BK Murli 21 May 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 21 May 2017 Tamil

    21.05.2017    காலை முரளி   ஓம் சாந்தி   அவய்க்தபாப்தாதா,ரிவைஸ்           01.04.1982     மதுபன்

    பாக்கியத்தின் ஆதாரம் தியாகம்



    இன்று பாக்கியத்தை உருவாக்கும் பாப்தாதா தன்னுடைய அனைத்து குழந்தைகளின் தியாகம் மற்றும் பாக்கியம் இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன தியாகம் செய்தோம் மற்றும் என்ன பாக்கியம் அடைந்தோம். ஒரு மடங்கு தியாகத்திற்கு பலனாக பல மடங்கு பாக்கியம் கிடைக்கிறது என்பதையோ தெரிந்தே இருக்கிறீர்கள். தியாகத்தின் நுணுக்கமான விளக்கத்தைத் தெரிந்த போதிலும் எந்தக் குழந்தைகள் கொஞ்சம் தியாகம் செய்தாலும் பாக்கியத்தின் ரேகை மிகத் தெளிவானதாக மற்றும் பெரியதாக ஆகிவிடுகிறது. தியாகத்திற்கும் விதவிதமான நிலைகள் இருக்கின்றன. பொதுவாக பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரி ஆகியிருக்கிறீர்கள் என்றால், இதுவும் தியாகத்தின் பாக்கியமாக பிராமண வாழ்க்கை கிடைத்திருக்கிறது. இந்த வகையில் எப்படி அனைவரும் தியாகம் செய்பவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். ஆனால் தியாகத்திலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. எனவே பாக்கியத்தை அடைவதிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. அனைவருமே தன்னை பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்றோ கூறுகிறீர்கள். ஆனால் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகளிலிருந்து ஒருவர் மாலையின் நம்பர் ஒன் மணி ஆகிறார், வேறு ஒருவர் கடைசி மணி ஆகிறார். ஆனால் இருவருமே பிரம்மா குமார்-குமாரி தான். அனைவரும் சூத்ர வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறீர்கள், இருந்தும் நம்பர் ஒன் மற்றும் கடைசியில் இருக்கும் வித்தியாசம் ஏன்? குடும்ப வாழ்க்கையில் டிரஸ்டி ஆகி நடந்து கொண்டாலும், குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சேவாதாரி ஆகி எப்பொழுதும் சேவை நிலையத்தில் இருக்கிறீர்கள் என்றாலும், இரண்டு விதமான பிராமண ஆத்மாக்களும் டிரஸ்டி ஆக இருந்தாலும், சேவாதாரியாக இருந்தாலும் இருவர்களுமே பிரம்மா குமார் - குமாரி என்று தான் கூறுகிறீர்கள்.. குடும்பப் பெயர் இருபாலருக்குமே ஒன்று தான். ஆனால் இருவர்களுக்குமே தியாகத்தின் ஆதாரத்தில் பாக்கியம் உருவாகி இருக்கிறது. சேவாதாரி ஆகி சேவை நிலையத்தில் இருப்பது என்பது தான் உயர்ந்த தியாகம் மற்றும் பாக்கியம் என்று கூற முடியாது. டிரஸ்டி ஆத்மாக்களும் தியாக உள் உணர்வு மூலமாக மாலையில் நல்ல வரிசை எண்ணை பெற முடியும். ஆனால் உண்மையான மற்றும் சுத்தமான உள்ளம் உள்ள டிரஸ்டியாக இருக்க வேண்டும். பாக்கியத்தை அடைவதற்கான அதிகாரம் இருவர்களுக்குமே இருக்கிறது. ஆனால் சிரேஷ்ட பாக்கிய ரேகையைப் போடுவதற்கான ஆதாரம் சிரேஷ்ட எண்ணம் மற்றும் சிரேஷ்ட காரியம் - டிரஸ்டி ஆத்மாவாக இருந்தாலும் சேவாதாரி ஆத்மாவாக இருந்தாலும், இருபாலருமே இதே ஆதாரத்தின் மூலமாக வரிசை எண்ணைப் பெற முடியும். பாக்கயித்தை உருவாக்குவதற்கு இருவர்களுக்குமே முழு அதிகாரம் இருக்கிறது. யார் உருவாக்க விரும்புகிறீர்களோ, எவ்வளவு உருவாக்க விரும்புகிறீர்களோ, அந்த அளவு உருவாக்க முடியும். பிரம்மா குமார்-குமாரிகள் பிறந்ததிலிருந்தே பாக்கியத்தை கொணடே வருகிறீர்கள். பிறந்த உடனேயே பாக்கிய நட்சத்திரம் பிறப்பு உரிமையாகிவிட்டது.பிராமணன் என்றாலே பாக்கியம் நிறைந்தவர். ஆனால் கிடைத்திருக்கும் பிறப்பு உரிமையை மற்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பாக்கிய நட்சத்திரத்தை எவ்வளவு முன்னேற்றம் அடையச் செய்கிறார், எவ்வளவு உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார் என்பது அவரவர்களின் முயற்சியைப் பொருத்தது. கிடைத்திருக்கும் பாக்கியத்தின் அதிகாரத்தை வாழ்க்கையில் நடைமுறையில் காரியத்தில் கொண்டு வருவது என்றால் கிடைத்திருக்கும் தந்தையின் சொத்தை சம்பாத்தியம் மூலம் அதிகரித்துக் கொண்டே இருப்பது அல்லது சாப்பிட்டே அழித்து விடுவது என்பது. அவரவர்கள் கையில் இருக்கிறது. பிறந்த உடனேயே பாப்தாதா அனைவருக்கும் ஒரே மாதிரி சிரேஷ்ட பாக்கியவானாக ஆகுக என்ற வரதானம் என்று சொன்னாலும், பாக்கியத்தின் சொத்து என்று சொன்னாலும் ஒரே மாதிரி தான் கொடுத்திருக்கிறார். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி தான் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, செல்லமான குழந்தைகளே என்ற பட்டங்களைக் கொடுக்கிறார். சிலரை செல்லமானவர்கள் என்றும், சிலரை செல்லமற்றவர்கள் என்றும் கூறுவதில்லை. ஆனால் சொத்தை பாதுகாப்பது மற்றும் அதிகப்படுத்துவதில் வரிசைக்கிரமமானவர்கள் ஆகிவிடுகிறார்கள். சேவாதாரிகளுக்கு 10 மடங்கு கொடுக்கிறார் மற்றும் டிரஸ்டிகளுக்கு இரண்டு மடங்கு கொடுக்கிறார் என்று அப்படி அல்ல. அனைவரையும் பல மடங்கு செல்வந்தர்கள் என்று கூறுகிறார். ஆனால் பாக்கியம் என்ற பொக்கிஷத்தைப் பாதுகாப்பது அதாவது தனக்குள் தாரணை செய்வது மேலும் பாக்கியம் என்ற பொக்கிஷத்தை அதிகரிப்பது அதாவது எண்ணம், சொல் மூலமாக காரியத்தில் ஈடுபடுத்துவது, இதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள். அனைவரும் சேவாதாரியாகவும் இருக்கிறீர்கள், அனைவரும் தாரணை நிறைந்தவர்களாகவும் இருக்கிறீர்கள், ஆனால் தாரணை சொரூபத்தில் வரிசைக் கிரமமாக இருக்கிறீர்கள். சிலர் அனைத்து குணங்களும் நிரம்பியவர் ஆகியிருக்கிறீர்கள், சிலர் குணம் நிறைந்தவர்களாக அகியிருக்கிறீர்கள். சிலர் எப்பொழுதும் தாரணை சொரூபமாக இருக்கிறீர்கள், சிலர் சில நேரம் தாரணை சொரூபமாக இருக்கிறீர்கள், சிலர் மேலே கீழே ஆடும் சொரூபமாக இருக்கிறீர்கள். ஒரு குணத்தை தாரணை செய்தீர்கள் என்றால் இன்னொன்றை தேவையான நேரத்தில் காரியத்தில் கொண்டு வர முடியாது. எப்படி ஒரே நேரத்தில் சகித்துக் கொள்ளும் சக்தியும் வேண்டும். மேலும் கூடவே உள்ளடக்கும் சக்தியும் வேண்டும். ஒருவேளை ஒரு சக்தி மற்றும் சகிப்புத் தன்மை என்ற குணத்தை தாரணை செய்து விடுவீர்கள். மேலும் உள்ளடக்கும் சக்தி மற்றும் குணத்தைக் கூடவே உபயோகிக்க முடியவில்லை என்றால் பிறகு கூறுவீர்கள் நான் இவ்வளவு சகித்துக் கொண்டேன் இல்லையா, இதை குறைவாகச் செய்தேனா என்ற என்று கூறுவீர்கள். நான் இவ்வளவு சகித்துக் கொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் சகித்துக் கொண்ட பிறகு உள்ளடக்கவில்லை, உள்ளடக்கும் சக்தியை உபயோகிக்க விலை என்றால் என்னவாகும்? இவர் இதைச் செய்தார், நான் இதைச் செய்தேன் என்று அங்கு இங்கு வர்ணனை இருக்கும். சகித்துக் கொண்டீர்கள், இந்த அதிசயத்தையோ அவசியம் செய்தீர்கள். ஆனால் அதிசயத்தை வர்ணனை செய்து குழப்பத்தில் மாற்றி விட்டீர்கள். ஏனென்றால் வர்ணனை செய்வதினால் ஒன்றோ தேக அபிமானம் மற்றும் இன்னொன்று பரசிந்தனை இரண்டு சொரூபமும் காரியத்தில் வந்து விடுகின்றன. இதே விதமாக ஒரு குணத்தை தாரணை செய்தீர்கள், இன்னொன்றை செய்யவில்லை என்றால், என்ன தாரணை சொரூபம் இருக்க வேண்டுமோ அது உருவாவதில்லை. இந்த காரணத்தினால் கிடைத்திருக்கும் பொக்கிஷத்தை எப்பொழுதும் தாரணை செய்யமுடியவில்லை அதாவது பாதுகாக்க முடிவதில்லை. பாதுகாக்க முடியவில்லை என்றால் இழந்து விட்டீர்கள் இல்லையா? சிலர் பாதுகாக்கிறார்கள், சிலர் இழந்து விடுகிறார்கள். அவருக்கு வரிசை எண்ணே இருக்காது இல்லையா? அப்படி சேவையில் ஈடுபடுத்துவது என்றால், பாக்கியத்தின் செல்வத்தை அதிகரிப்பது. இதில் கூட சேவையோ அனைவரும் செய்கிறீர்கள். ஆனால் உண்மையான உள்ளத்தோடு, முழு ஈடுபாட்டுடன் சேவை செய்வது மற்றும் சேவாதாரியாகி சேவை செய்வது, இதிலேயும் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. சிலர் உண்மையான உள்ளத்தோடு சேவை செய்கிறார்கள், மேலும் சிலர் புத்தியின் ஆதாரத்தில் சேவை செய்கிறார்கள். வித்தியாசமோ இருக்கும் இல்லையா?



    புத்தி கூர்மையானது, பாயின்ட்டுகள் அதிகம் இருக்கின்றன அதன் ஆதாரத்தில் சேவை செய்வது உண்மையான உள்ளத்தோடு சேவை செய்வது என்ற இதில் இரவு, பகலுக்கான வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. உள்ளப்பூர்வமாக சேவை செய்பவர் பரந்த உள்ளமுடையவரின் குழந்தையாக ஆக்குவார். ஆனால் புத்தி மூலம் சேவை செய்பவர், சொல்வதற்கும் மற்றும் சொல்ல வைப்பதற்கும் மட்டுமே கற்றுக் கொடுப்பார். அவர் சிந்தனை செய்வார், இவர் வர்ணனை செய்வார். ஒருவர் சேவாதாரி ஆகி சேவை செய்பவர், இனனொருவர் பெயர் பெற்றவர் ஆவதற்காக சேவை செய்பவர். வித்தியாசம் ஏற்பட்டு விட்டது தான் இல்லையா? உண்மையான சேவாதாரி யாருக்கு சேவை செய்வார்களோ அவர்களுக்கு பிராப்தியின் பிரத்யக்க்ஷ பலனை அனுபவம் செய்விப்பார்கள். பெயர் பெற்றவர் ஆகக்கூடிய சேவாதாரி அந்த நேரம் நல்ல பெயரை பெறுவார், மிக நன்றாகக் கூறினார், மிக நன்றாகப் பேசினார் என்று பெயர் பெறுவார். ஆனால் பிராப்தியின் பலனின் அனுபவத்தை செய்விக்க முடியாது. அப்படி வேற்றுமை ஏற்பட்டு விட்டது தான் இல்லையா? அப்படி ஒருவர் முழு ஈடுபாடோடு சேவை செய்பவர், இன்னொருவர் கொடுக்கப்பட்ட வேலை என்று சேவை செய்பவர். ஈடுபாடு உள்ளவர் ஒவ்வொரு ஆத்மாவிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் இருக்க மாட்டார். வேலை என்று நினைப்பவர் தன்னுடைய வேலையை முடித்துவிடுவார், ஏழு நாள் பாடமும் எடுத்து விடுவார், யோகப் பயிற்சி முகாமும் செய்து விடுவார், தாரணை வகுப்புகளும் செய்து விடுவார், முரளி வகுப்பும் எடுக்கும் வரையிலும் கொண்டு வந்து விடுவார், ஆனால் ஆத்மாவிற்கு முழு ஈடுபாடு உடையவராக ஆக்குவது தன்னுடைய பொறுப்பு என்று உணருவதில்லை. கோர்ஸ்க்கு மேல் கோர்ஸ் ( பல ஏழுநாள் பாடங்கள்) எடுத்து விடுவார். ஆனால் ஆத்மாவில் ஃபோர்ஸ் (சக்தி) நிரப்ப முடியாது. நான் மிகக் கடுமையாக உழைத்து விட்டேன் என்று நினைப்பார். ஆனால் சேவையின் ஈடுபாடு உள்ளவர் தான், ஈடுபாட்டை ஏற்படுத்த முடியும் என்பது நியமம். அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டீர்களா? இது தான் கிடைத்திருக்கும் செல்வத்தை அதிகரிப்பது, அதாவது இந்த காரணத்தினால் எவ்வளவு பாதுகாக்கிறார்களோ எவ்வளவு அதிகரிக்கிறார்களோ அந்த அளவு வரிசை எண்ணை முன்னுக்கு எடுத்து விடுகிறார்கள். பாக்கியத்தை அளிப்பவரோ அனைவருக்கும் ஒரே மாதிரி தான் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் சம்பாதிப்பவர்கள் சிலர் இழப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிலர் சாப்பிட்டு அழித்து விடுபவர்கள் ஆகிவிடுகிறார்கள். எனவே இரண்டு விதமான மாலை உருவாகியிருக்கிறது. மேலும் மாலையிலும் வரிசை எண் உருவாகிவிட்டது. வரிசை எண் ஏன் உருவானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அப்படி தியாகத்தின் பாக்கியத்தை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். தியாகத்தின் லீலையும் அளவற்றது. அதைப் பின்பு கூறுவோம். நல்லது.



    அந்த மாதிரி உயர்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த, எப்பொழுதும் உயர்ந்த எண்ணம் மற்றும் உயர்ந்த காரியம் மூலமாக பாக்கிய ரேகையைப் பெரியதாக்கும், நிரந்தர உண்மையான சேவாதாரிகளுக்கு, எப்பொழுதும் அனைத்து குணங்கள், அனைத்து சக்திகளை வாழ்க்கையில் கொண்டு வரக்கூடிய, ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பிரத்யக்ஷபலன் அதாவது பிராப்தி சொரூபம் ஆக்கக்கூடிய, அந்த மாதிரி சிரேஷ்ட தியாகி மற்றும் சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த எப்பொழுதும் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் அதிகாரத்தை, பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் மற்றும் அதிகரிக்கும் அந்த மாதிரி தாரணை ரூப நிரந்தர சேவாதாரி குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம். !



    பார்ட்டிகளுடன் சந்திப்பு

    1) பிராமணரிலிருந்து பரிஷ்தா மற்றும் ஃபரிஷ்தாவிலிருந்து தேவதை ஆக வேண்டும் என்ற இந்த இலட்சியத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள் அனைவரும் தன்னை பிராமணனிலிருந்து பரிஷ்தா ஆகுபவன் என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது பிராமணர் மேலும் பிராமணரிலிருந்து பரிஷ்தா ஆகப்போகிறேன். பிறகு பரிஷ்தாவிலிருந்து தேவதை ஆவேன் என்ற இந்த நினைவு இருக்கிறதா? பரிஷ்தா ஆவது என்றால், பௌதீக உடலிலிருப்பவராக இருந்தாலும் லேசான ரூபத்தில் இருப்பது, அதாவது எப்பொழுதும் புத்தி மூலமாக உயர்ந்த நிலையில் இருப்பது. பரிஷ்தாக்களின் கால்கள் தரையில் படாது மேலே எப்படி இருப்பார்கள்? புத்தி மூலமாக. புத்தி என்ற கால்கள் எப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருப்பது. அந்த மாதிரி பரிஷ்தாவாக ஆகிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது ஆகிவிட்டீர்களா? பிராமணனாகவோ இருக்கவே இருக்கிறீர்கள் - ஒருவேளை பிராமணனாக இல்லையென்றால், இங்கே வருவதற்கு அனுமதியும் கிடைத்திருக்காது. ஆனால் பிராமணர்கள் பரிஷ்தா தன்மையின் நிலையை எந்த அளவு கடைப் பிடித்திருக்கிறார்கள்? பரிஷ்தாக்களுக்கு ஒளி வடிவமான உடலைக் காண்பிக்கிறார்கள். எனவே எந்த அளவு தன்னை பிரகாச சொரூப ஆத்மா என்று புரிந்து கொள்வீர்களோ மேலும் ஒளிவடிவமான உடலுள்ள ஃபரிஷ்தாவாகி காரியங்கள் செய்து கொண்டிருக்கிறேன் என்று அனுபவம் செய்வீர்களோ, பரிஷ்தா என்றால் தன்னுடைய உடல் உணர்வோடும் எந்த சம்பந்தம் இல்லை, தேக உணர்வின் சம்பந்தம் துண்டிக்கப்பட்டது என்றால், ஃபரிஷ்தா, உடலிலிருந்து அல்ல, உடல் உணர்விலிருந்து ! உடலிலிருந்து சம்பந்தம் துண்டிக்கப்ட்டது என்றாலோ இங்கிருந்து சென்று விடுவீர்கள், ஆனால் தேக உணர்விலிருந்து சம்பந்தம் முடிய வேண்டும், அப்பொழுது இந்த வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். பிறகு எந்த மாயாவும் கவர்ந்திழுக்காது. நல்லது.



    2. நான் இறைவனின் பூந்தோட்டத்தின் மலர் - இந்த சுவமானத்தில் இருங்கள் :



    எப்பொழுதும் தன்னை பாப்தாதாவின் அதாவது அல்லாவின் பூந்தோட்டத்தின மலர் என்ற புரிந்து நடந்து கொள்கிறீர்களா? நான் ஆன்மீக ரோஜா மலராகி எப்பொழுதும் ஆன்மீக நறுமணத்தைப் பரப்புகிறேனா என்று தன்னிடமே கேளுங்கள். எப்படி ரோஜாவின் நறுமணம் அனைவருக்கும் இனிமையானதாக அனுபவம் ஆகும். மேலும் அந்த நறுமணம் நாலாபுறமும் பரவி விடுகிறது. அது ஸ்தூலமானது அழியக்கூடியது மேலும் நீங்கள் அனைவரும் அழியாத உண்மையான ரோஜா மலர்கள். எனவே எப்பொழுதும் அழியாத உண்மையான ரோஜா மலர்கள். எனவே எப்பொழுதும் அழியாத ஆன்மீகத்தின் நறுமணத்தை பரப்பிக் கொண்டே இருக்கிறீர்களா? நான் அல்லாவின் பூந்தோட்டத்தின் மலராகி விட்டேன் என்ற இந்த சுயமரியாதையிலேயே இருங்கள். இதைவிட உயர்ந்த சுயமரியாதை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆஹா ! என்னுடைய சிரேஷ்ட பாக்கியம், என்ற இந்தப் பாடலை எப்பொழுதும் பாடிக் கொண்டே இருங்கள். கள்ளம் கபடமற்றவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் என்றால், சாதுர்யமானவர் ஆகி விட்டீர்கள் இல்லையா ! யாரை தன்னுடையவர் ஆக்கியிருக்கிறீர்கள்? யாருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள்? மூன்று உலகங்களையும் ஒப்பந்தத்தில் பெற்று விட்டீர்கள் இல்லையா? இன்றைய உலகத்தில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தாலும், இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை யாரும் செய்ய முடியாது. அந்த அளவு மஹான் ஆத்மாக்கள் நீங்கள். இந்த மஹான் நிûலையை நினைவில் வைத்து நடந்து கொண்டே இருங்கள்.



    3. பிராமணர்களின் கடமை - குஷியின் தானம் செய்து மஹாதானி ஆவது :



    அனைத்தையும் விட மிக உயர்ந்த பொக்கிஷம் குஷியின் பொக்கிஷம். பொக்கிஷம் என்ன என்ன ஒருவரிடம் இருக்குமோ அது தானம் செய்யப்படும். நீங்கள் குஷியின் பொக்கிஷத்தை தானம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் யாருக்கு குஷியைக் கொடுப்பீர்களோ அவர் அடிக்கடி உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்பார். துக்கமான ஆத்மாக்களுக்கு குஷியின் தானம் செய்து விட்டீர்கள் என்றால், உங்களுடைய மகிமை பாடுவர். மஹாதானி ஆகுங்கள் அனைவருக்கும் குஷியின் பொக்கிஷத்தை வழங்குங்கள். தன்னைப் போன்றவர்களை எழுப்பி விடுங்கள். வழி காண்பியுங்கள். சேவையின்றி பிராமண வாழ்க்கை இல்லை. சேவை இல்லையென்றால் குஷி இல்லை, எனவே எப்பொழுதும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். தினசரி யாருக்காவது அவசியம் தானம் செய்யுங்கள். தானம் செய்யாமல் தூக்கமே வரக்கூடாது.



    கேள்வி :

    பாப்தாதாவின் கழுத்தில் எந்தக் குழந்தைகள் மாலை ரூபத்தில் அணியப்பட்டிருப்பார்கள்?.



    பதில் :

    யாருடைய கழுத்து அதாவது வாய் மூலம் தந்தையின் குணம், தந்தையால் கூறப்பட்ட ஞானம் மற்றும் தந்தையின் மகிமை வெளியாகிக் கொண்டே இருக்கிறதோ, என்ன பாபா கூறினாரோ அதுவே வாயிலிருந்து வெளியாகிக் கொண்úடிருக்கிறதோ, அந்த மாதிரிக் குழந்தைகள் கழுத்தில் மாலையாகி, உருண்டு கொண்டிருப்பார்கள். நல்லது ஓம் சாந்தி.



    வரதானம் :

    அமைதியின் சக்தி மூலம், சம்ஸ்காரம் ஒத்துப்போவது மூலமாக அனைத்துக் காரியங்களையும் வெற்றியடையச் செய்யும் எப்பொழுதும் தடையற்றவர் ஆகுக !



    யார் தந்தையைப் பார்க்கிறாரோ, தந்தையைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர்தான் எப்பொழுதும் தடையின்றி இருக்க முடியும். சகோதரன், சகோதரியை பார்ப்பதினால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே இப்பொழுது தந்தையைப் பின்பற்றி நடந்து கொண்டே தந்தைக்கு சமமான சம்ஸ்காரத்தை உருவாக்கினீர்கள் என்றால், சம்ஸ்காரம் இணைந்து செல்லும் நடனம் ஆடிக் கொண்டே எப்பொழுதும் தடையின்றி இருப்பீர்கள். அமைதியின் சக்தி மூலம் மற்றும் அமைதியாக இருப்பதினால் எவ்வளவு பெரிய தடையும் சுலபமாக முடிவடைந்து விடும். மேலும் அனைத்துக் காரியங்களும் இயல்பாகவே நிறை வேறிவிடும்.



    சுலோகன் :

    யார் ஒவ்வொரு விசயத்தையும் ஒரு காலத்து பார்வையோடு பார்ப்பதில்லை, மேலும் ஒவ்வொரு விசயத்திலும் நன்மை இருக்கிறது என்று நினைக்கிறாரோ அவர் தான் மூன்று காலத்தையும் தெரிந்தவர்.


    ***OM SHANTI***