BK Murli 17 March 2018
Tamil
17.03.2018 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது இந்த பழைய உலகம் மாறிக்கொண்டு இருக்கின்றது, ஆகையினால், இதன் மீது அன்பு வைக்க வேண்டாம். புது வீடான சொர்க்கத்தை நினைவு செய்ய வேண்டும்.
கேள்வி:
சதா சுகம் நிறைந்தவர் ஆகுவதற்கான எந்த ஒரு விதியை தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் கூறுகின்றார்?
பதில்:
சதா சுகம் நிறைந்தவர் ஆகவேண்டும் என்றால் உள்ளத்தால் ஒரு தந்தையினுடையவர் ஆகிவிடுங்கள். தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள். தந்தை ஒருபொழுதும் எந்தக் குழந்தைக்கும் துக்கம் கொடுக்க முடியாது. சொர்க்கத்தில் ஒருபொழுதும் ஒருவருடைய பதி, ஒருவருடைய குழந்தை இறப்பதில்லை. அங்கே இந்த அகால மரணத்தின் வேலையே கிடையாது. இங்கேயோ மாயை இராவணன் துக்கம் நிறைந்தவர் ஆக்கிக் கொண்டே இருக்கிறது. பாபா துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆவார்.
பாடல்:
துக்கமானவர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் எங்களுடைய தாய் தந்தையே....
ஓம் சாந்தி.
இவர்கள் அதே தாய் தந்தை, மீண்டும் சதா சுகமானவர்கள் ஆக்குவதற்காக இராஜயோகத்தைக் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எவ்வாறு ஒரு வக்கீல் அமர்ந்து வக்கீல் ஆகுவதற்கான ஞானம் கொடுக்கின்றார். இப்பொழுதோ இவர்கள் எல்லையற்ற தாய் தந்தை, சொர்க்கத்தின் படைப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள் அமர்ந்து குழந்தைகளை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குவதற்காக படிப்பினை கொடுக்கின்றார்கள். சுயம் பகவான் அமர்ந்து கற்பிக்கும்படியான வேறு எந்த ஒரு கல்லூரியும் கிடையாது. இங்கே பகவான் பகவதி ஆக்குவதற்காக சுயம் பகவான் அமர்ந்து கற்பிக்கின்றார். சத்யுகத்தில் ஸ்ரீ இலட்சுமி, நாராயணருக்கு பகவான் பகவதி என்று கூறப்படுகிறது. புது உலகத்தின் எஜமானராக யார் ஆக்கியது? அவர்கள் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தனர். பாரதத்தில் சத்யுகத்தின் ஆதியில் தேவி, தேவதைகளின் இராஜ்யம் நடந்தது. இப்பொழுது கலியுகம் ஆகும், தேவதைகளின் இராஜ்யமே இல்லை. தேவதைகளில் இருந்து அனைவரும் மாறி ஏழ்மையான மனிதர்கள் ஆகிவிட்டனர். தேவதைகளோ மிகுந்த செல்வந்தர்களாக, சுகம் நிறைந்தவர்களாக இருந்தனர். இப்பொழுது கலியுகத்தின் இறுதியாக இருக்கும் காரணத்தினால் அனைத்து மனிதர்களும் மிகவும் துக்கமானவர்களாக உள்ளனர். சண்டை ஏற்படும், மனிதர்கள் ஐயோ, ஐயோ என்று கதறுவார்கள். மிகுந்த பயம் இருக்கும். மனிதர்கள் முற்றிலும் அனாதைகளாக உள்ளனர். ஏனெனில், சொர்க்கத்தின் சுகம் கொடுக்கக்கூடிய தாய் தந்தையை அறியவே இல்லை. நீங்கள் அந்த தாய் தந்தையினுடையவர் ஆகியிருக்கிறீர்கள். உங்களுக்கு தாய் தந்தையிடமிருந்து அளவிட முடியாத சுகம் கிடைக்கிறது. மனிதர்கள் யார் பக்தி செய்கிறார்களோ, அவர்கள் ஒன்றும் பகவானை நினைவு செய்யவில்லை, பகவானை கல், முள், நாய், பூனையில் இருப்பதாகவும், பிறகு, தன்னை பகவான் என்றும் புரிந்துகொண்டு அமர்ந்திருக்கின்றனர். அனைவருக்குள்ளும் பகவான் இருக்கின்றார் என்று கூறிவிடுகின்றனர். பதீதமானவர்களுக்குள் பகவான் இருப்பதாக புரிந்திருப்பது என்பது நிந்தனை ஆகிவிட்டது அல்லவா! ஆனால், நாடகத்தில் மனிதர்கள் இந்தத் தவறையும் கூட செய்து தான் ஆக வேண்டும் மற்றும் தந்தை வந்து தவறற்றவர் ஆக்கவேண்டும். மனிதர்களுக்குத் தெரியவே இல்லை. பகவானோ ஒருவர் ஆவார், ஆயிரக்கணக்கானோர் இருக்கமாட்டார்கள். லௌகீக தந்தையோ அனேகர் உள்ளனர். மிருகங்களுக்கும் தந்தை இருக்கும். ஆனால், அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கும் வள்ளல், பதீதபாவனர் ஒருவர் ஆவார். எனவே, அந்தத் தந்தை வந்து குழந்தைகளுக்கு எதிர்காலத்திற்காகக் கற்பிக்கின்றார். பகவான் பகவதி ஆக்குகின்றார். இப்பொழுது பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யார் பகவான் பகவதி ஆக்கமுடியும்! அவர் தந்தை என்றால் தாய் இல்லாமல் சிருஷ்டியை எவ்வாறு படைப்பார்? நீங்கள் தாய், தந்தை உங்களுடைய கிருபையினால் அளவிடமுடியாத சுகம் கிடைக்கிறது, ஆகையினால், நாங்கள் பக்தி செய்கின்றோம் என்று பாரதவாசிகள் பாடுகின்றனர், நீங்களும் கூட பக்தி மார்க்கத்தில் கூச்சலிட்டீர்கள். யாருடைய பக்தி செய்தாலும் நாங்கள் பகவானை நினைவு செய்கின்றோம் என்று நினைக்கின்றனர். சந்நியாசிகள் கூட தவம் செய்கின்றனர், ஆனால், யாரை நினைத்து தவம் செய்கின்றோம் என்பதை அவர்கள் அறியவில்லை. இராவணனுடைய வழிப்படி அனைத்தையும் மறந்துவிட்டனர். எனில், பிறகு தந்தை என்ன செய்வார்? இவ்வளவு துக்கமானவர்களாக, ஏழ்மையானவர்களாக ஆகுவது கூட நாடகத்தில் உள்ளது.
தந்தை வந்து குழந்தைகளை மீண்டும் சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகின்றார். சொர்க்கத்தின் எஜமானர் ஆக்கக்கூடியவர்கள் பரலௌகீக தாய் தந்தை ஆவார்கள், நரகத்தின் எஜமானர் ஆக்கக்கூடியவர் இராவணன் ஆவார். எனவே, அந்த இராவணன் மீது இப்பொழுது வெற்றி அடையவேண்டும். இப்பொழுது நீங்கள் மாயையை வென்றவர்களாக உலகை வென்றவர்களாக ஆகின்றீர்கள். நீங்கள் இந்தப் பழைய உலகத்தில் ஒன்றும் இராஜ்யம் செய்யக்கூடாது. மாயை மீது வெற்றி அடைந்து பிறகு சொர்க்கத்தில் இராஜ்யம் செய்ய வேண்டும். மாயையிடம் தோல்வி அடைவதால் நரகத்திற்கு வந்துவிடுகிறீர்கள். இந்த விசயங்களை வேறு எந்த பதீத மனிதரும் புரியவைக்க முடியாது. அவர்கள் பிறரைப் பாவனமாக்கவும் முடியாது. முழு உலகமும் பதீதமாக உள்ளது. விஷத்தின் மூலம் பிறக்கின்றனர். தேவி, தேவதைகளோ அனைத்து குணங்களிலும் நிறைந்தவர் களாக, 16 கலைகளிலும் சம்பூரணமானவர்களாக இருக்கின்றனர். அங்கே விஷத்தின் பெயரே கிடையாது. பகவானை எவருமே அறியவில்லை. எனில், அவர்கள் குரு வைத்துக்கொள்வதில் என்ன இலாபம் உள்ளது? சுயம் அவர்களே பகவானை சந்திக்கவும் முடியாது, பிறரையும் சந்திக்க வைக்கவும் முடியாது. ஆத்மா, பரமாத்மா நீண்டகாலமாக பிரிந்து இருந்தனர் பிறகு, சந்திக்க வைப்பதற்கும் அந்த பரமபிதா பரமாத்மாவே வேண்டும். நாடகம் இப்பொழுது முடிவடைகிறது என்பதையும் அவர்கள் புரிந்திருக்கவில்லை. சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை நடைபெறும் இந்த நாடகமானது மீண்டும் நடைபெற வேண்டும். இந்த நாடகத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்வதனால் நீங்கள் சக்கரவர்த்தி ஆகின்றீர்கள். 84 பிறவிகள் நாம் எவ்வாறு எடுக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது லீப் யுகம், புருஷோத்தம யுகம் ஆகும். இதில், இது கடைசிப் பிறவியாகும். இப்பொழுது தந்தையினுடையவர் ஆகவேண்டும். ஹே, குழந்தைகளே! நீங்கள் என்னுடையவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஹே, பரமபிதா பரமாத்மா! என்று சொல்லவும் செய்கிறீர்கள். லௌகீக தந்தையை அவ்வாறு சொல்ல முடியாது. எனவே, இப்பொழுது பரலௌகீக தந்தை, நான் வந்திருக்கின்றேன் என்று கூறுகின்றார். மற்றபடி, உங்களுடைய பெரியப்பா, சித்தப்பா போன்ற அனைவரும் அழிந்துவிடுவார்கள். இந்த பழைய உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது. எதிரில் மிகப் பெரிய மகாபாரத யுத்தமும் நிற்கின்றது. இந்த அனேக தர்மங்கள் விநாசம் ஆகப்போகின்றன. இது பழைய உலகம் ஆகும். இதில் அனேக, அனேக தர்மங்கள் உள்ளன. சத்யுகத்தில் ஒரு தர்மம் உள்ளது. எனவே, இப்பொழுது இந்த உலகம் மாறப்போகிறது. ஆகையினால், இதன் மீது அன்பு வைக்க வேண்டாம். லௌகீக தந்தை புதிய வீடு கட்டுகின்றார் என்றால் வீடு தயாராகிவிடும், பிறகு நாம் புது வீட்டில் சென்று வாழ்வோம் என்று குழந்தைகளுக்கு உள்ளத்தில் புதிய வீடு தான் நினைவுக்கு வரும் அல்லவா! பழைய வீட்டை இடித்து அழித்துவிடுவார்கள். இப்பொழுது இந்த முழு உலகத்தின் விநாசம் ஆக வேண்டும். குழந்தைகள் காட்சியும் பார்த்திருக்கிறீர்கள் - எவ்வாறு நெருப்பு பிடிக்கும், அடை மழை பொழியும், கடல் எவ்வாறு பொங்கும், இவை அனைத்தையும் காட்சியாகப் பார்த்திருக்கிறீர்கள்.
பாபா மும்பை செல்கின்றார் என்றால் இந்த மும்பை முதலில் கிடையாது, ஒரு சிறிய கிராமமாக இருந்தது, இப்பொழுது கடலை காய வைத்துவிட்டார்கள், வரலாறு மீண்டும் நடைபெறும். பிறகு, இந்த இவ்வளவு பெரிய மும்பை இருக்காது. சத்யுகத்தில் மும்பை கிராமமே இருக்காது என்று புரியவைக்கின்றார். இந்த அமெரிக்கா போன்றவை எல்லாம் என்ன! ஒரே ஒரு அணுகுண்டின் மூலம் அனைத்தும் அழிந்து போய்விடும். ஹிரோஷிமாவில் எப்பொழுது அணுகுண்டு போடப்பட்டதோ, அப்பொழுது என்ன ஆனது? நகரத்திற்கு நகரம் அனைத்தும் அழிந்துவிட்டது. அதுவோ ஒரு அணுகுண்டு. இப்பொழுதோ அனேக அணுகுண்டுகளை உருவாக்கி விட்டனர். புது உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இந்த பழைய நரகத்தை இராவணன் உருவாக்குகின்றார் என்று கூறவும் செய்கின்றார். இதை பாரதவாசிகள் அறியவில்லை. மாயை அனைவருக்கும் கோத்ரெஜ் பூட்டு அவ்வாறு போட்டுவிட்டது, அதைத் திறக்கவே முடியவில்லை. மனிதர்கள் எவ்வளவு துக்கமானவர்களாக உள்ளனர்! செல்வந்தர்கள் சுகமானவர்களாக உள்ளனர், ஆனால், வியாதியஸ்தர்களாக, நோயாளிகளாக ஆகின்றனர் அல்லவா! இன்று குழந்தை பிறந்தது, குஷி ஏற்பட்டது, பிறகு, குழந்தை இறந்துவிட்டது என்றால் துக்கம் ஏற்படுகிறது. விதவையாகி அழுதுகொண்டே இருக்கின்றனர். இதற்கு துக்கதாமம் என்று கூறப்படுகிறது. பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது பழைய உலகம் துக்கதாமமாக உள்ளது. பிறகு, தந்தை சுகதாமமாக ஆக்குகின்றார். இப்பொழுது ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகின்றார், எனில், அவசியம் நினைவும் அவரைத் தான் செய்யவேண்டும். மற்ற அனைத்து தேகத்தின் சம்பந்தங்கள் துக்கம் கொடுக்கக்கூடியவை ஆகும். ஒரு தந்தையைத் தவிர சுகம் கொடுக்கக்கூடியவர் வேறு எவரும் கிடையாது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். பாபா, யாரை நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்கள் ஆக்கியிருந்தீர்களோ, உங்களுடைய அதே குழந்தைகள் தான் நாங்கள். இப்பொழுது நாங்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றோம். நீங்களோ கருணை உள்ளம் உடையவர்கள் ஆவீர்கள் என்று கூறுகின்றனர். துக்கமானவர்களாக இருப்பதனாலேயே அழைக்கின்றனர். சத்யுகத்தில் சுகம் நிறைந்தவர்கள் ஆகிவிடுவதனால் அங்கே எவரும் அழைக்கமாட்டார்கள். துக்கத்தில் அனைவரும் நினைவு செய்கின்றனர், ஆனால், பகவான் எவருக்கும் கிடைப்பதில்லை. பக்தன் ஹனுமாரை நினைவு செய்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நல்லது ஹனுமான் எங்கிருக்கின்றார்? ஹனுமாரிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும்? மனிதர்கள் முக்தி மற்றும் ஜீவன் முக்திதாமத்திற்குச் செல்வதற்காக பக்தி செய்கின்றனர். ஹனுமான் மற்றும் கணேசர் போன்றோரை நினைவு செய்வதனால் நீங்கள் எங்கே செல்வீர்கள்? அவர்களுடைய இருப்பிடம் எங்கே உள்ளது? அவர்களிடமிருந்து உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும்? எதுவுமே தெரியாது. சிருஷ்டியில் சுகம் கொடுக்கக்கூடிய ஒருவர் நான் தான் என்று தந்தை புரியவைக்கின்றார். பகவான் தான் சுகம் கொடுக்கின்றார், பகவான் தான் துக்கம் கொடுக்கின்றார் என்பது கிடையாது. அவரே குழந்தைகளைக் கொடுக்கின்றார் என்றால் சுகம் ஏற்படுகிறது, குழந்தைகளைப் பறித்துக்கொள்கின்றார் என்றால் துக்கம் ஏற்படுகிறது. நானோ எப்பொழுதும் சுகம் கொடுக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். மாயை உங்களிடமிருந்து சுகத்தைப் பறிக்கின்றது. சத்யுகத்தில் ஒருவருடைய குழந்தை இறந்துபோகிறது அல்லது ஒருவருடைய கணவன் இறந்துபோகின்றார் என்பது கிடையாது. இங்கே இந்த மாயாவி உலகத்தில் திடீரென ஒருவருடைய குழந்தை, திடீரென ஒருவருடைய கணவன் இறந்துபோவது என்பது நடந்துகொண்டே இருக்கின்றது. இந்த தொழில் சொர்க்கத்தில் இருக்காது. இதுவோ நரகம் ஆகும். ஒருவேளை, எப்பொழுதும் சுகமானவர் ஆக விரும்புகிறீர்கள் என்றால் தந்தையினுடையவர் ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். இப்பொழுது உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டுமே தமோபிரதானமாக உள்ளது. ஆத்மா நிர்லேப் (எதுவும் ஒட்டாத நிலை) என்பது கிடையாது. ஆத்மாவில் தான் அழுக்கு படிகிறது. இதன் காரணத்தினால் இப்பொழுது ஆபரணம் கூட இரும்பு போன்றதாகிவிட்டது. இப்பொழுது நீங்கள் தங்கம் போன்றவர் ஆகுவதற்காக ஞானத்தைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். தந்தை வந்து அமரர் ஆக்கி, அமரபுரிக்கு அழைத்துச் செல்கின்றார். இதுவோ மரணலோகம் ஆகும். கீதையில் கூட இந்த வார்த்தைகள் உள்ளன. அமரபுரியில் ஆதி, மத்திமம், இறுதியில் துக்கம் இருக்காது. மரணலோகத்தில் ஆதி, மத்திமம், இறுதியில் துக்கம் இருக்கிறது. இத்தகைய துக்கதாமத்தை மறந்துவிட வேண்டும். சுகதாமம் மற்றும் சாந்திதாமத்தை நினைவு செய்ய வேண்டும். நாம் சாந்திதாமம் வழியாக சுகதாமம் சென்றுகொண்டு இருக்கின்றோம். நாம் அந்த சாந்திதாமத்தில் நிவாசம் செய்யக்கூடியவர்கள் ஆவோம். இது கூட சுயதரிசன சக்கரம் ஆகிவிட்டது அல்லவா! தன்னுடைய தந்தை மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்ய வேண்டும். கன்னிகை தந்தையின் வீட்டை விட்டுவிட்டு மாமனார் வீட்டிற்குச் செல்லும்பொழுது தந்தை வீட்டிலிருந்து மாமனார் வீட்டிற்கு செல் என்று பாடுகின்றனர் அல்லவா! இது உங்களுடைய பிரம்மா தந்தையின் வீடு ஆகும். இப்பொழுது நாம் மாமனார் வீடான சொர்க்கத்திற்குச் செல்லப்போகிறோம். அங்கே சுகமே சுகம் இருக்கும். இங்கே துக்கம் உள்ளது. கன்னிகை கூட சுகத்திற்காக வீட்டை விடுகின்றார். ஆனால், அங்கே அவரை பதீதமாக்கி துக்கமானவராக ஆக்கப்படுகிறது. நான் உங்களை கண்களில் அமர வைத்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், அங்கே உங்களுக்கு எந்த துக்கமும் இருக்காது என்று இப்பொழுது தந்தை புரியவைக்கின்றார். கிருஷ்ணருடைய பிறவி எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை குழந்தைகள் பார்த்திருக்கிறீர்கள். முதலிலேயே காட்சி கிடைத்துவிடுகிறது. எப்பொழுது சரீரத்தை விடும் நேரம் வருமோ, அந்த சமயமும் காட்சி கிடைக்கிறது. நான் இந்த சரீரத்தை விட்டுச் சென்று இளவரசன் ஆகப்போகின்றேன். அவ்வளவுதான், ஆத்மா சரீரத்திலிருந்து விடுபட்டுச் சென்று கர்ப்ப மாளிகையில் அமர்ந்துவிடுகிறது. குழந்தை பிறக்கும் சமயத்தில் எந்தக் கஷ்டமும் இருக்காது. அங்கே கர்ப்ப மாளிகையில் உங்களுக்கு சுகமே சுகம் இருக்கும். இங்கேயோ கர்ப்பச் சிறையும் உள்ளது மற்றும் யார் திருட்டு, பாவம் செய்கிறார்களோ அவர்களும் கூட அரசாங்கத்தின் சிறைக்குச் செல்கின்றனர். அங்கேயோ இந்த இரண்டு சிறைகளும் இருக்காது. யாரும் அங்கே பாவம் போன்றவற்றை செய்யமாட்டார்கள். அதை புண்ணிய ஆத்மாக்களின் உலகம் என்று கூறப்படுகின்றது. எனவே, தந்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இவர்கள் அனைவரும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் எனில், ஏன் நானும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்று சதா சுகமானவராக ஆகக்கூடாது? என்று பார்க்கின்றனர். இந்த கர்மபந்தனம் எவ்வாறு விலகும்? என்று சிலர் பிராயசித்தம் தேடுகின்றனர். குழந்தைகள் இல்லையெனில் நன்றாக இருந்திருக்கும். யாராவது திருமணம் செய்தபின் ஞானத்திற்கு வந்தால், முன்பே தெரிந்திருந்தால திருமணம் செய்திருக்கமாட்டேன் என்று கூறுவார்கள். இவ்வாறு அனேகர் எழுதுகின்றனர். ஒருவருடைய அதிர்ஷ்டம் எப்பொழுது திறக்க வேண்டுமோ, அப்பொழுதே வருகின்றனர். அதுவும் விருப்பத்தின் ஆதாரத்திலேயே உள்ளது. ஒரு வாரம் தந்தையின் குழந்தை ஆகிப் பாருங்கள். விருப்பம் இருந்தால் குழந்தை ஆகுங்கள், இல்லையெனில், சென்று லௌகீக தாய் தந்தையினுடையவர் ஆகுங்கள். கட்டணம் எதுவும் இல்லை. சிவபாபாவின் பொக்கிஷம் ஆகும். எந்தப் புத்தகத்தையும் வாங்க வைப்பதில்லை. முரளி மட்டும் அனுப்பப்படுகிறது. தந்தையின் பொக்கிஷம் ஆகும், அவர் கட்டணம் என்ன வாங்குவார்! ஆம், நன்றாகத் தோன்றினால் ஏழைகளுக்காக புத்தகம் அச்சடியுங்கள்.
பாரதத்தைப் போன்று தானம் செய்யக்கூடிய தேசம் வேறு எதுவும் கிடையாது. தந்தை கூட பாரதத்தில் வந்து தானம் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் கூட உடல், மனம், பொருளை தந்தையிடம் அர்ப்பணம் செய்கிறீர்கள். மகாதானி ஆகிறீர்கள். இந்த பாபா மகாதானி ஆனார் அல்லவா! இதற்கு முன்னர் இன்டைரக்ட் (மறைமுகமாக) தானம் செய்தீர்கள். இப்பொழுது சுயம் நேரடியாக வந்திருக்கின்றார். சொர்க்க இராஜ்யத்தைக் கைமாறாகக் கொடுக்கின்றார். இது எளிய வியாபாரம் அல்லவா! இப்பொழுது தனக்கு சமமாக ஆக்குங்கள். விகாரங்களை வெல்லுங்கள். ஆத்ம அபிமானி ஆகுங்கள். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். தேகமற்று வந்தோம், தேகமற்று செல்ல வேண்டும் என்று பாடவும் செய்கின்றனர். முதல் எண்ணில் தேவி, தேவதைகளின் ஆத்மாக்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் இரண்டாமவர்கள் வந்தனர். தேவி, தேவதை தர்மத்தின் ஆத்மாக்களே தலைவர்கள் ஆவர். யார் முதலில் வருகின்றார்களோ, அவர்களே முதலில் செல்லவும் வேண்டும். அவர்களுடைய நடிப்பே ஆல்ரவுண்ட் நடிப்பாகும். இந்த அனைத்து விசயங்களும் புரிந்து கொள்வதற்கானவை ஆகும். யாருக்கு பாக்கியத்தில் உள்ளதோ, அவர்கள் உடனே புரிந்து கொள்கிறார்கள் அல்லவா! பாக்கியத்தில் இல்லையெனில் உள்ளம் ஈடுபடாது. இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், நானே உங்களுடைய தந்தை, இறை தந்தை ஆவேன் என்று தந்தை கூறுகின்றார். ஆமை, மீன் ஒன்றும் கடவுள் கிடையாது. இந்த விசயங்களை தந்தையைத் தவிர வேறு எவரும் புரிய வைக்க முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட சேவாதாரி குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:-
1 . உடல், மனம், பொருள் ஆகிய அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்து மகாதானி ஆகவேண்டும். தனக்கு சமம் ஆக்கக்கூடிய சேவையும் செய்ய வேண்டும் மற்றும் ஆத்ம அபிமானி ஆகி இருக்க வேண்டும்.
2. இந்தப் பழைய உலகமான துக்கதாமத்தை மறந்து சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். கர்மபந்தனத்தில் ஒருபொழுதும் மாட்டிக் கொள்ளக்கூடாது.
வரதானம்:-
என்னுடைய பாபா என்ற நினைவு சொரூபத்தின் மூலம் சக்திகளின் அதிகாரத்தைப் பிராப்தம் செய்யக்கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.
கல்பத்திற்கு முந்தைய நினைவு வந்தவுடனேயே, நீங்கள் என்னுடையவர் என்று குழந்தைககள் கூறுகின்றனர் மற்றும் நீங்கள் என்னுடையவர்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த என்னுடையவர் என்ற நினைவினால் புது வாழ்வு, புது உலகம் கிடைத்துவிட்டது. மேலும், சதா காலத்திற்கும் என்னுடைய பாபா என்ற இந்த நினைவு சொரூபத்தில் நிலைத்துவிட்டீர்கள். இந்த நினைவின் பலனாக சக்தி சொரூபம் ஆகிவிட்டீர்கள். யார் எந்தளவு நினைவில் இருக்கிறார்களோ, அந்தளவு அவர்களுக்கு சக்திகளின் அதிகாரம் பிராப்தியாகக் கிடைக்கிறது. எங்கு நினைவு உள்ளதோ, அங்கு சக்தி அவசியம் இருக்கும். கொஞ்சம் மறதி இருக்குமானால் வீணானவைகள் உள்ளன என்று பொருள். ஆகையினால், எப்பொழுதும் நினைவு சொரூபம் மற்றும் சக்தி சொரூபம் ஆகுங்கள்.
சுலோகன்:-
கடுமையான உழைப்பாளியாக (ஹார்டு வொர்க்கர்) இருப்பதன் கூடவே ஸ்திதியிலும் கூட எப்பொழுதும் உறுதியானவர் ஆகுங்கள்.
No comments
Say Om Shanti to all BKs