BK Murli 16 April 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 16 April 2017 Tamil

    16.04.2017     காலை முரளி   ஓம் சாந்தி    அவ்யக்த பாப்தாதா  ரிவைஸ்        19.03.1982           மதுபன்

    செய்யும் காரியம் ஆத்மாவை தரிசனம் செய்விக்கும் கண்ணாடி


    இன்று சர்வசக்திவான் தந்தை தன்னுடைய சக்தி சேனையைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். ஒவ்வொரு மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மாக்கள் அனைத்து சக்திகளையும் எந்த அளவு தன்னுள் தாரணை செய்திருக்கிறார்கள்? விசேஷ சக்திகளை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள். மேலும் தெரிந்ததின் ஆதாரத்தில் சித்திரத்தை உருவாக்குகிறீர்கள். இந்த சித்திரம் சிரேஷ்ட நிலை மற்றும் மகான் நிலையின் சைதன்ய சொரூப அடையாளமாகும். ஒவ்வொரு காரியமும் சிரேஷ்டம் மற்றும் மகானாக இருக்கிறது இதன் மூலம் சக்திகளை சரித்திரத்தில் அதாவது காரியத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். பலமற்ற ஆத்மாவா அல்லது சக்திசாலியான ஆத்மாவா, சர்வசக்தி சம்பன்னமா அல்லது சக்தி சொரூப கம்பன்னமா என்ற இந்த அனைத்தும் செய்யும் காரியத்திலிருந்து தெரிய வருகிறது. ஏனென்றால் காரியம் மூலமாகத்தான் நபர் மற்றும் சூழ்நிலையின் சம்மந்தம் மற்றும் தொடர்பில் வருகிறார்கள். எனவே பெயரே - கர்மசேத்திரம், கர்ம சம்மந்தம், கர்ம இந்திரியங்கள், கர்மபோகம், கர்ம யோகம் என்றிருக்கிறது. அப்படி இந்த சாகார வதனத்தின் (பௌதீக உலகின்) விசேஷமே கர்மம் (காரியம்) தான். எப்படி நிராகார உலகின் விசேஷம் கர்மத்திலிருந்து விடுபட்டது. அதே போல் பௌதீக உலகம் என்றால் கர்மம். கர்மம் சிரேஷ்டமாக இருக்கிறது என்றால், சிரேஷ்ட பிராப்தி இருக்கிறது. கர்மம் பிரஷ்டம் அதாவது கீழ்த்தரமாக இருக்கும் காரணத்தினால் துக்கத்தின் பிராப்தி இருக்கிறது. ஆனால் இரண்டிற்குமான ஆதாரம் கர்மம். கர்மம் அதாவது செய்யும் காரியம் ஆத்மாவை தரிசனம் செய்விக்கும் கண்ணாடி. கர்மம் என்ற கண்ணாடி மூலம் தன்னுடைய சக்தி சொரூபத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை கர்மம் மூலமாக எந்த ஒரு சக்தியின் பிரத்யக்க்ஷ ரூபம் தென்படவில்லை என்றால், ஒருவர் எவ்வளவு தான் தன்னை நான் மாஸ்டர் சர்வசக்திவான் என்று கூறினாலும், ஆனால் கர்மசேத்திரத்தில் இருந்து கொண்டு கர்மத்தில் தென்படவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? எப்படி யாராவது திறமைசாலியான போர்வீரனாக இருந்தும் யுத்த மைதானத்தில் எதிரியின் எதிரில் யுத்தம் செய்ய முடியவில்லை தோல்வியடைந்து விடுகிறார் என்றால், இவர் திறமைசாலியான போர் வீரன் என்று நம்புவார்களா? அதே போல் ஒருவேளை யாராவது நான் சக்தி சொரூபமானவன் என்று தன்னுடைய புத்தியில் நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் சூழ்நிலையின் தொடர்பில் வரும் நேரத்தில், எந்த நேரம் எந்த சக்தியின் அவசியமாக இருக்கிறதோ அந்த சக்தியை காரியத்தில் கொண்டு வரவில்லை என்றால், இவர் சக்தி சொரூபமானவர் என்று யாராவது நம்புவார்களா? புத்தியால் மட்டும் தெரிந்து கொள்வது என்பது வீட்டில் அமர்ந்து கொண்டு தன்னை திறமை நிறைந்தவர் என்று நினைப்பது என்றாகிவிட்டது. ஆனால் தேவையான நேரத்தில் சொரூபத்தைக் காண்பிக்கவில்லை, தேவையான நேரத்தில் சக்தியை காரியத்தில் ஈடுபடுத்தவில்லை, நேரம் கடந்து சென்ற பிறகு யோசித்தார் என்றால் அவரை சக்தி சொரூபம் என்று கூற முடியுமா? எப்படி நேரமோ அதற்கேற்ற சக்தியை கர்மம் மூலமாக காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் கர்மத்தில் இந்த சிரேஷ்டத்தன்மை தான் வேண்டும், அப்படி முழு நாளின் கர்ம லீலை மூலம் நான் எந்த அளவு மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகியிருக்கிறேன் என்று தன்னை சோதனை செய்யுங்கள். விசேஷமாக எந்த சக்தி தேவையான நேரத்தில் வெற்றியடைபவராக ஆக்குகிறது, மேலும் விசேஷமாக எந்த சக்தியின் பலஹீனம் அடிக்கடி தோல்வியடைய வைக்கிறது? அனேக குழந்தைகள் தன்னுடைய பலவீனமான சக்தியை தெரிந்தும் இருக்கிறார்கள், சில நேரம் நன்கு தாரணை செய்யும் கூட்டம் இருக்கிறது அல்லது தன்னுடைய சுய முயற்சியாளர்களின் வாயு மண்டலம் இருக்கிறது என்றால் வர்ணனையும் செய்வார்கள், ஆனால் சாதாரண முறையில் பெரும்பான்மையோர் தன்னுடைய பலவீனத்தை மற்றவர் களிடமிருந்து மறைக்கவே முயற்சி செய்வார்கள். சிலர் அந்த நேரத்தில் கூறவும் செய்வார்கள் இருந்தும் அந்த பலவீனத்தின் விதையை குறைவாகத்தான் தெரிந்திருக்கிறார்கள். மேலோட்டமாக வர்ணனை செய்வார்கள். வெளிப்படையான ரூபத்தின் வர்ணனை செய்வார்கள், ஆனால் விதை வரை செல்ல மாட்டார்கள், எனவே ரிஸல்ட் என்னவாக ஆகிறது? அந்த பலவீனத்தின் மேலோட்டமான கிளைகளை வெட்டி விடுவார்கள், எனவே கொஞ்ச காலம் அகன்று விட்டது என்று அனுபவம் ஆகிறது, ஆனால் விதையாக இருக்கும் காரணத்தினால் சூழ்நிலைகளின் தண்ணீர் கிடைப்பதினால் மீண்டும் அதே பலவீனத்தின் கிளை வெளிப்படுகிறது. எப்படி இன்றைய நாட்களின் சூழ்நிலையில் உலகத்தில் நோய் முற்றிலும் அகலுவதில்லை. ஏனென்றால், நோயின் விதையை டாக்டர்கள் தெரிந்திருக்கவில்லை எனவே, நோய் உள்ளடங்கிப் போய் விடுகிறது முற்றிலும் அகலுவதில்லை. அதே போல் இங்கேயும் விதையைத் தெரிந்து விதையை அழித்துவிடுங்கள். அனேகர் விதையை தெரிந்தும் இருக்கிறார்கள், ஆனால் தெரிந்திருந்தும் அலட்சியத்தின் காரணமாக சரியாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு தடவையில் எப்படி அழியும். நேரமோ ஆகத்தான் ஆகும். அப்படி அதிக புத்திசாத்தனமாக நடந்து கொள்வார்கள். எந்த நேரம் சக்திசாலி- ஆக வேண்டுமோ அந்த நேரம் ஞானம் நிறைந்தவராக ஆகிவிடுகிறார்கள். ஆனால் ஞானத்தின் சக்தி இருக்கிறது, ஆனால் அந்த ஞானத்தை சக்தி ரூபத்தில் உபயோகப்படுத்தவில்லை பாயின்ட்டின் (ஞானத்துளியின்) ரூபத்தில் உபயோகிப்பது இல்லை எனவே விதையைத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியத்தில் வந்து தன்னுடைய சம்பூர்ணம் மற்றும் சம்பன்ன நிலையில் குறைவு ஆக்காதீர்கள். மேலும் ஒரு வேளை விதையைத் தெரிந்த பிறகு, தனக்குள் தெரிந்து கொள்ளும் சக்தியை அனுபவம் செய்கிறீர்கள், ஆனால் பஸ்மம் ஆக்கும் சக்தி என்று உணரவில்லை என்றால் மற்ற ஜீவாலா சொரூப சிரேஷ்ட ஆத்மாக்களின் சகயோகத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், பலவீனமான ஆத்மா ஆன காரணத்தினால் நேரடியாக தந்தை மூலமாக தொடர்பு மற்றும் சரிசெய்தலை செய்ய முடிவதில்லை எனவே, இரண்டாம் நம்பர் சிரேஷ்ட ஆத்மாக்களின் சகயோகத்தைப் பெற்று தன்னை வெரிûஃப (சரி செய்து) செய்வதினால் சுலபமாக ப்யூரிûஃப (தூய்மையாக) ஆகிவிடுவீர்கள். என்ன சோதனை செய்ய வேண்டும்? மேலும் எப்படி சோதனை செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? ஒன்றோ மறைக்காதீர்கள் இரண்டாவது தெரிந்த போதிலும் தட்டிக் கழிக்காதீர்கள், அப்படியே இருக்கவிட்டு நடந்து கொள்ளாதீர்கள். இருக்கவிட்டீர்கள் என்றால் கதறுகிறீர்கள். அப்படி இன்று பாப்தாதா சக்தி சேனையின் சக்தியைப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்பொழுது பிராப்தி ஆகியிருக்கும் சக்திகளை காரியத்தில் கொண்டு வாருங்கள். ஏனென்றால், உலகின் அனைத்து ஆத்மாக்களின் எதிரில் நீங்கள் செய்யும் காரியம் தான் உங்களை அறிமுகப்படுத்தும். காரியம் மூலம் சுலபமாகத் தெரிந்து கொள்வார்கள், செய்யும் காரியம் மற்றவைகளை விட ஸ்தூலமானது அதாவது வெளிப்படையானது. எண்ணம் சூட்சும (வெளியில் தெரியாத) சக்தி. இன்றைய நாட்களின் ஆத்மாக்கள் ஸ்தூலமான வெளிப்படையான ரூபத்தை விரைவில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் சூட்சும சக்தி ஸ்தூலத்தை விட வலுவானது, ஆனால் மக்களுக்கு சூட்சும சக்தியின் வைப்ரேஷனை அறிந்து கொள்வது இப்பொழுது கடினம். கர்ம சக்தி மூலமாக உங்களுடைய எண்ணத்தின் சக்தியையும் தெரிந்து கொள்வார்கள். மன சக்தியால் செய்யும் சேவையை விட உயர்ந்தது. உள் உணர்வு மூலமாக உள் உணர்வுகளை வாயு மண்டலத்தை பரிவர்த்தனை செய்யும் சேவையும் மிக உயர்ந்தது. ஆனால் இதைவிட சுலபமானது கர்மம், அதனுடைய பரிபாஷையையோ ஏற்கனவே கூறியிருக்கிறோம் ஆனால் இன்று இந்த விசயத்தை அதாவது கர்மம் மூலமாக சக்தி சொரூபத்தின் (சூத்திரம், விளக்கம்) தரிசனம் மற்றும் சாட்சாத்காரம் செய்வியுங்கள் என்று தெளிவுபடுத்துகிறோம். கர்மம் மூலமாக எண்ணத்தின் சக்தி வரை சென்றடைவது சுலபமாகி விடும். இல்லையென்றால் பலவீனமான கர்மம், சூட்சும சக்தியான புத்தியையும், எண்ணத்தையும் கீழே கொண்டு வரும். எப்படி பூமியின் ஈர்ப்பு மேலே உள்ள பொருட்களை கீழே கொண்டு வருகிறது. எனவே சித்திரத்தை சரித்திரத்தில் கொண்டு வாருங்கள். நல்லது.



    அந்த மாதிரி ஒவ்வொரு சக்தியையும் காரியம் மூலம் பிரத்யக்ஷம் செய்யக் கூடிய, தன்னுடைய சக்தி சொரூபம் மூலமாக சர்வ சக்திவான் தந்தையை பிரத்யக்ஷம் செய்யக் கூடிய, நிரந்தர, பகுத்தறியும் மற்றும் பரிவர்த்தனை சக்தி சொரூபமான, எப்பொழுதும் சரித்திரம் (ஒழுக்கம்) மூலம் விசித்திர தந்தையை சாட்சாத்காரம் செய்விக்கக் கூடிய, அந்த மாதிரி மாஸ்டர் சர்வ சக்திவான் சிரேஷ்ட காரியம் செய்யும் சக்தி சொரூப ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு : 1. மாயா விருந்தினராக இருப்பதின் ரிஸல்ட்-சோர்வு



    எப்பொழுதும் தன்னை பாப்தாதாவின் துணைவன் என்று நினைக்கிறீர்களா? எப்பொழுது நிரந்தரமாக தந்தையின் துணை அனுபவம் ஆகிறது என்றால், அதன் அடையாளம் வெற்றி. ஒருவேளை அதிக நேரம் யுத்தத்தில் செல்கிறது, கடினத்தின் அனுபவம் ஆகிறது என்றால், தந்தையின் துணை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. யார் எப்பொழுதும் தந்தையின் துணையின் அனுபவியாக இருப்பாரோ அவர் எப்பொழுதும் அன்பில் ஐக்கியமாகி இருப்பார். அன்புக் கடலில் மூழ்கி இருக்கும் ஆத்மா எந்தவொரு பிரபாவத்திலும் வர முடியாது. மாயா வருவது என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை ஆனால் அது தன்னுடைய ரூபத்தை காண்பிக்கக் கூடாது. ஒருவேளை மாயாவின் விருந்து உபசரிப்பு செய்தீர்கள் என்றால் காலப் போக்கில் சோர்வு ஏற்பட்டு விடும். முன்னேறிச் செல்லவும் இல்லை பின்னடையவும் இல்லை என்று அப்படி அனுபவம் செய்வீர்கள். பின்னடையவும் முடியாது. முன்னேறிச் செல்லவும் முடியாது. இதுதான் மாயாவின் பிரபாவம். மாயாவின் கவர்ச்சி மேலே செல்ல விடாது. பின்னோக்கிச் செல்வதற்கான கேள்விக்கே இடமில்லை. ஆனால் ஒருவேளை முன்னேறிச் செல்லவில்லையென்றால் விதையைப் பகுத்தறிந்து அதை பஸ்மம் செய்யுங்கள். ஏதோ இருக்கிறோம், வந்து கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்படி இருக்கக் கூடாது. ஆனால் தன்னுடைய வேகம் மற்றும் நிலையின் முன்னேற்றம் எந்தளவு ஆகியிருக்கிறது என்று சோதனை செய்யுங்கள். நல்லது.



    யார் ஒரே வெட்டில் தந்தையிடம் பலியாகிறாரோ அவர் தான் மகா பிரசாதம் ஆகிறார்.

    அனைத்து குழந்தைகளும் ஜீவன் முக்தி ஸ்திதியின் விசேஷ ஆஸ்தியை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் ஜீவன் முக்தியாக இருக்கிறீர்களா அல்லது ஜீவன் பந்தனத்திலா ? டிரஸ்டி என்றால் ஜீவன் முக்தி மர்ஜீவா (உடலிலிருந்து கொண்டே இறந்து மறுபிறவி எடுப்பது) ஆகியிருக்கிறீர்களா அல்லது இறந்து கொண்டிருக்கிறீர்களா? பக்தி மார்க்கத்தில் ஜட விக்ரஹங்களுக்கு என்ன பிரசாதம் படைப்பார்கள் ? எது ஒரே வெட்டில் பலியாகிறதோ அது தான். கதறிக் கதறி இறப்பது பிரசாதமாகாது. யார் ஒரே வெட்டில் இரண்டு துண்டாகுகிறாரோ அவர் தான் தந்தையின் எதிரில் பிரசாதம் ஆகுகிறார். என்னுடைய பாபா என்றும் நான் பாபாவினுடையவன் என்றும் நினைத்தார் என்றால், ஒரே வெட்டில் இரண்டு துண்டானது. நினைத்தீர்கள் மற்றும் முடிந்தது, வாளால் வெட்டப்பட்டது. ஒருவேளை யோசிக்கிறீர்கள், ஆகிவிடும், நடந்துவிடும்.... ஆகிவிடும் ஆகிவிடும் என்றால் கதறுவது ஆகிவிடும், ஆகிவிடும் என்று கூறுபவர் ஜீவன் முக்த் இல்லை. எப்படி தந்தையோ அப்படி குழந்தைகள் என்று பாபா கூறினார். தந்தை கடலாக இருந்து குழந்தைகள் பிச்சைக்காரர்களாக இருப்பது என்பது இருக்கவே முடியாது. என்னுடையவராக ஆகு என்று தந்தை வாய்ப்பைக் கொடுக்கிறார் என்றால், இதில் யோசிப்பதற்கான விசயம் எதுவுமில்லை. நல்லது.



    அவ்யக்த மகா வாக்கியங்களிலிருந்து கேள்வி - பதில்

    கேள்வி :

    பாபாவுடன் நாம் குழந்தைகளும் உலகைச் சுற்றி வலம் வர எப்படிச் செல்ல முடியும்?



    பதில் :

    இதற்காக தந்தைக்குச் சமமாக உலகிற்கு நன்மை செய்பவரின் எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் நிலைத்திருந்தீர்கள் என்றால், எப்படி ஸ்ரீகிருஷ்ணன் பூமி உருண்டையின் மேல் அமர்ந்திருக்கிறார் என்று காண்பிக்கிறார்கள், அதே போல் நானும் பூமி உருண்டை மேல் அமர்ந்திருக்கிறேன் என்று அனுபவம் செய்வீர்கள். அப்போது இயல்பாகவே உலகைச் சுற்றி வருவது ஆகிவிடும். எப்படி மிக உயர்ந்த ஸ்தானத்திற்குச் சென்றுவிட்டீர்கள் என்றால், சுற்றி வர வேண்டியதிருக்காது. ஆனால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே அனைத்தும் தென்படும், அதே போல் எப்பொழுது உயர்வான நிலையில், விதை ரூப நிலையில், உலகிற்கு நன்மை செய்பவர் நிலையில் நிலைத்திருந்தீர்கள் என்றால், முழு உலகமும் ஒரு சிறிய பந்து மாதிரி தென்படும். எனவே ஒரு நொடியில் சுற்றி வந்து விடுவீர்கள். ஏனென்றால் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். மற்றபடி சில நேரம் திவ்ய திருஷ்டி மூலம் நடைமுறையில் சுற்றி வருவதாக அனுபவம் ஆகும். அது சூட்சும ஒளிவடிவமான சொரூபம் மூலமாக ஆகும். எப்படி விமானத்தில் சுற்றி வருகிறீர்களோ அதே போல் ஒளிவடிவ உடல் ரூபம் மூலமாக உலகைச் சுற்றி வர முடியும். இரண்டு விதமாகவும் சுற்றி வர முடியும். எப்பொழுது நீங்கள் உலகைப் படைப்பவரின் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்றால், படைப்பைச் சுற்றி வருவீர்கள் தான் இல்லையா !



    கேள்வி :

    பல தடவைகள் யோகாவில் மிக நல்ல நல்ல டச்சிங் (உணர்த்துதல்) ஏற்படுகிறது ஆனால் இது பாபாவின் டச்சிங் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது?



    பதில்

    1 பாபாவின் டச்சிங் மிகவும் சக்திசாலியாக இருக்கும். மேலும் இது என்னுடைய சக்தியை விட விசேஷ சக்தி என்று அனுபவம் ஆகும். 2. எது பாபாவின் டச்சிங்காக இருக்குமோ அதில் சகஜமாக வெற்றியின் அனுபவம் ஏற்படும். 3. பாபாவின் டச்சிங்கில் ஏன், என்ன என்ற கேள்வி எழாது. மிகவும் தெளிவாக இருக்கும். எனவே இந்த விசயங்களிலிருந்து இது பாபாவின் டச்சிங் என்று புரிந்து கொள்ளுங்கள்.



    கேள்வி:

    நாம் புத்தியால் சமர்ப்பணம் ஆகியிருக்கிறோமா அல்லது இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது?



    பதில் :

    புத்தியால் சமர்ப்பணம் ஆவதில் அர்த்தம் - புத்தி என்ன நிர்ணயம் செய்தாலும் அது ஸ்ரீமத்தின் அனுகூலமாக இருக்கும். ஏனென்றால், புத்தி செய்யும் வேலையே நிர்ணயம் செய்வது, எனவே புத்தியில் ஸ்ரீமத்தைத் தவிர வேறு எந்த விசயமும் வரவே வேண்டாம். புத்தியில் எப்பொழுதும் பாபாவின் நினைவு இருக்கும் காரணத்தினால் இயல்பாகவே அதே நிர்ணய சக்தி இருக்கும். மேலும் அதன் நடைமுறை அடையாளம் அவருடைய முடிவெடுத்தல் சத்யமாக இருக்கும். மேலும் வெற்றியளிப்பதாக இருக்கும். அவருடைய விசயம் அவருக்கே நான் இந்த விச9யத்தை மிக நன்றாகச் சொன்னேன் என்று அவர் மனமே ஏற்றுக் கொள்ளும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். இவருடைய புத்தி மிகவும் தெளிவாகவும், சமர்ப்பணமாகவும் இருக்கிறது என்று அனைவரும் உணருவார்கள். தன் புத்தி மேல் திருப்தி இருக்கும். இது சரியா அல்லது தவறா என்ற கேள்வி இருக்காது.



    கேள்வி :

    அனேக நிச்சயபுத்தி உடைய குழந்தைகள் 4-5 வருடங்கள் இருந்த பிறகு சென்று விட்டார்கள் ஏன் இப்படி நடக்கிறது ? இதை எப்படி நிறுத்துவது?



    பதில் :

    செல்வதற்கான முக்கியமான காரணம் - சேவையில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் சேவை மற்றும் சுய முன்னேற்றத்தின் சம நிலையை இழந்து விடுகிறார்கள். நல்ல நல்ல குழந்தைகள் யார் நின்று விடுகிறார்களோ அவர்களுடைய ஒரு காரணம் இதுவாக இருக்கும், மேலும் இன்னொன்று அவர்களிடம் ஏதாவது ஒரு முக்கியமான சம்ஸ்காரம் இருக்கும், அதில் தொடக்கத்திலிருந்தே பலவீனமாக இருப்பார்கள். ஆனால் அதை மறைப்பார்கள், தனக்குள்ளேயே யுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். பாப்தாதாவிற்கும் மற்றும் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களுக்கும் தன்னுடைய பலவீனத்தைத் தெளிவாகக் கூறி அதை அழிப்பதில்லை . மறைக்கும் காரணத்தினால் அந்த நோய் உள்ளுக்குள்ளேயே கொடூரமான ரூபத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறது. மேலும் முன்னேறிச் செல்வதற்கான அனுபவம் ஆவதில்லை. பிறகு மனமுடைந்து போய் விட்டு விடுகிறார்கள். மூன்றாவது காரணம், அவர்களுக்குள் சம்ஸ்காரம் ஒத்துப் போவதில்லை. சம்ஸ்காரங்களின் மோதல் ஏற்பட்டு விடுகிறது.



    இப்பொழுது இந்த மாதிரி நடப்பதை தடுப்பதற்காக சேவை செய்வதின் கூடவே தன் மேல் முழு கவனம் வைக்க வேண்டும். இன்னொன்று யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் பாப்தாதா மற்றும் பொறுப்பாளராக இருக்கும் ஆத்மாக்களின் எதிரில் முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஒருவேளை சேவையில் இது மிக அதிகமாக இருக்கிறது என்று அனுபவம் செய்கிறீர்கள் என்றால், தன்னுடைய முன்னேற்றத்திற்கான வழியை முன்பாகவே யோசிக்க வேண்டும் மேலும் பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களுக்கும் தன்னுடைய கருத்தைக் கூற வேண்டும். புதிதாக யார் வருகிறார்களோ அவர்களுக்கு முதலில் இந்த விசயங்களின் மேல் கவனத்தைக் கொண்டு வர வேண்டும். முன்பாகவே தனது சம்ஸ்காரங்களின் சோதனையை செய்ய வேண்டும். ஒருவேளை யாருடனாவது நமது சம்ஸ்காரம் மோதுகிறது என்றால், அவரிடமிருந்து விலகி விடுவது நல்லது. எந்த சூழ்நிலைகளில் சம்ஸ்கார மோதல் ஏற்படுகிறது என்றால், அதிலிருந்து விலகிவிடுவதுதான் நல்லது.



    கேள்வி :

    ஒருவேளை ஏதாவது ஒரு இடத்தில் சேவையின் ரிசல்ட் இல்லையென்றால் அது நம்முடைய குறையா அல்லது நிலம் அப்படி பட்டதா ?



    பதில் :

    முதலிலோ சேவைக்கான அனைத்து வழிகளையும் உபயோகித்து பாருங்கள். ஒருவேளை அனைத்து வகையிலும் சேவை செய்த பிறகு கூட ஒரு ரிசல்ட்டும் இல்லையென்றால், நிலத்தில் (அந்த பகுதியில்) குறைபாடுகள் இருக்கலாம். ஒருவேளை தன்னுடைய ஏதோ குறை இருக்கிறது, அந்தக் காரணத்தினால் சேவை வளரவில்லை என்றால், நம் காரணமாக சேவை நடக்கவில்லை என்று மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் மற்றவர்களின் சகயோகத்தைப் பெற்று சக்தி கொடுக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய காரணமாக இருக்கிறது என்றால், அவ்விடத்திலிருந்து உருவாகும் ஆத்மாக்களும் மந்தமாக இருப்பார்கள். தீவிர முயற்சி இருக்காது. நல்லது.



    வரதானம் :

    முயற்சி செய்வதின் கூடவே யோகத்தைப் பிரயோகம் செய்யும் விதி மூலமாக உள் உணர்வுகளை பரிவர்த்தனை செய்யக் கூடிய எப்பொழுதும் வெற்றியடைபவர் ஆகுக !



    முயற்சி செய்வது நிலத்தை உருவாக்குகிறது. அதுவும் அவசியம், ஆனால் முயற்சி செய்வதின் கூடவே யோகத்தின் பிரயோகத்தினால் அனைவரது உள் உணர்வுகளையும் பரிவர்த்தனை செய்தீர்கள் என்றால் வெற்றி அருகில் தென்படும். திட நிச்சயம் மற்றும் யோகத்தின் பிரயோகம் மூலம் யாருடைய புத்தியையும் பரிவர்த்தனை செய்ய முடியும். சேவையில் எப்பொழுதெல்லாம் பிரச்சனை வந்தது என்றால், அதில் வெற்றியானது யோகத்தின் பிரயோகத்தினால் தான் கிடைத்திருக்கிறது. எனவே முயற்சி மூலம் நிலத்தை உருவாக்குங்கள், ஆனால் விதையை வெளிப்படுத்துவதற்காக யோகத்தின் பிரயோகம் செய்யுங்கள். அப்பொழுது தான் வெற்றி அடைக ! என்ற வரதானம் பிராப்தி ஆகும்.



    சுலோகன் :

    சேவை மூலமாக புண்ணியத்தின் மூலதனத்தை சேமிப்பு செய்பவர் தான் புண்ணிய ஆத்மா.


    ***OM SHANTI***