BK Murli 20 August 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 20 August  2017 Tamil

    20.08.2017    காலை முரளி     ஒம்சாந்தி     அவ்யக்த பாப்தாதா   ரிவைஸ்    25.12.1982          மதுபன்

    சட்டம், விதி மற்றும் வரதானம்


     இன்று அனைத்து அன்பான குழந்தைளின் அன்பிற்கான பிரதிபலனைக் கொடுப்பதற்காக பாப்தாதா சந்திக்க வரவேண்டியதாக இருக்கிறது. முழு உலகில் குழந்தைகளின் அன்பின், நினைவின் ஒசை பாப்தாதாவின் வதனத்தில் இனிமையான இசையின் ரூபத்தில் வந்து சேர்ந்துவிட்டது. எப்படி குழந்தைகள் அன்பின் பாடலைப் பாடுகிறார்களோ, அதே போன்று பாப்தாதாவும் குழந்தைகளின் குணங்களின் பாடலைப் பாடுகிறார். எப்படி இந்த மாதிரியான பாப்தாதா முழு கல்பத்திலும் கிடைக்க மாட்டார் என்று கூறுகிறார்கள், பாப்தாதாவும் குழந்தைகளைப் பார்த்து இம்மாதிரியான குழந்தைகள் முழு கல்பத்தில் கிடைக்க மாட்டார்கள், அந்த மாதிரி தந்தை மற்றும் குழந்தைகளின் இனிமையான ஆன்மீக உரையாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களா? தந்தை மற்றும் நீங்கள் இணைந்த ரூபத்தில் இருக்கிறீர்கள் தான் இல்லையா? இந்த சொருபத்தைத் தான் சகஜயோகி என்று கூறுவது. யோகா செய்பவர்கள் அல்ல. ஆனால் எப்போதும் இணைந்த அதாவது உடன் இருப்பவர்கள். அந்த மாதிரியான நிலையை அனுபவம் செய்கிறீர்களா அல்லது கடுமையாக முயற்சி செய்ய வேண்டியதிருக்கிறதா? குழந்தைப் பருவத்தில் என்ன உறுதி மொழி கொடுத்திருக்கிறீர்கள்? உடன் இருப்போம், உடன் வாழ்வோம், உடன் செல்வோம், இந்த உறுதி மொழி கொடுத்தீர்கள் தான் இல்லையா? உறுதியாக? நீங்கள் சாகார பாலனைக்கு உரிய ஆத்மாக்கள், தன்னுடைய பாக்கியத்தை நல்ல முறையில் யோசித்துப் பாருங்கள் மற்றும் புரிந்து கொள்ளுங்கள்.



    (பாப்தாதாவின் எதிரில் தாதா ராம் மற்றும் சாவித்திரி சகோதரியின் லௌகீக குடும்பம் அமர்ந்திருக்கிறது) இந்த மாதிரி கோடியில் சிலர் பாக்கியத்தை உருவாக்குபவரின் எதிரில் தொடர்பில் வருகிறார்கள், இப்பொழுது நேரம் வரும் பொழுது இந்த தன்னுடைய பாக்கியம் நினைவில் வரும், ஆதி பிதாவை அடைவது என்பது தான் பாக்கியத்தின் உயர்ந்த அடையாளம். எப்பொழுதும் உடன் இருப்பவராக நிரந்தர யோகி, எப்பொழுதும் சகஜயோகி, பறக்கும் கலையில் செல்பவராக, எப்பொழுதும் பரிஷ்தா சொரூபமாக இருக்கிறீர்களா?



    இன்று பெரிய நாளை (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவதற்காக அழைத்திருக்கிறோம், பெரியதிலும் பெரிய தந்தையுடன் பெரியதிலும் பெரிய, பெரிய நாள் மற்றும் சந்திப்பை செய்து கொண்டிருக்கிறீர்கள். பெரிய நாள் என்றால் பண்டிகை நாளை, எப்பொழுது பெரிய நாளைக் கொண்டாடுகிறீர்கள் என்றால் தீய நாட்கள் முடிவடைந்து விடுகிறது. இன்றைய நாள் மட்டும் கொண்டாடுவதாக இருக்கக் கூடாது, ஆனால் எப்பொழுதும் கொண்டாட வேண்டும். அதாவது ஊக்கம், உற்சாகத்தில் எப்பொழுதும் இருப்பது, அழியாத தந்தை, அழியாத நாள், அழியாத கொண்டாட்டம், பெரிய நாள் கொண்டாடுவது என்றால் தன்னை நிரந்தரமாக பெரியதிலும் பெரியவராக ஆக்குவது, கொண்டாடுவது மட்டும் அல்ல, ஆனால் ஆவது மற்றும் ஆக்குவது, அனைத்து ஆத்மாக்களுக்கும் பெரிய நாளின் பரிசாக என்ன கொடுப்பீர்கள், எந்த ஆத்மா தொடர்பில் வந்தாலும் அவருக்கு ஈஸ்வரிய ஆன்மீக அன்பு, சக்தி, குணம், அனைவருக்கும் சகயோகம் கொடுப்பதற்கான லிஃப்ட்டின் கிஃப்டை (பரிசு) கொடுங்கள், அதன் மூலம் பிராப்தியின்மை எதுவும் இல்லை என்று அனுபவம் செய்யும் அளவிற்கு சம்பன்னம் ஆகிவிட வேண்டும், அந்த மாதிரி பரிசைக் கொடுக்க முடியுமா? நீங்கள் சம்பன்னமாக இருக்கிறீர்களா? மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முதலில் தன்னிடம் சேமிப்பு இருந்தது என்றால் தானே கொடுக்க முடியும் இல்லையா! நல்லது இன்றோ பரிசை கொடுப்பதற்கும், பரிசைப் பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா, வாங்க மட்டும் செய்வீர்களா? கொடுப்பது மற்றும் பெறுவதில் மகிழ்ச்சி வருகிறதா அல்லது பெறுவதில் மட்டுமா? வள்ளலுக்குக் கொடுக்க வேண்டுமா அல்லது பெற வேண்டுமா? தந்தையும் (நீங்கள் கொடுப்பதை) ஏன் பெற்றுக் கொள்கிறார்? பல கோடி மடங்காக்கி பரிவர்த்தனை செய்து கொடுப்பதற்காக, தந்தைக்கு என்ன தேவை இருக்கிறது? தந்தையிடம் இருப்பதே குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக ! எனவே தந்தை வள்ளலாகவும் இருக்கிறார், உருவாக்குபவராகவும் இருக்கிறார், வரமளிப்பவராகவும் இருக்கிறார். எந்த அளவு தந்தை குழந்தைகளின் பாக்கியத்தைத் தெரிந்திருக்கிறாரோ, அந்த அளவு குழந்தைகள் தங்களுடைய பாக்கியத்தைத் தெரிந்திருக்கவில்லை, இந்த பாக்கியத்தின் நாள் எப்பொழுதும் சக்திசாலியாக ஆக்கும் நாள் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள், இது முழுமையாக அதிர்ஷ்டம் நிறைந்த பொறுப்பில் இருக்கும் விதையின் காரணமாக மரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஆத்மாவின் சிரேஷ்ட விருப்பங்கள் முழு பரிவாரத்திற்கும் லிப்ஃடின் கிஃப்ட் ரூபத்தில் கிடைத்திருக்கிறது. ஏனென்றால், தூய்மையான சுத்த ஆத்மாவாக இருந்தது. எனவே தூய்மையின் நீர் பிரத்யக்க்ஷ பழம் (பலன்) கொடுக்கிறது,. புரிந்ததா? சாகார ரூபத்தில் பொறுப்பிருக்கும் மாதா குருவும் (சாவித்திரி) அமர்ந்திருக்கிறார்கள், மாதா குருவாக ஆனார் உடன் தந்தையும் லிஃப்டின் கிஃப்ட்டைக் கொடுத்தார், இப்பொழுது இந்த குடும்பம் என்ன செய்ய வேண்டும்? தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும் இல்லையா? இதில் எதையும் விட வேண்டியது இருக்காது. பயப்படாதீர்கள். நல்லது.



    இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளும் வந்து சேர்ந்து விட்டார்கள், பாப்தாதாவும் இப்பொழுது வெளிநாட்டினர் தான், பிரம்மா பாபாவும் வெளிநாட்டினராக, வெளிநாட்டினரோடு சந்திப்பது என்பது எவ்வளவு நல்ல விஷயம். பாப்தாதாவிற்கு அனைத்து குழந்தைகளின் அதிலேயும் கூட விசேஷமாக பொறுப்பிலிருக்கும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் ஒரு விசேமான விஷயத்தைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகிறது, அது எந்த விஷயம்? வெளிநாட்டுக் குழந்தைகளின் விசேஷமாக சந்திப்பதற்கான ஆர்வம் பாப்தாதாவிடம் இன்று விசேஷ ரூபத்தில் வந்து சேர்ந்தது. இந்த உலகத்தின் கணக்குப்படி கூட இன்றைய நாள் விசேஷமாக வெளிநாட்டினரினுடையது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. டோலி, இனிப்பு சாப்பிட்டு விட்டீர்களா அல்லது இனிமேல் தான் சாப்பிட வேண்டுமா? பாப்தாதா இனிப்பை உண்ணக் கொடுத்து கொடுத்து இனிமையாக ஆக்கி விடுகிறார், நீங்களோ இனிமையானவர் ஆகி விட்டீர்கள் தான் இல்லையா! நாலாபுறங்களிலிருந்தும் வந்திருக்கும் குழந்தைகளூக்கு, மதுபன் நிவாசி குழந்தைகளுக்கு பாப்தாதா அன்பின் பிரதிபலனாக எப்பொழுதும் இணைந்த அதாவது எப்பொழுதும் உடன் இருப்பதற்கான வரதானம் மற்றும் ஆஸ்தியைக் கொடுக்கிறார். நீங்கள் இரட்டை அதிகாரிகள், ஆஸ்தியும் கிடைக்கிறது, வரதானமும் கிடைக்கிறது, எங்காவது, எப்போதாவது கடினமாக அனுபவம் ஆகிறது என்றால், வரமளிக்கும் வள்ளலின் ரூபத்தை நினைவில் கொண்டு வாருங்கள், வரமளிக்கும் வள்ளல் மூலமாக வரதான ரூபத்தில் பிராப்தி ஆவதினால் கடினமும் சுலபமாகி விடும், மேலும் பிரத்யக்க்ஷமாக பிராப்தியின் அனுபவமும் ஏற்படும்.



    இன்னைய நாளின் விசேஷ சுலோகனை எப்பொழுதும் நினைவில் வையுங்கள், மூன்று வார்த்தைகளை நினைவில் வையுங்கள் - விதி, சட்டம், மற்றும் வரதானம். விதி மூலமாக சுலபமாக சித்தி (வெற்றி) சொரூபமாகி விடுவீர்கள். சட்டத்தின் மூலமாக உலகை படைப்பவர் மற்றும் வரதானத்தினால் வரதானி மூர்த்தி ஆகிவிடுவீர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் எப்பொழுதும் சக்திசாலியாக ஆக்கிக் கொண்டே இருக்கும், நல்லது.



    நாலாபுறங்களின் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பெரியதிலும் பெரிய தந்தையின், பெரியதிலும் பெரிய தந்தையின், பெரியதிலும் பெரிய குழந்தைகளுக்கு, அனைவரையும் சம்பன்னம் ஆக்கக் கூடிய மாஸ்டர் உருவாக்குபவர் வரதானி குழந்தைகளுக்கு, மாயாவிற்கு விடை கொடுத்ததற்காக வாழ்த்துக்கள்! இந்த வாழ்த்தின் கூடவே இன்று விசேஷ ரூபத்தில் குழந்தைகளுக்கு ஊக்கம் உற்சாகத்திற்காகவும் வாழ்த்துக்கள், அனைவருக்கும், யார் ஸ்தூலமாகாவும் ஒளிவடிவ உடல் மூலமாகவும் எதிரில் இருக்கிறார்களோ, அந்த மாதிரி அனைத்து எதிரில் இருக்கும் குழந்தைகளுக்கு, மிகுந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    தீதி - தாதியுடன் சந்திப்பு.

    உங்கள் இருவரையும் பார்த்து பாப்தாதாவிற்கு என்ன நினைவு வரும்? உலகின் கண்களாகவோ இருக்கவே இருக்கிறீர்கள், ஆனால் முதலில் தந்தையின் கண்களின் மணியாக இருக்கிறீர்கள், கண்பார்வை இல்லையென்றால் உலகமில்லை என்று கூறுகிறார்கள் இல்லையா! எனவே பாப்தாதாவும் கண்ணின் மணிகளை ஸ்தாபனை காரியத்தில் அந்த மாதிரியே விசேஷ ஆத்மாக்களாகப் பார்க்கிறார். செய்விப்பவரோ செய்து கொண்டிருக்கிறார். ஆனால் செய்பவர் களாக குழந்தைகளைக் கருவியாக ஆக்குகிறார். செய்பவர் செய்விப்பவர் என்ற இந்த வார்த்தையிலும் தந்தை மற்றும் குழந்தைகள் இணைந்திருக்கிறார்கள் இல்லையா? கைகள் குழந்தைகளினுடையது மற்றும் வேலை தந்தையினுடையது, உதவிக்கரம் கொடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு குழந்தைகளுக்குத் தான் கிடைத்திருக்கிறது. மிகப் பெரிய காரியம் கூட எப்படி அனுபவம் ஆகிறது? செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்று அனுபவம் ஆகிறது இல்லையா? கருவியாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார். மனதிலிருந்து இந்த ஒலி தான் எப்பொழுதும் வெளிப்படுகிறது. பாப்தாதாவும் குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திலும் செய்விப்பவர் ரூபத்தில் எப்பொழுதும் துணையாக இருக்கிறார். உடன் இருக்கிறாரா அல்லது சென்று விட்டாரா? கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடினீர்கள். விளையாடுவதைக் கூட குழந்தைகள் மூலமாகத்தான் செய்வோம் இல்லையா? விளையாட்டில் என்ன நடக்கும்? கைதட்டப்பட்டது மற்றும் விளையாட்டு தொடங்கியது. இதுவும் நாடகத்தின் கைதட்டப்பட்டது, மேலும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தொடங்கியது.



    இப்பொழுது இனிமையான வீட்டின் கதவுகளை எப்பொழுது திறக்கப்போகிறீர்கள்? எப்படி மாநாடு நடத்த வேண்டிய நாளை நிர்ணயம் செய்தீர்கள் என்றால், அதற்கான நிகழ்ச்சியை தயாரிக்கவில்லையா! கதவைத் திறப்பதற்கு முன்பு தேவையானவற்றை தயார் செய்வீர்களா அல்லது அதையும் தந்தை தான் தயார் செய்ய வேண்டுமா? அது தயாராக இருக்கிறதா? பிரம்மா பாபாவோ ஏற்கனவே எவரெடியாக இருக்கிறார். இப்பொழுது உடன் செல்பவர்களும் எவரெடி ஆகவேண்டும் இல்லையா!



    8 மணி மாலையை உருவாக்க முடியுமா? இப்பொழுது உருவாகுமா? முதலில் 8 மணி மாலை தயாராகிவிட்டது என்றால், பிறகு பின்னால் உருவாக வேண்டிய மாலை தயாராகியே விடும். 8 மணிகள் எவரெடியா? பெயரை எடுத்து எழுதி அனுப்புங்கள். அனைத்தையும் சோதனை செய்து ஆம் சரி! என்று கூறலாம். இதைத் தான் எவரெடி என்று கூறுவது தந்தை விருப்பமானவர், பிராமண பரிவாரம் விருப்பமானது, மேலும் உலக சேவையும் விருப்பமாக இருக்கிறது, இந்த மூன்று விசேஷங்களும் எப்பொழுது இருக்குமோ அப்பொழுது எவரெடி என்று கூறுவோம். முதலில் கங்கணம் தயாராகும் பிறகு பெரிய மாலை தயாராகும் நல்லது.



    சாவித்திரி சகோதரியுடன் சந்திப்பு :

    தன்னுடைய குப்த (மறைவான) வரதானங்களை பிரத்யக்ஷ ரூபத்தில் பார்க்கிறீர்களா? நான் யார் என்று புரிந்து கொண்டீர்களா? சேவைக்குத் தகுதியானவர்களின் பட்டியலில் தன்னுடைய எண் முன்னுக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா! சேவையின் பலனிற்கு பொறுப்பாளர் ஆனீர்கள். இருந்தும் விதைதான் பொறுப்பாளர் என்று கூறுவோம் இல்லையா? வேவைக்குத் தகுதியானவர் பட்டியலில் மிகவும் முன்னுக்கு இருக்கிறீர்கள். சில நேரம் மட்டும் தன்னை மறந்து விடுகிறீர்கள். பாப்தாதாவே ஸ்வீகாரம் (ஏற்றுக் கொண்டார்) செய்கிறார் என்றால், வேறு என்ன வேண்டும்? அனைவரின் சேவை ஒரே மாதிரி இருப்பதில்லை, வகை வகையான ஆத்மாக்கள், வகை வகையான சேவைக்கான முறைகள் இருக்கின்றன. அதிகம் யோசிப்பதினால் ஒன்றும் நடக்காது, தானாக நடக்கும், தன்னை எப்பொழுதும் தந்தையின் நெருக்கமான இரத்தினம் என்று புரிந்து கொள்ளுங்கள். பிறந்ததிலிருந்தே நீங்கள் அதிகாரி, பிறந்ததிலிருந்தே மிக வேகமாகச் சென்றீர்கள் இல்லையா! பிறந்ததிலிருந்தே நெருக்கத்தில் இருப்பதற்கான வரதானம் கிடைத்தது. சாகார பாபாவுடன் அருகாமையில் இருப்பதற்கான வரதானம் எத்தனை பேர்களுக்கு கிடைத்தது என்று எண்ணிணீர்கள் என்றால், அந்த மாதிரி வரதானிகள் (வரம் பெற்றவர்கள்) தேடினாலும் கஷ்டப்பட்டுதான் கிடைப்பார்கள். எனவே தந்தையின் அருகாமையில் இருக்கிறேன் என்று புரிந்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள்,. எவ்வளவு நடக்கிறதோ அது நன்மை நிரம்பியது. யோசிக்காதீர்கள், எந்த எண்ணமும் இல்லாமல் இருங்கள். தந்தை எப்பொழுதும் துணைவனாக இருப்பார் என்று தந்தையிடமிருந்து உறுதிமொழி இருக்கிறது. தன்னுடைய எண்ணத்தையும் தந்தையிடம் விட்டு விடுங்கள், சேவை அதிகாரிக்குமா அல்லது அதிகாரிக்காதா அது தந்தைக்குத் தெரியும். அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் பொறுப்பல்ல, தந்தைக்குத் தான் பொறுப்பு. அந்த அளவு கவலையின்றி இருங்கள். நீங்களோ தந்தையின் எதிரில் உங்களுடைய எண்ணத்தை வைத்து விட்டீர்கள் இல்லையா! அப்படியானால் பொறுப்பு யாருடையது? நீங்கள் கண்டெடுக்கப்பட்டவர், எவ்வளவு அன்போடு தந்தை தேடினார், முதன் முதலில் சேவைக்கான ரத்தினங்களை முழு உலகிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார், எனவே இதை மறக்காதீர்கள், நல்லது.



    சாவித்திரி சகோதரியின் லௌகிக குடும்பத்தினருடன் சந்திப்பு :

    அனைவரும் இரட்டை ஆஸ்தியின் அதிகாரிகள் தான் இல்லையா! லௌகிக தந்தையின் சிரேஷ்ட எண்ணத்தின் கஜானா கிடைத்தது. மேலும் பரலோக தந்தையின் ஆஸ்தியும் கிடைத்தது. ஆன்மீகத் தந்தையின் ஆஸ்தியும் கிடைத்தது. மூவரின் ஆஸ்தியும் சேர்ந்தே கிடைத்தது,. மூன்று தந்தையின் விருப்பங்களின் தீபமாக இருக்கிறீர்கள், பொதுவாக குழந்தைகளை குலத்தின் தீபம் என்று கூறுவார்கள். குலத்தின் தீபமாகவோ ஆகியிருக்கிறீர்கள், ஆனால் கூடவே உலகின் தீபமாக ஆகுங்கள், எப்பொழுதும் நெற்றியில் பாக்கியத்தின் நட்சத்திரம் மின்னிக் கொண்டிருக்கிறது. பாப்தாதாவும் அந்த மாதிரி தைரியம் வைக்கும் குழந்தைகளுக்கு எப்பொழுதும் உதவி செய்கிறார். எப்பொழுதெல்லாம் எண்ணத்தை வைத்தீர்களோ, தந்தை ஆஜராகி விடுகிறார். தந்தை மேல் அனைத்துக் காரியங்களின் பொறுப்பில் நடக்கும், விட்டு விட்டீர்கள் என்றால் காரியம் எப்படி நடக்கும் என்று பாபாவிற்குத் தெரியும். நீங்கள் எப்பொழுதும் டபுள் லைட் பரிஷ்தா, டிரஸ்டி ஆகி இருந்தீர்கள் என்றால், எப்பொழுதும் லேசாக இருப்பீர்கள் சுத்தமான இதயம் இருந்தால் விரும்பியது கிடைக்கும் சிரேஷ்ட எண்ணங்களின் வெற்றி அவசியம் இருக்கும். ஒரு சிரேஷ்ட எண்ணம் குழந்தைகளினுடையது மேலும் ஆயிரம் சிரேஷ்ட எண்ணங்களின் பலன் தந்தை மூலமாகக் கிடைத்து விடுகிறது. ஒன்றிற்கு ஆயிரம் மடங்கு கிடைத்து விடுகிறது. இப்பொழுது தந்தையிடமிருந்து என்ன கஜானா கிடைத்திருக்கிறதோ, அதை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருங்கள், மஹாதானி ஆகுங்கள், உங்களிடம் யார் வந்தாலும் காலியாகச் செல்லக் கூடாது. ஞானத்தின் ஆஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது, அந்த விதை தான் இப்பொழுது பழம் (பலன்) கொடுக்கும், நல்லது.



    விடைபெற்று செல்லும் நேரம் அனைத்துக் குழந்தைகளுக்காக பாப்தாதா அன்பு நினைவுகளை ஒலி நாடாவில் பதிய வைத்தார்.



    நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து அன்பிற்குரிய குழந்தைகளின் அன்பு நினைவுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றோம், பாப்தாதாவுடன் அனைத்துக் குழந்தைகளும் இதய சிம்மாசனதாரிகள், யார் இதயத்தில் இருக்கிறரோ அவரை எப்படி மறக்க முடியும்? எனவே எப்பொழுதும் குழந்தைகள் உடன் இருக்கிறார்கள், மேலும் உடன் தான் இருப்பார்கள், உடன் தான் செல்வார்கள், பாப்தாதா அனைத்து குழந்தைகளின் இதயத்தின் ஊக்கம், உற்சாகம் மேலும் சேவையில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாயாவை வென்றவர் ஆவதின் செய்தியை கேட்டுக் கொண்டே இருக்கிறார், ஒவ்வொரு குழந்தையும் மஹாவீர் மஹாவீரனாகி வெற்றிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே பாப்தாதா அனைவருக்கும் வெற்றிக்கான வாழ்த்துக்களைக் கொடுக்கிறார், பாராட்டுக்களைக் கொடுக்கிறார், எப்பொழுதும் பெரிய தந்தையுடன் பெரியதிலும் பெரிய நாளை ஊக்கம் உற்சாகத்துடன் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள், மேலும் எப்பொழுதுமே பெரிய நாளை கொண்டாடிக் கொண்டே இருப்பீர்கள். விசேஷமாக என்னுடைய பெயரில் அன்பு நினைவு வந்தது என்று ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்ள வேண்டும்,. ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரையும் சேர்த்து பாப்தாதா எதிரில் பார்த்துக் கொண்டே, சந்தித்துக் கொண்டே அன்பு நினைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது.



    கேள்வி:

    ஏர்கண்டிஷன் (குளிர்சாதன வசதியுள்ள) இருக்கையை முன்பதிவு செய்வதற்கான முறை என்ன?



    பதில்:

    ஏர்கண்டிஷன் இருக்கையை முன்பதிவு செய்வதற்கான தந்தை என்ன என்ன கண்டிஷன்கள் (நிபந்தனைகள்) கூறியிருக்கிறாரோ அதன்படி எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது கண்டிஷனை அமல் படுத்தவில்லை என்றால் ஏர்கண்டிஷன் இருக்கை கிடைக்காது. முயற்சி செய்வோம்.... என்று யார் கூறுகிறார்களோ அந்த மாதிரி முயற்சி செய்பவர்களுக்கும் இந்த இருக்கை கிடைக்க முடியாது.



    கேள்வி:

    எந்த ஒரு குணம் பரமாத்ம காரியத்திலும் விவஹாரத்திலும் அனைவரின் பிரியமானவர் ஆக்கிவிடுகிறது?



    பதில்:

    ஒவ்வொருவரையும் முன்னேற்றுவதற்கான குணம் அதாவது முதலில் நீங்கள் என்ற குணம் பரமாத்மா காரியம் மற்றும் விவஹாரம் இரண்டிலேயுமே அனைவரின் பிரியமானவர் ஆக்கி விடுகிறது. தந்தைக்கும் இந்த முக்கிய குணம் தான் இருக்கிறது. குழந்தைகளே முதலில் நீங்கள் என்று தந்தை கூறுகிறார். அந்த மாதிரி இதே குணத்தில் தந்தையைப் பின்பற்றி நடங்கள். நல்லது.



    வரதானம்:

    எல்லைக்கப்பாற்பட்ட வைராக்ய உள் உணர்வு மூலமாக என்னுடையது என்பதின் இராயல் ரூபத்தை அகற்றக் கூடிய விலகியிருக்கும் அன்பானவர் ஆகுக !



    நேரத்தின் அருகாமைக் கேற்றபடி தற்சமயத்து வாயுமண்டலத்தில் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்யம் பிரத்யக்ஷ ரூபத்தில் இருப்பது அவசியாமாகும். அனைத்து உறவு, தொடர்பில் எந்த அளவு விலகி இருக்கிறீர்களோ அந்த அளவு அன்பாக இருப்பது என்பது தான் யதார்த்த வைராக்கிய உள் உணர்வின் அர்த்தமாகும், யார் விலகியும் அன்பாகவும் இருக்கிறாரோ அவர் ஒரு கருவியாகவும் பணிவாகவும் இருப்பார், அவரில் நான், நான், என்று என்பது இராயல் ரூபத்தில் அதிகரித்து விட்டது. இது என்னுடைய வேலை தான், இது என்னுடைய இடம் தான், எனக்கு இந்த அனைத்து சாதனங்களும் பாக்கியத்தின் அனுசாரம் கிடைத்திருக்கிறது…. என்று கூறுவார்கள். இப்பொழுது அந்த மாதிரியான இராயல் ரூபத்தின் நான், எனது என்பதை முடிவு கட்டுங்கள்.



    சுலோகன்:

    பரசிந்தனின் (மற்றவை, மற்றவர்களின் சிந்தனை) பிரபாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் நல்ல சிந்தனை செய்யுங்கள் மேலும் நற்சிந்தனையாளர் ஆகுங்கள்.



    ***OM SHANTI***