BK Murli 26 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 26 July 2017 Tamil

    26.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! அமிர்தவேளையில் எழுந்து பாபாவின் நினைவு என்ற நெய்யை நாள்தோறும் இடுங்கள். அப்போது ஆத்மா என்ற ஜோதி சதா ஒளிமயமாக இருக்கும்.



    கேள்வி:

    எந்த ஒரு காரியம் குழந்தைகளுடையது, அது பாபாவுடையது அல்ல?



    பதில்:

    குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, இன்ன உறவினரின் புத்தியாகிய பூட்டைத் திறந்து விடுங்கள்... பாபா சொல்கிறார், இந்த வேலை என்னுடையதல்ல. இதுவோ குழந்தைகளாகிய உங்களுடைய வேலை. உங்களுடைய புத்தியின் பூட்டு திறந்து விடப்பட்டுள்ளது என்றால் நீங்கள் மற்றவர்களின் பூட்டையும் திறந்து சொர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக்குங்கள். அதாவது அனைவருக்கும் முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான வழி சொல்லுங்கள்.



    பாடல்:

    விழித்தெழுங்கள் நாயகிகளே, விழித்தெழுங்கள்



    ஓம் சாந்தி.

    நீங்கள் விழித்துக் கொண்ட குழந்தைகள் அமர்ந்திருக்கிறர்கள். பிறகு மற்றவர்களையும் விழித்தெழச் செய்ய வேண்டும். நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள், அதுவும் நம்பர்வார். ஏனென்றால் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். எழுப்பி விடுபவர் (தந்தை) சொல்கிறார், நாயகிகளே, மறந்து விடாதீர்கள். இது நினைவு என்ற நெய்யாகும். மனிதர்கள் இறந்து போனால் தீபத்தில் நெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள் – தீபம் அணைந்து விடாமல் இருப்பதற்காக. பாபா சொல்கிறார், குழந்தைகளே, நினைவு செய்து கொண்டே இருங்கள். இந்த நினைவு செய்வதற்காக, நெய் ஊற்றுவதற்காக அதிகாலை நேரம் மிக நல்லது. அதிகாலையில் நினைவு செய்தால் அந்த நினைவு அதிக நேரம் நிலைத்திருக்கும். உங்களுடைய தீபம் அணைக்கப்பட்டுள்ளது. இப்போது நினைவின் மூலம் தனது தீபத்தை எரிய வைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள் எனவே, உங்களது தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. சத்யுகத்தில் இருந்து திரேதாயுகம் வரை தீபம் எரிந்து கொண்டே இருக்கும். இது தீபமாலை (தீபாவளி) என்று சொல்லப் படுகிறது. ருத்ரமாலை மற்றும் தீபமாலை இரண்டும் ஒரே விஷயம் தான். சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும் இல்லையா? நீங்கள் உண்மையில் ருத்ரமாலையின் முத்துக்கள் தான் இல்லையா? அதாவது நிர்வாணதாமத்தில் வசிப்பவர்கள். அது சிவபாபாவின் இருப்பிடம், ருத்ரனின் வசிப்பிடம் என்றும் சொல்லலாம். குழந்தைகளுக்குத் தெரியும், பாபாவிடம் நாம் செல்ல வேண்டும். நினைவினால் தீபம் எரிந்து கொண்டே இருக்கும். இந்த ஸ்ரீ அதாவது சிரேஷ்டமான வழிமுறை கிடைக்கிறது. பாடப்பட்டும் உள்ளது - ஸ்ரீமத் கிடைத்திருந்தது. அதனால் சிரேஷ்ட சத்திய தர்மத்தின் ஸ்தாபனை ஆகியிருந்தது. இப்போது உங்களுடைய பெரிய குழு உள்ளது. நம்பர்வார் எவ்வளவு விழித்துக் கொள்கின்றனரோ, அவ்வளவு மற்றவர்களையும் விழிப்படையச் செய்ய முடியும். தீபத்தை எரியச் செய்வதற்காக அதிகாலை எழுந்திருக்க வேண்டி உள்ளது. நெய் ஊற்ற வேண்டி உள்ளது. இதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. பாபாவை நினைவு செய்ய வேண்டும்- இந்த நெய்யை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆத்மா தூய்மையாகிக் கொண்டே இருக்கிறது. ஆத்மா முதலில் தூய்மை இல்லாமல் இருந்தது, அதாவது ஆத்மாவின் ஜோதி அணைந்து விட்டிருந்தது. இப்போது பாபாவை நினைவு செய்வதன் மூலம் ஜோதி விழித்தெழும். மேலும் விகர்மங்கள் விநாசமாகிக் கொண்டே இருக்கும், அதாவது தூய்மையாகிக் கொண்டே இருப்பீர்கள். இப்போது ஆத்மா மீது அஞ்ஞானத்தின் நிழல் படிந்துள்ளது. பாபா தான் அனைவரைக் காட்டிலும் பெரிய சர்ஜனும் கூட. எந்த ஒரு ஸ்தூல மருந்து முதலியவற்றை எடுத்துக் கொள்வதற்காகத் தருவதில்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே சொல்கிறார். இந்த நினைவினால் அனைத்து மருந்துகளும் வந்து விடுகின்றன. நினைவினால் தான் ஆரோக்கியமடைகின்றனர், எதிர் கால பல பிறவிகளுக்கும் அவர்களோ, அநேக விதவிதமாகக் கற்பிக்கின்றனர். அதனால் மிகவும் பலவானாகவும் ஆகின்றனர். முயற்சி செய்கின்றனர்.



    இப்போது நீங்கள் மகாவீர் ஆகிறீர்கள். தூய்மை சக்தி தான் மகாவீர் தன்மை எனச் சொல்லப் படுகின்றது. இதனால் ஆயுளும் மிக நீண்டதாக ஆகி விடுகிறது. பாபாவின் நினைவினால் சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பாபா புரிய வைக்கிறார், நீங்கள் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆக வேண்டும் என்றால் இந்தக் கடைசிப் பிறவி தூய்மையாகுங்கள். சந்நியாசிகளும் கூட 5 விகாரங்களை சந்நியாசம் செய்கின்றனர். ஆனால் அவர்களோ, அதிக தூரம் காட்டுக்குச் சென்று விடுகின்றனர். இங்கே நீங்கள் இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே 5 விகாரங்களை சந்நியாசம் செய்ய வேண்டும். நீங்கள் அறிவீர்கள், இந்த சந்நியாசத்தினால் கிடைக்கும் பலன் மிக அதிகம். அவர்களுக்கோ எதுவும் தெரியாது - நமக்கு முக்தி கிடைக்குமா அல்லது என்னவாகும் என்று. புனர்ஜென்மத்திலோ அவர்கள் வந்தேயாக வேண்டும். நீங்கள் அமரபுரிக்குச் செல்ல வேண்டும். வித்தியாசம் ஆகிறது இல்லையா? சந்நியாசிகள் எவ்வளவு தான் ஹடயோகம் முதலியவற்றைச் செய்தாலும் பிறகும் கூட அவர்கள் மரண உலகத்தில் இருந்து தான் ஆக வேண்டும். குழந்தைகள் நீங்கள் இந்த மரண உலகத்தில் இருந்து அமரலோகம் செல்ல வேண்டும். அதனால் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. அந்த முயற்சி செய்வதற்குத் தான் அவர்கள் பயப்படுகின்றனர். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டு நாம் யோகி ஆக முடியாது எனப்புரிந்து கொண்டுள்ளனர். சந்நியாசத்தினால் என்ன கிடைக்கும் என்று அவர்களுக்கு எதுவும் தெரியாது. எந்த ஒரு நோக்கம் குறிக்கோளும் கிடையாது. உங்களிடம் நோக்கம் குறிக்கோள் உள்ளது. நாங்கள் புது உலகம் செல்வோம் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களோ முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியவே செய்யாது. நீங்களோ இராஜ்யத்தில் உயர்ந்த பதவி பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். இதில் புருஷார்த்தம் முழுமையாகச் செய்ய வேண்டும். ஆசிர்வாதம் அல்லது கிருபையின் விஷயமே கிடையாது. என்னுடைய கணவரின் புத்தியின் பூட்டைத் திறக்க வேண்டும், ஆசிர்வாதம் செய்யுங்கள் என்பதெல்லாம் கிடையாது. நான் அனைவரின் புத்தியின் பூட்டைத் திறந்து விடுவேனா என்ன? குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியின் பூட்டு திறந்து விட்டது என்றால் பிறகு முயற்சி நீங்கள் தான் செய்ய வேண்டும். பாபா யாருடைய புத்தியின் பூட்டையும் திறப்பதில்லை. டிராமாவின் அனுசாரம் எந்தக் குழந்தைகள் சூத்திரரில் இருந்து பிராமணராக ஆக வேண்டும் என்று உள்ளதோ, அவர்கள் வந்தே ஆக வேண்டும். யாருக்கு கல்பத்திற்கு முன் பூட்டு திறக்கப் பட்டிருக்குமோ, அவர்களுக்குத் தான் திறக்கும். ஆம், சுபசிந்தனையாளராவதற்கு அறிவுரை தரப்படுகிறது. இரக்கமோ வருகிறது இல்லையா? – இவர்களும் கூட செல்வந்தராக ஆகட்டும். பூட்டு திறந்து கொண்டால் சொர்க்கத்திற்கு எஜமானர் ஆகி விடுவார்கள். இது உங்களுடைய தொழில். அவர்களுடையது எல்லைக்குட் பட்ட சந்நியாசம். உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட சந்நியாசம். நீங்கள் எல்லையற்ற ராஜ்யத்தை வேண்டுகிறீர்கள். அவர்கள் எல்லையற்ற முக்தி வேண்டுகிறார்கள். உங்களுக்கு எப்படி ஜீவன்முக்தியோ, அது போல் தான் இந்த முக்தியும். சதா காலத்திற்கும் முக்தியில் இருக்க முடியாது. புனர்ஜென்மம் எடுத்துத் தான் ஆக வேண்டும். குழந்தைகள் அறிவார்கள், முதலில் எப்போதுஅங்கிருந்து வருகிறோமோ, அப்போது புனர்ஜென்மம் எடுப்போம் இருந்தாலும் கூட நல்ல சதோபிரதானமாகக் கிடைக்கிறது. பிறகு ரஜோ-தமோவில் வந்து விடுகிறோம். நீங்கள் அனைவரை விடவும் உயர்ந்த வம்சாவளியினர். முதல்-முதலில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் வம்சாவளி. பிறகு அநேக விதமான தர்மத்தின் மரங்கள் (அடிமரம்) வெளிப்படுகின்றன. அவர்கள் அனைவரும் பின்னால் வருகிறவர்கள். உங்கள் புத்தியில் இந்த அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும். நாம் பிராமணர், அவர்கள் சூத்திரர். நாம் கல்வி பெற்று தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கிறோம். யார் ஆக்குகிறார்? யார் சதா சதோபிரதானமாக இருக்கிறாரோ, அவர் ஒரு போதும் ரஜோ தமோவில் வருவதில்லை. நம்மை உயர்வாக்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் முயற்சியினால் தானாகவே உங்களுக்குத் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் இராஜதானியைப் பராமரிக்கிறீர்கள். உங்களுக்கு உதவி அளிப்பவர் ஒரே ஓர் எல்லையற்ற தந்தை ஆவார். அவர் மிக எளிதான யுக்தி சொல்கிறார். இதன் பெயரே இராஜயோகம், இதனால் தெய்விக சுயராஜ்யம் கிடைக்கிறது. ஸ்வ என்றால் ஆத்மாவுக்குத் தான் இராஜ்யம் கிடைக்கிறது. ஆத்மா சொல்கிறது, இப்போது நான் பிச்சைக்கார சரீரத்தில் இருக்கிறேன். பிறகு இளவரசரின் சரீரம் கிடைக்கும். ஆத்மாக்கள் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். யாரிடம் செல்ல வேண்டுமோ, அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். குருமார் மந்திரம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கே பாபாவின் மந்திரத்தைக் கொடுப்பவர் வேறு யாரும் கிடையாது. பாபா ஒரே ஒரு மந்திரம் தருகிறார். நான் உங்களுடைய நிராகார் தந்தை. உங்களுடைய ஆசிரியராகவும் இருக்கிறேன், பதீத-பாவன குருவாகவும் இருக்கிறேன். நானோ நிராகார், அந்த நிச்சயமும் இருக்க வேண்டும். நம்முடைய தந்தை பதீத-பாவனர், நிராகார், ஞானக்கடலாக இருக்கிறார். இராஜயோகத்தினால் உங்களை மகாராஜா மகாராணி ஆக்குகிறார். எல்லையற்ற ஆஸ்தி தருகிறார். நூறு சதவிகிதம் செல்வந்தர் ஆகுக, நீண்ட ஆயுள் உடையவராகுக என்ற வரதானம் தருகிறார். தேவதைகளுக்கு இருப்பது போன்ற ஆயுள் வேறு யாருக்கும் கிடையாது. புத்திரவான் பவ, உங்கள் குலம் நடைபெறுகிறது. நீங்கள் அறிவீர்கள், அங்கே விகாரங்கள் இருக்க முடியாது. ஆத்மாவுக்குத் தன்னைப் பற்றிய ஞானம் இருக்கும். நாம் இப்போது போய் குழந்தையாக ஆவோம், பிறகு இளைஞனாகி, முதியவராக ஆவோம். பிறகு வேறொரு சரீரத்தை எடுத்துக் கொள்வோம். அங்குள்ள பழக்க-வழக்கங்கள் வேறாகவும், இங்குள்ள பழக்க-வழக்கங்கள் வேறாகவும் இருக்கும். பாபா தான் புரிய வைக்க முடியும். தினந்தோறும் சொல்கிறார் - குழந்தைகளே, ஜீவாத்மாக்களே, சரீரம் இல்லாமல் எப்படிப் பேச முடியும்? இதை நினைவு வைக்க வேண்டும். ஆத்மாக்கள் நமக்குப் பரமபிதா பரமாத்மா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுவும் மறந்து விடுகிறது. இப்போது நீங்கள் நடைமுறையில் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இதையும் அறிவீர்கள், ஜன்ம-ஜன்மாந்தரமாக வீண் கதைகளையே கேட்டு வந்திருக்கிறோம். எத்தனை கீதைப் புத்தகங்களைக் கேட்டு வந்துள்ளோம்! இப்போது சங்கமயுகம். சங்கமயுகத்தின் அர்த்தமே பழைய உலகத்தின் விநாசம், புது உலகத்தின் ஸ்தாபனை, அதனால் இது நல்ல உகந்த சமயம். நன்மை செய்யும் சங்கமயுகம் எனப் படுகிறது. சங்கமயுகத்தை மறப்பதால் தங்கள் இராஜதானியை மறந்து விடுகின்றனர். நீங்கள் கண்காட்சி முதலியவற்றை வைக்கலாம். பிறகும் கூட யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. இவ்வளவு சொல்கின்றனர், அதாவது இங்கே ஈஸ்வரனை அடைவதற்கான ஞானம் மிக நன்றாக உள்ளது. ஈஸ்வரனே கற்றுத் தருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அபூர்வமாக யாருக்கோ தான் நிச்சயம் ஏற்படுகிறது. இது நிச்சயமாகச் சரியானது என்று அவர்கள் சொல்கின்றனர். நாமும் புரிந்து கொள்கிறோம், படிப்பு சொல்லித் தருபவர் பரமபிதா பரமாத்மா என்று. எப்படி பீஷ்மபிதாமகர் முதலானவர்கள், பரமபிதா பரமாத்மா தான் இவர்களுக்குக் கற்றுத் தருகிறார் என்பதைக் கடைசியில் ஏற்றுக் கொண்டனர். கடைசியில் அவர்களுக்கு இந்த ஞானம் (புரிதல்) வரும். கண்காட்சிக்கு ஆயிரக் கணக்கில் வருகின்றனர் என்றாலும் இது யாருக்கும் புரிவதில்லை, அதாவது உங்களுக்கு நிராகார் பரமபிதா பரமாத்மா கற்பிக்கிறார் என்பது புரிந்து கொள்ளவில்லை. இந்த விஷயம் எங்களுக்குப் புரியவில்லை எனச் சொல்கின்றனர். நிராகார் எப்படிக் கற்பிப்பார்? நல்லது. நாங்கள் வந்து புரிந்து கொள்வோம். சொல்லிவிட்டுப் பிறகு வர மாட்டார்கள். இப்படியும் இருக்கின்றனர். எவ்வளவு நீங்கள் புரிய வைக்கிறீர்கள் - வாருங்கள், உங்களுக்கு நாங்கள் சொர்க்கத்தின் இராஜ்யத்தைத் தருகிறோம் என்று சொன்னாலும், அப்படியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கன்று (புது நாற்று) நடப்படுகிறது. பாபா புரிய வைக்கிறார், பக்தர்களுக்குப் புரிய வைப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். நீஙகள் சர்வவியாபி எனச் சொல்கிறீர்கள் என்றால் ஏன் பூஜை செய்கிறீர்கள்? இதுவோ ஜடம். நீங்களோ சைதன்யமாக இருக்கிறீர்கள். நீங்கள் பெரியவர்களாக ஆகி விட்டீர்கள் இல்லையா? புரிய வைக்க வேண்டும் - எல்லையற்ற தந்தையோ ஒருவர் தான், அவருக்குத் தான் மகிமை. அவர் மனித சிருஷ்டியின் விதை வடிவம், பதீத-பாவனர். உலகம் தூய்மை இல்லாமல் உள்ளது. அவர்களைப் தூய்மை இல்லா நிலையிலிருந்து தூய்மைபடுத்துபவர் ஒரே ஒரு தந்தை. நிச்சயமாக சங்கமயுகத்தில் தான் வந்திருப்பார். இப்போது வந்துள்ளார். சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். கீதையில் இந்த சொற்கள் உள்ளது, ஆனால் கிருஷ்ணரின் பெயரை எழுதுவதால் புத்தியில் நிற்பதில்லை. நீங்கள் அறிவீர்கள், இந்த ஞானம் மிகவும் சகஜமானது. ஆனால் விக்னங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உற்றார் உறவினர்கள் முதலானோர் அனைவரும் விக்னங்களை ஏற்படுத்துவார்கள். நாம் இவர்களை இந்தப் பக்கம் இழுக்கிறோம். அவர்கள் பிறகு அந்தப் பக்கம் இழுக்கின்றனர். பெரிய சங்கிலிப் பிணைப்பு. பாபா புரிய வைக்கிறார், இது எப்படி நடக்க முடியும் என்று. சிவபாபாவோ ஞானக்கடல், சுகத்தின் கடல். ஏதோ செய்திருப்பார் இல்லையா? சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர். என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறேன். கிருஷ்ணரோ சொல்ல முடியாது. புரிய வைப்பதற்கு மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். களைத்துப் போகக் கூடாது. அநேகரால் முயற்சி மேற்கொள்ளப் படுவதில்லை. சாக்குப் போக்கு அதிகம் சொல்கின்றனர். பாபா எந்த ஒரு கஷ்டமும் கொடுப்பதில்லை. குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள், உணவு சமையல் செய்யுங்கள். சிவபாபாவின் நினைவில் மட்டும் இருங்கள். நல்லது, பகலில் நேரம் கிடைக்கவில்லையா, அமிர்தவேளையிலாவது நினைவு செய்யுங்கள். மனமே, அதிகாலையில் இராமரை நினைவு செய் எனச்சொல்கின்றனர். ஆத்மா சொல்கிறது, அதிகாலையில் தன்னுடைய தந்தையை நினைவு செய். பாபாவும் இதையே சொல்கிறார், தூக்கமும் நேரப்படி இருக்க வேண்டும். முழு சார்ட் வைக்க வேண்டும். உங்களால் அதிகாலை எழுந்திருக்க முடியும் இதைப் பற்றி சிந்தியில் ஒரு பழமொழி உள்ளது -- சீக்கிரமாக உறங்க வேண்டும், சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும். இப்போது நீங்கள் புத்திசாலி ஆகிறீர்கள். சக்கரம் முழுவதும் புத்தியில் உள்ளது. உங்களுக்கு எந்த ஒரு துக்கமும் வராது. எவ்வளவு நீங்கள் இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜா ஆகி விடுகிறீர்கள்! பணத்திற்கு ஒரு போதும் எந்த ஒரு கஷ்டமும் ஏற்படாது. மேலும் ஆரோக்கியமானர்களாகவும் ஆகிறீர்கள். இந்த அனைத்து குணங்களையும் இப்போது நீங்கள் சிவபாபாவிடம் இருந்து பெறுகிறீர்கள். நிச்சயமாக நீங்கள் ஆரோக்கியமானவராக, செல்வந்தராக. மகிழ்ச்சி நிறைந்தவராக ஆகிறீர்கள். இதையும் நீங்கள் அறிவீர்கள், ஹோலி, தீபாவளி முதலிய இவையெல்லாம் இப்போதைய விசயங்கள். இவை நினைவுச் சின்னமாக வந்து விடுகின்றன. ஆகவே அதிகாலை எழுந்து பாபாவை நினைவு செய்வது மிக நல்லது. நினைவை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.



    குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள் - அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள், மற்றவர்களையும் விழித்தெழச் செய்யுங்கள். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே யாருக்காவது பாபாவின் அறிமுகம் கொடுங்கள். அவர்கள் பிறகு எழுத வேண்டும் - பாபா, இன்னார் மூலம் நாங்கள் உங்களை அறிந்து கொண்டோம் இப்போதோ நாங்கள் உங்களுடையவர்களாகவே ஆகி இருப்போம். உங்களிடம் இருந்து ஆஸ்தியை அவசியம் அடைவோம். உங்களுடையவர்களாகவே இருந்தோம் - இது போல் கடிதம் வருமானால் அப்போது சேவையின் நிரூபணம் கிடைக்கும். கடிதத்தைப் பார்த்து பாபா குஷி அடைவார். மற்றப்படி வகுப்பில் இருந்து தான் வருவதென்பது பழைய நடத்தை ஆகிறது. எப்படி மற்ற சத்சங்கங்களுக்கு நியமத்தோடு செல்கின்றனர். நீங்களோ ஒவ்வொருவருக்கும் நல்லபடியாகப் புரிய வைக்க வேண்டும். இது மிக உயர்ந்த படிப்பு. இந்த ஞானக்கடலிடம் இருந்து எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது. புரிய வைப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. நினைவு செய்வதன் பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும். இந்த யாத்திரையில் ஒரு போதும் களைத்துப்போகக் கூடாது. உணவையும் சிவபாபா நினைவில் சமைக்கவும் உண்ணவும் வேண்டும்.



    2. புத்தி மூலம் எல்லையற்ற சந்நியாசம் செய்ய வேண்டும். இந்த மோசமான உலகத்தை புத்தி மூலம் தியாகம் செய்துவிட வேண்டும். பாபாவிடம் இருந்து என்ன மந்திரம் கிடைத்துள்ளதோ, அதையே அனைவருக்கும் கொடுக்க வேண்டும். விழித்துக் கொண்டு மற்றவர்களை வழிப்படையச் செய்ய வேண்டும்.



    வரதானம்:

    மகான் தன்மையின் கூடவே பணிவையும் தாரணை செய்து அனைவரின் மதிப்பைப் பெறக்கூடிய சுகம் தருபவர் ஆகுக.



    மகானதாவின் (உயர்ந்த தன்மை) அடையாளம் பணிவு. எவ்வளவு மகான், (உயர்வானவரோ) அவ்வளவு பணிவு. ஏனென்றால் சதா நிறைவாக இருப்பவர்கள். எப்படி மரம் எவ்வளவு (மலர், காய், கனிகளால்) நிரம்பியதாக உள்ளதோ, அவ்வளவு வளைந்து கொடுப்பதாக இருக்கும். ஆகவே பணிவு தான் சேவை செய்கிறது. மேலும் யார் பணிவாக உள்ளனரோ, அவர்கள் அனைவரிடமும் மதிப்பினைப் பெறுவார்கள். யார் அபிமானத்தில் இருக்கின்றனரோ, அவர்களுக்கு யாரும் மதிப்பளிக்க மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தூரமாக விலகி ஓடி விடுவார்கள். யார் பணிவாக உள்ளனரோ, அவர்கள் எங்கே போனாலும், என்ன செய்தாலும் அது சுகம் தருவதாக இருக்கும். அவர்களிடம் அனைவரும் சுகத்தின் அனுபவம் பெறுவார்கள்.



    சுலோகன்:

    மனச்சோர்வுக்கு விடை கொடுப்பதற்கு குஷிகளின் கஜானாவை சதா உடன் வைத்திருங்கள்.





    ***OM SHANTI***