BK Murli 4 February 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 4 February 2017 Tamil

    04.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே, தலை மீது விகர்மங்களின் சுமை அதிகமாக உள்ளது. ஆகையால், இப்பொழுது சரீரத்தில் நோய்கள் வருகின்றன. கர்மாதீத நிலை அடையும்பொழுது கர்மவினைப் பயன் முடிவடைந்துவிடும்.



    கேள்வி:

    அனைவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட வேண்டும்?



    பதில்:

    உண்மையிலும் உண்மையான ஞான விஞ்ஞான பவன், பாண்டவ பவன், ஞானம் என்றால் ஞானம் (நாலெட்ஜ்) மூலம் செல்வம் மற்றும் விஞ்ஞானம் என்றால் யோகத்தின் (நினைவு) மூலம் ஆரோக்கியம் 21 பிறவிகளுக்காகக் கிடைக்கிறது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள், மனிதர்களுக்கு முக்தி ஜீவன் முக்தியை அளிப்பதற்காக ஞான விஞ்ஞானத்தின் கண்காட்சி வைக்க வேண்டும். ஞான விஞ்ஞான பவன் என்ற பெயர் மீது அனைவருடைய கவனம் திரும்பும்.



    பாடல்:

    நமது தீர்த்த யாத்திரை தனிப்பட்டது ஆகும்



    ஓம்சாந்தி.

    இந்தப் பாடல், நாலாபுறங்களிலும் சுற்றி திரிந்தோம் என்று ஒரு வரி வருகிறது. தீர்த்த யாத்திரையில் நான்கு தாமங்களுக்கும் (சார் தாம்) சுற்றி வருகிறார்கள். ஏன் அவ்விடங்கள் சென்று சுற்றுகிறார்கள்? (இது சத்யுகம், திரேதாயுகம் முதலிய சக்கரத்தின் சுழற்சி ஆகும்) இது சுழற்சி ஆகும். எந்தளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, சக்கரத்தை சுழற்றுவீர்களோ அந்தளவு தான் விகர்மங்கள் வினாசம் ஆகும். எனவே, பாபாவை அதிகமாக நினைவு செய்ய வேண்டும். ஏனெனில், விகர்மங்களின் சுமை தலை மீது அதிகமாக உள்ளது. சரீர வியாதிகளோ இறுதிவரை இருக்கும். இது, கர்ம வினைப்பயன் இறுதிவரை இருப்பதன் அடையாளம் ஆகும். எதுவரை கர்மாதீத நிலையை அடையவில்லையோ அதுவரை ஏதாவது துக்கம் ஏற்படத்தான் செய்கிறது. கடைசியில் இவை அனைத்தும் முடிந்துவிடும். ஞானம் மற்றும் யோகமே நமக்கு முக்கியமானது ஆகும்.தில்லியில் ஞான விஞ்ஞான பவன் உள்ளது. உண்மையிலும் உண்மையான ஞான விஞ்ஞான பவன் இதுவாகும். ஞானம் என்றால் அறிவு (நாலெட்ஜ்), ஜீவன்முக்தி. விஞ்ஞானம் என்றால் முக்தி. நினைவை விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானத்தின் மூலம் முக்தி, ஞானத்தின் மூலம் ஜீவன்முக்தி கிடைக்கிறது. எனவே, ஞான விஞ்ஞான பவன் என்பதைப் பற்றியும் புரிய வைக்க வேண்டும். எனவே, அந்த ஞான விஞ்ஞான பவனில் ஞான விஞ்ஞானத்தின் கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பொழுது அனைத்து மனிதர்கள் மற்றும் அயல்நாட்டினர் வந்து பாரதத்தின் இந்த எளிய யோகம் மற்றும் ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். மனிதர்கள் பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுகின்றனர். எவ்வாறு நாம் உண்மையான கீதை என்று எழுதுகிறோமோ அவ்வாறு ஞான விஞ்ஞான பவன் என்று எழுத வேண்டும். உண்மையான ஞான விஞ்ஞான பவன், பாண்டவ பவன் என்ற பெயர் வைத்திடுங்கள், அப்பொழுது தெளிவாகிவிடும் என்று பாபா வழிகாட்டுகின்றார். பின்னர் அதனுடன், ஞானத்தின் மூலம் ஜீவன் முக்தி, நிலையான செல்வம் (எவர் வெல்தி) மற்றும் விஞ்ஞானம் அதாவது நினைவின் மூலம் நிரந்தர ஆரோக்கியம் (எவர் ஹெல்தி) உடையவராக எவ்வாறு ஆவது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள் என்றும் எழுத வேண்டும். புரிந்து கொண்ட பின்பே, உண்மையிலேயே சுகம் சாந்தி நிறைந்த தேவி தேவதை பதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். ஒருவருக்கு புரிய வைப்பதற்கான விசயம் கிடையாது. இதைப் பற்றி கண்காட்சி, மேளா நடத்தினீர்கள் என்றால் ஆயிரக்கணக்கானோர் வந்து புரிந்து கொள்வார்கள். பாபா யுக்தி (வழி) கூறுகின்றார். உடனே துணியில் அச்சடித்து மாட்டப்பட்டுவிட்டது. எதையும் உருவாக்குவதற்குத் தாமதம் ஆகுவதில்லை. நமது சித்திரங்கள் மிகவும் நன்றாக உள்ளன. எந்த உள்நாட்டினரோ, அயல்நாட்டினரோ வந்து புரிந்து கொள்ளலாம். பாபா கூறுகின்றார்: சிருஷ்டிச் சக்கரத்தின் சித்திரத்தை மிகவும் பெரியதாக உருவாக்க வேண்டும். அதற்கு அருகில் விராட ரூபத்தின் சித்திரம் இருக்க வேண்டும். மேலே குடுமி இருக்க வேண்டும். சிவன் மட்டும் அல்லாது மும்மூர்த்தி அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில், பிரம்மா மூலம் படைத்தல் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த பிராமணர்கள் தான் மறுபிறவியில் வரப்போகிறவர்கள். பிராமணரிலிருந்து தேவதை, தேவதையிலிருந்து சத்திரியர், இந்த சித்திரத்தை நல்ல முறையில் தயார் செய்து அருகில் வைக்க வேண்டும். அப்பொழுது புரிய வைப்பதற்கு எளிதாக இருக்கும். இந்த ஞானம், யோகம் (நினைவு) மூலம் சொர்க்கம் எவ்வாறு உருவாகிறது? இந்த பிராமணர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமணர்களைப் படைத்தார். புரிய வைப்பதற்கான நல்ல யுக்தி தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். சித்திரங்களைப் பற்றி புரிய வைப்பது மிகவும் எளிது ஆகும். பரமபிதா பரமாத்மா மூலம் இராஜயோகத்தைக் கற்று புதிய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பிரம்மாகுமாரர், குமாரிகளாக கோடிகளில் ஒருவர் ஆகின்றார்கள். அதிலும் கூட ஆச்சரியப்படும்படியாக கேட்கிறார்கள், சொல்கிறார்கள், ஓடிவிடுகிறார்கள். இங்கு ஏழைகளும் உள்ளனர், செல்வந்தர்களும் உள்ளனர். நடுத்தர வர்க்கத்தினரும் உள்ளனர். செல்வந்தர்கள் சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.



    ஞான யக்ஞத்தில் அனேக விதமான தடைகள் ஏற்படும், மிகுந்த கொடுமைகள் இழைக்கப்படும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். காமவிகாரம் உடையவர்கள், கோபம் உடையவர்கள் உள்ளனர் அல்லவா. விஷம் கிடைக்காத காரணத்தினால் அடிக்கின்றார்கள். கன்னிகைகளையும் கூட திருமணத்திற்காக மிகவும் அடிக்கின்றனர். யார் ஸ்ரீமத்படி நடக்கின்றனரோ, அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகுவார்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா வருவதே தூய்மை இல்லாத கீழான உலகத்தில் தான். இந்த இராவண இராஜ்யத்தில் முதலில் காமம் மகாஎதிரி ஆகும். சிரேஷ்டாச்சாரி (உயர்ந்த) இராஜ்யத்தை சம்பூரண நிர்விகாரியானது என்று சொல்லப்படுகிறது. அங்கு விகாரம் இருப்பதே இல்லை. ஆகையினால், அங்கே எவ்வாறு பிறப்பு கிடைக்கும் என்ற கேள்வியே எழ முடியாது. இராம இராஜ்யத்தில் விஷம் என்பதே கிடையாது.இதுவோ இராவண இராஜ்யம் ஆகும். ஆகையாலேயே இராவணனை எரிக்கின்றனர். இந்த சமயத்தில் சிரேஷ்டாச்சாரியாக எவரும் இருக்க முடியாது. சிரேஷ்டாச்சாரியாக ஆக்குவது என்பது ஒரு பரமபிதா பரமாத்மாவின் வேலையே ஆகும். சொர்க்கமே விகாரமற்ற உலகம் ஆகும். அங்கே விஷம் என்பதே கிடையாது, ஏனெனில் இராவண இராஜ்யமே கிடையாது.



    இப்பொழுது நீங்கள் நினைவு பலத்தின் மூலம் இராஜ்யத்தை அடைகிறீர்கள். இராவணனுடைய அழிவானது இப்பொழுது நடந்தே ஆக வேண்டும். இப்பொழுது சங்கமயுகம் ஆகும். இப்பொழுது நீங்கள் சம்பூரணம் ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள். சத்யுகத்தின் துவக்கத்தில் விகாரமானவர் ஒருவர்கூட இருக்க முடியாது. சங்கமயுகத்தில் இருவரும் இருக்கின்றனர் அல்லவா. அழுக்கான நீர் மற்றும் தூய நீர், இவை கலப்பதே சங்கமம் என்று சொல்லப்படுகிறது. அழுக்கு நீங்கிய பின்னர் கண்களால் காணமுடியாது. எனவே, இப்பொழுது உலகத்தினுடைய சங்கமம் ஆகும். இது ஆத்மா மற்றும் பரமாத்மாவினுடைய சங்கமம் ஆகும். மற்றபடி நதி மற்றும் கடன் சங்கமமானது பரம்பரையாக இருந்து வருகிறது. நதியானது கடலைச் சென்று அடைகிறது. மற்றபடி தண்ணீரில் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. தந்தையைத் தவிர வேறு எவரும் மனிதரை திரிகாலதரிசி, திரிலோகநாதன் ஆக்க முடியாது. திரிகாலதரிசி, திரிலோகநாதனாக நீங்கள் தான் ஆகிறீர்கள். கிருஷ்ணருக்குக் கூட சொல்ல முடியாது. திரிலோகநாதன், மூன்று காலங்களையும் அறிந்திருப்பவர் ஒருவர் மட்டும் தான். பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு எவரும் திரிலோகநாதன், திரிகாலதரிசியாக கிடையாது. இலட்சுமி, நாராயணருக்கு மூன்று உலகங்கள் மற்றும் மூன்று காலங்களைப் பற்றிய ஞானமே கிடையாது. முதல், இடை, கடை பற்றிய ஞானம் கிடையாது. இப்பொழுது நம்மிடம் முழு ஞானம் உள்ளது. மூன்று உலகங்களைப் பற்றிய ஞானமும் உள்ளது. தந்தையினுடைய பட்டம் எதுவோ, அது பிராமணர்களுக்கும் கூட கிடைக்கும். தேவதைகளுக்கு இந்த ஞானம் கிடையாது. நீங்கள் மிக உயர்ந்தவர்கள். எந்தக் குழந்தைகள் தன்னை திரிலோகநாதன், திரிகாலதரிசி எனப் புரிந்திருக்கிறார்களோ, அவர்கள் பிறரையும் தனக்குச் சமமாக ஆக்குவதில் பிஸியாக இருப்பார்கள். அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஞான, விஞ்ஞானத்தின் மூலம் ஆரோக்கியம், செல்வம் எவ்வாறு கிடைக்கிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு தர்மத்தினருக்கும் எழுத வேண்டும். தில்லியில் ஞான, விஞ்ஞான பவனிலும் கூட இந்தப் பொருட்கள் இருந்ததென்றால் எத்தனை அயல்நாட்டினர் வந்து ஞானம் பெறுவார்கள். கடைசி முடிவில் அனைவரும் புரிந்து கொள்ளத் தான் ஆகவேண்டும். வினாசமும் அவசியம் நடந்தே ஆகவேண்டும். எனில், ஏன் பாபாவை நினைவு செய்து விகர்மங்களையும் வினாசம் செய்யக்கூடாது? மேலும், எவ்வளவுக்கெவ்வளவு ஆத்மா சுத்தம் ஆகுமோ அவ்வளவுக்கவ்வளவு பதவி கூட உயர்ந்ததாகக் கிடைக்கும். ஞானம் மற்றும் விஞ்ஞானமே அனைத்திற்கும் ஆதாரம் ஆகும். முக்திதாமத்தில் இருப்பவர்கள் யோகத்தைத் (நினைவு) தான் விரும்புவார்கள். அந்த ஆத்மாவில் நடிப்பே அவ்வாறு தான் உள்ளது. மேலும், தேவி தேவதை தர்மத்தினர் ஞானத்தைத் தான் விரும்புவார்கள்.



    நாளுக்குநாள் குழந்தைகளாகிய உங்களுடைய முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. நீங்கள் மேலே சென்று கொண்டு இருக்கிறீர்கள் அவர்கள் கீழே விழுந்து கொண்டு இருக்கிறார்கள். உங்களுடையது ஏறும் கலை ஆகும் மற்ற அனைவருடையது இறங்கும் கலை ஆகும். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். அது பொதுவான விசயம் ஆகும். பாக்கி, ஆஸ்தியைப் பெற வேண்டும். கல்பத்திற்கு முன்பு யார் என்ன பதவியை அடைந்தார்களோ, எந்த விதமாக அடைந்தார்களோ அவை அனைத்தையும் சாட்சி ஆகி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்திருக்கிறீர்கள். அனேகர் வருவார்கள். நாளுக்குநாள் நல்ல நல்ல யுக்திகள் கூட வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஞான விஞ்ஞான பவன் என்று பெயர் இருக்க வேண்டும், மேலும், நல்ல நல்ல சித்திரங்கள் இருக்க வேண்டும். உலகில் அனேக தவறான சித்திரங்கள் உள்ளன. ஒழுங்கினம், பகட்டான கிருஷ்ணரது ஓவியம் வரைகிறார்கள். உங்களுக்கு அதன் அவசியமே கிடையாது. அங்கே தேவதைகள் நடனம் ஆடுகின்றனர். அவர்களோ குஷியில் விளையாடுகின்றனர். இந்த ஓவியங்கள் போன்றவை இங்குள்ள வழக்கம் ஆகும். அங்கேயோ இளவரசன் இளவரசி விளையாடுவார்கள். சினிமா முதலிய எதுவும் அங்கு கிடையாது. இந்த அனைத்து விசயங்களையும் நீங்கள் இங்கு தான் அறிந்திருக்கிறீர்கள். தந்தையையும் கூட நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். இவர் யார் என்பது மனிதர்களுடைய புத்தியில் பதிவதே இல்லை. ஏனெனில், ஸ்ரீகிருஷ்ணருடைய பெயரையே கேட்டு வந்திருக்கின்றனர். சித்திரம் கூட முதல் தரமானதாக உள்ளது. பெயரே μயாம் சுந்தர் ஆகும். காமச்சிதையில் அமர்வதால் μயாம் (கருமை) ஆகிவிடுகிறார்கள். ஞானச்சிதையில் அமர்வதால் பின்னர் அரைக்கல்பத்திற்கு வெண்மை (அழகாக) ஆகிவிடுகிறார்கள். சத்யுகத்தில் 21 பிறவிகளுக்கு அழகானவர்களாக இருந்தார், பின்னர் காமச்சிதையில் அமர்ந்து வெவ்வேறு பெயர் உருவத்தில் வந்து μயாம் ஆகிவிட்டார் என்பது புத்தியில் வர வேண்டும். ஏன் கருப்பாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்பதை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலாது. இப்பொழுது எவ்வாறு புரிய வைப்பது, யாருடைய சித்திரத்தைக் கொடுப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். μயாம் மற்றும் சுந்தர் என்று இவரைத் தான் சொல்லப்படுகிறது. இராமசந்திரரை μயாம் சுந்தர் என்று கூறுவதில்லை. அவரை ஏன் கருப்பாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்திருக்கவில்லை. இந்த சமயம் அனைவரும் கருமையே கருமையாக உள்ளனர். இது புரிந்து கொள்வதற்கான மிக நல்ல விசயம் ஆகும். ஆனால், பிறர் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டுமே. கண்காட்சியில் கற்றுக் கொள்வதற்கு மிக நல்ல வாய்ப்பு உள்ளது. நல்ல நல்ல குழந்தைகள் (சகோதரிகள்) மைதானத்திற்கு வர வேண்டும். மற்றவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அனைவருக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும். எவரேனும் நிந்தித்தாலும் பரவாயில்லை, சங்கமயுகத்தில் நிந்தனைகளை அடையத்தான் வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. ஸ்ரீமத்படி நடந்து சிரேஷ்டாச்சாரி ஆகவேண்டும். காமம் என்ற மகா எதிரி மீது வெற்றி அடைந்து முழுமையான விகாரமற்றவர் ஆகவேண்டும். கொடுமைகளைக் கண்டு பயப்பட வேண்டும்.



    2. நினைவு சக்தி மூலம் ஆத்மாவை தூய்மை ஆக்க வேண்டும். திரிகாலதரிசி, திரிலோகநாதன் ஆகி பிறரை தனக்கு சமமாக ஆக்கக்கூடிய சேவையில் நிரந்தர ஈடுபாட்டில் இருக்க வேண்டும். அனைத்து தர்மத்தினருக்கும் அவசியம் செய்தி கொடுக்க வேண்டும்.



    வரதானம்:

    மனம், புத்தியினுடைய ஒருமுகநிலைப்பாட்டின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை பிராப்தியாக அடையக்கூடிய கர்மயோகி ஆவீர்களாக.



    கர்மம் (செயல்) மட்டுமே அனைத்துமாக உள்ளது என்று உலகத்தினர் நினைக்கின்றனர். ஆனால், கர்மம் தனிப்பட்டது அல்ல, கர்மம் மற்றும் நினைவு ஆகிய இரண்டும் இணைந்திருக்கிறது என்று பாப்தாதா கூறுகின்றார்கள். அத்தகைய கர்மயோகியானவர்கள் எத்தகைய கர்மமானாலும் அதில் எளிதாக வெற்றியைப் பலனாகப் பெறுவார்கள். ஸ்தூல கர்மம் செய்கிறீர்களோ, அலௌகீக கர்மம் செய்கிறீர்களோ, ஆனால் கர்மத்துடன் கூடவே நினைவும் இருக்க வேண்டும். அதாவது மனம் மற்றும் புத்தியினுடைய ஒருமுக நிலைப்பாடு இருந்ததென்றால் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். கர்மயோகி ஆத்மாவிற்கு தந்தையின் உதவி தானாகவே கிடைக்கிறது.



    சுலோகன்:

    தந்தையின் அன்பிற்கு கைம்மாறு (ரிடர்ன்) செய்வதற்காக மனதினுள் பற்றற்ற நிலை மற்றும் மன்மனாபவ நிலையில் இருங்கள்.




    ***OM SHANTI***