BK Murli 25 May 2018Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 May 2018Tamil


        25.05.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


       

        இனிமையான குழந்தைகளே, இரவில் விழித்திருந்து மிக அன்பான பாபாவை நினைவு செய்யுங்கள், ஆத்ம அபிமானி ஆகுங்கள். பாபாவுக்குச் சமமாக நிரகங்காரி ஆக வேண்டும் என்று ஸ்ரீமத் சொல்கிறது.

       

        கேள்வி:

        சிவபாபாவின் கூடவே பிரம்மாவின் வழியும் மிகப் புகழ்பெற்றது. ஏன்?

       

        பதில்:

        ஏனெனில் பிரம்மா பாபா சிவபாபாவினுடைய ஒரே ஒரு மிக இனிமையான குழந்தை ஆவார். இவருக்கு இது தன்னுடைய வழி என்ற அகங்காரம் இல்லை. எப்போதும் சொல்கிறார் - 'நீங்கள் எப்போதும் பாபாவினுடைய ஸ்ரீமத் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும், இதில் தான் உங்கள் நன்மை உள்ளது. பாருங்கள் ! பாபா எவ்வளவு நிரகங்காரியாக இருக்கிறார். வந்தே மாதரம் என்று மாதர்களைச் சொல்கிறார். மாதர்கள் ஞான கங்கைகள், சக்தி சேனைகள், இவர்களை முன்னால் வைக்க வேண்டும், மதிப்பு கொடுக்க வேண்டும். இதில் தேக அபிமானம் வரக் கூடாது'.

       

        பாடல்:

        யார் தலைவனுடன் கூட இருக்கின்றார்களோ............

       

        ஓம் சாந்தி.

        பாடலின் முதல் வரியை குழந்தைகள் கேட்டீர்கள். யார் தலைவனுடன் கூட இருக்கின்றார் களோ....... என்று சொல்கிறார்கள். ஆனால் கூடவே சேர்ந்திருப்பதற்கான கேள்வி கூட எழுவதில்லை. யார் பாபாவினுடையவர்கள் ஆகியிருக்கின்றார்களோ, அவர்கள் கூடவே தான் இருக்கிறார்கள். யார் பாபா வினுடையவர்கள் ஆகின்றார்களோ, அவர்களே பிராமணர்கள், அவர்களுக்கு எங்கே இருந்தாலும் ஞான மழை பொழிகிறது. யார் சிவபாபா வினுடைய பேரன் பேத்திகளாகி, பாபா நாங்கள் சதா தூய்மையாக இருப்போம், ஞான அமிர்தம் பருகுவோம் என்ற உறுதிமொழி எடுக்கின்றார்களோ, அவர்களுக்குத் தான் ஞான மழை பொழிகிறது. அமிர்தம் ஒன்றும் தண்ணீர் அல்ல, விஷத்தோடு ஒப்பிடும்போது ஞானத்தை அமிர்தம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் பாண்டவ சம்பிரதாயத்தினர் ஆவீர்கள். எதையும் செய்யத் துணிந்தவர்கள்....... என்று யாதவ, கௌரவ சம்பிரதாயத்தினருக்கான புகழ் பாடப்பட்டுள்ளதல்லவா! பாண்டவர்களாகிய உங்கள் மேல் ஞான அமிர்தத்தின் மழை பொழிகிறது. மற்றபடி கௌரவர்கள் யாதவர்கள் மீது ஞான அமிர்தத்தின் மழை பொழிவதில்லை. கௌரவர்கள் யாதவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் மற்றும் பாண்டவர்கள் மிகக் குறைவானவர்களே என்பதும் குழந்தைகளுக்குத் தெரியும். பாடப்படுகிறது - இராமர் சென்றார், இராவணன் சென்றார்.... இராவணனுடைய சம்பிரதாயத்தினர் அதிகமானோர் உள்ளனர். இராமருடைய சம்பிரதாயத்தினர் பாண்டவர்கள் மிகக் குறைவானவர்களே ஆவர். இது ஸ்ரீமத்படி நடக்கக் கூடிய பாண்டவ அரசாங்கம் ஆகும். அதாவது பகவானுடைய அரசாங்கம் ஆகும். ஆனால் மறைமுகமானது. நாம் ஸ்ரீமத்படி நடந்து பாரதம் என்ற படகை கரை சேர்க்கின்றோம் (துன்பத்திலிருந்து விடுவிக்கின்றோம்) என்று உங்களுக்குத் தெரியும். யார் ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ அவர்கள் தன்னுடைய படகை கரை சேர்க்கின்றார்கள். யாதவர்கள் மற்றும் கௌரவர்களிடம் எத்தனை மாளிகைகள் இருக்கின்றன! குழந்தைகளாகிய உங்களிடம் ஒன்றும் இல்லை. மூன்றடி நிலம் கூட உங்களுடையது இல்லை. அனைத்தும் அவர்களுடையது. யாருக்கு மூன்றடி நிலம் கூட கிடைப்பதில்லையோ, அவர்கள் வெற்றி அடைந்தனர் மேலும் உலகத்தின் எஜமானர்கள் ஆனார்கள் என்று கூட பாடப்பட்டுள்ளது. பாண்டவ சக்தி சேனை மறைமுகமாக (குப்தமாக) உள்ளது. சாஸ்திரத்தில் கூட காட்டுகின்றனர் – சூதாட்டம் ஆடினார்கள், பாண்டவர்களின் இராஜ்யமாக இருந்தது, பிறகு சூதாட்டத்தில் தோற்றனர். இப்போது இராஜ்யமும் கிடையாது, சூதாட்டத்தின் விசயமும் கிடையாது. இவையனைத்தும் பொய்யானது. நீங்கள் உண்மையில் பாண்டவர்கள். சிவபாபா ஆன்மீக வழிகாட்டியாவார். குழந்தைகளுக்கு ஆன்மீக யாத்திரையை கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார். இந்த பிரம்மா உடல் மூலம் ஸ்ரீமத் கொடுக்கின்றார். எப்படி சிவபாவினுடைய ஸ்ரீமத் பாடப்பட்டுள்ளதோ, அதுபோல் பிரம்மாவுக்கும் பாடப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் சிவபாபாவினுடைய ஒரே ஒரு இனிமையான குழந்தை ஆவார். இவர் மூலமாக எத்தனை வாய்வம்சாவழியினர் படைக்கப் படுகின்றனர். தூய்மையின் கங்கணத்தைக் கட்டி சொல்கிறார் - எந்தளவு என்னுடைய வழிப்படி நடப்பீர்களோ, அந்தளவு மிக அன்பானவர் ஆவீர்கள். உங்களுடைய வாழ்க்கை வைரத்தைப் போன்றதாகிவிடும். சிவபாபா சொல்கிறார் - இவருடைய (பிரம்மாவினுடைய) மற்றும் உங்களுடைய தொடர்பு என் கூட மட்டும் தான். வைரத்தைப் போன்ற வாழ்க்கை இப்போது உங்களுக்குக் கிடைக்கிறது. ஆகையினால் இப்போது ஆத்ம அபிமானி ஆகுங்கள். எந்தளவு சிவபாபாவை நினைவு செய்வீர்களோ, அந்தளவு ஆத்ம அபிமானி ஆவீர்கள். அப்போது மாயை போர் தொடுக்காது.

       

        பாப்தாதாவின் பார்வை எப்போதும் குழந்தைகள் மீது உள்ளது. ஒருவேளை குழந்தைகள் சட்ட விரோதமாக நடந்தால், பாபாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். அப்போது இப்படிப்பட்ட காரியம் செய்யக்கூடாது என்ற படிப்பினை கொடுக்கப்படுகிறது. பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்களை 'சத்குருவுக்கு நிந்தனை செய்வோருக்கு இருக்க இடம் கூட கிடைக்காது' என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட எந்த தலைகீழான காரியமும் செய்யக்கூடாது. எந்தளவு பாபாவை நினைவு செய்கின்றோமோ, அந்தளவு பாவகர்மங்கள் விநாசமாகும் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நினைவில் இருக்கக்கூடியவர்களைத் தான் ஆத்ம அபிமானி என்று சொல்லப்படுகிறது. தேக அபிமானத்தில் வருவதால் மாயையுடன் மிக ஜோராக சண்டை நடக்கிறது. குறிக்கோள் மிக உயர்ந்தது. ஸ்காலர்ஷிப் கூட கிடைக்கிறது. எத்தனை பிராமணர்கள் உருவாகின்றார்கள்! 33 கோடி தேவர்கள் என்று பாடப்படுகிறது. யார் ஆத்ம அபிமானி ஆகின்றார்களோ, அவர்களே வெற்றி மாலை யில் வருகின்றார்கள். தேக அபிமானி ஆவது என்பது மாயையுடன் சண்டை போடுவதாகும். ஆத்ம அபிமானி ஆவது என்பது பாபாவினுடையவர் ஆவதாகும். இது மிக சூட்சுமமான விசயம் ஆகும். முயற்சி செய்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர் தந்தையாகவும் இருக்கிறார், பிரியதர்ஷனாகவும் இருக்கிறார். அளவு கடந்த சுகத்தைத் தரக் கூடியவர் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொல்கிறார். நீங்கள் ஸ்ரீமத்படி மட்டும் நடந்தால் போதும். ஸ்ரீமத் சொல்கிறது - ஆத்ம அபிமானி பவ. தேக அபிமானம் உங்களுடைய படகை மூழ்கச் செய்து விட்டது. மாயை உங்களை தேக அபிமானி ஆக்குகின்றது. ஆன்மீகத் தந்தையை அனைவரும் மறந்து விட்டனர். இப்போது பாபா வந்து 'நீங்கள் உங்களை அசரீரி ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள்' என்ற அறிமுகத்தைக் கொடுக்கின்றார். என்னுடையது சிவபாபா மற்றும் ஆஸ்தி (சொர்க்கத்தின் இராஜ்யம்) அவ்வளவு தான். தேக அபிமானத்தில் வந்து என்னுடையது என்று சொன்னால் சொர்க்கத்தின் இராஜ்யத்தைப் பெற முடியாது. நாம் ஆத்மா—என்பதை உறுதியாக நிச்சயம் செய்து கொள்ளுங்கள். இந்த ஆத்மா தான் பரமாத்மா ஆகிறது என்ற தவிடு புத்தியில் இருந்து நீக்கி விடுங்கள். இப்போது ஆத்ம-அபிமானியாக ஆகுங்கள். பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய துக்கம் போய்விடும். ஸ்ரீமத்படி நடங்கள். ஆத்ம-அபிமானியாக ஆகவில்லை என்றால் மாயை படகை மூழ்கடித்து விடும். இப்படி நிறைய பேரை மாயை மூழ்கச் செய்திருக்கிறது, ஏனென்றால் ஸ்ரீமத்படி நடப்பதில்லை. யுத்த மைதானமாக இருக்கிறது. நீங்கள் எந்த விஷயத்திலும் தோல்வி அடையக் கூடாது. காமம் எனும் பூதம் ஒரேயடியாக துண்டு-துண்டாக்கி விடுகிறது. இரண்டாவது கோபம் எனும் பூதமாகும். கோபத்தினால் ஒருவர் மற்றவரை கொலை செய்து அழித்துவிடு கிறார்கள். யாதவர்களின் கோபம் அதிகரிக்கும். ஒரேயடியாக சாத்தானாகி விடுவார்கள். கோபம் கூட மிகப்பெரிய எதிரியாகும். காமத்தை வெல்லவில்லை என்றால் தூய்மையான உலகத்திற்கு எஜமானனாக ஆக முடியாது. கோபம் எனும் எதிரி கூட அப்படிப்பட்டதாகும், அது தனக்கும் மேலும் மற்றவர்களுக்கும் கூட துக்கம் கொடுக்கிறது. இது கூட விதியாகும். இப்போது யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள்? இதை நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். இது பாண்டவ அரசாங்கமாகும். இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள், பாண்டவர் களின் இராஜ்யம் இல்லை. மூன்றடி நிலம் கூட கிடைக்கவில்லை. அவர்களுக்கு பாருங்கள் எவ்வளவு ஆடம்பரம் இருக்கிறது! குழந்தைகளாகிய உங்களில் கூட நாராயண போதையில் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே இருக்கிறீர்கள். அனைவரிடத்திலும் போதை இருக்கிறது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தேக-அபிமானத்தில் வருவதினால் பெரிய இழப்பு ஏற்படுகிறது. ஆகவே பாபா புரிய வைக்கிறார், எப்போதும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இந்த பிரம்மா ஞானம் கொடுக்கிறார், என்று ஒருபோதும் புரிந்து கொள்ளாதீர்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று புரிய வைக்கிறார். என்னிடம் யோகம் ஈடுபடுத்துங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். இந்த பிரம்மாவும் கூட என்னிடத்தில் யோகம் ஈடுபடுத்துகின்றார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நான் உதவி செய்து கொண்டே இருப்பேன். தேக-அபிமானிகளாக ஆவதின் மூலம் மாயை சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது. பிறகு ஒருவர் மற்றவருக்கு துக்கம் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். இதிலும் கூட இரண்டு பெரிய எதிரிகள் இருக்கிறார்கள். வரிசைகிரமம் இருக்கிறது அல்லவா! காமம்-கோபம் வெளிப்படையாக தெரியக் கூடிய விகாரங்களாகும். மோகம்-லோபம் போன்றவை மறைமுகமானவைகளாகும். ஆக இந்த பூதங்களின் மீது வெற்றி அடைய வேண்டும்.

       

        இப்போது உங்களுக்கு மூன்றடி நிலம் கூட கிடைக்கவில்லை, பிறகு நான் உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றேன், என்று பாபா கூறுகின்றார். தந்தைக்கு, குழந்தை எப்போதும் தன்னுடைய பெயர் சொல்ல வேண்டும் என்று மனம் விரும்புகிறது. நீங்கள் யாருடைய குழந்தை என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்ல வேண்டும். ஓ ஹோ, தந்தை குழந்தைகளை மிகவும் உயர்ந்தவர்களாக ஆக்கியுள்ளார். லௌகீக குழந்தைகள் சிலர் இஞ்சினியராகவும், சிலர் வக்கீலாகவும், சிலர் இன்னும் என்னவாகவோ ஆகிறார்கள்--அப்போது தந்தை குஷியாகிறார். சில குழந்தைகள் தந்தையின் மரியாதையை இழக்கச் செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் தந்தையின் மரியாதையை அதிகரிக்க வேண்டும். குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் குழந்தைகள் இறப்பது நல்லது என்று தந்தை கூறுவார். இந்த தந்தை கூட, நீங்கள் காமம் நிறைந்தவர்களாக, கோபக்காரர்களாக ஆகி ஈஸ்வரிய குலத்தை களங்கப்படுத்துகிறீர்கள் என்று கூறுவார். பாபாவிடமிருந்து முழுமையான ஆஸ்தியை அடைய வேண்டும். இந்த மம்மா-பாபா முதல் நம்பரில் இலஷ்மி-நாராயணன் ஆவதை பார்க்கிறீர்கள். ஆக ஏன் நாம் அவர்களுடைய சிம்மாசனத்தை அடையக்கூடாது? உண்மையில் நீங்கள் தாய்-தந்தையரின் சிம்மாசனத்தை வெற்றியடைகிறீர்கள் அல்லவா! குழந்தைகள் சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் என்றால் அவர்கள் கீழே வந்து விடுவார்கள். இப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இராஜ்யத்தை அடையுங்கள் என்று பாபா கூறுகின்றார். பிரஜையாக செல்லக் கூடாது. நாராயண போதை இருக்க வேண்டும். பிரஜைகளிலும் நிறைய செல்வந்தர்கள் இருப்பார்கள், இருந்தாலும் பிரஜை என்று தான் சொல்லப்படுவார்கள் அல்லவா! இராஜாக்களை விடவும் பிரஜைகளில் செல்வந்தர்கள் இருப்பார்கள். இந்த சமயத்தில் பாருங்கள் அரசாங்கம் எதுவும் இல்லாததாக இருக்கிறது. கடன் வாங்குகிறார்கள் என்றால் பிரஜைகள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் அல்லவா! பாபா புரியவைக்கின்றார், உங்களுக்குத் தெரியும் பாரதத்தில் இந்த இலஷ்மி-நாராயணனின் இராஜ்யம் இருந்தது, இப்போது மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பாபாவின் ஸ்ரீமத்படி நடப்பதின் மூலம் துன்பம் விலகி விடுகிறது. உயர்ந்தவர்களாக ஆவீர்கள். இல்லையென்றால் மாயை சாப்பிட்டுவிடும். நிறைய பேர்களை சாப்பிட்டு விட்டது. இங்கிருந்து சென்று விட்டார்கள், ஆனால் இலட்சாதிபதி ஆகிவிட்டார்கள். காய்கறி அனுப்புபவர்கள் கூட கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். பாபாவிடம் வந்து சொல்கிறார்கள், பாபா இப்போது நிறைய பைசா ஆகிவிட்டது. உங்கள் மீது நிறைய சுமை இருக்கிறது, நீங்கள் சிவபாபாவிடமிருந்து நிறைய பாலனை எடுத்துள்ளீர்கள், என்று பாபா கூறுகிறார். கடனாகிவிட்டது அல்லவா! எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆக அவர்களும் சுமையை இறக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறார்கள். இப்படி நிறைய பேர் சந்திக்கிறார்கள். கராச்சியில் குழந்தைகளாகிய நீங்கள் வந்து விட்டீர்கள். ஏதாவது கொண்டு வந்தீர்களா என்ன? எதுவும் இல்லை. சிவபாபாவின் பொக்கிஷத்தின் மூலம் உங்களுடைய பரிபாலனை நடந்தது. இன்னும் யார்-யார் சிவபாபாவிற்கு பலியானார்களோ, அவர்களின் மூலம் குழந்தைகளாகிய உங்களுடைய வளர்ப்பு நடந்தது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிடுவார்கள் என்று இந்த பாபாவிற்குத் தெரியுமா என்ன? சிவபாபா அவருடைய புத்தியில் போட்டார், பிறகு பட்டி உருவாகியது, அனைவரும் ஓடி வந்துவிட்டார்கள். ஆக பரிபாலனைக்கு கூட யாராவது பலியாக வேண்டும். பிறகு அவர்களிலிருந்து நிறைய பேர் ஓடி விட்டார்கள். மாயை தோல்வி அடைய வைத்து விட்டது. மாயையும் குறைந்த சக்தியுடையதா என்ன? இப்போது பாபாவின் நினைவு மூலம் மாயை வெற்றி அடைய வேண்டும். யோகம் என்ற வார்த்தையை சொல்லாதீர்கள். நிறைய குழந்தைகள் யோகத்தில் அமர்த்துங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் ஏற்பட்டு விட்டால், பிறகு நடக்கும் போதும் சுற்றும் போதும் நினைவு செய்ய இயலாது. புதியவர்களுக்கு கூட யோகத்தில் அமர கற்றுக் கொடுக்கக் கூடாது. புதியவர்களை உங்களுக்கு முன்னால் அமர்த்தினீர்கள் என்றால், அவர்கள் பெயர் ரூபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படித் தான் அனுபவம் சொல்கிறது, ஆகையினால் தான் தடை சொல்லப்படுகிறது. தாய்-தந்தையரை ஒரு இடத்தில் அமர்ந்து நினைவு செய்வார்களா என்ன? நீங்கள் எழும்போதும் அமரும்போதும், சேவை செய்து கொண்டே பாபாவை நினைவு செய்யுங்கள். யார் பாபாவின் செல்லங்களாக இருக்கிறார்களோ, அவர்கள் இரவில் எழுந்து கூட நினைவு செய்து கொண்டிருப்பார்கள். யார் மூலமாக உலகத்தின் எஜமானர்களாக ஆகின்றோமோ, அப்படிப்பட்ட மிகவும் அன்பான பாபாவை ஏன் நினைவு செய்யக் கூடாது!

       

        பரலௌகீக தந்தையிடமிருந்து அளவற்ற சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இப்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், உழைக்கிறீர்கள் பிறகு பிறவி-பிறவியாக ஈஸ்வரிய பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். அங்கே சத்யுகத்தில் நீங்கள் அப்படிப்பட்ட கர்மங்கள் செய்வதால் இராஜ்ஜியம் கிடைக்கிறது என்பது கிடையாது. இங்கே செய்வதின் முயற்சியின் மூலம் தான் பலனை அடைகிறீர்கள். மிகப்பெரிய பதவியாகும். அப்படி நிறைய பேர் வருகிறார்கள், பிறகு ஆச்சரியமாக கேட்பார்கள், மற்றவர்களுக்கும் சொல்வார்கள், பிறகு வெளியே சென்று விடுகிறார்கள். நிறைய கிளை நிலையங்களையும் திறப்பார்கள், பிறகு சென்று விடுகிறார்கள், கீழே விழுந்து விடுகிறார்கள்.......... சிலர் சென்டர் திறந்து விட்டும் கூட மெது-மெதுவாக கீழே விழுந்து விடுகிறார்கள். அதிசயமான மாயை அல்லவா! மாயை உடனை மூக்கை பிடித்துக் கொள்கிறது. ஆகையினால் தான் பாபா நிரந்தரமாக நினைவு செய்யச் சொல்கிறார். சிவபாபா புரிய வைக்கின்றார், என்று புரிந்து கொள்ளுங்கள். இவரை விட மம்மா வேகமாக இருக்கிறார். பாபா நிராகாரமானவர், அகங்காரமற்றவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்களும், நாம் நிராகார ஆத்மாக்கள், அகங்காரம் இல்லாதவர்களாக ஆகவேண்டும், என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஆஸ்தியை அடைவீர்கள். தேக-அபிமானம் வரக்கூடாது. மிகவும் இனிமையானவர் களாக ஆக வேண்டும். அங்கே மாயை இருப்பதில்லை. ஆகவே ஏன் பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொள்ளக் கூடாது! பாபாவின் வலது கரமாகி விட வேண்டும். அப்படி யார் ஆகிறார்கள்? யார் சென்டர் உருவாக்குகிறார்களோ அவர்கள். அதிசயங்கள் செய்கிறார்களோ, நிறைய பேர்களுக்கு நன்மை செய்கிறார்களோ அவர்கள். சிலர் சென்டரை உருவாக்கி விட்டு சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு கூட பலன் கிடைத்து விடுகிறது. ஒரு பக்கம் சேமிப்பு, மறுபுறம் இல்லாமல் ஆகி விடுகிறது. இதை பாபா தெரிந்துள்ளார். பிரம்மாவும் தெரிந்து கொள்ள முடியும். இந்த ஒருவர் தான் தாய் தந்தைக்கு உதவக் கூடிய குழந்தையாக இருக்கிறார். நீங்கள் அனைவரும் பேரன் பேத்திகள். மம்மா நம்பர் ஒன்றில் செல்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா இரண்டாம் நம்பரில் வருகிறார். ஆகவே மாதர்களுக்கு நிறைய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். பாபா வந்தே மாதரம் என்று கூறுகிறார். ஆக குழந்தைகளும் கூட வந்தே மாதரம் செய்ய வேண்டும். தாய் இல்லாமல் கடைத்தேற (முன்னேற) முடியாது. உண்மையில் அனைவரும் சீதைகள். அனைவரும் பிரிய தரிசினிகள். ஒரு பிரியதரிசனுக்கு அல்லது தந்தைக்கு அனைவரும் குழந்தைகள். பாபா அவரே வந்தே மாதரம், என்று சொல்கிறார். நான் எப்படி கர்மம் செய்கிறேனோ, என்னைப் பார்த்து குழந்தைகளும் அப்படி செய்வார்கள். ஆக மாதர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் மீது நிறைய கொடுமைகள் நடக்கிறது. யாராவது தடையை ஏற்படுத்தினாலும் கூட மாதர்கள் பாவம் கட்டுபட்டு விடுகிறார்கள். பாவத்தின் குடம் அப்படி நிரம்பி விடுகிறது, அசுரர்கள் அடிக்கிறார்கள் என்றால் பாவாத்மாக்களாக ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் அனைத்தும் நாடகத்தின் படிதான் நடக்கிறது, இதை யாரும் அழிக்க முடியாது. கல்பத்திற்கு முன்பு போலவே அனைவரும் அவரவருடைய ஆஸ்தியை அடையக் கூடியவர்களாக இருக்கிறார்கள். யார் நல்ல-நல்ல உதவியாளர்களாக இருக்கிறார்கள், என்ற காட்சி ஏற்படுகிறது. நான் வள்ளலாக இருக்கிறேன், நான் எதையும் வாங்குவதில்லை, என்று சிவபாபா கூறுகின்றார். ஒருவேளை நான் கொடுக்கிறேன் என்ற சிந்தனை வருகிறது, அகங்காரம் வந்தது என்றால், அவர்கள் இறந்தார்கள். மதிப்பற்றதைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக எவ்வளவு அடைகிறீர்கள்! பாபா எப்போதுமே வள்ளல் ஆவார். நான் சிவபாபாவிற்கு கொடுக்கிறேன், என்று ஒரு போதும் புத்தியில் வரக்கூடாது. நான் ஒரு பைசா கொடுத்து விட்டு இலட்சம் அடைகிறேன், 21 பிறவிகளுக்கு இராஜ்ஜிய பாக்கியம் அடைகிறேன். பாபா சத்கதியை வழங்கும் வள்ளல், பையை நிரப்பக் கூடியவராக இருக்கிறார். மறைமுகமான தானம் செய்ய வேண்டும், பாபா கூட மறைமுகமாக இருக்கிறார். நல்லது.

       

        இனிமையிலும் இனிமையான, காணாமல் போய் மீணடும் தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

       

        தாரணைக்கான முக்கிய சாரம்:

        (1) ஆத்ம அபிமானி ஆகி மாயையின் மீது அவசியம் வெற்றி அடைய வேண்டும். இரவில் கூட விழித்து மிகவும் அன்பான தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

       

        (2) பாபாவிற்கு சமமாக நிராகாரியாகவும், அகங்காரம் இல்லாதவர்களாகவும் ஆக வேண்டும். சிவபாபாவிற்கு கொடுக்கிறேன் என்ற இந்த எண்ணம் கூட வரக்கூடாது.

       

        வரதானம் :

        அலௌகீக முறையின் கொடுக்கல், வாங்கல் மூலமாக சதா விசேஷத் தன்மை நிறைந்தவராகக் கூடிய பரந்தமன முள்ளவர் ஆகுக !

         


        எப்படி ஏதாவது திருவிழாவிற்குச் சென்றால் பைசா கொடுத்து ஏதேனும் பொருளை வாங்குகிறீர்கள். வாங்குவதற்கு முன் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்த ஆன்மீகத் திருவிழாவிலும் பாபாவிடமிருந்தோ அல்லது ஒருவருக்கொருவரோ ஏதேனும் வாங்குகிறீர்கள், அதாவது தனக்குள் தாரணை செய்கிறீர்கள் எப்போது ஏதேனும் குணம் அல்லது விசேஷத் தன்மையை தாரணை செய்கிறீர்கள் என்றால் சாதாரண தன்மை தானாகவே முடிந்து போய் விடும். குணங்களை தாரணை செய்வதனால் பலவீனங்கள் தானாகவே முடிந்து போய்விடும். ஆகையால் இதுவே கொடுப்பதாகி விடுகிறது. ஒவ்வொருவரையும் அவ்வாறு கொடுக்கல், வாங்கல் செய்வதில் பரந்தமனமுள்ளவர் ஆகுங்கள். அப்போது விசேஷத் தன்மைகளால் நிறைந்தவர் ஆகிவிடுவீர்கள்.

       

        சுலோகன் :

        தனது விசேஷத் தன்மைகளைப் பயன்படுத்துங்கள் அப்போது ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றத்தின் அனுபவம் ஆகும்.

       



    ***om shanti***

    No comments

    Say Om Shanti to all BKs