BK Murli 1 March 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 March 2017 Tamil

    01.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் மூன்றாவது கண் மூலம் பாபாவைப் பாருங்கள். பாபாவையே நினைவு செய்யுங்கள். இந்த சரீரத்தைப் பார்த்தாலும் பார்க்காதிருங்கள்.



    கேள்வி :

    இந்தப் பழைய உலகத்தில் இருந்து கொண்டே குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த ஒரு கட்டளை கிடைத்துள்ளது?



    பதில் :

    இனிமையான குழந்தைகளே-நீங்கள் வசித்துக் கொண்டிருக்கின்ற இந்தப் பழைய உலகம் சுடுகாடாக ஆகப்போகின்றது. இதில் இராவண ராஜ்யம் நடக்கின்றது. இதன் மீது மனதை ஈடுபடுத்தாதீர்கள். இங்கே வசித்துக்கொண்டே புத்தியின் பற்றுதல் புது உலகத்தில் செல்ல வேண்டும். இல்லற விவகாரங்களில் இருங்கள். ஆனால் தாமரை மலர் போல் இருங்கள். அனைவருடைய தொடர்பில் இருந்தாலும் பற்றற்று இருங்கள். புத்தியோகம் ஒரு தந்தையிடம் ஈடுபட்டிருக்க வேண்டும். ஞான யோகத்தில் உறுதி ஆகுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் குஷியின் அளவு குறைந்துவிடக் கூடாது. பொறுமையுடன் கர்ம பந்தனங்களைத் துண்டித்துக்கொண்டே செல்லுங்கள்.



    பாடல் :

    பொறுமையாக இரு மனமே......



    ஓம் சாந்தி.

    மனிதர்கள் மனிதர்களுக்கு, துக்கத்தில், நோயில் இருக்கும் போது தைரியமாக இருக்குமாறு சொல்கின்றனர். இங்கு நீங்கள் மனித வழிப்படி செல்வதில்லை. நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குரு எனச்சொல்லப்படும் ஈஸ்வரனுடைய வழியே புகழ் வாய்ந்தது. பகவான் தான் ஸ்ரீமத் கொடுத்திருந்தார். மனிதரில் இருந்து தேவதையாவதற்கு அல்லது தெய்வீக உலகின் எஜமானர் ஆவதற்கான வழிமுறை. இவ்வளவு உயர்ந்த வழிமுறையை வேறு யாராலும் தர இயலாது. ஏனென்றால் மனிதர்கள் அனைவருமே பதீத், மிகத் தாழ்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே அவர்கள் தரும் வழிமுறை கூட அதுபோலத் தான் கொடுப்பார்கள். குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள், நமக்கு சிவபாபா வழிமுறை தந்துகொண்டிருக்கிறார். உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையின் உயர்ந்ததிலும் உயர்ந்த வழிமுறை. அவரையோ யாரும் பிரஷ்டாச்சாரி பதீத் எனச் சொல்ல மாட்டார்கள். பதீதர்கள் தான் அந்த நிராகார் தந்தையை அழைக்கின்றனர். இது மனிதர்களின் விஷயமல்ல. அதனால் மனிதரின் வழிமுறையைக் கேட்காதீர்கள். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்...... இந்தக் கண்கள் மனிதர்களைப் பார்க்கின்றன. ஆனால் உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. அதன் மூலம் அவரைப் பார்க்க வேண்டும். மேலும் அந்தத் தந்தையைத் (சிவ பாபாவைத்) தான் நினைவு செய்ய வேண்டும். வேறு யாருக்கும் மூன்றாவது கண் கிடையாது, அதன் மூலம் அந்த தந்தையைப் பார்ப்பதற்கு ஸ்தூல தந்தையைப் பார்ப்பதற்காகச் செல்கிறோம் புத்தியில் வரும் அப்போது என்றுள்ளது அல்லவா! எனப் புரிந்து கொள்ளுங்கள், ஆத்மாவே ஆத்மா இல்லையா? நீங்கள் ஆத்மாவைப் பார்க்கிறீர்கள். ஜீவாத்மா எனச் சொல்ல வேண்டும். வெறுமனே சகோதரி எனச் சொல்வதால் ஆத்மாவை மறந்து விடுகின்றனர். நீங்கள் இந்த சரீரத்தை மறந்து விடுங்கள் எனப் புரிய வைக்கப்படுகின்றது. தன்னை ஆத்மா என உணருங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். அவரை தெய்வீகக் கண் மூலம் பாருங்கள். ஆத்மாவாகிய உங்களுக்கு இப்போது ஒளி கிடைத்துள்ளது-நம்முடைய தந்தை யார்? எங்கே வசிக்கின்றார்? அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கின்றது? தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கு முயற்சி செய்கின்ற உங்களைப் போல் உலகத்தில் வேறு யாரும் கிடையாது. எதுவரை ஒருவர் குழந்தையாகவே ஆகவில்லையோ, அதுவரை தந்தையிடமிருந்து ஆஸ்தியை எப்படிப் பெற முடியும்? பாபாவின் ஆஸ்தியோ அளவில்லாதது. சூரியவம்சி ராஜா-ராணி ஆவதென்பது உயர்ந்ததிலும் உயர்ந்த தாகும். வக்கீல்படிப்பில் பாஸாகின்றனர். ஆனால் அவர்களிலும் நம்பர்வார் உள்ளனர். சிலரோ அதிகம் சம்பாதிக்கின்றனர். சிலரோ வயிற்றை நிரப்புவதே கடினமாக உள்ளது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் ஈஸ்வரனிடமிருந்து ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இவர் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குரு என்று. இவ்வாறு எந்த ஒரு மனிதரையும் சொல்ல முடியாது. மற்ற அனைவரும் மனித குருக்கள். சத்குரு, சத்தியம் பேசுபவர் ஒருவர் மட்டுமே. மற்ற அனைவரும் பொய் பேசுவோர். அவர்கள் உண்மையான சத்கதியை யாருக்கும் கொடுக்க முடியாது. சத்குருவின் மகிமையை நானும் நீங்களும் கூடமுன்பு அறிந்திருக்கவில்லை. அவர் எப்படி சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குருவாக ஆகிறார் என்பது பற்றி யாருடைய புத்தியிலும் வராது. அவர்களோ சர்வவியாபி எனச் சொல்லி தந்தை என்பதை முடித்து விடுகின்றனர். அவர்கள் பரமாத்மாவைத் தனியாக உணர்வதில்லை, அவர் தந்தை, நாம் குழந்தைகள் என்பதாக. அனைவரும் தந்தையே தந்தை தான் எனச் சொல்லி விடுகின்றனர். இதனினும் கீழாக கல்-மண்ணில் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லிவிட்டிருக்கிறார்கள். பாபா புரிய வைக்கிறார், அப்படியெல்லாம் இல்லை. குழந்தை களாகிய உங்களுக்கு இப்போது நிச்சயம் ஏற்பட்டுள்ளது, நிச்சயமாக சத்தியமான தந்தையாக சத்தியமான ஆசிரியராக, சத்குருவாக பாபா ஒருவரே இருக்கிறார். அவரை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் அங்கே செல்லவும் முடிந்திருக்கும். யார் அறிந்து கொள்ளப்படுகிறாரோ அவருடைய பெயர், வடிவம், தேசம், காலம் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் அறிந்து கொள்வதால் என்ன பயன்? மனிதர்கள் அனைவரும் துக்கத்தில் இருப்பதால் சாந்தியை விரும்புகின்றனர். நாம் உண்மையில் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. அங்கிருந்து நாம் வருகிறோம். ஆத்மாக்களாகிய நம்முடைய சுயதர்மம் சாந்தி. பாபா குருக்களைப் பற்றிச் சொல்கிறார், அவர்கள் யாருக்கும் சத்கதி அளிக்க இயலாது. அவர்கள் பயமுறுத்துகின்றனர், சொல்கின்றனர்-குருவை நிந்திப்பவர்கள் நல்ல கதி அடைய முடியாது என்று. உண்மையில் இந்த அனைத்து விஷயங்களும் எல்லையற்ற தந்தை பற்றியனவாகும்-நீங்கள் எனக்கு நிந்தனை செய்வீர்களானால் சத்யுகத்தில் உயர்ந்த பதவி பெற முடியாது. சந்நியாசியோ இந்த விஷயத்தைப் பேச முடியாது, அதாவது என்னை நிந்தனை செய்ததால் நீ நல்ல பதவி அடைய முடியாது. என்ன பதவி? பதவி பற்றியோ எதுவும் தெரியாது. சாதனை செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் சாதனை செய்வதால் சத்கதி அடைய முடியாது. இந்தத் தந்தை தான் வந்து தைரியம் கொடுக்கிறார். நீங்கள் அறிவீர்கள், நிச்சயமாக 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றியிருக்கிறோம். நாம் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். எதுவரை சுகதாமத்தின் சாட்சாத்காரம் ஆகவில்லையோ, அதுவரை துக்கதாமம் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? இப்போது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள், இது துக்க உலகம்-அல்ப காலத்தின் சுகம். இந்த அல்ப கால ராஜ்யத்தில் எவ்வளவு குஷி இருக்கிறது! காந்தி ராமராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதுவோ இன்னும் மோசமான இராவண ராஜ்யமாக ஆகி விட்டது. அனைவரும் சொல்கின்றனர், பதீத் பிரஷ்டாச்சாரி (மிகக் கீழானது). முன்பு பதீத்தாக மட்டும் இருந்தனர். இப்போதோ பிரஷ்டாச்சாரி எனவும் சொல்கின்றனர். இது கலியுகத்தின் கடைசி. எவ்வளவு லஞ்ச ஊழல்! பாபா வந்து முழு உலகத்தின் மனிதர் களுக்கும் சொல்கிறார், பொறுமையாக இருங்கள். ஆனால் கேட்பதில்லை. கடைசியில் அனைவருக்கும் தெரிந்து விடும். கண்காட்சியிலும் இதையே காட்டுகின்றோம்-எப்படி துக்க உலகத்தை அழித்து சுகமான உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று. கடைசியில் அனைவரும் கேட்பார்களானால் சரி தான் இல்லையா? ஒரு பக்கம் மாயா அனைவரின் கழுத்தையும் நெரித்து திணறச் செய்து விடுகின்றது. மற்றொரு பக்கம் பாபா தமது அறிமுகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போதோ ஏராளமான மனிதர்களுக்கு சப்தம் (அறைகூவல்) போய்ச்சேர வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மகிமை வெளிப்படுகிறதோ அந்த அளவு செய்தித் தாள்களிலும் நன்றாகப் போடப்படும். பிறகு அநேகர் வருவார்கள். இது முயற்சியாகும். தர்மம் அல்லது மடம் முதலியவற்றை ஸ்தாபனை செய்வதோ மிகவும் சுலபமாகும். பௌத்த தர்மத்தின் ஒரு சொற்பொழிவு நிகழ்ந்தது, 60-70 ஆயிரம் பேர் பௌத்தர்களாக ஆக்கி விட்டனர். இங்கோ முயற்சி செய்ய வேண்டியுள்ளது. மாயா மிகவும் வலிமையுடன் எதிர்கொள்கின்றது. அங்கோ மாயாவுடன் யுத்தம் என்ற விஷயமே கிடையாது. இங்கே மாயாவுடன் யுத்தம் செய்வதில் முயற்சி உள்ளது. முக்கியமானது பவித்திரதாவின் விஷயமாகும். வேறு எந்த இடத்திலும் பவித்திரதாவின் விஷயம் கிடையாது. அவர்களுக்கு வீட்டின் மீது வைராக்கியம் வருகிறது அல்லது பாவம் முதலியன செய்கின்றனர் என்றால் சந்நியாசம் செய்து விடுகின்றனர். அதனால் திருடர்களைப் பிடிப்பதற்காகவும் கூட அரசாங்கம் சந்நியாசி சி.ஐ.டி. முதலானவர்களை நியமிக்க வேண்டியுள்ளது. தரகர் ரூபத்திலும், வியாபாரிகளின் ரூபத்திலும் கூட சி.ஐ.டி.க்கள் உள்ளனர். போலீஸின் குப்தமான காரியங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நண்பர் என்ற சாக்கிலும் தங்க வியாபாரிகளுடன் கலந்து விடுகின்றனர். பிறகு எல்லாம் தெரிந்து விடுகின்றது. தொழில் செய்வோர் தொழிலையும் செய்கின்றனர் என்றால் சி.ஐ.டி. வேலையும் செய்கின்றனர். உலகம் மிகுந்த கஷ்டங்களில் சிக்கியுள்ளது. நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். இந்த அனைத்துக் கஷ்டங்களில் இருந்தும் வெளியே விலகி வந்து விட்டீர்கள். உலகத்திலோ கஷ்டத்தின் மேல் கஷ்டம். உங்களுக்கு மிகுந்த பிராப்தி. அவர்களோ துக்கமடைந்து சாகின்றனர். நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், இந்த சரீரத்தை விடுவதற்காக. எங்காவது பழைய சரீரம் அழிந்து போகுமானால் நாம் திரும்ப பாபாவிடம் சென்று விடுவோம். பாபாவுடனும் புது உலகத்துடனும் மனம் ஈடுபட்டு விட்டது எனும்போது பழைய உலகம் என்ன வேலைக்காகும்? இதுவோ பழைய ஆடையாகும். இதன் மீது வைராக்கியம் வந்து விடுகிறது. சந்நியாசிகளுக்கு வைராக்கியம் வருகிறது-வீடு வாசல் மீது. பெண்ணை நாகப்பாம்பு என நினைக்கின்றனர். உங்களுடையதோ உண்மையிலும் உண்மையான வைராக்கியம். பாடவும் படுகின்றது-ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம். ஞானம் கிடைக்கின்றது-பழைய உலகத்தின் மீது வைராக்கியம் கொள்ளுங்கள். இது சுடுகாடாக ஆகப்போகின்றது. அது எல்லைக்குட்பட்ட சந்நியாசம். அவர்களுக்கு இது தெரியாது- இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகின்றது என்று. அவர்கள் சொல்கின்றனர், நாங்கள் வீட்டில் ஒன்றாக (இல்லறம்) வாழ முடியவில்லை என்றால் வீட்டின் மீது வைராக்கியம் வந்து விடுகின்றது. அவர்கள் காட்டுக்குச் சென்று விடுகின்றனர். இது உங்களுடைய எல்லையற்ற வைராக்கியம். ஆனால் இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. நீங்கள் சொல்வீர்கள், எங்களுக்கு முழுமையாக பழைய உலகத்திலிருந்தும்- சுடுகாட்டினிடம் இருந்து வைராக்கியம் உள்ளது என்று. இது இராவண ராஜ்யமாகும். பழைய உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்துகிற அளவுக்கு மூர்க்கராக யார் இருப்பார்கள்? முடிவுக்கான முழு ஆயத்தங்கள் உருவாகும் வரை. சத்யுகம் வருவதற்கான சமயமும் ஆகிவிடும் போது தான் சண்டை தொடங்கும். அநேகர் எழுதுகின்றனர், வீட்டில் தான் அமர்ந்துள்ளோம், ஆனால் என்ன செய்வதென்ற குழப்பத்தில் இருக்கிறோம். பற்றுதல் வைக்கவில்லை என்றால் எப்படி குடும்பத்தைப் பராமரிப்பது? பாபா சொல்கிறார், குழந்தைகள் இருப்பதோ இங்கே தான். ஆனால் புத்தியின் பற்றுதல் இப்போது புது உலகத்தின் மீது செல்ல வேண்டும். உண்மையான அன்பு அதன் மீது இருக்க வேண்டும். இப்பழைய உலகின் மீது வைராக்கியம். தேகத்தின் மீதும் வைராக்கியம். அப்போது மிச்சம் என்ன இருக்கிறது? அநேகர் கேட்கின்றனர்- பாபா, நீங்கள் சொல்கிறீர்கள், இரண்டு பக்கமும் பராமரிக்க வேண்டும் என்று. அதுவும் அவசியம் செய்ய வேண்டும். பராமரிக்கவில்லை என்றால் சந்நியாசிகள் போல் ஆகிவிடுவீர்கள். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே பவித்திரமாக இருங்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கான புருஷார்த்தம் செய்யுங்கள். அப்போது புத்தியோகம் பாபாவிடம் ஈடுபட்டு விடும். நான் ஆத்மா, பாபாவிடம் செல்ல வேண்டும். பாபா சொல்கிறார், இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள். ஞானம் மற்றும் யோகம் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிடுவார்கள். ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தனியாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் யுக்தியும் தனித்தனியாகக் கிடைக்கின்றது. ஏதேனும் கஷ்டமென்றால் கேளுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். நாம் வீடு செல்கிறோம். பிறகு புது ராஜதானியில் வருவோம். இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. பாகத்தை நடிக்க வேண்டும். மோகத்தை விட்டுக் கொண்டே செல்ல வேண்டும். ஒவ்வொருவரின் கர்ம பந்தனமும் தனித்தனி. சிலருக்கு இலேசாகவும் சிலருக்கு பாரமாகவும் இருக்கும். பாபாவிடமிருந்து யுக்தி பெற்று தைரியத்துடன் கர்ம பந்தனங்களைத் துண்டித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதில் குப்த முயற்சி வேண்டும். புத்தியை யாத்திரையில் கொண்டு செல்வதற்கான முயற்சி. அடிக்கடி புத்தியோகம் விடுபட்டுவிடுகிறது. இப்போது பரிபக்குவம் ஆகிவிட்டால் கர்மாதீத் அவஸ்தா வந்து விடும். இப்போதோ அநேக விதமான விகல்பங்களின் (தீய சங்கல்பம்) புயல்கள் வருகின்றன. முற்றிலும் தூக்கமே போய்விடுகின்றது. விகல்பங்களைத் தான் புயல் என்கின்றனர். மற்ற சத்சங்கங்களில் இந்த விஷயங்கள் இருப்பதில்லை. அங்கு இருப்பதோ காதுகளின் ரசனை, எந்த ஒரு பயனும் இல்லை. இங்கோ இது படிப்பு, வருமானத்திற்காக. படிப்பைக் காதுகளின் ரசனை எனச் சொல்ல மாட்டார்கள். ஆக, பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், இது கடைசி ஜென்மம். பழைய உலகம் முடிந்துபோகப் போகிறது. ஏன் ஸ்ரீமத் படி நடந்து உயர்ந்த பதவி பெறக்கூடாது? எதுவரை இதில் சாமர்த்தியசாலி ஆகவில்லையோ, அதுவரை சரீர நிர்வாகத்திற்காகக் கர்மமோ செய்ய வேண்டும். பிறகு இந்த ஈஸ்வரிய சேவையில் ஈடுபட்டுவிட வேண்டும். முழு உலகத்தையும் விடுவிக்க வேண்டும். நீங்கள் விடுவிக்கும் சேனையாக இருக்கிறீர்கள். நரகத்திலிருந்து விடுவித்து சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறீர்கள். அந்த ஸ்தூலமான மீட்புப் படையினருக்கு இது தெரியாது-உலகத்தின் படகு மூழ்கிப் போயுள்ளது என்று. மனிதர்கள் அனைவரையுமே இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்வளவு நஷா இருக்க வேண்டும். அந்த சரீர சம்பந்தமான சமூக சேவகர்களோ அநேகர் உள்ளனர். நீங்கள் எவ்வளவு கொஞ்சமாக இருக்கிறீர்கள்! இங்கு மனிதர்களும் ஏராளமாக உள்ளனர். சத்யுகத்தில் மனிதர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளாகிய நீங்கள் தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள். சோழி போல் உள்ள இந்தக் கடைசி ஜென்மத்தில் வைரம் போல் ஆகவேண்டும். ஓர் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை, அநேக தர்மங்களின் வினாசம். பாபா தான் ஒரு தர்மத்தின் ஸ்தாபனையைச் செய்கிறார், மற்றும் செய்விக்கிறார். கன்றை நடுவதற்கு அல்லது ஸ்தாபனை செய்வதில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. எதுவரை ஒருவரை பாபாவுக்கு சமமாக ஆக்கவில்லையோ, அதுவரை குஷியின் அளவு அதிகரிக்காது. எப்போது ஞான தானம் செய்கிறீர்களோ அப்போது குஷியின் அளவு அதிகரிக்கும். யாரிடம் செல்வம் உள்ளதோ, அவர்கள் தானம் செய்யவில்லை என்றால் அவர்கள் கஞ்சர்கள் எனப்படுவார்கள். இங்கே பிறகு அதுபோல் இல்லை. யாரிடம் செல்வம் உஎள்ளதோ, அவர்களோ கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் இவர்களிடம் செல்வம் இல்லை எனப் புரிந்து கொள்வார்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1) ஈஸ்வரிய (சேல்வேஷன் ஆர்மி) மீட்பு படையினர் ஆகி உலகத்தின் மூழ்கிப்போயுள்ள படகை அக்கரை சேர்க்க வேண்டும். மனிதர்களை சோழி போன்ற நிலையிலிருந்து வைரம் போல் ஆக்க வேண்டும். ஞான செல்வத்தை தானம் செய்வதில் கஞ்சர்களாக ஆகக் கூடாது.



    2) தனது மனதை பாபா மற்றும் புது உலகின் மீது ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழைய தேகத்திலிருந்து எல்லையற்ற வைராகி ஆகவேண்டும்.



    வரதானம் :

    முதாதையர் நினைவின் முலமாக அனைவரையும் பாலனை செய்யக்கூடிய சுட்சூம உள்ளுணர்வு மற்றும் மனசா சக்தி நிரம்பியவர் ஆகுக.



    எந்த தருமத்தினடைய ஆத்மாக்களும் நம்முடைய கிரேட் கிரேட் கிராண்ட பாதர் வம்சாளி பிராமண ஆத்மாக்கள் தான் முதாதையர்கள் உங்களுடைய அளொகிக்க பலனையுடைய செருபம் பாபா முலம் பிராப்தி தரக்கூடிய அனைத்து சக்திகளையும் மற்ற ஆத்மாகளுக்கும் கொடுக்க வேண்டும், எந்த ஆத்மாவிற்கு அந்த சக்தியின் முலமாக நிறப்ப வேண்டும். அதற்காக உங்களுடைய உள்ளுணர்வு ரொம்ப மிகவும் சுத்தமாகவும் மற்றும் மனசா சக்தி நிறம்பியாவராக ஆக வேண்டும்.



    சுலோகன்

    யாரிடத்தில் ஞானத்தினுடைய அழிவில்லாத செல்வம் இருக்கிறதோ அவா்கள் தான் உலகத்தில் அனைவரையும் விட பெரிய செல்வந்தர்கள்.



    ***OM SHANTI***