BK Murli 1 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 July 2017 Tamil

    01.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! சிவபாபாவினுடைய நம்பர் ஒன் (முக்கியமான) ஸ்ரீமத் என்னவென்றால் அதிகாலை எழுந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்களுடைய படகு கரை சேர்ந்துவிடும்.



    கேள்வி:-

    பரந்த மனம் கொண்ட குழந்தைகளுடைய அடையாளம் என்னவாக இருக்கும்?



    பதில்:

    1. அவர்கள் பிறருக்கு நன்மை செய்து கொண்டே இருப்பார்கள். தானம் செய்வதற்கான ஆர்வம் இருக்கும். இந்த சமயத்தில் யார் தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குத் தான் புண்ணியம் கிடைக்கிறது.



    2. தயாள குணம் கொண்ட குழந்தைகள் கள்ளம் கபடமற்ற பாபாவைப் போல் பரந்த உள்ளம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் யக்ஞத்தில் ததீட்சி ரிஷி போல் எலும்புகளைக் கொடுப்பார்கள்.



    பாடல்:-

    என்னுடைய மனம் என்ற வாயில் யார் வந்தது ......



    ஓம்சாந்தி.

    குழந்தைகளுக்காக யார் வந்திருக்கின்றார்? அதிகாலையினுடைய தலைவன் (சாயி பிரபு)) என்று கூறுகின்றனர். ஏனெனில், இரவைப் பகலாக்கக் கூடியவராக இருக்கின்றார். இரவின் தலைவன் இராவணன் ஆவான். இதை நல்ல முறையில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள், அப்பொழுதே புத்தியில் பதியும். புத்தியில் இந்த வித்தியாசம் உள்ளது அல்லவா. சதோபிரதானம், சதோ. ரஜோ, தமோ புத்தி இருக்கிறது. சிலரோ சமிக்ஞையிலேயே புரிந்து கொள்கின்றனர். இவர் அதிகாலையின் தலைவன் என்று நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இரவைப் பகல் ஆக்குகின்றார். உங்களை இப்பொழுது பகலின் எஜமானராக அதாவது, புது உலகத்தின் எஜமானராக ஆக்குகின்றார். எப்பொழுது ஸ்ரீமத்படி நடப்பீர்களோ, அப்பொழுதே எஜமானர் ஆவீர்கள். வியாபாரிகள் காலைப் பொழுதில் எப்பொழுது கடையைத் திறக்கின்றார்களோ அப்பொழுது முதன் முதலில் தலை வணங்குவார்கள். கோவிலில் கூட அவ்வாறு செய்கிறார்கள். கடைக்கு முன்னால் நமஸ்கரித்துவிட்டு பிறகு உள்ளே செல்கின்றார்கள். ஏனெனில், வருமானம் பெருகிட கடவுள் அருள்புரிவார் என்று கூறுவார்கள்.



    இவர் யார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இவர் நம்முடைய பாபா என்பதை நம்முடைய ஆத்மா அறிந்திருக்கிறது. (சாயி) தலைவர் பாபா ஆவார், இவர் இரவைப் பகலாகக்கக் கூடியவர். தற்காலத்தில் சாயிபாபா என்று கூட அனேகர் உள்ளனர். இரவைப் பகலாக்கக்கூடிய சாயிபாபா அவர் ஒருவர் தான் மற்றும் அவர் மிகவும் கள்ளம் கபடமற்றவர் ஆவார். பெயரே கள்ளம் கபடமற்றவர் என்பதாகும் கள்ளம் கபடமற்ற கன்னிகைகள், மாதர்கள் தலையில் ஞானக் கலசத்தை வைக்கின்றார் அவர்களுக்கு ஆஸ்தி கொடுத்து உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார். நீங்கள் தனது தந்தையை அதிகாலையில் எழுந்து நினைவு செய்து கொண்டே இருங்கள், அப்பொழுது (வாழ்க்கை) படகு கரை சேர்ந்துவிடும். உங்களை விஷ்வத்தின் எஜமானர் ஆக்குகின்றார். உங்களை பாபா கடினமாக உழைக்க வைக்கவில்லை. இந்தத் தொழில் செய்து கொண்டே இருங்கள், அது போதும். அனைவருக்கும் இந்த அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மம் வினாசம் ஆகிவிடும் என்று இரவைப் பகல் ஆக்கக் கூடியவர் அதாவது நரகத்தை சொர்க்கம் ஆக்கக் கூடியவர் கூறுகின்றார் என்று கூறுங்கள். செய்தி கொடுக்க வேண்டும். முன்பும் கூட அனைவருக்கும் செய்தி கொடுக்கப்பட்டது. பகவான் பாபா ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். எல்லையற்ற தந்தை அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி தான் கொடுப்பார். தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். கள்ளம் கபடமற்ற தாய்மார்களுக்காக எவ்வளவு எளிய உபாயத்தைக் கூறுகின்றார்! இனிமையிலும் இனிமையான தாய்மார்களே மற்றும் இனிமையிலும் இனிமையான கன்னிகைகளே, இனிமையிலும் இனிமையான குழந்தைகளே உங்களுக்கு வேறு எந்த உழைப்பும் (கஷ்டத்தை) நான் கொடுக்கவில்லை. மற்ற அனைவருடைய தொடர்பை மட்டும் விட்டுவிடுங்கள். நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் உங்களுடையவர்களாக மட்டும் ஆகிவிடுவோம் என்று பக்தி மார்க்கத்தில் நீங்கள் உத்திரவாதம் அளித்து வந்தீர்கள். எனக்கு உங்கள் ஒருவரைத் தவிர வேறு எவரும் கிடையாது. கிரிதரகோபாலன் என்று கூறுகின்றனர். ஆனால், இவரோ தந்தை ஆவார். அவர்கள் கிருஷ்ணரைக் கோபாலன் (பசுக்களை பாலனை செய்பவர்) ஆக்கிவிட்டனர். உண்மையில் இவர்கள் சைத்தன்ய பசுக்கள் ஆவார்கள், சிவபாபா ஞானத்தின் பாலனை செய்கின்றார். ஞான புல் கொடுக்கின்றார். அந்த கிருஷ்ணருடைய ஆத்மா கூட இப்பொழுது அனேக பிறவிகளின் கடைசிப் பிறவியில் இருக்கின்றார். பெயர், ரூபம், தேசம், காலம் ஒவ்வொரு பிறவியிலும் மாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர் பிறகு, பிராமணரிலிருந்து தேவதை ஆகின்றீர்கள். இதை இராதை, கிருஷ்ணரின் வம்சம் என்று சொல்லலாம் அல்லது விஷ்ணுவின் வம்சம் என்று சொல்லலாம். விஷ்ணுவின் வெற்றி மாலை அல்லது இராதை கிருஷ்ணரின் வெற்றி மாலையாக நீங்கள் இருந்தீர்கள். பிறகு, இப்பொழுது சக்கரத்தில் சுற்றி வந்து மீண்டும் அந்நிலையை அடைகிறீர்கள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் பிறகு தேவதை ஆகிறீர்கள். வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் சூரியவம்சி, இராஜா, இராணி, பிரஜை முதலிய அனைத்து நிலையையும் அடைகின்றனர். யார் எந்த அளவிற்கு ஸ்ரீமத்படி நடக்கின்றார்களோ, அதன் அனுசாரம் பதவி கிடைக்கும் என்று தந்தை கூறுகின்றார். அதிகாலையில் எழுந்து சாயி கள்ளம் கபடமற்ற பாபாவை நினைவு செய்யுங்கள் என்ற நம்பர் ஒன் ஸ்ரீமத் கிடைக்கின்றது. நீங்கள் ஆத்மா அல்லவா, சரீரத்தை தாரணை செய்து நடிப்பு நடிக்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் மேலே இருக்கிறீர்கள். நம்முடைய பாபா ஆத்மாக்களாகிய நமக்கு கற்பித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கல்ப கல்பத்தில் சங்கம யுகத்தில் ஒரு முறைதான் சிவபாபா வருகின்றார். கல்பத்திற்குப் பிறகு தான் நான் ஆத்மா என்ற இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது. தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஜின் பூதத்தின் உதாரணம் கொடுக்கின்றார்கள் அல்லவா – எனக்கு வேலை கொடுங்கள், இல்லையென்றால் சாப்பிட்டுவிடுவேன் என்று கூறியது. ஒருவேளை, என்னை நினைவு செய்யவில்லை என்றால் மாயை என்ற ஜின் சாப்பிட்டுவிடும் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் எப்பொழுதும் நினைவு செய்வீர்கள் என்பது கிடையாது. இப்பொழுது, முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். இது எளிய இராஜயோகம் மற்றும் ஞானம் ஆகும். ஆரோக்கியம் மற்றும் ஆஸ்தி இரண்டும் கிடைக்கின்றன. மன்மனாபவ, மத்யாஜீத் பவ. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார் அவ்வளவு தான். பிறகு, ஏன் தன்னுடைய நேரத்தை வீணாக்க வேண்டும்? அரைக்கல்பமாக பக்தி மார்க்கத்தில் நேரம் வீணாக செலவழிந்துவிட்டது. அரைக்கல்பம் பிரம்மாவின் பகல், அரைக்கல்பம் பிரம்மாவின் இரவு. அவர்கள் பிறகு நீண்ட ஆயுள் கொடுத்துவிட்டனர். கலியுகத்தில் இத்தனை ஆயிரம் ஆண்டுகள், சத்யுகத்தில் இத்தனை ஆயிரம் என்று எழுதிவிட்டனர். பிறகு, பாதி பாதி என்பது இருக்க முடியாது. முதலில் ஒரு இறைவனை நினைவு செய்யும் பக்தி இருந்தது. பிறகு, பலரை நினைவு செய்யும் பக்தி ஆகிவிட்டது என்று தந்தை புரிய வைக்கின்றார். பூத பூஜை அதாவது பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்ட சரீரத்தின் பூஜையும் செய்யத் துவங்கிவிட்டனர். கங்கை கரைக்குச் சென்று அமர்ந்து கொண்டு தன்னுடைய பூஜை செய்விக்கின்றார்கள் என்பதை பாபா பார்த்திருக்கின்றார். சாயி பாபா கூட விதவிதமாக அனேகர் உள்ளனர். இந்த பாபாவோ எவ்வளவு குப்தமாக இருக்கின்றார். அவரை உங்களது உள்ளம் அறிந்து கொண்டது. நான் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை ஆவேன், உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். அவர் ஹெவன்லிகாட் ஃபாதர் எனில், அவசியம் சொர்க்கத்தைத்தான் படைப்பார். இராவணன் வந்து நரகத்தை ஸ்தாபனை செய்கின்றான். இந்த ஞானம் கூட உங்களுக்குத் தான் உள்ளது. மனிதர்களோ பேச்சளவில் மட்டும் கூறுகின்றனர். எதையும் புரிந்து கொள்ளவில்லை. இது தலை கீழான மரம் என்றும் கூறுகின்றார்கள். கல்ப விருட்சம் என்றும் கூறுகின்றார்கள். ஆனால், அதனுடைய ஆயுளைக் கூற முடியாது. விருக்ஷ்த்தின் ஆயுள் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இருக்க முடியாது. இது சாத்தியம் இல்லாதது. தந்தை, எவ்வளவு அன்போடு புரியவைக்கின்றார்! இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே என்று அழைக்கின்றார். பள்ளிக்குச் செல்லுங்கள், இதைச் செய்யுங்கள் என்று லௌகீக தந்தை அன்போடு அமர்ந்து புரிய வைக்கின்றார் அல்லவா. இப்பொழுதோ, தமோபிரதானமாக உள்ளனர். எப்பொழுது ரஜோபிரதான நிலை இருந்திருக்குமோ, அப்பொழுது ஆசிரியர் கூட நல்ல கல்வியை கொடுத்திருப்பார். தாய் தந்தை கூட நல்ல படிப்பினைக் கொடுப்பார்கள். சுகத்திற்காகத் தான் குழந்தைகளைப் படைக்கின்றார்கள். ஒரு குழந்தை அவசியம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு ஆண் குழந்தை கிடைத்த பிறகு, ஒரு பெண் குழந்தையும் அவசியம் வேண்டும், இல்லையென்றால் இலட்சுமி வரமாட்டார்கள் என்று கூறுவார்கள். இப்பொழுதோ, என்ன நிலைமை ஆகிவிட்டது? குழந்தைகள் மூச்சுத்திணற வைத்துவிடுகிறார்கள். சத்யுகத்தில் இத்தகைய விசயம் இருக்காது. சொர்க்கம் என்றால் சாதாரணமா என்ன!



    இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சொர்க்க இராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். மனிதர்கள் எவ்வளவு கல் புத்தி உடையவர்கள் ஆகிவிட்டனர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தையையே அறியவில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரமாகத் தான் அறிந்திருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்வது என்பது மிகுந்த முயற்சிக்கான விசயம் ஆகும். அடிக்கடி மறந்துவிடுகின்றனர். இன்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பிறகு, நாளை, நாங்கள் குழந்தைகள் அல்ல என்று கூறக்கூடாது. நீங்கள் தீய குழந்தைகள் போன்றவர்கள் என்று கூறிவிடுவார். தீய குழந்தைகளுக்கு தந்தை ஒருபொழுதும் செல்வம் கொடுக்கமாட்டார். மனிதர்கள் பக்தியில் ஜெபம், தவம், தீர்த்த யாத்திரை செல்வது போன்ற என்னவெல்லாம் செய்கின்றனரோ, அதன் மூலம் தூய்மை இழந்து தான் வந்திருக்கின்றனர். பக்தி அதிகம் செய்கின்றனர், ஆனாலும் இத்தகைய நிலைமை ஏன்? பாரதத்தில் தான் பக்தி எல்லையில்லாமல் இருக்கிறது. யார் பழைமையான பக்தர்களோ, யார் ஆரம்பத்திலிருந்து சிவபாபாவின் பூஜை செய்திருக்கின்றனரோ, அவர்களே கீழே விழுந்து விழுந்து தூய்மையிழந்தவர்களாக ஆகிவிட்டனர் என்று தந்தை கூறுகின்றார். கல்ப மரத்தில் கூட பாருங்கள், முதலில் சூரியவம்சத்தினர், சந்திரவம்சத்தினர்; பிறகு பக்தி மார்க்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. பிறகு, பக்தியின் முடிவு வரும்பொழுது கருப்பாகிவிடுகின்றனர். உலகம் கருமையாக, இரும்பு யுகமாக ஆகிவிடுகிறது. இது நாடகத்தின் விளையாட்டு ஆகும். அரைக்கல்பம் ஞானம், அரைக்கல்பம் பக்தி அவசியம் நடைபெற வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் பெறுகிறீர்கள். காலைப்பொழுதின் சாயி ஞானம் கொடுக்கின்றார். உலகத்தில் அனேக விதமான சாயி உள்ளனர். நீங்கள் உலகத்தில் பெரிய பெரிய தேசங்களில் சுற்றி வாருங்கள், சோதனை செய்யுங்கள், அப்பொழுது, உங்களுக்கு ஒவ்வொரு இடத்திலிருந்தும் விதவிதமானவர்கள் கிடைப்பார்கள். இவர், சாட்சாத் சாயி பாபா என்று கூறுவார்கள், இன்னார் என்று கூறுவார்கள். சத்கதியை கொடுப்பதற்காகவே சத்குரு இருக்கின்றார். சத்குரு உங்களை சொர்க்கத்திற்கு எஜமானர் ஆக்குகின்றார். இதை யார் புரிய வைக்கின்றார்கள்? பாபா நீங்கள் சத்தியத்தை சொல்கின்றீர்கள் என்று ஆத்மா சொல்கின்றது. நாங்கள், உங்களுடைய ஸ்ரீமத்படி உங்களை நினைவு செய்கின்றோம். கல்ப கல்பமாக நாங்கள் உங்களை நினைவு செய்து உங்களிடமிருந்து ஆஸ்தியை அடைகின்றோம்;. அனேக முறை உங்களிடமிருந்து ஆஸ்தியை அடைந்திருக்கிறோம், இப்பொழுது மீண்டும் அடைந்து கொண்டு இருக்கின்றோம். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைகின்றோம். என்பதைக் கூட நினைவு செய்யுங்கள். பிறகு, 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு இழந்துவிடுவோம். பிறகு தந்தை நீங்கள் வருவீர்கள், நாங்கள் ஆஸ்தியைப் பெறுவோம். இது எவ்வளவு எளிய விசயம் ஆகும்! பழைய வீட்டில் இருந்துகொண்டு புதுவீடு கட்டப்படுகிறது. அதற்கு கால அவகாசம் ஆகிறது. பாபா புதிய வீட்டை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பழைய வீட்டில் இருந்து இப்பொழுது புத்தியின் தொடர்பை துண்டிக்க வேண்டும். சத்யுகம் புதிய வீடு ஆகும். அங்கே சென்று நாம் இராஜ்யம் செய்வோம். அது எல்லையற்ற புதிய வீடு, இப்பொழுது இந்த முழு உலகமும் எல்லையற்ற பழைய வீடு ஆகும். இதன் மீது உங்களுடைய வைராக்கியமும் எல்லையற்றதாக உள்ளது. பழைய கலியுக சீ, சீ சம்மந்தத்தில் இருந்து விடுபட்டு, இப்பொழுது நாம் சத்யுக மலர் போன்ற சம்பந்தத்திற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். எனவே, முயற்சி கூட நன்றாக செய்ய வேண்டும். பரமபிதா பரமாத்மா மீது ஆத்மாக்களுக்கு எவ்வளவு அன்பு இருந்திட வேண்டும். மற்ற அனைவரிடமிருந்தும் அன்பை விலக்கி ஒருவரிடம் அன்பு வைக்க வேண்டும். அவமானமடைவதிலிருந்து காப்பாற்றுங்கள் என்று அனைத்து திரௌபதிகளும் அழைக்கின்றனர். மிகவும் கொடுமைகள் செய்கின்றார்கள். இவ்வளவு பாவம் செய்தார்கள் என்றாலே பாவத்தின் பானை நிரம்பும் மற்றும் வினாசம் ஏற்படும் என்று தந்தை கூறுகின்றார். இது கூட நாடகத்தின் அனுசாரமாக நடைபெறுகிறது. இதில் மிருகம், பறவை போன்ற என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றிற்கும் நடிப்பு உள்ளது. இன்று என்ன நடைபெற்றதோ அது கல்பத்திற்கு முன்பும் நடைபெற்று இருந்தது. 100 வருடத்திற்குள் என்னவெல்லாம் நடந்தது என்று ஒரு செய்தித்தாளில் எழுதி இருக்கிறார்கள். இது எளிது ஆகும். அவர்களிடம் வரலாறு உள்ளது. முக்கியமான விசயங்களை எழுதுகிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை நீங்கள் கூட எழுத முடியும். செய்தித்தாள்களில் அதிக விசயங்களை படிக்கின்றார்கள் அல்லவா. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை புரிய வைக்கவும் வேண்டும். உலகத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றதோ, அவை அனைத்தும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது என்று சொல்லுங்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று வாயினால் கூறுகின்றார்கள். நீங்கள் நிரூபித்துக் கூறுவீர்கள். சொல்லுங்கள் – இப்பொழுது அதே பாரதம் ஏழ்மை ஆகிவிட்டது, இந்த யுத்தம் ஒன்றும் புதியது அல்ல. கல்ப கல்பமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், உங்களுடைய விசயத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆம், இந்த விசயம் சரியானதே என்று யாரோ ஒரு சிலர் புரிந்து கொள்வார்கள். மரணம் எதிரில் நிற்கிறது என்பதையும் புரிந்திருக்கிறார்கள். அத்தகைய சிலர் இருக்கிறார்கள், அவர்கள், தான் விரும்பாமலேயே இந்த அணுகுண்டு போன்றவற்றை தயார் செய்ய வைக்கிறார்கள். முற்றிலும் இருளில் இருக்கின்றார்கள். எதுவுமே தெரியவில்லை, என்ன வருகிறதோ அதை சொல்லி விடுகின்றனர். தன்னை மிகவும் புத்திசாலி என்று நினைக்கின்றனர். இவையனைத்தும் வினாசம் ஆகிவிடும் என்று அறிந்திருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ என்பதற்குப் பிறகு, வெற்றி முழக்கம் ஏற்பட வேண்டும் என்று பாபா கூறுகின்றார். பின்னர், பகவானைத் தான் நினைவு செய்வார்கள். யார் இஷ்ட தெய்வங்களாக இருப்பார்களோ, அவர்களைத் தான் நினைவு செய்வார்கள். பகவானை அறியவே இல்லை. பகவான் ஒரு புள்ளியாக இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு சிறிய புள்ளி! எவ்வளவு அதிசயமானது! அவர் இவ்வளவு பெரிய லிங்கமாக இருக்கின்றார் என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அவர் நட்சத்திரம் போல இருக்கின்றார் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆத்மா கூட நட்சத்திரம் போன்றது ஆகும். அதில், 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகி உள்ளது. இவை, எவ்வளவு சூட்சுமமான விசயங்களாகும்! ஒருவருக்கு அனைத்து விசயங்களும் உடனடியாகக் கூறப்படுவதில்லை. தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஆஸ்தி கிடைக்கும் என்பதை முதன்முதலில் புரிய வைக்க வேண்டும். எவ்வளவு நுணுக்கமான விசயங்கள் ஆகும்! இன்று உங்களுக்கு ஆழமான விசயங்களைக் கூறுகின்றேன் என்று கூறுகின்றார். எவ்வாறெலல்லாம் யுக்தியோடு புரியவைத்துக் கொண்டு இருக்கின்றார். பாருங்கள், பாபா இரவில் கேள்வி கேட்டார்- விஷ்ணுவின் நாபியிலிருந்து வெளிப்படுவதற்கு பிரம்மாவிற்கு எவ்வளவு காலம் ஆகிறது? பிறகு, பிரம்மாவிலிருந்து விஷ்ணு ஆவதற்கு எவ்வளவு காலம் ஆகிறது? நேற்று நாம் எவ்வளவு அஞ்ஞானிகளாக இருந்தோம்! இன்று எவ்வளவு ஞானம் நிறைந்தவர்களாக இருக்கின்றோம்! எவ்வளவு அற்புதமான விசயங்கள்! புத்திசாலிகளாகக் கூட வரிசைக்கிரமமாகவே ஆகின்றனர்.



    குழந்தைகளாகிய நீங்கள் ஒளிநாடா மூலமாகக் கூட பாபாவின் முரளியைக் கேட்கின்றீர்கள். டேப் மூலமாக நாம் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றனர். யாருக்கு ஆர்வம் இருக்குமோ, பணம் உடையவர்களாக இருப்பார்களோ, தயாள குணம் கொண்டவர்களாக இருப்பார்களோ அவர்கள் பிறருக்கும் நன்மை செய்வார்கள். இந்த சமயத்தில் என்ன தானம் செய்கின்றீர்களோ, அதற்கான புண்ணியம் உருவாகின்றது. மற்றபடி, கலியுகத்தில் என்ன தானம், புண்ணியம் செய்கின்றார்களோ, அதன் மூலம் பாவ ஆத்மாவாகவே ஆகின்றார்கள். நம்முடைய பாபா சாயி எவ்வளவு கள்ளம் கபடமற்றவர், பரந்த உள்ளம் உடையவர்! நீங்களும் கூட பரந்த உள்ளம் உடையவர் ஆக வேண்டும். ததீட்சி ரிஷி போல யக்ஞத்தில் எலும்புகளைக் கொடுக்க வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக்கொண்டு இருக்கும் நீங்கள் தான் உலகத்திலேயே இனிமையான, அதிர்ஷ்டசாலியான குழந்தைகள் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கியமான சாரம்:-

    1. ஒரு தந்தையிடம் உண்மையிலும் உண்மையான அன்பு வைக்க வேண்டும். கலியுக தூய்மையில்லாத சம்மந்தங்களிலிருந்து புத்தியின் தொடர்பை விலக்கிவிட வேண்டும். இந்த பழைய உலகத்தின் மீது எல்லையற்ற வைராக்கியம் வைக்க வேண்டும்.



    2. நாம் முழு உலகத்திலும் அதிர்ஷ்டசாலி குழந்தைகள் ஆவோம், நாமே தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைகின்றோம், இந்த போதையில் இருக்க வேண்டும். பரந்த உள்ளம் உடையவர் ஆக வேண்டும்.



    வரதானம்:

    பகுத்தறியும் சக்தி மூலம் கெட்ட தொடர்பு மற்றும் வீணான தொடர்பிலிருந்து தப்பிக்கக் கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.



    சில குழந்தைகள் தீய அதாவது கெட்ட தொடர்பிலிருந்து தப்பித்து விடுகின்றனர். ஆனால், வீணான தொடர்பின் பிரபாவத்தில் (தாக்கத்தில்) வந்துவிடுகின்றனர். ஏனென்றால், வீணான விசயங்கள் ரமணீகரமானதாகவும் (கüப்பூட்டுவதாகவும்) மற்றும் வெளித்தோற்றத்தில் கவர்ச்சிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. ஆகையினால், வீணானதைக் கேட்காதீர்கள், வீணானதைப் பேசாதீர்கள், வீணானதைச் செய்யாதீர்கள், வீணானதைப் பார்க்காதீர்கள், வீணானதை சிந்திக்காதீர்கள் என்பது பாப்தாதாவினுடைய அறிவுரை ஆகும். தந்தையைத் தவிர வேறு எந்தத் தொடர்பின் நிறமும் படிந்து விடாத அளவிற்கு சக்திசாலி ஆகுங்கள். பகுத்தறியும் சக்தி மூலம் கெட்ட மற்றும் வீணான தொடர்பை முதலிலேயே பகுத்தறிந்து மாற்றம் செய்து விடுங்கள். அப்பொழுதே, சக்திசாலி ஆத்மா என்று கூற முடியும்.



    சுலோகன்:

    சதா இலகுவான(இயல்பான) நிலையை அனுபவம் செய்ய வேண்டும் என்றால் பாலகன் மற்றும் எஜமானன் என்ற நிலையின் சமநிலை கொண்டிருங்கள்.


    ***OM SHANTI***