BK Murli 18 March 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:







    BK Murli 18 March 2018 Tamil


    18.03.2018          காலை முரளி      ஓம் சாந்தி         ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ்           11.05.1983           மதுபன்


    '' ஹே இளைஞர்களே உலக மாற்ற காரியத்தின் பொறுப்பாளர் ஆகுங்கள் ''



    இன்று பாப்தாதா ஹன்ஸ் (அன்னப்பறவை) ஆசனத்தில் அமர்ந்திருக்கும் புனித அன்னப்பறவைகளின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிரேஷ்ட ஆத்மாவும் புனித அன்னப்பறவை. எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை, இதே அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் - இந்த நிலை தான் அன்னப்பறவையின் ஆசனம். அந்த மாதிரி புனித அன்னப்பறவைகளைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு புனித அன்னப்பறவையும் ஞான சொரூப ஆத்மா, யோக சொரூப ஆத்மா, உலகிற்கு நன்மை செய்பவர். ஒவ்வொருவரின் இதயத்தில் திலாராம் (இதயத்திலேயே வீற்றிருக்கும்) தந்தையின் நினைவு நிரம்பியிருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உருவாக்கும் ஈடுபாட்டிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த மாதிரி சிரேஷ்ட சபையை முழுக் கல்பத்திலும் சங்கமயுகத்தைத் தவிர ஒருபொழுதும் பார்க்க முடியாது. ஒரே பரிவாரம், ஒரே ஈடுபாடு, ஒரே லட்சியம், அந்த மாதிரி பின்பு எப்பொழுதாவது பார்ப்பீர்களா? பாப்தாதாவிற்கும் குழந்தைகள் மீது பெருமிதம் இருக்கிறது. இவ்வளவு பெரிய பரிவாரம் மற்றும் சபை மேலும் ஒவ்வொருவரும் சிரேஷ்ட தந்தையின் குழந்தைகள் ஆன காரணத்தினால் தந்தையின் ஆஸ்திக்கு உரியவராக இருக்கிறார்கள். எனவே இத்தனை அனைத்து அதிகாரி குழந்தைகளை பார்த்து தந்தைக்கும் குஷி ஏற்படுகிறது. இந்த ஒவ்வொரு குழந்தையும் குலத்தின் தீபம். உலக மாற்றம் செய்வதில் பொறுப்பாக இருக்கும் ஆத்மாக்கள். ஒவ்வொரு மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் உலகிற்கு வெளிச்சம் கொடுப்பவர்கள். ஒவ்வொருவரின் பாக்கியத்தின் அழியாத ரேகை நெற்றியில் தென்படுகிறது. அந்த மாதிரி உலகில் ஒரு வழி, ஒரு இராஜ்யம், ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும் என்ற திடமான எண்ணம் உள்ள சிரேஷ்ட சபை இது. பாப்தாதா இளைஞர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். குமாராக இருந்தாலும், குமாரியாக இருந்தாலும் ஆனால் ஒவ்வொருவரின்  மனதில் நாம் அனைவரும் நம்முடைய உலகம் மற்றும் தேசத்தையும் சுகம், சாந்திக்காக அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அதாவது நம்முடைய சகோதர சகோதரிகளை சுகம் மற்றும் சாந்தியின் அதிகார உரிமையைப் பெற வைப்போம் என்ற ஊக்கம், உற்சாகம் இருக்கிறது. நம்முடைய உலகத்தை மீண்டும் சுகம், சாந்தி நிறைந்த உலகமாக ஆக்குவோம். இதே திட எண்ணம் தான் இருக்கிறது இல்லையா? இவ்வளவு பெரிய சபை என்ன தான் செய்ய முடியாது! ஒன்று நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள், பவித்ர ஆத்மாக்கள், எனவே பவித்திரத்தின் சக்தி இருக்கிறது. இரண்டாவது மாஸ்டர் சர்வ சக்திவானாக இருக்கும் காரணத்தினால் அனைத்து சக்திகளும் உங்களுடன் இருக்கிறது. குழுவின் சக்தி, கூடவே மூன்று காலங்களையும் தெரிந்தவராக ஆன காரணத்தினால் நான் அனேக தடவை உலக மாற்றம் செய்பவராக ஆகியிருக்கிறேன் என்று தெரிந்திருக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி அடைபவராக ஆன காரணத்தினால் இப்பொழுதும் உலக மாற்ற காரியத்தில் வெற்றி நிச்சயம் இருக்கிறது. ஆகுமா அல்லது ஆகாதா என்ற இந்த கேள்வியே இல்லை. நிச்சயபுத்தி உடையவர் வெற்றி அடைவார். அந்த மாதிரி சுகமான உலகம் இப்பொழுது கண்டிப்பாக வந்து விடும் என்று அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா? உலகத்தின் எஜமானர்களுக்கு உலகத்தின் இராஜ்யம் நிச்சயமாக பிராப்தி ஆகியிருக்கிறது. இளைஞர்களின் வர்க்கம் என்ன செய்வீர்கள்? தன்னுடைய தேசத்தின் மற்றும் உலகத்தின் அரசியல் தலைவர்களுக்கு, எந்த விஷயத்தில் இந்த மாதிரி ஆக வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்களோ அந்த வேண்டும் என்ற விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றிக் காண்பிப்போம் என்ற இந்த குஷியான செய்தியைக் கூறுங்கள். தேசத்திலிருந்து ஒரு இல்லாமையை மட்டும் அல்ல, இரண்டு இல்லாமையையும் அகற்றிக் காண்பிப்போம், ஏனென்றால் இல்லாமை அதிகமானதற்கான, காரணம் சரித்திரத்தின் (ஒழுக்கம்) இல்லாமை தான். எப்பொழுது சரித்திரத்தின் இல்லாமை, துக்கம், அமைதியின்மையின் ஏழ்மை அகன்று விடுகிறதோ. அப்பொழுது இயல்பாகவே அனைத்து ஆத்மாக்களும் செல்வந்தர்கள் என்ன, இராஜ்ய அதிகாரிகளாகவே ஆகிவிடுவார்கள். இதே நல்ல எதிர்பார்ப்புக்களை உலகில் பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்களுக்கு நிறைவேற்றிக் காண்பியுங்கள். நம்முடைய தேசத்தை சிரேஷ்டம் ஆக்கிக் காண்பிப்போம், அந்த மாதிரி அனைத்தும் நிறைந்ததாக ஆக்குவோம். அந்த உலகத்தில் பிராப்தியின்மை (கிடைக்காதது) என்று எதுவும் இருக்காது. மேலும் பிராப்தியின்மைக்கான காரணமான எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. இந்த திட எண்ணத்தை அனைவருக்கும் கூற மட்டும் செய்யாதீர்கள். ஆனால் மாறியதின் ஒரு உதாரணமாகிக் காண்பியுங்கள். ஏனென்றால் அனைத்து பக்கங்களிலிருந்தும் நம்பிக்கை ஊட்டக்கூடிய கோஷங்களை அனைவரும் மிகவும் கேட்டிருக்கிறார்கள். அந்த அளவு கேட்டிருக்கிறார்கள். அதைக் கேட்டு நம்பிக்கையே அகன்று விட்டது. அந்த மாதிரி கூறுபவர்கள், அதிகம் பார்த்து பார்த்து சத்தியத்தையும் ஏமாற்றுதல் என்று புரிந்து கொள்கிறார்கள். எனவே சொல்வது மட்டும் வேண்டாம், வாய் பேச வேண்டாம். ஆனால் உங்களுடைய வாழ்க்கையின் சிரேஷ்ட நிலை பேசட்டும். ஒவ்வொரு புனித அன்னப்பறவை உங்களுடைய தூய்மையின் ஜொலிப்பு நடத்தை மூலம் தென்பட வேண்டும். உங்கள் அனைவரின் உயர்ந்த நினைவின் சக்திசாலியான நிலை நம்பிக்கை இழந்த ஆத்மாக்களிலும் நம்பிக்கையின் சக்தியை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா?



    இன்றைய தலைவர்கள் இளைஞர்கள் அழிவுக் காரியம் செய்யும் காரணத்தினால் இளைஞர் வர்க்கத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். நீங்கள் அனைவரும் உலகிற்கு நன்மை செய்பவர்கள், இதே தேசத்தின் இளைஞர் வர்க்கத்தைச் சேர்ந்த நாங்கள் நம்முடைய பாரத தேசத்தை உலகத்திலேயே மிக சிரேஷ்டமான சொர்க்கத்தின் ஸ்தானமாக ஆக்கி உலகிற்கு பாரதம் தான் பழமையான அழியாத அனைத்தும் நிறைந்த மிக சிரேஷ்டமான தேசம் என்று செய்து காண்பிப்போம். பாரதம் உலகிற்காக ஆன்மீகப் பிரகாசம் கொடுக்கும் கலங்கரை விளக்கம். ஏனென்றால் இந்த சிரேஷ்ட காரியத்தை செய்விப்பவர் யார்? அதைத் தெரிந்து கொண்டார்கள் என்றால், பிறகு ஏதாவது கேள்வி எழுவதற்கான விஷயமே இருக்காது. தன்னுடைய வாழ்க்கை மூலம், காரியங்கள் மூலம் தந்தையின் அறிமுகத்தை செய்வியுங்கள். இந்த அளவு தைரியம் இருக்கிறது தான் இல்லையா? குமாரிகள் என்ன நினைக்கிறீர்கள்? எப்பொழுது துர்காவின் பூஜை செய்கிறார்களோ அப்பொழுது பூஜை செய்யும் தன்னை பாக்கியவான் என்று நினைக்கிறார்கள். இங்கு எத்தனை துர்க்கைகள் இருக்கிறார்கள்? ஒவ்வொரு சிவசக்தியும் அதிசயக் காரியம் செய்து காண்பிப்பவர்கள் தான் இல்லையா? எந்த சக்திகளை ஒவ்வொரு வீட்டிலும் பூஜை செய்கிறார்களோ அது நீங்களே தான் இல்லையா? எனவே ஹே சிவசக்திகளே! தன்னுடைய பக்தர்களுக்கு பலனை கொடுங்களேன். பாவம் அவர்கள் பழங்களை (உங்கள் மேல்) சாத்தி சாத்தி களைப்படைந்து விட்டார்கள். அவர்கள் அந்த அளவு பழத்தை சாத்தியிருக்கிறார்கள். அதற்கான பிரதிபலனையோ அவர்களுக்குக் கொடுப்பீர்கள் தான் இல்லையா? பக்தர்கள் மேல் இரக்கம் வரவில்லையா? பாண்டவர்களுக்கும் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நாட்களில் ஒன்று மகாவீர் அனுமானுக்கு மிகுந்த பூஜை நடக்கிறது மற்றும் இன்னொன்று விக்ன வினாஷக் கணேஷருக்கு பூஜை நடக்கிறது. அனைவரும் சக்தி பெற வேண்டும் என்ற ஆசையோடு தான் பக்தி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி பக்த ஆத்மாக்களுக்கு அனைத்து சக்திகளின் பலனைக் கொடுங்கள். நிரந்தரமாக தடைகளைக் கடந்து வருவதற்கான சுலபமான வழியைக் கூறுங்கள். அனைத்து கூக்கூரல்களிலிருந்து விடுவித்து பிராப்தி சொரூபமானவர் ஆக்குங்கள். அந்த மாதிரி சேவையை இளைஞர்கள் வர்க்கம் செய்து காண்பியுங்கள். புரிந்ததா? நல்லது!



    எப்பொழுதும் தன்னுடைய சிரேஷ்ட வாழ்க்கை மூலமாக அனேகர்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, அனைத்து பாரதவாசிகளின் சிரேஷ்ட, சுகம் நிறைந்த உலகம் வர வேண்டும் என்ற நல்ல விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய, ஒவ்வொரு வீட்டிலும் சிரேஷ்ட சரித்திரத்தின் (ஒழுக்கம்) தீபத்தை ஏற்றக்கூடிய, எப்பொழுதும் பிராப்தி இல்லாத ஆத்மாக்களுக்கு, பிராப்தி செய்விக்கக் கூடிய அந்த மாதிரி உறுதியான எண்ணம் வைத்திருக்கும் நிச்சயம் வெற்றி அடையும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம். குமாரர்கள் மீது பாப்தாதாவிற்கு எப்பொழுதும் நம்பிக்கை இருக்கிறது. குமாரர்கள் உலகை மாற்றம் செய்ய முடியும். ஒருவேளை அனைத்து குமாரர்களும் ஒரு திடமான எண்ணம் வைத்திருப்பவர்களாக ஆகி முன்னேறிச் செல்கிறார்கள் என்றால், மிகுந்த அதிசயக் காரியம் செய்ய முடியும். நீங்கள் அதிசயம் செய்யக்கூடிய குமார் தான் இல்லையா? பார்த்துக் கொள்ளுங்கள் பாப்தாதாவிடம் தானியிங்கி புகைப்படம் பிடிக்கப்பட்டு விடுகிறது. திட எண்ணம் உள்ள குமார் தான் இல்லையா? குமாரர்களில் உடல் சக்தியும் அதிகம் இருக்கிறது. எனவே இரட்டைக் காரியம் செய்ய முடியும். ஸ்தாபனையின் காரியத்தில் மிக நல்ல சகயோகி ஆக முடியும். குமாரர்கள் புத்தியில் என்னுடைய பாபா, மேலும் என்னுடைய சேவை, வேறு எந்த விஷயமும் இல்லை என்ற ஒரே விஷயம் தான் இருக்கிறது தான் இல்லையா? யாருடைய புத்தியில் எப்பொழுதும் பாபா மற்றும் சேவை இருக்கிறதோ அவர் சுலபமாகவே மாயாவை வென்றவர் ஆகிவிடுகிறார். குமாரர்களுக்கு ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் வைக்க வேண்டும் - எப்பொழுதும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு வேலையுமின்றி காலியாக இருக்கக்கூடாது. உடல் மற்றும் புத்தி இரண்டின் மூலமாக பிஸியாக இருங்கள். பிஸினஸ்மேனாக ஆகாமல் பிஸி மேன் ஆக ஆகுங்கள். எப்படி ஒரு நாளில் செய்ய வேண்டிய காரியத்தின் கால அட்டவணையைத் தயாரிக்கிறீர்கள். அதேபோன்று புத்திக்கும் கால அட்டவணையைத் தயாரியுங்கள். இப்பொழுது இதை யோசிக்க வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று கால அட்டவணையை நிச்சயம் செய்தீர்கள் என்றால் அதன் பிரகாரம் பிஸி ஆகிவிடுவீர்கள். பிஸியாக இருப்பவர்களை மாயா எந்த ரூபத்திலும் தாக்க முடியாது. புத்தியை பிஸியாக வைத்துக் கொள்வதற்கான வழியை எப்பொழுதும் கடைபிடியுங்கள். எப்படி உடலை பிஸியாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவோ. அதே போல் புத்தி மூலமாக எப்பொழுதும் நினைவில், போதையில் பிஸியாக இருங்கள். அந்த மாதிரி கால அட்டவணையைத் தயாரிக்கத் தெரியுமா? நிரந்தரமாக நியமத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்படி மற்ற நியமங்கள் உருவாகியிருக்கின்றன, அதே போல் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற நியமத்தையும் உருவாக்குங்கள். இதே திட நிச்சயத்தினால் என்ன அதிசயம் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முடியும். குமாரர்கள் பாப்தாதாவின் காரியத்தின் நட்சத்திரங்கள். சேவைக்கு பொறுப்பானவர்களாகவோ குமார் ஆகிறார் இல்லையா? அங்கு இங்கு செல்லும் சேவையையும் குமாரர்கள் செய்கிறார்கள். என்ன சேவை நடந்தாலும் அதில் குமாரர்களுக்கு விசேஷ பங்கு இருக்கிறது. அந்த மாதிரி விசேஷ பங்கை ஏற்றுச் செய்யும் விசேஷ ஆத்மாக்கள் இதே போதையை வைத்துக் கொள்ளுங்கள், இதே குஷியில் இருங்கள். குமார் குரூப் என்ன செய்து காண்பிக்கிறார்கள் என்று பார்க்கலாம். ஏதாவது செய்து காண்பிக்க வேண்டும். சொல்வது மட்டும் இருக்க வேண்டாம். நீங்கள் சேவைக்கான ஊக்கம், உற்சாகம் வைத்திருப்பவர்கள். நிச்சயபுத்தி வைத்திருப்பவர்கள், உறுதியானவர்கள், ஆடக்கூடியவர்கள் அல்ல. அது போலவே உறுதியான ஆத்மாக்கள் நீங்கள், மற்றவர்களையும் உறுதியானவராக ஆக்கிக் காண்பியுங்கள்.



    மகாதானியாகி தானம் செய்து கொண்டே இருங்கள். எப்பொழுது தன்னுடைய களஞ்சியம் நிறைந்திருக்கிறது என்றால் அனேகர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். எப்பொழுதும் சேவையை முன்னேற்றம் அடையச்செய்து கொண்டே இருங்கள். இன்று வாய்ப்பு கிடைத்தது என்பதினால் செய்து விட்டோம் அல்லது எப்பொழுது வாய்ப்பு கிடைக்குமோ அப்பொழுது செய்து விடலாம் என்று அப்படி இருக்க வேண்டாம். யாரிடம் பொக்கிஷம் இருக்குமோ அவர் எங்கிருந்தாவது ஏழைகளை தேடிக் கண்டுபிடித்தும் தண்டோரா அடித்தும் கூட அவசியம் தானம் செய்வார். ஏனென்றால், தானம் செய்வதினால் புண்ணியம் கிடைக்கிறது என்று அவருக்குத் தெரியும். அந்த தானமோ அழியக்கூடியது. மேலும் சுயநலமானதாகக் கூட இருக்கலாம். நீங்கள் அனைவருமோ அழியாத பொக்கிஷத்தின் மகாதானி. எனவே சேவையை அதிகரியுங்கள். உங்களுக்குள் பந்தயம் வைத்துக் கொள்ளுங்கள். மகாதானி ஆகுங்கள். நிச்சயத்துடன் செய்யுங்கள், நிலம் கட்டாந்தரை ஆனது என்று அந்த மாதிரி யோசிக்காதீர்கள். இப்பொழுது காலம் மாறி விட்டது, காலத்தின் கூடவே நிலமும் மாறுகிறது. முன்பிருந்த நிலத்தில் என்ன ரிசல்ட் இருந்ததோ அது இப்பொழுது இல்லை. காலம் வாயுமண்டலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆத்மாக்களின் ஆசையும் மாறுகிறது. அனைத்து தேவைகளையும் அனுபவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நேரம் இருக்கிறது, நேரத்திற்கு ஏற்றாற் போல் நிரந்தரமான மகாதானி ஆகுங்கள். வாய்மொழி மூலம் இல்லை என்றால் மன சக்தி மூலம், மன சக்தி மூலம் இல்லை என்றால் செய்யும் காரியங்கள் மூலம், காரியம் மூலம் ஏதாவது ஆத்மாவை பரிவர்த்தனை செய்வது காரியம் மூலம் செய்யும் சேவை. தொடர்பு மூலமாகவும் எந்தவொரு ஆத்மாவையும் பரிவர்த்தனை செய்ய முடியும். அந்த மாதிரி சேவாதாரி ஆகுங்கள். தினசரி மனதால், வாய்மொழியால், செயல்கள் மூலமாக என்ன சேவை செய்தேன், எத்தனை பேருக்கு சேவை செய்தேன் என்ற ரிசல்ட்டை எடுங்கள். எந்த ஊக்கம் உற்சாகத்தோடு சேவை செய்தேன். இந்த தினசரி ரிசல்ட்டை நீங்களே எடுங்கள். தான் மற்றும் சேவை இரண்டின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துங்கள். இப்பொழுது ஏதாவது புதுமை செய்யுங்கள். சென்டர் திறப்பது, கீதா பாடசாலை திறப்பது, மேளா வைப்பது இவையோ பழைய விஷயம் ஆகிவிட்டது, புதியதாக ஏதாவது செய்யுங்கள். தன்னில் மற்றும் சேவையில் ஏதாவது புதுமையை அவசியம் கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்தை வையுங்கள். இல்லை என்றால் சில நேரம் களைப்படைந்து விடுவீர்கள், சில நேரம் ஆர்வமற்றவர்கள் ஆகிவிடுவீர்கள். புதுமை இருக்கிறது என்றால் எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் இருப்பீர்கள். நல்லது.



    மாதர்களுடன் சந்திப்பு –

    மாதர்களுக்காக பாப்தாதா விசேஷமாக சகஜமார்க்கத்தின் பரிசைக் கொண்டு வந்திருக்கிறார். சகஜமார்க்கத்தின் பரிசு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. சகஜ பிராப்தியாக என்ன ஆகிறதோ அது தான் பரிசு. எனவே முக்கியமாக பாப்தாதா சகஜமார்க்கத்தின் பரிசை கொண்டு வந்திருக்கிறார் என்ற இந்த போதை தான் இருக்க வேண்டும். அனைத்தையும் விட சகஜமானது 'என்னுடைய பாபா' என்று கூறுங்கள் போதும். என்னுடைய பாபா என்று கூறுவதினால், அனுபவம் செய்வதினால் அனைத்து பிராப்திகளும் ஆகிவிடும். எங்களுக்காக தந்தை பிரத்யேகமாக வந்திருக்கிறார் என்று மாதர்களுக்கு விசேஷ குஷி இருக்க வேண்டும். மேலும் யாரெல்லாம் நீங்கள் வந்திருக்கிறீர்களோ உங்களை ஆண்களை விட முன்னுக்கு வைத்திருக்கிறோம். தர்ம தந்தைகள், தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு சென்று விட்டார்கள். மாதர்களை யாருமே பெயர் பெற்றவர்களாக ஆக்கவில்லை. மேலும் தந்தை 'முதலில் மாதர்கள்' என்ற முறையை ஸ்தாபனை செய்தார். எனவே மாதர்கள் தேடிக் கண்டெடுக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் இல்லையா? எவ்வளவு அன்போடு தந்தை உங்களைத் தேடிக் கண்டெடுத்து தன்னுடையவராக ஆக்கியிருக்கிறார். நீங்களோ விலாசமின்றி தேடினீர்கள். எனவே தேடியதாக ஆகவில்லை. தந்தையைப் பாருங்கள் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எடுத்து விட்டார். அனேக மரங்களின் கிளைகளாக இருந்தீர்கள். இப்பொழுது ஒரு மரத்தினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். ஒரே ஒரு சந்தன மரமாக ஆகிவிட்டது. உலகத்தினரோ இரண்டு மூன்று மாதர்கள் கூட ஒன்றாகச் சேர்ந்து இருக்க முடியாது என்று கூறுகிறார்கள். மேலும் இப்பொழுது மாதர்கள் முழு உலகத்தில் ஒற்றுமையை ஸ்தாபனை செய்வதற்குப் பொறுப்பாளராக இருக்கிறார்கள். இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் தந்தை மாதர்கள் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அந்த மாதிரி மாதர்களுக்கு விசேஷ பதவி இருக்கிறது. எனவே ஆஹா என்னுடைய சிரேஷ்ட பாக்கியமே ஆஹா என்று அளவற்ற குஷியில் ஆடுங்கள், பாடுங்கள். ஒருபொழுதும் துக்க அலைகள் மனதில் வர வேண்டாம். நீங்கள் அனைவரும், துக்கமான உலகத்தை விட்டு விட்டீர்கள் தான் இல்லையா? நான் சங்கமயுகத்தைச் சேர்ந்தவன், எப்பொழுதும் சுகதாமம், சாந்திதாமம் நோக்கி முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். மாதர்களைப் பார்த்து பாப்தாதாவிற்கு நம்பிக்கையற்றவர்களாக இருந்தவர்கள், நம்பிக்கையுடையவர்களாக ஆகிவிட்டார்கள் என்ற பெருமிதம் இருக்கிறது. உலகிற்கு நன்மை செய்பவர்களாக ஆகிவிட்டார்கள். இப்பொழுது உலகம் எங்களுக்கு நன்மை செய்யும் மாதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்கள் பக்கம் பார்க்கிறார்கள். எனவே இப்பொழுது ஜகத்தின் மாதர்களாக ஆகி ஜகத்திற்கு நன்மை செய்யுங்கள். உலகியல் குடும்பப் பொறுப்பை ஏற்று செய்பவராக மட்டும் இல்லாமல் உலகின் அனைத்து ஆத்மாக்களின் பொறுப்பை ஏற்று செய்பவர்கள் நீங்கள். ஏதாவது காரணமாக நீங்கள் எங்கே இருந்தாலும் ஆனால் உங்களுடைய நினைவில் உலக சேவை இருக்க வேண்டும். எப்படி லட்சியம் இருக்குமோ அப்படி லட்சணம் இயல்பாகவே வந்து விடுகிறது. லட்சியம் எல்லைக்கப்பாற்பட்டதாக இருக்கிறது என்றால், லட்சணமும் எல்லைக்கப் பாற்பட்டதாக வந்து விடும். இல்லையென்றால் எல்லைக்குட்பட்டதிலேயே மாட்டிக் கொண்டே இருப்பீர்கள். எப்பொழுதும் நான் தந்தையினுடையவள், எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் இருப்பவள், இதே நினைவிலிருந்து அனைத்து ஆத்மாக்களுக்காக நல்ல எண்ணங்கள் மூலமாக சேவை செய்து கொண்டே இருங்கள். இரண்டுமே சேர்ந்தே இருக்கட்டும். வாய் மூலமாக யாருக்காவது நன்றாகப் புரிய வையுங்கள். ஆனால் எதுவரை சுபபாவனையின் பலத்தை அந்த ஆத்மாவிற்கு கொடுக்கவில்லையோ அதுவரை பலன் கிடைக்காது. எண்ணம் மற்றும் வாய்மொழி இரண்டும் சேர்ந்தே சேவை செய்ய வேண்டும். செய்தி கொடுப்பது வரை மட்டும் உங்களுடைய சேவை இருக்க வேண்டாம். இல்லை என்றால் சரி, சரி என்று கூறிவிட்டு மட்டும் சென்று விடுவார்கள். மனசக்தி மூலம் செய்யும் சேவை சேர்ந்தே இருக்கிறது என்றால் அம்பு பாய்ந்து விடும். மாதர்களுக்கு சேவையின் மைதானத்தில் வர வேண்டும். ஒவ்வொரு மாதாவும் ஒவ்வொரு சேவை நிலையத்தை பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஒருவேளை நேரம் இல்லை என்றால், உங்களுக்குள் இரண்டு மூன்று பேர் அடங்கிய குழுவை உருவாக்குங்கள். வீட்டின் பந்தனம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற அந்த நிலை வேண்டாம். சமூக சேவகர்களாக இருக்கும் மாதர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் தான் இல்லையா? அவர்களும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். எனவே இப்பொழுது தன்னைத் தானே சேவைக் கரமாக ஆக்குங்கள். மேலும் சேவையை அதிகரியுங்கள். யாரை யாவது உருவாக்கி அவருக்கு ஸ்தானம் கொடுத்து முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். சக்திகள் இப்பொழுது மைதானத்தில் வாருங்கள். தந்தையிடமிருந்து என்ன பாலனை பெற்றிருக்கிறீர்களோ அதற்கான பலனைக் கொடுங்கள். எந்த அளவு சேவையை அதிகரிப்பீர்களோ அந்த அளவு உங்களுக்கும் அதன் பலன் கிடைக்கும், தற்சமயமும் சக்திசாலியாக இருப்பீர்கள், மேலும் எதிர்காலமோ கண்டிப்பாக உருவாகத்தான் செய்யும். எந்த அளவு சேவை செய்வீர்களோ அந்த அளவு தடையவற்றவராக இருப்பீர்கள். மேலும் குஷியும் இருக்கும். நல்லது.



    குமாரிகளுடன் சந்திப்பு –

    குமாரிகள் தங்களுடைய சிரேஷ்ட பாக்கியத்தை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுதாவது தன்னுடைய சிரேஷ்ட பாக்கியத்தை மறப்பது இல்லையே? எப்பொழுதும் பாக்கியத்தை நினைவில் வைத்துக் கொண்டே முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். சங்கமயுகத்தில் குமாரிகளுக்கு விசேஷமாக லிஃப்ட்டின் கிஃப்ட் கிடைக்கிறது. ஏனென்றால் குமாரி வாழ்க்கை கவலையிலிருந்து விடுபட்ட வாழ்க்கை. குடும்பத்தை நடத்துவதற்கான, வேலை என்ற கூடையை சுமப்பதற்கான எந்தக் கவலையும் இல்லை. குமாரி என்றால் சுதந்திரமானவர். சுதந்திரமாக இருப்பது அனைவருக்கும் பிரியமானது, அஞ்ஞான காலத்திலும் நான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரின் லட்சியம் இருக்கிறது. சுதந்திரமாக இருப்பதின் வரதானம் உங்கள் அனைவருக்கும் பிராப்தியாகி இருக்கிறது. சுதந்திரமாக இருப்பதற்கான வரம் பெற்றவர்கள் அனைவருக்குமே இதே வரத்தை தான் அளிப்பீர்கள் இல்லையா. யாரையாவது குழப்பத்தில் மாட்ட வைப்பவர்கள் இல்லை. எப்பொழுது குழப்பத்திலிருந்து விடுபட்டு இருக்கிறீர்கள், சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்றால் சேவை செய்வீர்கள் இல்லையா? ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த வெளியுலக படிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதைச் செய்து கொண்டும் சேவையின் நினைவு எப்பொழுதுமே இருக்கட்டும். படிப்பை படிக்கும் காலத்திலும். தந்தையின் குழந்தையாக எந்த ஆத்மாவை ஆக்கலாம் என்ற இந்த லட்சியம் எப்பொழுதுமே இருக்கட்டும். படிப்பை படித்துக் கொண்டே எந்த ஆத்மா தகுதியானவர் என்று பகுத்தறிந்து கொண்டே இருங்கள். அப்பொழுது அங்கேயும் சேவை நடந்து விடும். குமாரிகள் அவசியம் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து படிப்பை படித்துக் கொண்டே தயார் ஆகிக் கொண்டே இருங்கள். படிப்பு முடிந்தவுடனேயே சேவையில் ஈடுபட்டு விடுங்கள். நல்லது.



    வரதானம் :

    உள்ளத்தின் அன்பு மற்றும் சம்மந்தத்தின் ஆதாரத்தினால் அருகாமையை அனுபவம் செய்யக்கூடிய நிரந்தர யோகி ஆகுக.



    பிராமண ஆத்மாக்களில் சிலர் உள்ளத்தின் அன்பு, சம்மந்தத்தினால் நினைவு செய்கிறார்கள், மேலும் சிலர் புத்தி அதாவது ஞானத்தின் ஆதாரத்தில் சம்மந்தத்தை அனுபவம் செய்வதற்காக அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். எங்கு உள்ளத்தின் அன்பு மற்றும் சம்மந்தம் மிகப் பிரியமானதாக அதாவது அருகாமையில் இருக்கிறது என்றால், அங்கு நினைவு மறப்பது கடினம். எப்படி உடலில் ஒவ்வொரு நரம்பிலும் இரத்தம் நிரம்பியிருக்கிறது, அதே போல் ஆத்மாவில் அனைத்து நேரமும் நினைவு நிரம்பியிருக்கிறது. இதைத் தான் உள்ளத்தின் அன்பு நிரம்பிய நிரந்தர நினைவு என்று கூறுவது.



    சுலோகன்:

    சுயநலமற்ற மற்றும் தீய எண்ணமற்ற நிலை மூலம் சேவை செய்யுங்கள் அப்பொழுது வெற்றி கிடைக்கும்.




    ***OM SHANTI***


    No comments

    Say Om Shanti to all BKs