BK Murli 8 February 2017 Tamil
08.02.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா வந்துள்ளார், குழந்தைகளாகிய உங்களைத் தமக்குச் சமமாக அசரீரி ஆக்குவதற்காக. எப்போது நீங்கள் அசரீரி ஆகிறீர்களோ, அப்போது பாபாவுடன் கூடவே செல்ல முடியும்.
கேள்வி :
பாபாவின் எந்தக் கட்டளைப்படி நடப்பவர்கள் நிரந்தர யோகி ஆக முடியும்?
பதில் :
பாபாவின் முதல் கட்டளையாவது, குழந்தைகளே, நீங்கள் இந்த தேகத்தை மறக்க வேண்டும். இதனை மறந்து தன்னை ஆத்மா என நிச்சயம் செய்வீர்களானால் பாபாவின் நினைவு நிரந்தரமாக இருக்கும். நான் நிராகாரி உலகில் வசிக்க் கூடிய ஆத்மா, சதா இந்த ஒரே ஒரு பாடத்தை உறுதி (பக்காவாக) ஆக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தேக அகங்காரம் முடிந்து போகும். புத்தியில் எந்த ஒரு தேகதாரியின் நினைவும் வராமல் இருக்க வேண்டும். அப்போது நிரந்தர யோகி ஆக முடியும்.
பாடல் :
உங்களை அடைந்த நாங்கள்.........
ஓம் சாந்தி.
இதை யார் சொன்னார்கள்? ஆத்மா சொன்னது. ஓம் என்றால் நான் சாந்த சொரூபமாக இருக்கிறேன். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். முதல் முதல் தன்னை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள். நாம் ஆத்மா என்பது முதலில். பிறகு இந்த சரீரம் கிடைக்கின்றது. நாம் ஆத்மா யாருடைய குழந்தை? அந்த சாந்தியின் கடல், ஞானத்தின் கடலாகிய பரமபிதா பரமாத்மாவின் குழந்தை. அவர் சதா சாந்தமாக இருக்கிறார். நாம் ஆத்மா ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுக்கிறோம். பார்ட் நடிக்கிறோம். சிவபாபாவோ விசித்திரமாக (சரீரமற்றவராக) உள்ளார். அந்த ஆத்மாவுக்குத் தம்முடைய சரீரம் கிடையாது. உங்களுக்கோ தன்னுடைய சரீரம் என்பது உள்ளது. அதன் மூலம் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், நான் எப்போதுமே விசித்திரமாக உள்ளேன். பிரம்மா விஷ்ணு சங்கர் சூட்சும சித்திரம் உள்ளவர்கள். நான் விசித்திரமாக உள்ளேன். ஆத்மாக்களாகிய நீங்களும் என்னோடு கூட நிர்வாண்தாமத்தில் (சப்தத்தைக் கடந்த உலகில்) வசிப்பவர்கள் தான். விசித்திரமாக இருக்கும் பாபா அமர்ந்து சொல்கிறார். ஆத்மாக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள். இது துக்க உலகம். நாங்கள் தூய்மை இல்லாமல் இருக்கிறோம் எனச் சொல்கிறீர்கள். ஆனால் நம்மை இது போல் தூய்மை இல்லாமல் யார் ஆக்கினார்? பாபாவோ அது போல் ஆக்கவில்லையே! பாபாவுக்கோ மகிமை செய்கின்றனர், நீங்கள் தான் தாயும் தந்தையும்... உங்களிடம் கிடைத்த அளவற்ற சுகத்தை பாரதவாசிகள் அனைவரும் நினைவு செய்கின்றனர். இது சகோதரத்துவம். பிறகு எப்போது சரீரதாரி ஆகின்றனரோ, பிரஜாபிதா பிரம்மா மூலம் படைப்பு நடைபெறுகின்றது. ஆத்மாவோ அழியாதது. ஆனால் ஆத்மாக்கள் அனைவரும் தந்தையர் என்று சொல்ல மாட்டார்கள். சந்நியாசிகள், சிவோஹம் ததத்வம் அதாவது ஈஸ்வரன் சர்வவியாபி எனச் சொல்கின்றனர். பிறகோ அனைவரும் தந்தையர் ஆகி விடுகின்றனர். இதுவோ விதிமுறைக்குப் புறம்பானதாக ஆகி விடும். முக்தி அல்லது ஜீவன்முக்தியின் ஆஸ்தியை அடைய வேண்டும் என்று தான் குழந்தைகள் அழைக்கின்றனர். ஆக, எப்போது இங்கே வருகிறீர்களோ, அப்போது தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள், நாம் ஆத்மா. நான் பரமாத்மா என்பதல்ல. நாம் ஆத்மா, பரமபிதா பரமாத்மாவுக்கு நாம் அனைவரும் குழந்தைகள், பிராமண், பிராமணிகள். நீங்கள் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள் மற்றும் சிவபாபாவின் பேரக்குழந்தைகள் ஆகிறீர்கள். அனைவரும் பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கின்றனர். ஓ காட் ஃபாதர் என அழைக்கின்றனர். பிறகு அவரை சர்வவியாபி எனச் சொல்கின்றனர். அவ்வாறானால் ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்? பக்தி மார்க்கத்தில் அனைவரும் பகவானை நினைவு செய்கின்றனர். பகவான் ஒருவரே! நீங்கள் அனைவரும் பக்தர்கள். மணமகள்கள் அநேகர். மணமகன் ஒருவர். அவர் தந்தை, மற்ற அனைவரும் குழந்தைகள். ஆகவே வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள். பாபாவின் கட்டளையாவது, குழந்தைகளே, நீங்கள் இந்த தேகத்தையும் கூட நினைவு செய்யக் கூடாது. தன்னை ஆத்மா என உணருங்கள். ஆத்மா தான் சொல்கிறது, நான் துக்கமாக இருக்கிறேன். நான் பிரஷ்டாச்சாரி (மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறேன்). இங்கே தெய்விக இராஜ்யமோ கிடையாது. 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இராஜா ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகளும் கூட சதா சுகமாக இருந்தனர். அகால மரணம் ஏற்படவில்லை. மிகக் கொஞ்சம் பேர் இருந்தனர். இதை பாரதவாசிகள் அனைவரும் மறந்து விட்டனர், அதாவது நமது பாரதம் முதல் முதலில் சொர்க்கமாக இருந்தது. ஹெவன்லிகாட் ஃ.பாதர் எனச் சொல்லவும் செய்கின்றனர். மூலவதனத்தை ஹெவன் எனச் சொல்லப் படுவதில்லை. நாம் ஆத்மா நிராகாரி உலகத்தில் வசிப்பவர்கள், இதை நினைவு வைக்க வேண்டும். வேறு எந்த ஒரு தேகதாரியின் நினைவும் வரக் கூடாது. தேக அகங்காரத்தை விட்டுத் தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். கும்பமேளா என எதைச் சொல்கின்றனரோ. அது ஒன்றும் அழகிய சங்கமயுகத்தின் மேளா கிடையாது. கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பம் தான் சங்கமயுகம் எனச் சொல்லப் படுகின்றது. கலியுகம் தூய்மை இல்லாத உலகம் தான். ஒருவர் கூடப் தூய்மையானவர் கிடையாது.
மகாத்மாக்களும் உள்ளனர் என்ற போதிலும் தூய்மையானவர்கள் யாருமே கிடையாது. அனைவருமே இது பதீத் (தூய்மையற்ற) உலகம் என்றே சொல்கின்றனர். பாவனமாவதற்காகக் (தூய்மையாவதற்காக) கும்பமேளாவுக்குச் செல்கின்றனர். கங்கையில் குளிக்கின்றனர் என்றால் நிச்சயமாகப் பதீத்தராகத் தான் உள்ளனர். சாது சந்நியாசிகள் அனைவரும் பாவனமாவதற்காகச் செல்கின்றனர். பாபா சொல்கிறார், எப்போது மிகவும் பாரதத்தில் தாழ்ந்த நிலை உள்ளதோ, அப்போது நான் வருகிறேன். மனிதர்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக ஆகி விடுகின்றனர் நான் வந்து இவர்கள் அனைவருக்கும் விமோசனம் அளிக்கிறேன். அகல்யாக்கள், கணிகைகள், (விலை மாதர்கள்) சாதுக்கள், குருமார் முதலானவர்களுக்கு விமோசனம் அளிப்பதற்காக நான் வருகிறேன். ஏனென்றால் அவர்களோ பாவன ஆத்மாக்களாக இல்லை. பதீத் உலகத்தில் யாருமே பாவனமானவர்கள் கிடையாது. பாவன உலகத்தில் பிறகு யாரும் பதீத்தாக இருக்க மாட்டார்கள். அதற்குச் சட்டம் கிடையாது. சாதுக்கள் தங்களை மகான் ஆத்மா என எங்கே புரிந்து கொள்கிறார்கள்? அவர்களோ தங்களைப் பரமாத்மா எனப் புரிந்து கொண்டுள்ளனர். சிவோஹம் (நானே சிவன்) எனச் சொல்கின்றனர். பழைய காலத்தில் மகாத்மாக்கள் முதலானவர்களோ, பரமாத்மா முடிவற்றவர் எனச் சொன்னார்கள். அந்தப் படைப்பவர் மற்றும் அவருடைய படைப்பும் முடிவற்றது என்கின்றனர். அப்படியானால் பிறகு நிர்வாண்தாமத்திற்கு எப்படி அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்குத் தெரியாது, ஜீவன்முக்த் நிலையிலும் பாரதம் இருந்தது என்று. அச்சமயம் வேறு எந்த ஒரு தர்மமும் இல்லாமல் இருந்தது. சூரியவம்சத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சந்திரவம்சத்தை சேர்நத்வர்கள் மட்டுமே இருந்தனர். பிறகு சூரியவம்சிகள் மாறி சந்திரவம்சியாக ஆனார்கள். புனர்ஜென்மத்திலோ வருகின்றனர் இல்லையா? 84 மறுபிறவி எடுக்கின்றனர். 84 லட்சம் அல்ல, இதுவோ மிகப் பெரிய பொய்யாகும். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்றால் 84 பிறவிகள் வேண்டும் அல்லவா? பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், இப்போது வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள். நாம் ஆத்மா மிகமிக அன்பான பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள். அனைவரும் பரமாத்மாவின் ரூபம் என்பது கிடையாது. இதுவோ நடக்க முடியாதது. இது தான் ஒரு பெரிய தவறாகும். தந்தை ஒருவர் தான். மற்ற அனைவரும் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். பிறகு எப்போது சரீரத்தில் வருகின்றனரோ, அப்போது பிரஜாபிதா பிரம்மாவை கிரேட் கிரேட் கிரான்ட் ஃபாதர் எனச் சொல்வார்கள் இல்லையா? முதல் முதலில் பிராமணர்கள். பாரதத்தில் விராட ரூபத்தையும் காட்டுகின்றனர். பிராமணர்கள் உயர்ந்தவர்கள், பகவானின் உயர்ந்தவரிலும் உயர்ந்த குழந்தைகள். இப்போது நீங்கள் ஈஸ்வரியக் குழந்தைகளாக ஆகி இருக்கிறீர்கள். சிவபாபாவின் பேரன்கள் மற்றும் பேத்திகள், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள். நீங்கள் ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து பெறுகிறீர்கள். சிவபாபா புத்தி என்ற பையை நிரப்புகிறவர். காலி செய்வது மாயா. பதீத பாவனா சீதாராம் எனப்பாடவும் செய்கின்றனர். ஆனால் மனிதர்களின் புத்தியில் திரேதாயுகத்தின் ராமர் சீதை உள்ளனர். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், சத்யுகம், திரேதாயுகம் என்பது சுகதாமம். அங்கே துக்கத்தின் பெயர் அடையாளமே இருக்காது. பதீத பாவனர் அனைவருக்கும் தந்தை ஒருவர் தாம். இங்கோ அனுமான் கோவிலுக்கும் சென்று நீங்கள் தாம் தாயும் தந்தையும்........ எனச் சொல்கின்றனர். அதுபோல் எப்படி இருக்க முடியும்? அனைவர்க்கும் சத்கதி அளிப்பவர் பதீத பாவனர் ஒருவரே! அவர் தான் ஞானக்கடல் ஆவார். கடலில் இருந்து வெளியாகின்ற நதிகள் எல்லாம் வெறும் தண்ணீர் தான். தண்ணீரோ பதீத பாவன் ஆக முடியாது. தண்ணீரில் குளிப்பதால் பாவனமாகி முக்தி அடைந்து விடுவீர்கள் என்று வேறு எந்த ஒரு கண்டத்திலும் சொல்ல மாட்டார்கள்,. இதுவோ நடக்க முடியாதது. ஒன்று முக்தி, இன்னொன்று ஜீவன்முக்தி. சத்கதி அதாவது ஜீவன்முக்தி அளிக்கும் வள்ளல் ஒருவர் தான். இது பதீத் உலகம். பாரதவாசிகள் அறிவார்கள், 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அப்போது வேறு எந்த ஒரு கண்டமும் கிடையாது. 5000 ஆண்டுகளின் விஷயம் நீங்கள் மறந்து விட்டீர்கள். பின்னால் பிற கண்டங்கள் வருகின்றன. இப்போது இவ்வளவு அதிகம் ஆகி விட்டது. பாருங்கள், குழந்தைகளே, இதை எப்போதும் நினைவு வையுங்கள், எப்போது கேட்கிறீர்களோ, அப்போது இதை தாதா (பிரம்மா) பேசுகிறார், அல்லது பாபா பேசுகிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாம். அனைவரையும் படைப்பவராகிய சிவபாபா அமர்ந்து படைப்பின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். ரிஷி முனியோ, அனைவரும் சொல்லிக் கொண்டே உள்ளனர் பரமாத்மா முடிவற்றவர் என்று. எங்களுக்கு அது பற்றித் தெரியாது என்று சொல்கின்றனர். ஆஸ்திகரோ, பிராமணர்களாகிய நீங்கள். பாபா நமக்கு தம்மைப் பற்றிய மற்றும் படைப்பினைப் பற்றிய ஞானம் தருகிறார் என்பது நிச்சயம் உள்ளது. திரிகாலதரிசி ஆக்குகிறார். ரிஷி முனி முதலானவர்கள் யாருமே திரிகாலதரிசி கிடையாது. பாபா சொல்கிறார், தேவி தேவதா கூடத் திரிகாலதரிசி கிடையாது. பிராமணர்கள் மட்டுமே திரிகாலதரிசி ஆவார்கள். இது பிராமணர்களின் சோட்டி (குடுமி-உயர்ந்த நிலை). பிராமணர்கள் மூலம் புதிய படைப்பு நடைபெறுகின்றது. நீங்கள் அனைவரிலும் உத்தமமானவர்கள். நீங்கள் பாபாவின் ஸ்ரீமத்படி பாரதத்தை உயர்ந்ததிலும் உயர்ந்த நாடாக ஆக்குகிறீர்கள். ஸ்ரீமத் பகவானுடையது, கிருஷ்ணருடையது அல்ல. கிருஷ்ணர் பதீத பாவனர் அல்ல. பதீத பாவனர் ஒருவர் தான். அவர் அனைவருக்கும் தந்தை. எப்போதும் நினைவு செய்யுங்கள், நாம் ஆத்மா இந்த உடல் உறுப்புகள் மூலமாகக் கேட்கிறோம். ஆத்ம அபிமானி ஆகுங்கள். நான் ஆத்மாக்களுக்கு ஞானம் கொடுக்கிறேன். அதனால் பாடப்பட்டுள்ளது, ஞான மையை சத்குரு தந்தார்...... பதீத பாவனர், சத்கதி அளிக்கும் வள்ளல் அவர் தான். குழந்தைகளைத் தந்தை பெற்றெடுக்கிறார். பிறகு ஆசிரியராகிப் படிக்க வைக்கிறார், பிறகு குரு ஆகி சத்கதி அளிக்கிறார். சத்கதியில் அழைத்துச் செல்பவர் சத்கதி அளிக்கும் வள்ளலாகிய ஒரே ஒரு தந்தை தான். குழந்தைகள் நீங்கள் புது உலகிற்குச் செல்வதற்காக அல்லது மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக இந்தஃ படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது இந்த பதீத் மனித சிருஷ்டி அழிந்து தெய்வீக உலகமாக மாறப் போகிறது. இப்போது தேவதைகளுக்குப் பூஜை செய்கின்றனர். ஆனால் நாம் நிச்சயமாக தேவி தேவதா தர்மத்தினர் என்பதை அறியவில்லை. யாரைப் பூஜிக்கின்றனரோ, அவர்களின் தர்மத்தினர் எனச் சொல்வார்கள் இல்லையா? பாரதவாசிகளுக்கோ ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, சொர்க்கம் இருந்தது. இப்போது சொல்கின்றனர், மனிதர்கள் 84 லட்சம் பிறவி எடுப்பதாக. அனைவருமே எடுக்கின்றனரா? இத்தனை லட்சம் பிறவிகள் என்றால் அதற்காக மிகப்பெரிய கல்பம் வேண்டும். இதுவும் டிராமாவின் அனுசாரம் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. எது நடந்து முடிந்ததோ, அது டிராமா. மூலவதனம், சூட்சுமவதனத்தையும் குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி. அவர்கள் விஷ்ணுவை சுயதரிசனச் சக்கரதாரி எனச் சொல்கின்றனர். பாபா புரிய வைக்கிறார், விஷ்ணுவின் இரண்டு ரூபங்களாகிய லட்சுமி நாராயணர் சுயதரிசனச் சக்கரதாரி அல்ல. சுயதரிசனச் சக்கரதாரி பிராமணர்களாகிய நீங்கள் தான். எவ்வளவு வேறுபாடு ஆகி விடுகின்றது. அவர்கள் பிறகு சொல்கின்றனர், கிருஷ்ணருக்கு சுயதரிசனச் சக்கரம் இருந்தது என்று. யுத்த மைதானத்தில் சக்கரத்தைச் செலுத்தினார்,. பிறகு கௌரவர் கொல்லப்பட்டனர் என கூறுகின்றனர். ஆனால் தேவதைகள் ஒரு போதும் இம்சை செய்வதில்லை. அவர்களோ இரட்டை அகிம்சையாளர்கள். அவர்களிடம் விகாரமும் கிடையாது, யுத்தமும் செய்வதில்லை. அனைத்திலும் பெரிய இம்சை ஒருவர் மற்றவருக்கு விஷத்தை (விகாரம்) அருந்தச் செய்வது, காமக்கட்டாரி செலுத்துவதாகும். பாபா சொல்கிறார், இதனால் முதல், இடை, கடை முழுவதும் துக்கம் அனுபவித்தே வந்திருக்கிறீர்கள். சத்யுகத்தில் காமக் கட்டாரி செலுத்துவது நடைபெறவில்லை. விகாரமற்ற இராஜ்யமாக இருந்தது. சர்வகுண சம்பன்னம், மரியாதா புருஷோத்தம் ஆக இருந்தனர். இம்சையே அங்கே கிடையாது. இச்சமயம் இராவணின் இராஜ்யம். 5 விகாரங்கள் சர்வவியாபியாக உள்ளன. அவர்கள் பிறகு சொல்லி விடுகின்றனர், பரமாத்மா சர்வவியாபி என்று. இந்த விஞ்ஞானத்தினால் என்னென்ன சாதனங்கள் மற்றும் விமானங்கள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, இப்போது 100 ஆண்டுகளுக்குள் தான். இது எதற்காக? இது ஒத்திகை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த அனைத்துப் பொருட்களும் பிறகு வருங்காலத்தில் பயன்படக் கூடியவையாகும். இவர்களின் மூலம் இப்போது அனைத்தும் விநாசமாகிவிடும். பிறகு இவை சுகத்திற்காகப் பயன்படும். இங்கோ சுகமும் உள்ளது என்றால் துக்கமும் உள்ளது. இது மாயாவின் பகட்டு என்று சொல்லப்படுகின்றது. விநாசம் நடைபெற்றால் அது நல்லது தானே? சொல்லவும் செய்கின்றனர், பதீத பாவனா வாருங்கள், வந்து நான் என்ன செய்வேன்? பாபா, மீண்டும் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வீர்களானால் நாங்கள் சுகம் பெறுவோம், பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாபா சுகதாமத்தைப் படைக்கிறார். இராவணன் பிறகு துக்கதாமத்தை உருவாக்குகிறான். சாந்திதாமத்தில் இருந்து ஆத்மாக்கள் முதல் முதலில் சுகதாமத்திற்கு வருகின்றனர். இச்சமயம் அனைவரும் பதீத்தாக உள்ளனர். அதனால் தான் வாருங்கள் என்று நினைவு செய்கின்றனர். பாபாவும் டிராமாவுக்குக் கட்டுப் பட்டுள்ளார். பாபா சொல்கிறார், எப்போது அனைவருமே துக்கத்தில் உள்ளனரோ, அப்போது தான் நான் வர வேண்டியுள்ளது. கலியுகக் கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்தின் சங்கமம் இது. அவர்கள் சங்கமத்தில் கும்பமேளா நடத்துகின்றனர். அது தண்ணீரின் கடல் மற்றும் நதிகள் சந்திக்கும் மேளா. நீங்கள் சொல்வீர்கள், இது பரமபிதா பரமாத்மா மற்றும் ஆத்மாக்களாகிய நம்முடைய சந்திப்பு. சிவ பாபாவுக்குத் தனக்கென சரீரமோ கிடையாது. பாபா சொல்கிறார், குழந்தைகளே, ஞானம் கொடுப்பதற்காக எனக்கு சரீரம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. இல்லையென்றால் நான் எப்படிப் பேசுவேன்? அதனால் நான் இவரைத் தத்தெடுக்கிறேன். நீங்கள் இப்போது ஈஸ்வரனின் முன்னிலையில் வந்திருக்கிறீர்கள். நாம் ஈஸ்வரனின் குழந்தைகள் என்பதை பாபாவின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது பரமபிதா பரமாத்மா கேட்கிறார், நான் எப்படி வருவேன்? யாருக்குள் பிரவேசமாவேன்? நிச்சயமாக நான் பதீத் உலகில் பதீத் சரீரத்தில் வர வேண்டியுள்ளது. இவர்கள் அனைவரும் கருப்பாக (அசுத்தமாக) உள்ளனர். பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும் வெள்ளையாக (தூய்மையாக) இருந்தீர்கள். இப்போது கருப்பாக இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பெயர் ஷ்யாம் சுந்தர். இப்போது ஷ்யாம் ஆகியிருக்கிறீர்கள். கிருஷ்ணரை ஷ்யாம் சுந்தர் எனச் சொல்கின்றனர். நிச்சயமாக பாரதம் முதலில் சுந்தரமாக (அழகாக) இருந்தது. பொன்யுகமாக இருந்தது. முதல் தரமான இயற்கை இருந்தது. அங்கே ஊமை, நொண்டி முதலானவர் கிடையாது. கிருஷ்ணர் நம்பர் ஒன் ஷ்யாம் சுந்தர். சிவபாபா இவருடைய (பிரம்மா) உடலைத் தான் ஆதாரமாக எடுத்து இவரையும் அதோடு கூடவே குழந்தைகளாகிய உங்களையும் ஷ்யாமில் இருந்து சுந்தரமாக ஆக்குகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நாம் பிராமணர்களாகிய சோட்டி (உயர்ந்தவர்கள்) அனைவரைக் காட்டிலும் உத்தமமானவர்கள். இந்த நஷாவில் இருந்து ஸ்ரீமத் படி பாரதத்தை சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமாக ஆக்குகிற சேவை செய்ய வேண்டும். ஆஸ்திகர் ஆக வேண்டும். மற்றவர்களையும் ஆக்க வேண்டும்.
2) தேக அகங்காரத்தை விட்டு ஆத்ம அபிமானி ஆக வேண்டும். விசித்திரமாக (அசரீரி) ஆவதற்கான முழுமையான புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
வரதானம் :
ஒவ்வொரு கர்மத்தையும் யோகயுக்த், யுக்தியுக்த் (யோகத்தில் பாபாவோடு இணைந்த நிலையில், யுக்தியோடு காரியங்களை) செய்யக் கூடிய கர்மயோகி மற்றும் நிரந்தர யோகி ஆகுக.
கர்மயோகி ஆத்மாவின் ஒவ்வொரு கர்மமும் யோகயுக்த், யுக்தியுக்தாக இருக்கும். சாதாரண அல்லது வீணான கர்மமாக ஆகி விட்டாலும் கூட நிரந்தர யோகி எனச் சொல்ல மாட்டார்கள். நிரந்தர யோகம் என்றால் அன்பு தான் நினைவிற்கான ஆதாரம். யார் அன்பிற்குரியவராக உள்ளாரோ, தானாகவே அவர் நினைவு இருக்கும். அன்பிற்குரிய பொருள் தன் பக்கமாக ஈர்த்து விடும். ஆக, ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு பேச்சு சதா சிரேஷ்டமாக இருக்க வேண்டும். மேலும் ஒரு பாபாவிடம் இதயபூர்வ அன்பு இருக்க வேண்டும். அப்போது கர்மயோகி மற்றும் நிரந்தர யோகி எனச் சொல்வார்கள்.
சுலோகன் :
கடின முயற்சியில் இருந்து விடுபட வேண்டுமானால் அன்பின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள்.