BK Murli 16 May 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 16 May 2017 Tamil

    16.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! தந்தை தான் சத்குருவின் ரூபத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்கிறார்: குழந்தைகளே நான் உங்களை என் கூடவே திரும்பி அழைத்துச் செல்வேன். இந்த உத்திரவாதம் எந்த ஒரு தேகதாரியும் கொடுக்க முடியாது.



    கேள்வி:

    குழந்தைகளாகிய நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த கதை எப்பொழுது முடியும்?



    பதில்:

    நீங்கள் ஃபரிஷ்தா ஆகி விடும் பொழுது. பதீதர்களுக்கு (தூய்மையற்றவர்களுக்கு) கதை கூறப்படுகிறது. பாவனம் ஆகி விட்டீர்கள் என்றால், கதையின் அவசியம் இல்லை. எனவே சூட்சுமவதனத்தில் பார்வதிக்கு சங்கரன் கதை கூறினார் என்று கூறுவதே தவறாகும்.



    கேள்வி:

    சிவபாபாவின் மகிமையில் எந்த வார்த்தைகள் சரி, எந்த வார்த்தைகள் தவறு?



    பதில்:

    சிவபாபாவை அபோக்தா (எதையும் அனுபவிக்காதவர்) அஸோச்தா (எதையும் யோசிக்காதவர்) செய்பவரும் செய்விப்பவருமாக இருப்பவர் என்று கூறுவது சரி. மற்றபடி அகர்த்தா (எதையும் செய்யாதவர்) என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அவர் பதீதர்களை பாவனமாக ஆக்குகிறார்.



    பாடல்:

    ஆகாய சிம்மாசனத்தை விட்டாவது.. .. ..



    ஓம் சாந்தி.

    இது குழந்தைகளின் அழைப்பு ஆகும். பாபா இப்பொழுது வந்து விடுங்கள். ஏனெனில் நாங்கள் மீண்டும் இராவண இராஜ்யத்தில் துக்கமுற்றிருக்கிறோம். மீண்டும் மாயையின் நிழல் படிந்து விட்டுள்ளது. அதாவது 5 விகாரங்கள் என்ற இராவணன் நம்மை மிகவுமே துக்கமானவர்களாக ஆக்கி விட்டான். பதிலுக்கு பாபா கூறுகிறார்: ஆம் குழந்தைகளே, இதுவோ என்னுடைய நியமமாகும். இதை அவசியம் வந்து தானே கூறுவார் அல்லவா? ஆம் குழந்தைகளே, எப்பொழுதெல்லாம் பாரதவாசிகள் முற்றிலுமே ப்ரஷ்டாச்சாரி (இழிந்தவர்களாக) துக்கமுடையவர்களாக ஆகிறார்களோ - சத்கதிக்காக எவ்வளவு குருமார்களிடம் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே சத்கதி வழங்குவது இல்லை. அனைத்து குருடர்களுக்கும் கைத்தடியோ ஒரு தந்தை தான் ஆவார். முதன் முதலில் தந்தை ஜென்மம் கொடுக்கிறார். அதாவது தத்து எடுக்கிறார். குரு சத்கதி செய்கிறார். இப்பொழுது யாருமே சத்கதி செய்வதும் இல்லை. எந்த பாபாவும் இல்லை. பரமபிதா பரமாத்மா நம்முடைய பாபாவும் ஆவார், குருவும் ஆவார் என்று நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள். அவர் ஒருவரைத் தான் சத்குரு, சத்-பாபா என்று கூற முடியும். அவர் சத்தியமான பாபா. அவருக்கு சுப்ரீம் என்று கூறப்படுகிறது. சத்குருவும் ஆவார். கூடவே அழைத்துச் செல்கிறார். உத்தரவாதம் உள்ளது. மற்ற எந்த ஒரு குருவும் ஒரு பொழுதும் நான் ஆத்மாக்களாகிய உங்களை திரும்பி அழைத்து செல்வேன் என்று உத்திரவாதம் கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியவே தெரியாது. இவை எல்லாமே புதிய விஷயங்கள் ஆகும். இவரை நீங்கள் பார்க்கையிலும் புத்தியில் சிவனை நினைவு செய்ய வேண்டும். அவரே தந்தை, ஆசிரியர், குரு ஆவார். மனிதர்கள் ஏதாவது குருவிடம் செல்கிறார்கள் அல்லது ஆசிரியரிடம் செல்கிறார்கள் என்றால் அவர்களது சரீரத்தைத் தான் பார்க்கிறார்கள். ஆத்மா தான் பல்வேறு உடல்களை தாரணை செய்து பல்வேறு பெயர், ரூபம், தேசம், காலத்தில் செல்கிறது. நல்லது. பாபா ஒருவரே ஆவார். மேலும் ஒரு முறை வருகிறார். அவரோ புனர்ஜென்மம் எடுப்பதில்லை. சம்ஸ்காரமோ ஆத்மாவில் உள்ளது. அது சரீரத்தைத் தரிக்கும் பொழுது தான் வர்ணனை ஆகும் அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மகிமை பாடுகிறீர்கள் - அவர் நிராகாரமானவர் ஆவார். ஒரு பொழுதும் சாகார சரீரத்தை எடுப்பதில்லை. சிவனுக்கு தனக்கென்று சரீரமோ இருப்பதில்லை. ஆனால் ஞானக் கடல், பதீதபாவனர் ஆவார். சத்குரு ஆவார். பாபாவும் ஆவார். இராஜயோகம் கூட கற்பிக்கிறார். யார் பிரம்மாண்டத்தின் முழு உலகத்தின் அதிபதியோ அவர் தான் சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குவார் அல்லவா? சரீரதாரிகளோ அவ்வாறு ஆக்க முடியாது. குழந்தைகளைத் தவிர தந்தையை யாருக்குமே தெரியாது. பரமாத்மா எங்களுக்கு கற்பிக்கிறார் என்று நீங்கள் கூறுவீர்கள். பின் நிராகார பரமபிதா பரமாத்மா சரீரத்தில் வந்துள்ளார் என்பது எந்த சாஸ்திரத்திலும் இல்லையே என்று கூறுவார்கள். அட, சிவஜெயந்தி பாடப்படுகிறது. பாடல் கூட, ரூபம் மாறி வாருங்கள் என்று கூறினார்கள். அது அவர் எந்த உடலில் எந்த ரூபத்தில் வந்தார்? உங்களுடையதோ இது கர்மபந்தனத்தின் உடல் ஆகும். நல்ல செயலினால் நல்ல பதவி, கெட்ட செயல்களினால் கெட்ட பதவி கிடைக்கிறது. இவருக்காகவோ இப்படி கூற மாட்டார்கள். மனிதர்களோ அவசியம் மறுபிறவி எடுக்கிறார்கள். தந்தை எடுப்பதில்லை. அவர் இந்த உடலில் பிரவேசம் செய்துள்ளார். சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்றும் கூறுகிறார்கள். சிவனோ நிராகாரமானவர் ஆகிறார். பிரம்மா மூலமாக எப்படி செய்கிறார். மேலிருந்து (பிரேரணை) தூண்டுகிறாரா என்ன? பதீதமான உலகத்தில் வருகிறார். எனவே இராஜயோகத்தை கற்பிப்பதற்காக எந்த உடலில் வர வேண்டும்? பாபா வந்து விட்டுள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் அவர் கூறுவதைக் கேட்கிறோம். அவர் இந்த பிரம்மா வாய் மூலமாக கூறுகிறார். மற்ற அனைத்து தேகதாரிகளும் குருவின் பெயரைக் கூறுவார்கள். நிராகார சிவன் நமது பாபா ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதலோ ஜென்மம் கொடுக்கக் கூடிய பாபா வேண்டும் அல்லவா? சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலமாக தத்து எடுக்கிறார். பிரஜாபிதாவிற்கு விகாரத்தின் மூலமாகவோ இத்தனை குழந்தைகள் ஆக முடியாது. பிரஜாபிதா பிரம்மாவிற்கோ ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். பிராமண குலம் மிகவும் பெரியதாகும். யார் பிராமணர்களோ அவர்கள் மீண்டும் தேவதை ஆகி விடுவார்கள். தேவதைகள் ஆகி விடும் பொழுது தத்து எடுத்தல் இருக்காது. தத்து எடுப்பது இப்பொழுது தான். எத்தனை பிராமணர்கள் இருக்கிறார்கள்.



    நாம் சிவபாபாவிடம் வந்துள்ளோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவரே நாலேஜ்ஃபுல் - ஞானம் நிறைந்தவர் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் இந்த ஞானத்தைக் கூறுகிறேன் என்று கூறுகிறார். எனக்கென்று உடல் கிடையாது. சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவபாபா எப்படி வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சிவராத்திரி என்றும் கூறுகிறார்கள். இராத்திரியில் கிருஷ்ணரின் பிறப்பதைக் கூட காண்பிக்கிறார்கள். சிவஜெயந்திக்கு பிறகு உடனே ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்மம் ஏற்படுகிறது. சிவனுடைய ஜென்மமோ சங்கமத்தில் நிகழ்கிறது. பிரம்மாவின் இரவு முடிந்து பிறகு பகல் ஆரம்பமாகிறது. அதே சங்கமத்தில் தந்தை வருகிறார். இது எல்லையில்லாத இரவு ஆகும். அது எல்லைக்குட்பட்டது ஆகும். அரைகல்பம் பகல், அரைகல்பம் இரவு. பக்தி மார்க்கத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பகவான் கிடைப்பதே இல்லை என்றால் இருளாக இருக்கிறது அல்லவா? முற்றிலுமே புத்தியற்றவர்களாக இருக்கிறார்கள். பரமபிதா பரமாத்மா மேலே இருக்கிறார் என்று பாடுகிறார்கள். பிறகு தீர்த்த யாத்திரையில் கூட பகவான் கிடைப்பார் என்று கூறுகிறார்கள். தான புண்ணியத்தினாலும் கிடைப்பார். எவ்வளவு காலம் நீங்கள் கஷ்டப்பட்டீர்கள். அநேக வழிகள் உள்ளன. எனவே பக்தி மார்க்கம் என்பது பிரம்மாவின் இரவு என்று கூறப்படுகிறது. அடி வாங்கி வாங்கி துர்க்கதியை அடைந்து பாவ ஆத்மா ஆகி விடுகிறார்கள். விகாரத்தினால் பிறப்பவர்களைத் தான் பாவ ஆத்மா என்று கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் விகாரத்தினால் பிறந்தார் என்று நீங்கள் ஒன்றும் கூற மாட்டீர்கள் இல்லை. அவரோ யோக பலத்தினால் பிறக்கிறார். இந்த விஷயங்களை பாரதவாசி இல்லற தர்மத்தினாராக நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். சந்நியாசிகளுக்குத் தெரியாது. அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை.



    செல்லமான குழந்தைகளே ! சத்யுகத்தில் நீங்கள் தூய்மையான இல்லற மார்க்கத்தில் இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். பிறகு புனர்ஜென்மம் எடுத்து பதீதமாகவும் ஆகிறீர்கள். பாரதம் பவித்திரமாக இருந்தது. தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அங்கு அமைதியும் இருந்தது. சாந்திதாமம், நிர்வாண தாமம் கூட இருக்கின்றன. ஆனால் சத்யுகத்தில் கூட உங்களுக்கு ஆஸ்தி கிடைத்திருந்தது. எனவே அங்கு ஒரு பொழுதும் அமைதியற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்து ஒரு பொழுதும் அசாந்தப்படுத்த மாட்டார்கள். யாருமே யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். இங்கோ குழந்தைகள் கூட தாய் தந்தையருக்கு துக்கம் கொடுத்து அசாந்தப் படுத்தி விடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் அமைதிக் கடலிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறீர்கள். அங்கு எந்த ஒரு சண்டை சச்சரவும் இருக்காது. இங்கு கூட உங்களுடைய அந்த நிலை இருக்க வேண்டும். தங்களுக்குள் உப்பு தண்ணீர் போல கசந்து இருக்கக் கூடாது. முதன் முதலோ எல்லையில்லாத தந்தை வந்து விட்டுள்ளார். நம்மை துக்கமான உலகத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற இந்த நிச்சயம் வேண்டும். சத்யுகத்திலோ தந்தை வருவதில்லை. இங்கு வந்து இந்த ஜன்னல்கள் (கண்கள்) மூலமாக உங்களைப் பார்க்கிறார். இவருடைய ஆத்மா கூட பார்க்கிறார். சிவபாபா கூட பார்க்கிறார். ஒரு உடலில் இரண்டு ஆத்மாக்கள் எப்படி இருக்க முடியும்? மனிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அட, நீங்கள் பிராமணர்களுக்கு உணவூட்டுகிறீர்கள். கணவனின் ஆத்மா அல்லது தந்தையின் ஆத்மாவை அழைக்கிறீர்கள். அவர் வந்து பேசுகிறார். அவரிடம் கேட்கிறார்கள். ஆக, இரண்டு ஆத்மாக்கள் ஆகிறார்கள் அல்லவா? பாபா கூறுகிறார் - அந்த ஆத்மாக்கள் வந்து அமருவது இல்லை. இவ்வாறு ஆக முடியாது. தந்தைக்கோ தனக்கென்று உடல் கிடையாது. அவர் வர முடியும் அல்லவா? 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் நான் சாதாரண வயோதிக உடலில் பகீரதன் அதாவது பாக்கியசாலிரதத்தில் வருகிறேன் என்று கூறி இருந்தேன். அவசியம் மனித உடலில் வருவாரேயன்றி எருதில் வரமாட்டார். சூட்சும வதனத்தில் சங்கரனுக்கு முன்னால் எருது எங்கிருந்து வந்தது? ஒரு வேளை சங்கரனுக்கு அல்லது சங்கரன் பார்வதிக்கு பூஜை செய்கிறார்கள் என்றால், நான் சாட்சாத்காரம் (தரிசனம்) செய்வித்து விடுகிறேன். மற்றபடி சங்கரன் பார்வதிக்கு கதை கூறினார் என்று காண்பித்துள்ளார்கள். அது பொய் ஆகும். சங்கரன் ஏன் கதை கூறுவார்? சூட்சுமவதனத்திலோ அவசியமே இல்லை. நீங்கள் ஃபரிஷ்தா ஆகி விடும் பொழுது கதை முடிந்து போய் விடும். பதீதர்களை பாவனமாக ஆக்குவதற்காக கதை கூறப்படுகிறது. பாபா அமரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அமர கதை கூறுகிறார். தகுதியுடையவர்களாக ஆக்குகிறார். அமரலோகம் என்று சத்யுகத்திற்கு கூறப்படுகிறது. இது மரண உலகம். சிவபாபா ஸ்நானம் செய்கிறாரா என்று இன்று பாபா கேட்டார். பாப்தாதா செய்கிறார் என்று கூறினார்கள். நான் கூறினேன் - ஸ்நானமோ தாதா செய்கிறார் அல்லவா? சிவன் ஏன் செய்வார்? அவர் ஸ்நானம் செய்யும் வகையில் கழிவறைக்குச் செல்ல வேண்டி உள்ளதா என்ன? சிவனோ அபோக்தா எதையும் அனுபவிக்காதவர் ஆவார் அல்லவா? இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் ! அவர் ஸ்நானம் செய்யும் வகையில் அபவித்திரமாக (தூய்மையற்றவராக) ஆகிறாரா என்ன? அவரோ வருவதே பதீதர்களை பாவனமாக ஆக்க! செய்பவரும் செய்விப்பவரும் (கரன் கராவன்ஹார்), (அபோக்தா) எதையுமே அனுபவிக்காதவரும், (அஸோச்தா) எதையும் யோசிக்காதவரும் ஆவார். அகர்த்தா - எதையும் செய்யாதவர் என்று கூறுவது தவறாகி விடுகிறது. பதீதர்களை பாவனமாக ஆக்குகிறார் அல்லவா? செய்பவரும் செய்விப்பவரும் ஆவார் (இருமல் வந்தது) இவருடைய ஆத்மாவின் இந்த சரீரம் என்ற கருவி குறையுள்ளதாக ஆகி விட்டது என்றால், சிவபாபா என்ன செய்வார்? சிவபாபாவினுடைய கருவி குறையுள்ளதாக ஆகி விட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள். இல்லை. இந்த சரீரம் அவருடையது அல்ல. கடனாக எடுக்கப்பட்டது ஆகும். கடனாக பெறப்பட்ட பொருள் உடைந்து போகிறது என்றால், அந்த பொருளுக்கு சொந்தமானவருடையது தான் உடைந்தது அல்லவா? சிவபாபா இந்த சரீரத்தின் சொந்தக்காரர் அல்ல. சொந்தக்காரரோ இவர் (பிரம்மா) ஆவார். அவர் இதை வாடகைக்கு எடுத்துள்ளார். இது பாக்கியசாலிரதம் ஆகும். எருது ஒன்றே ஆகும். பிறகு (கவுமுக்) பசுவாய் என்று கூறுகிறார்கள். உண்மையில் ஒரு சில பெண் குழந்தைகள் அவ்வளவு புத்திசாலியாக இல்லை என்று பாபா கூறுகிறார். யாரையாவது உயர்த்த வேண்டும் என்றால் நான் குழந்தைகளுக்குள் சென்று உயர்த்துகிறேன். பதீத உலகத்தில் பதீத சரீரத்திலோ வரவே வேண்டி உள்ளது. எனவே யாருக்காவது நன்மை செய்வதற்காகக் கூட குழந்தைகளுக்குள் பிரவேசம் செய்கிறேன். குழந்தைகள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை விட அவர்களிடமிருந்து கேட்பவர்கள் மிகவும் கூர்மையானவர்களாக ஆகி விடுகிறார்கள். இது தந்தையின் உதவி கிடைக்கிறது. ஒன்றோ நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவது, திருஷ்டி கிடைக்கிறது. என்னால் பிரவேசம் செய்ய முடியும் என்று பாபா கூறுகிறார். அப்படியின்றி நான் (சர்வவியாபி) எங்கும் நிறைந்தவன் என்பதல்ல. என்னை (பஹுரூபி) பல ரூபங்கள் உடையவன் என்று ஏன் கூறுகிறார்கள்? யார் யாரை பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த தரிசனம் செய்விக்கிறேன். தரிசனத்தில் அப்படியே முன்னால் வந்து கொண்டிருப்பது போல பார்க்கிறார்கள். விஷ்ணுவினுடைய தரிசனம் ஆகிறது. விஷ்ணு உயிரூட்ட முடையவராக ஆகி விடுகிறார். தலை மீது கை வைக்கிறார். எனக்கு சதுர்புஜவின் தரிசனம் ஆகியது என்று கூறுகிறார்கள். ஆனால் அதனால் நன்மை என்ன? எதுவும் கிடையாது. உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது அவ்வளவு தான் - எனக்கு பகவானின் தரிசனம் ஆகியது. பக்தியில் தரிசனம் நிறைய ஆகிறது. ஆனால் இவற்றால் சத்கதியை அடைவதில்லை. சத்கதி தாதா பதீத பாவனர் ஒருவர் தான் என்று தானே பாடுகிறார்கள். விஷ்ணுவாக இருக்க முடியாது. அவர் தந்தையாக இருப்பாரா என்ன? தந்தை ஒருவர் பின் அவரது குழந்தையும் ஒருவர் - பிரஜாபிதா பிரம்மா ஆவார். பிரஜாபிதா விஷ்ணு அல்லது சங்கரன் என்று ஒரு பொழுதும் கூற மாட்டார்கள். பிரஜாபிதா ஒருவர் ஆவார். பிறகு அவர் மூலமாக பிராமணர்களை தத்து எடுக்கப்படுகிறது நிகழ்கிறது. நாம் முதலில் பிராமணர்கள் ஆகிறோம். பிறகு தேவதை ஆகிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பிராமணர்களின் மாலை மிகச்சரியாக அமைய முடியாது. ஏனெனில் கலைந்து விடுதல் ஆகிக் கொண்டே இருக்கும். ஒருவர் விழுகிறார். ஒருவர் இறக்கிறார் என்று ஆகிக் கொண்டே இருக்கும். பிறகு என்ன செய்வது? அவர்களை வெளியேற்றி விடலாமா? ருத்ரமாலை கடைசியில் தான் மிகச் சரியாக அமையும். இந்த இனிய இனிய விஷயங்களை தந்தை தான் கூறுகிறார். வேறு யாருக்கும் தெரியவே தெரியாது. எத்தனை பேர் ராம்ஜீ.. .. ..இந்த உலகம் அமைக்கப்படவே இல்லை.. .. என்கிறார்கள். இப்பொழுது இராமசந்திரரோ இங்கிருந்து பிராப்தி பெற்று செல்கிறார். திரேதாவில் போய் ராஜா ஆகிறார். அவருக்கு பிறகு உலகம் அமையவே இல்லை என்று வசிஷ்டர் ஞானம் கொடுக்கும் அளவிற்கு அஞ்ஞானம் எங்கிருந்து வந்தது? இது சிருஷ்டியின் சக்கரம் ஆகும். எல்லா விஷயங்களிலும் குழம்பி உள்ளார்கள். யாருக்குமே தெரியாது. புரிந்து கொள்ளவும் முடியாமல் இருக்கிறார்கள். சிவபாபாவையே இல்லாமல் செய்து விட்டார்கள். சிவஜெயந்தி கொண்டாடவும் செய்கிறார்கள். ஆனால் புரியாமல் இருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தான் கருமையாக ஆகிறார். இவரை கருமையிலிருந்து வெண்மையாக (தூய்மையாக) ஆக்க வேண்டி இருக்கும் பொழுது தான் பாபாவும் வருகிறார். சிவஜெயந்திக்குப் பிறகு உடனே ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்மம் ஆகிறது. சிவபாபா வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். யாருக்கு? பிராமணர்களுக்கு. பிரஜாபிதா பிரம்மாவின் முகவம்சாவளியினருக்கு. அவர்களே பிறகு இராஜா இராணி ஆகிறார்கள். சிவபாபா சென்று விடுவார். பிறகு இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் ஆகும். எனவே தந்தை கிருஷ்ணரை அவ்வாறு ஆக்கி இருக்கிறார். அவர்கள் பிறகு தந்தைக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டார்கள். கிருஷ்ணரை துவாபரத்திற்கு எடுத்து சென்று விட்டுள்ளார்கள். இப்பொழுது சிவபாபா இராஜயோகம் கற்பிக்கிறார். நாம் சொர்க்கத்தின் இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இன்னுமே நிறைய பேர் இளவரசர் இளவரசி ஆகிறார்கள். சங்கமம் மற்றும் சத்யுகம் பற்றி யாருக்கும் தெரியவே தெரியாது. நான் கல்பத்தின் சங்கமத்தில் தான் வருகிறேன். அவர்கள் பிறகு யுகே யுகே என்று கூறி விட்டுள்ளார்கள். அது கூட 4 யுகங்கள் தான் இருக்கும். துவாபரத்திற்குப் பிறகு கலியுகம் ஆகிறது. பிறகு அவர் துவாபர யுகத்தில் வந்து என்ன செய்வார்? இறங்கும் கலையில் எல்லோரும் வந்தே ஆக வேண்டும். ஏறும் கலை ஆகும் பொழுது தான் என்னுடைய பாகம் உள்ளது. இவரோ கீழே இறங்கவே வேண்டி உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் 84 பிறவிகள் முடிக்க வேண்டி உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பிராமண வர்ணம் ஆகும். பிராமணர்கள் பிறகு தேவதை, க்ஷத்திரியர் .. இந்த வர்ணங்கள் கூட பாரதத்தில் பாடப்படுகிறது. விராட ரூபத்தின் படம் அமைக்கிறார்கள். அதில் பிராமணர்கள் மற்றும் சிவனை இல்லாமல் செய்து விட்டுள்ளார்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. சிவபாபா வந்து பிரம்மா மூலமாக தத்து எடுக்கிறார். சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்குகிறார். மற்றபடி சூட்சுமவதனவாசி பிரம்மா. அவர் எப்படி பிரஜாபிதா ஆக முடியும். உண்மையில் அவர் தந்தையும் ஆவார். ஆசிரியரும் ஆவார். சத்குருவும் ஆவார் என்ற நிச்சயம் முதலில் வேண்டும். சத்கதி அளிக்கும் வள்ளல் (சத்கதி தாதா) ஒருவரே என்று கூறவும் செய்கிறார்கள். ஆனால் அவருடைய பெயர், ரூபம், தேசம், காலம் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. அமைதிக்கடலான தந்தையிடமிருந்து அமைதி மற்றும் சுகத்தின் ஆஸ்தி பெற்று அமைதியான உள்ளத்துடன் இருக்க வேண்டும். ஒரு பொழுதும் எவரொருவருக்கும் துக்கம் கொடுத்து அசாந்தப்படுத்த கூடாது. உப்பு தண்ணீர் போல கசப்பானவராக ஆகக் கூடாது.



    2. தந்தைக்குச் சமானமாக குருடர்களின் கைத்தடி ஆக வேண்டும். தந்தையின் உதவியைப் பெறுவதற்காக நிச்சயபுத்தி உடையவராக ஆகி சேவை செய்ய வேண்டும்.



    வரதானம்:

    ஒவ்வொரு பொக்கிஷத்தையும் சுயத்திற்காகவும் அனைவருக்காகவும் காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய அனுபவி மூர்த்தி ஆவீர்களாக.

    உள்ளடக்கும் சக்தியை தாரணை செய்து அனைத்து பொக்கிஷங்களில் நிறைந்தவராக ஆகி அவற்றை சுயத்தின் காரியத்தில் அல்லது மற்றவர்களுக்கு செய்யும் சேவையின் காரியத்தில் பயன்படுத்துங்கள். பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதால் அனுபவத்தின் வடிவம் ஆகி விடுவீர்கள். கேட்பது, உள்ளடக்குவது மேலும் தக்க நேரத்தில் காரியத்தில் ஈடுபடுத்துவது - இதே விதி மூலமாக அனுபவத்தின் அத்தாரிட்டி (அதிகாரம் உடையவராக) நீங்கள் ஆக முடியும். எப்படி கேட்பது நன்றாக இருக்கிறது, பாயிண்ட்ஸ் மிகவும் நன்றாக சக்திசாலியாக இருக்கிறது, அதே போல அவற்றைப் பயன்படுத்தி சக்திசாலி வெற்றி அடைபவராக ஆகுங்கள். அப்பொழுது (அனுபவி மூர்த்தி) அனுபவத்தின் வடிவம் என்று அழைக்கப் படுவீர்கள்.



    சுலோகன்:

    யார் நிந்தனை செய்பவர்களுக்கும் குணங்களின் மாலையை அணிவித்துக் கொண்டே செல்கிறார்களோ அவர்களே குணவான் என்று கூறப்படுவார்கள்.


    ***OM SHANTI***