரியங்களும் கேட்கும், மேலும் அனைத்து உடன் இருப்பவர்களும் கேட்பார்கள். பிந்துவாகி கைதட்டத் தெரியுமா? நல்லது.

     

    எப்பொழுதும் அனாதி, அழியாத சொரூபத்தின் ரூபத்தில் நிலைத்திருக்கும், பிந்துவின் மகத்துவத்தை தெரிந்து எப்பொழுதும் மகானாக இருக்கும், பிந்து சொரூபமாகி அனைத்து பொக்கிஷங்களின் சாரத்தை அடையும், சாரம் நிறைந்த யோகம் நிறைந்த ஜீவன்முக்த் ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

     

    டீச்சர்களுடன் சந்திப்பு –

    அனைவரும் ஆன்மீக சேவாதாரிகளா? ஆன்மீக சேவாதாரியின் அர்த்தமே ஆன்மீக பொக்கிஷங்களினால் நிரம்பியவர். அப்பொழுது தான் ஆன்மீக சேவாதாரியாக ஆக முடியும். சேவாதாரி என்றால் கொடுப்பவர். சேவை மூலமாக சுகம் கொடுப்பவர். இதைத் தான் சேவாதாரி என்று கூறுகிறோம். கொடுப்பவர் அவசியம் அவரே நிரம்பியவராக இருப்பார். அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். அப்படி சேவாதாரி என்றால் மாஸ்டர் சுகவள்ளல், மாஸ்டர் அமைதியின் வள்ளல், மாஸ்டர் ஞான வள்ளல். வள்ளல் எப்பொழுதும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். எப்படி அவர்களே இருப்பார்களோ அதே போல் மற்றவர்களையும் ஆக்குவார்கள். ஒருவேளை தனக்குள் ஏதாவது சக்தியின் குறை இருக்கிறது என்றால் மற்றவர்களையும் அனைத்து சக்திகளும் நிரம்பியவர்களாக ஆக்க முடியாது. ஆன்மீக சேவாதாரி என்றால் அனைத்து சக்திகளும் நிரம்பியவர். ஆன்மீக சேவாதாரி என்றால், எவரெடி (எப்பொழுதும் தயாராக இருப்பவர்) மேலும் ஆல்ரவுண்ட் (அனைத்து சேவைகளையும் செய்பவர்). ஆல்ரவுண்ட் சேவாதாரி தான் உண்மையான சேவாதாரி. நீங்களும் உண்மையான சேவாதாரியின் அனைத்து லட்சணங்களை தனக்குள் அனுபவம் செய்கிறீர்களா? யார் நிரம்பியவராக இருப்பாரோ அவர் எப்பொழுதும் திருப்தியாக இருப்பார், மேலும் அனைவரையும் திருப்திப் படுத்துவார். எந்தவிதமான பிராப்தியின்மையும் அதிருப்தியை உருவாக்கும். அனைத்து பிராப்திகளும் இருக்கின்றன என்றால், எப்பொழுதும் திருப்தி. திருப்தியாக இருப்பது மற்றும் திருப்திப்படுத்துவது என்பதற்கான விதி நிரம்பியவர் மற்றும் வள்ளலாக இருப்பது. இரண்டு விஷயங்களும் வேண்டும். யாராவது சம்பன்னமாக இருந்து ஆனால் வள்ளலாக இல்லாவிட்டாலும் திருப்தி செய்ய முடியாது. எனவே வள்ளலாகவும் இருக்க வேண்டும் மற்றும் நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

     

    நான் விசேஷ ஆத்மா என்ற இந்த குஷின்யர் அனைவருக்கும் இருக்கிறது தான் இல்லையா? முழு உலகத்தில் எவ்வளவு குறைந்த ஆத்மாக்கள் எப்பொழுதும் தந்தையின் சேவையில் ஈடுபட்டிருக்கும் பொறுப்பாளர் ஆகிறார்கள். அப்படி யார் கோடியில் சிலரோ, அந்த சிலரிலும் சிலரோ அந்த ஆத்மாக்கள் பொறுப்பாளர் ஆகிறார்கள். அதில் என்னுடைய பங்கும் இருக்கிறது மற்றும் என்னுடைய பெயரும் இருக்கிறது என்றால், இது எவ்வளவு பெரிய குஷிக்கர்ன விஷயம். கோடியில் சிலர் அந்த சிலரிலும் சிலர் என்ற இந்த மகிமை என்னுடையது தான் என்ற ஆன்மீக போதை இருக்கிறதா? ஆன்மீகப் போதை எப்பொழுதும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது, அந்த அளவே பணிவானவராகவும் ஆக்கும். தேக உணர்வின் போதை இருக்கிறது, என்றால் கர்வத்துடன், அபிமானத்துடன் தன்னை உயர்ந்தவர் என்று நினைப்பார். உண்மையான போதையில் இருப்பவர்கள் எப்பொழுதும் பணிவு நிறைந்தவர்களாக இருப்பார்கள். பணிவின் மூலமாகத் தான் அனைவரையும் தன் எதிரில் தலைவணங்க வைப்பார்கள். சுகம் கொடுப்பவர் பணிவு நிறைந்த ஆத்மாவாக ஆக முடியும். அபிமானம் பணிவு நிறைந்தவராக ஆக விடாது. பணிவு நிறைந்தவராக இல்லை என்றால், சேவை நடக்க முடியாது. அப்படி சேவாதாரியின் விசேஷமே எப்பொழுதும் பணிவு நிறைந்தவர். தான் வளைந்து கொடுப்பவராக இருப்பார். அப்பொழுது தான் மற்றவர்களையும் தலை வணங்க வைக்க முடியும். அப்படி நீங்கள் ஆன்மீக சேவாதாரிகள். ஆன்மீகம் என்ற வார்த்தையை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். அனைத்து காரியங்களையும் செய்து கொண்டே அதில் ஆன்மீகம் தென்பட வேண்டும். சாதாரண நிலை இல்லை, ஆன்மீகம் தென்பட வேண்டும்.

     

    திருப்தியான ஆத்மாவிற்குத் தான் சேவாதாரி என்ற பட்டப்பெயர் கிடைக்க முடியும். திருப்தி இல்லை என்றால் சேவையை வாங்குவீர்களா? அப்படி நீங்கள் சேவை வாங்குபவர்களா அல்லது சேவை செய்பவர்களா? ஆன்மீக சேவாதாரி வாங்குபவர்கள் அல்ல, இன்று இது நடந்தது, நேற்று இது நடந்தது . . . அந்த மாதிரி விஷயங்களின் பின்னால் நேரத்தை இழந்து சேவையை வாங்குவதில்லையே? இவை அனைத்தும் குழந்தைத் தனமான விஷயங்கள். இப்பொழுது குழந்தைத்தனம் முடிவடைந்தது. இப்பொழுது என்னென்ன வாங்கியிருக்கிறீர்களோ அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும். இப்பொழுது எந்தவொரு வழக்கு விசாரித்தலும் இருக்கக்கூடாது. பெரியவர்களின் அதிகப்படியான நேரத்தை எடுக்கக்கூடாது, கதை கட்டுரைகள் அனைத்தும் முடிந்தது. ஒருவேளை இதுவரையிலும் சேவை வாங்குபவர்களாக இருக்கிறீர்கள் என்றால், இன்றிலிருந்து அதை முடித்து விடுங்கள். புள்ளி இட்டு விடுங்கள். கடந்தது கடந்ததாகி விட்டது, புள்ளி இடப்பட்டது இல்லையா. அப்படி முடிவின் புள்ளியிட்டு விட்டு செல்லுங்கள். முற்றுப்புள்ளி வைத்து எப்பொழுதும் திருப்தியாக இருங்கள் மற்றும் அனைவரையும் திருப்தி படுத்துங்கள். இந்தப் பாடத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். நல்லது.

     

    நிர்மல் சாந்தா தாதியுடன் சந்திப்பு

    மகான் ஆத்மா என்றால் வெற்றி அடைபவர். அப்படி நீங்கள் எப்பொழுதுமே வெற்றி அடைபவர் தான் இல்லையா? யார் எவ்வளவு லேசாக இருக்கிறாரோ, அந்த அளவே சுலபமாக மற்றும் இயல்பாகவே காரியம் நடந்து விடும். யார் அதிகமாக காரியத்தின் சுமையை எடுக்கிறார் என்றால் சுமையின் காரணமாக நிர்ணய சக்தி வேலை செய்வதில்லை. எனவே வெற்றியில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. காரியம் செய்வதற்கு முன்பு எப்பொழுதும் டபுள் லைட் (லேசாக இருப்பது), வாயுமண்டலமும் லைட், தானும் லைட் ஆக, உடன் இருப்பவர்கள் அனைவரும் லைட் ஆக இருக்கிறார்கள் என்றால், லைட் ஹவுஸின் காரியம் நடந்தே விடுகிறது.

     

    ஆனால் எந்தவொரு காரியத்தையும் எப்பொழுது தொடங்குகிறார்களோ அப்பொழுது லட்சியத்தை சரியாக வைக்கிறார்கள். பிறகு இடையில் அந்த லட்சியம் உள்ளடங்கி விடுகிறது. தொடக்கம் சக்திசாலியாக இருக்கிறது, இடையில் சதவிகிதம் குறைந்து விடுகிறது. எப்படி தொடக்கத்தில் திட்டமிடும் நேரத்தில் கவனம் வைக்கிறீர்களோ அப்படி எப்பொழுது நடைமுறை காரியங்களில் பிஸியாகி விடுகிறீர்கள் என்றாலும், கவனம் இருக்க வேண்டும். முதல், இடை, கடை ஒரே சமமாக இருக்கிறது என்றால் வெற்றி சுலபமாக கிடைத்து விடும். நல்லது.

     

    இந்த தடவை மேளாவில் அமைதி குண்டத்தை உருவாக்குங்கள் அதன் மூலம் சப்தம் இருந்த போதிலும் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உள்உணர்வு மற்றும் அனுபவமே மாறி விட வேண்டும். (பாப்தாதா கல்கத்தாவில் வர வேண்டும்) அவசியம், ஆம் அதை நேரம் காண்பிக்கும். ஏனென்றால், குழந்தைகள் அழைத்து தந்தை வரவில்லை என்பது இருக்கவே முடியாது. ஆனால் எந்த முறையில் வருவார் என்று இதைப் பாருங்கள். ஏதாவது புதியது நடக்க வேண்டும் இல்லையா? நல்லது. என்ன செய்வீர்களோ அதில் வெற்றி கிடைத்து விடும், ஏனென்றால் உண்மையான உள்ளத்தின் மேல் எஜமானர் (சிவபாபா) எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறார். இந்த மேளாவும் தந்தையின் தரிசனம் காட்டும் ஸ்தானம் ஆகும். பக்தர்கள் தரிசனம் செய்வார்கள், ஆனால் குழந்தைகளோ சந்திப்பார்கள். நல்லது. இதுவும் தனக்காகவும் மற்றும் அன்னிய ஆத்மாக்களுக்காகவும் ஒரு சாதனம். பிராமணர்களும் ஊக்கம் உற்சாகத்தில் வந்து விடுகிறார்கள் மற்றும் அன்னியர்களுக்கும் சேவை நடந்து விடுகிறது.

     

    சங்கமயுகத்தின் இந்த காலமே உயர்ந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கானது. முழு கல்பத்திற்காக உயர்ந்ததிலும் உயர்ந்த எதிர்காலத்தை இப்பொழுது தான் உருவாக்க முடியும். சங்கமயுகத்தில் தான் தந்தை மூலமாக அனைத்து அதிகாரங்களும் பிராப்தி ஆகின்றன. அப்படி நீங்கள் அதிகாரி ஆத்மாக்கள், சிரேஷ்ட ஆத்மாக்கள், சிரேஷ்ட பிராப்தியை அடைபவர்கள். எப்பொழுதும் இதை நினைவில் வைத்தீர்கள் என்றால், சக்திசாலியானவராகி விடுவீர்கள். சக்திசாலி ஆவதினால் மாயாவை வென்றவர் ஆகிவிடுவீர்கள். சக்திசாலியான ஆத்மா விக்ன விநாஷக் ஆக இருப்பார். எண்ணத்தில் கூட விக்னம் (தடை) வர முடியாது. மாஸ்டர் சர்வ சக்திவான் விக்ன விநாஷக் ஆக இருப்பார். நல்லது.

     

    விடைபெறும் நேரத்தில்

    அனைவருமே அதிகமாக கேட்டிருக்கிறீர்கள், இன்னும் கேட்பதற்கு ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்ன? ஒரே ஒரு விஷயம் மட்டும் இருக்கிறது, அது என்ன? என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்தாகிவிட்டது, இன்னும் என்ன பாக்கி இருக்கிறது ! அனைத்தும் முடிவடைந்து விட்டதா? ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா? இப்பொழுது ஒரு விஷயத்தை மட்டும் பாப்தாதா பார்க்க விரும்புகிறார். அனைவரும் 16 அலங்காரங்கள் நிறைந்த அலங்கரிக்கப்பட்ட பிரியதர்ஷினிகள் அதாவது 16 கலை நிரம்பியவர். 16 அலங்காரங்கள் தான் 16 கலைகள். அப்படி அனைவருமே 16 கலை நிரம்பியவர் அதாவது 16 அலங்காரங்கள் செய்யப்பட்டவராக ஆகியிருக்கிறீர்களா? இதுவரையிலும் சிலர் 8 கலைகள், சிலர் 10 கலைகள், சிலர் 11 கலைகள். . . என்றிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் 16 கலை நிறைந்தவராக ஆகிவிட வேண்டும். அனைவரும் அவரவர்களின் வரிசை எண் அனுசாரம் 16 கலை நிறைந்தவர்களாக இருப்பார்கள் இல்லையா? சொல்வது, செய்வது மற்றும் நினைப்பது அனைத்தும் சமமாகிவிட்டது என்றால், சம்பன்னமானவர் ஆகிவிடுவீர்கள். பாப்தாதா இப்பொழுது இதே சொரூபத்தில் அனைவரையும் பார்க்க விரும்புகிறார். இதற்காக அனைவரும் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள், எண்ணத்தையும் வைக்கிறார்கள், அனைவரின் ஆசையும் இது ஒன்று தான். இன்னும் பாக்கி செய்ய வேண்டியதாக என்ன இருக்கிறது? மேடையில் எப்பொழுது அமர்கிறீர்கள் என்றால், இப்பொழுது அனைவரும் சம்பன்னம் ஆக வேண்டும் என்று தான் கூறுகிறீர்கள். அப்படி அனைவரின் விருப்பமும் அது தான் ! ஆனால் பாக்கி என்ன இருந்து விடுகிறது? ஒருவேளை மற்ற அனைத்து ஆசைகளிலிருந்தும் ஆசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் (இச்சாமாத்ரம் அவித்யா) ஆகி விட்டீர்கள் என்றால், இந்த ஆசை நிறைவேறிவிடும். சின்ன சின்ன மற்ற ஆசைகள் இந்த ஆசையை நிறைவேற விடுவதில்லை. நல்லது.

     

    வரதானம் :

    நினைப்பது, சொல்வது மற்றும் செய்வது மூன்றையும் சமமாக ஆக்கும் சர்வோத்தம முயற்சியாளர் ஆகுக !

     

    அனைத்து அறிவுரைகளின் சாரம் எந்தவொரு காரியத்தின் மூலம்  பார்ப்பதில், எழுவதில், அமர்வதில், நடப்பதில், தூங்குவதில் பரிஷ்தா நிலை தென்பட வேண்டும், ஒவ்வொரு காரியத்திலும் ஆன்மீகம் இருக்க வேண்டும். எந்தவொரு உலகியல் தன்மையும் செய்யும் காரியத்திலோ மற்றும் சம்ஸ்காரத்திலோ இருக்க வேண்டாம். நினைப்பது, செய்வது, சொல்வது அனைத்தும் சமமாக இருக்கட்டும். இதைச் செய்ய வேண்டாம் என்று நினைக்கவோ செய்தோம், ஆனால் செய்து விட்டோம் என்று அப்படி இருக்க வேண்டாம். எப்பொழுது மூன்றுமே ஒரே சமமாக மேலும் தந்தைக்குச் சமமாக இருக்கிறது என்றால் தான் உயர்ந்த மற்றும் சர்வோத்தம முயற்சியாளர் என்று கூறுவோம்.

     

    சுலோகன் :

    பொறுப்பை எடுத்துக் கொள்வது என்றால், அதிகப்படியான ஆசீர்வாதங்களுக்கு உரியவர் ஆவது.

     

    ***ஒம்சாந்தி***