BK Murli 26 March 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 26 March 2017 Tamil

    26.03.2017           காலை முரளி   ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,
    ரிவைஸ் 14-3-1982    மதுபன்


    பாப்தாதா மூலமாக பாரதம் மற்றும் வெளிநாடுகளின் செய்தி



    இன்று பாப்தாதா குழந்தைகளுடன் வலம் வரச் சென்றிருந்தார். பாப்தாதாவிற்கு முழு உலகையும் சுற்றி வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? எவ்வளவு நேரத்தில் விரும்புகிறாரோ அவ்வளவு நேரத்தில் சுற்றி வர முடியும். விஸ்தாரத்தில் செய்தாலும் சரி அல்லது சாரத்தில் செய்தாலும் சரி, அவரால் முடியும். இன்று இரட்டை வெளிநாட்டினரை, சந்திக்கும் நாள் இல்லையா ! எனவே சுற்றி வந்த செய்தியைக் கூறுகிறோம். வெளி நாட்டில் என்ன பார்த்தோம் மற்றும் பாரதத்தில் என்ன பார்த்தோம்?



    சிறிது காலத்திற்கு முன்பு வெளிநாட்டின் விசேஷத்தின் அலை பாரதத்தில் வந்தது- அது என்ன? எப்படி வெளிநாட்டில் அற்பகால சுகத்தின் சாதனங்களின் மகிழ்வில் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், அதே போல் பாரதவாசிகளும் வெளிநாட்டு சுகத்தின் சாதனங்களை அதிகமாக தங்களுடைய காரியத்தில் ஈடுபடுத்தினார்கள். வெளிநாட்டு சாதனங்கள் மூலமாக அற்பகால சுகத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அனுபவத்தை அதிகமாகச் செய்தார்கள், இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். பாரதவாசிகள் அற்பகால சாதனங்களை காப்பி (அதே போல் தயாரிக்க) செய்தார்கள், காப்பி செய்த காரணத்தினால் தங்களுடைய உண்மையான சக்தியை இழந்து விட்டார்கள். ஆன்மீகத்திலிருந்து ஒதுங்கி விட்டார்கள். மேலும் வெளிநாட்டு சுகத்தின் சாதனங்களின் ஆதாரத்தை எடுத்துக் கொண்டார்கள். மேலும் வெளி நாட்டினர் என்ன செய்தார்கள்? புத்திசாலித்தனமான காரியம் செய்தார்கள். பாரதத்தின் உண்மையான ஆன்மீக சக்தி அவர்களை வெளிநாட்டில் கவர்ந்து இழுத்தது. இதன் விளைவாக ஒவ்வொரு பெயர் பெற்ற ஆன்மீக சக்தி உள்ளவர்களிடம் மற்றும் குருமார்களிடம் வெளிநாடுகளில் பின்பற்றி நடப்பவர்களை அதிகமாகப் பார்க்க முடியும். வெளிநாட்டு ஆத்மாக்கள் போலியான சாதனங்களை விட்டு விட்டு உண்மையின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம் அதிகமாக கவர்ந்து இழுக்கப்பட்டார்கள், மேலும் பாரதவாசிகள் போலியான சாதனங்களில் மகிழ்வாக இருந்து விட்டார்கள். தன்னுடைய பொருளை விட்டு விட்டு மாற்றான் பொருளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் வெளிநாட்டு ஆத்மாக்கள் உண்மையானதைத் தேடுவதிலும், பகுத்தறிந்து அடைவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.



    அப்படி இன்று பாப்தாதா, பாரதம் மற்றும் வெளிநாடுகளைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வலம் வருகையில் பாரதவாசிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் வெளிநாட்டினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தார். பாரதவாசிகளைப் பார்த்து இவ்வளவு உயர்ந்த குலத்தைச் சேர்ந்த நம்பர் ஒன் தர்மத்தின் ஆத்மாக்கள், பின்னால் வந்தவர்களால் விடப்பட்ட பொருட்களை உபயோகிப்பதில் அந்த அளவு மன மகிழ்ந்து போனார்கள், அதனால் விசேஷ பொருட்களை மறந்து விட்டார்கள். இந்தக் காரணத்தினால் பாரதம் என்ற வீட்டில் அமர்ந்து கொண்டே, பாரதம் என்ற வீட்டில் வந்திருக்கும் சிரேஷ்ட விருந்தினர் தந்தையையும் தெரிந்திருக்கவில்லை. மேலும் வெளிநாட்டின் ஆத்மாக்கள் தூரமான இடங்களில் இருந்தாலும் செய்தியைக் கேட்ட உடனேயே தெரிந்து கொண்டு, வந்தும் சேர்ந்து விட்டார்கள். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் பகுத்தறியும் கண் மிகக் கூர்மையானது என்று பாப்தாதா பார்க்கிறார். தூரத்திலிருந்து பகுத்தறியும் கண் மூலமாக அனுபவம் மூலமாக பார்த்து விட்டார்கள் மற்றும் அடைந்து விட்டார்கள். மேலும் பாரத வாசிகள் அதிலும் மவுன்ட் அபு வாசிகள் மேல் மிகுந்த இரக்கம் வருகிறது. அருகிலிருந்தும் பகுத்தறியும் கண் இல்லை. பகுத்தறியும் கண் இன்றி குருடர்களாய் தங்கிப் போய் விட்டார்கள் இல்லையா அந்த மாதிரி குழந்தைகளைப் பார்த்து இரக்கம் வரத்தானே செய்யும் இல்லையா? அப்படி இரட்டை வெளிநாட்டினரின் அதிசயத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன பார்த்தோம் ? எப்படி தற்சமயப் பாரதம் ஏழையாக இருக்கிறது, அதே மாதிரி இப்பொழுது இறுதி நேரம் அருகில் இருக்கும் காரணத்தினால் வெளிநாட்டினரிலும் நிரம்பிய நிலையில் (செழிப்பில்) குறை வந்து விட்டது. எப்படி மரம் எப்பொழுது பசுமை நிறைந்ததாக இருக்குமோ, மலர்கள், பழங்கள் ஆகியவை இருக்கும், ஆனால் மரம் காய்ந்து வாடத் தொடங்குகிறது என்றால் மலர், பழங்களும் வாடத் தொடங்கி விடுகின்றன. இப்பொழுது வெளிநாட்டிலும் வேலை சுலபமாக கிடைப்பதில்லை. முன்பு வெளிநாட்டில் இம்மாதிரி பிரச்சனை இருந்ததாகக் கேள்விப்பட்டீர்களா? இதுவும் சுகத்தின் சாதனம், மேலும் அமைதி என்ற மலர் வாடிக்காய்ந்து கொண்டிருக்கின்றன என்பதின் அடையாளம். பாரதம் என்ற முக்கிய தண்டு காய்ந்து கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு கிளைகளிலும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த கிறிஸ்துவ மதம் கடைசி முக்கிய பெரிய கிளை. கல்ப விருக்ஷ படத்தில் கிறிஸ்தவ மதம் எந்தக் கிளையாக இருக்கிறது? முக்கிய கிளைகளாக எதைக் காண்பிக்கிறீர்களோ அதில் இது கடைசியானது தான் இல்லையா? அந்தக் கிளை வரை நிரம்பிய நிலையின், பிராப்தியின் பசுமை காய்ந்து விட்டது. இது முழு மரத்தின் இத்துப் போன நிலையின் அடையாளம் அப்படி இன்று முழு உலகில் அற்பக்கால பிராப்தி என்ற மலர்கள், பழங்கள் காய்ந்து இருப்பதாகப் பார்த்தோம். இன்னும் இரண்டு விஷயங்கள் மட்டும் இருக்கின்றன.



    ஒன்று, மனதால், வாயால் கதறுவது, இன்னொன்று எப்படியாவது கட்டாயத்தில் வாழ்க்கையை, தேசத்தை நடத்துவது. கதறுவது மற்றும் காரியத்தை நடத்துவது. இந்த இரண்டு வேலைகள் இருந்து விட்டன. மிகவும் குஷியாக வாழ்க்கையை நடத்துவது என்பது முடிவடைந்து விட்டது. எப்படியாவது நடத்த வேண்டும் என்ற நிலையாகி விட்டது. வெளி நாட்டிலும் இந்த மாதிரியான நிலை உருவாகிவிட்டது. ஆக இது எதன் அடையாளம்? கட்டாயத்தில் எதுவரை நடத்த முடியும். இப்பொழுது கதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி உலகிற்கு என்ன செய்ய வேண்டும்? கட்டாயத்தில் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிராப்தி என்ற இரண்டு இறக்கை கொடுத்து பற்ற வைக்க வேண்டும். யாரால் பறக்க வைக்க முடியும்? யார் அவர்களே பறக்கும் கலையில் இருப்பார்களோ அவர்களால் தான் முடியும். அப்படி நீங்கள் பறக்கும் கலையில் இருக்கிறீர்களா? பறக்கும் கலை மற்றும் ஏறும் கலை - நீங்கள் எந்தக் கலையில் இருக்கிறீர்கள்? ஏறும் கலை கூட இல்லை, இப்பொழுது பறக்கும் கலை வேண்டும். எதுவரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள்? இரட்டை வெளிநாட்டினர், என்ன நினைக்கிறீர்கள்? பெரும்பான்மையினரோ தந்தைக்கு சமமான ஆசிரியர் தரம் உள்ளவர்கள் தான் இல்லையா? டீச்சர் என்றால், பறக்கும் கலை உள்ளவர் அந்த மாதிரியே தான் இருக்கிறீர்கள் இல்லையா ? நல்லது !



    இன்றோ சுற்றி வந்த செய்தி மட்டும் கூறினோம். இப்பொழுது பாரதம் மற்றும் வெளி நாட்டினர் நடைமுறையில் அடையாளங்களை தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாட்களில் ஏதாவது விஷயம் நடந்தது என்றால் 100 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறார்கள். அனைத்து விசித்திர விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன, ஏனென்றால் இவை விசித்திர தந்தையை பிரத்யக்க்ஷம் செய்யும். இப்பொழுது என்ன ஆகுமோ என்று அனைவரின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளியாகின்றன. அனைவரின் புத்தியில் இந்தக் கேள்விக் குறி தெளிவாகி விட்டது. பிறகு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது என்ற வார்த்தைகள் வெளியாகும். தந்தை வந்து விட்டார் என்ற கேள்விக் குறி அகன்று முற்றுப் புள்ளி இடப்பட்டு விடும். எப்படி கடைந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது. அதேபோல் முதலில் குழப்பம் ஏற்படும் பிறகு வெண்ணெய் வெளியாகும். அப்படி இந்தக் கேள்விக் குறி என்ற குழப்பத்திற்குப் பிறகு பிரத்யக்ஷ்ம் என்ற வெண்ணெய் வெளியாகும். இப்பொழுது மிக வேகமாக குழப்பம் தொடங்கி விட்டது. நாலாபுறங்களிலும் இப்பொழுது பிரத்யக்ஷ்ம் என்ற வெண்ணெய் உலகின் எதிரில் தென்படும். ஆனால் இந்த வெண்ணெயை அருந்துபவர்கள் யார் ? சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா ! அனைவரும் பரிஷ்தாக்கள் உங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது !



    அனைத்து பிராப்தியில்லாத ஆத்மாக்களுக்கும் பிராப்தி செய்விக்கும், அனைவருக்கும் பகுத்தறியும் கண்ணை தானமாகக் கொடுக்கும் மஹாதானிகளுக்கு, அனைவருக்கும் திருப்தியின் வரதானம் கொடுக்கும் வரமளிக்கும் திருப்தியான ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய பிராப்தியின் இறக்கைகள் மூலமாக மற்ற ஆத்மாக்களை பறக்க வைக்கும், எப்பொழுதும் பறக்கும் கலை உள்ள, எப்பொழுதும் தன் மூலமாக தந்தையை வெளிப்படுத்தக் கூடிய உலகின் எதிரில் வெளிப்படக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    வெளிநாட்டுக் குழந்தைகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு :



    எப்பொழுதும் தன்னை அனைத்து பிராப்தி நிறைந்தவர் என்று அனுபவம் செய்கிறீர்களா? அனைத்து பிராப்திகளின் அனுபவம் இருக்கிறதா? எந்த ஆத்மாவிற்கு அனைத்து பிராப்திகளின் அனுபவம் இருக்குமோ அவருடைய அடையாளமாக என்ன தென்படும் ? அவர் எப்பொழுதும் திருப்தியாக இருப்பார். அவருடைய முகத்தில் எப்பொழுதும் பிரசன்னத்தின் அடையாளம் தென்படும். இவர் அனைத்தையும் அடைந்திருக்கும் ஆத்மா என்று அவருடைய முகத்திலிருந்து தென்படும். எப்படி பாருங்கள் வெளியுலகில் யார் ராஜ்குமார், ராஜகுமாரியாக இருப்பார்களோ, உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்களுடைய முகத்திலிருந்து இவர்கள் அனைத்தும் நிறைந்த ஆத்மாக்கள் என்பது தென்படும். அதே போல் ஆன்மீக குலத்தைச் சேர்ந்த உங்கள் முகத்திலிருந்து எது யாருக்குமே கிடைக்கவில்லையோ அது இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது தென்பட வேண்டும். என்னுடைய முகம் மற்றும் நடத்தை மாறி விட்டது மேலும் முகத்தில் பிராப்தியின் ஜொலிப்பு வந்து விட்டது என்று அனுபவம் ஆகிறதா ? இரட்டை வெளிநாட்டினருக்கு இரட்டை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் சேவையும் இரு மடங்கு செய்ய வேண்டும். இரட்டை சேவை எப்படி செய்வீர்கள் ? வாய் மொழி மூலம் மட்டுமல்ல, நடத்தை மற்றும் முகம் மூலமும் செய்ய வேண்டும். எப்படி நீங்களே விட்டில் பூச்சி ஆகியிருக்கிறீர்களோ அதே போல் அனேக விட்டில் பூச்சிகளை விளக்கொளியிடம் அழைத்து வரும் ஆத்மாக்கள் நீங்கள் ! எனவே, நீங்கள் பறக்கத் தொடங்கியதைப் பார்த்ததுமே மற்ற விட்டில் பூச்சிகளும் உங்கள் பின்னாலேயே பறக்கத் தொடங்கி விடுவார்கள். எப்படி நீங்கள் அனைவரும் ஒவ்வொரு விசயத்தின் ஆழத்தில் செல்கிறீர்கள், அதே போல் ஒவ்வொரு குணத்தின் அனுபவத்தில் ஆழத்தில் செல்லுங்கள். எவ்வளவு ஆழத்தில் செல்வீர்களோ தினசரி புதுப் புது அனுபவங்களைச் செய்ய முடியும். எப்படி அமைதி சொரூபத்தின் அனுபவத்தை தினசரி செய்கிறீர்களோ அந்த மாதிரி புதுமையை அனுபவம் செய்யுங்கள். எப்பொழுது ஏகாந்தவாசியாக ஆவீர்களோ அப்பொழுது தான் புதிய அனுபவம் ஆகும். ஏகாந்த வாசி என்றால், எப்பொழுதும் ஸ்தூல ஏகாந்தத்தின் கூடவே ஒருவரின் நினைவு என்ற அந்தரத்தில் அதாவது எல்லையில் இருப்பது.



    ஒரு பாபா என்ற வார்த்தையையும் அடிக்கடி கூறுகிறீர்கள், அந்த ஒவ்வொரு தடவையும் புதிய அனுபவம் ஆக வேண்டும். எப்படி தொடக்கத்தில் எப்பொழுது வந்தீர்களோ அப்பொழுது பாபா என்ற வார்த்தையைக் கூறினீர்கள், மதுபன்னிற்கு எப்பொழுது வந்தீர்களோ அப்பொழுதும் இதையே தான் கூறினீர்கள். மேலும் இப்பொழுது எப்போது செல்வீர்களோ அப்பொழுதும் பாபா என்ற வார்த்தையைக் கூறுவீர்கள். ஆனால் முதலில் கூறியதிலும், இப்பொழுது கூறுவதிலும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும், அந்த அனுபவம் இருக்கிறது தான் இல்லையா? பாபா என்ற வார்த்தையோ அதே தான்! ஆனால் உணர்வுப் பூர்வமான பிராப்தியின் ஆதாரத்தில் அதே பாபா என்ற வார்த்தை முன்னேறிச் சென்றது, அப்படி வித்தியாசம் ஏற்படுகிறது இல்லையா? அந்த மாதிரி அனைத்து குணங்களிலும் தினசரி புது அனுபவம் செய்யுங்கள். சாந்த சொரூபமாகவோ இருக்கிறீர்கள், ஆனால் அமைதியின் அனுபவம் எந்த பாயின்ட்டின் (ஞானத்தின்) ஆதாரத்தில் ஏற்படுகிறது. எப்படி பாருங்கள் நான் ஆத்மா, பரமாத்ம நிவாசி, இதன் மூலமாகவும் அமைதியின் அனுபவம் ஆகிறது, மேலும் நான் ஆத்மா சத்யுகத்தில் சுகம், அமைதி சொரூபமாக இருப்பேன் என்ற இதன் அனுபவத்தைப் பார்த்தீர்கள் என்றால், அது வேறாக இருக்கும். அதே போலவே காரியம் செய்து கொண்டே அமைதியற்ற சூழ்நிலையில் இருந்த போதிலும் நான் ஆத்மா அமைதி சொரூபமானவன் என்று அதன் அனுபவம் செய்தீர்கள் என்றால், அதன் அனுபவம் வேறாக இருக்கும். மூன்றிலும் வித்தியாசம் இருந்தது இல்லையா? அமைதி சொரூபமாகவோ இருக்கிறீர்கள். அந்த மாதிரி தினசரி அந்த அமைதி சொரூபத்தின் அனுபவத்திலும் முன்னேற்றம் இருக்க வேண்டும். சில நேரம் ஒரு பாயின்ட்-ன் மூலம் அமைதி சொரூபத்தின் அனுபவம் செய்யுங்கள், சில நேரம் இன்னொரு பாயின்ட் மூலம், அப்படி தினசரி புதுப் புது அனுபவம் ஆகும், மேலும் புதுப்புது அனுபவம் கிடைப்பதற்கு இதிலேயே எப்பொழுதும் பிஸியாக இருங்கள். இல்லையென்றால் என்னவாகிறது, காலப் போக்கில் நினைவு செய்வதற்கான விதி, முரளி கேட்பதற்கும் படிப்பதற்கும் அதே விதி, பிறகு அதே விசயம், என்று சில நேரம் சாதாரணமாக அனுபவம் ஆகத் தொடங்குகிறது, எனவே ஊக்கமும், எப்பொழுதும் எப்படி இருக்குமோ அதே போலவே இருக்கும், முன்னேறிச் செல்லாது. மேலும் இதன் முடிவாக சில நேரம் அலட்சியமும் வந்து விடுகிறது. இதுவோ எனக்குத் தெரியும், இதையோ நான் தெரிந்தே இருக்கிறேன் என்ற அலட்சியம் வரும் காரணத்தினால் பறக்கும் கலைக்குப் பதிலாக நிற்கும் கலை ஆகிவிடுகிறது. எனவே நீங்கள் எந்த ஆத்மாக்களுக்காக பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்களோ அவர்களுக்கு எப்பொழுதும் புதுமையை அனுபவம் செய்விப்பதற்காக இந்த விதி அவசியம் வேண்டும். புரிந்ததா? பெரும்பான்மையோர் நீங்கள் அனைவரும் சேவைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆத்மாக்கள் தான் இல்லையா? ஆனால் இந்த விசேஷத்தை அவசியம் தாரணை செய்ய வேண்டும். அமைதி சொரூபத்தின் அனுபவம் ஆவதற்கான பாயின்ட் என்னவென்று தினசரி ஏதாவது பாயின்டை தேர்ந்தெடுங்கள். அதே போல் அன்பு சொரூபம், ஆனந்த சொரூபம் ஆகிய அனைத்தின் விசேஷ பாயின்ட்டுகளை புத்தியில் வைத்துக் கொண்டே தினசரி புதுப்புது அனுபவம் செய்யுங்கள். இன்று புது அனுபவம் செய்து மற்றவர்களுக்கும் செய்விக்க வேண்டும் என்று எப்பொழுதும் அந்த மாதிரி உணருங்கள். பிறகு அமிர்தவேளையில் நினைவில் அமருவதற்கு மிகுந்த விருப்பம் இருக்கும். இல்லையென்றால், சில நேரம் சோம்பலின் அலை வந்து விடும். புதியது கிடைக்கும் பொழுது சோம்பல் இருக்காது. ஆனால் அதே விசயம் என்றால் சோம்பல் வர ஆரம்பித்து விடும். எனவே என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? முறை புரிந்ததா? இப்பொழுது ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென்றால், கேளுங்கள். பொதுவாக வெளிநாட்டினருக்கு வித விதமானவை பிடிக்கும் எப்படி பிக்னிக்கில் இனிப்பு வேண்டும், காரமும் வேண்டும். மேலும் பல வகையானவை வேண்டும் என்றால், எப்பொழுதெல்லாம் அனுபவம் செய்ய அமருகிறீர்களோ, அப்பொழுது பாப்தாதா விதவிதமான பிக்னிக் செய்யப் போகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். பிக்னிக் என்ற பெயர் கேட்டவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவீர்கள், சோம்பல் ஓடிவிடும். பொதுவாக உங்களுக்கு பிக்னிக் செய்வது, வெளியில் செல்வது பிடிக்கும் இல்லையா? எனவே வெளியில் சென்று விடுங்கள். சில நேரம் பரம்தாமம் சென்று விடுங்கள். சில நேரம் மதுபன்னிற்கு வந்து விடுங்கள். சில நேரம் லண்டன் சென்டருக்கு சென்று விடுங்கள், சில நேரம் ஆஸ்ட்ரேலியா சென்று விடுங்கள். பல வகை இருப்பதினால் ரமணீகரத்தில் வந்து விடுவீர்கள். நல்லது.



    வரதானம் :

    எல்லைக்கப்பாற்பட்ட சம்பூர்ண அதிகாரத்தின் நிச்சயம் மற்றும் ஆன்மீக போதையில் இருக்கக் கூடிய மிக உயர்ந்த செல்வந்தர் ஆகுக !



    தற்சமயம் குழந்தைகள் நீங்கள் அந்த மாதிரி உயர்ந்த சம்பூர்ண அதிகாரி ஆகிறீர்கள். சுயம் சர்வசக்திவான் மேல் உங்கள் அதிகாரம் இருக்கிறது. பரமாத்ம அதிகாரி குழந்தைகள் அனைத்து சம்மந்தங்களின் மற்றும் அனைத்து செல்வத்தின் அதிகாரத்தை பிராப்தி செய்து விடுகிறார்கள். இந்த நேரம் தான் தந்தை மூலமாக மிக உயர்ந்த செல்வந்தர் ஆகுக ! என்ற வரதானம் கிடைக்கிறது. உங்களிடம் அனைத்து குணங்களின், அனைத்து சக்திகளின் மற்றும் உயர்ந்த ஞானத்தின் அழியாத செல்வம் இருக்கிறது. எனவே உங்களைப் போன்ற செல்வந்தர் வேறு யாரும் கிடையாது.



    சுலோகன் :

    எப்பொழுதும் கவனமாக இருந்தீர்கள் என்றால் அலட்சியம் முடிவடைந்து விடும். 


    ***OM SHANTI***