BK Murli 16 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 16 July 2017 Tamil

    16.07.2017    காலை முரளி    ஓம் சாந்தி   ''அவ்யக்த பாப்தாதா''   ரிவைஸ்     20.04.1982   மதுபன்


    '' பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி ஆவதற்கு அனைவருக்கும் சமமான அதிகாரம் இருக்கிறது''

    இன்று ஞான கங்கைகள் மற்றும் ஞானக்கடலின் சந்திப்பு மேளா (கொண்டாட்டம்). இந்த மேளாவில் அனைத்து குழந்தைகளும் தந்தையுடன் ஆன்மீக சந்திப்பை அனுபவம் செய்கிறார்கள். தந்தையும் ஆன்மீக குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். மேலும் குழந்தைகளும் ஆன்மீகத் தந்தையை சந்தித்து மகிழ்ச்சியடைகிறார் ஏனென்றால் ஒவ்வொரு கல்பத்திலும் தெரிந்து கொண்ட ஆத்மாக்கள் தன்னுடைய புத்தி யோகத்தின் மூலம் நானும் சென்ற கல்பத்தின் ஆத்மா அந்த தந்தையை மீண்டும் அடைந்து விட்டேன் என்று தெரிந்திருக்கிறார். எனவே அதே ஆனந்தம், சுகம், அன்பு மற்றும் குஷியின் ஊஞ்சலில் ஆடுவதின் அனுபவம் செய்கிறார். அந்த மாதிரி அனுபவத்தை செய்த சென்ற கல்பத்தின் குழந்தைகள் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே பழைய அறிமுகம் மீண்டும் நினைவில் வந்து விட்டது. அந்த மாதிரி நினைவு சொரூப அன்பான ஆத்மாக்கள் இந்த அன்புக்கடலில் மூழ்கி அன்பிலேயே ஐக்கியமாகி இருக்கும் ஆத்மாக்கள் தான் இந்த விசேஷ அனுபவத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அனைத்துக் குழந்தைகளும் அன்பிற்குரிய ஆத்மாக்கள் தான். அன்பின் சுத்தமான சம்மந்தத்தின் காரணமாக இங்கு வரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இருந்தாலும் அன்பிலும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். சிலர் அன்பில் மூழ்கி இருக்கும் ஆத்மாக்கள் மேலும் சிலர் சந்திப்பு செய்வதின் அனுபவத்தை அவரவர்களின் சக்திக்கேற்றபடி அனுபவம் செய்பவர்கள். மேலும் சிலர் இந்த ஆன்மீக சந்திப்பின் ஆனந்தத்தைப் புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இருந்தாலும் அனைவரையும் அன்பிற்குரிய ஆத்மாக்கள் என்று கூறுவோம். அன்பின் சம்மந்தத்தின் ஆதாரத்தில் முன்னேறிக் கொண்டே மூழ்கியிருக்கும் சொரூபம் வரையிலும் வந்து சேர்ந்து விடுவார்கள் புரிந்து கொள்வது முடிவடைந்து மூழ்கியிருக்கும் அனுபவம் ஆகியே விடும். ஏனென்றால், மூழ்கக் கூடிய ஆத்மாக்கள் சமமான ஆத்மாக்கள். அப்படி சமம் ஆவது என்றால், அன்பில் மூழ்கி விடுவது. எனவே எந்த அளவு தந்தைக்குச் சமமாக ஆகியிருக்கிறேன் என்று உங்களை நீங்களே தெரிநது கொள்ள முடியும். தந்தையின் எண்ணம் என்னவாக இருக்கிறது. அந்த எண்ணத்திற்குச் சமமாக அன்பில் ஐக்கியமாகி யிருக்கும் ஆத்மா என்னுடைய எண்ணம் இருக்கிறதா? அந்த மாதிரி வார்த்தைகள், காரியம், சேவை, சம்மந்தம் அனைத்திலும் தந்தைக்குச் சமமாக ஆகியிருக்கிறேனா? அல்லது இதுவரை பெரிய வித்தியாசம் இருக்கிறதா அல்லது சிறிதளவு வித்தியாசம் இருக்கிறதா? வித்தியாசம் இல்லாமல் ஆவது தான் மனமனாபவ-வின் மஹா மந்திரம் இந்த மஹாமந்திரத்தை ஒவ்வொரு எண்ணம் மற்றும் ஒவ்வொரு வினாடி சொரூபத்தில் கொண்டு வர வேண்டும். இதைத்தான் சமமான மற்றும் மூழ்கியிருக்கும் ஆத்மா என்று கூறுவது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அனைத்து குழந்தைகளும் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும் என்று எல்லைக்கப்பாற்பட்ட எண்ணம் வைப்பவர். நான் குருவாக ஆக வேண்டும் மற்றும் இவர்கள் சிஷ்யர்கள் ஆக வேண்டும் என்று அப்படியில்லை. அனைவரும் தந்தைக்குச் சமமாகி தந்தையின் இதய சிம்மாசனதாரி ஆகட்டும். இங்கு யாரும் கத்தியில் (இருக்கையில்) அமருபவராக ஆக வேண்டாம். இதுவோ ஒரிருவர் ஆவார்கள், ஆனால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, எல்லைக்கப்பாற்பட்ட இதய சிம்மாசனதாரி ஆக்குகிறார், அதற்கு அனைத்து குழந்தைகளும் அதிகாரி ஆக முடியும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பொன்னான வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் வந்திருந்தாலும், இடையில் வந்திருந்ததாலும் அல்லது இப்பொழுது வந்திருந்தாலும் அனைவருக்கும் சமமாக ஆவதற்கு அதாவது இதய சிம்மாசனதாரி ஆவதற்கு அனைவருக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. பின்னால் வந்தவர்கள் முன்னுக்குச் செல்ல முடியாது என்று அப்படி இல்லை. யாரும் முன்னுக்கு செல்ல முடியும். ஏனென்றால் இது எல்லைக்கப்பாற்பட்ட செல்வம் முதலில் வந்தவர்கள் எடுத்துவிட்டார்கள் எனவே முடிந்துவிட்டது என்று அப்படியில்லை. அந்த அளவு அளவற்ற செல்வம் இதற்குப் பிறகு கூட யார் எவ்வளவு பெற விரும்புகிறார்களோ அந்த அளவு பெற முடியும். ஆனால் இது அதிகாரத்தைப் பெறுபவர்களின் மேல் இருக்கிறது. ஏனென்றால், அதிகாரத்தை பெறுவதின் கூடவே அடிமைத்தனத்தின் சம்ஸ்காரத்தை விட வேண்டும், வேறு ஒன்றும் இல்லை அடிமைத்தனம் மட்டும் இருக்கிறது ஆனால் எப்பொழுது விடுவதற்கான விசயம் வருகிறது என்றால், தன்னுடைய பலவீனத்தின் காரணமாக இந்த விசயத்தில் செய்ய முடியாமல் இருந்து விடுகிறார்கள். பிறகு விடுபடுவது இல்லை என்று கூறுகிறார்கள். சம்ஸ்காரம் விடுபடுவதில்லை என்று சம்ஸ்காரத்தின் மீது பழி கூறுகிறார்கள், ஆனால் அவர்களே விடுவதில்லை. ஏனென்றால் சைதன்ய சக்திசாலியானது ஆத்மாவா அல்லது நம்ஸ்காரமா? சம்ஸ்காரம் ஆத்மாவை தாரணை செய்ததா அல்லது ஆத்மா சம்ஸ்காரத்தை தாரணை செய்ததா? ஆத்மாவின் சைதன்ய சக்தி சம்ஸ்காரமா அல்லது சம்ஸ்காரத்தின் சக்தி ஆத்மாவா? எப்பொழுது தாரணை செய்வது ஆத்மா என்றால், விட வேண்டியதும் ஆத்மா தானேயின்றி சம்ஸ்காரம் அதுவாகவே விடுபடாது. பிறகு சம்ஸ்காரம், சுபாவம், பழக்கம் மற்றும் இயல்பு என்று பல பல பெயர் கொடுக்கிறார்கள். ஆனால் சொல்லக் கூடிய சக்தி எது? பழக்கம் பேசுகிறதா அல்லது ஆத்மா பேசுகிறதா? அப்படியானால் எஜமானனா அல்லது அடிமையா? அப்படி அதிகாரத்தை அதாவது எஜமானத் தன்மையை தாரணை செய்வதில் எல்லைக்கப்பாற்பட்ட வாய்ப்பு இருந்தும் அவரவர்கள் சக்திக்கேற்றபடி பெறுபவர்கள் ஆகிவிடுகிறார்கள் காரணமாக எது ஆனது? என்னுடைய பழக்கம் என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய நேச்சர் என்று கூறியும் எஜமானத் தன்மை இல்லை. ஒரு வேளை என்னுடையது என்றால், அவரே தான் எஜமானர் இல்லையா? அந்த மாதிரி எஜமானன் என்ன விரும்புகிறாரே அதைச் செய்ய முடியவில்லை, பரிவர்த்தனை செய்ய முடியவில்லை, அதிகாரத்தை வைக்க முடியவில்லை என்றால் அவரை என்னவென்று கூறுவது? அந்த மாதிரி பலஹீனமான ஆத்மாவை அதிகாரி ஆத்மா என்று எப்படிக் கூறுவோம்? திறந்த வாய்ப்பு இருந்த போதிலும், தந்தை வரிசைக் கிரமமாகக் கொடுப்பதில்லை ஆனால் அவர்களே அப்படி ஆக்கி விடுகிறார்கள். தந்தையின் இதய சிம்மாசனம் முழு உலகின் ஆத்மாக்களையும் கூட அமர வைக்க முடியும். அந்த அளவு விராட சொரூபமானது, ஆனால் அமருவதற்கு தைரியம் வைப்பவர்கள் எத்தனை பேர் ஆகிறார்கள். ஏனென்றால், இதய சிம்மாசனத்தில் அமருவதற்காக இதயத்தின் ஒப்பந்தம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எனவே தான் தில்வாலா (பெரிய இதயம் உள்ளவர்) என்று தந்தைக்குப் பெயர் வந்தது. அப்படி இதயத்தை கொடுக்கவும் செய்கிறார். பறிக்கவும் செய்கிறார் எப்பொழுது ஒப்பந்தம் ஆகத் தொடங்குகிறது என்றால், மிகுந்த சாதுர்யம் செய்கிறார்கள். முழுமையான ஒப்பந்தம் செய்வதில்லை கொஞ்சம் வைத்துக் கொள்வார்கள், பிறகு என்ன கூறுகிறார்கள்? மெது மெதுவாக செய்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தவணை முறையில் செய்வதை விரும்புகிறார்கள். ஒரே வெட்டில் இரண்டு துண்டு என்ற ஒப்பந்தம் செய்பவர்கள் ஒருவருடையவராக இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் ஒரே சீராக இருக்கிறார்கள். மேலும் அனைத்திலும் நம்பர் ஒன் ஆகிவிடுகிறார்கள். மற்றபடி கொஞ்சம், கொஞ்சம் செய்து ஒப்பந்தம் யார் செய்கிறார்களோ அவர்கள் ஒன்றிற்கு பதிலாக இரண்டு படகுகளில் கால் வைப்பவர்கள் எப்பொழுதும் ஏதாவது குழப்பத்தில், சஞ்சலத்தில் இருப்போர் ஒரே சீராக இருப்பவராக ஆவதில்லை. எனவே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால், ஒரு வினாடியில் செய்யுங்கள். இதயத்தைத் துண்டு துண்டாக ஆக்காதீர்கள். இன்று தன்னிடமிருந்து இதயத்தை அகற்றி தந்தை மேல் வைத்தீர்கள், என்றால் ஒரு துண்டு கொடுத்தீர்கள் என்றால் ஒரு தவணை கொடுத்தீர்கள். பிறகு நாளை உறவினர்களிடமிருந்து இதயத்தை அகற்றி தந்தையிடம் கொடுத்தீர்கள் என்றால், இரண்டாவது தவணை கொடுத்தீர்கள், இரண்டாவது துண்டு கொடுத்தீர்கள் இதனால் என்னவாகும்? தந்தையின் செல்வத்தின் அதிகாரத்திற்கும் துண்டிற்கு உரியவர்கள் ஆகிறீர்கள். பிராப்தியின் அனுபவத்தில், அனைத்து பிராப்திகளின் அனுபவத்தை அடைய முடியாது. கொஞ்சம், கொஞ்சம் அனுபவம் செய்தார் இதனால் எப்பொழுதும் நிரம்பியவராக, திருப்தியானவராக இருக்கமாட்டார், எனவே அனேக குழந்தைகள் இன்று வரையிலும், எப்படி மற்றும் எந்தளவு இருக்க வேண்டுமோ அந்தளவு இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் முழுமையாக அனுபவம் ஆவதில்லை, கொஞ்சம் ஆகிறது என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் ஆகிறது ஆனால் எப்பொழுதும் ஆவதில்லை என்று கூறுகிறார்கள் ஏனென்றால், முழுமையான ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அனுபவமும் முழுமையாக ஆவதில்லை. ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வைக்கவில்லை. எப்போதாவது செய்கிறார்கள் என்றால் அனுபவமும் எப்போதாவது ஆகிறது. எப்பொழுதும் ஆவதில்லை. உண்மையிலேயே இந்த ஒப்பந்தம் எவ்வளவு பிராப்தி செய்விக்கக் கூடியது. அலைந்து கொண்டிருக்கும் இதயத்தை கொடுப்பது மற்றும் திலாராம் தந்தையின் இதய சிம்மாசனத்தின் மேல் சுலபமாக அதிகாரத்தை அடைவது. இருந்தும் ஒப்பந்தம் செய்வதற்குத் தைரியம் இல்லை. தெரிந்தும் இருக்கிறார்கள், கூறவும் செய்கிறார்கள் ஆனால் இருந்தும் தைரியம் இல்லாதவர்கள் பாக்கியத்தை அடைய முடியாது. மிக மலிவான ஒப்பந்தம் தான் இல்லையா? அல்லது கடினமாக இருக்கிறதா? சொல்வதற்கோ மலிவு என்று அனைவரும் கூறுகிறார்கள். எப்பொழுது செய்யத் தொடங்குகிறார்களோ அப்பொழுது கடினமாக்கி விடுகிறார்கள். உண்மையில் கொடுப்பது, கொடுப்பதல்ல. இரும்பைக் கொடுத்துவிட்டு வைரத்தைப் பெறுவது என்பது கொடுத்ததாக ஆனதா அல்லது பெறுவதாக ஆனதா? அப்படியானால் பெறுவதற்கும் தைரியம் இல்லையா என்ன? எனவே தான் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அனைவருக்கும் ஒரே மாதிரி தான் கொடுக்கிறார். ஆனால் பெறுபவர்கள் திறந்த வாய்ப்பு இருந்த போதிலும் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள். வாய்ப்பை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு என்னால் செய்ய முடிந்திருக்கும், ஆனாலும் செய்யவில்லை என்ற, இந்தக் காரணம் என்ற முறையீட்டை யாரும் கேட்க மாட்டார்கள். முன்பே வந்திருந்தேன் என்றால் முன்னுக்கு சென்றிருப்பேன். இந்த சூழ்நிலைகள் இல்லாமல் இருந்திருந்தால் முன்னுக்குச் சென்றிருப்பேன். இந்த முறையீடுகள் தனது பலஹீனங்களின் விசயங்கள். சுய நிலையின் முன்பு சூழ்நிலைகள் ஒன்றும் செய்ய முடியாது. விக்ன விநாசக் (தடைகளை அழிக்கும்) ஆத்மாக்களின் எதிரில் தடை முயற்சி செய்வதில் தடை போட முடியாது. நேரத்தின் வேகத்திற்கேற்றபடி முயற்சி செய்வதன் வேகம் இல்லை. இரண்டு வருமானவர் முன்னுக்கு செல்ல முடியும், இரண்டு மாதமானவர் முன்னுக்கு செல்ல முடியாது என்று அப்படியில்லை. இங்கேயோ ஒரு நொடியில் செய்யும் ஒப்பந்தம். இரண்டு மாதமோ எவ்வளவு நீண்ட காலம். ஆனால் எப்பொழுது வந்தீர்களோ அப்பொழுதிலிருந்து தீவிர வேகம் இருக்கிறதா? எனவே எப்பொழுதும் தீவிர வேகத்தில் செல்லும் ஆத்மா, அனேக அலட்சியமான ஆத்மாக்களை விட முன்னுக்குச் செல்ல முடியும். எனவே தற்சமயத்திற்கு மற்றும் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாக்களுக்கு - தனக்காக என்ன விரும்புகிறார்களோ எவ்வளவு முன்னேறிச் செல்ல விரும்புகிறார்களோ, எந்தளவு அதிகாரி ஆக விரும்புகிறார்களோ எந்தளவு அதிகாரி ஆக விரும்புகிறார்களோ அந்தளவு சகஜமாக ஆக முடியும் என்ற வரதானம் இருக்கிறது. ஏனென்றால் இப்போதைய நேரம் வரம் பெற்ற நேரம். வரமளிக்கும் தந்தையின் வரம் பெற்ற ஆத்மாக்கள் நீங்கள். வரம்பெறும் ஆத்மாக்களாக ஆக வேண்டும் என்றால் இப்பொழுது ஆகுங்கள், பிறகு வரம் பெறும் நேரமும் முடிந்து விடும். பிறகு கடும் உழைப்பிற்குப் பின்பும் ஒன்றும் அடைய முடியாது எனவே என்ன அடைய வேண்டுமோ அதை இப்பொழுது அடைந்து கொள்ளுங்கள். என்ன செய்ய வேண்டுமோ அதை இப்பொழுது செய்து விடுங்கள். யோசிக்காதீர்கள் ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதை திட எண்ணத்தோடு செய்து விடுங்கள் மேலும் வெற்றியடையுங்கள். நல்லது !



    அந்த மாதிரியான அனைத்து அதிகாரி குழந்தைகளுக்கும் ஒரு நொடியில் ஒப்பந்தம் செய்பவருக்கு அதாவது என்ன நினைத்தாரோ அதைச் செய்தார், அந்த மாதிரி எப்பொழுதும் தைரியமுள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் எஜமானனாகி பரிவர்த்தனை (மாற்றும்) சக்தி மூலம் பலவீனங்களை அகற்றக் கூடிய என்ன சிரேஷ்ட காரியம் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யக் கூடிய அந்த மாதிரி மாஸ்டர் சர்வ சக்திவான், இதய சிம்மாசனதாரி அதிகாரி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்

    !

    டீச்சர்களுடன் சந்திப்பு :

    தன்னை எப்பொழுதும் சேவாதாரி என்று புரிந்து கொண்டு சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? சேவையின் வெற்றிக்கான ஆதாரம் விசேஷமாக சேவாதாரிக்காக என்ன இருக்கிறது? தெரிந்திருக்கிறீர்களா? வெற்றி இருக்க வேண்டும் என்று தான் எப்பொழுதும் சேவாதாரி விரும்புகிறார். ஆனால் வெற்றியடைவதற்கான ஆதாரம் என்ன? இன்றைய நாட்களில் விசேஷமாக எந்த விசயத்தின் மேல் கவனம் ஈர்க்கிறோம்? (தியாகத்தின் மேல்) தியாகம் இன்றி தபஸ்யாவின் வெற்றி இல்லை. அப்படி சேவாதாரி என்றால், தியாகம் நிறைந்தவர் மற்றும் தபஸ்யா செய்பவர். தபஸ்யா என்றால் என்ன? ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. இதுதான் ஒவ்வொரு நேரத்தின் தபஸ்யா. மேலும் தியாகம் எது? அதைப் பற்றியோ மிகவும் கூறியிருக்கிறோம். ஆனால் சார ரூபத்தில் சேவாதாரிகளின் தியாகம் எப்படி நேரமோ எப்படி பிரச்சனைகளோ, எப்படி மனிதர்களோ அதற்கேற்ப தன்னை வளைத்துக் கொண்டு தனக்கு நன்மை மற்றும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக எப்பொழுதும் இலகுவானவராக இருக்க வேண்டும். எப்படி சூழ்நிலையோ அதாவது எங்காவது தன்னுடைய பெயரை, சம்ஸ்காரங்களை, வீணான எண்ணங்களை, ஸ்தூல அற்பக்கால சாதனங்களை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்றால் அந்த சூழ்நிலையில் மேலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் தன்னுடைய உயர்ந்த நிலையை உருவாக்க முடிய வேண்டும். அதற்காக எப்படிப்பட்ட தியாகத்தைச் செய்ய வேண்டியதாக இருந்தாலும் செய்து விடுங்கள். தான் வளைந்து கொடுக்க வேண்டும் இதைத்தான் தியாக மூர்த்தி என்று கூறுவது. தியாகம், தபஸ்யா பிறகு சேவா. தியாகம் மற்றும் தபஸ்யா தான் சேவையின் வெற்றிக்கான ஆதாரம். நான் தியாகம் செய்தேன் என்று தியாகத்தின் அபிமானமும் இல்லாத தியாகியாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த எண்ணமும் வருகிறது என்றால் இதுவும் தியாகம் இல்லை.



    சேவாதாரி என்றால் பெரியவர்களின் டைரக்ஷன் (வழிகாட்டுதலை) உடனே நடைமுறையில் கொண்டு வருபவர். கூடியிருக்கும் மக்களுக்காக ஏதாவது டைரக்ஷன் கிடைத்தாலும், நான் சரிதான் என்று நிரூபிக்க முயலுதல் கூடாது. நீங்கள் சரிதான் ஆனால் மக்கள் கூட்டத்திற்காக பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்களிடமிருந்து டைரக்ஷன் கிடைக்கிறது என்றால் சரிங்க ஐயா! அப்படியே ஆகட்டுங்க.... என்று சொல்வது தான் சேவாதாரிகளின் விசேஷம். இது தலை வணங்குவது அல்ல, கீழே இறங்குவது அல்ல ஆனால் இருந்தும் உயர்வாகச் செல்வது. சில நேரம் நான் செய்தேன் என்றால், நான் தாழ்ந்த நிலைக்குச் சென்று விடுவேன். என்னுடைய பெயர் குறைந்து விடும், என்னுடைய பெர்சனாலிட்டி (தனித்தன்மை) குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. ஏற்று நடப்பது என்றால், மரியாதைக்குரியவர் ஆவது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் சுயமரியாதையைப் பெறுவது. எனவே தன்னுடைய மதிப்பு, மரியாதையையும் தியாகம் செய்யும் சேவாதாரியாக இருக்க வேண்டும். அற்பகால மதிப்பு மரியாதையை பெற்று என்ன செய்வீர்கள்? கட்டளைப்படி நடப்பவர் ஆவது தான் நிரந்தரமான மதிப்பு மரியாதையைப் பெறுவது. அழியாததைப் பெற வேண்டுமா அல்லது இப்பொழுது கிடைப்பதை பெற வேண்டுமா அப்படி சேவாதாரி என்றால் இந்த அனைத்து விசயங்களின் தியாகம் செய்வதில் எப்பொழுதும் எவரெடியாக இருப்பது. பெரியவர்கள் சொன்னார்கள் மற்றும் செய்தேன். அந்த மாதிரியான விசேஷ சேவாதாரிகள் அனைவருக்கும் மற்றும் தந்தைக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். வளைந்து கொடுப்பது என்றால் சிறியவர்களாக ஆவதில்லை, ஆனால் வெற்றி என்ற பழத்தை நன்றாகப் பழுக்க வைப்பது. அந்த நேரம் என்னுடைய பெயர் கீழே சென்று கொண்டிருக்கிறது, அவர் பெரியவர் ஆகிவிட்டார், நான் சிறியவன் ஆகிவிட்டேன், என்னை கீழே இறக்கி விட்டார்கள், அவரை உயர்த்தி விட்டார்கள் என்று அனுபவம் ஆகும். ஆனால் நடப்பதோ ஒரு நொடிக்கான விளையாட்டு ஒரு நொடியில் வெற்றி ஏற்பட்டு விடுகிறது, ஒரு நொடியில் தோல்வி ஏற்பட்டு விடுகிறது. ஒரு நொடியின் தோல்வி நிரந்தரமான தோல்வி ஆகிவிடுகிறது. அது சந்திரவம்சத்தின் வில் ஏந்தியவராக ஆக்கி விடுகிறது. மேலும் ஒரு நொடியின் வெற்றி நிரந்தர குஷியை பிராப்தி செய்விக்கிறது அதனுடைய அடையாளமாக ஸ்ரீ கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பதாகக் காண்பித்திருக்கிறார்கள். சந்திரவம்சத்து வில்லு ஏந்தியவர் எங்கே மற்றும் புல்லாங்குழல் வாசிப்பவர் எங்கே? எனவே ஒரு நொடிக்கான விசயம் இல்லை, ஆனால் ஒரு நொடியின் ஆதாரம் எப்பொழுதும் இருக்கிறது. எனவே இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டு எப்பொழுதும் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். பிரம்மா பாபாவைப் பார்த்தீர்களா பிரம்மா பாபா தன்னைத் தானே எந்தளவு தாழ்த்திக் கொண்டார், குழந்தைகளின் காலை பிடித்துவிடுவதற்கும் தயாராகி அவ்வளவு பணிவானவராகி சேவாதாரி ஆனார். குழந்தைகள் என்னை விட முன்னுக்கு இருக்கிறார்கள், குழந்தைகள் என்னை விட நன்றாக சொற்பொழிவு நிகழ்த்த முடியும். முதலில் நான் என்று ஒருபொழுதும் சொன்னதில்லை. குழந்தைகள் முன்னுக்கு, முதலில் குழந்தைகள், பெரிய குழந்தைகள் என்று கூறினார். அப்படி தாழ்த்திக் கொள்வது தாழ்ந்து விடுவதல்ல, உயர்ந்தது செல்வது. இதைத் தான் உண்மையான நம்பர் ஒன் தகுதியான சேவாதாரி என்று கூறுவது. அனைவருக்கும் இலட்சியமோ அந்த மாதிரித்தான் இல்லையா? குஜராத்தில் நிறைய சேவாதாரிகள் உருவாகியிருக்கிறார்கள், ஆனால் குஜராத்தின் நதிகள் குஜராத்திலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. குஜராத்திற்கு மட்டும் நன்மை செய்பவராக ஆகாமல் உலகிற்கே நன்மை செய்பவராக ஆகுங்கள். எப்பொழுதும் எவரெடியாக இருங்கள். இன்று ஏதாவது டைரக்ஷன் கிடைக்கிறது என்றால் சரி ஐயா! என்று கூறுங்கள். என்னவாகும், எப்படியாகும் டிரஸ்டிக்கு என்ன எப்படி என்று என்ன யோசிக்க வேண்டியதிருக்கிறது. உங்களை நீங்களாகவே சமர்ப்பித்தீர்கள் என்றால் விடுபட்ட நிலையில் இருப்பீர்கள். பற்றுதல், ஈர்ப்பிலிருந்து விலகிவிடுவீர்கள். இன்று இங்கு இருக்கிறீர்கள், நாளை வேறு எங்கு சென்றாலும் விலகியிருப்பவராக ஆகிவிடுவீர்கள். இங்கேயே இருக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஆக வேண்டும், கொஞ்சம் ஆக்க வேண்டும் என்பதோ இருக்கும். இன்று இங்கே நாளை அங்கே! பறவை இன்று ஒரு கிளையில் இருக்கிறது, நாளை இன்னொரு கிளையில் இருக்கும். அதனால் மன நிலை விலகி இருப்பதாக வேண்டும். சில இடங்களில் 20 வருடங்கள் இருந்தாலும் எப்பொழுதும் எவரெடியாக இருங்கள். எப்படி ஆகும் என்று நீங்களே யோசிக்காதீர்கள். இதைத் தான் மஹாதியாகி என்று கூறுவது நல்லது.



    வரதானம்:

    சங்கமயுக நேரத்தின் மகத்துவத்தைத் தெரிந்து பரமாத்ம ஆசீர்வாதங்களினால் பையை நிரப்பும் மாயாவை வென்றவர் ஆகுக !



    சங்கம யுகத்தின் ஒரு வினாடி மற்ற யுகங்களின் ஒரு வருடத்தையும் விட அதிகம். இந்த நேரம் ஒரு வினாடியை இழந்தாலும் ஒரு வினாடி அல்ல மிக அதிகமாக இழந்தீர்கள். இந்தளவு மகத்துவம் எப்பொழுதும் நினைவு இருக்கிறது என்றால், ஒவ்வொரு வினாடியும் பரமாத்ம ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். மேலும் யாருடைய பை பரமாத்மாவின் ஆசீர்வாதங்களினால் எப்பொழுதும் நிரம்பியிருக்கிறதோ அவரிடம் மாயா ஒருபொழுதும் வர முடியாது. தூரத்திலிருந்தே ஓடி விடும். எனவே நேரத்தை சேமிக்க வேண்டும். இது தான் தீவிர முயற்சி. தீவிர முயற்சியாளர் என்றால் எப்பொழுதும் மாயாவை வென்றவர்

    .

    சுலோகன் :

    யார் கட்டளைப்படி நடப்பவராக இருக்கிறாரோ அவர் தான் தந்தையின் மற்றும் குடும்பத்தின் ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமானவர்.



    ***OM SHANTI***