BK Murli 15 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 15 July 2017 Tamil

    15.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே - தூய்மை எனும் கங்கணத்தை கட்டிக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு இராஜதிலகம் கிடைத்து விடும், தூய்மையாக ஆவதற்கான சத்தியம் செய்யுங்கள்.



    கேள்வி:-

    குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எந்த பந்தனத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டும்?



    பதில்:-

    பாபாவை நினைவு செய்வதற்கான பந்தனத்தில். இந்த பந்தனத்தில் கட்டுபட்டிருப்பதின் மூலம் உங்களுடைய அனைத்து விகர்மங்களும் வினாசம் ஆகி விடும். மேலும் எதிர்காலத்தில் விகர்மங்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். ஆத்மா தூய்மையாகி விடும்.



    கேள்வி:

    பக்தி மார்க்கத்தின் நவீன பகட்டு என்ன?



    பதில்:-

    பிறந்த நாள், ஜெயந்தி போன்றவை கொண்டாடுவது என்பன பக்தி மார்க்கத்தின் பகட்டாகும். ஆனால் இதன் மூலம் எந்த பலனும் இல்லை, ஏனென்றால் யாருடைய ஜெயந்தி கொண்டாடுகிறார்களோ, அவரை யதார்த்தமான முறையில் தெரிந்திருப்பது கூட கிடையாது.



    பாட்டு:-

    நீங்கள் அன்பின் கடலாக இருக்கிறீர்கள்...



    ஓம் சாந்தி.

    இப்போது குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள், உருவாக்கியிருக்கும் இந்த பாடல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். பாரதம் உயர்ந்த பூஜிக்கத்தக்கதாக இருந்தபோது பக்திமார்க்கத்தின் சின்னங்கள் எதுவும் இருக்கவில்லை. வேத சாஸ்திரங்கள் இல்லை, தவம் தீர்த்த யாத்திரை இல்லை, தானம் புண்ணியம், எதுவுமே இருக்கவில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தில் வந்தவை ஆகும். பாட்டில் முதலில், நீங்கள் அன்புக் கடல் என்று வருகிறது. ஒரு துளி குடிக்க வைக்கும் போது நாம் இங்கிருந்து தூய்மையான உலகத்திற்குச் சென்று விடுகிறோம். ஆனால் அன்பு குடிக்க வைக்கப்படுவதில்லை, அன்பு செலுத்தப்படுகிறது. ஞான அமிர்தம் குடிக்க வைக்கின்றார். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். இவ்வளவு நதிகள் வருகின்றதே இவற்றின் படைப்பாளர் யார்? கண்டிப்பாக கடல் என்று தான் சொல்வார்கள், அதிலிருந்து தான் அனைத்து நதிகளும் வருகின்றன. எனவே ஞானக்கடல் பரமபிதா பரமாத்மாவே ஆவார். அவரிடமிருந்து ஞான கங்கைகளான நீங்கள் வருகிறீர்கள். அவருடைய மகிமை, அவர் அன்புக் கடலாக இருக்கின்றார், சுகக்கடலாக இருக்கின்றார், என்று இருக்கிறது. நீங்கள் ஞானத்தைக் குடிக்க வைக்கும் போது நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று விடுகிறோம். சத்கதியை அடைந்து விடுகிறோம். ஞானக்கடலான என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும், நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள் என்று பாபா கூறுகின்றார். இதை முதல் முதலில் யார் கேட்பது? இது மறைமுகமான விஷயமாகி விட்டது அல்லவா? முதலில் ஞான அமிர்தத்தை யார் குடிப்பது? ஆனால் அவரை தாய் என்று ஏன் சொல்லப்படுகிறது? பிதா என்பது சரி - தாய் என்று யாரைச் சொல்வது? முதலில் ஞான அமிர்தத்தை யார் குடிப்பது? அவர் வந்து பிரவேசம் ஆகின்றார். ஞானம் சொல்கின்றார் என்றால் முதலில் யார் கேட்பது? கண்டிப்பாக இவரே ஆவார். எனவே இவர் தாயாக ஆகி விட்டார்- இவருடைய காதுகள் தான் முதலில் கேட்கிறது. உண்மையில் சரீரம் தாயினுடையது கிடையாது, எனும்போது தாயை எங்கிருந்து அழைத்து வருவது? ஆகையினால் தான் ஜகதம்பா சரஸ்வதியின் மகிமை பாடப்பட்டுள்ளது. சரஸ்வதியின் கைகளில் வீணை இருக்கிறது, அவர் பிரம்மாகுமாரி ஆவார். குமாரிக்கு அதிக மகிமை இருக்கிறது. பிரம்மாவிற்கு அவ்வளவு மகிமை கிடையாது, ஜகதம்பாவிற்கு கூடுவது போல் இவ்வளவு பெரியா விழா கூடுவதில்லை. யார் ஞான ஞானேஷ்வரியாக இருக்கிறாரோ அவர் மீது ஞான கலசத்தை வைக்கின்றார். அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், அவரைத் தான் தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவர் என்று சொல்லப்படுகிறது. தூய்மையற்றது கலியுக உலகமாகும். தூய்மையானது சத்யுக உலகமாகும். சத்யுகத்தில் லஷ்மி-நாராயனனுடைய இராஜ்ஜியமாகும். அவர்களுக்கு இந்த இராஜ்ஜிய திலகம் எப்படி கிடைத்தது? ஞாகக்கடல் வரும்போது தான் தூய்மையின் காப்பு கட்டுகின்றார், என்று பாடப்படுகிறது. சகோதரிகள் முக்கியமானவர்களாக எண்ணப்படுகிறார்கள். அவர்கள் அமர்ந்து மற்ற சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கட்டுகிறார்கள். நீங்கள் தூய்மையாக ஆனீர்கள் என்றால் உங்களுக்கு இராஜ்ஜிய திலகம் கிடைக்கும் என்று பதீத-பாவனன் கூறுகின்றார். இது சங்கமயுகத்தின் விஷயமாகும். இப்போது மனிதர்கள் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று அழைக்கிறார்கள். இங்கே இராஜ்ஜியம் இல்லை. நீங்கள் தூய்மையற்ற கீழான நிலையிலிருந்து தூய்மையான உயர்ந்தவர்களாக மாறினீர்கள் என்றால், இராஜ்ய திலகம் உங்களுக்குக் கிடைக்கும் என்று பாபா கூறுகின்றார். திலகம் ஒன்றும் அளிக்கப்படுவதில்லை, இது புரிந்து கொள்ளப்படுகிறது. தூய்மையற்ற உலகத்தில், தூய்மையற்றவர்கள் மீது தூய்மையற்றவர்களின் இராஜ்ஜியமே ஆகும். இப்போது தூய்மையாவதற்கு சத்தியம் செய்யுங்கள். சத்தியம் என்பது சொல்வதற்கு வருகிறது, ஆனால் இது ஞானத்தின் விஷயமாகும். நாம் தூய்மையற்றவர்கள் தூய்மையாக்கு, ஞானக்கடல் பாபாவின் குழந்தைகளாகியிருக்கிறோம் எனும் போது கண்டிப்பாக நாம் தூயமையாக ஆக வேண்டும் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். மற்றபடி ரக்ஷாபந்தன் நாளில் ராக்கி கட்டவேண்டும் அல்லது திலகமிட வேண்டும் என்ற கேள்வியே எழுவதில்லை. நீங்கள் எங்கே திலகமிடுகிறீர்கள்? பக்தி மார்க்கத்தில் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள், அர்த்தம் எதுவும் புரிந்து கொள்வதில்லை. இராஜ்ய திலகம் எப்போது யாருக்கு கிடைத்தது. இங்கே அனைத்தும் ஞானத்தின் விஷயமாகும். எனவே நீங்கள் சென்று புரிய வைக்க வேண்டும். இது பிராமணர்களாகிய உங்களுடைய வேலையாகும். அவர்கள் சகோதரி சகோதரனுக்கு ராக்கி கட்டுகிறார், ஆனால் அவர்கள் தூய்மையாக இருக்கிறார்களா என்ன? முதலில் குமாரியாக இருக்கும் போது தூய்மையாக இருக்கின்றார் பிறகு தூய்மையற்றவராக ஆகி விடுகிறார். தாய்மார்கள், குமாரிகள் இருவருமே ராக்கி கட்டச் செல்கிறார்கள் என்றால் இருவருமே தூய்மையானவர்களா என்ன? தாய்மார்கள் தூய்மையற்றவர்கள் எனும்போது தூய்மையற்றவர் தூய்மையற்றவருக்கு ராக்கி கட்டுகிறார்கள், என்றால் எந்த பலனும் கிடையாது. நிஜத்தில் என்ன நடக்கிறதோ பிறகு அதனுடைய நினைவுச் சின்னம் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நடந்து விட்டது பிறகு கொண்டாடுகிறார்கள், நினைவு சின்னம் அல்லது பிறந்த நாள் கொண்டாடுவது இது பேஷன் ஆக ஆகி விட்டது. இதில் செலவைத் தவிர எந்த பலனும் கிடையாது. சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள் என்றால் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள், ஆனால் உண்மையில் சிவராத்திரி அல்லது சிவஜெயந்தி எப்போது நடந்தது என்று எதுவும் தெரியாது. நிஜத்தின் மூலம் நன்மை ஏற்படுகிறது, நிஜமற்றதின் மூலம் இழப்பு தான் ஏற்படுகிறது. இந்த உலகமே பொய்யானதாகும். ராக்கி விழாவைக் கூட பொய்யாகக் கொண்டாடுகிறார்கள். உண்மையில் தூய்மையின் விஷமாகும். தூய்மைக்காகத் தான் சத்தியம் செய்யப்படுகிறது. இது இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. முதலில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் யார் அவர் எப்படி வந்து ராக்கிக் கட்டுகிறார், என்பதைக் கூடத் தெரிந்திருக்கவில்லை. எனவே நீங்கள் ஒருபோதும் தூய்மையற்றவர் களாக ஆகக் கூடாது. நீங்கள் கூட, நாங்கள் இன்றிலிருந்து தூய்மையாக்கக் கூடிய தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் சுயராஜ்ஜியத்தை எடுப்போம் என்று சத்தியம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறீர்கள். தூய்மையற்றவர்களாக மாற்றக் கூடிய இராவணனுடைய சேனை அதிகம் துன்புறுத்துகிறது. இப்போது நீங்கள் என்னுடைய நினைவின் மூலம் தூய்மையாகிக் கொண்டே சென்றீர்கள் என்றால், விகர்மங்கள் அழிந்து கொண்டே செல்லும் என்று பாபா கூறுகின்றார். பகவானுடைய மகாவாக்கியம் என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னியின் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள். இதில் ராக்கியின் விஷயம் எதுவும் கிடையாது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்வதின் மூலம் உங்களுடைய கடந்த கால விகர்மங்கள் வினாசம் ஆகி விடும் மேலும் எதிர்காலத்தில் எந்தவொரு விகர்மமும் நடக்காது, ஏனென்றால், நீங்கள் தூய்மையாகவே இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றீர்கள். பிரம்மாகுமார் அல்லது பிரம்மா குமாரிகள்........ஆண்களும் பிரம்மாகுமாரர்கள் அல்லவா? மகிமைகள் தாய்மார்களுக்கு அளிக்கப்படுகிறது. தாய் குரு ஒருவராக இருக்க முடியாது. இது குடும்ப மார்க்கமாகும். பண்டிகைகள் கொண்டாடிக்கொண்டு வருகிறார்கள், அவர்கள் கண்மூடித்தனமாக பணம் சம்பாதிப்பதற்காக செய்து விடுகிறார்கள். முன்னால் பிராமணர்கள் ஒரே விதமான ராக்கி தான் கொண்டு செல்வார்கள். ஆண் பெண் அனைவருக்கும் கட்டினார்கள். ஒரு பைசா கிடைத்தது. சில செல்வந்தர்கள் ஒரு அணா அல்லது இரண்டணா கொடுத்தார்கள். சில பெரிய செல்வந்தரகளாக இருந்தால் ஒரு ரூபாய் கூட கொடுத்தார்கள். இப்போது என்ன செய்து விட்டார்கள். சகோதரி ராக்கி கட்டி திலகம் வைத்தார் என்றால் பிறகு சகோதரன் சகோதரிக்கு நல்ல பணம் கொடுக்கின்றார். 50 ரூபாய் கூட கொடுத்து விடுகிறார். முறையே மாறிவிட்டது. உண்மையில் பிராமணனுடைய வேலையாகும். நீங்கள் உண்மையான வாய்வம்சாவழி பிராமணர்கள் ஆவீர்கள். அவர்கள் சரீரத்தின் மூலம் வந்தவர்கள். பிராமணர்களாகிய நீங்கள் தான் தேவதைகளாக ஆகின்றீர்கள். பிராமணர்களாக ஆகி பிறகு தூய்மையாக ஆரம்பிக்கின்றீர்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு பாபாவே ஆவார். இப்போது குமாரி ராக்கி கட்ட செல்கிறார், பிறகு சென்று தூய்மையற்றவராக ஆகின்றார் என்றால் திலகம் காணாமல் போய் விடுகிறது. இராஜ்ஜியம் கிடைப்பதில்லை. இங்கே பரமபிதா பரமாத்மா சட்டம் போடுகிறார், யார் தூய்மையாவார்களோ அவர்கள் தூய்மையான உலகத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள். நீங்கள் மட்டும் தான் தூய்மையாகின்றீர்கள். ராக்கி பந்தனமே தூய்மையின் அடையாளம் தான் என்பதை முதலில் நீங்கள் புரிய வைக்க வேண்டும். நீங்கள் இந்த காமம் எனும் எதிரியை வென்று விட்டீர்கள் என்றால் தூய்மையாகி விடுவீர்கள். என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவு எனும் பந்தனம் மிகவும் கடுமையானதாகும் ஏனென்றால் பல பிறவிகளுக்குமான பாவங்களின் சுமை தலையில் இருக்கிறது. சத்யுகத்திலிருந்து திரேதாயுகம் வரை நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், தூய்மையான சுயராஜ்ஜியம் இருந்தது என்று பாபா தான் புரிய வைக்கின்றார். அவர்கள் எப்படி சுயராஜ்ஜியத்தை அடைந்தார்கள் - இந்த நாடகச் சக்கரம் இந்த விதத்தில் சுற்றுகிறது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா வந்து தூய்மையாகுங்கள் என்று அனைவருக்கும் கூறுகின்றார். யார் பிரம்மாவின் வாய்வம்சாவழி பிராமணர்களாக இருக்கிறார்களோ - தாமரை மலருக்குச் சமமாக குடும்ப விவகாரங்களில் இருந்து தூய்மையாகி பாபாவை நினைவு செய்கிறார்களோ, அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைகிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இது நடந்தது, இப்போதும் நடக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் உலகத்தைப் பாருங்கள் எப்படி இருக்கிறது, பாடல் கூட இருக்கிறது அல்லவா - இன்றைக்கு இருக்கும் மனிதனுக்கு என்ன ஆகிவிட்டது. புதிய பாரதம் சொர்க்கம் எங்கே மற்றும் பழைய பாரதம் நரகம் எங்கே? அங்கே ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்தினர் ஏனென்றால் சுகதாமமாக இருந்தது. இது துக்கதாமமாகும். இராவணன் இராஜ்ஜியத்தை அபகரித்து விட்டான். இராமன் மற்றும் இராவணனின் கதை உருவாக்க வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராம ராஜ்ஜியம் இருந்தது, சுயராஜ்ஜியம் இருந்தது. இப்போது என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள். அப்போது தூய்மையான உலகத்தின் இராஜ்ஜிய திலகம் கிடைத்து விடும். நாம் இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம். இந்த படிப்பே சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான படிப்பாகும். அந்த திலகத்தை பிராமண மக்கள் கொடுக்கிறார்கள். இது சுயராஜ்ஜிய திலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் பாபா சொல்வதை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் இராஜ்ஜியம் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது, ஆகையினால் தான் பரலௌகீக் பரமபிதா பரமாத்மாவோடு தங்களுக்கு என்ன சம்பந்தம் என்று கேட்கப்படுகிறது. தந்தை ஒருவரே அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர். தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு எஜமானர் ஆகுங்கள் என்று கூறுகின்றார். பாபா சங்கமயுகத்தில் தூய்மையாக்குகின்றார். இப்போது சங்கமயுகமாகும், மரணம் முன்னால் நிற்கிறது, ஆகையினால் தான் பாபாவினுடையவர்களாக ஆகுங்கள் என்று சொல்லப்படுகிறது. வழியும் சொல்கின்றார், இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நாம் பகவானுடைய படைப்பாகும் எனும்போது பாபாவின் ஆஸ்தியே சொர்க்கமாகும். உண்மையில் சொர்க்கம் இருந்தது. பக்தர்களை பகவான் வந்து தன்னுடைய இடத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நீங்களும் சொல்கிறீர்கள். இரண்டு தாமங்கள் தான் - முக்தி மற்றும் ஜீவன் முக்தியாகும். பாரதம் ஜீவன்முக்தி அடைந்திருந்தது அப்போது மற்ற ஆத்மாக்கள் சாந்திதாமத்தில் இருந்தன. சுகதாமம் இருந்தபோது துக்கதாமம் இல்லை. சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் ஒரு பாபாவே ஆவார், அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஆவார். இப்போது அந்த சுகதாமம் துக்கதாமமாக ஆகி விட்டது. இந்த சக்கரம் திரும்ப சுற்றுகிறது, கலியுகத்திற்கு பிறகு சத்யுகம் வருகிறது. சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் ஒரு பாபாவே ஆவார், அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஆவார். கலியுக தூய்மையற்ற உலகத்திலிருந்து தூய்மையான உலகமாக ஆகும். ராமராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும். பகவானுடைய மகாவாக்கியம் - தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாகுங்கள். காமம் என்ற மிகப்பெரிய எதிரியை வெல்லுங்கள். மற்றபடி அந்த பிராமணன் கூட, சகோதரி சகோதரன் அனைவரும் தூய்மையற்றவர்களே. தூய்மை யற்றவர்கள் தூய்மையற்றவர்களுக்கு ராக்கி கட்டுகிறார்கள். இதை இந்த சங்கமயுகத்தில் பாபா தான் வந்து தூய்மையின் சத்தியம் செய்ய வைக்கின்றார். எதுவரை தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா வரவில்லையோ அதுவரை சுயராஜ்ஜியம் எங்கே? யாருக்கு எப்படி புரிய வைப்பது என்று பாபா புரிதலை ஏற்படுத்துகிறார். முதலில் நீங்கள் பதீத பாவனனே வாருங்கள் என்று யாரை அழைக்கின்றீர்கள் என்று கேளுங்கள். நீங்கள் தான் தாயும் தந்தையும்........ என்று பாடுகிறீர்கள். இதில் யாரை மகிமை செய்கிறீர்கள்? கண்டிப்பாக பகவானைத் தான் இருக்கும். அவரைத் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்லப்படுகிறது. அவர் எப்போது வருவாரோ அப்போது தான் தூய்மையின் சத்தியம் செய்ய வைக்கப்படுகிறது. மற்றொரு விஷயம் - உங்கள் மீது பல பிறவிகளுக்கான சுமை இருக்கிறது. அரைகல்பமாக இராவண இராஜ்ஜியம் நடக்கிறது. நாளுக்கு நாள் துக்கமுடையவர்களாக தூய்மையற்றவர்களாக ஆகி-ஆகி ஒரேயடியாக கீழானவர்களாக ஆகி விட்டீர்கள். ஆயுளும் குறைந்துவிட்டது. அகால மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போகிகளாக ஆகி விட்டீர்கள். சத்யுகத்தில் யோகிகளாக இருந்தீர்கள் - குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே, அவர்களை சர்வகுண சம்பன்ன............ என்று சொல்லப்படுகிறது. நிர்விகார உலகம். குடும்ப மார்க்கம் தான் அல்லவா. இராஜ்ஜியம் செய்திருப்பார்கள். திருமணங்கள் கூட நடைபெற்றிருக்கும். அது தூய்மையான இராஜ்ஜியமாகும். தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் பாபா தூய்மையற்ற உலகத்தை எப்படி தூய்மையாக்குகின்றார் என்பதை அமர்ந்து புரிந்து கொள்ளுங்கள். தூய்மையினுடைய ராக்கி கட்டப்படுகிறது. வந்தே மாதரம் என்று சொல்லப்படுகிறது அல்லவா. குமாரி கூட மாதாவாக ஆகிறார். இங்கே குமாரி, மாதா, ஆண்கள் அனைவரும் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆகிறார்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா வந்து தூய்மையின் சத்தியம் மன்மனாபவ என்று செய்ய வைக்கின்றார். தூய்மையாகி என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆவதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை. தண்டனை அனுபவித்தீர்கள் என்றால் இராஜ்ஜிய பதவியும் கிடைக்காது. யார் யோகத்தில் இருந்து விகர்மங்களை வென்றவர்களாக ஆவார்களோ அவர்கள் தான் விகர்மாஜீத் ராஜாவாக ஆவார்கள். விகர்மாஜீத் ராஜாவின் சகாப்தம் ஒன்றிலிருந்து 2500ம் ஆண்டு வரை பிறகு விகர்ம ராஜாவின் சகாப்தம் 2500 லிருந்து 5000 ஆண்டு வரையாகும். மனிதர்கள் ஆண்டுகளைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. விகர்மாஜீத் இராஜ்ஜியம் சத்யுகம் திரேதாவில் நடக்கிறது, அதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கொடுத்து விட்டார்கள். மற்றும் விகர்ம ஆண்டிற்கு 2 ஆயிரம் ஆண்டுகள் என்று கொடுத்து விட்டார்கள். உண்மையில் பாதி அதற்கும், பாதி இதற்கும் இருக்க வேண்டும். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். முதல் முதலான வி யம் தூயமையற்றவர்களை தூய்மையாக்குவது யார். தூய்மையற்ற மனிதர்கள் தான் அவரை நினைவு செய்கிறார்கள். தூய்மையானவர்கள் நினைவு செய்வதில்லை. அங்கே சுகம் தான் இருக்கிறது எனவே நினைவு செய்வதில்லை. நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:-

    1) யோகத்திலிருந்து விகர்மாஜீத் ஆக வேண்டும். விகர்மங்களின் மீது வெற்றி அடைவதின் மூலம் தான் விகர்மாஜீத் ராஜாவாக ஆக முடியும். தங்களுக்குத் தாங்களே தான் சுயராஜ்ஜிய திலத்தை அளிக்க வேண்டும்.



    2) தூய்மையாக ஆகி தூய்மையின் ராக்கியை அனைவருக்கும் கட்ட வேண்டும். தாமரை மலருக்குச் சமமாக இருக்க வேண்டும்.



    வரதானம்:

    எண்ணத்திலிருந்தும் கூட எனது என்ற அழுக்கை சமாப்தி செய்து சுமையிலிருந்து விடுபட்டு இலேசாக இருக்கக் கூடிய பரிஸ்தா ஆகுக.



    எனது என்ற விஸ்தாரம் தான் சுமையாக உள்ளது. எந்தவிதமான எனது என்பது - எனது சுபாவம், எனது சமஸ்காரம், எனது இயல்பு, இவ்வாறு எனது என்பது எது இருந்தாலும் அது சுமையே ஆகும். மேலும், சுமை உடையவர்கள் பறக்க இயலாது, பரிஸ்தா ஆக இயலாது. எண்ணத்தில் கூட எனது என்ற உணர்வு வந்துவிட்டால் அழுக்காகிவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு பொருள் மீதும் அழுக்கு படிந்துவிட்டால், அழுக்கின் சுமை ஏறிவிடும். எனவே அனைத்து சுமைகளையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு எனது என்ற அழுக்கை அகற்றிவிடுங்கள். அப்பொழுது ஃபரிஸ்தா ஆகிவிடுவீர்கள்.



    சுலோகன்:

    ஓவ்வொரு சூழ்நிலையிலும் முழுமையாகத் தேர்ச்சி பெறக்கூடியவர்கள் தான் மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்கள்.



    ***OM SHANTI***