BK Murli 25 May 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 May 2017 Tamil

    25.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! உங்களுடைய அன்பு ஆத்மாவிடம் இருக்க வேண்டும், நடந்து சுற்றியபடி பயிற்சி செய்யுங்கள் - நான் ஆத்மா, ஆத்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், நான் எந்த கெட்ட காரியத்தையும் செய்யக் கூடாது.



    கேள்வி:

    தந்தை மூலமாக படைக்கப்பட்ட யக்ஞம் எது வரை நடந்து கொண்டிருக்கிறதோ அதுவரை பிராமணர்கள் தந்தையின் எந்த கட்டளையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்?



    பதில்:

    தந்தையின் கட்டளை, குழந்தைகளே, எதுவரை ருத்ர யக்ஞம் நடந்து கொண்டிருக்கிறதோ அதுவரை நீங்கள் கண்டிப்பாக தூய்மையாக இருக்க வேண்டும். பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் ஒரு போதும் விகாரத்தில் செல்ல முடியாது. யாரேனும் இந்த கட்டளையை மீறி நடந்தால் மிகவும் கடுமையான தண்டனைக்கு ஆளாகி விடுவார்கள். யாருக்குள்ளாவது கோபத்தின் பூதம் இருந்தால் அவர்கள் பிரமணர்களே அல்ல. பிராமணர்கள் ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும், ஒரு போதும் விகாரத்தின் வசப்படக் கூடாது.



    பாடல்:

    ஓ. . . தூர தேசத்து பிரயாணியே. . .



    ஓம் சாந்தி.

    தூரதேசத்தின் பிரயாணியை பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரமதாமத்தில் வாசம் செய்யும் பரமபிதா பரமாத்மாவே வாருங்கள் என அழைக்கின்றனர். பிதா (தந்தை) என சொல்கின்றனர், ஆனால் அவருடைய ரூபம் என்ன, ஆத்மா என்பது என்ன என்பது தெரியாது. ஆத்மா புருவ மத்தியில் நட்சத்திரத்தைப் போல இருக்கக் கூடியது என புரிந்து கொள்கின்றனர். அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நம்முடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு அடங்கியுள்ளது. இந்த விசயங்களின் ஞானம் கொஞ்சமும் கிடையாது. ஆத்மா இந்த சரீரத்தில் எப்படி பிரவேசம் ஆகிறது என்பது கூட தெரியாது. எப்போது உள்ளே அசைவுகள் உணரப்படுகிறதோ அப்போது ஆத்மா பிரவேசமாகியிருப்பது தெரிய வரும். பரமபிதா பரமாத்மா என சொல்கின்றனர், ஆத்மாதான் பிதா என்பதையும் சொல்கிறது. இந்த சரீரம் லௌகிக பிதாவினுடையது என ஆத்மாவுக்குத் தெரியும். நம்முடைய (ஆத்மாவின்) தந்தை அந்த நிராகாரமானவர் ஆவார். கண்டிப்பாக நம்முடைய தந்தையும் நம்மைப் போலவே புள்ளி சொரூபமாகத்தான் இருப்பார். அவருடைய மகிமையையும் பாடுகின்றனர். மனித சிருஷ்டியின் விதை வடிவம், ஞானக் கடல், பதித பாவனர். ஆனால் எவ்வளவு பெரிய அல்லது சிறிய உருவம் என்பது எல்லோருடைய புத்தியிலும் பதிவது கிடையாது. நம்முடைய ஆத்மா என்பது என்ன என முன்னர் உங்களுடைய புத்தியிலும் இருக்கவில்லை. ஓ பரமபிதா என பரமபிதாவை நினைவு செய்து கொண்டிருந்தோம், ஆனால் எதுவும் தெரிந்திருக்கவில்லை. தந்தை நிராகாரமானவர், பிறகு அவர் எப்படி பதித பாவனராக இருக்கிறார்? மாயாஜாலம் செய்கிறாரா என்ன? தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குவதற்காக கண்டிப்பாக இங்கே வரவேண்டியிருக்கிறது. எப்படி நம்முடைய ஆத்மாவும் கூட சரீரத்தில் இருக்கிறதோ அது போல தந்தையும் நிராகாரமாக இருக்கிறார், அவரும் கூட கண்டிப்பாக சரீரத்தில் இங்கே வர வேண்டியிருக்கிறது, எனவேதான் சிவராத்திரி அதாவது சிவ ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் எப்படி வந்து தூய்மையாக்குகிறார் என்பது எதுவும் தெரியாது, ஆகையால் எங்கும் நிறைந்தவர் என சொல்லிவிடுகின்றனர். கண்காட்சியில் அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் சொற்பொழிவாற்றப் போனால் முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், பிறகு ஆத்மாவின் அறிமுகம் பற்றி கூற வேண்டும். ஆத்மா புருவ மத்தியில் இருக்கின்றது. அதில் தான் அனைத்து சம்ஸ்காரங்களும் இருக்கின்றன. சரீரம் அழிந்து போய் விடுகிறது. என்னென்னவெல்லாம் காரியம் செய்கின்றதோ அதனை ஆத்மாதான் செய்கின்றது. சரீரத்தின் கர்மேந்திரியங்கள் ஆத்மாவின் ஆதாரத்தில் தான் செயல்படுகின்றன. ஆத்மா இரவில் அசரீரி ஆகி விடுகிறது. இன்று நான் நன்றாக ஓய்வெடுத்தேன், இன்று எனக்கு ஓய்வே கிடைக்கவில்லை, நான் இந்த சரீரத்தின் மூலம் இந்த வேலையைச் செய்கிறேன் என்றெல்லாம் ஆத்மாதான் சொல்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்படி பழக்கமாகி விட வேண்டும். ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது. ஆத்மா சரீரத்திலிருந்து வெளியேறிச் சென்று விட்டது என்றால் அது பிணம் என சொல்லப்படுகிறது. எதற்கும் உதவாததாகி விடுகிறது. ஆத்மா வெளியேறி விட்டால் சரீரத்தில் துர்நாற்றம் வீசத் தொடங்கி விடுகிறது. சரீரத்தை எடுத்துச் சென்று எரிக்கின்றனர். எனவே, உங்களுடைய அன்பு ஆத்மாவிடம்தான் ஆகும். நான் ஆத்மா என குழந்தைகளாகிய உங்களுக்கு சுத்தமான அபிமானம் இருக்க வேண்டும். முற்றிலும் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். முயற்சி அனைத்தும் இதில்தான் உள்ளது. ஆத்மாவாகிய நான் இந்த கர்மேந்திரியங்களின் மூலம் எந்த கெட்ட காரியமும் செய்யக் கூடாது. இல்லாவிட்டால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அனுபவம் கூட ஆத்மாவுக்கு சரீரம் இருக்கும்போது தான் செய்ய முடியும். சரீரம் இல்லாமல் ஆத்மா துக்கத்தை அனுபவிக்க முடியாது. ஆக முதலில் ஆத்ம அபிமானியாக பிறகு பரமாத்ம அபிமானியாக ஆக வேண்டும். நான் பரமபிதா பரமாத்மாவின் குழந்தை. பரமாத்மா எமக்கு பிறவி கொடுத்தார். பெற்றார் என சொல்லவும் செய்கின்றனர். அவர் படைப்பவர் ஆனால் அவர் எப்படி படைப்பவராக ஆகிறார் என்பது யாருக்கும் தெரியாது. பரமபிதா பரமாத்மா எப்படி புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார், பழைய உலகத்தில் இருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். எப்படிப்பட்ட யுக்தி என பாருங்கள். அவர்கள் பிரளயத்தைக் காட்டியுள்ளனர். ஆலையின் மீது ஒரு பாலகன் வந்தான் என சொல்கின்றனர், பிறகு குழந்தை பருவத்தை காட்டுவதில்லை. இது அஞ்ஞானம் என சொல்லப்படுகிறது. பகவான் சாஸ்திரங்களை உருவாக்கினார் என சொல்கின்றனர். வியாசர் பகவானாக ஆக முடியாது. பகவான் அமர்ந்து சாஸ்திரங்கள் எழுதுகிறாரா என்ன? அவர் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தை உரைப்பவர் என அவரைப் பற்றி பாடப்பட்டுள்ளது. மற்றபடி இந்த வேத சாஸ்திரங்களைப் படிப்பதனால் யாருக்கும் நன்மை ஏற்படாது. பிரம்ம ஞானி இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என புரிந்து கொள்வார். பிரம்மம் என்பது மகா தத்துவம் ஆகும். அங்கே ஆத்மாக்கள் வசிக்கின்றன. இது தெரியாத காரணத்தால் என்ன தோன்றுகிறதோ அதனை சொல்லிக் கொண்டிருக்கின்றனர், மனிதர்களும் உண்மை உண்மை என சொல்லியபடி இருக்கின்றனர். நிறையவே ஹடயோகம், பிராணாயாமம் முதலானவைகளை செய்கின்றனர், குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டியதில்லை. மென்மையான கன்யாக்கள், தாய்மார்கள் உங்களுக்கு என்ன கஷ்டத்தைக் கொடுப்பார்? முதலில் தாய்மார்கள் ராஜ வித்யா (அரசியலில் படிப்பு) படித்துக் கொண்டிருக்கவில்லை. கொஞ்சம் மொழியை கற்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். மற்றபடி வேலைக்குப் போக வேண்டியிருக்காது. இப்போதோ தாய்மார்கள் படிக்க வேண்டியிருக்கிறது. சம்பாதிப்பவர் இல்லாவிட்டால் (வேலையின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு) சொந்தக் காலில் நிற்க முடியும், பிச்சை எடுக்க வேண்டியிருக்காது. இல்லாவிட்டால் வழக்கப்படி பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் கற்பிக்கப்படும். இப்போதோ வக்கீல், மருத்துவம் முதலானவை படித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, யாரானாலும் அவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தை மட்டும் கொடுக்க வேண்டும். நிராகாரமானவரை அனைவரும் சிவபாபா என சொல்கின்றனர், ஆனால் அவருடைய ரூபம் என்ன? யாருக்கும் தெரியாது. பிரம்மம் என்பதோ தத்துவம் ஆகும். இவ்வளவு பெரியதாக இருக்கும் இந்த ஆகாயத்தைப் போல. எல்லை காண முடியாது. அதே போல பிரம்ம தத்துவத்திற்கும் எல்லைகள் கிடையாது. அதனுடைய அம்சத்தில் ஒரு பகுதியில் ஆத்மாக்களாகிய நாம் வசிக்கின்றோம். மற்றபடி துருவமே துருவம்தான் உள்ளது. கடலும் கூட அளவற்றது, சென்று கொண்டே இருங்கள். துருவத்தின் எல்லையையும் காண முடியாது. மேலே செல்ல முயற்சி செய்கின்றனர், ஆனால் போகப்போக அவர்களின் பொருட்களே (இல்லாமல் போய் )தீர்ந்து விடுகிறது. அதுபோலவே பிரம்ம மகா தத்துவம் கூட மிகப் பெரியதாகும். அங்கே சென்று எதையும் தேட வேண்டியதில்லை. அங்கே ஆத்மாக்களுக்கு இந்த சிந்தனை செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. ஆராய்ச்சி செய்வதில் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நட்சத்திரத்தில் இருக்கும் உலகத்தைத் தேடுகின்றனர் ஆனால் என்னதான் லாபம் இருக்கிறது? அங்கே தந்தையைத் தேடக் கூடிய வழி எதுவும் கிடையாது. பக்தர்கள் பகவானை அடைவதற்காக பக்தி செய்கின்றனர். அப்போது அவர்களுக்கு முக்தி, ஜீவன் முக்தி கிடைக்கிறது. தேடுவது பகவானையே அன்றி துருவங்களை அல்ல. அங்கே எதுவும் கிடைப்பதில்லை. அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவாகிறது. இதுவும் கூட சர்வசக்திவானின் அரசாங்கம் ஆகும். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இருவருக்கும் கிரீடம் காட்டுவதில்லை. தந்தை வந்து உங்களுக்கு அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கிறார். இப்போது இவ்வளவு ஞானம் அனைத்தையும் அடைகிறீர்கள் எனும்போது உங்களுக்கு நிறைய குஷி இருக்க வேண்டும். ஆக, நம்மை படிப்பிப்பவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். நாமே முதலில் தேவி தேவதைகளாக இருந்தோம் என உங்களின் ஆத்மா சொல்கிறது. மிகவும் சுகம் மிக்கவர்களாக இருந்தோம். புண்ணிய ஆத்மாக்களாக இருந்தோம். இந்த சமயம் நாம் பாவாத்மாக்களாக ஆகியுள்ளோம் ஏனென்றால் இது இராவண இராஜ்யமாக உள்ளது. இவர்கள் இராவணனின் வழியில் இருக்கின்றனர். நீங்கள் ஈஸ்வரிய வழியில் இருக்கிறீர்கள். இராவணனும் குப்தமாக இருக்கிறான், ஈஸ்வரனும் குப்தமாக இருக்கிறார். இப்போது ஈஸ்வரன் உங்களுக்கு வழி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இராவணன் எப்படிபட்ட வழி கொடுக்கிறார்? இராவணனுக்கு ரூபம் எதுவும் கிடையாது. இவர் (சிவபாபா) ரூபத்தை எடுக்கிறார். இராவணனுக்கு அனைத்து ரூபங்களும் உள்ளன. நம்முடைய ஆத்மாவில் 5 விகாரங்கள் உள்ளன என அறிவார்கள். நாம் அசுர வழியில் நடந்து கொண்டிருக்கிறோம். ஆண் பெண் இருவருக்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. நம்மைப் படிப்பிப்பவர் நிராகார பரமபிதா பரமாத்மா என தெரிந்து கொள்ளும்போது இந்த அனைத்து விசயங்களும் மனிதர்களின் புத்தியில் பதியும். பரமாத்மா நிராகாரமானவார் (உடலற்றவர்). அவர் சாகாரத்தில் வரும்போது நாம் பிராமணர்கள் ஆகிறோம். தந்தையும் இரவில்தான் வருகிறார். சிவராத்திரியே பிரம்மாவின் ராத்திரியாகவும் ஆகி விட்டது. பிரம்மாவின் மூலமே பிராமணர்களாக ஆவோம். யக்ஞத்தில் பிராமணர்கள் கண்டிப்பாக தேவை. பிராமணர்கள் யக்ஞத்தை நடத்த வேண்டுமோ அதுவரை தூய்மையாக இருக்க வேண்டும். ஸ்தூலமான பிராமணர்களும் யக்ஞத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் விகாரத்தில் செல்வதில்லை. பிராமணர்களாகிய நீங்களும் கூட யக்ஞத்தில் இருக்கிறீர்கள் எனும்போது யாராவது விகாரத்தில் சென்றார்கள் என்றால் மிகவும் பாவாத்மாக்களாக ஆகி விடுகின்றனர். யக்ஞம் நடந்து கொண்டிருக்கிறது எனும்போது இறுதிவரை நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மா குமார், குமாரிகள் ஒரு போதும் விகாரத்தில் செல்லக் கூடாது. நீங்கள் எப்போதும் விகாரத்தில் போகக் கூடாது என தந்தை கட்டளையிட்டுள்ளார். இல்லாவிட்டால் நிறைய தண்டனைகளை அடைய வேண்டியதாகி விடும். விகாரத்தில் சென்றால் சத்ய நாசம் (அழிவு) ஏற்பட்டு விடும். அவர்கள் பிரம்மா குமார், குமாரிகளே அல்ல, ஆனால் கீழான சூத்திரர்கள் ஆவர். நீ தூய்மையாய் இருக்கும் வாக்குறுதி கொடுத்திருக்கிறாயா என பாபா எப்போதும் கேட்கிறார். ஒருவேளை தந்தையிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு பிராமணர் ஆகி பின் விகாரத்தில் சென்றால் சண்டாளராக பிறவி எடுப்பீர்கள். இங்கே விலை மாதர்களைப் போன்ற கீழான பிறவி எதுவும் கிடையாது. இது வேசிகளின் ஆலயமேயாகும். இரு பாலரும் ஒருவர் மற்றவருக்கு விஷத்தைக் குடிக்க வைக்கின்றனர். மாயை எவ்வளவுதான் சங்கல்பங்களை கொண்டு வந்தாலும் ஒருபோதும் விகாரத்தில் செல்லக் கூடாது. ஒரு சிலர் வலுக்கட்டாயமாக விகாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சக்தி குறைவாக இருக்கும் - தூய்மையுடன் கூடவே நடத்தையும் மிக நன்றாக இருக்க வேண்டும். நடத்தை கெட்டதாக இருந்தால் அவர்கள் எதற்கும் உதவாதவர்கள். லௌகிக தாய் தந்தையருக்குள் விகாரம் இருந்தது என்றால் குழந்தைகளும் கூட தாய் தந்தையிடமிருந்தே கற்றுக் கொள்கின்றனர். பரலௌகிக தந்தை உங்களுக்கு இந்த படிப்பை கற்பிப்பதில்லை. தந்தை ஆத்ம அபிமானியாக ஆக்குகிறார். ஒருபோதும் கோபம் கொள்ளக் கூடாது. அந்த சமயத்திலேயே நீங்கள் பிராமணர் அல்ல, சண்டாளர்களாக ஆகி விடுகிறீர்கள், ஏனென்றால் கோபத்தின் பூதம் இருக்கிறது. பூதங்கள் மனிதர்களுக்கு துக்கத்தைக் கொடுக்கின்றன. பிராமணர் ஆகி, பின் (சைதான்) தீய காரியங்கள் செய்யக் கூடாது என தந்தை சொல்கிறார். விகாரத்தில் செல்வதன் மூலம் நீங்கள் யக்ஞத்தை தூய்மையற்றதாக ஆக்கி விடுகிறீர்கள், இதில் மிகவும் எச்சரிக்கை வைக்க வேண்டும். பிராமணர் ஆவது என்பது சிற்றன்னை வீடு போல் அல்ல. யக்ஞத்தில் யாரும் அசுத்தத்தை உண்டாக்கக் கூடாது. 5 விகாரங்களில் எந்த ஒரு விகாரமும் இருக்கக் கூடாது. கோபப்பட்டால் பரவாயில்லை என்பதல்ல. இந்த பூதம் வந்தது என்றால் நீங்கள் பிராகணர் அல்ல. குறிக்கோள் மிகவும் உயர்வானது என சிலர் சொல்வார்கள். நடக்க முடியாவிட்டால் சென்று அசுத்தமானவர் ஆகுங்கள். இந்த ஞானத்தில் எப்போதும் தூய்மையாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பதித பாவன தந்தையின் குழந்தைகள் ஆகி தந்தைக்கு உதவி செய்ய வேண்டும். எந்த விகாரமும் இருக்கக் கூடாது. சிலர் வந்தவுடனே சட்டென விகாரத்தை விட்டு விடுகின்றனர். நான் ருத்ர ஞான யக்ஞத்தின் பிராமணன் என புரிந்து கொள்ள வேண்டும். மனம் உறுத்தும்படியான எந்த காரியமும் நடந்து விடக் கூடாது. நான் தகுதியானவனா என மனம் எனும் கண்ணாடியில் பார்க்க வேண்டும். பாரதத்தை தூய்மையாக ஆக்குவதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக நினைவிலும் இருக்க வேண்டும். சன்னியாசிகள் தூய்மையாக இருக்கின்றனர் என்றாலும் தந்தையை அறிவதில்லை. ஹடயோகம் முதலானவைகள் நிறைய செய்கின்றனர். எதையும் அடைவதில்லை. சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார் என நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாம் அங்கிருப்பவர்கள். நாம் சுகதாமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம், இப்போது துக்கதாமத்தில் இருக்கிறோம். இப்போது சங்கமயுகமாக இருக்கிறது. இந்த சிந்தனை நடந்து கொண்டே இருந்தது என்றாலும் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பீர்கள். இந்த (பெங்களூரின்) அங்கண்ணா குழந்தையைப் பாருங்கள், எப்போதும் புன்சிரிப்போடு இருக்கிறார். பாபா என சொன்னாலே குஷியில் நிறைந்து விடுகிறார். நாம் பாபாவின் குழந்தைகள் என அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகும். யார் கிடைத்தாலும் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தபடி இருங்கள். ஆம், சிலர் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம், ஏனென்றால் புதிய விஷயமாக இருக்கிறது. பகவான் வந்து படிப்பிக்கிறார் என யாருக்கும் தெரியாது. கிருஷ்ணர் ஒருபோதும் வந்து கற்பிப்பதில்லை. நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. ருத்ர ஞான யக்ஞத்தின் பிராமணராக ஆகிய பின் மனதை உறுத்தும்படியான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது. எந்த பூதத்திற்கும் வசப்படக் கூடாது.



    2. பதித பாவன தந்தையின் உதவியாளர்களாக ஆவதற்காக எப்போதும் தூய்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். ஞானத்தை சிந்தனை செய்து புன்சிரிப்புடன் இருக்க வேண்டும்.



    வரதானம் :

    மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் மற்றும் அனைத்து கர்மேந்திரியங்களையும் ஒழுங்கு முறைப்படி நடத்தக் கூடிய சுயராஜ்ய அதிகாரி ஆகுக.



    சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் தமது யோக சக்தியின் மூலம் அனைத்து கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி நடத்துவார்கள். வெறும் ஸ்தூலமான கர்மேந்திரியங்கள் மட்டுமல்ல, ஆனால் மனம், புத்தி, சம்ஸ்காரங்களும் கூட இராஜ்ய அதிகாரியின் வழிப்படி அல்லது விதிப்படி நடக்கும். அவர்கள் ஒருபோதும் சம்ஸ்காரங்களுக்கு வசப்பட மாட்டார்கள், ஆனால் சம்ஸ்காரங்களை தன் வசப்படுத்தி உயர்வான விதிமுறைப்படி காரியத்தில் ஈடுபடுத்துவார்கள். உயர்வான சம்ஸ்காரங்களுக்குத் தகுந்தாற்போல சம்மந்தம்-தொடர்பில் வருவார்கள். சுயராஜ்ய அதிகாரிகளுக்கு கனவிலும் கூட தவறு ஏற்பட வாய்ப்பில்லை.



    சுலோகன் :

    பணிவுத்தன்மையின் விசேஷத்தன்மையை தாரணை செய்து வந்தால் வெற்றி கிடைத்தபடி இருக்கும்.



    ***OM SHANTI***