BK Murli 6 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 6 July 2017 Tamil

    06.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! உங்களின் உண்மையான தீர்த்த (புனித) ஸ்தல சாந்தி தாமம் மற்றும் சுகதாமம் ஆகும். உங்களை ஆன்மீக வழிகாட்டி உண்மையான புனித யாத்திரை செய்விப்பதற்காக வந்திருக்கிறார், நீங்கள் இராஜ்யம் மற்றும் வீட்டை நினைவு செய்யுங்கள்.



    கேள்வி:

    உங்களின் எந்த முயற்சியை தந்தை மட்டுமே அறிவார்? தந்தை அந்த கடின முயற்சியிலிருந்து விடுபடுவதற்காக எந்த யுக்தியை சொல்லியிருக்கிறார்?



    பதில்:

    குழந்தைகள் அரைக் கல்ப காலம் பக்தி மார்க்கத்தில் கோவில்கள் தோறும் அலைந்து நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார்கள் என தந்தைக்குத் தெரியும். எவ்வளவு முயற்சித்த போதும் அல்ப காலத்தின் ஒரு நொடிக்கான பலன் தான் கிடைத்தது. ஒரேயடியாக காட்டில் சென்று மாட்டிக் கொண்டனர். விகாரங்கள் என்ற கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்துக் கொண்டார்கள். இப்போது தந்தை இந்த கடின முயற்சியிலிருந்து விடுபடுவதற்கான யுக்தியை சொல்கிறார் - குழந்தைகளே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். என்னுடன் மட்டும் உண்மையான நிச்சயதார்த்தத்தை (ஒப்பந்தம்) செய்து கொள்ளுங்கள். இந்த எல்லைக்கப் பாற்பட்ட நிச்சயதார்த்தத்தில் தான் மகிழ்ச்சி உள்ளது. தேக அபிமானம் என்ற பெரிய கொள்ளைக்காரனிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னை இந்த தேகத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள்.



    பாடல்:

    ஓம் நம: சிவாய. . .



    ஓம் சாந்தி.

    குழந்தைகளுக்கு புத்துணர்வு கொடுப்பதற்காக நிறைய இசைத்தட்டுக்கள் (ரிகார்டுகள்) இருக்கின்றன, மேலும் இருக்கைகள் (ஃபர்னிச்சர்கள்) முதலானவைகள் வீட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. 5-7 ரிகார்டுகளை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் ரிகார்டை கேட்டாலும் கூட போதை ஏறும், மகிமை அனைத்தும் ஒரு தந்தையுடையது அல்லவா. ஆனால் இந்த சமயத்தில் அவரை யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் மனிதர்களை நிறைய மகிமை செய்கின்றனர். வெளி நாட்டிலிருந்து மனிதர்கள் யாராவது வந்தால் அவர்களைப் பார்ப்பதற்காகச் செல்கின்றனர். தந்தையை குழந்தைகள் மட்டுமே அறிவார்கள். தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்பவர் ஒரே தந்தை மட்டுமே ஆவார். தூய்மையற்ற உலகம் விஷக்கடல் போன்றது, தூய்மையான உலகம் பாற்கடல் போன்றதாகும். ஆக இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நமக்கு இப்போது இந்த ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது என நீங்கள் இந்த நிச்சயத்தையும் செய்கிறீர்கள். ஆன்மீக வழிகாட்டி கிடைத்திருக்கிறார். ஸ்தூல யாத்திரை செய்விப்பதற்காக ஸ்தூல வழிகாட்டிகள் உள்ளனர். மனிதர்கள் எவ்வளவு யக்ஞம், புனிதத்தளங்களுக்கு யாத்திரை முதலானவைகளை செய்தபடி வந்தனர். ஆனால் எந்த லாபமும் இல்லை. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இந்த ஞானம் இருக்க வேண்டும், அதன் மூலம் குஷி இருக்கும். பிறவி பிறவிகளாக எவ்வளவு புனித யாத்திரைகள் செய்தீர்கள், ஆனால் உண்மையான புனித யாத்திரை ஒன்றே ஆகும் அல்லது இரண்டு என சொல்லலாம். மேலும் செய்விப்பவர் தந்தை ஆவார். யக்ஞம், தவம், புனித யாத்திரை செய்வதன் மூலம் பகவான் கிடைப்பார் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். நல்லது, அவர் எங்கே அழைத்துச் செல்வார்? கண்டிப்பாக தமது வீட்டிற்குத்தான் அழைத்துச் செல்வார். உண்மையில், சத்தியத்திலும் சத்தியமான புனிதத்தலங்கள் சுக தாமம் மற்றும் சாந்தி தாமம் ஆகும். நாம் உண்மையிலும் உண்மையான அந்த புனிதத்தலங்களைத்தான் நினைவு செய்ய வேண்டும், இதுதான் மன்மனாபவ ஆகும் என குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நாம் இப்போது புனித தலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிவார்கள். தனது வீட்டையும் இராஜ்யத்தையும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். சொர்க்கத்தைப் படைப்பவர் ஒரு தந்தையே ஆவார். அவர் சொர்க்கத்தின் இறைத் தந்தை எனப்படுகிறார், ஆகையால் சொர்க்கத்தின் இறைத் தந்தைக்கும் உங்களுக்கும் என்ன உறவு என கேட்கப்படுகிறது. இறைத்தந்தையை நீங்கள் அறிவீர்களா என்று மட்டும் கேட்டீர்கள் என்றால் உடனே சொல்வார்கள் - அவர் எங்கும் நிறைந்தவர் (சர்வ வியாபி). ஆகவே குழந்தைகளுக்கு சகஜமாக இருக்க வேண்டும் என்று புரிய வைப்பதற்கான இந்த யுக்தி உருவாக்கப்படுகிறது. நிறைய கஷ்டங்களைச் சந்தித்திருக்கின்றனர் அல்லவா. அரை கல்பம், 63 பிறவிகள் நீங்கள் அசுர வழியில் நடந்தீர்கள். நல்ல பலனை அடைவதற்காக முயற்சி செய்விக்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் நமக்கு ஏறும் கலை ஏற்படவில்லை, இன்னும் கீழே இறங்கியே தான் வந்தோம் என நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு மண்டையை உடைத்தபடி இருக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் நிறைய உழைத்தீர்கள். கோவில் கோவிலாக அலைகிறீர்கள். குழந்தைகள் நிறைய முயற்சி செய்தார்கள் என தந்தைக்குத் தெரியும். நிறைய கஷ்டங்களை அனுபவித்தீர்கள். 63 பிறவிகள் நிறைய அடி வாங்கினீர்கள் (ஏமாற்றம் அடைந்தீர்கள்). சன்னியாசிகள் இந்த உலகத்தில் சுகம் என்பது காகத்தின் எச்சத்திற்குச் சமமானது என சொல்வது போல, நீங்கள் இவ்வளவு முயற்சி செய்தும் அல்ப காலத்திற்கான சிறிதளவே சுகத்தை அடைந்தீர்கள். ஏனென்றால் காட்சி தெரிந்தது, சிறிது சுகம் ஏற்பட்டது. குழந்தைகளே நீங்கள் நிறையவே ஏம்மாற்றங்களை சந்தித்தீர்கள் என இப்போது தந்தை சொல்கிறார். ஒரேயடியாக காட்டில் சென்று மாட்டிக் கொண்டீர்கள். காட்டில் கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள். இந்தக் காட்டில் கூட உங்களை கொள்ளையடிக்கக் கூடிய பல கொள்ளைக்காரர்கள் கிடைப்பார்கள். அனைத்தையும் விட முதன் முதலாக வரக்கூடிய கொள்ளைக்காரன் தேக அபிமானம் ஆகும், அதனுடைய துணைவர்கள் எவ்வளவு பெரிய கொள்ளைக்காரர்கள். இவர்கள் முதல் இடை கடைசி வரை துக்கம் கொடுக்கக் கூடிய முதல் நம்பர் கொள்ளைக்காரர்கள் ஆவார்கள். இது யாருக்கும் தெரியாது. இவை பெரியதிலும் பெரியதான கொள்ளைக்காரர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். இந்த கொள்ளை போவதை கண்டிப்பாக தேவை என மனிதர்கள் சொல்கின்றனர். தந்தை சொல்கிறார் - இந்த கொள்ளைக்காரர்கள் உங்களை எந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்! ஒருவரை ஒருவர் காமக் கோடாரியால் தாக்குகின்றனர். எவ்வளவு செலவு செய்கின்றனர்! அடி வாங்கி வாங்கி இப்போது என்ன நிலை உண்டாகி விட்டது! இப்போது இவை எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்கள் ஆகும். ஆம், இன்று ஆண் குழந்தை பிறந்தது, மகிழ்ச்சி உண்டானது, நாளை இறந்து விட்டது என்றால் அழத் தொடங்குகின்றனர். உலகின் நிலையை இப்போது பாருங்கள் என்னவாக உள்ளது என.



    பாபா வந்து விட்டார் என நீங்கள் இப்போது அறிவீர்கள், அவர்தான் சத்குருவாகவும் உள்ளார், அந்த குருமார்கள் பல விதமாக உள்ளனர், வழி காட்டுகின்றனர் - ஜபம், தவம், தான புண்ணியங்களை செய்வதன் மூலம் பகவான் கிடைப்பார் என்று. ஆனால் அதில் எவ்வளவு செலவாகிறது. இங்கே செலவு எதுவும் கிடையாது. தந்தையை நினவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறோம். இது உண்மையான நிச்சயதார்த்தம் ஆகும். கன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறதல்லவா? யாருடன் நிச்சயதார்த்தம் என அந்த கன்யாவுக்கு என்ன தெரியும்? பகவான் பிரியதர்ஷனாக கண்டிப்பாக வருவார் எனவும் சொல்கின்றனர், ஆனால் தெரிந்து கொள்வது கிடையாது. அது எல்லைக்குட்பட்ட விஷயம், இந்த எல்லைக்கப்பாற்பட்ட நிச்சயதார்த்தத்தில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளது. நான் உங்களுக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக்கிறேன் என்றால் அனைவரும் அதன்படி நடக்க வேண்டும். ஒவ்வொரு கல்பமும் ஸ்ரீமத் கிடைப்பதன் மூலமே பாரதம் உயர்வடைகிறது என நீங்கள் அறிகிறீர்கள். பாரதத்தைத்தான் சொர்க்கம் என சொல்கின்றனர். பாரதம்தான் சொர்க்கமாக இருந்தது என புத்திசாலியாக இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். பாரதத்தில்தான் பகவான் பகவதியின் இராஜ்யம் இருந்தது. பாரதம் சொர்க்கமாக இருந்த போது நீங்கள் இல்லை என்று அவர்களுக்கு உங்களால் புரிய வைக்க முடியும். எந்த நாட்டை (தேசத்தை) சேர்ந்தவர் என்பதும் கிடையாது. தேவ, தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என புரிந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணரையே சில நேரங்களில் பிரபு (லார்டு) சில நேரங்களில் இறைவன் (காட்) என சொல்லிவிடுகின்றனர். ஸ்ரீகிருஷ்ணருக்குத்தான் மதிப்பு அதிகம். பிரபு என ஏன் சொல்கின்றனர்? ஏனென்றால் அவரை பகவான் என புரிந்து கொள்கின்றனர். கீதையின் பகவான் அனைவருக்கும் சத்கதியை கொடுத்தார், பெயர் கிருஷ்ணருடையதைப் போட்டு விட்டனர். ஆகையால் கிருஷ்ணருக்கு நிறைய மரியாதை உள்ளது. கிருஷ்ணர் கருப்பு, கிருஷ்ணர் அழகு (வெள்ளை), சியாம் சுந்தர், எப்படி எப்படியெல்லாம் கருப்பாக படங்களை உருவாக்குகின்றனர். கல்கத்தாவின் காளி மாதாவை உருவாக்கியுள்ளனர். அக்கம் பக்கம், அங்கும் இங்கும் காளியின் கோவில்கள்தான் இருக்கும். ஜகதம்பாவின் சித்திரத்தைக் கூட வித விதமாக உருவாக்கு கின்றனர். இதனை யார் அமர்ந்து புரிய வைப்பது என இப்போது உங்கள் புத்தி திறந்து விட்டது. சத்தியமான குரு, சத்தியமான பாபா, சத்தியமான ஆசிரியர். அவருடைய பெயர் சத்யம் (சத்தியமானவர்) என்பதாகும். உண்மை சொல்பவர், உண்மையை அறிந்தவர். கிரந்தம் சுகமணியில் அவருடைய மகிமைகள் நிறைய உள்ளன. அவர் வந்து சத்தியமான கண்டத்தை ஸ்தாபனை செய்கிறார், மற்றும் மனிதர்களை சத்தியமானவர்களாக ஆக்குகிறார். நீங்கள் அனைவருக்கும் உண்மையை சொல்கிறீர்கள். சீக்கியர்களுக்கும் கூட புரிய வைப்பது மிகவும் சகஜமாகும். அவர்கள் அகால சிம்மாசனத்தை ஏற்கின்றனர். சத் ஸ்ரீ அகால சிம்மாசனம் (அகால் தக்த்) இதுவாகும். சத்ய ஸ்ரீ அகாலன் எந்த சிம்மாசனத்தில் அமர்வார் என பாவம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆத்மா சரீரம் என்ற சிம்மாசனத்தில் அமர்கிறது. எவ்வளவு பெரிய சிம்மாசனமாக இருக்கிறது. தந்தை வந்து இந்த சிம்மாசனத்தில் அமர்கிறார். இது அகாலனின் சிம்மாசனம் ஆகும். ஞானக்கடல் தந்தை இதில் அமர்ந்து நமக்கு முக்தி, ஜீவன் முக்திக்கான வழியை காட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மாண்ட சிருஷ்டியின் முதலில், இடை, கடைசியின் அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கிறார். இந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாது. அனைவருமே அவரவர்களுடைய பெருமையில் மூழ்கியிருக்கின்றனர். உங்களுடைய போதை எப்படிப்பட்டது பாருங்கள். நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராக ஆகி விட்டீர்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும் கிடைத்திருக்கிறது. ஆசிரியர் படிக்க வைக்கிறார் எனும்போது கூடவே ஆசீர்வாதமும் கிடைக்கிறது. கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆசிரியரின் வேலை படிக்க வைப்பது ஆகும், படிக்க வேண்டியது உங்களுடைய வேலையாகும். உங்களுடைய புத்தியில் இந்த ஞானம்தான் நிறைந்திருக்க வேண்டும். நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள் என்ற புத்தியில் இருக்கின்றனர் அல்லவா. இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் முக்கிய நடிகர்களையும் பாருங்கள். தந்தையும் கூட எப்படி வருகிறார், எப்படி ஞானத்தைச் சொல்கிறார். எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன. அபலைகளின் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. சில கணவன்மார்கள் தம்முடைய மனைவியருக்காக செல்வத்தை விட்டுச் செல்கின்றனர், ஆனால் குழந்தை தகுதியற்றவனாக ஆகி விடுகிறான், தாயையும் கூட துக்கம் மிக்கவராக ஆக்கிவிடுகிறான். பாபா அனுபவம் மிக்கவர். பாபா இரதத்தையும் கூட அனுபவசாலியுடையதை எடுத்திருக்கிறார். கிராமத்துச் சிறுவன் என சொல்கின்றனர். கிருஷ்ணரோ உலகின் எஜமானாக இருந்தார். அவரை கிராமத்துச் சிறுவன் என சொல்ல மாட்டார்கள். அவர் அழகாக (வெள்ளையாக) இருந்தார், வைகுண்டத்தின் எஜமானாக இருந்தார். கருப்பாக ஆகும்போது கிராமத்தில் வசிக்கிறார். ஆக கிருஷ்ணர் தான் கடைசி பிறவியில் கிராமத்துச் சிறுவனாக எப்படி ஆனார் என்பதை நீங்கள் அறிவீர்கள். (பிரம்மா) பாபா தானும் கூட ஆச்சரியப்படுகிறார் நான் என்னவாக இருந்தேன் என்று. இப்போது ஸ்ரீமத் மூலம் பாபாவுக்குத் தெரிந்திருக்கிறது, உங்களுக்கும் தெரிந்துள்ளது. அதிசயமாக உள்ளதல்லவா. எவ்வளவு பெரிய எஜமானர், மேலும் பிறகு எவ்வளவு கீழே வந்து விடுகிறார். காமச் சிதையின் மீது ஏறியதற்குப் பின் கீழே இறங்கியே வந்துள்ளார். கிருஷ்ணரை கிராமத்துச் சிறுவன் என ஏன் சொல்கிறார்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா தாமே சொல்கிறார் முன்னர் என்னவாக இருந்தார், இப்போது என்னவாக ஆகியுள்ளார், ததத்வம். எங்குள்ள விஷயத்தை எங்கே கொண்டு வந்துவிட்டார்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சியாம் சுந்தர் என்பதன் அர்த்தத்தையும் இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாமும் கூட அப்படி இருந்தோம். நாமும் கூட 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றினோம். இப்போது நாடகம் முடிவடைகிறது. இப்போது நம்முடைய வீட்டுக்குச் செல்கிறோம். மிகவும் சகஜமான விஷயம் ஆகும். தந்தை சொல்கிறார் – என்னை மட்டும் நினைவு செய்து கொண்டே இருங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், அனைவருக்கும் வழி காட்டுங்கள். ஞான மை சத்குரு கொடுத்தார். அஞ்ஞானக் காரிருள் அழிந்தது. பாடலும் எவ்வளவு நன்றாக உள்ளது. இருளுக்குப் பின் வெளிச்சம் ஏற்படுகிறது. பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு. உங்களுடைய புத்தியில் இப்போது முழு ரகசியமும் வந்து விட்டது. இப்போது நாம் சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறோம் என அறிவீர்கள். அனைவருமே இப்போது வீட்டுக்குப் போயே போய்விட்டோம். சிவ பாபா நம் முன்னால் அமர்ந்து பிரம்மாவின் வாய் மூலமாக குழந்தைகளே, குழந்தைகளே என சொல்கிறார் - இந்த ரதத்தில் அமர்ந்திருக்கிறார். அவர்தான் ஞானக் கடல். இந்த பிரம்மா பிறகு மாஸ்டர் ஞானக்கடலாக ஆகிறார். ஞானக்கடல், பதித பாவனர் இந்த உடலில் இருக்கிறார். தாமே சொல்கிறார் - நான் இந்த உடலில் வருகிறேன். இல்லாவிட்டால் பிராமணர்களை உருவாக்கி ஞானத்தையும் கொடுப்பதற்கு? வேறு யாருடைய உடலில் வருவது - காளை மாட்டின் மீது வருவேனா? இன்றைய நாட்களில் காளை மாட்டின் நெற்றியில் கூட சிவலிங்கத்தை வைக்கின்றனர். ஆக, பிராமணர்கள் கூட கண்டிப்பாக தேவை எனும் போது பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? கண்டிப்பாக பிராமணர்களை தத்தெடுக்க வேண்டும். இப்போது நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள், பிறகு தேவதையாக சத்திரியர்களாக ஆவீர்கள். ஸ்தூலமான பிராமணர்களின் விஷயம் அல்ல. அவர்கள் விகார வழி வம்சத்தினர். பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மா வாய் வழி வம்சாவளியினர். நீங்கள் நல்ல முறையில் புரிய வைக்க முடியும் - பிரம்மாவின் மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை. அந்த பிராமணர்களுக்கு இது தெரியவே தெரியாது. அவர்கள் இந்த ஞானத்தை எங்கிருந்து கொண்டு வருவார்கள்? தந்தை நல்ல விதமாக புரிய வைக்கிறார் - குழந்தைகளே, முடிந்தவரை புறம் பேசுவதை விடுங்கள். சரீர நிர்வாகத்திற்காக தொழில் முதலானவைகளை செய்யத்தான் வேண்டும். மற்றபடி சமயம் கிடைக்கும் போதெல்லாம் மிகவும் அன்பான தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவர் கூட குழந்தைகள் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார். நிறைய நண்பர்கள், உறவினர்கள் முதலானவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரிடமிருந்தும் புத்தியின் தொடர்பை நீக்கி விட்டு புதிய சம்மந்தத்தின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது. சேவை செய்யும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொள்வார். பல நல்ல குழந்தைகள் உள்ளனர், மிக நல்ல சேவை செய்கின்றனர். குருடர்களுக்கு ஊன்றுகோல் ஆகின்றனர். துக்கம் நிறைந்தவர்களை சுகதாமத்தின் எஜமானாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். தந்தை அப்படிப்பட்ட குழந்தைகள் மீது பலியாகிறார். தாம் சுகத்தை அனுபவிப்பதில்லை. நீங்களே சுகத்தை அனுபவியுங்கள் என சொல்கிறார். நான் முக்திதாமத்திற்குச் செல்கிறேன். நாடகத்தில் நடிப்பு உங்களுடையதுதான். வைகுண்டத்தின் எஜமானாக நான் ஆகப் போவதில்லை. வைகுண்டத்தின் எஜமானாக நீங்கள் ஆகிறீர்கள். அந்த சமயம் நீங்கள் அழகாக இருப்பீர்கள், இராஜ்யத்தை இழக்கும் போது கருப்பாக ஆகிறீர்கள். கருப்பு மற்றும் வெள்ளையின் அர்த்தம் எவ்வளவு நன்றாக இருக்கிறது. பாபாவும் படத்தை அப்படி உருவாக்கினார் - சியாம் மற்றும் சுந்தர். 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம், பிறகு தந்தையின் மூலம் இராஜயோகம் எப்படி கற்கிறோம்? மனிதர்கள் கிருஷ்ணரை பிறப்பு இறப்பு அற்றவர் என சொல்லிவிடுகின்றனர். நீங்கள் கிருஷ்ணரின் 84 பிறவிகளை நிரூபித்துக் காட்டுகிறீர்கள், ஆகையால் அதனை விட்டு விட்டு வெறும் படத்தை மட்டும் வைத்து விடுகின்றனர். மனிதர்களின் புத்தி அதிசயமானது. எவ்வளவு புத்தியை நேராக்க (சீராக்க) வேண்டியுள்ளது. இப்போது உங்களுடைய புத்தி நேராகியிருக்கிறது. இந்த உலகத்தின் முடிவு ஏற்படவுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சொல்ல முடியும் - இந்த அணுகுண்டுகள் முதலானவற்றின் மூலம் சிருஷ்டியின் வினாசம் ஆகியிருந்தது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தப்பிப்பதற்காக எவ்வளவோ ஏற்பாடுகள் செய்வார்கள், ஆனால் கண்டிப்பாக இறந்துதான் ஆக வேண்டும். அணுகுண்டுகள் முதலானவைகளை எவ்வளவு பயங்கரமாக உருவாக்கியிருக்கின்றனர். உலகின் நிலையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது! இன்னும் கொஞ்சம் காலமே உள்ளது, மரணம் வந்தே வந்துவிட்டது. கல்பத்திற்கு முன்பு போல அனைவரின் சரீரங்கள், செல்வங்கள் முதலான அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். மற்றபடி நாம் அனைத்து ஆத்மாக்களும் பாபாவிடம் சென்று சேரப் போகிறோம், பிறகு நம்முடைய இராஜ்யத்தில் வந்து நடனம் ஆடப் போகிறோம். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. தனது புத்தியை ஞானத்தால் எப்போதும் நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். தந்தையிடம் ஆசீர்வாதம் அல்லது இரக்கத்தை வேண்டுவதற்குப் பதிலாக படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுத்து தன் மீது தானே இரக்கம் காட்ட வேண்டும்.



    2. துக்கம் மிக்கவர்களை சுகதாமத்தின் எஜமானாக ஆக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும். தந்தையும் பலியாகும் விதமாக நல்ல சேவை செய்யும் குழந்தையாக ஆக வேண்டும்.



    வரதானம் :

    துணைவரை இணைந்த ரூபத்தில் அனுபவம் செய்யக் கூடிய நினைவின் சொரூபம் ஆகுக.



    பல குழந்தைகள் தந்தையை தனது துணைவராக ஆக்கிக் கொண்டுள்ளனர், ஆனால் துணைவரை இணைந்த ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள், பிரியவே முடியாது, என்னுடைய இணைந்த சொரூபத்தைப் பிரிப்பதற்கு யாருக்கும் சக்தி கிடையாது, இப்படிப்பட்ட அனுபவம் மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வர வர நினைவின் சொரூபம் ஆகி விடுவீர்கள். எந்த அளவு இணைந்த சொரூபத்தை அனுபவத்தை அதிகரித்தபடி செல்வீர்களோ அந்த அளவு பிராமண வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாகவும், மன மகிழ்ச்சி மிக்கதாகவும் அனுபவம் ஆகும்.



    சுலோகன்:

    உறுதியான சங்கல்பத்தின் பெல்ட் கட்டப்பட்டிருந்தால் ஆசனத்தில் இருந்து தவறி விழ முடியாது.


    ***OM SHANTI***