BK Murli 8 November 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 8 November 2016 Tamil

    08.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த பழைய கலியுக உலகத்தின் எந்த ஒரு சிந்தனையும் வரக் கூடாது.

     

    கேள்வி:

    தந்தை குழந்தைகளுக்கு சிறந்த செயல்கள் செய்வதற்கு மற்றும் செயல்களைத் திருத்திக் கொள்வதற்கான விதி என்ன கூறி இருக்கிறார்?

     

    பதில்:

    தனது செயல்களைத் திருத்துவதற்காக உண்மையான தந்தையிடம் எப்பொழுதும் உண்மையாக இருங்கள். ஒரு வேளை மறந்தும் கூட ஏதாவது தவறான காரியம் ஏற்பட்டு விட்டது என்றால், அதை பாபா விற்கு உடனே எழுதிக் கொடுத்து விடுங்கள். உண்மையுடன் பாபாவிடம் கூறினீர்கள் என்றால், அதனுடைய தாக்கம் குறைந்து விடும். இல்லையென்றால் விருத்தியாகிக் கொண்டே போகும். பாபாவிடம் சமாசாரம் வந்தது என்றால், பாபா அதை திருத்துவதற்கான ஸ்ரீமத் அளிப்பார்.

     

    ஓம் சாந்தி.

    குழந்தைகளே, நீங்கள் இங்கு காலை முதல் உட்கார்ந்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று சிவபாபா பிரம்மா மூலமாக குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் மாணவர்களாக இருக்கவே இருக்கிறீர்கள். எனவே நமக்கு சிவபாபா கற்பிக்க வந்துள்ளார் என்று இங்கு அமர்ந்தபடியே அவசியம் சிந்தனை செய்து கொண்டு இருப்பீர்கள். இந்த கல்வியினால் நாம் சூரிய வம்சத்தினர் ஆகிடுவோம். ஏனெனில், நீங்கள் விஷ்ணுபுரியின் அதிபதி ஆவதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த சிந்தனையில் அமர்ந்திருக்கிறீர்களா? இல்லை யாருக்காவது பொறுப்பு, குழந்தை குட்டிகள், தொழில் மற்றும் வேலைகள் ஆகியவை நினைவிற்கு வருகிறதா? இது கீதா பாடசாலை ஆகும். நமக்கு பகவான் கற்பிக்கிறார். மேலும் நாம் இலட்சுமி நாராயணர் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகப் போகிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இது இராஜயோகமாகும். நாம் பாபாவிடம் நேரிடையாகக் கேட்டு சூரிய வம்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆகப் போகிறோம் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இலட்சுமி நாராயணரின் படம் எதிரிலேயே உள்ளது. நம்முடைய இராஜ்யம் ஏற்படும். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். சொர்க்கம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது பிராமணர்களிலும் கூட யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் பாபாவிடமிருந்து சொர்க்கமான சுய இராஜ்யத்திற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் தான் சொர்க்கத்தின் அதிபதி ஆகப் போகிறவர்கள், இதை உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படி பள்ளிக் கூடத்தில் நாம் வழக்கறிஞர், என்ஜினியர் ஆகியோராக ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மாணவர்களுடைய புத்தியில் இருக்கும். உங்களுக்கு இந்த அளவாவது நினைவிருக்கிறதா இல்லை மறந்து விடுகிறீர்களா? நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் மாணவர்கள் ஆவீர்கள். உங்களை உயர்ந்ததிலும் உயர்ந்த தேவதையாக ஆக்குவதற்காக தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாக்கள் இந்த சரீரத்தின் மூலமாக தங்களது வருங்கால பதவியை நினைவு செய்துக் கொண்டிருக்கிறீர்களா இல்லை சரீரத்தில் சம்பந்தியினர், ஸ்தூல சொத்து, தொழில்கள், வேலை ஆகியவற்றை நினைவு செய்கிறீர்களா? இங்கு வரும் பொழுது நமக்கு எல்லையில்லாத தந்தை, எல்லையில்லாத அதிபதியாக ஆக்குவதற்காக கற்பிக்க வருகிறார் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். பிறகு இராஜா இராணி ஆனாலும் சரி, பிரஜை ஆனாலும் சரி, அதிபதியாகவோ ஆகிறார்கள் அல்லவா? புது உலகத்தில் இருப்பதே சூரிய வம்ச குடும்பத்தினர். நாம் நமது இராஜ்யத்தில் ஆட்சி புரிவோம் என்பதையோ புரிந்துள்ளீர்கள் தானே

     

    குழந்தைகள் வெளியில் இருக்கும் பொழுது வீடு வாசல், வயல், தோட்டங்களில் இருக்கையில் அந்த அளவிற்கு பாபாவின் நினைவு இருக்க முடியாது என்பதை பாபா அறிந்திருக்கிறார். எனவே இங்கு வரும் பொழுது எல்லா சிந்தனைகளையும் விட்டு விட்டு வாருங்கள். நீங்கள் இப்பொழுது அந்த கலியுக உலகத்தில் இல்லவே இல்லை. இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். கலியுகத்தை விட்டு விட்டுள்ளீர்கள். வெளியில் கலியுகம் உள்ளது. முக்கியமாக இங்கு மதுவனத்தில் சங்கமம் ஆகும். எனவே தான் மதுபனிற்கு மகிமை உள்ளது. இங்கு இந்த முரளியை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதை (ரிபீட்) திரும்பக் கூறுங்கள் மற்றும் ஞான சிந்தனை செய்யுங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படங்களுக்கு முன்னால் சென்று அமர்ந்து விடுங்கள். அவைகளைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருங்கள். கூட்டி வரும் பிராமணிகள் மீது மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். எப்படி நமது பள்ளிக் கூடத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் மதிப்பு போய் விடும் என்று ஆசிரியர்களுக்கு அக்கறை இருக்கும். பள்ளிக் கூடத்தில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால், அந்த ஆசிரியர் நல்ல ஆசிரியர் என்று கருதப்படுவார். பிராமணிகள் மாணவர்கள் மீது கவனம் வைக்க வேண்டும். இங்கு நீங்கள் சங்கமத்தில் வந்துள்ளீர்கள். இங்கு நேரிடையாக பாபா கூறுகிறார். இங்கு மிகவும் நல்ல தாக்கம் இருக்கும். இங்கு வந்த பின் கூட வீடு வாசல், தொழில் நினைவிற்கு வருகிறது என்றால் இவர்கள் சாதாரண பிரஜை ஆவார்கள் என்று பாபா நினைப்பார். வந்திருப்பதோ இராஜா ஆவதற்காக. ஆனால் .. .. .. இல்லையென்றால் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். படங்கள் கூட உங்களுக்கு மிகவும் உதவி செய்கின்றன. ஜனங்கள் நினைவு செய்வதற்காக அஷ்ட தேவதைகள் மற்றும் குருக்களின் படங்களை வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் அவர்களை நினைவு செய்வதால் எதுவும் கிடைப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் செய்தீர்களோ, கீழே தான் இறங்கி வந்தீர்கள். குழந்தை களாகிய நீங்கள் உயர்ந்து செல்வதற்கான முயற்சி செய்ய வேண்டும். வீட்டில் சிவபாபாவின் படத்தை வைத்து விடுங்கள். அப்பொழுது அடிக்கடி நினைவிற்கு வரும். முதலில் நீங்கள் அனுமார், கிருஷ்ணரை, இராமரை நினைவு செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது சிவபாபா என்னை நினைவு செய்யுங்கள் என்று நேரிடையாகக் கூறுகிறார். திரிமூர்த்தியின் படம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த சித்திரத்தை எப்பொழுதும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், நினைவிருக்கும். பாபா பக்தராக இருக்கும் பொழுது இலட்சுமி நாராயணரின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருந்தார். மெத்தைக்கு கீழே தன் கூடவே வைத்திருப்பார். அதனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்பொழுது பாபாவிடமிருந்து நிறைய பிராப்தியாகிக் கொண்டிருக்கிறது. அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். இதில் மாயை எதிர்க்கிறது. ஞானத்தையோ தாராளமாக நிறைய கேட்கிறார்கள் மற்றும் கூறுகிறார்கள். இதில் வேகமாகச் செல்கிறார்கள். 84ன் சக்கரம் மறந்து விடுகிறது என்று ஒன்றும் கூறுவதில்லை. இங்கு இருப்பவர்கள் அதிகமாக நினைவு செய்கிறார்கள் என்பதும் அல்ல. இங்கு இருந்து கொண்டு கூட அநேகர் குப்பைக் கூளங்களை நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த தந்தை மூலமாக நாம் தூய்மையாக (வெண்மையாக) ஆவதற்கு வந்துள்ளோமோ அவரை அறியாமலே இருக்கிறார்கள். மாயையினுடைய நிழல் நிறைய படிந்து விடுகிறது. முக்கியமான விஷயமே நினைவினுடையதாகும். நிறைய நல்ல நல்ல குழந்தைகள் கூட நினைவில் இருப்பதில்லை என்பதை பாபா அறிந்திருக்கிறார். யோகத்தில் இருப்பதால் தான் தேக அபிமானம் குறைந்து விடும். மிகவும் இனிமையாக இருப்பீர்கள். தேக அபிமானம் இருப்பதால் இனிமையானவர் ஆவதில்லை. கோபித்துக் கொண்டே இருப்பார்கள். பாபா எல்லோருக்காக கூறுவதில்லை. ஒரு சிலர் நல்ல குழந்தைகள் கூட இருக்கிறார்கள். யார் யோகத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல குழந்தைகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மூலமாக எந்த ஒரு தப்பும் தவறுமான விஷயங்கள் ஏற்படாது. நண்பர்கள் உறவினர்கள் ஆகிய அனைவரையும் மறந்து விடுவார்கள். நாம் தனியாக (அசரீரி) வந்திருந்தோம். இப்பொழுது அசரீரி ஆகி வீடு செல்ல வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. அதன் மூலமாக நீங்கள் உங்கள் வீட்டை அறிந்துள்ளீர்கள். இராஜதானியையும் அறிந்துள்ளீர்கள். எப்படி அவர்கள் காண்பிப்பது போல சிவபாபா ஒன்றும் கருப்பான லிங்கம் அல்ல என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரோ புள்ளி போன்று இருக்கிறார். இதுவும் நாம் அறிந்துள்ளோம். இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்வோம். அங்கு நாம் அசரீரியாக இருப்போம். இப்பொழுது நாம் அசரீரி ஆக வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பதீத பாவன தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா அழியாதது என்பதோ புரிய வைக்கப்படுகிறது. அதில் 84 பிறவிகளின் பாகம் பொருந்தி உள்ளது. அதற்கு முடிவு ஏற்படுவது இல்லை. சிறிது காலம் முக்தி தாமத்திற்குச் சென்று மீண்டும் தத்தம் பாகத்தை நடிக்க வர வேண்டி உள்ளது. நீங்கள் ஆல்ரவுண்ட் பார்ட் நடிக்கிறீர்கள். இது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். இப்பொழுது நாம் வீடு செல்ல வேண்டும். பாபாவை நினைவு செய்வதால் நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவோம். இங்கு தொழில், வேலை ஆகியவைகளை நினைவு செய்யக் கூடாது. இங்கு நீங்கள் முழுமையாக சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் படகில் அமர்ந்துள்ளீர்கள். ஒரு சிலர் நடுவில் இறங்கி விடுகிறார்கள். பின் சிக்கி இறந்து விடுகிறார்கள். இது பற்றி கூட சாஸ்திரங்களில் ஒரு கதை உள்ளது. நாம் அந்த கரைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா படகோட்டி ஆவார். கிருஷ்ணருக்கு படகோட்டி அல்லது தோட்டக்காரன் என்று கூறமாட்டார்கள். சிவபகவானுவாச (சிவபகவான் மகா வாக்கியம்) என்பதாகும். பதீத பாவனர் சிவபாபா ஆவார். கிருஷ்ணரின் பக்கம் புத்தி போக முடியாது. மனிதர்களுடைய புத்தியோ அலைந்து கொண்டே இருக்கும். பாபா வந்து அலைவதிலிருந்து விடுவிக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் தான் சொர்க்கத்தின் அதிபதி ஆவீர்கள் என்பதை மட்டுமே கூறுகிறார். இந்த விஷயங்களை மறக்கக் கூடாது. இங்கிருந்து நீங்கள் மிகவுமே புத்துணர்வு பெற்றுச் செல்கிறீர்கள். பாபா பின்னர் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே ஆகி விட்டோம் என்று அனுபவம் கூட கூறுகிறீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடைய முகங்களைப் பார்த்து விடும் பொழுது மயங்கி விடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிரியதரிசினிகள் ஆவீர்கள். காரியங்கள் ஆகியவை செய்யும் பொழுதும் பிரியதரிசனரை நினைவு செய்துக் கொண்டே இருங்கள். அப்பொழுது உயர்ந்த பதவி அடைவீர்கள். இப்பொழுது முயற்சி செய்யவில்லை என்றால் ஒற்றைக் கிரீடம் கூட கிடைக்காமல் போய் விடும். இங்கு குழந்தைகள் வருகிறீர்கள் என்றால் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இங்கு வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய நினைவார்த்தமான தில்வாலா கோவில் மட்டும் உள்ளது. அதை நீங்கள் பார்க்கலாம். மேலே வைகுண்டம் உள்ளது. உங்களுடைய விருட்சம் கூட தெளிவாக உள்ளது. கீழே இராஜயோகத்தில் அமர்ந்துள்ளீர்கள். மேலே இராஜ்யம் உள்ளது. எப்படி தில்வாலா கோயில் அமைப்பட்டுள்ளதோ அப்படியே மிகச் சரியாக உள்ளது. சிவபாபா நமக்கு மீண்டும் ஞானத்தை அளித்து, சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த கலியுகத்தின் விநாசம் ஆகப்போகிறது. இந்த ஆதி தேவன் ஆதி நாதன் என்பவர்கள் யார்? நீங்கள் அனைவரின் தொழில் பற்றி அறிந்துள்ளீர்கள் அல்லவா? இச்சமயத்தின் சர்ச்சை பிறகு பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. பண்டிகைகள் விரதங்கள் எல்லாமே இச்சமயத்தினுடையதாகும். மன்மனாபவ என்பதே உண்மையான விரதம் ஆகும். மற்றபடி நிர்ஜல் விரதம் (தண்ணீர் குடிக்காமலிருப்பது), உணவு உட் கொள்ளாமல் இருப்பது. இது ஒன்றும் விரதம் கிடையாது. இச்சமயம் உலகத்தில் மாயையின் பகட்டு நிறைய உள்ளது. முதலில் இங்கு மின்சாரம், கேஸ் ஆகியவை இருக்கவில்லை. பின்னர் வெளிவந்துள்ளது. 100 வருடங்கள் ஆகி உள்ளது. இதில் மனிதர்கள் சிக்கிக் கொண்டு சாகிறார்கள். எங்களை பொறுத்தவரை சொர்க்கம் இங்கேயே உள்ளது என்கிறார்கள். மாயையின் பலம் எவ்வளவு உள்ளது என்றால் தந்தையை முற்றிலுமே நினைவு செய்வதில்லை. நாங்கள் எப்படி சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். இப்பொழுது சொர்க்கத்திற்கு முன்னால் இவை ஒன்றுமே கிடையாது. சொர்க்கம் எங்கே, நரகம் எங்கே. சொர்க்கத்தில் ஒரு பொருள் கூட இங்கு இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். பசுக்கள் கூட முதல் தரமானதாக இருக்கும். நீங்கள் கூட முதல்தரமானவர்களாக ஆகும் பொழுது உங்களுடைய (ஃபர்னிச்சர்) சாமான்கள், உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாமே முதல்தரமானதாக ஆகி விடுகிறது. சூட்சுமவதனத்தில் பழங்கள் ஆகியவை பார்த்துவிட்டு வருகிறீர்கள் அல்லவா? பெயரே ஷுபிரசம் என்று வைக்கிறார்கள். சொர்க்கம் எங்கே இருக்கிறது என்பது கூட உலகத்தாருக்கு தெரியாது. அங்கு எல்லாமே சதோபிரதானமாக இருக்கும். இந்த மண் ஆகியவை எல்லாம் அங்கே படாது. துக்கத்தினுடைய எந்த விஷயமும் கிடையாது. ஆனால் பாபா நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக இந்த படிப்பை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற போதை குழந்தைகளுக்கு இன்னுமே ஏறாமல் இருக்கிறது. படங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றன. படங்களைத் தயாரிப்பதில் நேரம் பிடிக்கிறது. பாபா எல்லாவற்றையும் சேவைக்காக செய்வித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய தொழில், வேலைகளில் எவ்வளவு சிக்கி இருக்கிறார்கள் என்றால், பாபாவை நினைவு கூட செய்வதில்லை. கண்காட்சியின் படங்களின் பத்திரிகைகள் (மாத இதழ்) கூட இருக்கின்றன. அவற்றைக் கூட படிக்க வேண்டும். கீதையை நியமப்படி படிப்பவர்கள் எங்கு சென்றாலும் அவசியம் கீதையைப் படிப்பார்கள். இப்பொழுது உங்களுக்கு உண்மையான கீதை, (படங்கள் உட்பட) கிடைத்துள்ளது. இப்பொழுது நல்ல முறையில் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. பிறகு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகும் பொழுது ஐயோ ! ஐயோ ! என்று புலம்ப வேண்டி வரும். தேர்வு முடிந்த பிறகு அடுத்த வகுப்பில் வரிசைக்கிரமமாக அமர்ந்து விடுகிறார்கள். இங்கு கூட சாட்சாத்காரம் ஆகி விடும் பொழுது வரிசைக் கிரமமாக ருத்ரமாலை பிறகு வெற்றி மாலையில் செல்வீர்கள். பள்ளிக் கூடத்தில் ஒரு சில குழந்தைகள் தேர்ச்சி அடையாமல் இருக்கும் பொழுது எவ்வளவு துக்கமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். உங்களுடையது பல கல்பங்களின் பந்தயம் ஆகும்.

     

    நிறைய குழந்தைகள் முழுமையாக மாத இதழ்களைர் படிப்பதில்லை. குழந்தைகள் மாத இதழ்களைர் படித்து சேவை செய்ய வேண்டும். பாபா இன்னாரை மாற்றி விடுங்கள், நல்ல பிராமணியை அனுப்பிப் கொடுங்கள் என்று எழுதுகிறார்கள். ஒரு சிலருக்கு பிராமணியிடம் எவ்வளவு அன்பு ஆகி விடுகிறது என்றால், பிராமணியை மாற்றி விட்டால் விழுந்து விடுகிறார்கள். சென்டருக்கு வருவதையே விட்டு விடுகிறார்கள். ஏதாவது தவறான காரியம் ஏற்பட்டு விட்டால் உண்மையுடன் உடனே பாபாவிற்கு எழுத வேண்டும். அப்பொழுது பாவத்தின் தாக்கம் குறைந்து போய் விடும். இல்லையென்றால் விருத்தி ஆகிக் கொண்டே போகும். பாபா திருத்துவதற்காகக் கூறுகிறார். ஆனால் ஒருவருக்கு திருந்த வேண்டும் என்று இல்லையென்றால் பாவச் செயல்களை செய்வதை விடுவதே இல்லை. அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் பாபாவிற்கு உண்மையான சமாசாரம் கொடுப்பதில்லை. பாபாவிடம் சமாசாரம் வந்தது என்றால் திருத்துவதற்கான முயற்சி செய்வார். நல்லது.

     

    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

     

    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. அசரீரி ஆவதற்கான முழுமையான அப்பியாசம் செய்ய வேண்டும். எந்த ஒரு தப்பும் தவறுமான விஷயங்களைப் பேசக் கூடாது. மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். எந்த ஒரு விஷயத்தில் கூட கோபிக்கக் கூடாது.

     

    2. முரளியை நினைவு செய்ய வேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதன் மீது ஞான சிந்தனை செய்ய வேண்டும். மன்மனாபவ என்ற விரதம் கொள்ள வேண்டும்.

     

    வரதானம்:

    சுயம் தங்களை பொறுப்பாளர் என்று உணர்ந்து ஒவ்வொரு செயலையும் சரியான விதியுடன் செய்யக் கூடிய சம்பூர்ண சித்தி சொரூபம் ஆகுக !

     

    இச்சமயம் சங்கமயுக சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுடைய ஒவ்வொரு சிறந்த செயலும் முழு கல்பத்திற்கும் விதிமுறையாக அமைந்து கொண்டிருக்கிறது. எனவே சுயம் தங்களை சட்டத்தின் படைப்புகர்த்தா, பொறுப்புள்ள ஆத்மா ஆவேன் என்ற இந்த நிச்சயத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்தீர்கள் என்றால், சரியான விதியுடன் செய்யப்பட்ட கர்மத்தின் சம்பூர்ண சித்தி அவசியம் பிராப்தி ஆகும்.

     

    சுலோகன்:

    சர்வ சத்திவான் தந்தையின் துணை இருந்தது என்றால், மாயை காகிதப் புலியாகி விடும்.

     

    ***ஓம் சாந்தி***