BK Murli 19 April 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 19 April 2017 Tamil

    19.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் தேகத்தின் உணர்விஷிருந்து விடுபட்டுக் கொண்டே செல்லுங்கள். நான் இவ்வளவு நல்லவன், தனவான், இவையனைத்தையும் விட்டு, தன்னை ஆத்மா என உணருங்கள்.



    கேள்வி:

    எந்த ஒரு நிச்சயம் அல்லது தாரணையின் ஆதாரத்தில் குழந்தைகள் நீங்கள் தங்களின் மிக உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்ள முடியும்?



    பதில்:

    முதஷில் நான் ஆத்மா என்ற நிச்சயம் வேண்டும் - இப்போது நாம் சரீரத்தை விட்டு, வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் இந்த உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. 2. நமக்குப் படிப்பு சொல்லித் தருபவர் மற்றும் உடன் அழைத்துச் செல்பவர் சிவபாபா. அவரது ஸ்ரீமத் படி நாம் நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து தனக்கும் தன்னுடைய உற்றார் உறவினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எந்தக் குழந்தைகள் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ, அல்லது யாருக்கு கற்றுத் தரும் தந்தை மீது நிச்சயம் இல்லையோ, அவர்கள் ஒன்றுக்கும் உதவ மாட்டார்கள். அவர்கள் போகப்போக மறைந்து போவார்கள். உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்ள முடியாது.



    பாடல்:

    ஓம் நமோ சிவாய



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், மற்றும் அறிவீர்கள், நாம் பாபாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம் என்று. எந்த ஒரு சந்நியாசி அல்லது உற்றார் உறவினர் முன்பாகவோ அமர்ந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், எந்த மிக இனிய தந்தையை ஜென்ம-ஜென்மாந்தரமாக நினைவு செய்கிறோமோ, அவருக்கு முன்பாகத் தான் நாம் அமர்ந்துள்ளோம். நாமும் உயிருடன் இருக்கும் போதே அவருடைய குழந்தையாக ஆகி யிருக்கிறோம். சந்நியாசிகளுக்கோ சீடர்கள் உருவாகின்றனர். அவர்கள் இருப்பதோ அவர்களின் வீட்டிலேயே தான் இல்லையா? அவர்கள் சீடர்கள் (பின்பற்றுவோர்) எனச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் பின்பற்றுவதில்லை. குழந்தைகள் நீங்கள் பின்பற்ற வேண்டும். புத்தியில் இது நினைவிருக்க வேண்டும்-நாம் ஆத்மா, எங்கே பாபா செல்வாரோ, அங்கே நாம் செல்வோம். நிராகார் பாபா பரந்தாமத்திலிருந்து இங்கே வந்துள்ளார், தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதற்காக. வருவதோ தூய்மை இல்லாத உலகத்தில், தூய்மையற்ற சரீரத்தில் தான். யார் முதல் நம்பரில் தூய்மையாக இருந்தாரோ, யார் 84 பிறவிகள் எடுத்துள்ளாரோ, அவருக்குள் பிரவேசமாகித் தான் இவை அனைத்தையும் புரிய வைக்கிறார். இங்கே அநேகம் குழந்தைகள் அமர்ந்துள்ளனர். ஆசிரியர் யாரோ ஒருவருக்கு மட்டும் கற்றுக் கொடுப்பாரா என்ன? பகவான் சொல்வது அர்ஜுனனுக்கு மட்டும் தான் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். ஆசிரியர் யாராவது ஒருவருக்கு மட்டும் கற்றுத் தருவாரா என்ன? அர்ஜுனனுக்கு மட்டும் பகவான் சொல்கிறார் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் தந்தையின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது - நீங்கள் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சரீரத்தையோ இங்கேயே தான் விட்டுவிட வேண்டும். எனவே, தேக உணர்வை விட்டு விட வேண்டும் நான் எவ்வளவு நல்லவன், செல்வந்தன் இந்த மாதிரியான எண்ணத்தை நீக்கி விட வேண்டும். நான் ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்து-செய்தே பாபாவுடன் சென்று விட வேண்டும். சிவபாபா சொல்கிறார், எனக்கோ தேகத்தின் அபிமானம் இருக்க முடியாது. ஏனென்றால் எனக்குத் தன்னுடைய சரீரம் என்பதே கிடையாது. உங்களுக்கும் முதலில் இந்த தேக அபிமானம் கிடையாது. எப்போது ஆத்மாக்கள் நீங்கள் என்னிடம் இருந்தீர்களோ, அதன் பிறகு 84 பிறவிகளின் பாகத்தில் நடித்தீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைந்திருந்தோம். பிறகு இழந்து விட்டோம். இப்போது மீண்டும் உங்களை முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். சரீரங்களையோ எடுத்துச் செல்ல மாட்டேன். இது பழைய சரீரம், இதன் உணர்வையோ புத்தியிலிருந்து நீக்கி விட வேண்டும். தனது இல்லற விவகாரத்திலேயே தான் இருக்க வேண்டும். இது சந்நியாச மடம் கிடையாது. தன்னுடைய வீடு- வாசலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களோ வீடுவாசலை விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். தந்தை குழந்தைகளை அது போல் விட்டுவிடுமாறு செய்வதில்லை. பாபா சொல்கிறார், தங்களின் குழந்தைகளுக்கு நினைவு படுத்துங்கள் - சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று. புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்களானால் அவர்களுக்கும் சிவபாபா மீது அன்பு ஏற்பட்டு விடும். சிவபாபா எவ்வளவு இனிமையான மற்றும் அன்பானவர்! அனைவரையும் இங்கே தங்க வைத்து விட்டால் பிறகு குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? அது போல் இங்கே அநேகக் குழந்தைகள் உள்ளனர், இங்கிருந்து சரீரத்தை விட்டுச் செல்கின்றனர். பிறகு அடுத்த பிறவி எடுத்து பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்காக வருவார்கள், சந்திக்கவும் செய்வார்கள். நாம் ஆத்மா என்ற நிச்சயம் இருக்க வேண்டும். இந்த சரீரத்தை விட்டுத் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கே நமது மனதை ஈடுபடுத்தக் கூடாது. சந்நியாசிகள் சொல்கின்றனர், பிரம்ம தத்துவத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று. அநேக விதமான வழிமுறைகள் உள்ளன. இங்கோ ஒரு பாபா மட்டுமே. தந்தை வந்துள்ளார், குழந்தைகள் நம்மை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. சத்யுகத்தில் மற்ற அனைத்து தர்மங்களும் இருக்கவில்லை. இப்போது சத்யுகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது பாபா மீண்டும் அவதரித்துள்ளார். நீங்கள் இப்போது புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். மறு அவதாரம் என்று ஒருவருக்கு மட்டுமே சொல்வார்கள். அநேகக் குழந்தைகள் எழுதுகின்றனர்- பாபா, எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதாவது கொஞ்சம் கோபம் வந்து விடுகிறது. ஆம் குழந்தைகளே, இதுவோ நடக்கத் தான் செய்யும். நோய் என்றால் உடனே விடுபட்டு விடுமா என்ன? அனைத்து குணங்களும் வெளியேறி-வெளியேறி குணமற்றவர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆக வேண்டும். உங்களுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது. அங்கே பேராசையின் விசயமோ கிடையாது. இங்கே பேராசை வசமாகி எவ்வளவு திருட்டு முதலியன செய்கின்றனர்! அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் தானியங்களின் கிடங்கு கெட்டுப்போகிறது. பிறகு எரித்து விடுகின்றனர். இங்கோ மனிதர்கள் பட்டினியால் சாகின்றனர். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், நமக்கு சிவபாபா படிப்பு சொல்லித் தருகிறார். முதலில் சிவபாபா நமக்குக் கற்பிக்கிறார் என்ற நிச்சயம் எப்போது இல்லையோ, அப்போது எந்த ஒரு வேலைக்கும் ஆக மாட்டார்கள். பாபா புரிய வைத்துள்ளார், ஆத்மா நீங்கள் தூய்மை இழந்தவர் ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீமத் படி அவசியம் நடக்க வேண்டும். தனது வழிமுறைப்படி நடத்தக் கூடாது. உற்றார் உறவினருக்கு ஸ்ரீமத் மூலம் நன்மை செய்ய வேண்டும். கடிதம் எழுத வேண்டும். ஸ்ரீமத் படி எழுதவில்லை என்றால் தீமை செய்தவராகிறீர்கள். அநேகர் மறைவாகக் கடிதம் எழுதுகின்றனர். பாபா ஆசிரியர் அமர்ந்துள்ளார் என்றால் பாபாவுக்குச் சொல்ல வேண்டும். பாபா உங்களுக்கு அந்த மாதிரி கடிதம் எழுதக் கற்றுத் தருவார், அதைப் படிக்கிறவருக்கு மெய் சிலிர்த்து விடும். பாபா தடை செய்வதில்லை. பற்றுதலை விட்டவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் தர்மம் வீட்டில் இருந்து எப்படித் தொடங்கும்? அநேகர் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் மறைந்து விடுகின்றனர். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தொடர முடிவதில்லை. இது போல் அநேகம் ஆண்கள் வருகின்றனர், அவர்களின் மனைவிமார் வருவதில்லை. அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சிவபாபா எழுதுகிறார், நீங்களோ பலவீனமாக இருக்கிறீர்கள். அவர்களுக்கும் புரிய வையுங்கள். நீங்களோ, உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தீர்கள், ஆணையை ஏற்று நடப்போம் என்று. நீங்கள் உங்கள் மனைவியையே கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என்றால் விகாரங்களை எப்படி வசப்படுத்த முடியும்? உங்கள் கடமை மனைவியைத் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். சாஸ்திரங்களில் இவை அனைத்தும் இச்சமயத்தின் விஷயங்கள் தான் எழுதப்பட்டுள்ளன. பிராமணர்களாகிய நீங்களும் முதலில் புத்தியற்றவர்களாகவே இருந்தீர்கள். இப்போது பாபா புத்திவான் ஆக்கியிருக்கிறார்.



    நீங்கள் அறிவீர்கள், சிவபாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பு இது போலத்தான் பாகத்தை நடித்திருந்தார். இதே மாதிரித் தான் புரிய வைத்திருப்பார். இந்த பிரம்மாவும் கூட அறிந்து கொண்டுள்ளார். நீங்கள் இப்போது புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் நல்லபடியாக சேவை செய்கின்றனரோ, அவர்கள் தான் ஃபரிஸ்தா ஆவார்கள். பழைய கணக்கு-வழக்கு இருந்து விட்டால் தண்டனை பெற நேரிடும். இப்போது நீங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா உங்களுக்குச் சொல்கிறார். பிரம்மா சொல்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாம். சிவபாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது நாடகம் முடியப் போகிறது. நீங்கள் என்னிடம் யோகம் வைப்பீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் அறிவீர்கள், இப்போது நாயகன் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். மேலும் உங்களுக்குப் பாடம் கற்பிக்கவும் செய்கிறார். எவ்வளவு அதிசயம்! நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலிகள்! அப்போது ஒருவரின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும் இல்லையா? நீங்கள் அனைவரைக் காட்டிலும் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்கின்றார். நான் ஸ்ரீஸ்ரீ. உங்களை ஸ்ரீ-ஸ்ரீயாக, சிரேஷ்டமானவர்களாக ஆக்குகிறேன். சிரேஷ்ட உலகத்தை உருவாக்குகிறேன். இங்கே எவ்வளவு தூய்மை இல்லாத மனிதர்கள் உள்ளனர்! அவர்கள் தங்கள் மீது ஸ்ரீ என்ற டைட்டிலை வைக்கச் செய்கின்றனர். நீங்கள் இராவணன் மீது வெற்றி பெற்றுக் கொண்டே செல்கிறீர்கள். உங்கள் ஆத்மா ரூப ஊசியில் துரு ஏறி இருக்கிறது. இப்போது காந்தம் (சிவபாபா)வந்து தூய்மைப் படுத்துகிறார். தூய்மையாவீர்களானால் அவருடன் கூடவே செல்வீர்கள். கறையை நீக்குவதற்காக பாபாவை நினைவு செய்யுங்கள். மாதாக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் வெண்ணெயைப் பார்க்கின்றனர். அது சொர்க்கம் என்ற வெண்ணெய். இரண்டு பூனைகள் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன. வெண்ணெய் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தான் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர் தனியாக ஒன்றும் இராஜ்யம் செய்ய மாட்டார். சூரியவம்சி, சந்திரவம்சி அரச பரம்பரை நடைபெறுகிறது. அதன் பிறகு இராஜாக்களின் பரம்பரை வந்து விடுகிறது. அதுவும் மிகப் புராதன காலத்திருந்தே நடந்து வந்துள்ளது. பின்னால் பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் நடைபெறுகிறது.



    இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை பார்ட் நடிப்பதற்காக அனுப்பி வைத்திருந்தார். சொர்க்கத்தில் நாம் மிகவும் சுகமாக இருந்தோம். 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பாரதத்தில் தான் பாடப்படுகின்றது. அந்தக் கன்யாக்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கச் செய்கின்றனர். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார்! இருந்தாலும் சிலருடைய பழைய கெட்டுப்போன அவகுணங்கள் வெளியேறுவதில்லை. பாபா பெரிய மார்ஷலாகவும் (சேனைத்தலைவர்) உள்ளார். பாபாவுடன் கூடவே தர்மராஜரும் உள்ளார். ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் அவருடைய வலது கரமாகிய தர்மராஜரும் உள்ளார். பாபாவின் மடியில் பிறவி எடுத்தனர். பிறகு வெளியில் சென்று இறந்து விடுகின்றனர் என்றால் எவ்வளவு நஷ்டமாகி விடுகிறது! ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் செத்துப் போகின்றனர். எவ்வளவு புரிய வைக்கிறார் - புத்தி மூலம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று. இச்சமயம் உலகம் முழுவதும் கல்புத்தியாக உள்ளனர். இந்த பாபாவும் (பிரம்மா) சொல்கிறார், நான் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்திருந்தேன். எதுவும் தெரியாமல் தான் இருந்தேன். எனக்கு இந்தக் கல்வி ஒரு குரு மூலமாகக் கிடைத்தது என்று யாராவது சொன்னால் குருவிடமிருந்து கல்வி ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்குமா என்ன? குருவைப் பின்பற்றுவோரோ அநேகம் பேர் இருப்பார்கள். குருவின் கல்வி பெற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் குருவின் பதவியும் கூட எடுத்துக் கொள்ளப் படும். இந்த விஷயமோ தனிப்பட்டது. சிவபாபா இவர் மூலமாகக் கல்வி கற்பித்து அனைவரிடமிருந்தும் புத்தியோகத்தை நீக்கி வைக்கிறார். திடீரென அனைத்தையும் விட வைத்தார். அநேகக் குழந்தைகளும் கூட இது போல் தான் செய்தனர். பட்டி நடைபெற வேண்டும் என இருந்தது. பாக்கிஸ்தானில் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிபாலனை நடைபெற்றது! புத்திவான்களின் புத்தியாகிய பாபா அமர்ந்திருந்தார். நாம் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்குச் சொன்னோம், நல்ல தானியம் கிடைக்கவில்லை என்று. உடனே ஆபீசர் சொல்லிவிட்டார்-எது வேண்டுமோ, விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். புத்தியின் பூட்டைத் திறப்பவராக பாபா இருந்தார். கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. குமாரிகள் எவ்வளவு அடி வாங்குகின்றனர்! எவ்வளவு நினைவு செய்கின்றனர்! பாபா, உங்களுடைய அற்புதம்-எங்களுக்கு ஈஸ்வரிய லாட்டரி கிடைத்துள்ளது. குழந்தைகள் எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும்! அன்போடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களையும் கை தூக்கிவிட வேண்டும். படைப்பவர் (ஸ்தூல தந்தை) ஓடி விட்டால் படைப்பின் நிலை என்னவாகும்? இங்கே சந்நியாசிகளுக்கு இந்த பாகம் இருந்தது, அந்தச் சமயம் தூய்மையின் தேவை இருந்தது. இந்த விளையாட்டு முழுவதும் உருவாக்கப்பட்டதாகும். முழு இராஜதானியும் இங்கே ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க மாட்டார்கள். இந்த சங்கமயுகம் தான் புகழ் பெற்றதாகும். பாபா சொல்கிறார், நான் முன்பும் கூட சொல்லியிருந்தேன் - கல்ப-கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று. அவர்கள் பிறகு ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகவும், கச்ச மச்ச அவதாரம் எனவும் எழுதி விட்டுள்ளனர். மனிதர்களும் சத் சத் (உண்மை உண்மை) எனச் சொல்லிக் கொண்டே உள்ளனர். சுயராஜ்யம் இல்லையா? சந்நியாசிகள் எப்போதுமே சாந்தி வேண்டுகின்றனர். சுகத்தை வேண்டுவதில்லை. ஞானம் சரியில்லை எனச் சொல்வார்கள். உலகத்தில் சுகம் எங்கே உள்ளது? இராமர் இருந்தார் என்றால் இராவணனும் இருந்தான். கிருஷ்ணர் இருந்தாரென்றால் கம்சனும் இருந்தான். மேலும் சொர்க்கத்தில் அளவற்ற சுகம் இருந்தது. கிருஷ்ணர் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றனர். அவரோ சொர்க்கத்தில் தான் கிடைப்பார். இப்போதோ உங்கள் மனதின் ஆசைகள் பூர்த்தி ஆகின்றன. நீங்கள் அறிவீர்கள், பாபா கிருஷ்ணபுரிக்கு அழைத்துச் செல்வதற்காகப் புருஷார்த்தம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆக, பாபாவிடம் உண்மை மற்றும் தூய்மை மிகவும் வேண்டும். மறைப்பதால் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். சொல்லாத காரணத்தால் தவறுகள் பெருகிக் கெண்டே போகும். பாபா, எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஸ்ரீமத் தருகிறார். பிறகும் கூட யாராவது அறிவுரைப்படி நடக்கவில்லை என்றால் என்ன செய்வது?



    பாபா புரிய வைக்கிறார், ஈஸ்வரியக் குழந்தைகளாகிய உங்களிடம் மிகவும் ராயல்டி (கம்பீரம்) மற்றும் புத்திசாலித் தன்மை வேண்டும். மிகுந்த அன்போடு நீங்கள் அனைவர்க்கும் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பரமபிதா பரமாத்மாவோடு உங்களுக்கு என்ன சம்மந்தம் எனக் கேட்கின்றனர். அவரோ சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் சொர்க்கத்தின் எஜமானருக்குரிய ஆஸ்தி இருக்க வேண்டும். உங்களுக்கு ஆஸ்தி இருந்தது. அதை இழந்து விட்டீர்கள். மீண்டும் உங்களுக்குத் தருகிறேன். இந்த லட்சுமி-நாராயணர் இங்கே லட்சியமாக உள்ளது. பாபா நிச்சயமாக சத்யுகத்தின் இராஜ்ய பதவியைத் தான் தருவார். குழந்தைகள் நீங்கள் சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் உயிர் தானம் கொடுக்க வேண்டும்-21 பிறவிகளுக்கு. நீங்கள் தான் மகான் புண்ணிய ஆத்மா. உங்களைப் போன்ற புண்ணியாத்மாக்கள் யாரும் இருக்க முடியாது. புண்ணியத்தின் உலகத்திற்குச் செல்லப் போகிறவர்கள் நீங்கள். மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். இது பதீத-பாவனர் தந்தை மற்றும் தாதா. குழந்தைகளை வேஷ்யாலயத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். இதை பயங்கர நரகம் என்றும் சொல்கின்றனர். இங்கே துக்கத்தின் மேல் துக்கம். பாபா வந்துள்ளார், துக்கதாமத்திலிருந்து வெளியேற்றி சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக. நாம் இப்படிப்பட்ட பரலௌகிக் தாய்-தந்தையிடம் சதா சுகம் பெறுவதற்காக, சந்திப்பதற்காக வந்துள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். உங்களுக்குக் குஷி உள்ளது-நாம் சிவாலயத்தை ஸ்தாபனை செய்பவராகிய போலாநாத் பண்டாரியிடம் செல்கிறோம். சிவனைத் தான் நினைவு செய்யவும் வேண்டும். இரதத்தை அல்ல. நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. பாபாவிடம் சதா உண்மையாக இருக்க வேண்டும், எதையும் மறைக்கக் கூடாது. மிக-மிக ராயல்டியுடனும் (கௌரவமாகவும்) புத்திசாலித் தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.



    2. 21 பிறவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் உயிர் தானம் கொடுப்பதற்கான சேவை செய்து புண்ணியாத்மா ஆக வேண்டும். ஆத்மா ரூப ஊசி மீது துரு படிந்துள்ளது. அதை நினைவு யாத்திரையில் இருந்து, அகற்றிவிட வேண்டும்.



    வரதானம்:

    லைட் (ஒளி) ஆகி ஞான யோகத்தின் சக்திகளைப் பிரயோகத்தில் கொண்டுவரக் கூடிய பயன்படுத்தக் கூடிய ஆத்மா ஆகுக !



    ஞானி-யோகி ஆத்மாவாகவோ ஆகியிருக்கிறீர்கள், இப்போது ஞான, யோகத்தின் சக்தியைப் பயன்பாட்டில் கொண்டுவரக் கூடிய நடைமுறைபடுத்தும் ஆத்மா ஆகுங்கள். எப்படி விஞ்ஞான சாதனங்களின் உபயோகம் ஒளி மூலமாக நடைபெறுகின்றது. அது போல் அமைதி சக்தியின் ஆதாரம் கூட ஒளி தான். அவிநாசி பரமாத்ம ஒளி, ஆத்மிக ஒளி மற்றும் அதனுடன் கூடவே நடைமுறை ஸ்திதியும் கூட ஒளி தான். ஆக, எப்போது ஏதேனும் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அப்போது சோதித்துப் பாருங்கள், ஒளி இருக்கிறதா இல்லையா என்று. ஸ்திதி மற்றும் சொரூபம் டபுள் லைட்டாக (ஒளி-சக்தி) இருக்குமானால் பிரயோகத்தின் வெற்றி சுலபமாகி விடும்.



    சுலோகன்:

    ஜீவன்முக்த் நிலையை அனுபவம் செய்வதற்காக விகல்பங்கள் (நிச்சயமற்ற தன்மை) மற்றும் விகர்மங்களில் இருந்து விடுபடுங்கள்.



    ***OM SHANTI***