BK Murli 4 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 4 June 2017 Tamil

    04.06.2017  காலை முரளி   ஓம் சாந்தி   ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ்    06.04.1982          மதுபன்

    '' தாசன் மற்றும் அதிகாரி ஆத்மாக்களின் லட்சணம் ''

    இன்று பாப்தாதா இராஜரிஷிகளின் தர்பாரை பார்த்துக் கொண்டிருக்கிறார். இராஜா என்றால் அதிகாரி மற்றும் ரிஷி என்றால் அனைத்தையும் தியாகம் செய்தவர். தியாகி மற்றும் தபஸ்வி. எனவே பாப்தாதா அனைத்து பிராமண குழந்தைகளை அதிகாரி ஆத்மா மற்றும் கூடவே மகாதியாகி ஆத்மா, இந்த இரண்டையும் வாழ்க்கையில் பிரத்யக்ஷ சொரூபத்தில் எந்த அளவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதிகாரி மற்றும் தியாகி இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும். அதிகாரியும் முழுமையாக இருக்க வேண்டும், மேலும் தியாகியும் முழுமையாக இருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தே இருக்க முடியுமா? இதைத் தெரிந்திருக்கிறீர்களா? நீங்கள் அனுபவிகளாகவும் இருக்கிறீர்கள். தியாகம் இன்றி இராஜ்யத்தை நீங்கள் அடைய முடியுமா? சுயத்தின் அதிகாரம் அதாவது சுயராஜ்யத்தை அடைய முடியுமா? தியாகம் செய்தீர்கள் அதனால் தான் சுயராஜ்ய அதிகாரி ஆகியிருக்கிறீர்கள். இதுவோ அனுபவம் இருக்கிறது தான் இல்லையா. தியாகத்தின் சூத்திரத்தை முன்பும் கூறியிருக்கிறோம்.



    தியாகத்தின் முதல் அடி தேக உணர்வின் தியாகம். எப்பொழுது தேக உணர்வின் தியாகம் ஆகிவிடுகிறது என்றால், அடுத்து தேகத்தின் அனைத்து உறவுகளின் தியாகம். எப்பொழுது தேக உணர்வு விடுபட்டு விடுகிறது என்றால், என்னவாகி விடுகிறீர்கள்? ஆத்மா, உடலற்றவர் மற்றும் எஜமானன். தேகத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டு அதாவது ஜீவன்முக்த் இராஜ்ய அதிகாரி. எப்பொழுது இராஜ்ய அதிகாரி ஆகிவிட்டீர்களோ அப்போது அனைத்து விதமான அடிமைத்தனமும் முடிவடைந்து விடுகிறது. ஏனென்றால், தேகத்தின் தாசனிலிருந்து (வேலையாள்) தேகத்தின் எஜமானன் ஆகிவிட்டீர்கள். அடிமைத்தனம் விடுபட்டு விட்டது. தாசன் மற்றும் அதிகாரி இரண்டு நிலைகளும் சேர்ந்தே இருக்க முடியாது. அடிமைத்தனத்தின் அடையாளம் மனதால், முகத்தினால் சோர்வாக இருப்பது. சோர்வடைவது அடிமைத்தனத்தின் அடையாளம் மற்றும் அதிகாரி என்றால், சுயராஜ்ய அதிகாரியின் அடையாளம். அதாவது மனம் மற்றும் உடலால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது. தாசன் எப்பொழுதும் நிலை குலைந்து இருப்பார். இராஜ்ஜிய அதிகாரி எப்பொழுதும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். தாசன் சின்னஞ்சிறு விஷயத்தில் மற்றும் ஒரு நொடியில் குழப்பம் அடைந்து விடுவார். மேலும் அதிகாரி எப்பொழுதும் தன்னை சௌகரியமாக இருப்பதாக அனுபவம் செய்வார். இந்த அடையாளங் களினால் நான் யார் என்று தன்னைத் தானே சோதனை செய்யுங்கள். நான் தாசனா அல்லது அதிகாரியா? எந்தவொரு சூழ்நிலையும், எந்தவொரு நபரும், எந்தவொரு சாதனமும், வாயுமண்டலமும் மரியாதையை மீறி அதாவது ஞானத்திலிருந்து விலகி தொந்தரவு செய்வதில்லையே! அப்படி தாசன் என்றால் தொந்தரவு அடைபவர் மற்றும் அதிகாரி என்றால் எப்பொழுதும் மாஸ்டர் சர்வ சக்திவான், விக்ன விநாஷக் நிலையின் மதிப்பு, மரியாதையில் நிலைத்திருப்பார். சூழ்நிலை, நபர் மற்றும் சாதனங்கள் மரியாதையாக இருந்து மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாசன் ஆத்மா எப்பொழுதும் தன்னை பரீட்சையின் அறையில் இருப்பதாக அனுபவம் செய்வார். அதிகாரி ஆத்மா படகோட்டி ஆகி, படகை மிகவும் மகிழ்ச்சியோடு சோதனையின் அலைகளோடு விளையாடிக் கொண்டே கடந்து செல்வார்.



    தாச ஆத்மாக்களின் கர்ம லீலைகளைப் பார்த்து பாப்தாதா இரக்கத்தின் கூடவே புன்சிரிப்பு செய்து கொண்டும் இருக்கிறார். இந்த உலகத்தில் கூட சிரிப்பூட்டும் ஒரு கதையை கூறுகிறார்கள் இல்லையா? தாச ஆத்மாக்கள் என்ன செய்வார்கள். கதை நினைவிருக்கிறதா? கூறியிருந்தோம் இல்லையா? எவருகிறது, எலியை விரட்டியாயிற்று என்றால், பூனை வந்து விடுகிறது, பூனையை விரட்டிய பின் நாய் வந்து விடுகிறது. ஒன்றை அகற்றினால் இன்னொன்று வந்து விடுகிறது, இன்னொன்றை அகற்றினால் மூன்றாவது வந்து விடுகிறது. இதே கர்ம லீலையில் பிஸியாக இருக்கிறார்கள். ஏனென்றால் தாச ஆத்மாக்கள் இல்லையா? சில நேரம் கண் என்ற எலி ஏமாற்றி விடுகிறது, சில நேரம் காது என்ற பூனை ஏமாற்றி விடுகிறது. சில நேரம் தீய சம்ஸ்காரம் என்ற சிங்கம் தாக்கி விடுகிறது. மேலும் பாவம் அந்த தாச ஆத்மா அவர்களை அகற்றி அகற்றி உதாஸ் அதாவது சோர்வடைந்து விடுகிறார். எனவே பாப்தாதாவிற்கு இரக்கமும் வருகிறது. கூடவே புன்சிரிப்பும் வருகிறது. ஆசனத்தை ஏன் விடவே செய்கிறீர்கள். தானாக வழுக்கி விடுகிறதா என்ன? நினைவு என்ற காந்தத்தினால் தன்னை அந்த ஆசனத்தில் உறுதியாக அமர வைத்து விட்டீர்கள் என்றால் வழுக்காது. வேறு என்ன செய்கிறார்கள்? பாப்தாதாவின் எதிரில் வேண்டுதல்களின் நீள அகல கோப்புகளை வைத்து விடுகிறார்கள். சிலர் ஒரு மாதமாக பிரச்சனையில் இருக்கிறேன் என்று வேண்டுதல் போடுகிறார்கள், சிலர் மூன்று மாதங்களாக மேலே கீழே போய் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்கள். சிலர் ஆறு மாதங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன் ஆனால் அப்படியே இருக்கிறேன், எவ்வித மாற்றமும் இல்லை. இத்தனை வேண்டுதல்கள் ஒன்றாகச் சேர்த்து கோப்பு ஆகிவிடுகிறது. ஆனால் எவ்வளவு பெரிய கோப்போ அந்த அளவு அபராதம் கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். எனவே வேண்டுதல்களை அகற்றுவதற்கான சுலபமான சாதனம் எப்பொழுதும் தந்தையின் விருப்பத்தின்படி நடந்து கொள்ளுங்கள். 'என்னுடைய விருப்பம் இது' என்றால், அது உங்களது மனவிருப்பம் ஆகும். அது வேண்டுதல்களின் கோப்பை உருவாக்கி விடுகிறது. எது தந்தையின் விருப்பமோ அது என்னுடைய விருப்பம். தந்தையின் விருப்பம் என்ன? ஒவ்வொரு ஆத்மாவும் எப்பொழுதும் சுப சிந்தனை செய்பவராக, அனைவருக்காகவும் எவ்வித மாற்றமும் இல்லை. எப்பொழுதும் சுப சிந்தனையில் இருக்கக்கூடிய தனக்கு நன்மை செய்பவர் மற்றும் உலகிற்கு நன்மை செய்பவர் ஆக வேண்டும். இந்த விருப்பத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே எந்த கடினமும் இன்றி நடந்து கொண்டே இருங்கள். எப்படி கண்ணை மூடிக் கொண்டு போய் கொண்டே இருங்கள் என்று கூறப்படுகிறது இல்லையா? அந்த மாதிரி இல்லையே? இந்த மாதிரி ஆகாதே என்ற இந்தக் கண்ணை திறக்காதீர்கள். இந்த வீணான சிந்தனையின் கண்ணை மூடி தந்தையின் விருப்பம் அதாவது தந்தையின் அடிக்கு பின்னால் அடி வைத்து சென்று கொண்டே இருங்கள். பாதத்திற்கு மேல் பாதம் வைத்து செல்வது கடினமாக இருக்குமா அல்லது சுலபமாக இருக்குமா? எனவே அந்த மாதிரி எப்பொழுதும் தந்தையைப் பின்பற்றி நடங்கள். சகோதரியைப் பின்பற்றுவது, சகோதரனைப் பின்பற்றுவது என்ற இந்த புதிய காலடியை எடுத்து வைக்காதீர்கள். இதன் காரணமாக அடைய வேண்டிய இலக்கிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர் ஆகிவிடுவீர்கள். மரியாதை கொடுங்கள், ஆனால் பின்பற்றி நடக்காதீர்கள். விசேஷம் மற்றும் குணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்களுடைய காலடி தந்தையின் காலடி மேல் இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் தனக்கு சுயநலமான விஷயங்களை எடுக்காதீர்கள். சுயநலமான விஷயங்களும் மிக மன மகிழச்சிக்குரியதாக இருக்கும். அந்த வாக்கியங்களைப் பின்பு கூறுவோம், ஏனென்றால் பாப்தாதாவிடமோ அனைத்து சேவை நிலையங்களின் செய்தி வருகிறது. முழு உலகத்தின் செய்தி வருகிறது. எனவே தாச ஆத்மாவாக ஆகாதீர்கள். இது மிகச் சிறிய கர்மேந்திரியங்கள். கண், காது எவ்வளவு சிறியவை ஆனால் இவைகள் எவ்வளவு பெரிய வலையை விரித்து விடுகின்றன. எப்படி சின்ன சிலந்தியை பார்த்திருக்கிறீர்கள் இல்லையா. அது எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஆனால் அதனுடைய வலை எவ்வளவு பெரியதாக இருக்கிறது. அப்படி ஒவ்வொரு கர்மேந்திரியத்தின் வலையும் அவ்வளவு பெரியது. அந்த மாதிரி வலையில் மாட்ட வைத்து விடும். நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது கூட தெரிய வராது. இது அந்த மாதிரியான மந்திர வலை, அது ஈஸ்வரிய உணர்விலிருந்து, ஈஸ்வரிய மரியாதைகளிலிருந்து மூர்ச்சையானவர் ஆக்கிவிடுகிறது. வலையிலிருந்து விடுபட்ட ஆத்மாக்கள் எவ்வளவு தான் அந்த தாச ஆத்மாக்களுக்கு உணர வைத்தாலும், மூர்ச்சையானவருக்கு என்ன உணர்வு ஏற்படும். ஸ்தூல ரூபத்தில் கூட மூர்ச்சையானவரை எவ்வளவு தான் அசைத்தாலும், எவ்வளவு தான் புரிய வைத்தாலும் பெரிய பெரிய மைக்கை காதுகளில் வைத்தாலும். அவரால் கேட்க முடியுமா? அதே மாதிரி இந்த வலையும் உணர்விழக்க வைத்து விடுகிறது. பிறகு என்ன கூறுகிறார்கள். உணர்விழந்த நிலையில் சிலர் அதிகமாக பேசவும் செய்கிறார்கள். ஆனால் அந்த பேச்சு அர்த்தமற்றதாக இருக்கும். அந்த மாதிரி ஆன்மீக உணர்விழந்த நிலையில் தன்னை தெளிவுப்படுத்துவதற்காக பல விஷயங்கள் கூறுவார்கள். ஆனால் அவை அர்த்தமற்றதாக இருக்கும். இரண்டு மாதத்தின், ஆறு மாதத்தின் பழைய விஷயம். இங்கே உள்ள அங்கே உள்ள விஷயத்தைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரியானது இந்த ஆன்மீக உணர்விழந்த நிலை. விஷயமோ மிகச் சிறியதாக இருக்கும் ஆனால் மூர்ச்சையான நிலையும் மிகப் பெரியதாக இருக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கும் நீண்ட காலம் ஆகும் என்றால், வலையின் ஒவ்வொரு கம்பியையும் துண்டிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். வலையை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய கண்காட்சி, படங்களில் இருக்கிறது. வலையை அழித்து விடுங்கள். சிலந்தியும் தன்னுடைய வலையை முழுமையாக தானே சாப்பிட்டு விடும். அந்த மாதிரி விஸ்தாரத்தில் செல்லாமல். விஸ்தாரத்திற்குப் புள்ளி வைத்து புள்ளியில் உள்ளடக்கி விடுங்கள். புள்ளி ஆகிவிடுங்கள், புள்ளி இட்டு விடுங்கள், புள்ளியில் நிரம்பி விடுங்கள். அப்பொழுது முழு விஸ்தாரமும், முழு வலையும் ஒரு நொடியில் உள்ளடங்கி விடும். மேலும் நேரம் மிச்சமாகி விடும். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புள்ளி ஆகி, புள்ளியின் அன்பில் ஐக்கியமாகி விடுவீர்கள் எனவே வலையில் மாட்டிக் கொண்டு உணர்விழந்த நிலையில் இருப்பது நல்லதா? அல்லது புள்ளி ஆகி புள்ளியின் அன்பில் ஐக்கியமாகியிருப்பது நல்லதா? ஆக, தந்தையின் விருப்பம் என்னவானது? அன்பில் ஐக்கியமாகி விடுங்கள்.



    எப்பொழுது மரத்தின் பரிவர்த்தனை கண்டிப்பாக ஆக வேண்டும் என்றிருக்கிறது என்றால், மரத்தின் இறுதியில் என்ன இருந்து விடுகிறது. தொடக்கமும் விதை, முடிவும் விதை தான் இருந்து விடுகிறது. இப்பொழுது இந்த பழைய மரத்தின் பரிவாரத்தனையின் நேரத்தில் மரத்தின் மேலே மாஸ்டர் விதை ரூப நிலையில் நிலைத்து விடுங்கள். 'புள்ளி'. புள்ளி தான் விதை ஆகும். முழு ஞானம், குணங்கள், சக்திகள் அனைத்தின் கடல் புள்ளியில் நிரம்பிவிடுகிறது. இதைத் தான் தந்தைக்குச் சமமான நிலை என்று கூறுவது. தந்தை கடலாக இருந்த போதும் புள்ளியாக இருக்கிறார். அந்த மாதிரி மாஸ்டர் விதை ரூப நிலை எவ்வளவு பிரியமானது. இதே நிலையில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா?



    பாருங்கள். இரண்டு மண்டலங்களின் விசேஷமும் இது தான். கர்நாடகம் என்றால் நாடகத்தை முடித்து விட்டார்கள், இப்பொழுது அன்பில் ஐக்கியமாகி விடுங்கள். மேலும் உ.பி-யிலும் நதிகள் அதிகம் இருக்கும். நதிகள் எப்பொழுதும் கடலில் சென்று கலந்து விடும். அப்படி நீங்கள் கடலில் கலந்து விடுங்கள் அதாவது அன்பில் ஐக்கியமாகி விடுங்கள். இருவரிடமும் விசேஷம் இருக்கிறது இல்லையா? எனவே மதிப்புடன் அன்பில் ஐக்கியமான நிலையில் எப்பொழுதும் அமர்ந்திருங்கள். மேலே கீழே செல்லாதீர்கள். வருவது, போவதின் அலைவதை இப்பொழுது முடித்து விட்டீர்கள் இல்லையா? இப்பொழுதோ சௌகரியமாக மதிப்புடன் அமர்ந்து விடுங்கள். நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் அனைத்து அதிகாரம் நிறைந்த மற்றும் அனைத்தையும் தியாகம் செய்த, எப்பொழுதும் மூர்ச்சை இழந்த நிலையின் வலையிலிருந்து விடுபட்ட, வருவது போவதிலிருந்து விடுபட்ட, மாஸ்டர் விதை ரூப நிலையில் அன்பில் ஐக்கியமாகி இருக்கக்கூடிய, அந்த மாதிரி இராஜரிஷி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    டீச்சர்களுடன் சந்திப்பு:-

    நீங்கள் அனைவரும் பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்கள் தான் இல்லையா? எப்பொழுதும் தன்னை சேவைக்கு பொறுப்பான ஆத்மா நான் என்று புரிந்து நடந்து கொள்வீர்களா? பொறுப்பிலிருக்கும் ஆத்மா என்று புரிந்து கொள்வதினால் எப்பொழுதுமே இரண்டு விசேஷங்கள் வெளிப்படையான ரூபத்தில் தென்படும். 1) எப்பொழுதும் பணிவாக இருப்பதின் மூலம் உருவாக்கும் காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள், 2) எப்பொழுதும் திருப்தி என்ற பழத்தை அருந்திக் கொண்டே மற்றவர்களுக்கும் அருந்தக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி நான் ஒரு பொறுப்பாளன் (கருவி) என்று நினைப்பதினால் விலகியிருப்பவராகவும், தந்தையின் அன்பிற்குரியவராகவும் அனுபவம் செய்வீர்கள். நான் செய்தேன் என்ற இதையும் ஒருபொழுதும் வர்ணனை செய்ய மாட்டார்கள். நான் என்ற வார்த்தை முடிவடைந்து விடும். 'நான்' என்பதற்குப் பதிலாக பாபா, பாபா என்றிருக்கும். அப்படி பாபா - பாபா என்று கூறுவதினால் அனைவரின் புத்தி தந்தையின் பக்கம் சென்று விடும். யார் பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறாரோ அவர் பக்கம் புத்தி ஈடுபடுவதினால் வரக்கூடிய ஆத்மாக்களுக்கு விசேஷமாக சக்தியின் அனுபவம் ஆகும். ஏனென்றால், சர்வ சக்திவானோடு யோகா (தொடர்பு) ஏற்பட்டு விடும். சக்தி சொரூபத்தின் அனுபவம் செய்வார்கள். இல்லை என்றால், பலஹீனமானவராகவே இருந்து விடுவார்கள். எனவே பொறுப்பாளர் என்று புரிந்து நடந்து கொள்வது தான் சேவாதாரியின் விசேஷம். பாருங்கள், அனைவரையும் விட மிகப்பெரிய சேவாதாரி தந்தை! ஆனால் அவருடைய விசேஷமே இது தான். தன்னை ஒரு கருவி என்று புரிந்து கொண்டார். எஜமானனாக இருந்த போதிலும் கருவி என்று புரிந்து கொண்டார். கருவி என்று நினைக்கும் காரணத்தினால் அனைவருக்கும் பிரியமானவர் ஆகிவிட்டார். எனவே நான் கருவி, விலகியிருப்பவன், அன்பானவன் என்ற இதை எப்பொழுதும் நினைவில் வைத்து நடந்து கொள்ளுங்கள். சேவையோ அனைவரும் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த லாட்டரியோ கிடைத்து விட்டது. ஆனால் இந்த கிடைத்திருக்கும் லாட்டரியை எப்பொழுதும் அதிகரிப்பதா அல்லது அந்த அளவு மட்டும் வைத்துக் கொள்வதா என்பது உங்கள் கையில் இருக்கிறது. தந்தையோ கொடுத்து விட்டார். அதிகரிப்பது உங்களுடைய வேலை. பாக்கியத்தை அனைவருக்கும் ஒரே மாதிரி கொடுத்திருக்கிறார். சிலர் பாதுகாத்து அதை அதிகரிக்கிறார்கள், சிலர் செய்வதில்லை. இதன் காரணமாக வரிசை எண் உருவாகிவிடுகிறது. எனவே எப்பொழுதும் தன்னை முன்னேற்றம் அடையச் செய்து கொண்டே மற்றவர்களையும் முன்னேற்றிக் கொண்டே இருங்கள். மற்றவர்களை முன்னேற்றுவது தான், தான் முன்னேறுவது. எப்படி தந்தையைப் பாருங்கள், தந்தை, தாயை முன்னுக்கு வைத்தார். இருந்தும் நம்பர் ஒன் நாராயணன் ஆனார். அவர் இரண்டாம் நம்பர் லட்சுமி ஆனார். ஆனால் முன்னேற வைத்ததினால் இவர் முன்னேறினார். முன்னேற்றுவது என்றால் பின்னடைவது அல்ல. பிறரை முன்னேற்றுவது என்றால் (தான்) முன்னேறுவது.



    அனைத்து சேவாதாரிகளும் மிக நன்றாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உழைப்பைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். ஆனால் கருவி என்று புரிந்து சேவை செய்தீர்கள் என்றால் சேவையின் பலனாக ஒன்றுக்கு நான்கு மடங்கு ஆகிவிடும். தந்தைக்குச் சமமான ஆசனம் கிடைத்திருக்கிறது, இப்பொழுது இதே ஆசனத்தில் அமர்ந்து சேவையை வளரச் செய்யுங்கள். நல்லது.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு

    1) விசேஷ ஆத்மா ஆவதற்காக அனைவரின் விசேஷங்களை பாருங்கள் -பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளின் விசேஷங்களின் மகிமை பாடுகிறார். எப்படி தந்தை அனைத்து குழந்தைகளின் விசேஷங்களைப் பார்க்கிறார். அதே போல் நீங்கள் விசேஷ ஆத்மாக்களும் அனைவரின் விசேஷங்களைப் பார்த்துக் கொண்டே தன்னை விசேஷ ஆத்மா ஆக்கிக் கொண்டே இருங்கள். விசேஷ ஆத்மாக்களின் காரியம் விசேஷத்தை பார்ப்பது மற்றும் விசேஷம் ஆவது. எப்பொழுதாவது எந்த ஆத்மாவின் தொடர்பில் வருகிறீர்கள் என்றால், அவரின் விசேஷத்தின் மேல் தான் பார்வை செல்ல வேண்டும். எப்படி தேனீக்களின் பார்வை மலர்கள் மேல் இருக்கிறது. அதே போல் உங்களுடைய பார்வை பிறரது விசேஷங்களின் மேல் இருக்கட்டும். ஒவ்வொரு பிராமண ஆத்மாவைப் பார்த்து எப்பொழுதும் ஆஹா! சிரேஷ்ட ஆத்மா ஆஹா! என்ற மகிமை பாடிக் கொண்டே இருங்கள். ஒருவேளை மற்றவர்களின் பலஹீனத்தை பார்த்தீர்கள் என்றால், நீங்களும் பலஹீனம் ஆகிவிடுவீர்கள். எனவே உங்களுடைய பார்வை ஒருபொழுதும் பலஹீனம் என்ற கற்களின் மேல் செல்லக்கூடாது. நீங்கள் புனித அன்னப்பறவைகள், எப்பொழுதும் குணம் என்ற முத்தையே பொறுக்கிக் கொண்டிருங்கள்.



    2) நேரம் மற்றும் தன்னுடைய மகத்துவத்தை நினைவில் வைத்தீர்கள் என்றால் மகான் ஆகிவிடுவீர்கள் சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் முழுக் கல்பத்திற்கான பிராப்தியை உருவாக்குவதற்கான ஆதாரம், அந்த மாதிரி நேரத்தின் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறீர்களா? எப்படி நேரம் மகானாக இருக்கிறது அதே போல் நீங்களும் மகான் ஆவீர்கள். ஏனென்றால், பாப்தாதா மூலமாக ஒவ்வொரு குழந்தைக்கும் மகான் ஆத்மா ஆவதற்கான ஆஸ்தி கிடைத்திருக்கிறது. எனவே தன்னுடைய மகத்துவத்தையும் தெரிந்து ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் மகானாக செய்யுங்கள். எப்பொழுதும் நான் மகான் தந்தையின் குழந்தை, மகான் ஆவேன் என்ற இந்த நினைவிலேயே இருங்கள். இதன் மூலம் தான் எந்த அளவு சிரேஷ்ட பாக்கியத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த அளவு உருவாக்க முடியும். சங்கமயுகத்திற்கு இது தான் வரதானம். தந்தை மூலமாக கிடைத்திருக்கும் பொக்கிஷங்களுடன் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருங்கள். எப்பொழுதும் வாயிலிருந்து இரத்தினம் வெளியாகட்டும், மனதில் ஞான சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கட்டும். அந்த மாதிரி தாரணை சொரூபமானவராக இருங்கள். மகான் நேரமாகும், நான் மகான் ஆத்மா என்ற இதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். நல்லது - ஓம் சாந்தி.



    வரதானம் :

    அனைத்து பிராப்திகளின் குஷியில் பறந்து கொண்டே லட்சியத்தை சென்றடையக்கூடிய நினைவு சொரூபமானவர் ஆகுக.



    பிராமண வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்து இது வரையிலும் என்னென்ன பிராப்திகள் ஆகியிருக்கின்றனவோ அவற்றின் பட்டியலை நினைவில் கொண்டு வந்தீர்கள் என்றால் சார ரூபத்தில் பிராப்தி இல்லாத ஒரு பொருள் கூட பிராமண வாழ்க்கையில் இல்லை. மேலும் இவை அனைத்தும் அழியாத பிராப்திகள் என்று தான் கூறுவீர்கள். இந்த பிராப்திகளின் நினைவு வெளிப்படும் ரூபத்தில் இருந்தது என்றால் அதாவது அதன் நினைவு சொரூபம் ஆனீர்கள் என்றால், குஷியில் பறந்து கொண்டே லட்சியம் வரை சுலபமாகவே சென்றடைந்து விடுவீர்கள். பிராப்தியின் குஷி ஒருபொழுதும் கீழே குழப்பத்தில் கொண்டு வராது. ஏனென்றால் நிரம்பிய நிலை ஆடாததாக ஆக்கும்.



    சுலோகன் :

    பிந்து சொரூபத்தின் நினைவில் இருப்பதற்காக ஞானம், குணம் மற்றும் தாரணையில் கடல் ஆகுங்கள்.



    ***OM SHANTI***