BK Murli 10 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 10 July 2017 Tamil

    10.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே - நீங்கள் கர்மத்தை சன்னியாசம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் விகர்மங்களை சன்னியாசம் செய்ய வேண்டும். எந்த விகர்மமும் அதாவது பாவ கர்மமும் செய்ய கூடாது.



    கேள்வி:

    குழந்தைகளாகிய நீங்கள் எந்த பயிற்சியினால் மயான அமைதியை அனுபவம் செய்யலாம்?



    பதில்:

    அசரீரியாவதற்காக பயிற்சி செய்யுங்கள். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் நினைவிற்கு வரக் கூடாது. சரீரத்திலிருந்து இறந்தது போன்றதாகும். இந்த பயிற்சியினால் ஆத்மா மயான அமைதியை அனுபவம் செய்யலாம்.



    கேள்வி:

    அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட எளிய வழி என்ன?



    பதில்:

    டிராமாவை நன்கு புத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நடிகரையும் சாட்சியாக இருந்து பார்த்தால் துக்கத்திலிருந்து விடுபடலாம். ஒரு போதும் எந்த விஷயத்திலும் ஏமாற்றம் வராது.



    பாட்டு:

    ஓம் நமசிவயா...........



    ஓம் சாந்தி.

    இந்த பாடலில் வரக்கூடிய சிவாய நமஹ என்ற வார்த்தை பக்தியினுடையதாகும். சிவபாபா உங்களை நாங்கள் வணங்குகிறோம். ஆனால் பக்தர்கள் சிவபாபா யார் என அறியவில்லை. ஒரு சிவனுடைய பக்தர் கூட சிவனைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. சிவ பாபா முற்றிலும் சாதாரண வார்த்தையாகும். எனவே சிவாய நமஹ என்று கூறுதல் கூட பக்தியின் அம்சம் ஆகும். இப்போது நீங்கள் என்ன கூற வேண்டும். நீங்கள் ஒரு போதும் சிவாய நமஹ என்று கூறுங்கள் என கூற மாட்டீர்கள். உண்மையில் கூற வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு அடிக்கடி தந்தையை நினையுங்கள் என கூறப்படுவதில்லை. சிறிய குழந்தைகளுக்குத் தான் அது கூறப்படுகிறது, அல்லது அப்பா, ஆஸ்தி பற்றி படிக்க வைக்கப்படுகிறது. உண்மையில் இதில் கூறுவதற்கு எதுவும் இல்லை. மன்மனாபவ என்று கூட கூற வேண்டியதில்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். உங்களுக்கு ஒரு போதும் சமஸ்கிருதத்தில் புரிய வைக்கப்படவில்லை. நாம் தந்தையைத் தான் நினைக்க வேண்டும் என குழந்தைகள் அறிகிறீர்கள். தந்தை அறிமுகத்தைக் கொடுத்துள்ளார் என ஆத்மா சுயம் அறிகிறது. குழந்தைகளே, இப்போது என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மம் வினாசம் ஆகிவிடும். எனவே நினைப்பது குழந்தைகளுடைய கடமையாகும். இங்கே வந்து அமரும் போது தந்தையின் நினைவில் அசரீரியாகி நினையுங்கள். ஞானம் கூட புத்தியில் இருக்கட்டும். நாம் ஆத்மா தந்தையை நினைக்கின்றோம். இந்த உடல் ஒரு கருவியாகும். இதற்கு என்ன மதிப்பு இருக்கிறது. வாத்தியம் எவ்வளவு முதன்மை யானதாக இருந்தாலும் வாசிக்கக் கூடிய மனிதர்கள் சரியாக இல்லை என்றால் வாத்தியம் எதற்கு பயன்படுகிறது. இதே போன்று முக்கியமானது ஆத்மா. நமக்கு காரியங்கள் செய்வதற்காக இந்த உடல் கிடைத்திருக்கிறது என ஆத்மா அறிகிறது. நாம் கர்ம யோகி, கர்ம சன்னியாசியாக இருக்க முடியாது. அது சட்டத்திற்குப் புறம்பானது. விகர்மங்களை சன்னியாசம் செய்யப்படுகிறது. அதாவது நம் மூலமாக எந்த விகர்மமும், பாவமும் நடக்கக் கூடாது. அனைத்தையும் விட பெரியது காம விகாரம் ஆகும். சன்னியாச தர்மத்தினர் அதிகமாக விகாரத்தை பாவம் அதாவது எதிரி என ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகவே நாடகப்படி அவர்களுடைய தர்மமே காட்டிற்குப் போவதாகும். வீடு வாசலை சன்னியாசம் செய்தல் கூட நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இதை செய்து தான் ஆக வேண்டும். அந்த தர்மமே தனி அவர்களை யாரும் பாரதத்தின் ஆதி சனாதன தர்மம் என கூற மாட்டார்கள். தேவி தேவதா தர்மம் தான் ஆதி சனாதன தர்மம் ஆகும். மற்றவை கணக்கற்ற தர்மமாகும். சன்னியாசி களுடையது கூட ஒரு தர்மமே. அதை மனிதன் தான் ஸ்தாபனை செய்கின்றனர். பகவான் சன்னியாசம் செய்யவில்லை. எந்த ஒரு தர்மத்தையும் ஒருவர் பின் ஒருவராக மனிதர்கள் தான் ஸ்தாபனை செய்கின்றனர் என பாபா புரிய வைக்கிறார். பரம் பிதா பரமாத்மா கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார் என்றோ சன்னியாசிகளின் துறவற தர்மத்தை ஸ்தாபனை செய்தார் என்றோ நீங்கள் கூற முடியாது. பரம் பிதா பரமாத்மா பிராமணன், தேவதா, சத்திரிய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டிருக்கிறது. நாடகத்தின்படி ஒவ்வொருவரும் அவரவர் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். பரமாத்மா இந்த இடத்திற்கு செல்லுங்கள், சென்று தர்மத்தை ஸ்தாபனை செய்யுங்கள் என்றெல்லாம் யாருக்கும் சொல்வதில்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். ஒவ்வொருவரும் அவரவரவர் நேரத்திற்கு வந்து தனது தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். ஏனென்றால் பவித்ர ஆத்மா. பவித்ர ஆத்மா இல்லாமல் யாரும் ஒரு போதும் தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. சட்டம் இல்லை. ஆத்மா வந்து தர்மத்தை ஸ்தாபனை செய்கிறது. மேலும் பவித்ரமாக இருக்கிறது. மற்ற அனைத்து தர்மங்களையும் மனிதர்கள் ஸ்தாபனை செய்கிறார்கள். இந்த ஒரேயொரு தேவி தேவதா தர்மத்தை தந்தை ஸ்தாபனை செய்கிறார். ஏனென்றால் ஏ, பதீத பாவனா வந்து புது உலகத்தை உருவாக்குங்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். பாரதம் பாவனமாக இருந்தது. இப்போது பதீதமாக இருக்கிறது. ஆகவே அழைக்கிறார்கள் என புத்தி கூறுகிறது. பாவன உலகத்தில் யாரும் அழைப்பதில்லை. பாவன உலகம் எப்போது இருந்தது என யாருக்கும் தெரியாது அழைத்துக் கொண்டே இருப்பார்கள். கடைசி வரை அழைத்துக் கொண்டே இருப்பார்கள். நினைவு செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இது உங்களுடைய படிப்பாகும். இது பரம் பிதா பரமாத்மாவின் பாட சாலையாகும். இதைக் கூட பலகையில் எழுதி மாட்டுங்கள். கீதையின் பகவான் யார்? ஒரு புறம் தந்தையின் மகிமை எழுதுங்கள். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறார். சைத்தன்யமாக இருக்கிறார். ஞானக் கடலாக இருக்கிறார். நீங்கள் கிருஷ்ணரை தூய்மையின் கடல் என்று கூற முடியாது. ஏனென்றால் அவர் பிறப்பு இறப்பில் வருகின்றார். ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமையைக் கூட சர்வ குண சம்பன்னர்...... .என எழுத வேண்டும். இந்த விஷயங்களை மனிதர்கள் ஒரேயடியாக மறந்து விட்டார்கள். இராவணன் மறக்க வைத்து விட்டான். கீதையின் பகவான் தான் சிருஷ்டியைப் படைக்கக் கூடியவர். அவரை மறந்து விட்டார்கள். முதல் நம்பர் பெரிய தவறு இதுவே. கீதையின் பகவான் தெளிவாகி விட்டார் என்றால் சர்வ வியாபி என்ற விஷயம் நீங்கி விடும். நான் சர்வ வியாபி என்று பகவான் ஒரு போதும் கூற முடியாது. நான் பதீத பாவனன், நான் எப்படி சர்வ வியாபி ஆக முடியும் என தந்தை கூறுகின்றார். ஒவ்வொருவரிடமும் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது. இங்கே அமரும் போது ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைக்காதீர்கள் என குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யாருக்கு இந்த பயிற்சி இல்லையோ முழு நாளும் சேவையில் இருக்கிறார்களோ அவர்கள் நிரந்தரமாக சிவ தந்தையை நினைப்பது மிக கடினமாகும். நினைவு செய்யாததால் அந்த மாயன அமைதியை அடைய முடியாது. நீங்கள் அசரீரி ஆகி போகின்றீர்கள் என்றால் சரீரத்தில் இருந்து இறந்து போகிறீர்கள். சரீரம் இறக்கிறது. ஆத்மா இறக்காது. நான் சரீரத்தை விடுகிறேன் என ஆத்மா கூறுகிறது. நான் இறக்கிறேன் என்று கூறுவது தவறாகும். ஆத்மா சரீரத்தை விட்டு விட்டது என்பது சரியான வார்த்தையாகும். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுத்து நடிக்கிறது. அனைவரும் நடிகர்கள் அல்லவா? ஆத்மா அதன் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது. நாடகப்படி அவர்கள் இன்னொரு உடலை எடுத்து பிறகு நடிக்க வேண்டும். இதில் நாம் ஏன் துக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தில் நாம் நடிகர்கள். இந்த விஷயம் மறந்து போகிறது. நாடகத்தைப் புரிந்துக் கொண்டால் ஒரு போதும் துக்கம் ஏற்படாது. நீங்கள் நாடகத்தின் முதல், இடை, கடையைப் புரிந்துக் கொண்டு இந்த சரீரத்தை விட்டுச் சென்று இன்னொரு சரீரம் எடுக்கிறது என கூறுகிறீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி, உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது என்றாலும் கூட பரிபக்குவ நிலையை அடையும் வரை ஏதாவது மோதல் ஏற்படுகிறது. இராவண ராஜ்ஜியத்தில் செல்லரித்துப் போயிருக்கிறது அல்லவா? எனவே உடனே மோதல் வருகிறது. சத்யுகத்தில் ஒரு போதும் மோதல் ஏற்படாது. அங்கே அமர்ந்த படியே சரீரத்தை விடுகிறார்கள் இப்போது புதிய உடலை எடுக்க வேண்டும். பாம்பைப் போன்று.......... இங்கேயோ நிறைய அழ ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கெங்கிருந்தோ வந்து துக்கம் விசாரிப்பார்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் இல்லை. நீங்கள் சங்கம யுக்ததில் தான் ராமராஜ்ஜியம் இராவண ராஜ்ஜியத்தின் பழக்க வழக்கங்களை அறிகிறீர்கள். இராம ராஜ்ஜியத்தில் நீங்கள் இராவண ராஜ்ஜியத்தை பற்றி அறிவதில்லை. இராவண ராஜ்ஜியத்தில் இராம ராஜ்ஜியத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. சங்கமத்தில் நீங்கள் இரண்டையும் அறிகிறீர்கள். பாபா வந்து முழு உலகத்தின் முதல், இடை, கடையின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். முற்றிலும் இந்த விஷயம் சரி என்ற உணர்வு வர வேண்டும். எது வரை பிராமணன் ஆகிவில்லையோ அது வரை எதையும் அறியிவில்லை. மனிதர்கள் ஞானம் இல்லாமல் காட்டு மிராண்டிகள் போல இருக்கின்றனர். மனிதர்களுக்கு படிப்பு நிச்சயமாக வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. கிராமத்தில் இருப்பவர்கள் படிப்பதில்லை. தங்களுடைய நில புலங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள். எனவே, வெளியில் இருப்பவர்கள் இவர்கள் காட்டு மிராண்டிகள் என கூறுகிறார்கள். இப்போது நமக்கு பாபா படிக்க வைக்கின்றார். நாம் தோட்டத்து மலர்களாகின்றோம். அவர்கள் காட்டு முட்களாக இருக்கிறார்கள். இங்கு புரிந்துக் கொண்டீர்கள் என உங்களுக்குத் தெரிகிறது. உலகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவர் சத்கதி அடைய வைப்பார் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பக்தியில் மாட்ட வைக்கிறார்கள் என பாபா புரிய வைக்கிறார். பக்தியின் ஆர்வத்தில் அமர்ந்துக் கொண்டு ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் ஆட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். குழந்தை பெரியவர் ஆனதும் தந்தையிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கும் என புரிந்துக் கொள்கிறது. சிறிய குழந்தைகளின் உடல் சிறியதாக இருக்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படி உயர்ந்ததாக்கிக் கொள்வது என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். உண்மையில் பாரதம் வைரம் போன்று இருந்தது. ஒரு வேளை கீதையில் பரம்பிதா பரமாத்மாவின் பெயர் இருந்திருந்தால் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். பரம்பிதா பரமாத்மா தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல். அவருடைய சிவஜெயந்தியைக் கூட பாரதத்தில் தான் கொண்டாடுகிறார்கள். உண்மையில் பாரதம் அனைத்தையும் விட பெரிய தீர்த்த ஸ்தலத்தை ஆகும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடியவர் தந்தை, அவருடைய பிறவி பாரதத்தில் தான் ஏற்படுகிறது. தந்தை எப்படி பாரத தேசத்தில் வருகின்றார் என உங்களுக்குத் தெரியும். இப்போது எந்த தீர்த்த ஸ்தலம் மிக உயர்ந்ததாக ஏற்பார்கள். நிச்சயமாக பாரதத்தைத் தான் ஏற்க வேண்டும். இங்கும் அங்கும் சிவனுடைய கோவில்கள் இருக்கின்றன. அனைத்து தர்மத்தினரும் சிவனுடைய கோவிலை எங்கே பாத்தாலும் சென்று சிவ பாபாவிற்கு மாலை அணிவிக்கிறார்கள். ஒருவேளை சிவ தந்தை தான் நம் அனைவருக்கும் சத்கதி கொடுத்தார் என புரிந்துக் கொண்டால் அலைவது நின்று விடும். பாரதத்தைத் தான் அழியாத உண்மையான கண்டம் என்கிறார்கள். பாரதம் ஒரு போதும் அழிவதில்லை. இது கூட உங்களுக்குத் தெரியும். பாரதத்தில் தேவி தேவதா தர்மம் இருந்த போது மற்ற தர்மத்தினரோ அல்லது கண்டமோ இல்லை. தந்தை இப்போது இங்கே குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். இது ஈஸ்வரிய குடும்பம் ஆகும். அது அசுர குடும்பம் ஆகும். உங்களில் கூட சிலர் நன்கு புரிந்துக் கொள்கிறார்கள். சுத்த அகங்காரத்தில் இருக்கிறார்கள். தேக அபிமானம் அசுத்த அபிமானம் ஆகும். தேவதைகளின் முகத்தில் எவ்வளவு மலர்ச்சி இருக்கிறது. உங்களுடைய சுத்த அகங்காரம் மறைவாக இருக்கிறது. ஆத்மாவிற்கு குஷி ஏற்படுகிறது. ஓஹோ, கல்பத்திற்குப் பிறகு மீண்டும் பாபா கிடைத்திருக்கிறார். நமக்கு ராஜ்ஜிய பாக்கியத்தின் ஆஸ்தியைக் கொடுக்கும் அளவிற்கு தகுதி அடைய வைத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் குஷியாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரானவர்கள் நிறைய இருக்கிறார்கள். உங்களுடைய விஷயம் ஒன்று, ஈஸ்வரன் சர்வ வியாபி இல்லை. இன்னொன்று கீதையின் பகவான் கிருஷ்ணன் இல்லை. இது முக்கியமான இரண்டு தவறுகள் ஆகும். ஆகவே முதன் முதலில் பரம்பிதா பரமாத்மாவிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் கூறுங்கள் என பாபா கூறுகின்றார். மேலும் கீதையின் பகவான் யார் என்பதையும் கேளுங்கள். இந்த விடுகதைக்கு முடிவு காணுங்கள். இதற்கு தீர்வு கிடைத்து விட்டால் நொடியில் ஜீவன் முக்தியை அடையலாம். ஜனகரைப் போன்று ஒரு நொடியில் ஜீவன் முக்தி. இதுவோ பாரதத்தில் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. யார் எனக்கு ஒரு நொடியில் பிரம்ம ஞானம் கொடுப்பார்கள் என கூறினார். இது பிரம்ம ஞானம் அல்லவா? பிராமணன் பிராமணிகள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஞானம் கொடுப்பவர் ஞானக்கடல் சிவன். இந்த விஷயங்களை அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. பிரம்ம ஞானம் என்று கூறுகிறார்கள் பிரம்மா போஜனத்தை பிரம்ம போஜனம் என்று கூறுகிறார்கள். பிரம்மம் என்பது தத்துவம் ஆகும். பிரம்மாவோ தந்தையாவார். அவருடைய தந்தை சிவன் ஆவார். இந்த விஷயங்களை மனிதர்கள் முற்றிலும் அறியவில்லை. முதலில் உங்களுக்கு இந்த விஷயங்கள் புரிய வைக்கப் படவில்லை. முதலில் நீங்கள் சிறு குழந்தைகளாக இருந்தீர்கள். இப்போது இளைஞர்கள் ஆகிவிட்டீர்கள். பாபா இன்று உங்களுக்கு ஆழமான விஷயங்களை புரிய வைக்கிறேன் என்று கூறுகிறார். மன்மனாபவ என்ற விஷயம் முற்றிலும் சகஜம் ஆகும். விதை மற்றும் மரத்தின் விஸ்தாரம் எவ்வளவு நீளமாக இருக்கிறது. அது போல புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது நாம் திரிகால தரிஷி ஆகி இருக்கிறோம். படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையை அடைந்து விட்டீர்கள். இச்சமயம் உங்களைத் தவிர வேறு யாரும் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறியவில்லை. நமக்குக் கூட தெரியாது. இப்போது அதிகமான பக்தி ஆரம்பமானதிலிருந்து நாம் இறங்கும் கலையில் இறங்கிவிட்டோம் என நீங்கள் அறிகிறீர்கள். ஏறும் கலையில் இருக்கும் போது அனைவருக்குமே நன்மை ஏற்படுகிறது. இறங்கும் கலையில் யாருக்கு நன்மை இருக்கிறது? இது அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இது கூட நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் நல்ல தலைப்பாகும். கீதையின் பகவான் யார்? இந்த புதிருக்கு நீங்கள் தீர்வு கண்டு விட்டால் தந்தையின் ஆஸ்தியைப் பெற்று உலகத்திற்கு அதிபதி ஆகலாம். மனிதர்கள் உலகத்திற்கு அதிபதி நிராகாரரை நினைக்கிறார்கள். ஆனால் உலகம் என்று சிருஷ்டிக்குத்தான் (படைப்பு) கூறப்படுகின்றது. தந்தை உலகிற்கு அதிபதியாக மாட்டார். நான் பலனை எதிபார்க்காத சேவாதாரி என்று பாபா கூறுகின்றார். நீங்கள் மிகவும் அன்பான குழந்தைகள் நான் உங்களுக்கு கீழ்ப்படிந்த வேலைக்காரன்! ஓ, பதீத பாவனா! வந்து எங்களை பாவனமாக்குங்கள் என நீங்கள் அழைக்கிறீர்கள். உள்ளேன் ஐயா, வந்திருக்கிறேன். பாபா குழந்தைகளுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். பிறகு சிலர் கெட்ட பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். தந்தையோ நிராகாரி, நிர் அகங்காரி என பாடப்பட்டிருக்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். பிறகு, அவருடைய ரதம். நாங்கள் சிவபாபாவின் ரதத்திற்கு ஆடை அனுப்பியிருக்கிறோம் என நிறைய குழந்தைகள் கூறுகிறார்கள். ரதத்தை நாம் உபசரிக்கலாம் அல்லவா? சிவபாபாவோ சாப்பிடுவதில்லை. யாரை உபசரிப்பது. இவருடைய ஆடையோ அதுவே தான் இருக்கிறது. எந்த ஒரு அகங்காரமும் இல்லை. எந்த மாற்றமும் இல்லை. இவரைப் பார்த்து இவர் வைர வியாபாரி என நினைக்கிறார்கள். இவர் எப்படி பிரஜா பிதா ஆக முடியும். அட, இதில் குழப்பம் அடைவதற்கு என்ன இருக்கிறது. வந்து புரிந்துக் கொள்ளுங்கள். நாம் பிரம்மா வாய்வழி வம்சாவளியாகி இருக்கிறோம். நமக்கு விஷ்வத்திற்கு அதிபதியாக உரிமை இருக்கிறது. நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. அசுத்தத்தை விட்டு விட்டு சுத்த அகங்காரத்தில் இருக்க வேண்டும். இந்த முகம் தேவதைகளை போன்று எப்போதும் மலர்ந்து இருப்பதற்கு அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.



    2. பாப்தாதாவிற்குச் சமமாக நிர்அகங்காரி ஆக வேண்டும். சேவாதாரியாகி நிரூபணம் கொடுக்க வேண்டும். ஒரு போதும் கெட்ட பிள்ளையாகக் கூடாது.



    வரதானம்:

    ஒருவரின் நினைவில் மனதை ஒருமுகப்படுத்தி மன்மனாபவ என இருக்கக் கூடியவராகி எவர்ரெடி சம்பூரணமானவர் (சதா தயாராக, முழுமையானவராக) ஆகுக !



    எப்போதும் ஒவ்வொரு நொடியும் எவரெடியாக இருக்க வேண்டும் என நினைவில் வையுங்கள். எந்த நேரத்திலும் எந்த ஒரு சூழ்நிலையும் வரலாம். ஆனால் நாம் தயாராக இருப்போம். நாளை கூட வினாசம் ஆகும் என்றால் நாம் தயாராக இருக்கிறோம். எவரெடி என்றால் முழுமையான நிலை. முழுமையாவதற்காக ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற ஏற்பாடு வேண்டும். மனம் எப்போதும் ஒருவரின் பக்கம் மன்மனாபவ என்றிருந்தால் எவரெடியாகி விடலாம். எவரெடி ஆகி சேவை செய்தால் சேவையிலும் கூட சகயோகம் கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும்.



    சுலோகன்:

    பாபாவின் ஆயிரம் மடங்கு உதவிக்குப் பாத்திரமாக வேண்டும் என்றால் தைரியத்தின் அடியை முன்னால் எடுத்து வையுங்கள்.


    ***OM SHANTI***