BK Murli 5 April 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 5 April 2017 Tamil

    05.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! யோகபலத்தினால் நஷ்டத்தின் கணக்கை முடித்து விட்டு சுகத்தின் கணக்கை சேமியுங்கள். வியாபாரி ஆகி தனது முழுக் கணக்கையும் வெளிப்படுத்துங்கள்.



    கேள்வி:

    குழந்தைகள் நீங்கள் தந்தையிடம் எந்த ஓர் உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான சகஜ சாதனம் என்ன?



    பதில்:

    நீங்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள் - எனக்கு ஒரு சிவபாபா மட்டுமே. வேறு யாரும் இல்லை. பக்தியிலும் கூட சொல்லி வந்தீர்கள் - பாபா, நீங்கள் எப்போது வருவீர்களோ, அப்போது மற்ற அனைத்து சங்கத்தையும் விட்டு உங்கள் ஒருவரோடு மட்டுமே இணைவோம். இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, தேகத்தோடு கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் புத்தி மூலம் தியாகம் செய்து என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இந்தப் பழைய சரீரத்தில் இருந்தும் கூட மனதை விலக்கி விடுங்கள். ஆனால் இதில் தீவிர முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக அதிகாலை எழுந்து தனக்குத் தானே ஆன்மிக உரையாடல் செய்யுங்கள். மற்றும் சிந்தனை செய்யுங்கள் - இப்போது இந்த நாடகம் முடிவடைகின்றது.



    பாடல்:

    ஆகாச சிம்மாசனத்தை விட்டுக் கீழே இறங்கி வாருங்கள்......



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் அழைக்கின்றனர் – பரந்தாமத்திலிருந்து வாருங்கள். தூய்மை இல்லாத மனிதர்களால் இந்தப் பாடல் பாடப் பட்டுள்ளது. அவர்கள் தாங்களே இதன் அர்த்தத்தை அறியாதிருக்கிறார்கள். அழைக்கவும் செய்கின்றனர், தூய்மையற்றவர்களைப் தூய்மை ஆக்குவதற்கு வாருங்கள் என்று. ஏனெனில் இச்சமயம் இராவண இராஜ்யம் நடக்கிறது. இதையும் குழந்தைகள் அறிந்துள்ளனர், அதாவது பாரதத்தில் தெய்விகமான உயர்ந்த இராஜ்யம் முன்பு இருந்தது. இப்போது நீங்கள் உயர்ந்தவர்களாக ஆவதற்குப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பழைய பாவங்களின் கணக்கை முடித்துவிட வேண்டும். வியாபாரிகள் ஒவ்வொரு- 12 மாதங்களின் முழுக் கணக்கை முடித்து வைக்கின்றனர். இலாபம் அல்லது நஷ்டத்தின் கணக்கை வெளிப்படுத்துகின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாரதத்தில் நாம் முதல் அரைக்கல்பம் இலாபத்தில், அடுத்த அரைக்கல்பம் நஷ்டத்தில் இருக்கிறோம். அதாவது அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம் அடைகிறோம். தமோபிரதான மனநிலை வரும் போது கலப்பட பக்தியில் சென்று விடுகின்றனர். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் இலாபத்தில் செல்ல வேண்டும். நஷ்டத்தின் கணக்கை இப்போது யோக பலத்தின் மூலம் முடித்துவிட வேண்டும். உங்கள் பாவங்களின் கணக்கை இப்போது முடித்துவிட வேண்டும். பிறகு சுகத்தின் கணக்கை சேமிக்க வேண்டும். எந்தளவு நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவு உங்கள் பாவங்களின் கணக்கு பஸ்மமாகும். மேலும் தூய்மையாகி கீதையின் ஞானத்தை தாரணை செய்ய வேண்டும். இங்கே ஒன்றும் கீதை சாஸ்திரம் சொல்லவில்லை. இந்த கீதை ஞானத்தை பகவான் தந்துள்ளார். இச்சமயம் மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக இருக்கும் காரணத்தால் தந்தையை அறிந்து கொள்ளவில்லை. அதனால் இவர்கள் அனாதைகள் எனச் சொல்லப் படுகிறார்கள். நீங்கள் புரிய வைக்கிறீர்கள், பாரதம் புண்ணிய ஆத்மாக்களின், உயர்வான குணங்களை கடைபிடிப்பவர்களின் உலகமாக இருந்தது. அவர்களுடைய சித்திரங்களும் உள்ளன. பாரதம் சத்யுக ஆரம்பத்தில் மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது. மேலும் இஸ்லாமிய, பௌத்த தர்மங்கள் ஆரம்பத்தில் இல்லை. தர்ம ஸ்தாபகர்கள் வந்தனர். பிறகு அந்த தர்மத்தின் ஆத்மாக்கள் அனைவரும் வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் ஒன்றும் இராஜ்யம் எதிலும் வருவதில்லை. தங்களின் தர்மத்தில் வருகின்றனர். எப்போது இலட்சம், கோடிக் கணக்கில் ஆகி விடுகின்றனரோ, அப்போது இராஜா-ராணி முதலானவராக ஆகின்றனர். இங்கே உங்களுக்கோ ஆரம்பத்தில் இருந்தே இராஜ்யம் நடைபெறுகின்றது. சத்யுக ஆரம்பத்தில் தான் லட்சுமி-நாராயணரின் ஆட்சி இருந்தது. பாரதம் சிரேஷ்டாச்சாரியாக இருந்த போது மிக உயர்ந்ததாக இருந்தது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் என்று பாடப் பட்டுள்ளது. அவரைத் தான் சத்தியமானவர் எனச் சொல்கின்றனர். அவர் வந்து உண்மையான ஞானம் தருகிறார். மற்ற அனைவரும் தந்தை பற்றிப் பொய்யான ஞானத்தையே தருகின்றனர். ஓ காட் ஃபாதர் என்று அனைவருமே நினைவு செய்கின்றனர். ஆனால் தந்தையைப் பற்றி யாருக்குமே தெரியாது. எப்போதாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள் - லௌகிக் தந்தையை அறிவீர்கள் என்றால் அவரை சர்வவியாபி எனச் சொல்ல மாட்டார்கள். தந்தை என்றால் தந்தை தான். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாபா புரிய வைக்கிறார்-நான் எல்லையற்ற படைப்பாளர். என்னை நீங்கள் அழைப்பதே பழைய உலகத்தில் தான். பிரளயமோ நடைபெறுவதில்லை. இது முழுவதுமாக தூய்மையற்ற உலகம். குழந்தைகளாகிய உங்களுக்காகவே நான் வர வேண்டியுள்ளது. குழந்தைகள் உங்களுக்குத் தான் புரிய வைக்கிறேன். மனிதர்கள் குரு முதலானவர்களை அமர்த்திக் கொள்கின்றனர் - சாந்திக்காக. ஆனால் அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்காக, ஹடயோகம் முதலியவற்றைக் கற்பிக்கின்றனர். அவர்களிடம் எல்லையற்ற ஆஸ்தி எதுவும் கிடைக்காது. குருவை அமர்த்திக் கொள்கின்றனர் என்றால் அதனால் அல்ப காலத்திற்கான கொஞ்சம் சுகம் தான் கிடைக்கும். அவர்கள் அனைவரும் எல்லைக்குட் பட்ட சுகம் தருபவர்கள். எல்லையற்ற தந்தை தான் எல்லையற்ற சுகம் தருபவர். பாபா முக்தி-ஜீவன்முக்திக்கான பரிசைக் கொண்டு வருகிறார். சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும். இங்கோ எவ்வளவு அநேக தர்மங்கள்! விரிவாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது மீண்டும் இவ்வளவு ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குத் திரும்பிச் சென்று விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. பாபா இந்த மனித சிருஷ்டியின் விதை வடிவம். அவரிடம் ஞானம் முழுவதும் உள்ளது. சர்வவியாபி எனச் சொல்வதால் ஞானம் அல்லது பக்தியின் எந்த ஒரு விஷயமும் நிற்காது. பகவான் சர்வவியாபி என்றால் பிறகு பகவானுக்கு பக்தி செய்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது? பக்தி செய்கின்றனர். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. கல் மண் அனைத்துக்கும் பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர். கங்கையில் எவ்வளவு பேர் குளிப்பதற்காகச் செல்கின்றனர்! அது தூய்மைபடுத்தக் கூடியது (பதீத-பாவனி) என்றால் பிறகு அனைவரும் தூய்மையாக அல்லவா இருக்க வேண்டும். முக்தி-ஜீவன்முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் யாரும் போவதில்லை. ஒரு குரு முக்திதாமத்திற்குத் திரும்பிச் செல்வாரானால் மற்ற சீடர்கள் அனைவரையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் தாங்களும் செல்வதில்லை, சீடர்களுக்கு எதுவும் சொல்லவும் முடிவதில்லை. தேக அபிமானத்தில் அநேகர் உள்ளனர். இது போல் யாரும் சொல்ல முடியாது நான் நிராகார் பரபிதா பரமாத்மா, குழந்தைகளாகிய உங்கள் தந்தை நான், உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். இதைச் சொல்வதற்கு பாபாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இப்போது பழைய உலகத்தை விட்டுவிட வேண்டும். அதனால் யோகபலம் அவசியம் வேண்டும். கவனக்குறைவாக இருப்பதால் பதவி கிடைக்காமல் போகும்.



    குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். தகுதியற்றவர்களாக ஆகும் குழந்தைகள் திவாலாகி விடுகின்றனர். கல்ப-கல்பமாக உங்களை நூற்றுக்கு நூறு செல்வம் நிறைந்தவர்களாக ஆக்குகிறேன். பிறகு இராவணன் உங்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கி விடுகிறான். சரியான விஷயம் தான் எனப் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர்-இப்போது கலியுகத்தின் கடைசி, சத்யுக ஆரம்பத்தின் சங்கமம். கட்டடத்தின் ஆயுள் 100 அண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள். 25 ஆண்டுகள் கடந்து விட்டால் கால் பங்கு பழையதாகி விடுகிறது. 50 ஆண்டுகள் ஆகி விட்டால் பழையது எனப் பெயரிட்டுவிடுவார்கள். இதுவும் நான்கு பாகங்கள் வைக்கப் படுகிறது. சதோ ரஜோ தமோ, இப்போது மீண்டும் இது பழைய உலகில் இருந்து புதிய உலகமாக ஆகும். முழு உலகத்திற்குமே புதிய பிறவி கிடைத்தது போல் ஆகிறது. இது பழைய உலகம். பாபா சொல்கிறார், இப்போது நான் புதிய பிறவி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உலகம் பழையதில் இருந்து புதியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்திருப்பது இராஜயோகம் கற்றுக் கொள்வதற்காக. நீங்களும் அறிவீர்கள், இந்த டிராமாவில் நாம் நடிகர்கள். ஆத்மாக்கள் நாம் கூட சரீரத்தை எடுத்து இங்கே பாகத்தை நடிக்க வந்துள்ளோம். உலகத்தில் யாரும் இதை அறிந்து கொள்ளவில்லை. தங்களை நடிகர் எனப் புரிந்து கொண்டிருந்தால் படைப்பவர், இயக்குநர் பற்றியும் அறிந்திருப்பார்கள். இது கர்ம சேத்திரம் என்று ஒரு பேச்சுக்காக மட்டும் சொல்லி விடுகின்றனர். ஆனால் எப்போதிருந்து விளையாட்டு ஆரம்பமாயிற்று, அதைப் படைப்பவர் யார்-எதுவுமே தெரியாது. மனிதர்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? மற்றப்படி தங்களுக்குள் சண்டையிடுவதோ அனாதைகளின் வேலையாகும். தேவதைகளை அனாதை எனச் சொல்ல மாட்டார்கள். அங்கே சண்டை-சச்சரவுகள் நடப்பதில்லை. இங்கோ பாருங்கள், குழந்தைகள் தந்தையையே கொன்று விடுகின்றனர். அனைவரும் தூய்மையற்றவர்கள் கீழ்தரமானவர்கள். அதனால் துக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அரைக்கல்பமாக சம்பூர்ண நிர்விகாரி தேவி-தேவதைளின் இராஜ்யம் இருந்தது. இப்போதோ சம்பூர்ண நிர்விகாரியாக ஒருவர் கூட இல்லை. இப்போது பாபா உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார். இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகிறது. நான் வந்துள்ளேன், புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக. நீங்கள் உறுதிமொழியும் செய்கிறீர்கள் - பாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் மற்ற சேர்க்கைகளை விட்டு உங்கள் ஒருவருடைய சேர்க்கையில் இணைவோம். எனக்கோ ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இப்போது பாபா வந்துள்ளார், சொல்கிறார், குழந்தைகளே, தேகத்துடன் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து என்னை நினைவு செய்யுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. சொல்கின்றனர் - பாபா, நாம் அறிவோம், இந்த உற்றார் உறவினர் யார்-யார் உள்ளனரோ, இவர்கள் அனைவரும் இறந்து விட்டுள்ளனர். இந்த சரீரமும் அழிந்து போகும், பழையதாக ஆகி விட்டுள்ளது. இப்போது நாம் பழைய சரீரத்தை விட்டுப் புதியதில் செல்வோம். பழைய சரீரத்திடம் இருந்து மனம் விடுபட்டு விடுகிறது. இப்போது நாம் போயே போய் விட்டோம். பழைய உலகம் சாம்பலாகி விடப் போகிறது. பாபா புரிய வைக்கிறார், அதிகாலையில் எழுந்து சிந்தனை செய்யுங்கள். இப்போது நாடகம் முடிவடைகிறது. நாம் திரும்பிச் செல்லவேண்டும். இப்போது ஒரு பாபாவின் ஸ்ரீமத் படி மட்டும் நடக்க வேண்டும். இப்போது புது உலகிற்குச் செல்ல வேண்டும். அதனால் உயிருடன் இருந்து கொண்டே அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒருவரிடம் இணைக்க வேண்டும். இதில் அதிக பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதற்காகத் தான் பாபா சொல்கிறார், அதிகாலையில் எழுந்திருங்கள் என்று. பகலிலோ சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்ய வேண்டும். இரவில் செய்யப்படும் பயிற்சி மேலும் அதிகமாகு. எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, பாபாவை நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவில் நீங்கள் எவ்வளவு தான் கால்நடையாக நடந்து சென்றாலும் ஒரு போதும் களைப்படைய மாட்டீர்கள். யோகபலத்தின் குஷி இருக்கும். நினைவின் மூலம் செய்யும் பயிற்சி இருக்குமானால் எங்கே அமர்ந்திருந்தாலும் பாபா நினைவு வந்து விடும். உணவு உண்ணும் போதும் கூட நினைவில் இருக்க வேண்டும். வீணான பேச்சுகள் நடைபெறக் கூடாது. பாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும். பிறகு அந்த் மதி ஸோ கதி ஆகி விடும் (கடைசி நேர நினைவின் அனுசாரம் எதிர்கால நிலை கிடைக்கும்). இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், அனைவரையும் உயர்ந்தவர்களாக ஆக்குபவர், சாந்தி தேசத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரே ஒரு பாபா தான். ஜென்ம- ஜென்மாந்தரமாக உங்களுக்கு தந்தை ஆசிரியர், குரு கிடைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சரீர சம்மந்தமானவர்கள். யாருமே ஆத்ம அபிமானி ஆவதற்குக் கற்றுத் தருவதில்லை. இவரோ எல்லையற்ற தந்தை, ஞானக்கடலாக இருப்பவர். ஆத்மாக்கள் அனைவருக்குள்ளும் சம்ஸ்காரங்கள் நிரம்பியுள்ளன. பிறகு சரீரத்தை தாரணை செய்வதால் அவை வெளிப்படுகின்றன. இப்போது உங்களுக்கு முழு டிராமாவின் ஞானம் உள்ளது. மற்ற மனிதர்கள் அனைவருமோ பயங்கர இருளில் உள்ளனர். ஞான மையை சத்குரு அளித்ததாகப் பாடவும் பட்டுள்ளது. ஆக, ஞான மை தருபவர் ஞானசூரியனாகிய பாபா. சத்யுகம் பகல் என்றும் கலியுகம் இரவென்றும் சொல்லப் படுகின்றது. ஆத்மாக்கள் அந்த நிராகாரி தந்தையை நினைவு செய்கின்றனர். பாபா புரிய வைக்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மாவின் வாயின் மூலமாகக் கல்பத்திற்கு முன் போலவே அனைத்து பக்தி மார்க்க சாஸ்திரங்களின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள், அவை அரைக்கல்பமாக நடைபெற்று வந்துள்ளன. மனிதர்களோ, இவை பரம்பரையாக நடந்து வருகின்றன எனச் சொல்லிவிடுகின்றனர். இராவணனையும் கூடப் பரம்பரையாக எரித்து வருகிறோம் எனச் சொல்கின்றனர். பண்டிகைகள் என்னென்ன கொண்டாடுகின்றனரோ, அவை அனைத்தும் பரம்பரையாக நடந்து வருவதாகச் சொல்கின்றனர். பரம்பரை என்றால் அர்த்தம் என்ன? அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்தின் ஆயுள் இலட்சம் வருடங்கள் என எழுதி விட்டுள்ளனர். ஆக, மனிதர்கள் பயங்கர இருளில் உள்ளனர் இல்லையா? பக்தி எப்போதிருந்து ஆரம்பமாயிற்று, தூய்மையாக எப்போது ஆனோம், எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. பகவான் தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குவதற்காக எப்போது வந்தார்? சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது என்று. ஆனால் பிறகும் அநேக வழிமுறைகள் உள்ளன இல்லையா? எவ்வளவு வழிமுறைகள் உலகத்தில் காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன? பாபா வந்து சிரேஷ்ட வழிமுறை தருகிறார். ஸ்ரீமத் மூலம் நீங்கள் உயர்ந்தவர்களாக, தேவதைகளாக ஆகிறீர்கள். ருத்ர மாலையும் உள்ளது. ருத்ரனும் நிராகார் பகவான் தான். அவர் ஸ்ரீஸ்ரீ (மிகமிக சிரேஷ்டமானவர்-அனைவரிலும் உயர்ந்தவர்). தேவதைகளை ஸ்ரீ, அதாவது சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்வார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், ஸ்ரீஸ்ரீ மூலம் மிக உயர்வான மேன்மையான உலகம் உருவாகிறது. ஸ்ரீஸ்ரீயாகிய பாபா தான் ஸ்ரீயை (தேவதைகளை) உருவாக்குபவர். இந்த அனைத்து விஷயங்களையும் நினைவு வைக்க வேண்டும். கல்பத்திற்கு முன்பு புரிந்து கொண்டவர்களே இப்போதும் புரிந்து கொள்வார்கள். இந்த ஞானம் அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் தான். அனைவருக்கும் பாபா சொல்கிறார் - தன்னை ஆத்மா என உணருங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வளவு சுகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது! எல்லையற்ற தந்தை வந்து இவ்வளவு குழந்தைகளைத் தத்தெடுக்கிறார். இவர்கள் முகவம்சாவளி இல்லையா? எவ்வளவு ஏராளமான பி.கே.க்கள் உள்ளனர்! அவர்கள் பிறகு தேவதை ஆகப் போகிறவர்கள். இது ஈஸ்வரிய குலம். தாதா நிராகாராக உள்ளார். அவருடைய குழந்தையின் பெயர் பிரஜாபிதா பிரம்மா, இவர் மூலமாகத் தத்தெடுக்கிறார். பிராமணர்களாகிய நீங்கள் சிவபாபாவின் குடும்பத்தினர். பிறகு வளர்ச்சி அடைகிறது. இப்போது உங்களுடையது நம்பர் ஒன் வம்சாவளி. நீங்கள் சேவை செய்கிறீர்கள், அனைவருக்கும் நன்மை செய்கிறீர்கள். உங்களுடைய நினைவு சின்னமாகிய இந்த கோவில் (தில்வாடா) மிகச் சரியாகக் கட்டப் பட்டுள்ளது. இங்கே நீங்கள் சைதன்யமாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் மீண்டும் ஸ்தாபனை செய்கிறோம். பக்தியில் நமது நினைவு சின்னமாக கோவில்களைக் கட்டுவார்கள். சிவபாபா இல்லை என்றால் நீங்கள் எங்கே இருப்பீர்கள்? பிரம்மா விஷ்ணு சங்கர் எங்கே உள்ளனர்? இப்போது சிவபாபா படைப்பைப் படைத்துக் கொண்டிருக்கிறார் இல்லையா? பிரஜாபிதா பிரம்மாவின் சித்திரம் தனியாக இருக்க வேண்டும். திரிமூர்த்தி பிரம்மா எனச் சொல்கின்றனர். ஆனால் அதற்கோ எந்த ஓர் அர்த்தமும் இல்லை.



    பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். செய்பவர்-செய்விப்பவர் சிவபாபா. இந்த அனைத்து விஷயங்களும் தாரணை செய்வதற்கானவை. சிவபாபா தாமே இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதை தாரணை செய்ய வேண்டும். இதில் தூய்மை தான் முதலாவதாகும். தைரியத்தையும் காண்பிக்க வேண்டும். இல்லறத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருந்து காட்ட வேண்டும். யாராவது பெண்குழந்தையைக் காப்பாற்றுவதற்காகவும் சுயம்வரம் செய்கின்றனர். அதை கந்தர்வ விவாகம் எனச் சொலல்கின்றனர். பிறகு அதிலும் கூடச் சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர். திருமணம் செய்து கொண்டு, பிறகு தூய்மையாகவும் இருக்கின்றனர். ஒரு சிலர் உள்ளனர் தூய்மையாக இருந்து பிறகு ஞானமும் பெற்றுக் கொள்ள வேண்டும். தாரணை செய்து மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக ஆக்கிக் காட்ட வேண்டும். அப்போது உயர்ந்த பதவி பெற முடியும். இந்த ஞான யக்ஞத்தில் தடைகளும் அதிகம் வருகின்றன. இவை அனைத்தும் நடக்கத் தான் செய்யும். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. பெண்குழந்தைகள் சிலர் சொல்கின்றனர்-எங்களுக்கு செல்வம் எதற்கு, இதை விட பாத்திரம் தேய்த்து ரொட்டி சாப்பிடுவது நல்லது, தூய்மையாகவோ இருப்போம். ஆனால் அதிக தைரியம் வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. உணவு சமைக்கும் போது பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். வீணான உரையாடல் கூடாது. நினைவின் மூலம் பாவக் கணக்கை முடித்துவிட வேண்டும்.



    2. பகலில் சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்து, இரவில் கண் விழித்துத் தனக்குத் தானே ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். இந்த நாடகம் முடிவடைந்தது, நாம் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் இதை சிந்தனை செய்ய வேண்டும் . அதனால் உயிருடன் இருந்து கொண்டே மோகத்தை நீக்கிவிட வேண்டும்.



    வரதானம்:

    ஒரு பாபாவிடம் முழு உலகத்தின் அனுபவம் செய்து கொண்டு ஒருவரின் நினைவில் இருக்கக் கூடிய சகஜ யோகி ஆகுக !



    சகஜயோகி என்பதன் அர்த்தமே - ஒருவரை நினைவு செய்வதாகும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. உடல்-மனம்-செல்வம் அனைத்தும் உன்னுடையது, என்னுடையதல்ல. அது போல் டிரஸ்டி ஆகி டபுள் லைட்டாக இருப்பவர் தான் சகஜயோகி ஆவார். சகஜயோகி ஆவதற்கான எளிதான விதிமுறை ஒருவரை மட்டுமே நினைவு செய்வது, அந்த ஒருவர் மூலமே எல்லா வித சம்மந்தங்களையும் அனுபவம் செய்வது. பாபா தான் உலகம் என்றால் நினைவு சகஜமாகி விடும். அரைக்கல்பமாக முயற்சி செய்தாயிற்று. இப்போது பாபா முயற்சியில் இருந்து விடுவிக்கிறார். ஆனால் பிறகும் கூட முயற்சி செய்ய வேண்டி உள்ளது என்றால் அதன் காரணம் தனது பலவீனமாகும்.



    சுலோகன்:

    தூய்மை சொரூபமான தர்மத்தை யார் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றாரோ, அவர் தான் மகான் ஆத்மா ஆவார்.



    ***OM SHANTI***