BK Murli 2 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 2 July 2017 Tamil

    02.07.2017    காலை முரளி    ஓம் சாந்தி '   'அவ்யக்த பாப்தாதா''   ரிவைஸ்           16.04.1982           மதுபன்

    '' சங்கமயுகத்தின் சுயராஜ்ய தர்பார்தான் அனைத்தையும் விட உயர்ந்த தர்பார் ''


    இன்று பாப்தாதா எந்த தர்பாரில் வந்திருக்கிறார்? இன்றைய இந்த தர்பாரில் பாப்தாதா தன்னுடைய உலகின் இராஜ்ய ஸ்தாபனையின் காரியத்தில் இராஜ்ய சகயோகி ஆத்மாக்களை அதாவது தன்னுடைய இராஜ்யகாரிய விவகாரங்களின் அதிகாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகத்தின் சுயராஜ்ய தர்பாரை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுயராஜ்ய தர்பாரில் நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து விதமான சகயோகி ஆத்மாக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சுயராஜ்ய தர்பாரின் விசேஷ சிரோமணி இரத்தினம் பாப்தாதாவின் எதிரில் ஸ்தூல ரூபத்தில் தூரத்தில் இருந்தாலும் மாலையின் ரூபத்தில் இராஜ்ய அதிகாரி சிம்மாசனத்தில் எதிரில் தென்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இராஜ்ய அதிகாரி சகயோகி ஆத்மா அவரவர்களின் விசேஷங்களின் ஜொலிப்பில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் விதவிதமான குணங்கள் என்னும் நகைகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிம்மாசனத்தின் இராஜ அடையாளமாக என்ன இருக்கும்? அனைவரும் தர்பாரில் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? சிலர் முன்னால் இருக்கிறீர்கள், சிலர் பின்னால் இருக்கிறீர்கள், ஆனால் அனைவரும் தர்பாரில் இருக்கிறீர்கள். சிம்மாசனத்தின் இராஜ அடையாளமாக வெண்கொற்றக் குடை என்ற குடை மிக நன்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் இரட்டை கிரீடம் அதாவது ஃபரிஷ்தா சொரூபத்தின் அடையாளத்தின் கூடவே உலக நன்மைக்கான எல்லைக்கப்பாற்பட்ட சேவையின் கிரீடம் அணிந்தவர். கிரீடமோ அனைவரிடமும் இருக்கிறது ஆனால் வரிசைக்கிரமமாக இருக்கிறது. சிலரின் இரண்டு கிரீடங்களும் சமமாக இருக்கிறது. சிலருக்கு ஒன்று சின்னது என்றால் இன்னொன்று பெரியதாக இருக்கிறது. மேலும் சிலருக்கு இரண்டுமே சிறியதாக இருக்கிறது. கூடவே ஒவ்வொரு இராஜ்ய அதிகாரியின் தூய்மையின் தனித்தன்மையும் அவரவர்களுடையது. ஆன்மீகத்தின் அவரவர்களின் இராயல் தன்மை வரிசைக்கிரமமாகத் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி சுயராஜ்ய அதிகாரி சகயோகி ஆத்மாக்களின் தர்பாரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சங்கமயுக சிரேஷ்ட தர்பார் மற்றும் எதிர்கால இராஜ தர்பார் இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இப்போதைய தர்பார் பல ஜென்மங்களின் தர்பாருக்கான அஸ்திவாரம் இப்போதைய தர்பாரின் ரூபம் வடிவம் எதிர்கால தர்பாரின் ரூபம் வடிவத்தை உருவாக்கக் கூடியது. எனவே இப்போதைய இராஜ்ய அதிகாரி சகயோகி தர்பாரில் என்னுடைய இடம் எது என்று உங்களை நீங்களே பார்க்க முடியும். சோதனை செய்யும் இயந்திரம் அனைவரிடமும் இருக்கிறதா? எப்பொழுது அறிவியல் துறையினர் புதுப்புது இயந்திரங்கள் மூலமாக பூமியின் மேலே இருக்கும் ஆகாய மண்டலத்தின் படத்தை வரைய முடியும், அங்கே உள்ள வாயுமண்டலத்தின் செய்தியை சொல்ல முடியும், முன்பாகவே இயற்கையின் தத்துவங்களின் சீற்றத்தின் செய்தியைக் கூற முடியும் என்றால், நீங்கள் அனைத்து சக்திகள் நிரம்பிய தந்தையின் அதிகாரம் உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுடைய தெய்வீக புத்தி இயந்திரத்தின் மூலமாக மூன்று காலத்தின் ஞானத்தின் ஆதாரத்தினால் தன்னுடைய நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் ஏன் தெரிந்து கொள்ள முடியாது. இயந்திரமோ அனைவரிடமும் இருக்கிறது தான் இல்லையா? தெய்வீக புத்தியோ அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. இந்த தெய்வீக புத்தி என்று இயந்திரத்தை எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த ஸ்தானத்தில் அதாவது எந்த நிலையில் நிலைத்திருந்து உபயோகிக்க வேண்டும் என்ற அதையும் தெரிந்திருக்கிறீர்கள். மூன்று காலங்களையும் தெரிந்த நிலை என்ற ஸ்தானத்தில் நிலைத்திருந்து மூன்று காலங்களின் ஞானத்தின் ஆதாரத்தில் இயந்திரத்தை உபயோகியுங்கள். உபயோகிக்க தெரியுமா? முதலிலோ இடத்தில் அமரத் தெரியுமா? அதாவது நிலையில் நிலைத்திருக்கத் தெரியுமா? எனவே இதே இயந்திரங்கள் மூலமாக என்னுடைய வரிசை எண் எது என்று உங்களை நீங்களே பாருங்கள். புரிந்ததா.



    இன்று சர்வஸ்வ தியாகிகளின் (அனைத்தையும் தியாகம் செய்தவர்களின்) விஷயத்தைக் கூறவில்லை. இப்பொழுது கடைசி பாடம் இன்னும் கற்பிக்க வேண்டியதிருக்கிறது. இன்று பாப்தாதா தன்னுடைய இராஜதர்பாரிலிருக்கும் துணைவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் இங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். இன்றைய சபையில் விசேஷமாக அன்பான ஆத்மாக்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அன்பான ஆத்மாவுக்கு பாப்தாதாவும் அன்பின் பிரதிபலனாக அன்பு கொடுப்பதற்காக அன்பான தர்பாரில் வந்து சேர்ந்து விட்டார். இதுவும் அன்புக் கடல் மற்றும் நதிகளின் மேளா (சந்திப்பு). அப்படி மேளாவை கொண்டாடுவது என்றால், உற்சவத்தைக் கொண்டாடுவது. இன்று பாப்தாதாவும் மேளாவின் உற்சவத்தில் வந்திருக்கிறார். பாப்தாதா மேளாவைக் கொண்டாடும், அன்பைப் பெறுவதற்கான பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களைப் பார்த்து இவ்வளவு முழு விசால உலகத்தில் அளவற்ற எண்ணிக்கைகளின் நடுவே எப்படிப்பட்ட ஆத்மாக்கள் சந்திப்பதற்கான பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து மகிழ்ச்சியடைகிறார். உலகின் எதிரில் நம்பிக்கை இல்லாத ஆத்மாக்கள் தன்னுடைய அனைத்து விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான பாக்கியத்தை அடைந்து விட்டார்கள். மேலும் உலகின் எதிரில் யார் பெயர் பெற்ற நம்பிக்கைக்குரிய ஆத்மாக்களாக இருக்கிறார்களோ அவர்கள் யோசித்துக் கொண்டும் தேடிக் கொண்டே இருந்து விட்டார்கள். தேடுதல் செய்து செய்து தேடுதலேயே மூழ்கி விட்டார்கள். மேலும் அன்பான ஆத்மாக்கள் நீங்களோ அன்பின் ஆதாரத்தில் அடைந்து விட்டீர்கள். அப்படியானால் சிரேஷ்டமானவராக யார் ஆனார்கள்? சிலர் சாஸ்திரத்தின் காரணமாக செய்து சாஸ்திரங்களிலேயே இருந்து விட்டார்கள். சிலர் மகாத்மாக்களாக ஆகி ஆத்மா மற்றும் பரமாத்மாவின் மிகச்சிறிய பிரம்மையில் தன்னுடைய பாக்கியத்தைத் பெறுவதிலிருந்து தங்கிப்போய் விட்டார்கள். குழந்தைகளாகி தந்தையின் அதிகாரத்தைப் பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்பட்டவராக இருந்து விட்டார்கள். பெரிய பெரிய விஞ்ஞானிகள் தேடுதல் செய்து அதிலேயே மூழ்கி விட்டார்கள். அரசியல்வாதிகள் திட்டங்களை உருவாக்கி உருவாக்கியே இருந்து விட்டார்கள். வெகுளியான பக்தர்கள் அணு அணுவில் தேடிக் கொண்டே இருந்து விட்டார்கள். ஆனால் யார் அடைந்தார்கள்? போலாநாத்தின் (கள்ளம் கபடமற்றவரின்) போலே (வெகுளியான) குழந்தைகள் அடைந்தார்கள். பெரிய புத்தியுடையவர்கள் அடையவில்லை. ஆனால் உண்மையான உள்ளம் உடையவர்கள் அடைந்தார்கள். எனவேதான் உண்மையான உள்ளமுடையோர் மீது இறைவன் திருப்தியாக இருக்கிறார் என்ற பழமொழி இருக்கிறது எனவே நீங்கள் அனைவரும் உண்மையான உள்ளத்தினால் இதய சிம்மாசனதாரிகள் ஆக முடியும். உண்மையான உள்ளத்தினால் திலாராம் (உள்ளம்) தந்தையை தன்னுடையவராக ஆக்க முடியும். திலாராம் தந்தை உண்மையான உள்ளம் இன்றி ஒரு விநாடி கூட நினைவு ரூபத்தில் நிலைத்திருக்க முடியாது. உண்மையான உள்ளம் உள்ளவர்களின் மிக உயர்ந்த எண்ணம் என்ற விருப்பங்கள் சுலபமாக நிறைவேறிவிடுகின்றன. உண்மையான உள்ளம் உள்ளவர்கள் தந்தையின் துணையை சாகாரத்தில் (ஸ்தூலமாக) இவ்வுலகில், ஆக்காரம் (சூட்சுமமாக) நிராகார் (உடலற்ற) மூன்று ரூபங்களிலும் எப்பொழுதும் துணையை அனுபவம் செய்கிறார்கள். நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் அன்புக் கடலுடன் சந்திப்பை செய்யும் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கைகளுக்கு, எப்பொழுதும் அன்பின் ஆதாரத்தினால் பாப்தாதாவை அனைத்து சம்பந்தத்தில் தன்னுடையவர் என்று அனுபவம் செய்யும், கள்ளம் கபடமற்ற தந்தையிடம் எப்பொழுதும் வியாபார ஒப்பந்தம் செய்யக்கூடிய, அந்த மாதிரி அன்பான உண்மையான உள்ளம் உள்ள உயர்ந்த ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    டீச்சர்களுடன் சந்திப்பு :

    சேவாதாரிகளுக்கு எப்பொழுதும் புத்தியில் என்ன நினைவிருக்கிறது? சேவை மட்டுமா அல்லது நினைவு மற்றும் சேவையா? எப்பொழுது நினைவு மற்றும் இரண்டின் சமநிலை இருக்கிறது என்றால், இயல்பாகவே வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வளர்ச்சி அடைவதற்கான சுலபமான வழியே சமநிலை. தற்சமயத்தின் கணக்குப்படி அனைத்து ஆத்மாக்களுக்கும் மிக அதிகமாக அமைதி வேண்டுமென்று விருப்பம் இருக்கிறது. எனவே எங்கெல்லாம் சேவை வளர்ச்சியடைவில்லையோ அப்படியே இருந்து விடுகிறது என்று பார்க்கிறீர்கள் என்றால், அங்கே நம்முடைய சேவை நிலையத்தின் சூழ்நிலையை அமைதி குண்டம் மாதிரி ஆக்கிவிடுங்கள். ஒரு அறையில் விசேஷமாக இந்த வாயுமண்டலம் மற்றும் ரூபம், வடிவம் நிறைந்ததாக உருவாக்குங்கள். எப்படி பாபாவின் அறையை தயார் செய்கிறீர்கள். அதே மாதிரி முறையோடு உருவாக்கினீர்கள் என்றால், துக்கமான சூழ்நிலையின் நடுவில் அமைதியின் மூலை தென்படும். அந்த மாதிரி வாயுமண்டலத்தை உருவாக்குவதினால் அமைதியின் அனுபவத்தை செய்விப்பதினால் சுலபமாக வளர்ச்சி அடைந்து விடும். மியூசியம் சரி தான். ஆனால் இது பார்ப்பதற்கும் மற்றும் கேட்பதற்குமான சாதனம் கேட்பவர்களுக்கும் மற்றும் தெரிந்து கொள்பவர்களுக்காக மியூசியம் சரி தான். ஆனால் அவர்கள் கேட்டு கேட்டு களைப்படைந்து விட்டார்கள். அவர்களுக்காக அமைதியின் ஸ்தானத்தை உருவாக்குங்கள். பெரும்பான்மையோர் இப்பொழுது உங்களது அனைத்து விஷயங்களையும் கேட்டு விட்டோம், அனைத்தையும் பார்த்து விட்டோம் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் அடைந்து விட்டோம் என்று யாரும் கூறுவதில்லை. அனுபவம் செய்தோம் அடைந்து விட்டோம் என்று இப்பொழுது கூறுவதில்லை. எனவே அனுபவம் செய்விப்பதற்கான வழி நினைவில் அமர வையுங்கள். அமைதியின் அனுபவம் செய்வியுங்கள். இரண்டு நிமிடம் கூட அமைதியின் அனுபவம் செய்துவிட்டார் என்றால் அவரால் விட முடியாது. அப்படி இரண்டு வழிகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். மியூசியம் மட்டும் அல்ல, ஆனால் அமைதி குண்டத்தின் ஸ்தானமும் வேண்டும். எப்படி அபுவில் மியூசியமும் நன்றாக இருக்கின்றது. அமைதியின் ஸ்தானமும் கவர்ந்திழுக்கக் கூடியது. ஒருவேளை படங்கள் மூலமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் 2 நிமிடங்கள் நினைவில் அமர வைப்பதனால் அபிப்ராயம் மாறிவிடும். விருப்பம் மாறிவிடும். ஏதோ கொஞ்சம் கிடைக்க முடியும் என்று நினைப்பார்கள். பிராப்தி ஆக முடியும். எங்கு அடைவதற்கான விருப்பம் உருவாகிறதோ அங்கு வருவதற்காக அடி எடுத்து வைப்பது சுலபமாகிவிடும். அப்படி வளர்ச்சி அடைவதற்கான வழிகளைக் கடைப்பிடியுங்கள்.



    மற்றபடி சேவாதாரிகள் எப்பொழுது தன் மீதும், பிறர் மீதும் திருப்தியாக இருக்கிறார் என்றால், சகயோகம் கொடுப்பதற்கான ஊக்கம், உற்சாகம் இயல்பாகவே இருக்கும். சொல்வது மற்றும் செய்விக்க வேண்டியதிருக்காது, திருப்தி சுலபமாகவே ஊக்கம், உற்சாகத்தில் கொண்டு வரும். சேவாதாரிக்கு, திருப்தியாக இருக்க வேண்டும் மற்றும் திருப்தி படுத்த வேண்டும் என்ற விசேஷ லட்சியம் இருக்கட்டும்.



    நீங்கள் எப்பொழுதும் கடலின் கரையில் இருக்கும் புனித அன்னப் பறவைகளா? அன்னப்பறவை எப்பொழுதும் கடற்கரையில் இருக்கும் மேலும் கடலின் அலைகளோடு விளையாடிக் கொண்டே இருக்கும். தன்னை அந்த மாதிரி புனித அன்னப் பறவை என்று அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுதும் ஞான இரத்தினத்தை பொறுக்கும் அதாவது தாரணை செய்யும், எப்பொழுதும் புத்தியில் ஞான இரத்தினம் நிரம்பி இருக்கும். மற்றபடி என்னென்ன வீணான விஷயங்கள், வீணான காட்சிகள்...... இருக்கின்றன, இவை அனைத்தும் கூழாங்கற்கள் ஆகிவிட்டன. அன்னப்பறவை ஒருபொழுதும் கூழாங்கற்களைப் பொறுக்காது, இரத்தினங்களைத் தான் பொறுக்கும். எனவே ஒருபொழுதும் எந்த ஒரு வீணான விஷயத்தின் பிரபாவம் ஏற்பட வேண்டாம். ஒருவேளை பிரபாவத்தில் வந்து விட்டீர்கள் என்றால், அதே சிந்தனை மற்றும் அதே பேச்சு தான் இருக்கும். சிந்தனை, பேச்சினால் வாயுமண்டலமும் அந்த மாதிரி ஆகிவிடும். விஷயம் ஒன்றுமே இருக்காது. ஆனால் பெரிய மலையே விழந்து விட்டது மாதிரி வாயுமண்டலம் ஆகிவிடும். ஒருவேளை தன்னுடைய மனதில் சிந்தனை ஓடுகிறது மேலும் வாய்மூலம் வர்ணனை ஆகிக் கொண்டே இருக்கிறது என்றால், சின்ன விஷயம் கூட மலை ஆகிவிடும், வாயுமண்டலத்தில் பரவி விடுகிறது. மேலும் ஒருவேளை அந்த விஷயத்தை உள்ளடக்கிவிடுங்கள், சாட்சி ஆகி கடந்து விட்டீர்கள் என்றால், அந்த விஷயம் கடுகாகி விடும். ஆக புனித அன்னப்பறவைகள் எப்பொழுதும் கடலின் கரையில் இருப்பவர்கள். எப்பொழுதும் இதே சொரூபத்தின் நினைவில் இருங்கள்.



    சேவாதாரிகள் எப்பொழுதும் வெற்றி சொரூபமாக இருப்பதற்கு தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் நினைவில் இருக்க வேண்டும். என்ன காரியம் செய்தாலும் இது தந்தையின் காரியமா என்று சோதனை செய்யுங்கள். ஒருவேளை தந்தையினுடையது என்றால், என்னுடையதும் தான், தந்தையினுடையது இல்லையென்றால் என்னுடையதும் இல்லை. இந்த சோதனை உரைகல்லை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். எனவே தந்தையைப் பின்பற்றி நடப்பவர் என்றால், எது தந்தையின் எண்ணமோ அதுவே என்னுடைய எண்ணம், எது தந்தையின் வார்த்தைகளோ அதுவே என்னுடையது. இதனால் என்னவாகும்? எப்படி தந்தை எப்பொழுதும் வெற்றி சொரூபமாக இருக்கிறாரோ அதே போல் நீங்களும் நிரந்தர வெற்றி சொரூபமாகி விடுவீர்கள். எனவே தந்தையின் அடி மேல் அடி வைத்து சென்று கொண்டே இருங்கள். யாராவது சென்று கொண்டிருக்கிறார், நீங்கள் அவர் பின்னாலேயே சென்று கொண்டிருந்தீர்கள் என்றால், சுலபமாகவே சென்றடைந்து விடுவீர்கள் இல்லையா? எனவே தந்தையைப் பின்பற்றி நடப்பவர்கள் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள் மேலும் சகஜமாக பிராப்தியின் அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கும்.



    குமாரிகளுடன் சந்திப்பு -

    குமாரிகளின் இலட்சியம் என்ன? சேவை செய்வதற்காக முதலில் தனக்குள் அனைத்து பிராப்திகளின் அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால், எவ்வளவு பொக்கிஷம் தன்னிடம் இருக்குமோ அவ்வளவு மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். தினமும் இந்த ஆன்மீக படிப்பின் மேல் கவனம் கொடுக்கிறீர்களோ? படிப்பதின் கூடவே சேவைக்கான வாய்ப்பையும் எடுத்துக் கொள்கிறீர்கள். எப்பொழுதும் தன்னை இறை மாணவி என்று புரிந்து படிப்பின் மேல் கவனம் வைக்க வேண்டும். எந்த அளவு நீங்கள் படிப்பின் மீது கவனம் வைப்பீர்களோ அந்த அளவு அனுபவியாகி மற்றவர்களுக்கும் கற்பிக்க முடியும். இந்த நேரத்திற்கேற்றபடி குடும்ப வாழ்க்கை என்றால், என்ன என்று அதையும் பார்க்கிறீர்கள் தான் இல்லையா? குடும்ப வாழ்க்கை என்றால், எல்லைக்கப்பாற்பட்ட ஜெயிலில் மாட்டிக் கொள்வது! இப்பொழுது சுதந்திரமாக இருக்கிறீர்கள் இல்லையா?

    எத்தனை பந்தனங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறீர்கள். எனவே எப்பொழுதுமே அந்த மாதிரி பந்தனத்திலிருந்து விடுபட்ட, ஜீவன்முக்த் நிலையில் நிலைத்து இருங்கள். குடும்ப வாழ்க்கையையும் அனுபவம் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் ஒருபொழுதும் வர வேண்டாம். குமாரி வாழ்க்கையில் தந்தையின் குழந்தை ஆகியிருக்கிறீர்கள், நீங்கள் மிகுந்த பாக்கியம் நிறைந்தவர்கள். எனவே வலது கரமாக ஆக வேண்டும், இடது கரமாக ஆகக்கூடாது.



    2) அனைத்து குமாரிகளும் தந்தையுடன் உறுதியான ஒப்பந்தம் செய்திருக்கிறீர்களா? என்ன ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள்? பாபா நான் உன்னுடையவள் என்று நீங்கள் கூறினீர்கள். மேலும் தந்தை குழந்தைகளே நீங்கள் என்னுடையவர்கள் என்று கூறினார். இந்த உறுதியான ஒப்பந்தத்தை செய்திருக்கிறீர்களா? வேறு ஒப்பந்தமோ செய்ய மாட்டீர்கள் தான் இல்லையா? இரண்டு படகுகளில் கால் வைப்பவரின் நிலைமை என்னவாகும்? இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை என்று அப்படி ஆகிவிடும். ஒப்பந்தம் செய்வதிலோ திறமைசாலிகள் தான் இல்லையா? பாருங்கள் என்ன கொடுக்கிறீர்கள் - பழைய உடல், அதற்கு ஊசியால் தையல் போடுகிறீர்கள், பலஹீனமான மனம், அதில் எந்த சக்தியும் இல்லை, மேலும் கறுப்பு பணம். . . மேலும் என்ன பெறுகிறீர்கள். 21 ஜென்மங்களுக்கு உத்திரவாதமுள்ள இராஜ்யம். அந்த மாதிரியான ஒப்பந்தத்தையோ முழுக் கல்பத்திலும் ஒருபொழுதும் செய்யவில்லையே? எனவே உறுதியான ஒப்பந்தம் செய்தீர்களா? ஒப்பந்தத்தை எழுதி விட்டீர்களா? குமாரிகள் பாப்தாதாவிற்கு மிகப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் குமாரிகள் சமர்ப்பணம் ஆனார்கள் என்றால் ஆசிரியை ஆகிவிட்டார்கள். குமார் சமர்ப்பணமானால் என்றால், ஆசிரியர் என்று கூறப்பட மாட்டார், சேவாதாரி என்று கூறப்படுவார். குமாரிக்கு ஆசிரியை பதவி கிடைத்து விடுகிறது. இன்று குமாரி, நாளை அவரை அனைவரும் தந்தைக்குச் சமமான பொறுப்பு ஆசிரியை என்ற பார்வையில் பார்க்கிறார்கள் என்றால் சிரேஷ்டமாகி விட்டார் இல்லையா? குமாரி வாழ்க்கையில் சிரேஷ்டமாகி விட்டார், பிறகு தவறான படியில் ஏறுவதிலிருந்து தப்பித்துக் கொள்வார். நீங்கள் அப்படி ஏறவும் இல்லை, பிறகு இறங்குவதற்கான கடினமும் இல்லை. குடும்பத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படி குமாரிகள் நீங்கள் எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்பவர்கள். பாப்தாதா அனைவரையும் வெற்றி சொரூபம் என்று நினைக்கிறார். ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு செல்லுங்கள் பந்தயம் செய்யுங்கள் ஆனால் போட்டி போடாதீர்கள். ஒவ்வொருவரின் விசேஷத்தைப் பார்த்து விசேஷ ஆத்மா ஆக வேண்டும். நல்லது.



    3) குமாரி அல்லது சேவாதாரிக்கு பதிலாக தன்னை சக்தி சொரூபம் என்று புரிந்து கொள்ளுங்கள்! எப்பொழுதும் தன்னுடைய சிவசக்தி சொரூபம் நினைவில் இருக்கிறதா? சக்தி சொரூபம் என்று நினைப்பதினால் சேவையிலும் சக்திசாலி ஆத்மாக்களின் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். எப்படி நிலமோ அப்படி பழம் உருவாகும். எந்தளவு தன்னுடைய சக்திசாலி நிலையை உருவாக்குவீர்களோ, வாயுமண்டலத்தை சக்தி சொரூபமாக ஆக்குவீர்களோ அந்த அளவு அந்த மாதிரி ஆத்மாக்களும் வருவார்கள். இல்லையென்றால் பலஹீனமான ஆத்மாக்கள் வருவார்கள், அவர்களுக்குப் பின்னால் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். எனவே எப்பொழுதும் தன்னுடைய சிவசக்தி சொரூபமாகுக. குமாரி இல்லை, சேவாதாரி இல்லை சிவசக்தி. சேவாதாரிகளோ அதிகம் இருக்கிறார்கள், இந்தப் பட்டம் இன்றைய நாட்களில் அனேகர்களுக்குக் கிடைத்து விடுகிறது, ஆனால் உங்களுடைய விசேஷம் - சிவசக்தி இணைந்த சொரூபம். இதே விசேஷத்தை நினைவில் வைத்தீர்கள் என்றால் சேவையின் வளர்ச்சியில் சகஜமான, சிரேஷ்டமான அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கும். சேவை செய்வதற்கான லிஃப்ட்டின் கிஃப்ட் என்ன கிடைத்திருக்கிறதோ அதற்கான பிரதிபலன் கொடுக்க வேண்டும். பிரதிபலன் என்ன? சக்திசாலி ஆக வேண்டும், வெற்றி மூர்த்தி ஆக வேண்டும். நல்லது - ஓம்சாந்தி.



    வரதானம்:

    சுயமரியாதையில் நிலைத்திருந்து எல்லைக்குட்பட்ட இச்சைகளை முடிவு கட்டக்கூடிய ஆசையென்றால் என்னவென்று தெரியாதவர்கள் ஆகுக.



    யார் சுயமரியாதையில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு ஒருபொழுதும் எல்லைக்குட்பட்ட மரியாதை பெற வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஒரு சுயமரியாதையில் அனைத்து எல்லைக்குட்பட்ட ஆசைகள் நிரம்பி விடுகிறது, கேட்பதற்கான அவசியம் இருப்பதில்லை. எல்லைக்குட்பட்ட ஆசைகள் ஒருபொழுதும் முழுமையாக நிறைவேறுவதில்லை, ஒரு எல்லைக்குட்பட்ட ஆசை அனேக ஆசைகளை உருவாக்கும். மேலும் சுயமரியாதை அனைத்து ஆசைகளையும் சுலபமாகவே நிறைவேறச் செய்து விடும். எனவே சுயமரியாதை உள்ளவராக ஆகுங்கள். பிறகு சர்வ பிராப்தி சொரூபம் ஆகிவிடுவீர்கள். பிராப்தியின்மை மற்றும் ஆசைகள் என்னவென்று தெரியாத நிலை ஆகிவிடும்.



    சுலோகன் :

    ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னை மோல்டு (வளைத்துக் கொள்வது) செய்வது தான் உண்மையான கோல்டு (தங்கம்) ஆவது.



    ***OM SHANTI***