BK Murli 21 March 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:







    BK Murli 21 March 2018 Tamil


    21.03.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற டிராமாவின் முதல்-இடை-கடை பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். எது கடந்து விட்டதோ, அதே தான் இப்போது மீண்டும் நிகழ்காலத்தில் நடக்கும். இப்போது சங்கமயுகம் நிகழ்காலம். பிறகு சத்யுகம் வரும்.



    கேள்வி:

    ஸ்ரீமத் படி தன்னைத் தான் முழுமையானவராக ஆக்கிக் கொள்வதற்கான விதி என்ன?



    பதில்:

    தன்னைத் தான் முழுமையானவராக ஆக்கிக் கொள்வதற்கு விசார் சாகர் மந்தன் செய்யுங்கள். தனக்குத் தான் உரையாடல் செய்யுங்கள். பாபா, நீங்கள் எவ்வளவு இனிமையானவர்! நாங்களும் உங்களைப் போல் இனிமையானவர்களாக ஆவோம். நாங்களும் உங்களுக்கு சமமாக மாஸ்டர் ஞானக்கடலாகி அனைவருக்கும் ஞானம் கொடுப்போம். யார் மீதும் கோபம் கொள்ள மாட்டோம். சாந்தி நமது சுயதர்மம். நாங்கள் சதா சாந்தமாக இருப்போம். அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்வோம். இவ்வாறெல்லாம் தனக்குத் தானே உரையாடல் செய்து தன்னை முழுமையானவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.



    பாடல்:

    மாதா ஓ மாதா, வாழ்வளிக்கும் வள்ளல்



    ஓம் சாந்தி.

    சிவபகவான் வாக்கு. பகவான் வாக்கு என்று மட்டும் சொல்வதால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாது. பெயரை அவசியம் சொல்ல வேண்டியுள்ளது. கீதை சொல்பவர்கள் அனைவரும் கிருஷ்ண பகவான் வாக்கு எனச் சொல்கின்றனர். அவர் கடந்த காலத்தில் இருந்து சென்றுள்ளார். ஸ்ரீகிருஷ்ணர் வந்திருந்ததாகவும் கீதை சொன்னார் அல்லது இராஜயோகம் கற்பித்தார் என்பதாகவும் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது எது நடந்து முடிந்துள்ளதோ, அது மீண்டும் நிகழ்காலத்தில் அவசியம் நடக்கும். எது நிகழ்காலமாக உள்ளதோ, அது பிறகு கடந்த காலமாக ஆகும். எது கடந்துவிட்டதோ அது முடிந்து போனதாகச் சொல்வார்கள். இப்போது சிவபாபா வந்துள்ளார், நிச்சயமாக இருந்து சென்றுள்ளார். சிவபகவான் வாக்கு, யார் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரோ, அவர் அனைவருக்கும் தந்தை ஆவார். சர்வசக்திவான் எனச் சொல்லப் படுபவர் வந்து அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் அவருடைய குழந்தைகள் சிவசக்திகள். சிவசக்தியின் மகிமையைப் பாடலில் கேட்டீர்கள் இல்லையா? சிவசக்தி ஜெகதம்பா இருந்து சென்றுள்ளார். இது அவருடைய நினைவுச்சின்னம். இருந்து சென்றுள்ளார், மீண்டும் அவசியம் வருவார். எப்படி சத்யுகம் கடந்து சென்றுள்ளது, இப்போது கலியுகம், பிறகு சத்யுகம் வரப்போகிறது. இப்போது இருப்பது பழைய உலகம் மற்றும் புது உலகத்தின் சங்கமம். நிச்சயமாக புதிய உலகம் இருந்து சென்றுள்ளது. கடந்து சென்று விட்ட சத்யுகம் மீண்டும் வருங்காலத்தில் வரப்போகிறது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஞானம் என்பது புரிதல். அது பக்தி, இது ஞானம். சிருஷ்டியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாமல் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாது. டிராமாவின் முதல்-இடை-கடை பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த எல்லைக்குட்பட்ட டிராமாவின் முதல்-.இடை-கடை பற்றியோ அறிவார்கள். இது எல்லையற்ற டிராமா. இதை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. எல்லையற்ற எஜமானரான தந்தை தாமே வந்து புரிய வைக்கிறார். இது சிவபகவான் வாக்கே தவிர ஸ்ரீகிருஷ்ண பகவான் வாக்கல்ல. கிருஷ்ணரையும் ஸ்ரீ எனச் சொல்கின்றனர். ஏனென்றால் அவரை உயர்ந்தவராக ஆக்குபவர் தந்தை. பாரதவாசிகள், பாவம் இதை அறியவில்லை, அதாவது கிருஷ்ணர் தான் நாராயணராக ஆகிறார். நாம் இப்போது சொல்கிறோம், பாவம் புத்தியற்றவர்கள். அனைவரும் ஏழைகளாக, துக்கத்தில், தூய்மையை இழந்து உள்ளனர். நாமும் அது போல் இருந்தோம். ஆனால் இப்போது நாம் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். பதீத-பாவனர் பாபா இப்போது நமக்குக் கிடைத்துள்ளார். கிருஷ்ணர் பதீத-பாவனர் எனச் சொல்லப் படுவதில்லை. புதிய தூய்மையான உலகத்தை உருவாக்குபவர் படைப்பவராகிய தந்தை தான். அவர் பரமபிதா பரமாத்மா சர்வசக்திவான் எனச் சொல்லப்படுகிறார். அவர் தான் தூய்மை இல்லாத உலகத்தைப் தூய்மையாக ஆக்குபவர். முழு சிருஷ்டியுமே தூய்மை இழந்து உள்ளது. இராவணன் தூய்மை அற்றவர்களாக ஆக்குகிறான். பதீத-பாவனர் ஒரே ஓர் ஈஸ்வரன் மட்டுமே. மனிதர்கள் எந்த ஒரு நிலையிலும் தூய்மை இல்லாத நிலையி-ருந்து தூய்மையாக ஆக்க முடியாது. முழு உலகத்தின் சவால் இல்லையா? சந்நியாசிகள் ஓரிரு கோடிப் பேர் தூய்மையாக உள்ளனர் என வைத்துக் கொள்வோம். பிறகும் கூட 500-600 கோடி மனிதர்கள் தூய்மை அற்றவர்களாகவே உள்ளனர் என்றால் இதை தூய்மை இல்லாத உலகம் என்று தான் சொல்வார்கள் இல்லையா? உண்மையில் சிவபகவான் சொல்கிறார், தூய்மையற்ற உலகத்தில் ஒருவர் கூட தூய்மையானவராக இருக்க முடியாது. பாபா சொல்கிறார், குழந்தைகளாகிய உங்களைப் பாவனமாக்குவதற்காக முழு சிருஷ்டியையுமே பாவனமாக்குகிறேன். பதீத்-பாவனர் என்பதன் அர்த்தமே உலகத்தைப் தூய்மையாக்குபவர். சிவபாபா தாமே சொல்கிறார், நான் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆக வேண்டும். புது உலகத்தில் இருப்பது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம். இதையும் யாரும் அறிந்திருக்கவில்லை. சிவபாபாவையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை. கேளுங்கள் -- நிராகார் பரமபிதா பரமாத்மாவின் ஜெயந்தி கொண்டாடுகிறீர்களே, அவர் எப்போது வந்தார்? நிராகார் எப்படி வந்தார்? நிராகாரோ சரீரத்தில் தான் வருவார், அப்போது தான் கர்மம் செய்ய முடியும். ஆத்மா சரீரம் இல்லாமல் கர்மம் செய்ய முடியாது. பரமாத்மா வந்து நிச்சயமாக உயர்ந்தவராக ஆக்குவதற்கான காரியத்தைத் தான் செய்வார். முழு உலகத்தையும் தூய்மையாக்குவது ஒரே ஒருவரின் கையில் தான் உள்ளது. மனிதர்களோ, துக்கமோ துக்கத்தில் உள்ளனர். பக்தர்கள் பகவானை அழைக்கின்றனர் என்றால் நிச்சயமாக பகவான் ஒருவர் இருக்க வேண்டும். பக்தர்கள் அநேகர். சிவபகவான் சொல்கிறார், நான் சிவபகவான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானத்தைப் புரிய வைக்கிறேன். அதாவது இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் உள்ளது. எப்படி தந்தையாகிய எனக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் உள்ளது, அதைக் கற்றுத் தருவதற்காக நான் வந்துள்ளேன். சிருஷ்டிச் சக்கரத்தை அவசியம் சுற்ற வேண்டும். தூய்மை இல்லாமலிருப்பதிலிருந்து தூய்மை யானவராக ஆக வேண்டும். யாரோ ஒருவர் நிமித்தமாகிறார் இல்லையா? ஐந்து விகாரங்களில் இருந்து விடுவிப்பதற்காக நான் வருகிறேன். நான் சிவன், இப்போது இந்த சரீரத்தில் அமர்ந்துள்ளேன். நீங்கள் சொல்வீர்கள், நான் ஆத்மா இந்த சரீரத்தில் அமர்ந்துள்ளேன். எனது சரீரத்திற்கு இன்ன பெயர். சிவபாபா சொல்கிறார், எனக்கு நிராகாரி சரீரமோ கிடையாது. பரமாத்மாவாகிய எனது பெயர் சிவன் என்பது தான். நான் பரமபிதா பரம ஆத்மா, நட்சத்திரம் போல் இருக்கிறேன். எனக்கு சிவன் என்ற ஒரு பெயர் தான். நீங்கள் தான் சாலிகிராம்கள். ஆனால் உங்கள் பெயர் 84 பிறவிகளில் மாறிக் கொண்டே இருக்கிறது. எனக்கோ ஒரே பெயர் தான். நான் புனர்ஜென்மம் எடுப்பதில்லை. கீதையில் யார் பெயர் போடப் பட்டுள்ளதோ, அவரோ முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார். கிருஷ்ணர் கீதை சொன்னார் என்பதெல்லாம் இல்லை. இது மிகவும் புரிந்து கொள்வதற்கான விஷயம். மனிதர்களின் கையில் எதுவும் இல்லை. என்னவெல்லாம் செய்கின்றாரோ, அதைப் பரமபிதா பரமாத்மா செய்கிறார். மனிதர்களுக்கு சாந்தி சுகம் கொடுப்பது என்பது பாபாவின் வேலை. எப்போதுமே ஒரு தந்தைக்கு மட்டுமே மகிமை செய்ய வேண்டும். வேறு யாருக்கும் மகிமை என்பதே கிடையாது. லட்சுமி-நாராயணருக்கும் கூட மகிமை இல்லை. ஆனால் இராஜ்யம் செய்து விட்டுச் சென்றுள்ளனர் என்றால் இவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர் எனப் புரிந்து கொள்கின்றனர். அதிசயத்தையோ பாருங்கள், அது ஜடச்சித்திரம், மற்றும் இங்கே சைதன்யத்தில் அமர்ந்துள்ளனர். சிவபகவான் சொல்கிறார், நீங்கள் இராஜாவுக்கெல்லாம் மேலான ராஜாவாக, பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். பிறகு பூஜாரி ஆவீர்கள். பூஜைக்குரிய லட்சுமி-நாராயணர் தான் பிறகு தாங்களாகவே பூஜாரி ஆகின்றனர். ஆக, யார் கடந்த காலத்தில் இருந்து சென்றுள்ளனரோ, அவர்களுக்குப் பிறகு கோயில் கட்டிப் பூஜை செய்கின்றனர். இதை உறுதிப் படுத்திச் சொல்ல வேண்டும். ஈஸ்வரன் தாமே பூஜைக்குரியவர், தாமே பூஜாரி ஆகிறார் என்பதில்லை. மனிதர்கள் இதையும் அறிந்திருக்கவில்லை, அதாவது பரமாத்மா நான் எங்கே வசிக்கிறேன்? என்று என்னுடைய குழந்தைகளாகிய சாலிகிராம்களும் கூட நாம் எங்கே வசிப்பவர்கள் என்பதை அறியாமல் இருக்கின்றனர். ஆத்மாக்களுக்கும் மற்றும் பரமாத்மாவுக்கும் ஒரே வீடு தான். அது இனிமையான வீடு. வெறுமனே இனிமையான தந்தை வீடு எனச் சொல்ல மாட்டார்கள். இப்போது நீங்கள் அறிவீர்கள், நிர்வாண்தாமம் நமது வீடும் ஆகும். அங்கே நம்முடைய தந்தை இருக்கிறார். வீட்டை மட்டும் நினைவு செய்வீர்களானால் பிரம்மத்துடன் யோகா என்று ஆகி விடும். அதனால் விகர்மம் விநாசமாகாது. பிரம்ம யோகி, தத்துவ யோகிகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் விகர்மங்கள் விநாசமாக முடியாது. ஆம், பாவனையினால் சொற்பகால சுகம் கிடைக்கிறது. எவ்வளவு நினைவு செய்கின்றனரோ, அவ்வளவு சாந்தி கிடைக்கும். ஆக, பாபா சொல்கிறார், அவர்களின் யோகம் தவறானது. நீங்கள் ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வதன் மூலம் உங்களின் விகர்மங்கள் விநாசமாகும். கிருஷ்ணர் இது போல் சொல்ல முடியாது. அவரோ வைகுண்டத்தின் எஜமான். அவர், அசரீரி ஆகி சிவபாபாவை நினைவு செய்யுங்கள் அல்லது என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. அனைத்தும் கீதையைச் சரி செய்வதன் ஆதாரத்தில் உள்ளது. கீதை குறையுள்ளதாக ஆன காரணத்தால் பகவானுடைய மகிமை மறைந்து விட்டது. ஈஸ்வரனுக்கு எந்த ஒரு பெயர்-வடிவமும் கிடையாது எனச் சொல்லிவிடுகின்றனர். இப்போது பெயர்-வடிவம்-காலமோ ஆத்மாவுக்கும் உள்ளது. ஆத்மாவின் பெயர் ஆத்மா. அவரும் பரமபிதா பரம ஆத்மா. பரம என்றால் சுப்ரீம் - மிக மேலானவர், உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவர் பிறப்பு-இறப்பு இல்லாதவர். அவதாரம் எடுக்கிறார். டிராமாவில் யாருக்குப் பார்ட் உள்ளதோ, அவருக்குள் பிரவேசமாகிறார். அவருடைய பெயரை பிரம்மா என வைக்கிறார். பிரம்மா என்ற பெயர் ஒரு போதும் மாற முடியாது. பிரம்மாவின் மூலம் தான் ஸ்தாபனை செய்கிறார். ஆகவே அவர் ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் வர மாட்டார். அவர் வேறொருவரின் உடலில் வருகிறார் என்றால் அவருடைய பெயரை பிரம்மா என வைக்க வேண்டியதிருக்கும். மனிதர்கள் கேட்கின்றனர், வேறு யாருடைய உடலிலாவது ஏன் வருவதில்லை? அட, அவரும் யாருடைய உடலில் வருவார்? அவர் வருவதே ஞானம் கொடுப்பதற்காக. நாளுக்கு நாள் மனிதர்கள் புரிந்து கொண்டே போவார்கள். உங்களுக்கு வளர்ச்சி ஆகிக் கொண்டே போகும். மன நிலை மிக நன்றாக இருக்க வேண்டும். எப்படி (உலகாய) டிராமாவின் நடிகர்களுக்குத் தெரிந்திருக்கிறது, நாம் வீட்டிலிருந்து மேடை மீது பார்ட்டை நடிப்பதற்காக வந்திருக்கிறோம். அது போல் நாம் ஆத்மா இந்த சரீரம் என்ற ஆடையை எடுத்துக் கொண்டு பார்ட்டை நடிக்கிறோம். பிறகு திரும்பிச் செல்ல வேண்டும். சரீரத்தை விட வேண்டியுள்ளது. உங்களுக்கோ குஷி இருக்க வேண்டும். பயப்படக் கூடாது. நீங்கள் அதிக வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். சரீரத்தை விடுபவர்கள், நாம் எவ்வளவு வருமானத்தைச் சம்பாதித்திருக்கிறோம் என்று தாங்களே கூட புரிந்து கொள்ள முடியும். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், யார் சரீரத்தை விட்டுச் சென்றுள்ளனரோ, அவர்களுக்குள் யாருடைய பதவியைப் பெரியதென்று சொல்லலாம், இன்னார் அதிக சேவை செய்தனர், அவர்கள் போய் வேறொரு சரீரத்தை எடுத்துக் கொண்டனர். முன்கூட்டியே சென்றுள்ளனர். அவர் களுக்கு இவ்வளவு தான் பார்ட் இருந்தது. பிறகும் கூட ஏதாவது ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் வர முடியும். வாரிசாகவோ ஆகி விட்டனர் இல்லையா? யாரோடு கணக்கு-வழக்கை முடிக்க வேண்டுமோ, அதை முடித்து வைப்பதற்காகச் சென்று விட்டனர். ஆத்மாவுக்குள்ளோ ஞானத்தின் சம்ஸ்காரம் உள்ளது அல்லவா? சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் தான் உள்ளன. அவை மறைந்து விட முடியாது. எங்காவது நல்ல சேவை செய்து கொண்டிருப்பார்கள். ஞானத்தின் சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்றுள்ளனர் என்றால் போய் ஏதேனும் சேவை செய்வார்கள். அனைவரும் சென்று கொண்டே இருப்பார்கள் என்பதில்லை. ஆம், யோகத்தில் இருப்பதால் ஆயுள் அதிகமாகும் என்பது மட்டும் நிச்சயம். மேனர்ஸ் (பண்புகள்) கூட மிகவும் நல்லதாக இருக்க வேண்டும். பாபா, நீங்கள் எவ்வளவு இனிமையானவர்! நானும் கூட உங்களைப் போல் இனிமையாக ஆவேன், நானும் ஞானக்கடலாக ஆவேன் எனச் சொல்கின்றனர். பாபா சொல்கிறார், தன்னைத் தான் பார்த்துக் கொண்டு இருங்கள், நான் மாஸ்டர் ஞானக்கடல் ஆகியிருக்கிறேனா? தாய்-தந்தைக்கு சமமாக மற்றவர்களுக்கு ஞானம் கொடுக்கிறேனா? நாம் யாரிடமாவது கோப்படாமல் இருக்கிறோமா? சாந்தியை தாரணை செய்துள்ளோமா? சாந்தி நமது சுயதர்மம் இல்லையா? தன்னை அசரீரி ஆத்மா எனப் புரிந்து கொள்ள வேண்டும். பார்க்க வேண்டும், எனக்குள் எந்த ஒரு விகாரமும் இல்லாதிருக்கிறதா? ஏதேனும் விகாரம் இருக்குமானால் ஃபெயிலாகி விடுவீர்கள். இப்படியெல்லாம் தனக்குத் தான் உரையாடல் செய்ய வேண்டியுள்ளது. இது விசார் சாகர் மந்தன் செய்து ஸ்ரீமத்படி தன்னை முழுமையாக ஆக்கிக் கொள்வதாகும். மற்ற அனைவரும் அசுர வழியினால் முழுமையற்றவர்களாக ஆகிக் கொண்டே செல்கின்றனர். நாமும் கூட எவ்வளவு முழுமையற்றவராக இருந்தோம்! எந்த ஒரு குணமும் இல்லாதிருந்தது. எனக்குள் எந்த ஒரு குணமும் கிடையாது எனப் பாடுகின்றனர் இல்லையா? வார்த்தைகள் எவ்வளவு நன்றாக உள்ளன! மகிமை அனைத்தும் பரமபிதா பரமாத்மாவினுடையது. குருநானக் கூட அவருக்கு மகிமை செய்தார். இதை மனிதர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.



    இதையும் குழந்தைகள் அறிவார்கள் -- கல்பத்திற்கு முன் யாருடைய கன்று (நாற்று) நடப்பட்டதோ, அவர்கள் தான் வருவார்கள் மற்றும் தாரணை செய்வார்கள். இல்லையென்றால் குழப்பத்தில் வந்தார்கள், சென்றார்கள் என்று ஆகிவிடும். இங்கோ நீங்கள் அறிவீர்கள், நமக்கு ஞானம் நிறைந்தவராகிய பாபா என்னஞானம் கொடுத்தாரோ, அது யாரிடமும் கிடையாது. நாம் குப்த வேஷத்தில் இருக்கிறோம். பிறகு நாம் வருங்காலத்தில் சொர்க்கத்தின் எஜமானர் ஆவோம். கர்மமோ அனைவரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மனிதர்களின் கர்மங்கள் அனைத்தும் விகர்மம் ஆகின்றன. ஏனென்றால் இராவணனின் வழிப்படி செய்கின்றனர். நாம் ஸ்ரீமத் படி கர்மம் செய்கிறோம். ஸ்ரீமத் கொடுப்பவர் பாபா.



    பாபா புரிய வைத்துள்ளார், நாம் தான் சேல்வேஷன் ஆர்மி (துயரத்திலிருந்து மீட்டெடுக்கும் படை) மூழ்கி விட்ட படகை மீட்டெடுத்து யார் அக்கரை சேர்க்கின்றனரோ, அவர்கள் தாம் சேல்வேஷன் ஆர்மி எனச் சொல்லப் படுகின்றனர். துக்கத்திலிருப்பவர்களை சுகமானவராக ஆக்குகின்றனர். இப்போது நீங்கள் ஸ்ரீமத் படி அனைவரின் படகையும் அக்கரை கொண்டு சேர்க்கிறீர்கள். மகிமையோ சிவபாபாவுக்குரியது இல்லையா? நாமோ மூர்க்கர்களாக இருந்தோம். பாபாவின் வழிமுறை கிடைத்ததால் பிறகு மற்றவர்களுக்கும் அந்த வழிமுறையைக் கொடுக்கிறோம். பாபா முன்னிலையில் வந்து வழிமுறை கொடுக்கிறார். இராவணனோ எந்த ஒரு பொருளும் இல்லை, வருவதற்கு. மாயா விகாரங்களில் தள்ளி விடுகிறது. இங்கோ பாபா வழிமுறை தருகிறார். எப்படி பாடசாலையில் ஆசிரியர் பாடம் கற்றுத் தருகிறார். இராவணனோ எந்த ஒரு பொருளுமல்ல, தலை கீழானதைக் கற்பிப்பதற்கு. பாபாவோ ஞானக்கடல். இராவணனை, கடல் அல்லது ஞானம் நிறைந்தவன் எனச் சொல்ல முடியாது. நீங்கள் இப்போது ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர் ஆகி யக்ஞ சேவை செய்கிறீர்கள். நீங்கள் இராஜயோகம் மற்றும் ஞானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் யக்ஞத்தைப் படைக்கும் போது சாஸ்திரங்களையும் வைக்கின்றனர் இல்லையா? ருத்ர யக்ஞத்தைப் படைக்கின்றனர், ஆனால் ருத்ரன் எங்கே? இங்கோ ருத்ரனாகிய சிவபாபா நடைமுறையில் இருக்கிறார். நிகழ்காலத்தில் ருத்ர ஞான யக்ஞம் படைக்கப் பட்டுள்ளது. எது கடந்த காலமாக இருந்ததோ, அது இப்போது நிகழ்காலமாக உள்ளது. மனிதர்கள் கடந்த காலத்தைத் தான் நினைத்துக் கொண்டே இருக்கின்றனர் என்றால் நீங்கள் இப்போது நடைமுறையில் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த காலமாக இருந்தது தான் இப்போது நிகழ்காலமாக உள்ளது. பிறகு அது கடந்த காலமாக ஆகி விடும். இது போல் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. கலியுகமும் கடந்ததாக ஆகிப் பிறகு சத்யுகம் வரும். இப்போது சங்கமயுகம் நிகழ்காலமாக உள்ளது. எது கடந்து விட்டதோ, அதற்கு நினைவுச்சின்னம் உள்ளது. யாருக்கு ஜட நினைவுச்சின்னம் உள்ளதோ, அவர்கள் இப்போது நிகழ்காலத்தில் சைதன்யத்தில் உள்ளனர். யார் உயர்ந்த பதவி பெறுகின்றனரோ, மாலையும் அவர்களுக்காக உருவாகியுள்ளது. ருத்ர மாலை உள்ளது இல்லையா? இவையனைத்தும் ஜடச் சித்திரங்கள். நிச்சயமாக ஏதோ செய்து சென்றுள்ளனர். அதனால் தான் ருத்ர மாலை எனச் சொல்கின்றனர் இல்லையா? நீங்கள் சைதன்யத்தில் சிவபாபாவின் மாலையாக நம்பர்வார் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு யோகா செய்கிறீர்களோ, அவ்வளவு அருகில் சென்று ருத்ரனின் கழுத்து மாலை ஆவீர்கள். இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். இது போன்று தனக்குத் தானே உரையாடல் செய்ய வேண்டும். உங்களுக்கோ ஞானம் உள்ளது. உங்களுக்கு உள்ளுக்குள் இது ஓடிக் கொண்டே உள்ளது -- நாம் அசலில் சிவபாபாவின் குழந்தைகள். நாம் உலகத்திற்கு எஜமானர் ஆவோம். பிறகு சக்கரத்தில் வருவோம். இது சுயதரிசனச் சக்கரம் எனச் சொல்லப் படுகின்றது. அநேக மனிதர்கள் கேட்கின்றனர், நீங்கள் மற்றவர்களை ஏன் நிந்தனை செய்கிறீர்கள்? சொல்லுங்கள், பகவான் வாக்கு என எழுதப் பட்டுள்ளது, மற்றப்படி நாங்கள் யாரையும் நிந்தனை செய்வதில்லை. நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. ஸ்ரீமத் படி ஒவ்வொரு கர்மத்தையும் சிறப்புமிக்கதாகச் செய்ய வேண்டும். அனைவரின் மூழ்கி விட்ட படகினை ஸ்ரீமத் படி அக்கரை கொண்டு சேர்க்க வேண்டும். துக்கத்தில் இருப்பவர்களுக்கு சுகம் கொடுக்க வேண்டும்.



    2. உள்ளுக்குள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே ருத்ர மாலையில் அருகில் வருவதற்காக நினைவில் இருக்க வேண்டும். ஞான சிந்தனை செய்ய வேண்டும். தனக்குத் தான் ஆன்மிக உரையாடல் அவசியம் செய்ய வேண்டும்.



    வரதானம்:

    யாரிடமிருந்தும் விலகியிருப்பதற்கு பதிலாக அனைவருக்கும் ஆதரவாக ஆகக் கூடிய விஷ்வகல்யாண்காரி ஆகுக.



    முழுக் கல்பத்திலும் பிரம்மா பாபா மற்றும் ஈஸ்வரிய பரிவாரத்தின் சம்மந்தம்-தொடர்பில் வரக்கூடிய நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள். நீங்கள் விலகி இருப்பவர்கள் அல்ல. ஆனால் உலகத்திற்கு ஆதரவாக ஆகக் கூடிய விஷ்வ கல்யாண்காரி ஆத்மாக்கள். பரிவாரத்தின் அழியாத அன்பினுடைய நூலின் இடையிலிருந்து வெளியில் வர முடியாது. அதனால் ஒரு போதும் எந்த விசயத்திலும், எந்த இடத்திலிருந்தும், எந்த சேவையில் இருந்தும், எந்தத் துணையிடமிருந்தும் விலகித் தனது மன நிலையை நன்றாக அமைத்துக் கொள்வதற்கான சங்கல்பம் செய்யக் கூடாது. இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் எங்கேயும் நிலைத்திருக்க முடியாது.



    சுலோகன்:

    கர்மபோகத்தை வர்ணனை செய்வதற்குப் பதிலாக கர்மயோகத்தின் நிலைப்பாட்டை வர்ணனை செய்யுங்கள்.




    ***OM SHANTI***


    No comments

    Say Om Shanti to all BKs