BK Murli 7 April Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 7 April Tamil

    07.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! 21 பிறவிகளுக்கான இராஜ்யம் அடைய வேண்டுமெனில் ஞான செல்வத்தை தானம் செய்யுங்கள், தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்கும் செய்வியுங்கள்.



    கேள்வி:

    நாட்கள் செல்ல செல்ல கிரஹச்சாரம் அமர்வதற்கான முக்கிய காரணம் என்ன?



    பதில்:

    ஸ்ரீமத்படி முழுமையாக நடப்பது கிடையாது, அதனால் தான் கிரஹச்சாரம் அமர்ந்து துரதிர்ஷ்டம் ஆகி விடுகிறது. நிச்சயபுத்தியுடன் இருந்து ஒருவரின் வழிப்படி நடந்து கொண்டே இருந்தால் கிரஹச்சாரம் அமரவே முடியாது. சதா நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தாமதமாக வந்தவர்களும் முன்னால் செல்ல முடியும். விநாடிக்கான விளையாட்டு ஆகும். பாபாவினுடையவர்களாக ஆகிறீர்கள் எனில் உரிமை உடையவர்களாக ஆகிறீர்கள். அதிக சுகமளிக்கக் கூடிய (உலகின்) ஆஸ்தி கிடைத்து விடுகிறது. ஆனால் சதா ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.



    பாட்டு:

    நீ அன்புக் கடலாக இருக்கிறாய் ........



    ஓம்சாந்தி.

    ஓம்சாந்தி என்பதன் பொருள் குழந்தைகளுக்கு அடிக்கடி புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஓம் என்றால் நான் ஆத்மா, இது எனது சரீரம். தந்தை ஓம் என்று கூறுகிறார் எனில் நான் ஆத்மா, பரமாத்மா. அவருக்கு சரீரம் கிடையாது. ஏனெனில் அவர் அனைவருக்கும் தந்தை ஆவார். ஆத்மா தான் பரமாத்மா என்று உங்களைக் கூறிக் கொள்ளமாட்டீர்கள். நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்பது தான் சரி. மற்றபடி ஆத்மா தான் பரமாத்மா என்று கூறுவது முற்றிலும் தவறாகி விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிவீர்கள். இது பழைய உலகம் என்பதை புரிந்திருக்கிறீர்கள். சத்யுகம் தான் புது உலகம் என்று கூறப்படுகிறது. ஆனால் சத்யுகம் எப்போது ஏற்படும்? என்பது பாவம் அவர்களுக்கு தெரியாது. கலியுகம் முடிவடைய இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருப்பதாக நினைக்கின்றனர். நாம் ஸ்ரீமத்படி நடந்து இப்போது புது உலகம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நான் உங்கள் மூலம் புது உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். உங்கள் மூலம் விநாசம் செய்விப்பது கிடையாது. நீங்கள் தான் சிவவக்திகள், பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்கள், அகிம்சையான சக்தி சேனைகளாக இருக்கிறீர்கள். நீங்கள் தான் தந்தையிடமிருந்து ஆஸ்தியடைவதற்கு உரிமையுள்ளவர்களாக இருக்கிறீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் ஸ்ரீமத் கிடைக்கிறது. நீங்கள் காம விகாரத்தை வென்று விட்டீர்கள். அதனால் தான் இங்கு வருபவர்களிடம் நீங்கள் காமத்தை வென்றிருக்கிறீர்கள் எனில் தந்தை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. நேரடி மற்றும் மாற்றாந்தாய் குழந்தைகள் இருக்கின்றனர். நேரடிக் குழந்தைகள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டார்கள். இப்போது நமக்கு ஞானக் கடலான தந்தை கிடைத்திருக்கின்றார். கிருஷ்ணரை ஞானக் கடல் என்று கூறமாட்டோம். சிவபாபாவின் மகிமை மற்றும் தேவதைகளின் மகிமை முற்றிலும் தனிப்பட்டது. தேவதைகளின் மகிமை சம்பூர்ன நிர்விகாரிகள் (முற்றிலும் விகாரமற்றவர்கள்). சிவபாபா மனித சிருஷ்டியின் விதை ரூபமானவர், சத் சித் ஆனந்த சொரூபமானவர், ஞானக் கடல் என்று கூறப்படுகின்றார். முதலில் இந்த சரீரம் ஜடமாக (உணர்வு, அசைவு இல்லாமல்) இருக்கும், பிறகு ஆத்மா பிரவேசம் ஆகின்ற போது உணர்வுள்ளதாக ஆகிறது. இந்த மனித சிருஷ்டி என்ற மரம் எப்படி உருவாகிறது? என்பதை விதை ரூபமான தந்தை மட்டுமே அறிவார். அவர் உங்களுக்கு ஞானம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். உங்களுக்கு சிறிது ஞானம் கொடுத்தாலும் நீங்கள் பழைய உலகிலிருந்து புது உலகிற்கு சென்று விடுவீர்கள் என்று பாபா கூறுகின்றார். அது தான் சிவாலயம் என்று கூறப்படுகிறது. சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்ட சொர்க்கமாகும், அதில் உணர்வு, உயிரோட்டமான தேவதைகள் வாழ்கின்றனர். பக்தி மார்க்கத்தில் அவர்களை கோவிலில் மூர்த்தியாக அமரச் செய்து விட்டனர். நீங்கள் தான் உண்மையிலும் உண்மையான பிராமணர்கள். உங்களை சிவபாபா பிரம்மாவின் மூலம் தன்னுடையவராக ஆக்கியிருக்கின்றார். அந்த பௌதீக பிராமணர்கள் நாம் வாய்வழிவம்சத்தினர்கள் என்று கூறிக் கொள்ளலாம். ஆனாலும் பிராமண் தேவி தேவதாய நமஹ என்று கூறிவிடுகின்றனர். ஏனெனில் நாங்கள் பூஜாரி பிராமணர்கள், நீங்கள் பூஜைக்குரியவர்கள் என்பதை புரிந்து கொள்கின்றனர். விகாரிகள் தூய்மையானவர்களைத் தான் பிராமணன் நமஹ என்று கூறுகின்றனர். நீங்கள் இப்போது பிராமணர்களாக இருக்கிறீர்கள், பிராமணன் தேவதாய நமஹ என்று நீங்களே கூறும் காலம் வரும். ஏனெனில் இப்போது பூஜைக்குரிய நீங்களே பிறகு பூஜாரிகளாக ஆகிறீர்கள். இது மிகவும் ஆழமான, மகிழ்ச்சியான விசயமாகும். யார் ஸ்ரீமத் படி நடப்பவர்களோ அவர்கள் முறைப்படி தாரணை செய்து மற்றும் செய்விக்கவும் முடியும். எவ்வாறு வக்கீல், மருத்துவர் எந்த அளவிற்கு படிக்கிறார்களோ அந்த அளவிற்கு மருந்துக்கள் அல்லது கருத்துகள் புத்தியில் இருக்கும். பெயர் வக்கீல் என்று இருக்கும், ஆனால் சிலர் இலட்சாதிபதியாகவும், சிலருக்கு எந்த இலாபமும் இல்லாமலும் இருக்கும். இங்கும் வரிசைக்கிரமமாக தானம் செய்கிறீர்கள் எனில் அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் செல்வம் கொடுத்தால் செல்வம் குறையாது ....... என்று கூறப்பட்டிருக்கிறது. அங்கு தானம் செய்கின்றனர் எனில் அடுத்த பிறவியில் அல்ப காலத்திற்கு பலன் கிடைக்கும். செல்வந்தர் வீட்டில் பிறப்பார்கள், இங்கு 21 பிறவிகளுக்கு இராஜ்ய அதிகாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் அனைத்து கருத்துகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் காகிதத்தைப் பார்த்து சொற்பொழிவு செய்யக் கூடாது. ஆனால் புத்தியில் வைத்துக் கொண்டு சொற்பொழிவு செய்ய வேண்டும். எவ்வாறு சிவபாபா ஞானக் கடலாக இருக்கிறாரோ, தூய்மை இழந்தவர்களை தூய்மைபடுத்துகிறாரோ அதே போன்று குழந்தைகளாகிய நீங்களும் ஆக வேண்டும்.



    எனது தந்தை ஆசிரியராக இருக்கின்றார், நீங்களும் எனக்கு தந்தையாக, ஆசிரியராக இருக்கிறீர்கள் என்று ஒரு சகோதரி எழுதியிருந்தார். அவர் எல்லைக்குட்பட்டவர், இவர் எல்லையற்றவர். எல்லையற்ற தந்தை எல்லையற்ற விசயங்களை கூறுகின்றார். எல்லைக்குட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட விசயங்களை கூறுகின்றார். அவர் எல்லைக்குட்பட்ட சுகம் கொடுக்கக் கூடியவர். எல்லைக்குட்பட்ட சேவை செய்யக் கூடியவர்கள் சர்வோதயா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர், ஆனால் அது பொய்யாகும். சர்வம் என்றால் முழு உலகின் மீதும் யாரும் கருணை காண்பிப்பது கிடையாது. தந்தை மட்டுமே அனைவரின் மீதும் கருணை காண்பித்து தூய்மை ஆக்குகின்றார். தத்துவங்களையும் தூய்மை ஆக்குகின்றார். உலகம் ஒன்றே ஒன்று தான், அதுவே புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, பாரதம் தான் நரகமாக இருக்கிறது. பௌதர்களின் கண்டம் இருக்கிறது, கிறிஸ்தவ கண்டம் சொர்க்கமாக இருந்தது என்பது கிடையாது. ஒரே ஒரு தந்தை தான் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கும் ஹெவன்லி காட் பாதர் (சொர்க்கத்தை படைக்கும் இறை தந்தை) ஆவார். விடுவிப்பவராகவும் இருக்கிறார், வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர். குழந்தைகளே! நேரம் மிகக் குறைவாக இருக்கிறது, இப்போது தேக சகிதமாக அனைத்திலிருந்தும் புத்தியை நீக்குங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது நாம் நமது தந்தையிடம் செல்கிறோம், பிறகு வந்து இராஜ்யம் செய்வோம். முக்கிய ஹீரோ, ஹீரோயினுக்கான பாகம் உங்களுடையது ஆகும். தாய், தந்தையைப் போன்று குழந்தைகள் அனைவரும் முயற்சியாளர்கள் ஆவர். முயற்சி செய்விக்கக் கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா மிக அன்பானவர் ஆவார். பக்தி மார்க்கத்திலும் அவரை நினைவு செய்கின்றனர், ஆனால் அவரை அறியவில்லை. படைப்பவர் மற்றும் படைப்பிற்கு எல்லையில்லை என்று ரிஷி, முனி போன்றவர்களும் கூறி வந்தனர். அவ்வாறு இருக்கும் போது இன்றைய நாட்களின் குருக்கள் நான் தான் பரமாத்மா என்று எப்படி கூற முடியும்! தில்வாடா கோவிலில் ஆதிதேவனின் சிலை இருக்கிறது, கீழே கருப்பாக காண்பிக்கப்பட்டிருக்கிறது, பிறகு அச்சல்கரில் தங்கத்தினால் செய்து வைத்திருக்கின்றனர். கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர், மேலே சொர்க்கம் இருக்கிறது. இது நமது நினைவுச் சின்னமாகும். தூய்மை இழந்தவர்களை தூய்மையாக ஆக்குகின்றார் எனில் சங்கமம் ஆகிவிடுகிறது அல்லவா! பக்திமார்க்கத்தினரும் இருப்பர். பாபா இந்த சரீரத்தின் மூலம் தனது ஜட கோயிலின் நினைவுச் சின்னத்தையும் பார்க்கின்றார். என்னுடைய நினைவுச் சின்னம் இது என்பதை புரிந்து கொண்டு நான் பார்க்கிறேன். நீங்களும் தங்களது நினைவுச் சின்னத்தைப் பாருங்கள். முன்பு இது நமது நினைவுச் சின்னம் என்பதை நீங்கள் அறியவில்லை. பூஜ்ய தேவதைகளாக இருந்தோம், இப்போது பூஜாரிகளாக ஆகிவிட்டோம் என்பதை அறிவீர்கள். நாம் தான் தேவதைகளாக, நாம் தான் சத்ரியர்களாக ....... நாம் தான் (ஹம் சோ) என்பதன் பொருளை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். புது உலகம் பழையதாக எப்படி ஆகிறது? புதியது உருவானால் தான் பழையது விநாசம் ஆகும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை அவசியம் இங்கு தான் ஏற்பட வேண்டும். பிரஜைகளை இங்கு படைக்கின்றார். சூட்சும வதனத்தில் பிரம்மா தனியாக அமர்ந்திருக்கின்றார். படைப்புகளை படைத்து விட்டு ஃபரிஸ்தா ஆகிவிட்டார்.



    நீங்கள் பிரஜாபிதா பிரம்மா வாய்வழி வம்ச பிராமண குலத்தை சார்ந்தவர்கள். நீங்கள் தான் உண்மையில் சர்வோதய (அனைவருக்கும் கருணை காட்டுபவர்) லீடராக இருக்கிறீர்கள். ஸ்ரீமத் மூலம் நீங்கள் தன் மீதும் கருணை காண்பித்துக் கொள்கிறீர்கள், அனைவர் மீதும் கருணை காண்பிக்கிறீர்கள். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா அமர்ந்து உங்களை ஸ்ரீ ஆக ஆக்கின்றார். ஸ்ரீ ஸ்ரீ என்று உண்மையில் ஒரே ஒருவரைத் தான் கூற முடியும். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் ஆவார். மற்றபடி இது அசத்தியமான, பொய்யான உலகமாகும். இதில் எதுவெல்லாம் கூறுகிறார்களோ அவைகள் பொய்யானதாகும். படைப்பவர் மற்றும் படைப்புகளைப் பற்றியும் பொய் கூறுகின்றனர், பாபா உண்மை கூறுகின்றார். இது சத்திய நாராயணன் கதை என்றும் கூறப்படுகிறது. நீங்கள் ஞானத்தின் மூலம் எப்படி இருந்தவர்கள் எப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்! ஸ்ரீமத் படி எந்த அளவிற்கு நடப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம், அதனால் தான் ஸ்ரீமத் பகவத் கீதை என்று கூறப்படுகிறது. மற்ற சாஸ்திரங்கள் அதன் படைப்புகளாகும். கீதை தாய், தந்தை ஆகும். கீதையை மனப்பாடம் செய்வதால் யாருக்கும் ஆஸ்தி கிடைப்பது கிடையாது. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். பழையவர்கள் தான் புத்திசாலிகள் என்பது கிடையாது. சில புதியவர்கள் பழையவர்களை விட வேகமாக செல்கின்றனர். தாமதமாக வருபவர்களும் உயர்ந்த பதவி அடைவார்கள். விநாடிக்கான விளையாட்டு அல்லவா! பாபாவினுடையவர்களாக ஆகிறீர்கள் எனில் உரிமையுள்ளவர்களாக ஆகிறீர்கள். ஒருவேளை யாராவாது நிலைத்திருக்க முடியவில்லையெனில் பாபா என்ன செய்ய முடியும்? நிச்சயபுத்தியுடன் இருந்து ஸ்ரீமத் படி நடந்தால் போதும். அந்த வருமானத்தில் எப்படி திசை (அதிர்ஷ்டம்) உள்ளதோ அதே போன்று இங்கும் திசை அதிர்ஷ்டம் கிடைக்கிறது. கிரஹச்சாரம் (துரதிர்ஷ்டம்) ஆகி விடுகிறது. காரணம் ஸ்ரீமத் படி நடப்பது கிடையாது. மற்ற விசயங்கள் முற்றிலும் எளியதாகும். பாபா, மம்மாவின் குழந்தைகளாக ஆகிறீர்கள் எனில் சுகமான உலகின் ஆஸ்தி அடைகிறீர்கள். ஒருவரின் வழிப்படி நடப்பதில் தான் நன்மை இருக்கிறது. யாரை நீங்கள் அரைக் கல்பமாக நினைவு செய்தீர்களோ, இப்போது அவர் உங்களுக்கு கிடைத்திருக்கின்றார். எனவே அவரை பற்றிக் கொள்ள வேண்டும். இதில் ஏன் குழப்பமடைகிறீர்கள்? நாடகப்படி மீண்டும் இராஜ்ய பாக்கியம் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என்ற பாபா கூறுகின்றார். எனது வழிப்படி நடக்க வேண்டியிருக்கும். புத்தியினால் என்னை நினைவு செய்யுங்கள், வேறு எந்த கஷ்டமும் உங்களுக்கு கொடுப்பது கிடையாது. சொர்க்க ஆஸ்தியையும் நீங்கள் அடைகிறீர்கள். நேற்று சொர்க்கம் இருந்தது, இன்று நரகமாக இருக்கிறது. இப்போது மீண்டும் சொர்க்கம் உருவாக வேண்டும். நேற்று இங்கு எஜமானர்களாக இருந்தீர்கள், இன்று யாசிப்பவர்களாக ஆகியிருக்கிறீர்கள். இளவரசர் மற்றும் யாசிப்பவர் ஆவதற்கான விளையாட்டு இதுவாகும். எவ்வளவு எளிய விசயமாகும்! ஆத்ம அபிமானியாக ஆவது கிடையாது, இதில் தான் உழைப்பு இருக்கிறது. உங்களுக்கு கோபம் வருகிறது எனில் வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொள்ளுங்கள் (அதாவது தாயத்து கட்டிக் கொள்வது போல) என்று சந்நியாசிகள் கூறுவர். இந்த உதாரணங்கள் அனைத்தும் இந்த நேரத்திற்கானது. குளவியின் உதாரணமும் இங்கு உள்ளதாகும். புழுவை தனக்குச் சமமாக ஆக்குகிறது, ஆச்சரியமாக இருக்கிறது! உண்மையில் இந்த நேரத்தில் அனைவரும் புழுவைப் போன்று இருக்கின்றனர். அதை குளவிகளாகிய நீங்கள் பூ பூ என்று செய்கிறீர்கள். சில பிராமணிகள் அல்லது பிராமணர்கள் பறப்பதற்கு தகுதியானவர்களாக ஆகிவிடுகின்றனர். சிலர் சூத்திரனாகவே இருந்து விடுகின்றனர். பாம்பின் உதாரணமும் இங்குடையது ஆகும். நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய ஆடையை நீக்கி சத்யுகத்தில் புது ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார், கீதை எவ்வளவு சிறியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது! சுலோகங்களை மனப்பாடம் செய்து விடுகின்றனர். அனைவரும் அதற்கு பலியாகி விடுகின்றனர். கீதை படித்து படித்து கலியுகத்தின் இறுதி வந்து விட்டது. சத்கதி யாருக்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு சிறிது ஞானம் கொடுக்கிறேன், நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடுகிறீர்கள். எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும்! தாரணை செய்ய வேண்டும். ஞானச் சிந்தனை செய்ய வேண்டும். பகலில் தொழில் செய்யுங்கள், அதிக வருமானம் ஏற்படும். அதிகாலையில் ஆத்மா புத்துணர்வுடன் இருக்கும். அடிக்கடி பயிற்சி செய்வதனால் பழக்கமாகி விடும். இப்போது யார் செய்வார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள், நிச்சய புத்தியுடையவர்களுக்கு வெற்றி, சந்தேக புத்தியுடையவர்களுக்கு தோல்வி. எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கின்றார், இதில் ஏன் சந்தேகம் வர வேண்டும்? சிவபாபா உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார், அவரை ஏன் மறக்க வேண்டும்? இந்த ஞான இரத்தினங்களின் மீது மிகுந்த அன்பு இருக்க வேண்டும். மகாதானியான தந்தை உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இந்த ஞானத்தின் ஒவ்வொரு இரத்தினமும் இலட்சம் ரூபாய்க்கு சமமாகும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) ஸ்ரீமத் படி நடந்து தன் மீது தானே கருணை காண்பிக்க வேண்டும். சர்வோதயம் ஆகி தூய்மையற்ற உலகை தூய்மை ஆக்க வேண்டும்.



    2) அமிர்தவேளையில் ஆன்மீக தொழில் செய்து வருமானம் சேமிக்க வேண்டும். ஞானச் சிந்தனை செய்ய வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி அவசியம் செய்ய வேண்டும்.



    வரதானம்:

    தந்தையின் அன்பான பாலனையின் (வளர்ப்பின்) மூலம் சகஜயோகிக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளக் கூடிய நினைவு மற்றும் சக்திசாலி சொரூபம் ஆகுக.



    முழு உலகிலுள்ள ஆத்மாக்கள் பரமாத்மாவை தந்தை என்று கூறுகின்றனர். ஆனால் (பாலனை) தந்தையின் வளர்ப்பு மற்றும் படிப்பிற்கு பாத்திரமானவர்களாக (தகுதியானவர்களாக) ஆவது கிடையாது. முழு கல்பத்திலும் மிக சில ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது தான் இந்த பாக்கியத்திற்கு தகுதியானவர்களாக ஆகிறீர்கள். ஆக இந்த வளர்ப்பிற்கான நடைமுறை சொரூபம் - சகஜயோகி வாழ்க்கை ஆகும். குழந்தைகள் எந்த விசயத்திலும் கஷ்டப்படுவதை தந்தையினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குழந்தைகள் சுயம் சிந்தித்து சிந்தித்து கஷ்டமாக்கிக் கொள்கின்றனர். ஆனால் நினைவு சொரூபத்திற்கான சம்ஸ்காரத்தை வெளிப்படுத்தினால் சக்தி வந்து விடும்.



    சுலோகன்:

    சதா கவலையற்ற நிலையின் அனுபவம் செய்ய வேண்டுமெனில் ஆத்ம சிந்தனை மற்றும் பரமாத்ம சிந்தனை செய்யுங்கள்.





    ***OM SHANTI***