BK Murli 6 April Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 6 April Tamil

    06.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! நீங்கள் தேவி தேவதா குலத்தவர்கள், நீங்கள் இப்போது பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆக வேண்டும், தந்தை உங்கள் அனைவருக்கும் பக்தியின் பலனை அளிப்பதற்காக வந்திருக்கிறார்.



    கேள்வி:

    தேகத்துடன் சேர்த்து அனைத்து சம்மந்தங்களுடன் உள்ள புத்தியின் தொடர்பை விடுவித்துக் கொள்வதற்கான சகஜமான விதி என்ன?



    பதில்:

    என்னுடையவர் ஒரு சிவபாபா, வேறு யாரும் அல்ல எனும் பாடத்தை உறுதியாக்குங்கள். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, தேகமும் தேகத்தின் அனைத்து சம்மந்தங்களும் துக்கம் கொடுப்பவை ஆகும். நீங்கள் என்னை தன்னுடைய குழந்தையாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் 21 பிறவிகளுக்கு சதா நீங்கள் எப்போதும் சுகமாய் இருக்கும் அளவு நான் சேவை செய்வேன். வாரிசாக ஆக்கினீர்கள் என்றால் ஆஸ்தி கொடுப்பேன். பிரியதர்ஷனாக ஆக்கினீர்கள் என்றால் அலங்காரம் செய்து சொர்க்கத்தின் மகாராணியாக ஆக்கிவிடுவேன். சகோதரனாக, நண்பனாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் உடன் விளையாடுவேன். என்னுடன் அனைத்து சம்மந்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்றால் தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்தும் புத்தி விலகி விடும்.



    பாடல்:

    எவ்வளவு இனியவர், எவ்வளவு அன்பானவர் கள்ளங்கபடமற்ற சிவ பகவான். . .



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? தன்னுடைய எல்லைக்கப்பாற்பட்ட தந்தையுடையதை. அவர்தான் சிவபாபா என சொல்லப்படுகிறார். பிரம்மாவும் பாபா என சொல்லப்படுகிறார். பிரஜாபிதா எனும்போது, பிதா என்றாலே பாபா (தந்தை). பிரஜாபிதா பிராம்மா குமார் மற்றும் குமாரிகள். இப்போது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா. நீங்கள் பிரம்மாவின் தர்மத்தின் குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் மூலம் சிவபாபாவின் மடியில் வந்திருக்கிறீர்கள். சிவபாபாவுக்கு தனது சரீரம் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கும் கூட அவர்களது சரீரம் உள்ளது. நிராகார பரமபிதா பரமாத்மாவுக்கு ஆகார அல்லது சாகார சரீரம் எதுவும் கிடையாது. அவர் பரமபிதா என அழைக்கப்படுகிறார். பிரஜாபிதாவை பரமபிதா என சொல்ல மாட்டோம். பரமபிதா என்றால் எல்லைக்கப்பால் (அனைத்தையும் கடந்த இடத்தில்) வசிப்பவர். ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கு வசிக்கக் கூடியவர்கள். அந்த தந்தை மிகவும் இனிமையானவர், ஆகையால்தான் அவருக்கு இந்த மகிமை பாடப்படுகிறது. நீங்கள்தான் தாயும் தந்தையும். . . பற்பிப்பவரும் கூட உங்களைப் போல இருக்க வேண்டும் என சொல்கின்றனர். சகோதரரும் உங்களைப் போல இருக்க வேண்டும், தந்தையும் உங்களைப் போல இருக்க வேண்டும். லௌகிக தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். இன்றைய நாட்களில் குழந்தைகளுக்கு ஆஸ்தியும் கிடைக்கிறது, ஆனால் அவர்கள் தந்தைக்கு சரியாக சேவை செய்வது கூட கிடையாது. மனைவி கிடைத்தாள், கொஞ்சம் பிரச்னை உண்டானது, அவ்வளவுதான் தனிக் குடித்தனம் சென்று விடுகின்றனர். நீங்கள் இப்போது சிவபாபாவை தனது குழந்தையாக ஆக்கிக் கொள்ளுங்கள், அவர் உங்களுக்கு 21 பிறவிகள் மிகவும் சுகம் மிக்கவர்களாக இருக்கும் அளவு சேவை செய்வார். நல்லது, குழந்தைக்குப் பதிலாக தந்தையாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் கூட உங்களுக்கு சொர்க்கத்தில் சதா காலத்திற்கான சுகத்தைக் கொடுத்து விடுவார். இவரை பிரியதர்ஷனாக ஆக்கிக் கொண்டால் உங்களை அலங்கரித்து சொர்க்கத்தின் மஹாராணியாக ஆக்கி விடுவார். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் புத்தியிலிருந்து நீக்குங்கள், ஏனென்றால் அவர்கள் அனைவருமே உங்களுக்கு துக்கத்தைக் கொடுக்கின்றனர். நான் உங்களுக்கு சுகமோ சுகம் கொடுப்பேன். பாருங்கள் பாபா உங்களுடன் விளையாடுகிறார். நாம் சகோதரருடன் விளையாடுகிறோம் என புரிந்து கொள்கிறீர்கள். சகோதரராக ஆவதன் மூலம் கூட சுகத்தைக் கொடுக்கிறார். உங்களை உலகின் எஜமானாக ஆக்குகிறார். ஆக அனைத்து சம்மந்தங்களையும் அவருடன் வைத்து, மற்ற அனைத்தையும் மறக்க வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபா மட்டுமே. நான் கல்பம் தோறும் உங்கள் முன் வந்து உங்களை அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவித்து எப்போதும் சுகம் மிக்கவர்களாக ஆக்குகிறேன். ஆக தந்தையுடன் புத்தியின் தொடர்பை வைக்க வேண்டும் மற்றும் அவர் தாமே வந்து பிராமணராகி ஆத்மாக்களின் நிச்சயதார்த்தத்தை நடத்துகிறார். இவர் முதல் தரமான பிராமணர் ஆவார். உங்களுக்கு எவ்வளவு நல்ல பெயர்களை வைக்கிறார். நாடகத்தின்படி உங்களுக்கு பெயர் வைக்க வேண்டி இருந்தது, ஏனென்றால் நீங்கள் ஒரு குடும்பத்தை விட்டு விட்டு ஈஸ்வரனுடைய மடியில் வந்தபோது எவ்வளவு ரமணீகமான (இனிமையான) பெயர் கிடைத்தது. ஓ பதித பாவனா வாருங்கள், வந்து தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்குங்கள் என நினைவும் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் மீது எவ்வளவு அன்பு செலுத்துகின்றனர். கிருஷ்ணர் போல கணவர் கிடைக்க வேண்டும், குழந்தை கிடைக்க வேண்டும். அவர் சொர்க்கத்தின் எஜமான் என புரிந்து கொள்ளவும் செய்கின்றனர், ஆயினும் அவரை துவாபரயுகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இது தவறாகும். இந்த அனைத்து தவறுகளுக்கும் நிவாரணம் செய்து தவறற்றவர்களாக ஆக்குகிறார். சொர்க்கத்தில் இப்படிப்பட்ட தவறுகள் செய்வதே இல்லை. தவறு செய்விப்பது மாயையாகும். அங்கே மாயையே இருப்பதில்லை. இலட்சுமி நாராயணரின் படத்தைக் காட்டி நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம். அவர்கள்தான் சொர்க்கத்தின் மகாராஜா, மகாராணியாக இருந்தனர். அப்படி யார் ஆக்கியது? அஞ்ஞான காலத்தில் யாரிடமாவது நிறைய செல்வம் இருந்தது என்றால் இதனை யார் கொடுத்தது என கேட்கப்பட்டால் பகவான் என சொல்கின்றனர். தந்தை வள்ளலாக இருப்பவர், பாபா நமக்கு எல்லைக்கப்பாற்பட்ட சுயராஜ்யத்தைக் கொடுக்கிறார். கோவிலில் பூஜிக்கத்தக்கவர்களாக ஆக்குகிறார். எல்லைக்கப்பாற்பட்ட சிவாலயத்தில் இராஜ்யம் செய்து விட்டு பிறகு பக்தி மார்க்கத்தில் ஜட சித்திரங்களின் சிவாலயத்தைக் கட்டுகின்றனர். அந்த சமயத்தில் தேவதைகள் வாம மார்க்கத்தில் (விகாரத்தில்) சென்று விடுகின்றனர். தூய்மையற்ற மனிதர்களை ஒருபோதும் தேவதைகள் என சொல்ல முடியாது. நாம் தேவதா குலத்தினர் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்கள், நீங்களே பூஜாரிகள். இப்போது மீண்டும் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அரைக் கல்பம் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள், பிறகு அரைக் கல்பத்திற்கு பூஜாரிகள் ஆகி விடுகிறீர்கள். நான் எப்போதும் பூஜைக்குரியவராக இருக்கிறேன். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்கள், நான் உங்களுக்கு அந்த நினைவிற்கான பலனைத் தருகிறேன். நிரந்தரமாக என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு நிறைய பலன் கிடைக்கும் என உங்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு இந்த பழைய உலகில் இருப்பதற்குப் பிடிக்கிறதா என்ன? நான் அனைத்து சம்மந்தங்களிலும் சுகத்தைக் கொடுக்க வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் உங்களுக்கு துக்கத்தைக் கொடுக்கின்றனர். இப்போது நான் உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தியை கொடுக்க வந்துள்ளேன். சிவபாபா எவ்வளவு இனிமையானவர் மற்றும் எவ்வளவு அன்பானவர், எனவே தான் கள்ளங்கபடமற்ற சிவனே, பையை நிரப்பிக் கொடுங்கள் என நினைவு செய்கின்றனர். நாம் எப்போது உலகின் எஜமான் ஆகும் தகுதியடைகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா தகுதியற்றவர்களை தகுதி மிக்கவர்களாக ஆக்குகிறார். இராஜயோகம் கற்பித்து 21 பிறவிகளுக்கு மகாராணியாக ஆக்குகிறார். உயர்பதவியடைந்து பெயர் விளங்கச் செய்யுங்கள் என அறிவுறுத்துகிறார். குழந்தைகளில் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர் அல்லவா. யார் எவ்வளவு படிக்கின்றனரோ, நல்ல குழந்தைகள் தாய் தந்தைக்கு மிகவும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனர். உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்திருக்கிறார் எனும் போது எவ்வளவு அவருக்கு கீழ்ப்படிந்தவர்களாக ஆக வேண்டும். தந்தையின் பெயரே நன்மை செய்பவர் (கல்யாணகாரி) என்பதாகும். நரகத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். நீங்கள் சொர்க்கத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எந்த அளவு ஸ்ரீமத்படி நடக்கிறீர்களோ அந்த அளவு அனைவரிடமிருந்தும் பற்றுதலை நீக்க வேண்டும். பாபா, எப்படி நீக்குவது? என கேட்கின்றனர். பாபா சொல்கிறார் - என்னை டிரஸ்டியாக ஆக்கி விடுங்கள், பிறகு இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என வழி கேட்டு நடந்து கொள்ளுங்கள். துறவறம் மேற்கொள்வது என்பது சன்னியாசிகள் போல ஆகி விடும். வீடு வாசலை சன்னியாசம் செய்யக் கூடாது. முழு உலகையே சன்னியாசம் செய்விக்கிறார். அவர்கள் வீடு வாசலை விட்டு விடுகின்றனர், மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். எனினும் தூய்மையாக இருந்து கொஞ்சம் உதவி செய்கின்றனர். மற்றபடி குருவாக ஆகி பிறருக்கு கதியும் சத்கதியும் கொடுக்க முடியாது. தூய்மையாக்குகின்றனர், அதுவும் ஆண்களை மட்டும் ஆக்குகின்றனர். பாபாவோ இரு பாலரையும் விகாரத்திலிருந்து விடுவிக்கிறார். பாபா அறிவுரை கொடுக்கிறார், நீங்கள் தூய்மையடைந்து காட்டினீர்கள் என்றால் தூய்மையான உலகின் எஜமானாக ஆவீர்கள். சொர்க்கத்தில் அனைவரும் சுகம் மிக்கவர்களாக இருப்பார்கள். நல்ல விதமாக முயற்சி செய்தால், இவரை (சிவ பாபாவை) தம் குழந்தையாக ஆக்கினால் ஆஸ்தி கொடுப்பார். யார் எவ்வளவு ஆஸ்தி கொடுக்கிறீர்களோ அந்த அளவு நானும் திருப்பித்தருவேன். ஆனால் சொர்க்கத்தில் தருவேன், இங்கே அல்ல. எனக்கு நீங்கள் கொடுப்பதை கூட குழந்தைகளாகிய உங்களுக்கான காரியத்தில்தான் ஈடுபடுத்துகிறேன். நான் உலகின் எஜமானாக ஆவதில்லை, நீங்கள் ஆகிறீர்கள். இந்த வீடுகள் முதலானவை உங்களுக்காகத்தான். இது கண்காட்சியாகும். அதுவும் குழந்தைகளாகிய உங்களின் சேவையாகும், மீண்டும் உங்களை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குகிறேன். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு நீங்கள் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். என்னை வாரிசாக ஆக்கினாலும் சரி, ஆக்காவிட்டாலும் சரி. தன்னுடைய குழந்தைகளுடனே குஷியாக இருங்கள். மற்றபடி தூய்மையாய் இருந்து ஒரு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் கடைசி நிலைக்கேற்ற கதி கிடைக்கும். மற்ற எந்த பொய்யான மந்திரங்களும் பயன்தராது. நான் உங்களுக்கு நன்மை நிறைந்த மந்திரத்தைக் கொடுக்கிறேன் - தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். குழந்தை பிறந்தது என்றால் ஆஸ்தி கிடைக்கவே வேண்டும். நாம் சிவபாபாவுடையவர்களாக இருந்தோம், சொர்க்கத்தில் இராஜ்யம் செய்தோம் பிறகு இழந்தோம் என நீங்கள் அறிவீர்கள். இப்போது என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். என்னுடையவர்களாக ஆகி விடுங்கள், என்னுடையவர்களாக ஆவதில் உங்களுக்கு எவ்வளவு லாபம் உண்டாகிறது. குரு, சன்னியாசி முதலானவர்களுடன் உள்ள தொடர்பை நீக்குங்கள். நான் கர்மேந்திரியங்கள் மூலம் ஆத்மாக்களிடம் பேசுகிறேன். பாபாவும் கூட இவருக்குள் பிரவேசமாகியிருக்கிறார். பிராமணர்களுக்கு உணவு கொடுக்கும்போது கணவரின் ஆத்மா இவருக்குள் வந்துள்ளது என புரிந்து கொள்வது போல. சரீரம் வர முடியாது. பாபாவுக்கு தமது உடல் கிடையாது, ஆகையால் என்னை அசரீரி என சொல்கின்றனர். நீங்களும் அசரீரி ஆகுங்கள். தேகத்தின் அகங்காரத்தை விடுங்கள். முழு கல்பமும் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள், சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள். பிறகு தேக அபிமானியாக ஆகிவிட்டதால் ஆத்மாவின் ஞானம் கூட மறந்து விட்டது. முதலில் மகிழ்ச்சியுடன் பழைய சரீரத்தை விட்டு, புதியதை எடுத்துக் கொண்டிருந்தீர்கள், உங்களுடையது என்ன ஆயிற்று? ஆத்மாவுக்கு அனாதியான நடிப்பு கிடைத்திருக்கிறது. சொர்க்கத்தில் அழக்கூடிய விஷயமே இல்லை. இப்போது நீங்கள் 63 பிறவிகளாக துக்கத்தை அடைந்து அடைந்து முற்றிலும் தமோபிரதானமாக ஆகி விட்டீர்கள். இப்போது மீண்டும் தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். வேறு எங்காவது சென்றால் சன்னியாசி இன்னார் வேத சாஸ்திரங்களை சொல்கிறார் என்பதை பார்க்கலாம். இங்கே நிராகாரமான பரமபிதா பரமாத்மா எந்த சாஸ்திரமும் படிப்பதில்லை. அவர் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தை உரைப்பவர் ஆவார். சாஸ்திரங்களைப் படித்துப் படித்து தூய்மையற்றவர்களாக ஆகியே விட்டீர்கள். ஓ சத்கதியை வழங்கும் வள்ளலே, முக்தேஸ்வரா, பாவ கட்டேஸ்வரா (பாவங்களைத் துண்டிப்பவரே) வாருங்கள் என நீங்கள் கூக்குரலிடுகிறீர்கள். நல்லது, தந்தை வந்தேவிட்டார். நீங்கள் என்னுடைய வழிப்படி நடந்தீர்கள் என்றால் உயர் பதவி அடைவீர்கள் என சொல்கிறார். இது உயர்ந்ததிலும் உயர்ந்த வழியாகும். பாபாதான் ஸ்ரீ ஸ்ரீ ஆவார், அவர் வந்து பிரஷ்டாச்சாரியிலிருந்து (கீழானவரிலிருந்து) சிரேஷ்டாச்சாரியாக (உயர்வானவர்களாக) ஆக்குகிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான நடிப்பு கிடைத்துள்ளது என நீங்கள் அறிவீர்கள். சக்கரம் சுற்றியபடி இருக்கும். ஆத்மாவும் அதிலிருந்து விலகுவதில்லை, அதனுடைய பாகமும் விலகுவதில்லை. இது உருவாகி உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதிலிருந்து யாரும் விலக முடியாது. நானும் கூட தூய்மையற்ற சரீரத்தில் வந்து உங்களுக்கு சேவை செய்கிறேன் என தந்தை சொல்கிறார். நான் உங்களுக்கு சொர்க்கத்தின் சுகங்களைத் தருகிறேன். நீங்கள் பிறகு எவ்வளவு வைர வைடூரியங்களாலான கோவில்களைக் கட்டுகிறீர்கள், அதில் என்னை அமர்த்துகிறீர்கள். இப்போது நான் உங்களை உலகின் எஜமானாக ஆக்குவதற்காக வந்துள்ளேன் என்றாலும் யாரும் என்னை அறிவதே இல்லை. விட்டுச் சென்று விடுகின்றனர். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆக பாபா எப்படி சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார், எவ்வளவு சகஜமான விஷயமாகும். மாயை வரும், உங்களுடைய வேலை மாயையை விரட்டுவது. அதன் மூலம் சிவபாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. ஒரு நிமிடம், அரை மணி, . . . என நினைவு செய்யக் கூடிய பயிற்சியையும் செய்யுங்கள். பிறகு இறுதியில் கடைசி நிலைக்குத் தகுந்த கதி ஏற்படும். புத்தி எங்காவது சிக்கிக் கொண்டிருந்தது என்றால் நன்றாக தண்டனையை அனுபவிப்பீர்கள். காசி கல்வெட்டில் விழுந்து துக்கத்தை அனுபவிப்பது போல, அது ஜீவனின் (சரீரத்தின்) கொலை எனப்படுகிறது. ஆத்மா தனது உடலைக் கொல்கிறது. மற்றபடி ஆத்மாவின் கொலை ஏற்படுவதில்லை. அது அழிவற்றது. இவையனைத்தையும் தாரணை செய்து தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். அனைவரிடமிருந்தும் பற்றுதலை நீக்க வேண்டும். இது பழைய சரீரம் ஆகும், சாட்சியாகி இருக்க வேண்டியுள்ளது. இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இங்கே மகிழ்ச்சியே இல்லை. நில நடுக்கத்தில் அனைவரும் இறந்து போய் விடுவார்கள். இறப்பதற்கு முன்பு தனது நிலையை நன்றாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.



    நீங்கள் அனைவரும் சிவசக்திகளாக இருக்கிறீர்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் சிவபாபாவிடமிருந்து சக்தி எடுப்பதற்கான முயற்சியை செய்கின்றனர். தாய்மார்களுக்கு மதிப்பு அதிகம். நீங்கள் அனைவரும் கன்யாக்கள் ஆவீர்கள். பிரம்மாகுமாரிகளாக கன்னியாக்களும் உள்ளனர், தாய்மார்களும் உள்ளனர். அவர்கள் விகாரமற்றவர்களாக இருக்கின்றனர். அந்த பீஷ்ம பிதாமகன் பாடப்பட்டுள்ளார். சிறு வயதில் பிரம்மச்சாரியாக வாழ்பவர்களும் இருக்கின்றனர். எந்த காரியத்தை பாபா 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செய்து சென்றாரோ அதனை இப்போது செய்து கொண்டிருக்கிறார். இந்த கோவில்கள் இப்போது சிதைந்து போய் விடும், பிறகு பக்தி மார்க்கத்தில் உருவாகும். இந்த அனைத்து விஷயங்களும் தாரணை செய்ய வேண்டியவை ஆகும். இவற்றை தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். இது ஞானத்தின் மனன சிந்தனை எனப்படுகிறது. பகவானின் மஹா வாக்கியம் - நான் உங்களை நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறேன். மனிதர்கள் யாரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இவருடைய ஆத்மாவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனை அடிக்கடி நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஆமை, குளவிப் பூச்சியின் உதாரணங்களும் உங்களுக்கானதாகும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். சிவனின் பூஜையை அவருடைய காரியத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் செய்வது என்பது பலனற்றதேயாகும். நாமும் பூஜை செய்து கொண்டிருந்தோம், ஆனால் இப்போது அறிந்து கொண்டோம். சிவபாபா நம்மை மனிதரிலிருந்து தேவதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சோழிகளைத் தேடி ஏன் மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள், இவையனைத்தும் பஸ்மமாகப் போகின்றன. பேரன், பேத்திகள் யாரும் இருக்கப் போவதில்லை. அனைவரும் இறந்து போகப் போகின்றனர். நீங்கள் நன்மை செய்யக் கூடிய (கல்யாணகாரி) தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. தந்தையை தனது டிரஸ்டியாக்கி அனைவரிடமிருந்தும் பற்றுதலை நீக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தைக்கு கீழ்ப்படிந்தவராக கண்டிப்பாக ஆக வேண்டும்.



    2. தர்மராஜாவின் கடுமையான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக இறுதிக் காலத்தில் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவுக்கு வராத நிலையை இப்போதிலிருந்தே உருவாக்க வேண்டும். புத்தி எங்கோ சிக்கிக் கொண்டிருக்கக்கூடாது.



    வரதானம் :

    நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு புதுமையை அனுபவம் செய்யக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.



    ஞானத்தில் புதுமை என்பதன் அர்த்தம், புத்திசாலி ஆகி புரிந்து நடக்க வேண்டும் அதாவது தனக்குள் என்ன குறைபாடு இருக்கிறதோ அதனை அழித்தபடி செல்ல வேண்டும். யோகத்தில் புதுமை என்பதன் அர்த்தம் அதனுடைய (நினைவின்) சதவீதத்தை அதிகப் படுத்த வேண்டும். இப்படியாக நான்கு பாடங்களிலும் சுய முன்னேற்றத்தில் புதுமைத் தன்மை, விதியில் (நடைமுறை படுத்துவதில்) புதுமை, பயன்படுத்துவதில் புதுமை, சேவையில் புதுமை பிறரை சகஜயோகியாக ஆக்குவதில் மற்றும் சதவீதத்தை அதிகப் படுத்துவதில் புதுமையின் அனுபவம் செய்வது என்றால் தீவிர முயற்சியாளர் ஆவது ஆகும். இதன் மூலமே அருகாமையை நெருங்குவதை அனுபவம் செய்வீர்கள்.



    சுலோகன் :

    தூய்மையின் சக்திதான் (அத்தாரிட்டி) அனைத்திலும் உயர்ந்த கௌரவமான நிலை (பர்சனாலிடி) ஆகும்.


    ***OM SHANTI***