BK Murli 6 February 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 6 February 2017 Tamil

    06.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான கட்டளைக்குக் கீழ்ப்படிந்த குழந்தைகளே - நீங்கள் எப்பொழுதும் அதீந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும். ஒருபொழுதும் அழக் கூடாது. ஏனென்றால் உங்களுக்கு இப்போது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை கிடைத்திருக்கிறார்.



    கேள்வி :

    அதீந்திரிய சுகம் கோப கோபியர்களாகிய உங்களுக்குத் தான் என்று பாடப்பட்டிருக்கின்றது, தேவதைகளுக்குக் கிடையாது. ஏன்?



    பதில்:

    ஏனென்றால், இப்போது நீங்கள் ஈஸ்வரனின் வாரிசு ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் மனிதர்களை தேவதையாக மாற்றக் கூடியவர்கள். தேவதையாகிய பிறகு இறங்க ஆரம்பிப்பார்கள், கலைகள் குறைந்து கொண்டே போகும். ஆகவே அவர்களின் சுகத்தைப் பற்றிப் பாடப்படவில்லை. எனவே தான் குழந்தைகளாகிய உங்களின் சுகத்தைப் பற்றி மகிமை செய்யப்பட்டு இருக்கின்றது.



    பாடல் :

    எனக்கு உதவி செய்யக்கூடியவரே .....



    ஓம் சாந்தி.

    இதை ஒருவர் கூறியிருக்கின்றாரா? அல்லது இருவர் கூறியிருக்கின்றனரா? ஏனென்றால், தந்தையும் இருக்கின்றார், எனவே இந்த ஓம்சாந்தி யார் கூறியது? இரண்டு பேருமே கூறியிருக்க வேண்டும் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் இரண்டு ஆத்மாக்கள் இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரிகின்றது. ஒன்று ஆத்மா, இன்னொன்று பரமாத்மா. மற்றபடி அனைவரையும் ஜீவாத்மா என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் இங்கு நடிப்பதற்காக வந்திருக்கிறீர்கள். மற்ற தர்மத்தைப் பற்றிய விஷயம் இல்லை. பாபா பாரதத்தில் தான் வருகின்றார். பாரதம் தான் பிறப்பிடம் ஆகும். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்போது எப்படி வருகின்றார். இது யாருக்கும் தெரியவில்லை. சிவன் என்று நிராகாரருக்கு கூறப்படுகிறது. அவருடைய பூஜையும் நடக்கின்றது. சிவ ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள். எது நடந்து முடிந்துவிட்டதோ அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்போது வந்தார், என்ன செய்து விட்டு போனார் என அறியவில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. நீங்கள் யாரிடத்தில் வேண்டுமானாலும் கேட்கலாம். அதாவது யாருடைய இரவைக் கொண்டாடுகிறீர்கள். கோவிலுக்குச் சென்று இவர்கள் யார், இவர்களுடைய இராஜ்யம் எப்போது இருந்தது? பரம்பிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது, அவருடன் யாருடைய சம்பந்தம் இருக்கிறது எனக் கேளுங்கள். நிச்சயம் அனைவரின் சம்பந்தமும் இருக்கின்றது என கூறுவார்கள். அவர் அனைவருக்கும் பரம்பிதா ஆவார். நிச்சயமாக தந்தையிடமிருந்து அனைவருக்கும் சுகத்தின் சொத்து கிடைக்கும். இச்சமயம் துக்க உலகமாக இருக்கின்றது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் துக்கத்தின் கலைகள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. ஏனென்றால் இப்போது இறங்கும் கலை அல்லவா! எவ்வளவு ஆபத்துக்கள் வந்து கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் துக்கத்தை பார்க்கத்தான் வேண்டும். துக்கம் அதிகமாகும் பொழுது ஐயோ! ஐயோ! என்கிறார்கள். அப்போது தான் பாபா வருகின்றார். இச்சமயம் அனைத்து மனிதர்களும் அழுக்காக இருக்கிறார்கள். ஆகவே இதற்கு விகார உலகம் என்கிறார்கள். அங்கே சத்யுகத்தில் துக்கம் இருப்பதில்லை. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இச்சமயம் அனைவரும் இராவணன் என்ற 5 பூதங்களுக்கு வசமாகியிருக்கிறார்கள். இவனே எதிரி ஆவான். துக்கத்தினுடைய கலைகள் கூட இருக்கிறதல்லவா? இப்போது மிகவும் தமோபிரதானம் ஆகிவிட்டது. ஏனென்றால், விகாரத்தில் இருந்து தான் அனைவரும் உருவாகிறார்கள். உலகத்தில் இருப்பவர்களுக்கு அங்கே விகாரம் இல்லை என்பது தெரியவில்லை. அங்கே குழந்தைகள் எப்படி பிறப்பார்கள் என கேட்கிறார்கள். நீங்கள் முதலில் தந்தையைத் தெரிந்து கொண்டு அவரிடமிருந்து ஆஸ்தியை அடையுங்கள் என கூறுங்கள். மற்றபடி அவ்விடத்தின் பழக்க வழக்கங்கள் என்ன இருக்குமோ அது அங்கு இருக்கும். நீங்கள் ஏன் இந்த சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். சிவபாபா இங்கு இருக்கும் பொழுது அங்கே மூலவதனத்தில் ஆத்மாக்கள் இருப்பார்களா என யாரோ கேள்வி கேட்டனர். நிச்சயமாக. இங்கே வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது என்றால், ஆத்மாக்கள் இருக்கிறார்கள் அல்லவா? ஆனால் முதன் முதல் முக்கியமான விஷயம் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். இந்த விஷயங்களோடு உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது. உங்களுடைய ஞானக் கண் திறந்து விடும் பொழுது எந்த ஒரு கேள்வியும் கேட்பதற்கு இருக்காது. என்னை நினையுங்கள் மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். முக்தி மட்டும் பெற விரும்புகிறீர்கள் என்றால், மன்மனாபவ (என்னை நினையுங்கள்) இராஜ்யத்தை அடைய விரும்புகிறீர்கள் என்றால் மத்யாஜி பவ (ஆஸ்தியை நினையுங்கள்)



    நம்மைப் படிக்க வைப்பவர் யார் என உங்களுக்குத் தெரியும். இந்த உணர்வோட்டமுள்ள டப்பாவில் உணர்வோட்டமுள்ள வைரம் அமர்ந்திருக்கிறது. அவர் சத்தியமான தந்தை ஆவார். பரமாத்மா தான் சரீரத்தின் மூலமாகப் பேசுகின்றார். யாராவது இறந்து விட்டால் அவரது ஆத்மா அழைக்கப்படுகிறது. அச்சமயம் நமது தந்தையின் ஆத்மா வந்திருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. இரண்டு ஆத்மாக்கள் ஆகிவிட்டது. அந்த ஆத்மா வந்து நுகர்கிறது. இது அனைத்தும் நாடகமாகும். ஆனால் இருப்பினும் பாவனையின் பலன் கிடைத்துவிடுகிறது. முன்பெல்லாம் பிராமணர்களுக்குள் சிறிது சக்தி இருந்தது. வந்து பேசினர். சுவையுடன் பரிமாறப்பட்டது. அது ஆத்மா என்ற ஞானம் இல்லை. ஆத்மா தான் அந்த வாசனையை எடுக்கிறது. பாபா எந்த வாசனையையும் எடுப்பதில்லை. ஏனென்றால் அவர் எதையும் அனுபவிக்காதவர். ஆத்மா தான் அனுபவிக்கிறது. நான் எதையும் அனுபவிக்காதவன் என்று பாபா கூறுகின்றார். ஆத்மா தான் விருப்பத்தை அடைகிறது. நான் விரும்புவதில்லை, என்னை நினைவு செய்வதால் உங்களுடைய விகர்மம் எரிந்து போகும். சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். சிவன் நிராகாரராக இருக்கிறார். ஆத்மாவின் ஜெயந்தி கூட இருக்கிறது. ஆத்மா உடலில் வந்து பிரவேசிக்கிறது. சிவன் தான் பதீத பாவனர். அவரைத்தான் இந்த இராவணனின் துக்கத்தில் இருந்து விடுவிக்க வாருங்கள் என அழைக்கிறார்கள். இச்சமயம் 5 விகாரங்கள் சர்வ வியாபியாக இருக்கிறது. பாதி பாதி அல்லவா? இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது மற்ற தர்மத்தினர் வருகிறார்கள். அனைவரும் அவரவர் நடிப்பை நடிக்க வரவேண்டும். நான் இங்கே தான் வருகிறேன். இந்த உணர்வோட்டம் உடைய டப்பாவில் கிளிஞ்சலை (சோழி) வைரமாக மாற்றக்கூடிய பாபா அமர்ந்திருக்கிறார் என உங்களுக்குத் தெரியும். அவரே சத்சித் ஆனந்த சொரூபமானவர், ஞானக்கடல் ஆவார். பாபா நினைவு படுத்துகின்றார் என்றால் நினைக்கிறீர்கள், பிறகு மறந்து போகிறீர்கள். ஏனென்றால், போப் போன்றவர்களுக்கு சைத்தன்ய உடல் இருக்கிறது. புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மகிமை பாடுகிறர்கள். இங்கேயோ இவர் டப்பாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வைரம் ஆவார். யாருக்கும் தெரிவதில்லை. அவர் ஒரு முறைதான் வருகிறார். பாபா இவருக்குள் அமர்ந்திருக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். இவர் நம்முடைய சத்தியமான பாபா, சத்தியமான டீச்சர் ஆவார், இது பள்ளிக்கூடம் அல்லவா. உங்களிலும் கூட சிலர் மறந்து போகிறார்கள். நடத்தையின் மூலம் அனைத்தும் தெரிந்து விடுகிறது. சில குழந்தைகள் சிறிய பரிட்சை வந்த உடனேயே வெறுத்துப் போகிறார்கள். ஆனால் பொதுவாக குழந்தைகள் எதைக் கொடுத்தாலும், அளித்தாலும் அன்பு காட்டினாலும் சரி பாபா! என்பர். இவ்வாறு. நல்ல குழந்தைகள் கட்டளைக்குக் கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளே! ஒரு போதும் அழாதீர்கள் என பாபா கூறுகின்றார். உங்களுக்கு எவ்வளவு பெரிய தந்தை மற்றும் பிரியதர்ஷன் இருக்கிறார். அவருடையவர் ஆகிய பிறகு நீங்கள் அழுகிறீர்கள். நான் உங்களுடைய பெரிய தந்தை அமர்ந்திருக்கிறேன். மாயை மூக்கை பிடிக்கும் பொழுது நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? அதீந்திரிய சுகத்தைக் கோப போபியர்களிடம் கேளுங்கள் என மகிமை பாடுகிறார்கள். ஆனால் மாயை மறக்க வைத்து விடுகிறது. பாபாவிற்கு அர்ப்பணமாக வேண்டும். இந்த வித்தியாசம் நினைவு இருந்தால் குஷி இருக்கும். பாபா உண்மையிலும் உண்மையான இந்திரன் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்த தண்ணீரின் மழை பொழியக்கூடிய இந்திரன் கிடையாது. இவர் ஞான இந்திரன் ஆவார். வானவில் இருக்கிறது. அதில் நிறைய நிறங்கள் இருக்கிறது. ஆனால் அதில் மூன்று முக்கியமானதாகும். பாபா இச்சமயம் உங்களை திரிகால தர்சியாக மாற்றுகின்றார். திரிகாலதர்சி என்றால் முதல், இடை, இறுதியை அறிந்திருக்கக்கூடிய சுயதர்ஷன சக்கரதாரி. மூன்று காலங்களையும் அறிந்தவர். இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான் பொருந்தும். இது இந்திர சபை என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே பாபா எழுதிக் கொண்டே இருக்கிறார் - எந்த ஒரு விகாரி, மிகவும் அழுக்கானவர்கள் இந்திர சபையில் இருக்கக் கூடாது. நீங்களும் ஞான நடனம் ஆடக்கூடிய தேவதைகள். ஞான இந்திரனின் தேவதைகளுக்குக் கட்டளை என்ன வென்றால் எந்த ஒரு விகாரி மனிதனையும் இங்கே அழைத்து வரக்கூடாது. குழந்தைகளாகிய உங்களிடம் விகாரிகள் தான் விகாரமற்றவர்களாக மாறுவதற்காக வருகிறார்கள். ஆனால் என்னுடைய சபையில் வரக்கூடாது. சட்டம் இருக்கிறதல்லவா. அவ்வாறே நான் இங்கே பலரிடம் பேசுகின்றேன். நேர்மையான, நல்ல குழந்தை என்றால் அன்பு வருகிறது. எப்படி காந்தியிடம் அனைவருக்கும் அன்பு இருந்ததோ அதுபோல வேலை நன்றாக செய்தார் அல்லவா. இந்த ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது அப்படியே ரிப்பீட் ஆகிக் கொண்டு இருக்கின்றது. யாருடைய குற்றமும் இல்லை. இராவணன் அனைவரையும் கீழானவராக மாற்றத்தான் வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகள் தான் அறிகிறீர்கள். வேறு யார் அறிவார்கள். எதையும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் போன கல்பத்தில் பாபாவிற்கு உதவி செய்தவர்களே. நாம் இந்த இராஜ்ஜியத்தை நாம் எப்படி அடைந்தோம் என்பது சத்யுகத்தில் தெரியாது.



    இந்த எல்லையற்ற தந்தை எவ்வளவு பெரிய ஆள் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா தான் பாரதத்தை கிளிஞ்சலில் இருந்து வைரம் போன்று மாற்றுகின்றார். சொர்க்கத்தில் ஒரே ஒரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்போது மீண்டும் அதனுடைய ஸ்தாபனை ஆகிக்கொண்டு இருக்கின்றது. முழு உலகிலும் அமைதியை உருவாக்குவது பரம்பிதா பரமாத்மாவின் பொறுப்பு ஆகும். இந்த தந்தை தான் வந்து அனைவரையும் செல்வந்தராக மாற்றுகின்றார். நீங்கள் ஏன் ஏழையாகியிருக்கின்றீர்கள் என புரிய வைக்கின்றார். இராவண இராஜ்ஜியம் எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என நீங்கள் அறியவில்லை. இராவணனின் உருவத்தை உருவாக்கி எரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இச்சமயம் பக்தி மார்க்கத்தின் இறங்கும் கலையாகும். இராம இராஜ்யம் என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. நீங்கள் இச்சமயம் ஈஸ்வரனுடைய குழந்தைகள். ஏனென்றால் கலைகள் குறைந்துக் கொண்டே போகின்றது. இச்சமயம் உங்களுக்குள் மிகவும் ராயல்ட்டி (ராஜ தன்மை) வேண்டும். நீங்கள் மனிதர்களை தேவதையாக மாற்றக்கூடியவர்கள். அதீந்திரிய சுகம் கூட கோபகோபியர்களிடம் இருக்கிறது என பாடப்பட்டுள்ளது. இலட்சுமி நாராயணனிடம் அத்தீந்திரிய சுகம் பற்றிக் கூறுங்கள் என ஒரு போதும் கூறப்படுவதில்லை. ஆனால் கோப கோபியர்களிடம் கேளுங்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் ஈஸ்வரிய வாரிசுகள். தேவதைகள் ஆகிறீர்கள் பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகிறது. இராஜாக்கள் எவ்வளவு பந்தாவாக நடக்கிறார்கள். ஆனால் அனைவருமே தமோபிரதானமானவர்கள்.



    உங்களிடம் உள்ள படங்களில் பிரம்மாவின் சித்திரத்தைப் பார்த்து பல மனிதர்கள் குழப்பம் அடைகிறார்கள். எனவே குழந்தைகளிடம் லட்சுமி நாராயணனின் படம் ஒன்று திரிமூர்த்தியுடன், ஒன்று திரிமூர்த்தி இல்லாமல் இருக்கிறது. அதில் சிவன் மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. இரண்டும் இருக்க வேண்டும். ஒருவேளை பிரம்மாவைப் பற்றி ஏதாவது கூறினால் யாருடைய உடலில் வருவார் எனக் கூறுங்கள். பிரம்மா சரஸ்வதி தான் இலட்சுமி நாராயணன் ஆகிறார்கள். நிச்சயமாக பிரம்மாவின் உடலில் வந்தால் தான் பிராமணர்கள் உருவாக முடியும். இல்லையென்றால் இவ்வளவு குழந்தைகள் எப்படி உருவாகுவார்கள்? இந்த பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார் பிரம்மா குமாரிகள் ஆவார்கள். நீங்களும் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் ஆவீர்கள். பிரஜா பிதா இல்லாமல் சிருஷ்டியை எப்படி படைப்பார்? இப்போது இந்த புது சிருஷ்டியைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார். நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை இப்போது பிராமணர் ஆகவில்லை என்றால் தேவதையாகவும் ஆக முடியாது. யாருடைய நாற்று நடப்பட வேண்டுமோ அவர்களே இங்கு வருவார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். பாபா ஒவ்வொருவரின் நிலையையும் அறிகிறார். சிலர் ஏதே ஒரு விஷயத்தின் பசியில் இருக்கிறார்கள். சிலர் பேஷனின் (ஆடம்பரம்) பசியில் இருக்கிறார்கள். பாபாவிடம் வந்து பாபா நாங்கள் சரியாகச் சென்று கொண்டு இருக்கிறோமா என்று கேளுங்கள். இந்த விஷயம் எங்களுடையது சரியா? அல்லது தவறா? அப்போது இவர்களுக்குப் பயம் இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். பாருங்கள் காந்திஜீக்கு அனைவரும் எவ்வளவு உதவி செய்தார்கள். ஆனால் அவர் தான் சாப்பிடவில்லை. அனைத்தையும் தேசத்திற்காக செய்தார். என்ன இருந்தாலும் காந்தியோ மனிதர். இவரோ எல்லையற்ற தந்தையாவார். சிவபாபா வள்ளலாக இருக்கின்றார், அனைத்தையும் குழந்தைகளுக்காகச் செய்கின்றார். நீங்கள் ஒரு ரூபாய் ஏன் கொடுக்கிறீர்கள் என கேட்கப்படுகிறது. 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அடைவதற்கு சிவபாபாவிற்கு கொடுக்கிறோம் என கூறுகிறார்கள். நான் கொடுத்தேன் என யாரும் நினைக்காதீர். நான் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அடைகிறேன். பாபா ஏழைப்பங்காளன். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அளிக்கிறார் என்பது புத்தியில் இருக்கட்டும். அனைத்தும் குழந்தைகளின் காரியத்திற்காகத் தான் பயன்படுகிறது. காந்தியும் காரியத்தில் பயன்படுத்தினார். தனக்காக எதையும் சேர்க்கவில்லை. தன்னிடம் என்ன இருந்ததோ அதை கொடுத்து விட்டார். கொடுக்கக்கூடியவர் ஒருபோதும் தனக்காக சேர்ப்பதில்லை. சன்னியாசிகள் விட்டு விட்டு சென்று விடுகிறர்கள். பிறகு வந்து சேர்க்கிறார்கள். அவர்களிடம் நிறைய பைசா இருக்கின்றது. எத்தனை கட்டிடங்கள் இருக்கின்றது. உண்மையில் சன்னியாசிகளிடம் ஒரு பைசா கூட கையில் இருக்கக்கூடாது. அப்படி சட்டம் இருக்கின்றது. அவர்கள் ஒருபோதும் வள்ளல் ஆகமுடியாது. நீங்கள் பாபாவின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். பாபா இது அனைத்தும் உங்களுடையது. நீங்கள் எப்படி கூறுகின்றீர்களோ அவ்வாறே காரியத்தில் பயன்படுத்துவோம். பாபா வழி கூறிக்கொண்டே இருக்கின்றார். குழந்தைகள் அமல்படுத்த வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. ஒவ்வோரு அடியிலும் பாபாவின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும். எங்கே உட்கார வைக்கிறாரோ, என்ன சாப்பிட கொடுக்கிறாரோ ...... இப்படி கட்டளைக்கு கீழ்ப்படிந்தவராகி இருக்க வேண்டும்.



    2. தன்னுடைய நடத்தை மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும், நாம் ஈஸ்வரிய வாரிசுகள். ஆகவே மிகவும் இராயல்டியுடன் நடக்க வேண்டும். ஒருபோதும் அழக்கூடாது.



    வரதானம் :

    கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலை மூலமாக அனைவரின் ஆசீர்வாதத்தையும் அடையக் கூடியவராகி எளிதாக வெற்றி மூர்த்தி ஆகுக.



    கர்மத்தில் யோகம் மற்றும் யோகத்தில் கர்மம் - இவ்வாறு கர்ம யோகி அதாவது சிரேஷ்ட நினைவு, சிரேஷ்ட நிலை மற்றும் சிரேஷ்ட வாயுமண்டலத்தை உருவாக்கக்கூடியவர், அனைவரின் ஆசீர்வாதத்திற்கும் அதிகாரி ஆகிவிடுகிறார். கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலையால் ஒவ்வொரு கர்மத்திலும் பாபா மூலமாக ஆசீர்வாதமும் கிடைக்கின்றது. மேலும் யாருடைய உறவு தொடர்பில் வருகிறார்களோ அவர்களிடமிருந்தும் கூட ஆசீர்வாதம் கிடைக்கின்றது. அனைவரும் அவர்களை நல்லவர் என ஏற்றுக் கொள்கிறார்கள். நல்லவர் என ஏற்பதே ஆசீர்வாதமாகும். எங்கே ஆசிர்வாதம் இருக்கின்றதோ அங்கே சகயோகம் இருக்கின்றது. மேலும் இந்த ஆசீர்வாதம் மற்றும் சகயோகம் தான் வெற்றி மூர்த்தியாக மாற்றுகின்றது.



    சுலோகன் :

    எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து மகிழ்ச்சி என்ற பொக்கிஷத்தை வழங்குதலே உண்மையான சேவையாகும்.



    ***OM SHANTI***