BK Murli 14 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 14 July 2017 Tamil

    14.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! வாரிசாக ஆக வேண்டுமெனில் எந்த காரியமும் ஸ்ரீமத்திற்கு விரோதமாக இருக்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடிருங்கள்.



    கேள்வி:

    தந்தையிடத்தில் இரண்டு வகையான வாரிசுகள் இருக்கின்றனர். எப்படி?



    பதில்:

    ஒன்று தாய், தந்தையிடமிருந்து நேரடி பாலனை அடைந்து கொண்டிருக்கும் சமர்ப்பண குழந்தைகள். ஆனால் அவர்களுக்கும் கர்மத்தின் ஆழமான கணக்கு இருக்கிறது. இரண்டாவதாக, இல்லறத்தில் இருந்தாலும் தூய்மையாக மற்றும் டிரஸ்டியாக இருப்பவர்கள், சம்பூர்ண டிரஸ்டி ஆவதற்கு அவர்களுக்கு முயற்சி கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் முழு டிரஸ்டியாக ஆகி விட்டால், அனைத்திலிருந்தும் பற்றுதல் நீங்கி விட்டால் முழு ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆகி விட முடியும்.



    பாட்டு:

    நமது தீர்த்தம் தனிப்பட்டது .......



    ஓம்சாந்தி.

    இனிமையிலும் இனிய குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இதன் பொருளை குழந்தைகள் வரிசைக் கிரமமாக அறிந்திருக்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள். இருப்பினும் பாபா விஸ்தாரமாகப் புரிய வைக்கின்றார். உலகில் வேறு யாருக்கும் தெரியாது. பதீத பாவனாக இருக்கும் பரம்பிதா பரமாத்மாவின் மகிமை அதிகமாக இருக்கின்றது. ஆனால் அவரது மகிமையை யாரும் யதார்த்த முறையில் அறியவில்லை. மேலும் அவர்கள் சர்வவியாபி என்று கூறி விட்டனர். பதீத பாவன்... என்று பாடவும் செய்கின்றனர். அவர் கண்டிப்பாக ஒருவராகத் தானே இருப்பார், அவர் வந்து அனைவரையும் பாவனம் ஆக்குகின்றார். பதீத பாவனரே வாருங்கள்! என்று அழைப்பதனால் அவரை சர்வவியாபி என்று கூற முடியாது. இது யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. பாரதம் பாவனமாக இருந்தது, இப்பொழுது பதீதமாக இருக்கிறது. நீங்கள் பாவன உலகிற்கு எஜமானராக இருந்தீர்கள், இப்பொழுது பதீத உலகில் இருக்கிறீர்கள். பாபா நம்மை மீண்டும் பாவன உலகிற்கு எஜமானராக ஆக்குகின்றார் என்பதை அறிவீர்கள். எஜமானராக ஆக்கியிருந்தவரே வந்திருக்கின்றார். இது உங்களது சைத்தன்ய யாத்திரையாகும். இதன் நினைவுச் சின்னமாக பக்திமார்க்கத்தில் அந்த யாத்திரை நடைபெற்று வருகின்றது. பூஜ்ய தேவி தேவதைகளாக இருந்தவர்களே பூஜாரிகளாக ஆகி விட்டனர், அவர்களே பிராமணர்களாக ஆகி, பிறகு மீண்டும் தேவதைகளாக ஆவார்கள். தந்தை தான் வந்து கர்மம், அகர்மம், விகர்மத்தின் ஆழ்ந்த ரகசியங்களைப் புரிய வைக்கின்றார். எதிர்கால புது உலகில் உங்களது கர்மம் அகர்மமாக இருக்கும். இராஜா ராணியைப் போன்று பிரஜைகள் ...... மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருந்தனர். இது மிகவும் எளிய விசயமாகும், பாரதம் சுகதாமமாக இருந்தது, சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தனர், அவர்கள் தான் தேவி தேவதைகள் என்ற பெயரில் பிரபலமாக இருக்கின்றனர். வேறு யாரும் பெயரைப் பயன்படுத்துவது கிடையாது. லெட்சுமி நாராயணன் சூரியவம்சி, பிறகு ராமர் சீதை சந்திர வம்சத்தினர்களாக இருந்தனர். பிறகு அவர்களது ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களது ராஜ்ஜியம் போன்று வேறு யாருடைய ராஜ்ஜியமும் நடைபெறுவது கிடையாது. கிறிஸ்தவர்களதும் கூட சிறிது காலத்திற்கு நடைபெறுகிறது. முதலில் சக்கரவர்த்திகளாக இருப்பது கிடையாது, பாதி நேரத்திற்குப் பிறகு, பிரஜைகள் அதிகரிக்கும் பொழுது ராஜ்ஜியம் கிடைக்கிறது. எட்வர்ட், ஜார்ஜ் போன்றவர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். சிறிது காலத்திற்குள் மாறி விடுகின்றனர். இந்த ஒரே ஒரு ராஜ்ஜியம் தான் 1250 ஆண்டு காலம் நடைபெறுகிறது. இதில் எந்த மாற்றமும் ஏற்படுவது கிடையாது. சூரியவம்ச, சந்திரவம்ச ராஜ்ஜியத்தினர்களின் பெயர்கள் தான் நடைபெற்று வருகிறது. விதவிதமான பெயர், உருவம், தேசம், காலம் இருக்கும் என்று புரிய வைக்கப்படுகின்றது. மிகவும் நீண்ட ராஜ்ஜியம் நடைபெறுகின்றது. மாற்றம் ஏற்படுவது கிடையாது. இந்த நேரத்தில் தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதை கற்றுக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். இங்கு நீங்கள் அனைவரும் படிப்பதற்காக அமர்ந்திருக்கின்றீர்கள். அவரவர்களது வீட்டிலும் கூட பலர் இருக்கின்றனர். வீட்டில் இருந்தாலும் கூட வாரிசாக ஆக முடியும். இங்கு உங்களுக்கு தாய் தந்தையின் வளர்ப்பு கிடைக்கிறது. அவர்களது கர்மத்தின் கதி தனிப்பட்டதாகும். மற்றபடி யார் வெளியில் இருக்கின்றார் களோ, அனைத்தும் பாபாவினுடையது என்று உணர்ந்து டிரஸ்டியாகி இருக்கின்றார்களோ அவர்களும் வாரிசாக ஆகிவிடுகின்றனர். ஆம், கண்டிப்பாக கஷ்டம் இருக்கவே செய்யும். எப்பொழுது அனைத்தின் மீதிருக்கும் பற்றுதல் நீங்கி விடுகின்றதோ மற்றும் முழு நம்பிக்கை ஏற்பட்டு விடுகின்றதோ – நாம் அனைத்தையும் அவருக்கு அர்பணம் செய்கின்றோம், உயிருடன் இருந்து நாம் அவரது ஆஸ்திக்கு டிரஸ்டியாக இருக்கின்றோம். இவ்வாறு யாரும் உயிருடன் இருந்து ஆவது கிடையாது. எப்பொழுது இறக்கும் தருவாய் ஏற்படுகிறதோ அப்பொழுது தான் டிரஸ்ட்டை ஏற்படுத்தி (அறக்கட்டளை) விட்டுச் சென்று விடுகின்றனர். இங்கு சரண்டர் செய்கின்றோம். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! டிரஸ்டியாக இருங்கள். பகவான் தான் அனைத்தும் கொடுத்தார் என்று பக்தியிலும் கூறி வந்தோம். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! இங்கு நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுது தேக சகிதமாக எதுவெல்லாம் உங்களுடையதோ அவைகளிலிருந்து பற்றுதல்களை நீக்க வேண்டும். அவையனைத்தும் ஈஸ்வரன் கொடுத்தது என்று நீங்கள் கூறி வந்தீர்கள். எப்பொழுது அவர் வருகின்றாரோ அப்பொழுது அவரிடத்தில் பலி ஆகிவிடுவோம், அவருக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விடுவோம். இங்கு இவருக்கு உயில் போன்றவைகளை உருவாக்க வேண்டியதில்லை. இவர் வாங்குபவர் கிடையாது, கொடுக்கக் கூடியவர். டிரஸ்டியாக ஆகி கேட்டுச் செய்யுங்கள் என்று கூறுகின்றார். ஏனெனில், எப்பொழுது வேண்டுமென்றாலும் தவறு ஏற்படலாம். பக்கா டிரஸ்டியாக ஆவதற்கு நேரம் ஏற்படுகின்றது. நேரம் ஏற்படும் என்பதை பாபா அறிவார். டிரஸ்டி ஆவதின் மூலம் தான் வாரிசு ஆக முடியும். இங்கிருப்பவர்களும் கூட டிரஸ்டியாக ஆகின்றனர். பாபா கூறுகின்றார் - கைமாறாக நான் வைகுண்டத்தின் ராஜ்ஜியத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் அடுத்த பிறவியில் அமரலோகத்திற்குச் செல்ல வேண்டும். டிரஸ்டியாக இருங்கள், பிறகு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். உயர்ந்த பதவி அடைவதில் ஏழைகள் தான் நிமித்தம் ஆகின்றனர். வாரிசாகின்றனர், சிலர் கடைசியில் சந்திரவம்சத்திற்குச் சென்று எஜமானர் ஆகின்றனர். அதுவரைக்கும் பெரியவர்களிடத்தில் சேவை செய்து கொண்டே இருப்பர். இப்பொழுதும் சிலர் சிறிதும் முன்னேற்றம் அடையாமலேயே இருக்கின்றனர். அவர்களது அதிஷ்டத்தில் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ளலாம். சேவை செய்து செய்து இறுதியில் ஏதாவது பதவி அடைந்து விடுவீர்கள். அதுவும் இருந்தால் தான். சென்று விட்டால் பிரஜைகளிலும் கூட குறைந்த பதவி தான் அடைவர். பலர் குள்ளமாக இருக்கின்றனர், விருத்தி அடைவதே கிடையாது. எதுவும் புரிந்து கொள்வதும் கிடையாது. கர்மம், விகர்மத்தின் கதியை தந்தை தான் புரிய வைக்கின்றார். இங்கு எந்த நல்ல காரியமும் செய்யவில்லையெனில் விகர்மம் விருத்தியடைந்து கொண்டே செல்லும். நாடகத்தில் இவ்வாறு பாகம் பதிவாகியிருக்கின்றது என்று நீங்களும் கூறுவீர்கள். அவர்கள் அரண்மனையில் இருந்து கொண்டே வேலைகாரர்கள் போன்று இருப்பார்கள். வேலைக்காரர்கள் முன்னேற்றம் அடைந்து பிறகு ராஜ்ஜியத்தை அடைவார்கள். ஈஸ்வரனிடத்தில் இருந்து கொண்டும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தால் பிறகு அதிக தண்டனைகள் அடைய வேண்டும். பதவியும் குறைவாக கிடைக்கும். அதனால் தான் இப்படிப்பட்ட விகர்மங்கள் செய்யாதீர்கள் என்று புரிய வைக்கப்படுகின்றது. இல்லையெனில் விருத்தியடைந்து கொண்டே இருக்கும். எந்த சேவையும் செய்யாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், படிப்பதும் கிடையாது, கர்மத்தின் இந்த ஆழ்ந்த ரகசியத்தைப் பாருங்கள் எப்படி இருக்கின்றது! சொர்க்கத்தின் ராஜ்ஜியத்தை அடைவதற்கான காரியங்களை பாபா கற்றுக் கொடுக்கின்றார். ஸ்ரீமத்படி அப்படிப்பட்ட காரியங்கள் செய்ய வேண்டும். அசுர காரியங்களையும் பார்க்கின்றீர்கள். எவ்வளவு ஏழைகள் பிறகு அஜாமில் போன்று பாவிகளாக ஆகிவிடுகின்றனர். இங்கும் அவ்வாறு ஆகின்றனர். சிலர் சக்கரவர்த்தி ஆகின்றனர், சிலர் தாச, தாசிகளாகி கடைசியில் ஏதாவது பதவி அடைந்து விடுகின்றனர். தந்தை நல்ல முறையில் அறிவார். இங்கு இருந்தும் நல்ல காரியங்கள் செய்யவில்லையெனில் நஷாவும் இருக்காது. கர்மத்தின் கதியை தந்தை வந்து புரிய வைக்கின்றார். தந்தை கூறுகின்றார் - நான் ஏழைப்பங்காளன். ஏழைகளின் ஒவ்வொரு பைசாவின் மூலம் தான் நான் ஸ்தாபனை செய்ய வேண்டும். நான் செல்வந்தனின் பங்காளன் கிடையாது. குறிப்பாக தாய்மார்கள் ஏழைகளாக இருப்பர். அவர்களது கைகளில் எதுவும் இருப்பது கிடையாது. அவர்கள் எந்த Half Partner யும் கிடையாது. அப்படியில்லையெனில் உயில் எழுதும் பொழுது பாதி பங்கு அவர்களுக்கு எழுதிவிட வேண்டும். வீட்டில் ஆண் குழந்தை தான் வாரிசாக ஆகின்றனர். அரசாங்கம் இன்றைய நாட்களில் நியமங்களை உருவாக்கி இருக்கின்றது. பாரதம் முற்றிலும் ஏழையாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக குமாரிகள் ஏழைகளாக இருப்பர். மாமியார் வீட்டிற்குச் செல்லும் வரை, விகாரத்தின் பிறப்பு ஏற்படும் பொழுது கிடைக்கிறது. இது விகார உலகமாகும். நிர்விகாரிகள் ஒருபொழுதும் யார் முன்பும் கை கூப்பமாட்டார்கள். யார் நிர்விகாரிகளோ அவர்களே பிறகு விகாரத்தில் விழுகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்னணர் எங்கும் நிறைந்திருக்கின்றார் என்று பக்தர்கள் நினைக்கின்றனர். பகவான் ஒருபொழுதும் இறப்பது கிடையாது, மறுபிறப்பு எடுப்பதும் கிடையாது. உங்களிடம் இப்பொழுது ஞானம் இருக்கிறது. லெட்சுமி நாராயணன் அனைவரையும் விட மிக உயர்ந்த சொர்க்கத்திற்கு மாலிக் ஆக இருந்தனர் என்பதை அறிவீர்கள். சீதை ராமரை சொர்க்கத்திற்கு எஜமான் என்று கூறுவது கிடையாது. இந்த வெளிச்சம் இப்பொழுது கிடைத்திருக்கின்றது. ஆக சத்கதி இப்பொழுது கிடைக்கின்றது எனும் பொழுது துர்கதிக்கான எந்த காரியமும் செய்யக் கூடாது என்று தந்தை புரிய வைக்கின்றார். அனைத்தையும் விட முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும். அனைத்தையும் விட மிக நல்ல காரியம் ஒரு தந்தையை நினைவு செய்வதாகும், ஆத்ம அபிமானியாக இருப்பது. தன்னை சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த விகாரமும் வரவில்லை தானே! பேராசையும் இருக்கக் கூடாது. அனைத்தும் ஈஸ்வரனுடையது எனில் நாம் ஏன் பேராசைப் பட வேண்டும்? நமக்கு தந்தை என்ன கூறுகின்றாரோ அதனை செய்கின்றோம். தந்தை ஒவ்வொரு குழந்தையின் நாடியையும் நன்றாக பார்க்கின்றார் அல்லவா! கணக்கையும் பார்க்கின்றார். சிலர் மிகவும் ஏழையாக இருக்கின்றனர் எனில் 15-20 ரூபாய் சேமித்து அனுப்பி வைத்து விடுகின்றனர். தனது எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். தந்தை வழியும் கூறுகின்றார். சிறிது வங்கியிலும் வைத்துக் கொள்ளுங்கள், 5 கொடுங்கள், 10 வங்கியில் வைத்துக் கொள்ளுங்கள். ஆக ஸ்ரீமத் கிடைத்தது அல்லவா! வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டும் சிவபாபாவிற்குக் கொடுக்கின்றனர். சிவபாபா இந்த பணத்தின் மூலம் தான் நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். இந்த பிரம்மா பாபாவும் கூட சிவபாபாவின் ஒரே ஒரு குழந்தை ஆவார். இவர்கள் சேமித்து என்ன செய்யப் போகிறார்கள்? இவரே தன்னிடமுள்ள அனைத்தையும் தாய்மார்களின் சேவையில் பயன்படுத்தினார். அனைத்தையும் கொடுத்து விட்டார். பிறகு இந்த குழந்தைகள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அடைகின்றனர். நமது தேவி தேவதா இல்லற தர்மம் மிகவும் தூய்மையாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது பதீதமாக ஆகிவிட்டது. அதனால் தான் பாபா புரிய வைக்கின்றார் - இவரும் டிரஸ்டியாக ஆகிவிட்டார் அல்லவா! தாய்மார்களாகிய உங்களை டிரஸ்டியாக ஆக்கி விட்டார். நீங்கள் இதனைக் கவனியுங்கள், பற்றுதல் நீங்கி விட்டது. நீ உலகிற்கு எஜமானராக ஆகின்றாய் என்று பாபா சாட்ஷாத்கார் ஏற்படுத்தி விட்டார். விநாசத்திற்கான ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் விநாசத்தை செய்விப்பவர் யார்? என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. கண்டிப்பாக யாராவது துண்டுதல் கொடுக்க வேண்டும். விநாசம் ஆகப் போகின்றது என்றும் புரிந்து கொள்கின்றனர். கண்டிப்பாக பகவானும் இருப்பார். ஆனால் எந்த ரூபத்தில் இருப்பார்? கிருஷ்னர் எப்படி வந்தார்? கிருஷ்ணரின் ரூபத்தை பலருக்கு போடுகின்றனர், ஆனால் அது செயற்கையாக ஆகிவிடுகின்றது. பலர் கிருஷ்ணரின் உருவத்தைப் போட்டுக் கொண்டு ஏமாற்றுகின்றனர். சிலருக்கு ஜட மூர்த்தியின் மீது நம்பிக்கை ஏற்பட்டு விடுகின்றது. ஆக அவ்வாறே சாட்சாத்கார் ஏற்பட்டு விடுகின்றது. பிறகு வேகமாக சென்று அணைத்துக் கொள்கின்றனர். ஏனெனில், கிருஷ்ணர் சொர்க்கத்தின் அன்பான குழந்தையாவார். ஏனெனில் அவரிடத்தில் அதிக கவர்ச்சி இருக்கின்றது. பாபாவிடமிருந்து மிக உயர்ந்த ஆஸ்தி அடைய வேண்டும். கர்மத்தைப் பற்றி தந்தை புரிய வைக்கின்றார். பாபாவிடத்தில் யாராவது கேட்டால் பாபா உடனேயே கூறி விடுவார் - இவர் எதுவும் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படிப்பட்ட காரியம் செய்கின்றனர், அது விகர்மமாகவே ஆகிவிடுகின்றது. தேக அபிமானம் அதிகம் இருக்கிறது. சிவபாபா என்று கூறிக் கொண்டே இருப்பர். இவ்வாறு சிவபாபாவின் பக்தர்கள் அதிகம் இருக்கின்றனர். காசியில் பக்தர்கள் அமர்ந்திருக்கின்றனர். சிவகாசி விஷ்வநாத் கங்கா என்பது அவர்களது மந்திரமாகும். அதன் பொருள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது, கங்கை இவரிடமிருந்து வெளிப்பட்டது என்று நினைக்கின்றனர், அதனால் தான் கங்கைக் கரைக்குச் சென்று அமர்கின்றனர். நமக்கு அங்கு முக்தி கிடைத்து விடும் என்று நினைக்கின்றனர். சிவகாசி சிவகாசி என்று உச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். பிறகு பகீரத் கங்கை கொண்டு வந்ததாகவும் காண்பிக்கின்றனர். கங்கையின் மூலம் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிவிடுவீர்களா என்ன? பதீத பாவனை அழைக்கின்றீர்கள் அல்லவா! அவர் யார்? எளிய இராஜயோகத்தை எப்படி கற்றுக் கொடுகின்றார்? என்பதை யாரும் அறியவில்லை. சிவபாபாவை எப்படி நினைவு செய்வது? என்பதையும் நீங்கள் தான் அறிவீர்கள். உங்களுடையது நினைவு யாத்திரையாகும். உங்களது உலகாய யாத்திரை முடிவடைந்து விட்டது. அது உலகாய யாத்திரையாகும், இது ஆன்மீக யாத்திரையாகும். தந்தை கூறிக் கொண்டே இருக்கின்றார் - குழந்தைகளே! வீட்டை நினைவு செய்யுங்கள். இது சீ சீ உலகமாகும், சீ சீ பழைய சரீரமாகும். நான் உங்களது தந்தை. உங்களை திரும்பி அழைத்துச் செல்வேன். இந்த மகாபாரத யுத்தத்தில் எவ்வளவு பேர் அழியப் போகின்றனர்! இவ்வளவு கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கின்றனர், அவர்களது ஆத்மாக்கள் எங்கு செல்லும்? அவரவர்களது தர்மத்தின் பிரிவுகளில் (நங்ஸ்ரீற்ண்ர்ய்) சென்று நட்சத்திரம் போன்று இருப்பர். அது தான் நிராகார உலகம் என்று கூறப்படுகின்றது. எங்கு பலர் இருக்கின்றார்களோ அதை உலகம் என்று கூறுகின்றோம். ஒருவேளை பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர் எனில் உலகமாகவே இருக்காது. நிராகார உலகம் என்று பாடப்படுகிறது, அதில் ஆத்மாக்கள் இருக்கின்றன. அவர்கள் மீண்டும் நடிப்பை நடிப்பதற்காக வர வேண்டும். இது அழிவற்ற நாடகமாகும். ஒருபொழுதும் பிரளயம் ஏற்படுவது கிடையாது. சத்யுகத்திலிருந்து கலியுகம் வரைக்கும் மனிதர்கள் விருத்தியடைந்து கொண்டே இருப்பர். அங்கு வேறு எந்த தர்மமும் இருக்காது. இங்கு உங்களுக்கு ஞானத்தைப் பற்றித் தெரியும். அங்கு சத்யுகத்தில் ஞானம் இருக்காது. இந்த நேரத்தில் தந்தை உங்களை தனக்குச் சமமாக திரிகாலதர்சிகளாக ஆக்குகின்றார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) உயிருடன் இருந்து தேக சகிதமாக அனைத்திலிருந்தும் பற்றுதலை நீக்கி டிரஸ்டியாக இருக்க வேண்டும். சிரேஷ்ட காரியம் செய்ய வேண்டும். ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.



    2) எந்தப் பொருளின் மீதும் பேராசை வைக்கக் கூடாது. தினமும் தனது கணக்கை பார்க்க வேண்டும் - எனக்குள் எந்த விகாரமும் கிடையாது தானே! தேக அபிமானத்தை விட்டு விட்டு ஒரு தந்தையை நினைவு செய்யும் சிரேஷ்ட காரியம் செய்ய வேண்டும்.



    வரதானம்:

    புள்ளி (பாயிண்ட்) என்ற ஒரு சப்தத்தின் நினைவின் மூலம் மனம், புத்தியை எதிர்மறையான பாதிப்பி-ருந்து பாதுகாக்கக் கூடிய நம்பர் ஒன் வெற்றியாளர் ஆகுக.



    தற்சமயம் விசேஷமாக மாயையின் தாக்குதல் என்னவெனில் எதிர்மறையான உணர்வு மற்றும் பாவனையை உருவாக்குவது அல்லது யதார்த்த முறையில் உணர்ந்து கொள்ளும் சக்தியை அழிப்பதாகும். ஆகையால் முன் கூட்டியே பாதுகாப்பிற்கான சாதனத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதற்கான விசேஷ சாதனம் ஒரே ஒரு புள்ளி என்ற சப்தமாகும். எந்த சங்கல்பம், வார்த்தை அல்லது செயல் வீணானதாக இருக்கிறதோ அதற்கு புள்ளி வைத்து விடுங்கள். அப்போது நம்பர் ஒன் வெற்றியாளர் ஆகி விட முடியும். மாயையின் ரூபங்களை புரிந்து கொள்ளுங்கள், சீசனை (கால மாறுதலைப்) புரிந்து கொள்ளுங்கள் மற்றும் தன்னை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



    சுலோகன்:

    சங்கமத்தில் யாருக்கு சேவைக்கான உயர்ந்த பாக்கியம் கிடைத்திருக்கிறதோ அவர்களே பத்மாபதம் பாக்கியவான்கள் ஆவர்.



    ***OM SHANTI***