BK Murli 17 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 17 July 2017 Tamil

    17.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே - இரட்டை கிரீடம் உடையவர்கள் ஆவதற்காக இருவித ஹிம்சைகளை விட்டு விட வேண்டும். மறைமுகமான படை வீரராகி எதிரியாகிய மாயாவை வெற்றி அடைய வேண்டும்.



    கேள்வி:

    வாய் சிறியது, பேசுகின்ற பேச்சோ பெரியது.... இந்த பழமொழி யாருக்காக? மற்றும் ஏன் பிரசித்தமாக இருக்கிறது?



    பதில்:

    இந்த பழமொழி பரமாத்மாவிற்கானது. அவர் சாதாரண உடலில் அமர்ந்து இந்த சின்ன வாய் மூலமாக உங்களுக்கு பெரிய பெரிய விஷயங்களைக் கூறுகின்றார். ஏழைப் பங்காளனாகிய தந்தை உங்களை ஏழையிலிருந்து பணக்காரராக மாற்றுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் கூட நாங்கள் கட்டாயமாக படை வீரர்கள் என்கிறீர்கள். நாங்கள் இராவணனை வெற்றி அடைந்து முழு உலகத்தில் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். ஆக இது கூட வாயோ சிறியது, பேசுவதோ பெரியது என்பது போலாகும். மனிதர்கள் இந்த விஷயங்களை கேட்டு சிரிக்கிறார்கள். புரிந்துக் கொள்வதில்லை. உங்களைப் போன்று சொல்ல யாருக்கும் தெரியவும் தெரியாது.



    பாட்டு:

    கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று...........



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் மற்றும் பொருளைப் புரிந்துக் கொண்டீர்கள். யாரை பதீத பாவனன் என்கிறார்களோ அவர் மீது நிச்சயம் கூட இருக்கிறது. அந்த தந்தை இப்போது வந்திருக்கிறார். பதீத பாவனர் உடன் ஏழை பங்காளன் என்ற வார்த்தை கூட வருகிறது. இச்சமயம் முழு உலகமும் நரகமாக இருக்கிறது. ஏழைகள் கூட நிறைய இருக்கிறார்கள். முழு உலகமும் ஏழையாக இருக்கிறது. ரஷ்யாவும் அமெரிக்காவும் பணக்காரர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களிடம் என்ன இருக்கிறதோ அது சொர்க்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒன்றுமே இல்லை என அறிகிறீர்கள். அனைத்து சாதனங்கள், வைபவங்கள் ஒன்றாகச் சேர்த்தாலும் கூட சொர்க்கத்தோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. சீனா இவ்வளவு மில்லியன் பவுண்ட் தங்கம் வாங்க முடியும் என எழுதுகிறார்கள். அப்படிப் பார்க்கையில், அமெரிக்கா கூட மிகவும் பணக்கார நாடாக இருக்கிறது. ஆனால் நம்முடைய இராஜ்யம் அதாவது சுய இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு இது ஒன்றுமே இல்லை. இத்தனையும் இருந்தாலும் ஏழைகளாக இருக்கின்றனர். சொர்க்கத்துடன் ஒப்பிடுகையில் இந்த முழு உலகமும் ஏழையாக இருக்கிறது. தந்தையின் பெயரே ஏழை பங்காளன். பாரதம் சொர்க்கத்தில் எவ்வளவு பணக்கார நாடாக இருந்தது. ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இப்போது இதன் நிலை என்ன? ஏழைப் பங்காளனாகிய தந்தை உங்கள் முன் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுக்க வந்திருக்கிறார். தந்தை நம்மை எவ்வளவு பணக்காரராக மாற்றுகிறார் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் மகாராஜா மகாராணி எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறோம். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பெரிய கோவில்களைக் கட்டுகிறார்கள். எனவே பாபாவின் ஏழை பங்காளன் என்ற பெயர் அழகாக இருக்கிறது அல்லவா? அது புதிய உலகம் ஆகும். இது பழைய உலகம் ஆகும். பழைய உலகத்தின் மனிதர்கள் என்னவாகி விட்டார்கள் என நினைக்கிறார்கள். சொர்க்கம் சுகத்தின் பொக்கிஷம் ஆகும். யாராவது இந்த துக்க உலகத்தினை மாற்றக் கூடியவர்கள் இருப்பார்கள் அல்லவா? எப்படி மாற்றுகிறார்கள். அதைக் கூட இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். வேறு எந்த சண்டை சச்சரவின் விஷயமும் இல்லை. கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். உலகத்தை மாற்றக் கூடியவர் கிருஷ்ணராக இருக்க முடியாது. உலகத்தை மாற்றக் கூடியவருக்கு கடவுள் என கூறப்படுகிறது. இப்போது பாபா நம்மை எதிலிருந்து என்னவாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் எதையுமே அறியவில்லை. நாம் விஷ்வத்திற்கு மகாராஜா மகாராணி ஆகிறோம். பெயரே கோல்டன் ஏஜ். தங்க உலகம் துவாரகா கூட தங்க மயமானது என்கிறார்கள். துவாரகா என்றால் நகரம் முழுவதும் தங்கமாகும். எனவே இவ்வளவு அளவற்ற செல்வம் இருந்திருக்கும். குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் கூட கிடைத்திருக்கிறது. நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல அடிக்கடி சாட்சாத்காரம் கிடைக்கும் என பாபா கூறுகிறார். நமது தேசத்திற்கு அருகாமையில் வரும் போது மனதில் இப்போது நாம் சென்றடைந்து விடுவோம் எனத் தோன்றுகிறது. இந்த சண்டை கூட நிச்சயமாக நடக்கும். அப்போது தான் பழைய உலகம் அழியும் என நீங்கள் அறிகிறீர்கள். டெல்லி பழையதாக இருந்தது. இப்போது புதியதாக இருக்கிறது. இந்த முழு உலகமும் சுடுகாடாக இருக்கிறது. பிறகு சொர்க்கமாகும் என அறிகிறீர்கள். பாபா நமக்கு புது உலகத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏழை பாரதத்திற்கு பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கின்ற நாள் இன்று பாரதத்திற்கு வந்திருக்கின்றது. புதுடெல்லி என முழுவதற்கும் கூற முடியாது. புதிய உலகில் புதுடெல்லி என்பார்கள். இராம இராஜ்யம் மீண்டும் என காந்திஜீ கூறினார். இப்போது கூட கூறுகிறார்கள். ஆகவே இப்போது நிச்சயமாக இராவண இராஜ்யமாக இருக்கிறது. இன்னார் சொர்க்கத்திற்குப் போய் விட்டார் என்கிறார்கள் என்றால் நிச்சயமாக நரகத்திலிருந்தார். இப்போது தான் சொர்க்கத்திற்குப் போய் விட்டார். சொர்க்கத்தில் இந்த வார்த்தையைக் கூற மாட்டார்கள். இங்கே எப்படி சொர்க்கத்தை நினைக்க வேண்டுமோ அப்படி தந்தையையும் நினைக்க வேண்டும். யாராவது இறந்து விட்டால் வைகுண்ட பதவியை அடைந்தார் என்கிறார்கள். அந்த சொர்க்கத்தில் எந்த தர்மத்தினர் வசிக்கிறார்கள். இறை தந்தை தான் சொர்க்கத்தைப் படைக்கிறார். எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கிறார் எனப்பார்க்கிறீர்கள். நாடகத்தின் இரகசியத்தை நீங்கள் தான் அறிந்திருக்கிறீர்கள். எந்தக் காட்சி எந்த சமயம் நடக்கிறதோ பிறகு திரும்பவும் நடக்கும் 5000 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் நடக்கும். கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள், முடிந்து விட்டது. உலகின் வரலாறு புவியியல் மீண்டும் திரும்ப நிகழும். கிறிஸ்தவ தர்மம் இருக்காது. மீண்டும் கிறிஸ்து வந்து ஸ்தாபனை செய்வார். இந்த விஷயங்கள் உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. நான் மீண்டும் 5000 வருடத்திற்குப் பிறகு இராஜயோகத்தை கற்பிப்பதற்காக வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். நான் உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடை ரகசியத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என டீச்சர் கூறுவார். இந்த ஞானம் பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் தர முடியாது. இந்த விஷயங்கள் சாஸ்திரங்களில் இல்லை. இதை யாரும் புரிந்துக் கொள்வது கிடையாது. கிறிஸ்து மீண்டும் 3000 வருடத்திற்குப் பிறகு வருவார். இப்போது 2000 ஆகிவிட்டது என்றால் 5000 வருடத்தின் கணக்காகிவிட்டது அல்லவா? ஆனால் யாருடைய புத்தியிலும் இல்லை.



    மீண்டும் சொர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். எந்த ஒரு சண்டையும் கிடையாது. பாபா இம்சை கொடுக்க முடியாது. நீங்கள் பாபா மூலமாக டபுள் அகிம்சையாளராகி டபுள் கிரீடம் உடையவராக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். காமம் மிகப்பெரிய எதிரி என பாபா கூறுகின்றார். அதை வெற்றி அடைவதால் நீங்கள் பவித்ரமான உலகத்திற்கு அதிபதி ஆவீர்கள். இப்போது அந்த நேரம் தான் நடக்கிறது. சூழ்நிலைகளைக் கூட பார்த்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். இந்த பாரத போர் கூட 5000 வருடத்திற்கு முன்பு நடந்தது. பிறகு வெற்றி யாருக்கு கிடைத்தது. யாதவர் கௌரவர் அழிந்து விட்டனர். பிறகு விளைவு என்ன? எதையும் காண்பிக்கவில்லை. தந்தை வந்தார். மகாபாரத போர் நடந்தது. பிறகு என்னவாயிற்று? பாண்டவர்கள் மலையில் கரைந்து, இறந்து போனதாக காண்பிக்கிறார்கள். நாயையும் கூட உடன் காண்பிக்கிறார்கள். எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. எல்லையற்ற எவ்வளவு பெரிய சக்கரம், எத்தனை தர்மங்கள் இருக்கின்றது. உங்களுடைய புத்தியில் சுருக்கமாக அனைத்து ரகசியமும் இருக்கின்றது. முதன் முதலில் நீங்கள் மிகப் பெரிய பணக்காரராக இருந்தீர்கள். இப்போதோ மிகவும் ஏழையாகிவிட்டீர்கள். இப்போது மனிதர்கள் பெருகி விட்டனர். கடைசியில் இதைப் புரிந்துக் கொள்கின்றனர் அல்லவா? மேலும் சூழ்நிலைகள் இப்படி இப்படி இருக்கிறது என பேசுகிறார்கள். நாம் ஸ்ரீமத்படி நடந்து உயர்ந்ததிலும் உயர்ந்த இராஜ்யத்தை போன கல்பத்தைப் போலவே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். அந்த போதை ஏற வேண்டும் அல்லவா? மறைமுகமான போர் வீரர்கள் என்கிறார்கள் அல்லவா? நீங்கள் உண்மையில் உண்மையாகவே மறைவாக (குப்தமாக) இருக்கிறீர்கள். ஆனால் மிகவும் நன்றாக தெரிந்தவர் களாகவும் (பிரசித்தமாக) இருக்கிறீர்கள். அவர்கள் குப்தமான படை வீரர்கள் என்கிறார்கள். பிறகு இவ்வளவு நன்றாக பிரசித்தமாக இருக்கின்றனர். முக்கிய பிரமுகர்கள் கூட மலர்களை அர்ப்பணிப்பதற்காக செல்கின்றனர். நீங்கள் கூட எவ்வளவு அறிந்தவராகிறீர்கள். உங்கள் மீது எவ்வளவு மலர்களை அர்ப்பணிக்கிறார்கள். எவ்வளவு கோவில்களை உருவாக்குகிறார்கள். இப்போது உங்களை யாரும் அறியவில்லை. அவர்களோ துப்பாக்கி போன்றவைகளால் கொல்லப்படுகின்றனர். நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். பிறகு நீங்கள் விஷ்ணு மாலை அல்லது ருத்ர மாலையில் சுழற்றப்படுவீர்கள். ஆனால் சிவ சக்தி பாண்டவ சேனையினர் என்ன செய்தனர் என்பது கூட யாரும் புரிந்துக் கொள்ளவில்லை. நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது கூட எவ்வளவு சக்திசாலியான படை வீரர்கள். நீங்கள் யாருடன் போரிடுகிறீர்கள். இராவணனுடன். நீங்கள் யாரிடமாவது நாங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறோம் என கூறினால் கேட்டு சிரிப்பார்கள். சிறிய வாய், பேசுவதோ பெரிய விஷயம் என்கின்றனர் அல்லவா? நாம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போன்று வேறு யாருக்கும் பேசத் தெரியாது. எல்லையற்ற தந்தை வந்து இந்த சிறிய வாய் மூலமாக எவ்வளவு பெரிய விஷயங்களைப் பேசுகிறார். அவர்கள் சிறிய வாய் விஷயமோ பெரியது என்று கிருஷ்ணரைப் பற்றி சொல்லியிருப்பார்கள். ஆனால் கிருஷ்ணரோ சிறிய பிள்ளை. குழந்தைகளின் வாய் நிச்சயமாக சிறியதாக இருக்கும். வாய் சிறியது பேசுகின்ற விஷயம் பெரியது என்று பரமாத்மாவிற்காகத் தான் கூறுகிறார்கள். பாபா ஏழைப் பங்காளனாக இருக்கிறார். அனைவரையும் எவ்வளவு பணக்காரராக மாற்றுகிறார். பழைய உடலில் வருகின்றார். நீங்களும் ஏழை, பாரதமும் ஏழை, அவர்களைத்தான் பாபா, ஏழைப் பங்காளன் வந்து மாற்றுகிறார். பாபா நரகத்தை சொர்க்கமாக மாற்றுகிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஆழமான விஷயம். பாரதத்தை எப்படி சொர்க்கமாக மாற்றுவது என கூறுகிறார்கள். இது எப்படி முடியும்? கல்லூரி எப்படி இருக்கிறது பாருங்கள், யார் படிக்க வைக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறீர்கள். நீங்கள் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள் பாருங்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா? கல்ப கல்பமாக இவ்வாறு தான் நடக்கும். ஆரம்பத்திலிருந்து என்ன நடந்ததோ பாபா எப்படி வந்தாரோ அது திரும்ப நடக்கும் இவர்களுக்கு வந்து புரிய வைக்கின்றார். நீங்கள் உங்கள் பிறவிகளைப் பற்றி அறியவில்லை. நான் தெரிவிக்கிறேன். போன கல்பத்தில் யாருக்கு நிச்சயம் ஏற்பட்டதோ அவர்களுக்குத் தான் இப்போது நிச்சயம் ஏற்படும். மாயா குறைந்ததில்லை. நிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு நிச்சயத்தை ஏற்படுத்திய பிறகு கூட மாயா சந்தேக புத்தியாக்குகிறது. மேலும் சந்தேக புத்தி அடைந்து சென்றவர்களையும் கூட நிச்சய புத்தி உடையவர்களாகி அழைத்து வருகிறார்கள். உண்மையில் பாபாவின் ஞானம் மிகவும் அதிசயமானது என்பது புரிகிறது. எனவே தான் பகவானின் வழி பகவானுக்கு தான் தெரியும் என கூறப்படுகிறது. ஏழைப் பங்காளன் தந்தை வந்து எவ்வளவு பணக்காரராக மாற்றுகிறார். முழு உலகத்தையும் மாற்றுகிறார். அதைப் புதுப்பித்து உடலை கல்ப தருவாக மாற்றுகிறார். உங்களுடைய உடல் முதல் தரமாக மாறுகிறது. உண்மையில் சத்யுத்தில் நம்முடைய ஆயுள் நீண்டதாக இருந்தது என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுத்தீர்கள். இங்கே பாருங்கள் நிலைமை எப்படி இருக்கிறது. மரணத்தைப் பார்த்து பயந்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு காட்சிகள் கூட கிடைத்திருக்கிறது. நீங்கள் காட்டில் போகிறீர்கள். யாராவது உங்கள் முன் வருகிறார்கள். அவர்களுக்கு இவர் ஒரு தேவி என காட்சி கிடைக்கிறது. உடனே ஓடி விடுகிறார்கள். பாபா குழந்தைகளை எவ்வளவு பாதுகாக்கிறார். ஆகவே தான் உங்களின் பெயர் சக்தி என வைக்கப்பட்டிருக்கிறது. உங்களைப் பார்த்து அனைத்து மனிதர்களும் பயப்படுவார்கள். காளியிடம் எவ்வளவு பயம் இருக்கிறது. பயங்கர ரூபத்தைக் காண்பிக்கிறார்கள். இந்த காட்சி கூட கிடைத்திருக்கிறது. யாராவது திருடன் எதிரில் வந்தாலும் காளி ரூபத்தைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள். எவ்வளவு பாதுகாப்பும் உதவியும் செய்கிறார். யாரிடம்? இராவணனிடமிருந்து. உங்களுக்கு யுக்திகளையும் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பாபாவை நினைத்துக் கொண்டே இருந்தால் மாயை அருகில் வர வேண்டும் என்று பெயர் கூட எடுக்காது. ஆகவே, நிச்சயமாக உங்களது சார்ட்டை வையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். உங்களுடையது பந்தயமாகும். ரேஸ் நடக்கும் போது அவர்களைப் பார்க்கக் கூடியவர்கள் கூட இருக்கிறார்கள். எங்கேயும் எந்த குழப்பமும் நடக்கவில்லையா? நீங்கள் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஆகவே என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். மாயா மிகவும் விகல்பங்களைக் கொண்டு வரும் . ஒரு போதும் முன்னால் இது போன்ற எண்ணங்களே வந்ததில்லை என நினைப்பார்கள். இப்போது வயதானவராகி விட்டேன். இருப்பினும் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏன் வருகிறது? கனவுகள் கூட நிறைய வந்துக் கொண்டே இருக்கும். மாயாவின் புயலைப் பார்த்து பயப்படக் கூடாது. காம அக்னியில் ஒரு போதும் எரியக் கூடாது. இச்சமயம் அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து மடிந்துக் கொண்டிருக்கின்றனர் என பாபா புரிய வைத்துள்ளார். அழுக்கானவைகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். வெளி நாட்டில் 4-5 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்கிறார்கள். செய்தித் தாள்களில் இது போன்று நிறைய செய்திகள் வருகின்றன. பாபா முழு உலகத்திலும் என்னென்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்ற செய்திகளை உங்களுக்குக் கூறுகின்றார். வானொலி மூலமாக கூட எங்கேயும் பலத்த சண்டை நடைபெறவில்லையா எனத் தெரிகிறது. இப்போது நாம் மிகப் பெரிய பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். சொர்க்கத்திற்கு அதிபதியாகின்றோம். பிரஜைகள் கூட அங்கே மிகவும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்த பொருளும் இல்லை என்ற குறை இருக்காது. அதற்காக கண்டுபிடிப்பு செய்ய வேண்டும் என்பது கிடையாது. கிருஷ்ணர் மிகப்பெரிய பணக்காரர்! சிவபாபாவிடம் பைசா ஏதாவது இருக்கிறதா? கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு அதிபதியாக இருக்கிறார். நம்முடைய குறிக்கோள் எவ்வளவு பெரியது என நீங்கள் அறிகிறீர்கள். இந்த லஷ்மி நாராயணன் நிச்சயமாக மகாராஜா மகாராணியாக இருந்தனர். இப்போது இல்லை. இப்போது மீண்டும் பாபா இவ்வாறு மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது எவ்வளவு ஏழையாகி விட்டிருக்கின்றனர். எவ்வளவு பணக்கரராக இருந்தனர். உங்களுக்கு இந்த லஷ்மி நாராயணனின் வரலாறு புவியியலைப் பற்றித் தெரியும். தன்னுடைய 84 பிறவிகளைப் பற்றி அறிந்த மனிதர்கள் யாராவது இருப்பார்களா? இப்போது உங்களுக்கு எவ்வளவு உயர்ந்த பாடம் கிடைத்திருக்கிறது. சொல்லித் தருபவர் ஒரே ஒரு பாபா தான்! அவருக்கென்று எத்தனை கோவில்கள் கட்டுகிறார்கள். நாங்கள் இராஜ்யம் செய்தோம் என நீங்கள் கூறுகிறீர்கள். நமக்கு எத்தனை கோவில்கள் கட்டபட்டிருக்கிறது. முழு நாளும் இந்த விஷயங்களை சிந்தித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. மாயாவின் புயலைப் பார்த்து பயப்படக் கூடாது. நினைவின் ஓட்டப்பந்தயம் செய்ய வேண்டும். நினைவினுடைய சார்ட் வைக்க வேண்டும். நினைவு தான் பாதுகாப்பிற்கான சாதனமாகும்.



    2. ஸ்ரீமத்படி நாம் உயர்ந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். நாம் மறைவாக ஆனால் நன்கு வெளியில் பிரசித்தமான படைவீரர்கள்-இந்த ஆன்மீகப் போதையில் இருக்க வேண்டும்.



    வரதானம்:

    தன்னுடைய உயர்ந்த பார்வை, உள்ளுணர்வு, செயலினால் சேவை செய்யக்கூடிய நிரந்தர சேவாதாரி ஆகுக.



    எப்படி இந்த சரீரம் மூச்சு இல்லாமல் இருக்க முடியாதோ, அது போன்று பிராமண வாழ்க்கையின் மூச்சு சேவையாகும். மூச்சு செல்லவில்லை என்றால் எப்படி மயங்கிப் போய் விடுகிறார்களோ அப்படி பிராமண ஆத்மா சேவையில் பிசியாகவில்லை என்றால், மயங்கிப் போய் விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு நொடியும் தன்னுடைய உயர்ந்த பார்வையால், உள்ளுணர்வால், செயலால் சேவை செய்து கொண்டேயிருங்கள். வார்த்தைகளினால் சேவை செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், மனதினால் சேவை செய்யுங்கள். எப்பொழுது அனைத்து விதமான சேவைகளும் செய்கிறீர்களோ, அப்பொழுது முழு மதிப்பெண்களை அடையலாம்.



    சுலோகன் :

    சாட்சி நிலையின் சிம்மாசனம் தான் உண்மையான நிர்ணயத்தின் சிம்மாசனம் ஆகும்.



    ***OM SHANTI***