BK Murli 25 February 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 February 2018 Tamil


    25.02.2018         காலை முரளி          ஓம் சாந்தி           ''அவ்யக்த பாப்தாதா''

    ரிவைஸ்       04.05.1983   மதுபன்



    '' எப்பொழுதும் ஒரு வழி, ஒரே பாதையில் செல்வதினால் ஒரே சீரான நிலை ''



    இன்று வதனத்தில் பாப்தாதா அனைத்து குழந்தைகளைப் பற்றி ஆன்மீக உரையாடல் செய்து கொண்டே புன்முறுவலித்துக் கொண்டிருந்தார்கள். எந்த விஷயத்தின் மேல் புன்முறுவலிட்டுக் கொண்டிருந்தார்கள்? அனைத்து குழந்தைகளும் முக்தி, ஜீவன்முக்தியின் ஆஸ்தியை ஒரு நொடியில் பிராப்தி செய்ய முடியும் என்று உலகில் சவால் விடுகிறார்கள். இந்த சவால் விடுகிறீர்கள் தான் இல்லையா? அதே போல் அனுபவத்தினால் பாருங்கள். தெய்வீக புத்தி ஒவ்வொரு பிராமணனுக்கும் பிறந்த நாளில் பரிசாக கிடைத்திருக்கிறது, பிராமணன் என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும் தெய்வீக புத்தியின் இறை பரிசு பாப்தாதா மூலமாகக் கிடைத்தது. அந்த தெய்வீக புத்தியின் ஆதாரத்தினால் யோசியுங்கள் - ஞானமும் ஒரு நொடிக்கானது. படைப்பவர் மற்றும் படைப்பு, தந்தை மற்றும் ஆஸ்தி இதைத் தெரிந்து கொள்வது. யோகாவும் ஒரு நொடிக்கானது - நான் தந்தையின் குழந்தை, தந்தை என்னுடையவர். தெய்வீக குணங்கள் நிறைந்தவராக ஆவதும் ஒரு நொடிக்கான விஷயம், ஏனென்றால் எப்படிப்பட்ட ஜென்மமோ, எப்படிப்பட்ட குலமோ அப்படியே தாரணையும் அதாவது, வாழ்க்கை வாழும் முறையும் இயல்பாக மற்றும் சுலபமாக ஆகிவிடுகிறது. ஈஸ்வரிய குலம் என்றால் குணம் அதாவது தாரணைகளும் ஈஸ்வரியமாக இருக்கும் இல்லையா! பிராமண ஜென்மம் உயர்ந்ததிலும் உயர்ந்த ஜென்மம் என்றால் தாரணையும் உயர்ந்ததாக இருக்கும் இல்லையா! அதனால் தாரணையும் ஒரு நொடிக்கான விஷயம் ஆகும். எப்படி தந்தையோ அப்படி குழந்தைகள். மேலும் சேவையும் ஒரு நொடிக்கான விஷயம். அனுபவி ஆகி பொக்கிஷங்களின் அதிகாரி ஆகி தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எது தன்னிடம் இருக்கிறதோ அதை மற்றவர்களுக்கு கொடுப்பது ஒரு நொடிக்கான மற்றும் சுலபமான விஷயம். எனவே ஒரு நொடிக்கான விஷயத்தில் இவ்வளவு காலம் இருந்து கொண்டே, இரண்டு மாதத்து பிராமணனாக இருந்தாலும் அல்லது நீண்ட காலத்து பிராமணனாக இருந்தாலும், பிராமணன் என்றால் ஒரு நொடியில் ஆஸ்தியின் அதிகாரி, ஒரு நொடியின் அதிகாரி பிறகு ஏன் அடிமை ஆகி விடுகிறார் என்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய அதிகார நிலை என்ற இருக்கையில் அமரத் தெரியாதா என்ன? சௌகரியமான இருக்கையை விட்டு விட்டு குழப்பத்தில் அசௌகரியத்தில் ஏன் வருகிறீர்கள்? இருக்கையை ஏன் விட்டு விடுகிறீர்கள்? பிறகு அதில் அமருவதற்காக அடிக்கடி கஷ்டப்படுகிறீர்கள். இருக்கையிலிருந்து இறங்கினீர்கள் மற்றும் அனைத்து சக்திகளின் பிராப்தி சென்று விட்டது. உயர்ந்த இருக்கை அதாவது நிலையில் (ஸ்திதி) நிலைத்திருப்பதினால் அதிகாரத்தன்மையின் அதிகாரம் இருக்கிறது. எப்பொழுது இருக்கையை விட்டு விடுகிறீர்கள் என்றால் அதிகாரம் எங்கிருந்து வரும்? இருக்கையிலிருந்து இறங்கி தன்னுடைய சக்திகளுக்கு கட்டளை இடுகிறீர்கள். எனவே அவை உங்களுடைய கட்டளையை ஏற்பதில்லை. பிறகு நானோ மாஸ்டர் சர்வ சக்திவான், ஆனால் சக்திகள் காரியம் செய்வதில்லை என்று யோசிக்கிறீர்கள். வேலைக்காரனின் கட்டளையை வேலைக்காரன் ஏற்றுக் கொள்வாரா அல்லது எஜமானனின் கட்டளையை வேலைக்காரன் ஏற்றுக் கொள்வாரா? மேலும் பின்பு முகம் என்னவாக ஆகிவிடுகிறது? எப்படி பலஹீனமான உடல் உள்ளவரின் முகம் வெளிறிப்போய் விடுகிறது. ஏனென்றால் இரத்தத்தின் சக்தி இல்லை, அதே போல் பலஹீனமான ஆத்மா சோர்வடைந்தவர் ஆகிவிடுகிறது. ஞானத்தையும் கேட்பார், சேவையும் செய்வார் ஆனால் சோர்வடைந்த ரூபத்தில் செய்வார். குஷியின் சக்தி, அனைத்து பிராப்திகளின் சக்தி முடிவடைந்து விடுகிறது. தாசன் (வேலைக்காரன்) எப்பொழுதும் உதாசாகத்தான் (சோர்வாகத்தான்) இருப்பார். தாச ஆத்மாவின் வேறு என்ன சிரிப்பூட்டும் விஷயம் இருக்கிறது? சின்னஞ்சிறு விஷயத்தில் குழப்பம் ஆகிவிட்டேன் என்று கூறுவர். எப்படி கண் பார்வை குறைந்து விடுகிறது இல்லையா! பிறகு ஒரு பொருளுக்கு பதிலாக இரண்டு இரண்டாக, மூன்று மூன்றாக பொருட்கள் தென்படும். பிறகு இது சரியா அல்லது அது சரியா என்று அதிலேயே குழப்பம் அடைந்து விடுவார்கள். அதே மாதிரி பலஹீனமான ஆத்மாக்கள் ஒரு பாதைக்குப் பதிலாக மற்ற பாதைகளையும் பார்க்கிறார்கள். ஒரு ஸ்ரீமத்தின் கூடவே மற்ற வழிகளும் அவருக்குத் தென்படும். பிறகு இதைச் செய்வதா அல்லது அதைச் செய்வதா, இது யதார்த்தமானதா அல்லது அது யதார்த்தமானதா என்று யோசிக்கிறார்கள்! எப்பொழுது இருப்பதே ஒரே பாதை, ஒரே சிரேஷ்ட வழி என்றால் இதைச் செய்வதா, என்ன செய்வது என்ற இந்த கேள்வியே இல்லை. ஏன் குழப்பத்தில் வர மாட்டார்கள். அவர்களே விஷயத்தை இரண்டாக்கி குழப்பத்தில் வந்து விடுகிறார்கள். இந்த விசித்திர நடத்தையைப் பார்த்து பாப்தாதா புன்முறுவலித்துக் கொண்டிருந்தார். இருக்கையில் அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஒரே சீராக இருப்பீர்கள் என்று பாப்தாதா கூறுகிறார். ஆனால் குறும்பு செய்யும் குழந்தைகளுக்குச் சமமாக அடிக்கடி சுற்றி வரும் பழக்கம் உள்ளவர்கள் மாயாவின் குழப்பம் வந்து விட்டது என்று கூறுகிறார்கள். குழப்பம் அடைவதற்கான எந்த ஆதாரமே இல்லை. ஆனால் வீணான பலஹீனமான எண்ணங்களை ஆதாரமாக எடுத்து விடுகிறார்கள். எப்பொழுது இருப்பதே வீணான மற்றம் பலஹீனமான ஆதாரம் என்றால் பிறகு முடிவு என்னவாக இருக்கும். மாட்டிக் கொள்வார் அல்லது சிக்கிக் கொண்டு கீழே விழுந்து விடுவார். பிறகு பாபா நான் உன்னுடையவன், நீங்கள் சக்தி கொடுங்கள் என்று கதறுவார்கள். இருக்கையில் அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஞான சூரியனின் சக்திகளின் கிரணங்கள் உங்களுடைய இருக்கையில் பாதுகாப்பு குடைநிழலாக இயல்பாகவும், நிரந்தரமாகவும் பிராப்தி ஆகும். இருக்கையிலிருந்து கீழே இறங்கி வீணான மற்றும் பலஹீனமான எண்ணங்களின் சுவரை எழுப்பி விடுகிறார்கள். வீணான எண்ணம் ஒன்று வருவதில்லை. ஒரு நொடியில் ஒன்றிலிருந்து அனேக எண்ணங்கள் உருவாகி விடுகின்றன. மேலும் அதன் மூலம் அனேக செங்கற்களின் சுவர் உருவாகிவிடுகிறது. எனவே ஞான சூரியனின் சக்திகளின் கிரணங்கள் சென்றடைய முடியவதில்லை. மேலும் பிறகு உதவி கிடைப்பதில்லை, சக்தி வருவதில்லை என்று கூறுகிறார்கள். குஷி வருவதில்லை அல்லது நினைவு நிலைத்திருப்பதில்லை என்று கூறுகிறார்கள். எப்படி வர முடியும்? இந்த மாதிரி பழையவர்கள் மற்றும் புதியவர்கள் இந்த மாதிரி விளையாடுவதை பார்த்தும் பாப்தாதாவும் புன்முறுவலித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு நொடிக்கான விஷயத்தை ஏன் இவ்வளவு கடினமானதாக ஆக்கினார்கள்? ஒரு பாதை, ஒரு வழியை விட்டு விட்டு மனம் சொல்லும் வழியையும், மற்றவர்கள் சொல்லும் வழியையும் ஏன் கலக்குகிறீர்கள்? தன்னுடைய பலஹீனத்தினால் உருவாக்கப்பட்ட பாதை, அதாவது இந்த மாதிரியோ இருக்கத் தான் செய்யும், இந்த மாதிரியோ நடக்கத் தான் செய்யும் போன்ற இந்த பாதைகளை தானே உருவாக்கி பிறகு, தானே உள்ளே நுழைந்து வெளியில் வரத் தெரியாத விளையாட்டில் வந்து விடுகிறார்கள். சென்றடைய வேண்டிய இலட்சியத்திலிருந்து தூரமாகி விடுகிறார்கள். அந்த மாதிரி ஏன் செய்கிறீர்கள்? அல்லது செய்வதில்லை ஆனால் அப்படி ஆகிவிடுகிறது என்று யோசிக்கிறீர்கள். அப்படி ஏன் ஆகவும் செய்கிறது? நோயும் ஏன் வருகிறது? பத்தியத்தை கடைபிடிக்காமல் மீறுவதினால் மற்றும் பலஹீனத்தினால் வருகிறது. அல்லது நோய் வந்து விடுகிறது என்று கூறுவீர்களா? பலஹீனமானவராக ஆகாதீர்கள், மரியாதைகளின் பத்தியத்திலிருந்து மற்றும் மரியாதைகளின் கோட்டிலிருந்து வெளியில் வராதீர்கள். இதுவரையிலும் இந்த விளையாட்டை விளையாட வேண்டுமா? உலக நன்மை செய்யும் காரியத்தின் பொறுப்பாளர்கள், இவ்வளவு பெரிய பதவி வகிப்பவர்கள் மேலும் இந்த குழந்தைகளின் விளையாட்டை விளையாடுகிறார்கள், இதுவும் எதுவரையில்? உலகத்தினர் அமைதித் தூதுவர்கள் இப்பொழுதே வந்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தேவன் என் மேல் அமைதியின் ஆசீர்வாதம் மற்றும் கிருபை செய்வதற்காக வந்து விட வேண்டும். மிக சப்தமாக கத்தி கத்தி மணிகள் அடிக்கிறார்கள். சில நேரம் மோர்சிங்கும் வாசிக்கிறார்கள், முரசும் அடிக்கிறார்கள். வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார்கள். அந்த மாதிரி தேவ ஆத்மாக்கள் ஒருவேளை தன்னுடைய குழந்தைப் பருவத்து விளையாட்டிலேயே இருந்தார்கள் என்றால் அவர்களுடைய கூக்கூரலை எப்படி கேட்பார்கள்? எனவே அவர்களுடைய கூக்குரலை கேளுங்கள். மேலும் உபகாரம் செய்யுங்கள். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று! நல்லது - தந்தையும் நேரத்தின் கவனம் வைக்கிறார். நீங்கள் வைப்பதில்லை.



    அந்த மாதிரி எப்பொழுதும் சிரேஷ்ட ஞானம் நிறைந்தவர்களுக்கு எப்பொழுதும் ஒரு வழி, ஒரு பாதையில் செல்லக்கூடியவர்களுக்கு, ஒரே சீரான நிலையில் நிலைத்திருப்பவர்களுக்கு, எப்பொழுதும் ஒரு நொடியின் அதிகாரத்தை நினைவில் வைத்து சக்திசாலியான ஆத்மாவாக இருக்கக்கூடிய, வீணான எண்ணங்களின் விளையாட்டுகளுக்கு முடிவுகட்டி உலக நன்மை காரியத்தின் சிரேஷ்ட சேவாதாரி, அந்த மாதிரி மகான் ஆத்மாக்களாக இருப்பவரிலிருந்து தேவ ஆத்மாக்களாக ஆகுபவர்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    குமாரிகளுடன் சந்திப்பு –

    அனைத்து குமாரிகளும் தன்னை சிவ சக்திகள் என்று நினைக்கிறீர்களா? சக்திகள் எப்பொழுதும் எங்கே இருப்பார்கள்? சிவனுடன் இருக்கிறீர்கள் இல்லையா? யார், யாருடன் இருக்கிறாரோ அவருடைய பாதிப்பு அவர் மேல் அவசியம் ஏற்படும் இல்லையா? எனவே எது தந்தையின் குணமோ, எது தந்தையின் கடமையோ அதுவே உங்களுடையதும் ஆனது இல்லையா! தந்தையின் கடமை, சேவை என்றால் நீங்கள் அனைவரும் சேவாதாரிகள் இல்லையா? சேவை செய்கிறீர்களா அல்லது செய்ய வேண்டுமா? தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும் என்ற இந்த லட்சியத்தை எப்பொழுதும் வையுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் இது தந்தை செய்யும் காரியமா மற்றும் தந்தையின் எண்ணமா, தந்தையின் வார்த்தைகளா என்று சோதனை செய்யுங்கள். ஒருவேளை அப்படி இருக்கிறது என்றால் செய்யுங்கள். இல்லை என்றால் பரிவர்த்தனை செய்து விடுங்கள். ஏனென்றால் சாதாரண காரியம் அரைக் கல்பம் செய்தீர்கள். இப்பொழுதோ தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். நீங்கள் அனைவரும் தந்தைக்குச் சமமான உலக சேவாதாரிகள் தான் இல்லையா! எல்லைக்குட்பட்ட சேவாதாரிகள் இல்லை. நல்ல தைரியம் வைத்திருக்கிறீர்கள். தைரியம் என்ற ஊக்கத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். ஊக்கம், உற்சாகம் தான் எப்பொழுதும் முன்னேற்றிக் கொண்டே இருக்கும்.



    எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். நினைவு செய்வதிலும் நம்பர் ஒன், ஞானம், தாரணை, சேவை அனைத்திலும் நம்பர் ஒன். அந்த மாதிரி நீங்கள் இருக்கிறீர்களா? நம்பர் ஒன் ஊக்கம், உற்சாகம் உள்ளவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்? பந்தனமற்றவர்களாக இருப்பார்கள் இல்லையா! நீங்கள் அனைவரும் யார்? கூண்டுப் பறவையா அல்லது சுதந்திரப் பறவையா? படிப்பின் கூண்டு இருக்கிறதா? தாய் தந்தையின் கூண்டு இருக்கிறதா? அந்த மாதிரி கூண்டுகளில் அடைபட்டு இருப்பவர்களை நம்பர் ஒன் என்று எப்படி கூறுவோம்? இப்பொழுது பந்தனமற்றவர்களாக ஆகிவிடுங்கள். யார் சக்திசாஆத்மாக்களாக இருப்பார்களோ அவர்கள் எதிரில் யாரும் எதையும் செய்ய முடியாது. எப்படி மிக வேகமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் எதிரில் யாரும் வர மாட்டார்கள். தூரமாக ஓடி விடுவார்கள். நீங்களும் எந்த பந்தனம் போடுபவர்களும் எதிரில் வரவே முடியாத அளவிற்கு யோக அக்னியை அந்த மாதிரி எரிய விடுங்கள். அந்த மாதிரி முழு ஈடுபாட்டின் அக்னியை வேகமாக கொளுந்து விட்டு எரிய விடுங்கள். ஒருவேளை இதுவரையிலும் பந்தனம் இருக்கிறது என்றால் ஈடுபாடு இருக்கிறது ஆனால் அக்னியாக ஆகவில்லை. ஈடுபாடு இருக்கிறது அதனால் இங்கு வரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் ஈடுபாடு அக்னி ஆகிவிட்டது என்றால் பந்தனமற்றவர் ஆகிவிடுவீர்கள். ஈடுபாடும் முழுமையாக சக்திசாலியாக இருக்கட்டும். சக்திகள் மைதானத்தில் வாருங்கள். வந்திருப்பது இவ்வளவு பெரிய குரூப் என்றால் அவசியம் அதிசயம் செய்வார்கள் இல்லையா! இத்தனை சேவைக் கரங்கள் உருவாகிவிட்டது என்றால் ஆஹா! ஆஹா! என்று ஆகிவிடும். நல்லது.



    அவ்யக்த மகாவாக்கியம் :மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள் –



    மனதின் ஒருமுகப்பட்ட நிலை தான் ஒரே சீரான மன நிலையின் அனுபவம் செய்விக்கும். ஒருமுகப்பட்ட சக்தி மூலமாக அவ்யக்த ஃபரிஷ்தா நிலையின் அனுபவத்தை சுலபமாக செய்ய முடியும். ஒருமுகப்படுத்தும் சக்தி, எஜமான நிலையின் சக்தி சுலபமாக தடையற்றவர் ஆக்கிவிடும். ஒருமித்த நிலை என்றால் மனதை எங்கே விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் ஒருமித்த நிலையில் வைத்து விடுங்கள். மனம் உங்களுடைய வசத்தில் இருக்க வேண்டும். உடல் ரூபத்தில் ஃபரிஷ்தா ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக மனதின் ஒருமித்த நிலை மேல் கவனம் கொடுங்கள். கட்டளைப்படி மனதை நடத்துங்கள். எஜமானன் என்ற நிலையின் இருக்கையில், விதவிதமான சிரேஷ்ட நிலைகளின் இருக்கையில் அமர்ந்திருங்கள். மனதில் எப்பொழுதாவது ஏதாவது பலஹீனமான எண்ணம் உருவாகிறது என்றால் அதை அங்கேயே அழித்து சக்திசாலி ஆகுங்கள். எண்ணம் என்ற அஸ்திவாரத்தை உறுதியாக்குங்கள் அப்பொழுது தான் அவ்யக்த (உடலுக்கு அப்பாற்பட்ட) ஈர்ப்பு வரும். மனதின் ஒருமித்த நிலைக்காக ஒவ்வொரு விநாடியும் நாடகம் என்ற தண்டவாளத்தில் சென்று கொண்டே இருங்கள். எந்த முறையில், எப்படி நாடகம் சென்று கொண்டிருக்கிறதோ அதன் கூடவே மனதின் நிலையும் சென்று கொண்டே இருக்கட்டும். கொஞ்சம் கூட ஆட வேண்டாம். மனம் அதாவது எண்ணத்தின் சக்தியை நிறுத்துவதற்கும் மேலும் வளைப்பதற்கும் பலம் இருக்க வேண்டும். இதன் காரணமாக புத்தியின் சக்தி வீணாகச் செல்லாது. சக்தி சேமிப்பாகிவிடும். எந்த அளவு மனம், புத்தியின் சக்தி சேமிப்பாகுமோ அந்த அளவு பகுத்தறியும் மற்றும் நிர்ணயம் செய்யும் சக்தி அதிகரிக்கும். மனதை கட்டுபட்டுவதற்காக மனதை அர்ப்பணம் செய்து முழுமையாக சமர்ப்பணம் ஆகிவிடுங்கள். பிறகு மனது தனது அனுசாரம் எண்ணத்தை எழுப்ப முடியாது. யார் மனதையும் தந்தைக்கு கொடுத்து விட்டார்களோ அவர்கள் சுலபமாகவே மன்மனாபவ ஆகிவிடுவார்கள். மன்மனாபவ ஆவதினால் சுலபமாகவே பற்றுதலை வென்றவர் ஆகிவிடுவார். மனதை சமர்ப்பணம் செய்வது என்றால் வீணான எண்ணங்கள், தீய எண்ணங்களை சமர்ப்பணம் செய்வது. எப்பொழுது மனதில் ஏதாவது எண்ணம் எழுகிறது என்றால் அதில் உண்மை மற்றும் தெளிவு இருக்கட்டும். மனதில் எந்தவொரு பாவத்தின், சுபாவத்தின், பழைய சம்ஸ்காரங்களின் குப்பை இருக்க வேண்டாம். யார் அந்த மாதிரி உண்மையாக இருப்பாரோ அவர் அனைவருக்கும் பிரியமானவராக இருப்பார். அந்த மாதிரி உண்மையானவர் மேல் தந்தையும் திருப்தியாக இருப்பார். எப்பொழுது எப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க மன பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு நொடியில் சப்தத்தில் வர வேண்டும், ஒரு நொடியில் சப்தத்திலிருந்து விலகிச் சென்று விட வேண்டும். ஒரு நொடியில் காரியம் செய்வதற்காக உடல் உணர்வில் வர வேண்டும். பிறகு ஒரு நொடியில் அசரீரி ஆகி விட வேண்டும். எப்பொழுது இந்தப் பயிற்சி உறுதியாகி விடுமோ அப்பொழுது ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும். நேரத்திற்கு தகுந்தாற்போல் எண்ணங்களை சாரத்தில் கொண்டு வரும் சக்தியை கடைபிடியுங்கள். எண்ணங்களின் விஸ்தாரம் என்ற படுக்கையை சுருட்டி கொண்டே செல்லுங்கள். அப்பொழுது மற்றவர்களின் எண்ணங்களையும் அறிந்துகொள்ள முடியும். கண்களின் சமிக்ஞை மூலமும் யாருடைய மனதின் உணர்வுகளையும் தெரிந்து கொள்வீர்கள். எப்படி பாப்தாதாவின் எதிரில் வருகிறீர்கள் என்றால் அவரிடம் எதையும் கூறாவிட்டாலும் கூட உங்களின் அனைவரின் மனதின் எண்ணம், மனதின் பாவனையை தெரிந்து கொள்கிறார். அதே போலவே குழந்தைகள் நீங்களும் இந்தக் கடைசி பாடத்தை படிக்க வேண்டும். மனதை எங்கு ஈடுபடுத்த விரும்புகிறீர்களோ, அது அங்கு ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் வேறு எங்கும் ஈடுபட வேண்டாம். மனதின் எண்ணத்திலும் கூட மாயாவிடம் தோல்வி இருக்க வேண்டாம், அந்த மாதிரி நிலையை உருவாக்குவதற்காக முன்பாகவே சுத்தமான எண்ணங்களில் மனதை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை மனம் சுத்த எண்ணங்களினால் நிரம்பி இருக்கிறது என்றால் வீணான எண்ணம் வர முடியாது. தோல்வி ஏற்பட முடியாது. சுத்தமான மற்றும் ஒருமுகப்பட்ட எண்ணங்களின் சக்தி மூலம் எப்படிப்பட்ட வாயுமண்டலத்தையும் மாற்ற முடியும். எப்படி சிலர் தன்னுடைய வீட்டை அலங்கரிப்பதற்காக தன்னடைய குழந்தை பருவத்திலிருந்து தன்னுடைய விதவிதமான ரூபங்களின் நினைவு சின்னங்களை வைப்பார்கள். அதே போல் நீங்கள் உங்களுடைய மனம் என்ற கோயிலில் தன்னுடைய சம்பூர்ண சொரூபத்தின் மூர்த்தியை, எதிர்காலத்தின் அனேக ஜென்மங்களின் மூர்த்தியை தெளிவான ரூபத்தில் எதிரில் வையுங்கள். பிறகு வேறு எந்தப் பக்கமும் எண்ணம் செல்லாது. இயல்பாகவே ஒருமுகப்பட்ட நிலை ஆகிவிடும். எப்படி எப்பொழுது ஏதாவது அந்த மாதிரியான நாளாக இருக்கிறது என்றால் நடைமுறையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் ஓட்டத்தையும் நிறுத்தி மூன்று நிமிடங்கள் அமைதியின் பயிற்சி செய்விக்கிறார்கள். அனைத்து நடந்து கொண்டிருக்கும் காரியத்தையும் நிறுத்தி விடுவார்கள். அதே போல் நீங்களும் ஏதாவது காரியம் செய்கிறீர்கள் அல்லது பேசுகிறீர்கள் என்றால் இடையிடையே இந்த எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவதற்காகப் பயிற்சி செய்யுங்கள். ஒரு நிமிடத்திற்காகக் கூட மனதின் எண்ணங்களை, உடல் மூலமாக நடந்து கொண்டிருக்கும் காரியத்தின் இடையே நிறுத்தியும் இந்தப் பயிற்சி செய்தீர்கள் என்றால் எண்ணம் சக்திசாலி ஆகி விடும்.



    யார் தன்னுடைய எண்ணங்களின் குழப்பம் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபட்டு இருக்கிறாரோ அவர் தான் மதிப்புடன் தேர்ச்சி அடைகிறார். தர்மராஜின் தண்டனைகளின் விஷயமோ பின்னால் வருவது. சில குழந்தைகள் தன்னுடைய தவறினால் தனக்குத் தானே தண்டனை கொடுக்கிறார்கள், வீணான எண்ணங்களை உருவாக்கி அதில் குழப்பம் அடைந்து விடுகிறார்கள், பிறகு அழைக்கிறார்கள், குழப்பம் அடைகிறார்கள். இப்பொழுது இதிருந்தும் விலகியிருப்பதற்கான உறுதிமொழி செய்யுங்கள். முழுமையானவர் ஆவதில் வீணான எண்ணங்களின் புயல் தடை போடுகிறது என்பது பெரும்பான்மையோரின் புகார் ஆகும். இந்தப் புகார் எப்பொழுது நீங்கள் தினசரி அமிர்தவேளையில் முழு நாள் நடவடிக்கைகளுக்காக நேரம் ஒதுக்கி டைரியை எழுதுவீர்களோ அப்பொழுது தான் முடிவடையும். எப்பொழுது தனது மனதை ஒவ்வொரு நேரமும் முன்பாக ஒதுக்கப்பட்ட காரியத்தில் பிஸியாக வைத்துக் கொள்வீர்களோ அப்பொழுது இடையில் வீணான எண்ணத்திற்கான நேரமே இருக்காது. எனவே நேரத்தை முன்பதிவு செய்வதற்கான முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த அளவு தந்தையின் சமநிலையின் அருகில் வந்து கொண்டே இருப்பீர்களோ அந்த அளவு அனைத்து ஆத்மாக்களின் மனதின் எண்ணங்களை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இதில் தன்னுடைய எண்ணங்களில் கலப்படம் மட்டும் இருக்கக் கூடாது. எண்ணங்களின் மேல் கட்டுப்படுத்தும் சக்தி வேண்டும். எப்படி வெளிமுகமாக நடக்கும் காரிய விவகாரங்களைக் கட்டுப்படுத்துகிறீர்கள். அதே-போல் மனதின் எண்ணங்களின் காரிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துங்கள். இதற்காக 1) நான் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு காரியம் செய்து கொண்டே மேடையில் இருக்கிறேன், 2) என்னுடைய

    தற்சமயம் மற்றும் எதிர்காலத்தின் பதவி என்ன? என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள்.



    தற்சமயம் நேரத்திற்கு ஏற்றாற்போல் இப்பொழுது மனதின் எண்ணங்களில் பெரிய வள்ளல் ஆகுங்கள். அப்பொழுது தான் மனதின் எண்ணங்களின் மேல் ஒரு நொடியில் வெற்றி அடைபவராக ஆக முடியும். யார் எவ்வளவு தான் குழப்பமான எண்ணம் உள்ளவராக இருந்தாலும் அதாவது ஒரு நொடிக்காகக் கூட அவருடைய மனம் ஒரு எண்ணத்தில் நிலைத்திருக்க முடியவில்லை, அந்த மாதிரி குழப்பமான எண்ணம் உள்ளவரையும் தன்னுடைய வெற்றியின் சக்தி மூலம் தற்காலிகமாகக் கூட அவரை அமைதியானவராக மற்றும் குழப்பமானவரை குழப்பம் அற்றவராக ஆக்கிவிடுங்கள். எப்பொழுது உங்களுடைய எண்ணங்களில் ஒருமித்த நிலை வருமோ அப்பொழுது எண்ணத்தின் மூலம் யாரையும் அழைக்க முடியும். யாருக்கும் எண்ணத்தின் மூலம் காரியம் செய்வதற்கான தூண்டுதல் கொடுக்க முடியும். எப்படி பொத்தானை அழுத்துவதினால் தொலைக்காட்சியில் அனைத்து காட்சிகளும் எதிரில் வந்து விடுகிறது. அதே போலவே நீங்கள் யாருக்காக என்ன எண்ணம் வைப்பீர்களோ அதுவே அவருடைய புத்தியில் தெளிவான சித்திரமாக வரையப்பட்டு விடும். இதற்காக ஸ்ரீமத்தின் என்னென்ன கட்டளை கிடைத்திருக்கின்றனவோ அதுவே எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மேலும் வேறு எந்தக் கலப்படமும் இருக்கக் கூடாது. நீங்கள் சர்வ சக்திவானின் அரசாங்கத்தின் தூதுவர்கள், யாருடனாவது விவாதம் செய்து தன்னுடைய மனதை நிலைகுலைய வைக்காதீர்கள். எந்தவொரு விஷயத்திற்காக கூட தன்னுடைய முகத்தில் அல்லது மனதின் நிலையில் வித்தியாசத்தை கொண்டு வராதீர்கள். எப்பொழுதும் மந்திரத்தை நினைவில் வையுங்கள். எப்பொழுது ஏதாவது அந்த மாதிரி விஷயம் எதிரில் வருகிறது என்றால் தன்னுடைய ஆத்மீக பார்வையின் கண் மற்றும் மன்மனாபவ என்ற மந்திரத்தை காரியத்தில் உபயோகத்தில் கொண்டு வந்தீர்கள் என்றால் அந்த விஷயம் முடிவடைந்து விடும்.



    வரதானம் :

    பாபா என்ற வார்த்தையின் வைர சாவி மூலமாக அனைத்து பொக்கிஷங்களை பிராப்தி செய்யக்கூடிய பரமாத்மாவின் அன்பிற்குரியவர் ஆகுக.



    யார் பரமாத்மா அன்பிற்குரிய குழந்தைகளோ அவர்களுக்கு பாப்தாதா ஒரு வைரத்திற்கு சமமான வார்த்தையின் மிக நல்ல பரிசு கொடுக்கிறார் - அந்த வார்த்தை ''பாபா''. இந்தச் சாவியை எப்பொழுதும் உங்கள் உடன் வைத்துக் கொண்டீர்கள் என்றால் அனைத்து பொக்கிஷங்களின் பிராப்தி ஆகிவிடும். இந்தச் சாவியின், சாவி கோர்ப்பு வளையம் - எப்பொழுதும் அனைத்து சம்மந்தங்களினால் நினைவு சொரூபமாக இருப்பது. கூடவே உறுதிமொழி என்ற வளையல் மற்றும் அனைத்து குணங்களின் அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு இருங்கள் அப்பொழுது தான் உலகின் எதிரில் ஃபரிஷ்தா ரூபம் மற்றும் தேவ ரூபம் வெளிப்படும்.



    சுலோகன்:

    கடந்ததை கடந்ததாக்கி பாப்தாதாவின் அருகில் இருந்தீர்கள் என்றால் மதிப்புடன் தேர்ச்சி அடைபவர் ஆகிவிடுவீர்கள்.



    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs