BK Murli 13 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 13 July 2017 Tamil

    13.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்பொழுது துக்கத்தின் பந்தனங்களிலிருந்து விடுபட்டு சுகத்தின் சம்பந்தத்தில் செல்ல வேண்டும். ஆகையால் பழைய கர்ம பந்தனங்களின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் முடிக்க வேண்டும்.



    கேள்வி:

    இந்த யுத்த மைதானத்தில் எல்லைக்கப்பாற்பட்ட குத்துச் சண்டை எது? குத்துச் சண்டையில் வெற்றி அடைவதற்கான ஆதாரம் என்ன?



    பதில்:

    மாயா இராவணனிடம் குழந்தைகளாகிய உங்களுடைய எல்லைக்கப்பாற்பட்ட குத்துச்சண்டை நடக்கிறது. இது தான் பாக்ஸிங் என்று கூறப்படுகிறது. இந்த மல்யுத்தத்தில் வெற்றியாளர் ஆவதற்காக நான் ஒவ்வொரு கல்பமும் வெற்றி அடைந்துள்ளேன் என்பது புத்தியில் இருக்க வேண்டும். மாயையாகிய இராவணன் மீது வெற்றி அடைவதற்காக 5 பூதங்களையும் தானம் செய்ய வேண்டும். தானம் கொடுத்து பிறகு ஒருபோதும் திரும்பப் பெற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவேளை தானம் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்டு காமம், கோபத்திற்கு வசப்பட்டீர்கள் என்றால் அனைத்து பூதங்களும் மீண்டும் உங்களை அலைக்கழிக்க தொடங்கி விடும்.



    பாடல்:

    நீங்கள் ஒருவர் கிடைத்தீர்கள் முழு உலகமும் கிடைத்தது.........



    ஓம்சாந்தி

    பந்தனத்திலிருந்து விடுபட்டு சம்பந்தத்தில் வந்தவர்களுடைய பாடல் இது. இந்த நேரம் மாயையினுடைய பந்தனம் உள்ளது. இது தான் அசுரத்தனமான பந்தனம் என்று கூறப்படுகிறது. இப்போது உங்களுடையது ஈஸ்வரிய சம்பந்தமாகும். பந்தனத்தில் துக்கம் உள்ளது. சம்பந்தத்தில் சுகம் உள்ளது. ஆகையால் துக்கத்தின் பந்தனங்களைத் துண்டித்து எங்களை சுகத்தின் சம்பந்தத்தில் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் கூப்பிடுகின்றனர். பக்தர்கள் என்றால் பகவானை நினைவு செய்பவர்கள். ஆனால் உலகத்தில் ஒருவர் கூட பகவானைத் தெரிந்தவர் இல்லை. ஆகையால் அரைக்கல்ப காலமாக பக்தி நடந்து வருகிறது. சாதுக்கள் கூட சாதனை (முயற்சி) செய்கின்றனர். பகவானோ ஒருவர் தான் ஆவார், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. எல்லைக்குட்பட்ட தந்தையின் ஆஸ்தி என்னவோ இருக்கவே செய்கிறது. இருந்தாலும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்கின்றனர். ஏனெனில் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியில் துக்கம் உள்ளது. எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியில் சுகம் உள்ளது. இதை நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய பந்தனங்களை துண்டிப்பதற்காக தந்தை முன்னால் அமர்ந்திருக்கிறார். துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் என்று பாடவும் படுகிறது. துக்கத்தை நீக்கி சாந்தியைக் கொடுப்பவர் என்று கூறுவதில்லை. அனைவரும் சாந்தியில் சென்று விட்டால் சிருஷ்டியே இருக்காது. ஆகையால் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் என்று கூறப்படுகிறார். அனைவருக்கும் சுகத்தை கொடுக்கிறார். ஜீவன் முக்தி அடைவதற்காக முக்தியை அடைகின்றனர். முக்தி என்று மட்டும் கூறினால் பிறகு அது மோட்சம் என்றாகி விடும். முக்தியுடன் கூடவே ஜீவன் முக்தியும் கண்டிப்பாக உள்ளது. ஜீவன் முக்தி சுகத்தின் சம்பந்தமாகும், அந்த சமயத்தில் ஆத்மாக்கள் சதோ பிரதானமாக இருப்பார்கள். துக்கத்தின் பந்தனத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கே நீங்கள் வந்துள்ளீர்கள். மற்றொரு புறம் சுகத்தின் சம்பந்தத்தில் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கர்ம பந்தனத்தினுடைய கணக்கு வழக்கை முடிக்க வேண்டியுள்ளது. புதிய உலகத்தில் துக்கம் இருப்பதில்லை. முதன் முதலில் சுகத்தின் சம்பந்தம் இருக்கிறது. பிறகு துக்கத்தின் பந்தனம் தொடங்குகிறது. சுகம் துக்கம் அனைத்தும் விளையாடுவதற்காகும். நீங்கள் அதிக சுகத்தைப் பார்க்கிறீர்கள் எனும் போது அதிக துக்கத்தையும் பார்க்கிறீர்கள். அவர்கள் கொஞ்சம் துக்கத்தைப் பார்க்கிறார்கள் எனும் போது கொஞ்சம் சுகத்தைப் பார்க்கிறார்கள். பாரதம் சொர்க்கமாக செல்வம் நிறைந்ததாக இருந்தது. இப்போது நரகமாக திவாலாக ஆகிவிட்டது. அனைத்தையும் விட புதியதாக இருந்தது. இப்போது அனைத்தையும் விட பழையதாக உள்ளது. அதிக துக்கத்தைப் பார்த்தீர்கள் இப்போது கூட நிறைய துக்கம் உள்ளது. இந்த துக்கங்களிலிருந்து விடுவிப்பதற்காக தான் தந்தையை கூப்பிடுகின்றனர். அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தையை கூப்பிடுகிறார்கள். அவர்களுக்கு துக்கம் உள்ளது எனவே தான் கூப்பிடுகின்றனர் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது ஸ்ரீமத்படி நீங்கள் சுகதாமம் செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் நான் வருகிறேன். உங்களுடைய புத்தியில் இப்போது முதலிலிருந்து கடைசி வரையிலான ஞானம் நிறைந்துள்ளது. எனவே திரிகாலதரிசி என்று ஆகிவிட்டீர்கள் அல்லவா? நீங்கள் 3 உலகங்களையும் அறிவீர்கள். மூலவதனத்தில் ஆத்மாக்களாகிய நாம் அமைதியில் இருக்கிறோம். நாம் உண்மையில் அந்த நிர்வாணதாமத்தில் வசிப்பவர்கள். பிறகு இல்லற தர்மத்தில் வருவதன் மூலமாக இந்த உடல் உறுப்புகளின் மூலமாக நடிப்பை நடிக்கிறீர்கள். நீங்கள் சுகம் மற்றும் துக்கத்தினுடைய நடிப்பை முதலிலிருந்து கடைசி வரை நடிக்கிறீர்கள். நீங்கள் ஆல் ரவுண்டராக உள்ளீர்கள். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது வெளிச்சம் கிடைத்திருக்கிறது. 84 லட்சம் பிறவிகள் இருக்க முடியாது. மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர், மற்றபடி பலவிதமான இனங்கள் நிறைய உள்ளன. எண்ணக்கூடியவர்கள் யாரும் இல்லை. இப்படியே கதை விடுகிறார்கள். யார் 84 பிறவிகளை எப்படி எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சீக்கியர்கள், ஆரிய சமாஜத்தவர்கள், பௌத்தர்கள் முதலானோர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. நீங்கள் தந்தையை அறிவீர்கள். ஆகையால் கீதையின் பகவான் யார் என்பதைக் கூறுகிறீர்கள் - ஞானக்கடலாகவும் பதீத பாவனராகவும் இருக்கும் சொர்க்கத்தின் இறைத் தந்தையா அல்லது அனைத்து குணங்களும் நிறைந்தவர் சொர்க்கத்தின் முதல் இளவரசனாகிய ஸ்ரீ கிருஷ்ணரா? இந்த புதிர் மிகவும் எளிதானது. ஆகையால் பாபா இப்படிப்பட்ட புதிர்களை அச்சிடச் செய்கிறார். எனவே மனிதர்களின் புத்தியில் பதியும்., எனவே கீதையின் பகவான் யார் என்று தீர்மானியுங்கள். சொர்க்கத்தின் இறைத் தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவராவார். தூய்மையற்றவர்களைத் தூய்மை படுத்துவதற்கு எவ்வளவு சமயம் எடுக்கிறது. தூய்மையாக இருப்பது முக்கியமான விஷயம் ஆகும், ஒருவரிடம் புத்தியை ஈடுபடுத்த வேண்டும். வீடு வாசலை விடக்கூடாது. எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் அதை விட்டு விடுகிறார்கள். உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட சந்நியாசம் ஆகும்., ஆனாலும் கூட அவர்கள் பழைய உலகத்தில் இருக்கின்றனர். நீங்கள் முழு உலகத்தையும் மறக்க வேண்டியிருக்கிறது. நாம் எல்லைக்குட்பட்ட நிலையிலிருந்து எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் செல்ல வேண்டும். அது சாந்திதாமம் ஆகும். அங்கே அமைதியே அமைதியாக இருக்கிறது. மற்றபடி எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட சுகம் இங்கே இருக்கிறது. நீங்கள் எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லைக்கப்பாற்பட்டதையும் கடந்து செல்ல வேண்டும். சாந்திதாமம் ஆத்மாக்களாகிய நம் வீடாகும். அங்கே ஆத்மா நடிப்பு ஏதும் நடிப்பதில்லை. கர்மேந்திரியங்கள் இருப்பதில்லை, பிறகு நாடகத்தின் படி உங்களுடைய சத்யுகத்தின் நடிப்பு முன்னால் தோன்றுகிறது. ஆகவே நீங்கள் நடிப்பை நடிப்பீர்கள். ஒவ்வொரு கல்பமும் அந்த நடிப்பையே நடிக்கிறீர்கள். இந்த விஷயங்களை உஙகளைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. சுகத்தின் சம்பந்தம் மற்றும் துக்கத்தின் பந்தனத்தைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அசுர சம்பந்தத்துடன் தான் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் இப்போது ஈஸ்வரிய சம்பந்தத்தில் இருக்க முடியாது. இவ்வளவு பேர் எங்கே இருப்பீர்கள். பிறகு சந்நியாசிகளைப் போல ஆகி விடும். குடும்பத்தை எங்கே எடுத்து வர முடியும்? குழந்தைகள் அதிகரித்தபடி இருப்பார்கள். முதன் முதலில் சிறிய வீடாக இருந்தது. 3 அடி நிலத்தில் இருந்தது. நீங்கள் சிறிய அறையில் வந்து கொண்டிருந்தீர்கள். வீட்டில் கீதாபாடசாலையை திறந்து வையுங்கள் என்று பாபா கூறுவது போல அவ்வளவு சிறியதாக இருந்தது. எப்படி ஆரம்பமானது என்று கேட்கின்றனர். எப்படி தொடங்கியது என்று பாபா கூறுகிறார். முதலில் 3 அடி நிலத்தை எடுத்தோம். பிறகு பெரிய வீடுகளை எடுத்தோம். குழந்தைகளும் கூட நிறைய பேர் வந்து விட்டனர். பட்டி உருவாகியது. மோட்டார், பஸ் முதலானவைகளும். கூட வைத்துக் கொண்டோம். ஆகையால் தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார் - 3 அடி நிலத்தை எடுத்துக் கொண்டு பாடசாலையை திறந்து வையுங்கள் பிறகு நீங்கள் முழு உலகத்திற்கும் எஜமானராக ஆவீர்கள். ஈஸ்வரன் உலகத்திற்கு எஜமானர் ஆவார் என்று பாடுகின்றனர். ஆனால் சிருஷ்டி உலகம் என்று கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை எஜமானராக ஆவதில்லை. முழு உலகமும் துக்கம் நிறைந்ததாக ஆகும்போது தந்தை சேவை செய்வதற்காக வருகிறார். இந்த இறை பல்கலைக்கழகம் முழு உலகத்திற்கானதாகும். கல்லூரியும் கூட ஆகும். அனைவருக்கும் சத்கதி கிடைக்கிறது. ஆனால் துர்கதியில் கூட செல்கிறார்கள் அல்லவா? சூட்சம வதனம், மூல வதனத்தில் துர்கதியில் செல்வதில்லை. ஆகையால் இந்த பல்கலைகழகத்தின் மூலமாக முழு உலகத்திற்கும் நன்மை ஏற்படுகிறது. இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. அனைவருடைய கதி சத்கதிக்காக நான் வரவேண்டியுள்ளது என்று கூறுகிறார். இல்லையென்றால் எப்படி தூய்மையானவர்களாக ஆவீர்கள். இராவணனும் கூட எவ்வளவு சக்திசாலியாக இருக்கிறார். நீங்கள் என் பக்கமாக வருகிறீர்கள் பிறகு ராவணன் ஈர்த்துக் கொள்கிறான். மாயா மிகவும் கெட்டதாக இருக்கிறது. மாயை உங்களை துக்கத்தில் எடுத்துச் செல்கிறது. இது விளையாட்டாக உள்ளது. மல்யுத்தத்தில் இருவருமே சக்திசாலியாக உள்ளனர். அரைக் கல்பம் தோல்வி அரைக் கல்பம் வெற்றி ஏற்படுகிறது. இந்த மல்யுத்தம் எல்லைக்கப்பாற்பட்டதாகும். இது யுத்த மைதானம் என்று கூறப்படுகிறது. இதில் மாயையாகிய இராவணனை வெற்றி கொள்ள வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட நீங்கள் வெற்றி அடைந்தீர்கள். யார் யார் வெளி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் சொல்கிறார்கள் - பாபா, கோபம் வருகிறது. அட, இதுவோ பூதம் தானே! தானம் கொடுத்து விட்ட பிறகு திரும்பவும் பெற்றுக் கொண்டால் மிகவும் துன்புறுத்தும், நீங்கள் 5 விகாரங்களைத் தானமாக கொடுத்து விட்டீர்கள், இதை சந்நியாசம் செய்ய வேண்டும். மற்றபடி வீடு வாசலை விட்டு வெளியேறுவது கோழைத்தனம் ஆகும். பாபா புரிய வைக்கிறார் - 63 பிறவிகளாக ஏமாற்றம் அடைந்தீர்கள், இப்போது இந்த ஒரு பிறவியில் தூய்மை ஆகுங்கள். இதில் மிகுந்த வருமானம் உள்ளது. மிகப் பெரிய பிராப்தி கிடைக்கிறது. எதிரி முன்னால் நின்று கொண்டிருக்கிறான். மல்யுத்தம் நடக்கிறது அல்லவா? கிருஷ்ணர் மற்றும் கம்சரின் மல்யுத்தம் சாஸ்திரங்களில் காட்டி இருக்கிறார்கள். இது மாயை இராவணனுடைய விஷயம் ஆகும். கிருஷ்ணருடைய ஆத்மா கடைசி பிறவியில் இருக்கிறது. மாயையுடன் யுத்தம் செய்து பிறகு கிருஷ்ணராக ஆகிறார். இப்போது புத்திசாலி ஆக வேண்டும். பாரதம் எவ்வளவு கிரீடதாரியாக இருந்தது. சூரிய வம்ச ராஜ தர்பாரைப் பாருங்கள், எவ்வளவு வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகள் இருந்தது. இங்கே கூட தர்பார் இருக்கின்றன. அவர்களை இளவரசி சந்திக்கிறார். வரிசைக்கிரமமாக அமர்கிறார்கள். புத்தியில் சிந்தித்துப் பாருங்கள் - அங்கே அவர்களுக்குள் எப்படி சந்தித்து கொள்வார்கள், அவர்களுடைய தர்பார் எப்படி இருக்கும், இரவில் ஒளி விளக்குகள் தென்படுவதில்லை, பிரகாசமே பிரகாசமாக இருக்கும். அறிவியல் காரியத்தில் பயன்படுகிறது. மறைந்து போய் விடுவதில்லை. நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக்குவதற்கு நிமித்தமாக ஆகியுள்ளீர்கள். சொர்க்கத்தின் வாசலைத் திறக்கின்றீர்கள். அவர் சங்கராச்சாரியார் இவர் சிவாச்சாரியார். பாபா சொல்கிறார் – நான் ஞானத்தை சொல்கின்றேன். தாங்கள் கிடைத்ததும் முழு உலகமும் கிடைத்து விட்டது என்று பாட்டில் கேட்டீர்கள். அவரை விட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை. சொர்க்கத்தில் அனைத்து மன ஆசைகளும் பூர்த்தி ஆகிறது. அனைத்து சுகங்களும் கிடைத்து விடுகிறது. முன்பு தொலைபேசி, மின்சாரம், மோட்டார் போன்றவை கிடையாது, இப்போது ஏற்பட்டுள்ளன. அங்கே அறிவியல் மிகவும் வேலைக்கு உதவுகிறது. இப்போதோ வெளிநாட்டில் 7 நாட்களில் கட்டிடம் கட்டி கொடுத்து விடுகிறார்கள். இங்கே உள்ள மனிதர்களின் புத்தி தமோபிரதானம் ஆகும். இவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது அவர்களை ரஜோ பிரதானம் என்று சொல்லலாம். குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தும் தெரிந்து இருக்கிறீர்கள், உலகம் மாற வேண்டியிருக்கிறது. ஆகையால் இந்த மகாபாரத யுத்தம் இருக்கிறது. உங்களுடைய புத்தி திறந்து விட்டது. நீங்கள் யுத்த மைதானத்தில் நிற்கின்றீர்கள், மாயை உங்களை எதிர்க்கிறது. பாபா சொல்கிறார் - முழுமையான யோகத்தில் இருங்கள். தந்தையைப் போலவே நீங்களும் நிர்வாண தாமத்தில் இருக்கக் கூடியவர்கள். பாபா உங்களுக்கு உலகத்தின் ராஜ்யத்தைக் கொடுக்கின்றார். அதற்குப் பதிலாக தெய்வீக பார்வையின் (சாட்ஷாத்காரம்) சாவியை பாபா தன்னிடம் வைத்துக் கொள்கிறார். பாபா சொல்கிறார் – இது என்னுடைய வேலைக்குத் தேவைப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் உங்களை மகிழ்ச்சி படுத்த வேண்டியிருக்கிறது. மற்றபடி யாருக்கும் இதைக் கொடுப்பதில்லை. உங்களுக்கு உலகத்தின் எஜமான் என்ற பதவியைக் கொடுக்கின்றேன், இது சாதாரண விஷயமா என்ன! திவ்ய பார்வையின் சாவி கூட சாதாரண விஷயம் கிடையாது. விளையாட்டு எப்படி நடக்கிறது என்று யார் நன்றாகப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜன்மாஷ்டமி பற்றியும் பாபா புரிய வைத்தார். இது கிருஷ்ணரின் ஜெயந்தி அல்ல. இது பரம்பிதா பரமாத்மாவின் ஜெயந்தியாக பாடப்படுகிறது. முதலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். சிவ ஜெயந்தி எங்கே போனது? முதலில் சிவ ஜெயந்தி பிறகு கிருஷ்ணருடைய பிறப்பு ஏற்படுகிறது. சிவ ஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி. சிவபாபா தான் பாரதத்தை சொர்க்கம் ஆக்குகிறார். பாபா சொல்கிறார் - கல்பத்தின் சங்கம யுகத்தில் வந்து இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறேன். மகா பாரத சண்டை ஏற்பட்ட பிறகு நரகத்தின் அழிவும் சொர்க்கத்தின் ஸ்தாபனையும் நடக்கும். சிவபாபா சிவாலயத்தை ஸ்தாபனை செய்கின்றார். இராவணன் வைஷ்யாலயமாக ஆக்குகின்றான். யாரிடமிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் பதவி அடைந்தாரோ அவரைப் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உண்மையில் சிவஜெயந்தி தான் முக்கியமானது. மற்றபடி மனிதர்கள் பிறவி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். யார் பூஜைக்குரிய தேவதைகளோ அவர்களே பிறகு பூஜாரி ஆகின்றார்கள். உங்களுடைய புத்தியில் முழு ரகசியமும் இருக்கிறது. அதுவும் கூட வரிசைக்கிரமமான முயற்சியின் ஆதாரத்தில் இருக்கிறது. பாபா உங்களுக்கு புரிய வைக்கிறார் பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைக்கிறீர்கள். கல்லூரி முதல்வர் போன்றோருக்கும் புரிய வைக்க வேண்டும். பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கக்கூடிய வரலாறு புவியியல் படிப்பு அரைகுறை ஞானம் ஆகும். முலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் இவையனைத்தின் ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு இது தெரிவதில்லை. மற்றபடி வெளிநாட்டினர் இஸ்லாமியர் போன்றோரின் வரலாறு புவியியல் படித்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள். எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியலை பாபா தான் புரிய வைக்கிறார். நாம் மனிதனிலிருந்து தேவதை ஆகிக்கொண்டிருக்கிறோம். சொர்க்கத்தின் இளவரசன் இளவரசியாக எப்படி ஆவது, இங்கு வந்தால் நாங்கள் உங்களுக்குப் புரிய வைப்போம். சொர்க்கத்தின் இளவரசன் இளவரசி ஆக வேண்டும். அவர்களுக்கு இந்த ஆஸ்தி எப்படி கிடைத்தது? இந்த சூரிய வம்சம் எப்படி ஸ்தாபனை ஆனது. இந்த ஞானம் இல்லையென்றால் நீங்கள் தத்துவ ஞானியே (பிலாசபர்) அல்ல. இதைப் புரிய வைக்க யுக்தி வேண்டும். இவர்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்கள். தர்மராஜ் பாபாவோ முற்றிலும் துல்லியமானவர். அவருக்கு மேலே யாரும் கிடையாது. இங்கேயோ ஒருவருக்கு மேல் ஒருவர் தீர்ப்பளிக்கிறார்கள். உண்மையிலும் உண்மையான தர்மராஜர் ஒரே ஒருவர் தான். நல்லது,



    இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாராம்:

    1. புத்தியை எல்லைக்குட்பட்டது மற்றும் எல்லைக்கப்பாற்பட்டதிலிருந்து விலகி தன்னுடைய சாந்தி தாமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். துக்கத்தின் பந்தனங்களிலிருந்து விடுபடுவதற்கு ஈஸ்வரிய சம்பந்தத்தில் இருக்க வேண்டும்.



    2. முழு உலகத்திற்கு சேவை செய்வதற்கு 3 அடி நிலத்தில் ஆன்மீகப் பல்கலைக்கழகம் திறக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியல் படிக்க வேண்டும் மற்றும் படிக்க வைக்க வேண்டும்



    வரதானம் :

    கவனத்தின் (அட்டென்ஷன்) விதியின் மூலம் மாயையின் நிழலிருந்து தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய குழப்பங்களினால் அசையாதவர் ஆகுக.



    தற்சமயம் இயற்கையின் தமோகுணமான சக்தி மற்றும் மாயையின் சூட்சுமமான ராயலான புத்திசாலித்தனத்தின் சக்தி தனது காரியத்தை தீவிர வேகத்தில் செய்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள் இயற்கையின் பயங்கர ரூபத்தை தெரிந்து கொண்டு விடுகின்றனர், ஆனால் மாயையின் அதி சூட்சுமமான சொரூபத்தை அறிவதில் ஏமாந்து விடுகின்றனர், ஏனென்றால் மாயை தவறானவற்றையும் கூட சரியானதாக அனுபவம் செய்விக்கிறது, உணர்ந்து கொள்ளும் சக்தியை அழித்து விடுகிறது, பொய்யை மெய்யாக நிரூபிப்பதில் புத்திசாலியாக ஆக்கி விடுகிறது, ஆகையால் கவனம் (அட்டென்ஷன்) என்ற வார்த்தையை அடிக்கோடிட்டு மாயையின் நிழலிருந்து தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும் குழப்பத்திலும் கூட அசையாதவர் ஆகுங்கள்.



    சுலோகன் :

    அனைத்து எண்ணங்களிலும் ஊக்கம்-உற்சாகம் இருந்தது என்றால் வெற்றி நிச்சயம்.



    ***OM SHANTI***