BK Murli 19 January 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 19 January 2017 Tamil

    19.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்போது சத்தியத்தின் உரையால் செய்ய வேண்டும், நீங்கள் சரி எது தவறு எது என்பதை தீர்மானிக்க முடியும்.



    கேள்வி:

    அந்தர்யாமி (மனதின் உள்ளே நினைப்பதை அறிந்தவர்) தந்தை உலகின் அனைத்து குழந்தைகளுக்குள் இருக்கக் கூடிய எந்த விஷயத்தை அறிந்துள்ளார்?



    பதில்:

    இந்த சமயம் அனைவருக்குள்ளும் 5 பூதங்களின் பிரவேசமாகியுள்ளது, இராவணன் சர்வவியாபியாக (எங்கும் நிறைந்தவனாக) இருக்கிறான் என தந்தை அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் 5 பூதங்களை தானம் செய்து விட்டீர்கள், ஆயினும் சிலர் திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றனர். மாயையின் மிகவும் கடுமையான குத்துச் சண்டை நடக்கிறது. மீண்டும் மீண்டும் தோற்றுப்போவதால் பலவீனமாகிப் போகின்றனர், ஆகையால் குழந்தைகளே தானம் கொடுத்துவிட்டு பிறகு திரும்ப எடுத்துக் கொள்ளக் கூடாது என பாபா சொல்கிறார். மாயையிடம் தோற்கக் கூடாது. அமிர்தவேளை எழுந்து தந்தையை நினவு செய்தால் பூதங்கள் ஓடி விடும். பாடல்: பலவீனர்களுடன் பலவானின் சண்டை. . .



    ஓம் சாந்தி.

    பாடல் எப்படி உருவாக்கப் பட்டுள்ளது பாருங்கள், ஆனால் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. கீதை, பாகவதம் முதலானவை உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் எப்படி அதை புரிந்து கொள்வதில்லையோ அதுபோல இதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இவையனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். புயல் மற்றும் தீபத்தின் கதையை எப்படி உருவாக்கியுள்ளனர். மனிதர்கள் என்னவோ சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்கின்றனர். நீங்கள் முழுமையான அர்த்தத்தை   அறிவீர்கள். அது இங்குள்ள விசயம் ஆகும். சிறிய தீபங்கள் என்ன, மாயையின் புயல் காற்று பெரிய பெரிய தீபங்களையே அணைத்து விடுகிறது. சில சமயம் வாடிப் போகின்றனர், நினைவு செய்வது குறைந்து விடுகிறது. யோகத்தை நெய் என சொல்வோம். எந்த அளவு நெய் ஊற்றுகிறோமோ அந்த அளவு ஜோதி நன்றாக எரிந்து கொண்டிருக்கும். ஆக இந்த விஷயம் இப்போதைக்குள்ளதாகும். ஆத்மாக்களின் ஜோதியை ஏற்றுவதற்காக ஜோதி வர வேண்டியிருக்கிறது. அவர்தான் பரமாத்மா எனப்படுகிறார். விட்டில் பூச்சிகள் என மனிதர்களைச் சொல்வோம்.  பரமபிதா பரமாத்மா நம் முன்ல் ஆஜராகியிருக்கிறார் என நீங்கள் சொல்வீர்கள். நாங்கள் கண்களால் பார்க்கிறோம். அவருக்கு சரீரத்தின் பெயர் கிடையாது. சிவன் நிராகாரமானவர் மற்றும் ஞானம் நிறைந்தவர் ஆவார். ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆகையால் நாங்கள் ஆஜராகி பார்க்கிறோம் ஏனென்றால் அவரிடமிருந்து நாங்கள் ஞானத்தை கற்கிறோம் என நீங்கள் சொல்வீர்கள். சொல்பவர் சிவன் ஆவார். பரமபிதா பரமாத்மா ஆஜராகி வந்துள்ளார் என மனிதர்கள் சொல்கின்றனர், ஆனால் எங்கே? என கேளுங்கள். அவர் சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என சொல்வார்கள். இந்த விஷயம் சரியானதில்லை. அவர் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். சிவபாபா நமக்கு கற்றுத்தருகிறார் என நீங்கள் அறிவீர்கள். கண்டிப்பாக கண்களால் பார்ப்போம் அல்லவா. ஆத்மாவும் இருக்கிறது அல்லவா. நான் ஆத்மா என நீங்கள் சொல்கிறீர்கள். கண்டிப்பாக நட்சத்திரத்தைப் போல இருக்கிறது. பார்க்கவும் முடிகிறது. நான் நட்சத்திரம் போல் இருக்கிறேன் என தானே சொல்கிறது. மிகவும் சூட்சுமமாக இருக்கிறேன். ஆத்மா புருவ மத்தியில் இருக்கிறது, இதையும் அறிவோம். நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது? என சிலர் கேட்கின்றனர். நல்லது, புருவ மத்தியில் என்று புரிந்து கொள்ள வேண்டாம், கண்களில் இருக்கிறது, எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது என்பது சரி தானோ. இது என்னுடைய சரீரம் என  ஆத்மாதான் சொல்கிறது. புருவ மத்தி என்பது சுத்தமான இடகும் ஆகையால்தான் ஆத்மாவின் இருப்பிடமாக இதனை காட்டுகின்றனர். திலகத்தின் அடையாளம் கூட இங்கே கொடுக்கப்படுகிறது.  நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என ஆத்மா சொல்கிறது. இதில் சந்தேகத்தின் விஷயம் எதுவும் கிடையாது. ஆத்மா பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கிறது. இப்போது தந்தை நினைவு படுத்துகிறார். உங்களுடைய நடிப்பு நிறைவடைந்து விட்டது. நீங்கள் தூய்மையை இழந்து விட்டீர்கள். உங்களிடமிருந்து முழு ஞானமும் வெளியேறி விட்டது. இதுவும் நடிப்பு, யாரையும் குறை சொல்ல முடியாது. எனக்குள் 84 பிறவிகளின் நடிப்பு உள்ளது என ஆத்மா சொல்கிறது. நாடகத்தின்படி 84 பிறவிகள் அனுபவிக்கவே வேண்டியுள்ளது. தூய்மை யற்றவராக ஆகவே வேண்டும். இதை புரிய வைக்கும்போது நீங்கள் அறிகிறீர்கள். பாபா, நாடகத்தில் நடிப்பே என்னுடையதாகும் என நீங்கள் சொல்கிறீர்கள். இது அனாதியான நாடகம் என நீங்கள் புரிய வைத்திருக்கிறீர்கள். நாங்கள் நாடகத்தின் பர (பிறர்) வசப்பட்டுள்ளோம். இப்போது நீங்கள் ஈஸ்வரனின் வசப்பட்டிருக்கும்போது நாடகத்தை அறிகிறீர்கள். பிறகு நீங்கள் இராவணனின் வசப்படுவதன் மூலம் வீணாகிப் போகிறீர்கள். நான் உங்களுக்கு எவ்வளவு ஞானத்தைக் கொடுக்கிறேன் என பாபா சொல்கிறார். இது முற்றிலும் புதிய ஞானம் என அனைவரும் சொல்கின்றனர். உண்மை மற்றும் பொய்யை தெளிவு படுத்தி காட்டப்படுகிறது. பாரதம்தான் உண்மையான கண்டம் மற்றும் பொய்யான கண்டமாக ஆகிறது. உண்மையான கண்டத்தில் உண்மைதான் இருக்கும். பொய்யான கண்டத்தில் பொய்யான பேச்சுக்கள்தான் இருக்கிறது. எதுவரை உங்களுக்கு உண்மையின் செய்தி விசயம் கிடைப்பதில்லையோ அதுவரை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும். தந்தை சொல்கிறார் இப்போது நான் சரியானதை புரிய வைக்கிறேனா அல்லது அவர்கள் சரியானதை புரிய வைக்கிறார்களா என தீர்மானியுங்கள்.



    நான் ஆத்மா, என்னுடைய ஆத்மாவை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? என நீங்கள் சொல்கிறீர்கள். ஆத்மாதான் கஷ்டப்படுகிறது. ஆத்மா பிரிந்து விட்டது என்றால் எந்த கஷ்டமும் ஏற்படாது. சரீரத்துடன்தான் ஆத்மா சுகம் மற்றும் துக்கத்தை அனுபவிக்கிறது. பிறகு ஆத்மாவில் எதுவும் கிடையாது (நிர்லேப்) என ஏன் சொல்கிறீர்கள்? பரமாத்மாவைப் பற்றியும் அவர் பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் என சொல்கின்றனர். பரமாத்மா என சொல்லும்போது அதுவும் பெயர்தான் அல்லவா. சிலர் நீர்க்குமிழி என்று சொல்கின்றனர், சிலர் ஜோதி சொரூபம் என சொல்கின்றனர். எதையும் தெரிந்து கொள்வதில்லை. இந்த ஒரே நாடகம்தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அனைத்து நடிகர்களும் தம்முடைய நடிப்பை நடிக்க வேண்டும். நாடகம் ஒன்று படைப்பவரும் ஒருவரே ஆவர். இந்த விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலும் உலகம் இருக்கிறது என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அங்கும் சென்று நாங்கள் நிலம் வாங்குவோம். இப்போது இது உண்மையா அல்லது தந்தை புரிய வைப்பது உண்மையா? தந்தைதான் ஞானம் நிறைந்தவர், மனித சிருஷ்டியின் விதை வடிவம். இந்த கல்ப விருட்சத்திற்கு விதை ஏதாவது இருக்கும் அல்லவா. விருட்சம் (மரம்) கூட ஒன்றே ஆகும் என தந்தை புரிய வைக்கிறார். இந்த விருட்சம் (படைப்பு) இப்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இப்போது பழைய மரமாக ஆகி விட்டது. மீண்டும் புதிய நாற்று நடப்படுகிறது ஏனென்றால் முக்கியமான தேவி-தேவதா தர்மம் இப்போது மறைந்து விட்டுள்ளது. விஸ்தாரம் அனைத்தும் ஒரு விதையினுடையது அல்லவா. ஆக தந்தை எவ்வளவு நல்ல விதமாக அமர்ந்து புரிய வைக்கிறார். பிறகு இந்த மாயை எனும் பூனை ஜோதியை அணைத்து விடுகிறது. புயல் வீசுவதால் எவ்வளவு பெரிய பெரிய மரங்கள் விழுந்து விடுகின்றன. பாபா மாயையின் புயல்கள் நிறைய வருகின்றன என எழுதுகின்றனர். இது தடை எனவும் சொல்லப்படுகிறது. இராவணனின் அசுர சம்பிரதாயம் தடைகளை ஏற்படுத்துகிறது, பிறகு கூக்குரலிடுகின்றனர். கூக்குரலிட்டபடி இருக்கும்போது மாயையின் புயல் காற்று விகாரத்தில் விழ வைத்து விடுகிறது. பழையவர்கள் கூட விழுந்து விடுகின்றனர். மாயையின் புயல் காற்றுகள் வீசவே செய்யும் என தந்தை சொல்கிறார். ஆனால் நீங்கள் நிலையாக இருக்க வேண்டும். ஒருபோதும் யாருடனும் கோபம் கொள்ளக் கூடாது. பாபா எங்களை கோபம் எனும் பூதம் வெற்றி கொண்டு விட்டது என சொல்கின்றனர். இது குத்துச் சண்டையாகும் என தந்தை சொல்கிறார். அடிக்கடி விழுந்து கொண்டே இருந்தால் பலவீனமாக ஆகி விடுவீர்கள். நீங்கள் விகாரங்களை தானம் செய்திருக்கிறீர்கள் அல்லவா. தானம் கொடுத்து பிறகு திரும்பப் பெறக் கூடாது. எந்த விதமான தானம் கொடுத்தாலும் பிறகு அதனை திரும்பப் பெறப்படுவதில்லை. ராஜா அரிச்சந்திரன் தானம் கொடுத்தார் என்ற கதையும் உள்ளதல்லவா. இதனை உதாரணமாக உருவாக்கியுள்ளனர். ஆம், இன்ஷியூரன்ஸ் (காப்பீடு) செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளுங்கள் என தந்தை சொல்கிறார். செய்யாவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. உண்மையில் தானம் கொடுக்கப்பட்ட பொருள் திரும்பப் பெற முடியாது. வீடு கட்டுவதற்காக யாராவது தானம் கொடுத்தார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், வீடு கட்டிய பிறகு எப்படி திரும்பப் பெற முடியும்? கன்யா தானம் செய்து, பணம் கொடுத்து திருமணம் ஆகி விட்ட பிறகு எப்படி திருப்பித் தருவார்கள்? தானம் கொடுக்கப்பட்ட பொருள் திரும்பி வராது.



    ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும் என தந்தை புரிய வைக்கிறார். பரமாத்மா சர்வவியாபி, பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் என அனைத்து சாது சன்னியாசி முதலானவர்கள் சொல்கின்றனர். இப்போது பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்ட பொருள் எதுவும் இருக்க முடியாது. ஆகாயத்திற்கும் கூட பெயர் இருக்கிறது அல்லவா. அனைவரும் பரமாத்மாவின் பெயரை ஜபிக்கின்றனர். சிவலிங்கத்தின் சிற்பம் இருக்கிறது. பிறகு பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என ஏன் சொல்கிறீர்கள்? ஆனால் பிடிவாதத்திலிருந்து விடுபடுவதே இல்லை, ஆகையால் தந்தை புரிய வைத்திருக்கிறார், முதன் முதலில் யாராவது வந்தால் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன உறவு? என கேளுங்கள். அவர் தந்தையாகி விட்டார் அல்லவா. குழந்தை களாகிய நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்ய முடியும். சிவனின் கோவில் முன்னால் இருக்கிறது. இவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார்? தந்தை, அப்படியெனில் தந்தை எப்போதாவது பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லது சர்வவியாபியாக இருக்க முடியுமா? எவ்வளவு நல்ல நல்ல புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தந்தை என சொல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அவருக்கு பெயர் உருவமும் உண்டு. வந்தனை செய்கிறீர்கள், நினைவு செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அவரால் ஏதாவது பலனடைய வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தையும் உங்களில் கூட அனைவரும் புரிந்து கொள்வதில்லை. இங்கே நேரில் அமர்ந்திருக்கலாம், இவர்கள் அனைவருமே கூட இவ்வளவு நம்பிக்கை வைப்பதில்லை. இன்று இருக்கின்றனர், நாளை இருக்க மாட்டார்கள். இன்னார் சென்று விட்டனர் என நீங்கள் கேள்விப்படுவீர்கள். எவ்வளவு சுழல் சிக்கியவர்களாக ஆகிவிடுகின்றனர் என பார்க்கிறீர்கள். புயல் காற்றில் விழுந்து விடுகின்றனர். உண்மையில் முழு ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது, எப்படி பாபா விதை ரூபமாக இருக்கிறார், அவருடைய புத்தியில் நாடகத்தின் முழு ஞானமும் இருக்கிறது, அது போல. எதை கற்பித்திருக்கிறாரோ அது உங்களிடமும் உள்ளது, அதனை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். வரிசைக்கிரமமாக இருக்கவே செய்கின்றனர். சிலருடைய புத்தி சதோ நிலை, சிலருடையது ரஜோ, தமோ . . . பாபாவிடம் யாராவது கேட்டால் பாபாவால் சொல்ல முடியும். உங்களுடைய புத்தி சதோபிரதானமாக இருக்கிறதா அல்லது ரஜோ தமோவா என என்னால் சொல்ல முடியும் என இந்த பிரம்மாவும் கூட சொல்கிறார். அனைத்தின் ஆதாரமும் சேவையில் இருக்கிறது. சிலருக்கு ஞானத்தின் தாரணை நன்றாக ஏற்படுகிறது என்றால் சதோபிரதான புத்தி என சொல்வோம். நான் என்ன செய்கிறேன் என ஒவ்வொருவரும் தானே புரிந்து கொள்ள முடியும். பாபா என்னிடம் தவறு உள்ளதா என கேட்கின்றனர். முதல் நம்பர் தவறு நீங்கள் சேவை செய்வதில்லை, அதன் காரணமாக பதவி கீழானதாக ஆகி விடும் என பாபா சொல்வார். சேவை செய்வதை பார்க்கும் போது தெரிகிறது அல்லவா. கோவில் முதலான இடங்களில் சென்று புரிய வையுங்கள் என எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. எங்களால் நிறைய சேவை செய்ய முடியும் என கதை சொல்கின்றனர். ஆனால் இவர்கள் சேவை செய்ய முடியாது என பாபாவுக்குத் தெரியும். மிகவும் சுலபமானதுதான். மரம் மற்றும் நாடகத்தின் ஞானம் மிகவும் சகஜமானது. பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன உறவு என மட்டும் கேட்கப்படுகிறது. தந்தை என்றால் கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்க வேண்டும். கண்டிப்பாக நீங்கள் அவருடைய குழந்தைகள், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும், அதை இப்போது இழந்திருக்கிறீர்கள். நானும் கூட இழந்திருக்கும் ஆஸ்தியை மீண்டும் அடைந்திருக்கிறேன். நம்பிக்கை ஏற்பட்டதும் உடனே ஆஸ்தியை அடைவதில் ஈடுபடுவார்கள். ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். முயற்சி செய்ய முடியாது. அந்த பாபா அந்தர்யாமி (மனதின் உள்ளே இருப்பதை அறிந்தவர்), நான் வெளிமுகத்தில் இருப்பவன் என்பதையும் அறிவார்கள். முழு உலகத்திலும் என்ன இருக்கிறது என்பதை அமர்ந்து சொல்வார் என்பதல்ல. ஆம், அனைவருக்குள்ளும் 5 பூதங்கள் பிரவேசமாகியிருக்கின்றன என அறிவார், ஆகையால் இராவணன் சர்வவியாபி என சொல்கிறார். நீங்கள் இன்னும் பூதங்களை தானம் கொடுக்கவே இல்லை, பழைய உலகின் தேகத்துடன் சேர்த்து அனைத்து சம்மந்தங்களிலிருந்தும் புத்தியின் தொடர்பை நீக்கி ஒரு தந்தையை நினைவு செய்வதில்தான் மிகவும் முயற்சி தேவைப்படுகிறது. இந்த முயற்சி இரவில் நல்ல விதமாக செய்ய முடியும். இப்போதிலிருந்தே பயிற்சி செய்தால் நினைவு செய்ய முடியும், அமிர்த வேளையின் தாக்கம் நன்றாக இருக்கும். அதிகாலை எழ வேண்டும். அதிகாலை எழுந்து பக்திமார்க்கத்தில் மாலையை உருட்டுகின்றனர். சிலர் ராமா ராமா என ஜபிக்கின்றனர், சிலர் வேறு ஏதோ சொல்லி ஜபிக்கின்றனர். பல மந்திரங்கள் இருக்கின்றன. காசியின் பண்டிதராக இருந்தால் சிவ சிவ என சொல்லுங்கள் என்பார். சன்னியாசி முதலான அனைத்து மனிதர்களும் பக்தர்கள் ஆவர். சாதுக்கள் சாதனை (முயற்சி) செய்கின்றனர், வீடு வாசலை விட்டு காட்டிற்குச் செல்கின்றனர். ஹடயோக இதுவும் கூட சாதனைதானே. ஹடயோக மார்க்கமும் கூட நாடகத்தில் உள்ளது. சொர்க்கத்தின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எங்கே சென்றுவிட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவதைகளின் பூஜை செய்கின்றனர், ஆனால் நாம் எந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியாது. நாமும் கூட லட்சுமி நாராயணரின் பூஜை செய்து கொண்டிருந்தோம், பிறகு இந்து தர்மம் என்று சொல்லிக் கொண்டோம். இப்போது எங்களுடைய தர்மம் பிராமண தர்மம் அதாவது தேவி-தேவதா தர்மம் என எழுதுகிறோம், ஆனாலும் அவர்கள் இந்து என எழுதி விடுகின்றனர், ஏனென்றால்  பாரதவாசிகள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள். முஸ்ம்களை தனியாக எழுதுவார்கள். மற்ற அனைவரும் இந்துக்களின் வரிசையில் வந்து விடுகின்றனர். இது அதிசயமான ரகசியமாகும்.



    இப்போது உங்களுடைய புத்தியில் எல்லைக்கப்பாற்பட்ட ஞானம் உள்ளது. இந்த சிருஷ்டி சக்கரத்தை டிராமா என்றுதான் சொல்கிறோம். எல்லையற்ற நாடகத்தில் பதிவாகியிருப்பது மீண்டும் அதேதான் நடக்கும், மேடை நாடகம் அப்படி கிடையாது. அந்த நாடகத்தில் எந்த நடிகராவது இல்லை என்றால் அவருக்குப் பதிலாக வேறு எந்த நடிகரையாவது போட்டு விடுவார்கள். யாருக்காவது உடல் நலம் சரியில்லாவிட்டால் வேறு யாரையாவது நடிக்க வைப்பார்கள். சைதன்யமான நாடகங்கள் நடக்கின்றன, இதனை நாடகம் என்றும் அல்ல டிராமா (திரைப்படம்) என சொல்வோம். இதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. நாம் முக்தியை அடைய வேண்டும் என மனிதர்கள் சொல்கின்றனர். ஆனால் டிராமாவில் இந்த மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. இது நாடகம், இதிலிருந்து யாரையும் நீக்க முடியாது என்பது யாருக்கும் தெரியாது. இது பெரிதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பழமையானதும் கூட, பல முறை நடித்திருக்கிறோம், சக்கரத்தைச் சுற்றினோம். இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. நிச்சயமாக ஒரு கடவுள் இருக்கிறார் மற்றும் இந்த உலகத்தின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்கிறது என புரிந்து கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு நேரமில்லை. பழைய குழந்தைகளின் புத்தியிலேயே இருப்பதில்லை. புயல் காற்று வீசியபடி இருக்கிறது. முன்னே செல்லச் செல்ல விருத்தி (வளர்ச்சி) அடைந்த படி செல்லும். பலர் வருவார்கள், புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். மரணம் அருகாமையில் வரும்போது விரைவாக புரிந்து கொள்வார்கள். நீங்கள் வினாசம் வந்தே வந்து விட்டது, அதற்கு முன் ஆஸ்தியை எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். பிறகு எவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள், இப்போது இரவும் பகலும் நினைவில் இருங்கள், அப்போதுதான் பாவ கர்மங்கள் அழியும் என நீங்கள் சொல்வீர்கள். பாவ கர்மங்கள் நிறைய உள்ளன. அதிக நேரம் தேவைப்படும். இவருக்கும் (பிரம்மாவுக்கும்) கூட எவ்வளவு காலம் பிடித்தது. இன்று வரை பாய்ண்ட்கள் (விஷயங்கள்) இன்னும் இருக்கின்றன. நாமோ மரணம் வந்தே வந்து விட்டது என தண்டோரா அடித்தபடி வந்தோம். புலி வந்தது என்ற கதை உள்ளதல்லவா. இவர்கள் கட்டுக் கதை சொல்கின்றனர் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். ஒரு நாள் வினாசம் வந்தே விடும். பிறகு ஓடி வருவார்கள், ஆனால் மிகவும் லேட் (தாமதம்). இது எல்லைக்கப்பாற்பட்ட விஷயம். பிறகு இதிலிருந்து அவர்கள் கதைகளை உருவாக்கி விட்டனர். பாவ கர்மங்கள் அழிவதற்காக நிறைய யோக அக்கினி தேவைப்படுகிறது. ஆம், புதிய புதியவர்கள் நிறைய வருவார்கள், பழையவர்களை விட அவர்கள் வேகமாக முன்னேறுவார்கள். வாய்ப்பு உள்ளது. தந்தை சொல்கிறார், வீட்டில் இருந்தாலும் இரவில் விழித்தெழுங்கள். யார் எவ்வளவு ஓடுகின்றனரோ. . . இரவில் தூங்காமல் கூட இருங்கள். மிகவும் வேகமாக முன்னேறுவீர்கள். எவ்வளவு மனதுக்கினிய குளிர்ச்சியான ஞானம் இது. படகே கரை சேர்ந்து விடுகிறது. அனைத்து விருப்பங்களும் நிறைவேறி விடுகின்றன. நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. வினாசத்திற்கு முன்பாக தந்தையிடமிருந்து முழுமையிலும் முழுமையான ஆஸ்தியை எடுக்க வேண்டும். இரவும் பகலும் நினைவின் தொடர்பில் இருந்து பாவ கர்மங்களை வினாசம் செய்து முதன்மையான நம்பர் எடுக்க வேண்டும்.



    2. தேகத்துடன் சேர்த்து பழைய உலகின் அனைத்து சம்மந்தங்களை புத்தியிலிருந்து மறந்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். தானம் கொடுத்த பொருளை திரும்பப் பெறக் கூடாது.



    வரதானம் :

    இரட்டை போதையின் ( பாலகன் - எஜமான்) நினைவின் மூலம் எப்போதும் தடையற்றவர் ஆகக் கூடிய மற்றும் ஆக்கக் கூடிய உலகை மாற்றுபவர் ஆகுக.



    எஜமான் மற்றும் பாலகன் - தேவைப்படும்போது எஜமான் தன்மையின் நிலையில் நிலைத்து விடுங்கள் மற்றும் தேவைப்படும்போது பாலகன் தன்மையின் நிலையில் நிலைத்து விடுங்கள், இந்த இரட்டை போதை எப்போதும் தடையற்றவர்களாக ஆக்குவதாகும். இப்படிப்பட்ட ஆத்மாக்களின் பட்டப் பெயர் தடைகளை அழிப்பவர் என்பதாகும். ஆனாலும் தனக்காக மட்டும் தடைகளை அழிப்பவர்கள் அல்ல, முழு உலகத்திற்குமே ஏற்படும் தடைகளை அழிப்பவர்கள், உலகை மாற்றுபவர்கள். யார் தான் சக்திசாலியாக இருக்கின்றனரோ அவர்களுக்கு முன்னால் தடைகள் தாமே பலவீனமாகி விடும்.



    சுலோகன் :

    தனது டபுள் லைட் (ஒளி-இலேசான தன்மை) சொரூபத்தில் நிலைத்திருந்தால் அனைத்து சுமைகளும் நீங்கி விடும்.



    தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள்

    இப்போது குழுவின் ரூபத்தில் ஜுவாலா சொரூப நினைவின் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொருவரும் சைதன்யமான கலங்கரை விளக்கமாகி அமருங்கள். சேவாதாரியாக இருக்கிறீர்கள், அன்பானவர்களாக இருக்கிறீர்கள், ஒரு பலம், ஒரு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள், இது சரியே. ஆனால் இப்போது மாஸ்டர் சர்வ சக்திவானின் நிலையை உலக மேடையின் மீது கொண்டு வாருங்கள். தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள். 



    ***OM SHANTI***