BK Murli 16 December 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 16 December 2017 Tamil

    16.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துள்ளது. 5000 ஆண்டிற்குப் பின்னர் போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்) பாபா மூலமாக ஞானம் கேட்டு மனிதர்களிலிருந்து தேவதையாகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும்.



    கேள்வி :

    ஞான தாரணை ஆகாததற்கு காரணம் என்ன?



    பதில் :

    ஒரு பாபாவுடன் முழுமையாக தொடர்பின்றி புத்தி அலை மோதுகின்றது, நான் ஒரு ஆத்மா என்ற எண்ணத்தில் நிலைத்திருப்பதில்லை. ஆதலால் ஞானம் தாரணை ஆவதில்லை. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே! வழக்கமான சம்பிரதாயங்களில் போய்விடக்கூடாது. மற்றவர்களின் பெயர், உருவத்தினை நினைவு செய்யக்கூடாது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்ற இந்த பாடத்தில் உறுதியாக இருக்க வேண்டும், பிறர் வழிப்படி செல்ல வேண்டாம். பாபாவிடம் வழியைக் கேட்டு நடக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் துக்கத்திலிருந்து விடுதலை அடைவீர்கள், தாரணையும் நன்றாக இருக்கும்.



    பாடல்:

    போலாநாத் மிகவும் தனிப்பட்டவர்....



    ஓம் சாந்தி

    போலாநாத் என்றால் கொடுக்கக்கூடியவர். போலாநாத் என்று சிவபாபாவை கூறப்படுகின்றது. போலாநாத் பாபா வந்து கெட்டவர்களை நல்லவர்களாக சீர்திருத்திவிட்டு சென்றார். முதல், இடை, கடையின் இரகசியத்தை கூறிவிட்டு சென்றுள்ளார். ஆகவே தான் பக்தர்கள் புகழ் பாடுகிறார்கள். புகழ்பாடப்பட்ட அதே போலாநாத் இப்போது தீயவர்களை நல்லவர்களாக ஆக்கக் கூடியவர் நம் எதிரிலேயே அமர்ந்துள்ளார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றார்கள். அவரின் புகழைப் பாடுகின்றார்கள். பாபாவும் தன்னுடைய பாகத்தை ஏற்று நடிக்கின்றார். பாபா வந்து தன்னுடைய அறிமுகத்தினைக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். பாபா என்ன புரிய வைக்கின்றாரோ அவற்றை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து புரிய வைக்கிறார் என்பதை குழந்தைகள் புத்தியில் உள்ளது. ஒவ்வொரு கல்பமும் வந்து தூய்மை இல்லாத உலகத்தினை தூய்மையாக ஆக்குகின்றார். இப்போது தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறார். இதனைப் பற்றி பலருக்கு தெரியும், மேலும் அநேகர் தெரியாமலும் உள்ளார்கள். கல்பத்திற்கு முன்பு யார் ஆஸ்தியை அடைந்தார்களோ அவர்கள் முன்பு போலவே வருவார்கள். ஆஸ்தி பெறுவார்கள். பாபா வந்து ஆஸ்தியை கொடுப்பார் என்பது உங்களுக்குக் கூட முன்பு தெரியாது. இப்போது அறிந்து கொண்டீர்கள். பக்தர்களை காப்பவர் அவர் தான். ஆரம்பம், இடை, இறுதியை பற்றிய ஞானம் கூறுகின்றார். அவரைத் தான் ஞானக்கடல் என்று கூறப்படுகின்றது. இவர் அவரே தான் பாரதத்தில் வந்து பிறவி எடுத்துள்ளார் என்று மனமும் கூறுகின்றது. இதை அலௌகீக ஜென்மம் என்று மகிமைப் பாடியுள்ளார்கள். இவர் வந்து பாரதவாசிகளான தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகின்றார். தூய்மை இழந்த மனிதர்கள் அழைக்கின்றார்கள், எனில் நாம் தூய்மையாக இருந்தோம் என்று புரிந்துள்ளார்கள். இப்போது தூய்மை இல்லாமல் ஆகிவிட்டோம், மீண்டும் தூய்மையாக ஆகவேண்டும்.



    பாபாமூலமாக மூன்றாவது கண் கிடைத்துள்ளதால் அனைத்தையும் புரிந்து கொண்டீர்கள். குழந்தை களாகிய நீங்கள் நாள் முழுவதும் ஞான சிந்தனை செய்ய வேண்டும். சத்யுகத்தில் யார் தூய்மையானவர்களாக இருந்தனர்? நிச்சயமாக தேவி, தேவதைகள் தான். அச்சமயம் வேறு எந்த தர்மமும் கிடையாது. தேவதைகளின் சித்திரங்கள் உள்ளன. மற்றபடி பெயர் கூறப்படுவதில்லை. ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ நாராயணன் தேவதா சித்திரங்கள் உள்ளன என்று கூறப்படுவதில்லை. இப்போது அவர்கள் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வேறு எந்த தர்மமும் இல்லை. நமக்கு பாபா சத்தியமான கதை கூறுகின்றார் என்பது புத்தியில் உள்ளது. இந்த ஞானம் கேட்டதேயில்லை என்று உலகத்தினர் கூறுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நாடகத்தின் இரகசியம் பற்றி தெரியாது. ஆனால் ஒவ்வொரு கல்பமும் நீங்கள் தான் கேட்டு வந்துள்ளீர்கள் என கூறுவீர்கள். 5000 ஆண்டிற்கு முன்னர் கேட்டீர்கள் தானே? பின்னர் ஏன் கூறுகின்றீர்கள் முன்பே கூறவில்லை என்று? கல்பத்திற்கு முன்பு யார் கூறினாரோ, அவர் மூலமாக இப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். நல்லவிதமாக புரிய வைக்க வேண்டும். நீங்கள் 5000 ஆண்டிற்கு முன்பு கூட ஞானம் கேட்டீர்கள். தேவதைகள் 5000 ஆண்டு முன்னர் இருந்தார்கள் அவர்களை மனிதர்களிலிருந்து தேவதையாக யார் ஆக்கினார்கள்? இப்போது மீண்டும் பாபா தேவதையாக்க வந்துள்ளார். 5000 ஆண்டிற்கு பின்னர் பாபா வரவேண்டியதாக உள்ளது. இராவணன் மூலமாக தூய்மை இழந்தவர்களை, தூய்மையாக ஆக்குகின்றார். சரித்திரம் மற்றும் பூகோளம் மறுபடியும் சுழல்கின்றது. சத்தியயுகத்திற்கு பின்னர் திரேதாயுகம் என்று சக்கரம் சுற்றுகின்றது. இப்போது கலியுகத்தின் முடிவு. ஒரு புறம் அழிவிற்கான தீ. மறுபுறம் புதிய உலகத்தினை ஸ்தாபனை செய்வதற்காக பாபா வந்துள்ளார். இதுவே மகாபாரத யுத்தம். இதன் மூலம் மனித உலகமே அழிந்து விடும். இதை அனைவருமே புரிந்து கொள்கின்றார்கள். இந்த பழைய உலகம் அழியப்போகின்றது என்று பார்க்கும்போது தெரிகின்றது. இந்த மகாபாரத யுத்தம் 5000 ஆண்டிற்கு முன்னர் கூட நடைபெற்றது. இலட்சகணக்கான ஆண்டுகள் என்ற பேச்சேயில்லை. இந்த பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இவர்கள் சத்யுகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள். சித்திரங்களின் மூலமாக நன்றாகப் புரிய வைக்க வேண்டும். ஆதலால் லட்சுமி, நாராயணன் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. லட்சுமி, நாராயணன் சித்திரங்கள் பாரதத்தில் நிறைய உள்ளன, மீண்டும் நாம் ஏன் செய்கின்றோம்? நாம் அர்த்தத்துடன் தான் செய்கின்றோம். இதில் முழுமையான ஞானம் உள்ளது. மனிதர்கள் குழப்பத்தில் உள்ளர்கள். இவர்களின் இராஜ்யம் சத்தியயுகத்தில் இருந்தது என்பதனை புரிய வைகப்படுகிறது. மிகவும் குறைந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள், யார் வாழ்ந்து சென்றார்களோ, அவர்கள் மறுபிறவி எடுத்து, எடுத்து தூய்மையான நிலையிலிருந்து தூய்மையில்லாமல் ஆகிவிட்டார்கள். இந்த உலகமே தமோபிரதானமாக உள்ளது, பின்னர் தூய்மையாக ஆக வேண்டும். புரிந்து கொள்வது மிகவும் எளிது. பாபா 5000 ஆண்டிற்கு முன்பு உள்ள கதையைக் கூறுகின்றார். இங்கு லட்சுமி நாராயணர் இராஜ்யம் வெகு காலத்திற்கு முன்பே இருந்தது. அதாவது கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டிற்கு முன்பு சத்ய யுகம் இருந்தது. சொர்க்கத்தினை ஸ்தாபனை செய்யும் இறை தந்தைதான் சொர்க்கத்தினை ஸ்தாபனை செய்திருந்தார். பாரதத்தைத் தான் புகழ் பெற்ற புராதன தேசம் என்று கூறப்படுகின்றது. இதில் பகவான், பகவதியின் இராஜ்யம் செய்தனர். பகவான் கிருஷ்ணர் பகவான் இராதை என கூறப்படுகிறார்கள். லட்சுமி, நாராயணன் சத்தியயுகத்தில் இருந்தார்கள். பின்னர் இராம், சீதா திரேதாயுகத்தில் இருந்தார்கள். 5000 வருடங்கள் என்ற கணக்கு சரியாக உள்ளது. எப்போது தேவதைகளின் இராஜ்யம் இருந்ததோ, மற்றவர்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள். ஆத்மா என்பது அழிவற்றது. ஒரு பொழுதும் ஆத்மா அழிவதில்லை. நாடகம் என்பதும் அழியாதது. ஆத்மாவிற்கு 84 பிறவி அழிவற்ற பாகம் கிடைத்துள்ளது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் பாகம் அனைத்துமே பதிவாகியுள்ளது. இவை அனைத்துமே அதிசயமான விஷயங்கள். இதனை இயற்கை என்று கூறப்படுகின்றது. இவ்வளவு சிறிய புள்ளியான ஆத்மாவில் 84 பிறவியின் பாகம், 5000 ஆண்டிற்கான பாகம் பதிவாகியுள்ளது. அதுவும் கூட அழிவற்றது, மீண்டும் சுழல்கின்றது. இது மிகவும் அதிசயமான இயற்கை. பரமாத்மாவும் புள்ளி, ஆத்மாவும் புள்ளி. ஆனால் பரமாத்மா அனைத்து ஆத்மாக்களுக்கும் மேலானவர். ஆத்மாக்கள் அனைத்துமே ஒரே மாதிரியாக இல்லை, வரிசைப்பிரகாரம் உள்ளது. முதலில் உயர்ந்த சிவபாபா பின்னர் லட்சுமி-நாராயணன். பிரம்மா, சரஸ்வதியை உயர்ந்தவர்கள் (சுப்ரீம்) என்று கூறமுடியாது. லட்சுமி-நாராயணன் சம்பூர்ணமானவர்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக வரிசைப் பிரகாரம் வருகின்றார்கள். தேவதைகளுக்கு முக்கியமாக புகழ் பாடப்பட்டுள்ளது. அனைவரையும் விட உயர்ந்தவர் சிவபாபா. பின்னர் சூட்சும வதனத்தில் உள்ள பிரம்மா, விஷ்ணு, சங்கர். பின்னர் லட்சுமி-நாராயணர், இராம், சீதா என்று வரிசைப்படியாக இருக்கிறார்கள். நாடகத்தில் கூட நடிகர்கள் வரிசையாக இருப்பார்கள். ஒரே மாதிரியாக அனைவரும் இருக்க முடியாது. இவர் ஆத்மா உயர்ந்த நடிகராக உள்ளார். இவர் சாதாரணமான நடிகர். அனைவரையும் விட முதலாவது டைரக்டர், படைப்பவர் யார்? பரமபிதா பரமாத்மா செய்பவர் மற்றும் செய்விப்பவர். இப்போது நீங்கள் முழு நாடகத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். இது எல்லையற்ற நாடகம் உங்களுக்குச் சுருக்கமாக கூறுகின்றார். தேவி-தேவதா தர்மம் கல்ப விருட்சத்தின் அஸ்திவாரம். அதில் இஸ்லாம், புத்தம், கிறிஸ்துவர்கள் என்ற கிளைகள் உருவாகின்றன. இது பூந்தொட்டி போல இருக்கின்றது. மரம் அழகாக இருக்கின்றது. ஒவ்வொரு தர்மத்தில் உள்ள இலைகளை எண்ணினால் எவ்வளவு இருக்கும். இஸ்லாம், பௌத்தம், என்ற அனைத்து மதங்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும். போலாநாத் சிவபாபா இந்த ஞானத்தைக் கூறுகின்றார். உடுக்கை வாசித்தார் என்ற பேச்சேயில்லை. எதுவெல்லாம் மனதில் தோன்றியதோ, அவைகளை சாஸ்திரங்களில் எழுதியுள்ளார்கள். உண்மையில் ஞானம் என்பது உடுக்கை. இதனை சங்கு ஒலி என்றும் கூறப்படுகின்றது. சங்கு ஒலி என்பது வாயால் ஊதுவார்கள். இது ஞானம் என்ற முரளி. நாடகத்தின் ஆரம்பம், இடை மற்றும் இறுதி பற்றிய ரகசியத்தினைப் புரிய வைக்கின்றார். ஆத்மா என்பது புள்ளியாக உள்ளது. அதற்குள் முழுமையான பாகம் பதிவாகியுள்ளது. சிவபாபா தான் படைப்பாளர், அவரும் நடிக்கின்றார். அவருடைய பாகம் மிகவும் சிறந்தது (முக்கியமானது). வரிசைப்படியாக உள்ளார்கள். இந்த தந்தை தான் படைப்பவர். மற்றவர்கள் அனைவரும் பிறப்பு இறப்பில் வருகின்றார்கள். இவர் புனர் ஜென்மத்தில் வருவதில்லை. இவர் அலௌகீகமான பிறப்பு எடுக்கின்றார். உங்களுக்குத் தெரியும் எப்படி பிரவேசம் ஆகிறார் என்று. ஆத்மாக்கள் கூட பிரவேசம் ஆகின்றன. சிலருடைய மனைவியின் ஆத்மா மற்றொருவரின் உடலில் பிரவேசம் ஆகி பேசுகின்றது. நான் சுகமாக இருக்கின்றேன் என்று. ஆனால் இவ்வுடலை அன்புடன் அரவணைக்க முடியாது. ஏனென்றால் அது வேறு ஒருவரின் உடல். என்னுடைய மனைவியின் ஆத்மா என்ற பாவனை மட்டும் இருக்கும். அந்த ஆத்மாவை அழைக்கின்றார்கள். இம்மாதிரியாக நிறைய பேரை அழைக்கின்றார்கள். இப்போது தமோபிரதானமாக ஆகிவிட்டதால் சரியாக கூறுவதில்லை. ஆத்மா என்றால் என்ன? எவ்வாறு வந்து செல்கின்றது, இது நாடகத்தில் முன்பே பதிவாகியுள்ளது. ஆத்மா அவ்வுடலை விட்டுவிடுகின்றது, இறந்து விடுகின்றது என்பது கிடையாது. பாபா கூறுகின்றார்: மன ஆசைகளைப் பூர்த்தி செய்ய சாட்சாத்காரம் செய்விக்கின்றார். நாடகத்தில் என்ன பதிவாகியுள்ளதோ அவைகள் நடைபெறுகின்றது. ஒரு வினாடி கடந்தது நாடகத்தில் உள்ளபடி கடந்து விட்டது. இது எல்லையற்ற நாடகம். பாபா பிந்துவாக உள்ளார். பிந்துவை போலாநாத் என்று கூறுகின்றார்கள். எவ்வளவு அதிசயமாக உள்ளது. பாபா கூட கூறுகின்றார்: பிந்துவாகிய எனக்குள்ளும் எவ்வளவு பாகம் பதிவாகியுள்ளது. இவ்விஷயங்களை புதியதாக உள்ளவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். பழையவர்களிலும் கூட சிலர் புரிந்து கொள்வதில்லை. பிறருக்குப் புரிய வைக்கும்போது குழப்பம் அடைகின்றார்கள். சிலர் வானொலி (ரேடியோ) யில் பேசுவதற்கு பயப்பபடுகிறார்கள். முரளி மிகவும் சரளமாக கூறவேண்டும். அவர்கள் படித்து கூறுகின்றார்கள், இங்கு வாய் மூலம் பேச வேண்டும். பாபா அனைத்தையுமே வாய் மூலமாக கூறுகின்றார். உங்கள் புத்தியில் தாரணை ஆகின்றது. கல்பத்திற்கு முன்பு கூட தாரணை செய்து அநேகருக்கு கூறினீர்கள். பின்னர் ஞானம் முடிந்து போய்விடுகின்றது. இப்போது மீண்டும் ஆரம்பமாகின்றது. இந்த ஞானம் சாது சந்நியாசிகளின் புத்தியில் இல்லை. அவர்கள் பரமாத்மாவைப் பற்றி அறியவில்லை. ஆத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிறது என்று கூறுகின்றார்கள். அவ்வாறானால் எப்படி சந்திக்க முடியும்? இப்போது ஆத்மாக்களாகிய நீங்கள், பாபா வந்துவிட்டார், நமக்கு ஞானத்தினைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், பின்னர் பாபாவுடன் வீட்டிற்கு திரும்பிச் செல்வோம் என்பது ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். குழந்தைகளுக்கு ஆன்மீக போதையிருக்க வேண்டும். இது இல்லற மார்க்கம். அநேகர் கூறுகின்றார்கள் நீங்கள் குமார், குமாரிகள். உங்களுக்கு விகாரத்தின் அனுபவமே யில்லை. நாங்கள் விகாரமான இல்லறத்தில் இருக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு எப்படி இந்த ஞானம் கூறமுடியும்? நாங்கள் குடும்பத்தினர், (தம்பதிகள்) நீங்கள் திருமணமாகாதவர்கள், எப்படி புரிய வைக்க முடியும்? குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவசாலிகள். யார் திருமணமாகி கணவர் மனைவியாகி விகாரிகளோ, அவர்கள் தான் புரிய வைக்க முடியும். இம்மாதிரியாக நாங்கள் விகாரத்தை வெற்றி அடைந்துள்ளோம், இது போன்ற கடிதங்கள் பாபாவிற்கு வருகின்றது. சரியாகத்தான் கூறுகின்றார்கள். அனுபவத்துடன் கடிதம் எழுத வேண்டும். யார் திருமணம் ஆகியும் தூய்மையாக உள்ளார்களோ அவர்கள் தங்களது அனுபவத்தினை எழுத வேண்டும். சிலருக்கு குழந்தைகளும் இருப்பார்கள் பின்னர் தூய்மையாக ஆகின்றார்கள். இப்படியெல்லாம் புரிய வைக்க வேண்டும். ஞானம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நன்றாகப் புரிய வைப்பவர்கள் இல்லை. ஆதலால் குழப்பம் வருகிறது. அநேக விஷயங்கள் பாபாவிடம் வருகின்றது. ஆதலால் அனுபவிகள் புரிய வைக்க வேண்டும். கடிதங்கள் மூலமாக யாருக்கு அந்தளவு புரிய வைக்க முடியாது. நேராக வந்து சந்திக்க வேண்டும். பாபாவும் புரிய வைப்பார். அநேகர் இல்லறவாசிகள் தங்கள் அனுப வத் தினை கூறமுடியு ம். நாங்கள் குடும்பத்தில் இருந்தாலும் ஸ்ரீமத்தை முழுமையாக கடைப்பிடிக்கின்றோம். உணவில் முழுமையான பத்தியத்தைக் கடைப்பிடிக்கிறோம். சரியாக ஞானம் கூறத் தெரியவில்லை என்றால் கேட்பவர்கள் குழப்பமடைவார்கள். சேவைக்காக புத்தியை செலுத்த வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆகவும் வேண்டும். எந்த ஒரு வழக்கமான நடைமுறை பழக்கம் கூடாது. முயற்சி தேவையாக உள்ளது. மாயை அடிக்கடி சிக்க வைக்கின்றது. கர்மாதீத் நிலை தற்போது அடைய முடியாது. அநேகர் பிறரின் பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு புயல் வருகின்றது பாபா என்று பின்னர் எழுதுவதேயில்லை. உண்மையை கூறுவதில்லை. பாபாவிற்கு கூறினால் யுக்தி சொல்வார். ஒரு சிலர் உண்மையை எழுதுகின்றார்கள். சிவபாபாவிற்கு எல்லாம் தெரியும். அம்மாதிரி ஏதாவது நடந்தால் தர்மராஜ் மூலமாக கடுமையான தண்டனை கிடைக்கும் என்று புரிய வைக்கப்படுகிறது. முழு நாளும் சிந்தனை செய்கின்றார்கள். சென்டருக்கு வருகின்றார்கள். இன்னார் நன்றாகப் புரிய வைக்கின்றார்கள். ஆனால் சைத்தான் போன்ற தடைகளும் அதிகமாக உள்ளது. இங்கு ஒருவரிடம் தான் யோகம் (நினைவு) இருக்க வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாருமில்லை, சிலர் மற்றவர்களின் பின்னாலேயே இருக்கின்றார்கள். தாரணை ஆவதில்லை என்றால் புத்தியானது வேறு பக்கம் அலை பாய்கின்றது. பின்னர் எவ்வழியில் செல்வது என்று கேட்பதில்லை. பயப்படுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: என்னையே சதா நினைவு செய்யுங்கள். இந்த நினைவின் மூலம் தான் உங்களுடைய பாவ கர்மங்கள் அழிந்து விடும். நீங்கள் துக்கத்திலிருந்து விடுதலை அடைவீர்கள். அனைவரும் முக்தியை வேண்டுகின்றார்கள். துக்கத்திலிருந்து முக்தியடைந்து பின்னர் சுகத்தில் வருவார்கள். அனைவருக்காகவும் ஜீவன் முக்தி. ஆனால் முதலில் முக்திக்குச் செல்ல வேண்டும் பின்னர் ஜீவன் முக்தியில் வரவேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகுகாலம் கழித்து காணாமல் கண்டு எடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள், காலை வணக்கங்கள் ஆன்மீகக் குழந்தைகளுக்கு. ஆன்மீக தந்தையின், நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1) பாபாவிற்குச் சமமாக சங்கு ஒலியை எழுப்ப வேண்டும். படித்து சொல்பவர்களாக மட்டும் இருக்காமல் தாரணை செய்து புரிய வைக்க வேண்டும்.



    2) உணவில் மிகவும் பத்தியமாக இருக்க வேண்டும். ஸ்ரீமத்தை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் இருந்து கொண்டே எவ்வாறு தூய்மையாக உள்ளோம் என்ற அனுபவத்தினை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.



    வரதானம்:

    சங்கமயுகத்தின் மகத்துவத்தை அறிந்து அன்பின் அனுபவங்களில் மூழ்கக்கூடிய சம்பூரண ஞானி, யோகி ஆகுக.



    சங்கமயுகம் பரமாத்ம அன்பிற்கான யுகம். இந்த யுகத்தின் மகத்துவத்தை அறிந்து அன்பின் அனுபவங்களில் மூழ்கிவிடுங்கள். அன்புக் கடல், அன்பு என்ற வைரங்கள், முத்துக்களின் தட்டுகளை நிறைத்து கொடுத்துக் கொண்டிருக்கின்றார், எனவே, தன்னை சதா நிறைத்துக்கொள்ளுங்கள். கொஞ்ச அனுபவத்திலேயே மகிழ்ச்சி அடைந்துவிடாதீர்கள், முழுமையாக நிறைவானவர் ஆகுங்கள். இந்த பரமாத்மா அன்பு என்ற வைரம், முத்து விலைமதிக்க முடியாதது ஆகும். இதனால் சதா அலங்கரிக்கப்பட்டு இருங்கள். ஏனெனில், இந்த அன்பு தான் நினைவு ஆகும் மற்றும் அன்பில் மூழ்குவது தான் முழுமையான ஞானம் ஆகும். அத்தகைய ஆன்மிக அன்பை எப்பொழுதும் அனுபவம் செய்யக்கூடியவர்கள் தான் சம்பூரண ஞானி, யோகி ஆவார்கள்.



    சுலோகன்:

    யார் வீணான உணர்விலிருந்து கடந்து இருக்கின்றார்களோ, அவர்களே மாயை வென்றவர்கள் ஆகின்றார்கள்.



    ***OM SHANTI***