BK Murli Tamil 22 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 22 June 2018

        22.06.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


        இனிமையான குழந்தைகளே! இந்தப் பழைய உலகம், பழைய நாடக மேடையிலிருந்து இப்போது மனதை விலக்கி விடுங்கள், நீங்கள் பாபாவுடன் திரும்பிச் செல்ல வேண்டும். எனவே வீட்டை நினைவு செய்யுங்கள்.

        

        கேள்வி:

        தன்னுடைய நிலையை நன்றாக வைப்பதற்கு, எந்த விசயத்தின் மீது மிகுந்த கவனம் வைக்க வேண்டும்?

        

        பதில்:


        உணவின் மீது மிகுந்த கவனம் வைக்க வேண்டும். புத்திக்கூர்மையுள்ள (நங்ய்ள்ண்க்ஷப்ங்) குழந்தைகள் தன் கையால் யோகத்தில் இருந்து உணவு சமைப்பார்கள் மற்றும் சாப்பிடுவார்கள். ஒருவேளை யாரேனும் பாபாவின் நினைவில் இருந்து, அன்புடன் அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டால், தன்னுடைய நிலையை மிகவும் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். பாபாவின் நினைவில் இருந்து உணவு சமைத்தால், பாபா கூட அதன் வாசனை எடுப்பார். சேவாதாரி குழந்தைகள் மிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விதமான சேவையையும் தன் கையால் செய்ய வேண்டும்.

        

        பாடல்:

        எனக்கு உதவி அளிப்பவரே......

        

        ஓம் சாந்தி :

        குழந்தைகளுக்கு பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். குழந்தைகளுக்குத் தெரியும்--நாம் ஆத்மாக்கள் பரம்பிதா பரமாத்மா தந்தையிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். முன்பு சத்சங்கங்களில் நீங்கள் இதுபோல, "நாம் ஆத்மாக்கள் பரமபிதா பரமாத்மாவிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று புரிந்து கொள்ளவில்லை. இங்கே குழந்தைகள் பாபாவுக்கு முன்பும் பாபா குழந்தைகளுக்கு முன்பும் இருக்கின்றனர். பாபா நிராகாரமானவர் மற்றும் ஆத்மாவும் நிராகாரமானதல்லவா! எத்தனை அதிகமான குழந்தைகள் இருக்கின்றனர்! இதை பாபாவைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. பாபாவுக்கு முன்னால் இருக்கும் பிராமண பிராமணிகளுக்குத் தான் பாபா வந்து புரிய வைக்கிறார். உங்களுக்குத் தெரியும், இந்த நேரம் அனைவரும் பாவ ஆத்மாக்களாக இருக்கின்றனர். இது ஒன்றும் புண்ணிய ஆத்மாக்களின் உலகம் கிடையாது. புண்ணிய ஆத்மாக்களின் உலகம் என்று சத்யுகம் தான் சொல்லப் படுகின்றது. இப்போது குழந்தைகளகிய உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது பாபா சொல்கிறார், இந்தப் பழைய உலகத்தில் தேகத்தின் கூடவே என்னவெல்லாம் உள்ளதோ, அவை அனைத்தையும் மறக்க வேண்டும். அவற்றின் மீது வைராக்கியம் வர வேண்டும். இது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் ஆகும். நீங்கள் எந்த வனத்திற்கும் போக வேண்டாம். குடும்ப விவகாரங்களில் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்தப் பழைய உலகத்தின் மீது மனதைச் செலுத்தக் கூடாது. இது கலியுகத்தின் மேடை ஆகும். இந்த மேடையில் எப்போது சத்யுகம் இருந்ததோ, அப்போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்களின் பாகம் நடந்திலிருந்தது. இப்போது இந்த மேடை பழையதாகி விட்டது. புண்ணிய ஆத்மாக்களின் உலகம் என்று சத்யுகம் சொல்லப் படுகின்றது. இப்போது நீங்கள் இந்தக் கண்கள் மூலமாக எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவையெல்லாம் பழைய பொருட்கள் தான் ஆகும். இந்த 84 பிறவிகளை முடிக்க வேண்டுமென்றால், இந்தப் பழைய உலகத்தின் மீது மனதைச் செலுத்தக் கூடாது. மனதை புதிய உலகத்தின் பக்கம் செலுத்துங்கள். இப்போது இந்தப் பழைய உடலை விட்டுவிட்டு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். பாபா நம்மை மீண்டும் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். மீண்டும் நாம் சொர்க்கத்திற்குச் சென்று நடிப்பை நடிக்க வேண்டும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே பற்றை நீக்கி விட வேண்டும். பழைய உலகம் சுடுகாடாக ஆகியே தீரும். நாடகத்தில் நடிகர்களின் நடிப்பு முடிந்து விட்டால், வீட்டின் ஞாபகம் வந்து விடுகிறது. பிராமணர்களாகிய நாம் 84 பிறவிகளின் நடிப்பை நடித்தோம் என்று உங்களுக்கும் தெரியும். 84 பிறவிச் சக்கரம் என்று தான் சொல்லப்படுகின்றது. வர்ணங்களை நினைவு செய்ய வேண்டிய தாயிருக்கிறது.

        

        சிவபாபா வந்து பூக்களைப் பார்க்கின்றார். இவருடைய ஆத்மா கூட பார்க்கின்றது, மேலும் பாபவையும் நினைவு செய்கின்றது--பாபா நமக்கு இந்த ஞானம் சொல்லி இருக்கின்றார். அவர் தான் அப்பா, சத்குரு, ஆசிரியர் ஆவார். எந்த சாஸ்திரமும் அவர் கையில் கிடையாது. குழந்தைகளும் சொல்கின்றனர், சிவபாபா சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் தந்தார், அவர் நமக்குக் சொல்லித் தருகின்றார். ஆக சத்குரு தான் நினைவுக்கு வருவார். ஆத்மாக்களின் ரூபத்தில் தந்தையின் நினைவும் வருகின்றது. முழு உலகத்தின் வரலாறு புவியியலும் நினைவுக்கு வருகின்றது. இது கூட தெரிந்திருக்கின்றீர்கள்--அங்கே ஆத்மாக்களாகிய நாம் உடையின்றி (உடலில்) இருக்கின்றோம். பாபா எப்போதும் அசரீரி தான். இப்போது நமக்கு இந்த சரீரத்தின் மூலமாக கல்வி கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் அனைவரும் ஆத்மாக்கள் ஆவோம். புண்ணிய ஆத்மா, பாவ ஆத்மா என்று சொல்லப்படுகின்றது. பாவ அல்லது புண்ணிய பரமாத்மா என்று சொல்லப் படுவதில்லை. சன்னியாசிகளைக் கூட மகான் ஆத்மா என்று சொல்கின்றார்கள். பரமாத்மா சர்வ வியாபி என்றால் மகான் பரமாத்மா என்று சொல்லப்படுவார். பரமாத்மா அமர்ந்து யக்ஞம் தவம் செய்தார் என்பது நடக்க முடியாதது. பக்தர்கள் பகவானைத் தேடுகின்றனர். இது கூட நாடகத்தில் பக்தி மார்க்கத்தின் பதிவு ஆகும். நீங்கள் மீண்டும் 21 பிறவிகள் சுகத்தை அனுபவித்து, பிறகு 63 பிறவிகள் பக்தி மார்க்கத்தின் சக்கரத்தில் வர வேண்டும். நமது பாகம் அனைவரையும் விட தனிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு அழியாத ஆத்மாவிற்கும், அழியாத பாகம் கிடைத்துள்ளது. சரீரம் முடிந்து போய் விடுகின்றது. நாம் 84 பிறவிகளின் பாகத்தினை நடித்தோம் என்று ஆத்மா சொல்கின்றது. இப்போது நாம் பாகத்தை முடித்து விட்டு உடையை விட வேண்டும், இதில் (உடல் என்ற ஆடையில்) பற்று வைக்கக் கூடாது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கின்றது. ஆத்மா படிக்கின்றது. நாங்கள் இத்தனை படித்திருக்கிறோம் என்று ஆத்மா இந்த உறுப்புகளின் மூலம் சொல்கின்றது. ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து விட்டால், இது பிணம் என்று சொல்லப்படுகின்றது. நான் அழியாதவன் (அமர்) என்று ஆத்மா சொல்கின்றது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நம்முடைய 84 பிறவிகளின் பாகம் உள்ளது என்று உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. நடிகர்கள் அனைவரும் பலதரப்பட்ட தர்மங்களைச் (மதம்) சேர்ந்தவர்கள். பாரதத்துக்கு நிறைய மகிமை இருக்கிறது.

        

        கிறிஸ்தவ மக்கள் கூட பாரதத்துக்கு மதிப்பு வைக்கின்றனர். பாரதம் தான் பழமையானது என்று புரிந்து கொள்கிறார்கள். அந்த நேரம் கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. வெறும் பேச்சளவில் பாரதம் பழமையானதாக இருந்தது என்று சொல்லி விடுகின்றனர். அவர்களுக்குத் தெரிவதில்லை. அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்களைத் தான் பகவான் பகவதி என்று சொல்கிறோம். காட் கிருஷ்ணா (ஏர்க் ந்ழ்ண்ள்ட்ய்ஹ) என்று சொல்வதில்லை, லார்டு கிருஷ்ணா (கர்ழ்க் ந்ழ்ண்ள்ட்ய்ஹ) என்று சொல்கிறார்கள். கிருஷ்ணருடைய அல்லது தேவதைகளின் மிகப் பழைய சித்திரத்தை கேட்கிறார்கள். ஏனெனில் தேவி தேவதைகள் அனைவரையும் விட பெரியவர்கள் அல்லவா! பாரதத்துக்கு நிறைய மகிமை இருக்கிறது. கீதையில் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால், மனித ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தைக்கு இந்த பாரத கண்டம் தான் பிறப்பிடம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். சிவனுடைய கோயில்கள் எங்கெங்கோ இருக்கின்றன. பதீத பாவனர் பாபா தூய்மையற்ற உலகத்துக்கு வந்து தான் அனைவரையும் தூய்மை யாக்குகின்றார். ஆக உயர்ந்தவர் ஆகிவிட்டார் அல்லவா! சிவாய நமஹ என்று மகிமை உள்ளது. நீங்கள் தாய் தந்தை, நாங்கள் உங்கள் குழந்தைகள்....நீங்கள் ஞானக்கடல்....உங்கள் வழியே தனிப்பட்டது. உங்கள் மகிமை அனைத்தையும் கடந்தது. இப்படி மகிமை பாடிவிட்டு பிறகு அவரை மறந்து விடுகின்றனர். ஆகையால் பாரதத்தின் மகிமையும் போய் விட்டது. இப்போது குழந்தைகள் வெளியே வெளி நாடுகளுக்குச் சென்றால், அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்—அனைத்து ஆத்மாக்களின் தந்தை அந்த நிராகாரமானவர் தான். நீங்கள் இறை தந்தையை அழைக்கிறீர்கள், ஆனாலும் அவர் எப்போது வருகின்றார்--இது தெரிவதில்லை. ஐரோப்பியவாசி யாதவர்கள் கூட தெரிந்துள்ளார்கள்—நாம் உருவாக்கியுள்ள இந்த ஆயுதங்கள் மூலம் கண்டிப்பாக நாம் நம்முடைய குலத்தையே அழித்துக் கொள்வோம். மகாபாரதச் சண்டை மிகப் பிரபலமானது. கண் முன்னால் மரணம் நிற்கிறது. பாரதம் பழமையானது. அதனால் அதன் உதவியாளர்களாக நிறைய பேர் உருவாகின்றனர். பாரதம் மிகுந்த செல்வம் நிறைந்ததாக இருந்தது என்று புரிந்து கொள்கின்றனர். இஸ்லாமியர்கள் வைர வைடூடிரியங்களை கொண்டு சென்று புதைக்குழிக்குள் வைத்து விட்டனர். அத்தனை பொக்கிஷங்கள் இருந்தன. பாரதத்தில் தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்று குழந்தைகளுக்குத் தெரியும். இப்போது நாம் மீண்டும் அந்த இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். யோக பலமில்லாமல் யாரும் உலகத்தின் எஜமானர் ஆக முடியாது. கிறிஸ்தவ மக்கள் ஒரே தர்மத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, தன்னுடைய குலத்தை அழித்துக் கொள்வார்கள். யாதவ குலத்தினர் ஆயுதங்கள் மூலமாக தங்களுக்குள் சண்டையிடுகின்றனர். குண்டுகள் மூலமாக முழு உலகமுமே அழிந்து விடும், நாம் இராஜ்யம் செய்ய முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இரண்டு குரங்குகள் சண்டை போடும், வெண்ணை இடைப்பட்ட நமக்குக் கிடைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பழைய உலகத்தின் மீது வைராக்கியம் வர வேண்டும், ஏனெனில் இவை அனைத்தும் அழியக்கூடியது என்று உங்களுக்குத் தெரியும். ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். சுடுகாட்டில் நினைவு செய்ய என்ன இருக்கிறது. சுடுகாடு அழிந்து, பிறகு தேவதைகளின் உலகமாகி விடும். சத்யுகத்தில் இதே பாரதத்தில் வைர வைடூரியங்களின் சுரங்கங்கள் இருந்தது. இப்போது எல்லாம் முடிந்து போய் விட்டது. எப்படி விமானங்களில் தங்கம் போன்றவைகளை கொண்டு வருகின்றனர் என்று குழந்தைகள் சாட்சாத்காரம் பார்த்திருக்கின்றனர். இந்த உலகமே புதியதாகி விடும். அங்கே எத்தனை நல்ல நல்ல பூக்கள் பழங்கள் விளைகின்றன! ஒவ்வொரு பொருளும் அங்கே நன்றாக இருக்கிறது. அழுக்காக ஆக்குகின்ற அல்லது துக்கம் கொடுக்கின்ற எந்த பொருளும் அங்கே இருப்பதே கிடையாது. எனவே அதை சொர்க்கம் என்று சொல்லப்படுகிறது.

        

        இப்போது ஒரே பிரியதர்ஷன் அனைத்து பிரியதர்ஷினிகளையும் அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். அனைவருடைய சரீரமும் இங்கே அழிந்து போய் விடும். ஹோலி போன்ற அனைத்தும் இங்கே கொண்டாடப்படும் பண்டிகைகளாகும். ஆனால் அதனுடைய மகத்துவத்தின் யதார்த்தம் யாருக்கும் தெரியாது. ரக்ஷா பந்தன் கூட கொண்டாடப்படுகின்றது. இராவணனை எரிப்பதற்கும் கூட பண்டிகை உள்ளது. பாபா புரிய வைத்துள்ளார், முழு உலகமும் இந்த நேரம் இராவணனுடைய வீடாக உள்ளது. அனைவரும் சோக வனத்தில் உள்ளனர். எத்தனை துக்கப்படுகின்றார்கள்! அனைத்திலிருந்தும் பற்றை விலக்கி விட வேண்டும். இப்போது நாம் திரும்பி வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கின்றோம். வீட்டைத் தான் நினைவு செய்ய வேண்டும். சத்யுகத்தில் சரீரத்துக்கு எப்போது வயதாகின்றதோ, அப்போது இந்தப் பழைய சரீரத்தை விடுத்து புதியதை எடுக்கின்றோம் என்று புரிந்து கொள்கின்றார்கள். இப்போது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள், நாம் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையினால் தேக அபிமானத்தை விட வேண்டும். உலகம் இந்த விசயங்களை அறிவதில்லை. ஆத்மா தான் பரமாத்மா, பரமாத்மா தான் ஆத்மா என்று சொல்லி விடுகின்றார்கள். பாபா இது பொய் என்று புரிய வைக்கின்றார். பக்தர்களே பகவான் என்றால் பிறகு பகவானை ஏன் நினைவு செய்கின்றார்கள்? பதீத பாவனன் என்று ஒரு நிராகார் தந்தை தான் பாடப்பட்டிருக்கின்றார். நான் பதீத (அழுக்கான) உலகத்துக்கு வர வேண்டியிருக்கின்றது என்று சொல்கின்றார். பிறகு இவரையும் (பிரம்மாவையும்), குழந்தைகள் உங்கள் அனைவரையும் தூய்மையாக்கு கின்றேன். முழு உலகத்தையும் தூய்மையாக்கி திரும்ப அழைத்துச் செல்கின்றேன். அங்கே பரந்தாமத்தில் அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாகத் தான் இருக்கின்றார்கள். பிறகு இங்கே சதோ, ரஜோ, தமோவைக் கடந்து கடைசியில் தூய்மையற்றவராகி விடுகின்றனர். இது அனைவருடைய கடைசிப் பிறவி ஆகும். லக்ஷ்மி நாராயணன் கூட இப்போது கடைசிப் பிறவியில் இருக்கின்றனர். பதீத பாவனன் ஒரு தந்தை மட்டும் தான். இந்த சிருஷ்டிச் சக்கரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் எளிது. மாதர்கள் கூட இந்த சக்கரத்தைப் பற்றி நன்றாகப் புரிய வைக்க முடியும். இதற்கு புத்தியில் நன்றாக புரிந்திருந்தால் போதுமானது. சித்திரத்தை வைத்துப் புரிய வைப்பது மிக எளிது. பாபாவைத் தவிர இந்த ஞானத்தை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. வேறு யாரிடமும் இந்த சித்திரம் கிடையாது. இந்த சித்திரங்களுக்கு நிறைய புகழ் ஏற்படும். பாபா சொல்கிறார், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்த மரம் மற்றும் திருமூர்த்தியின் சித்திரத்தை அனுப்புங்கள். வெளி நாட்டுக்கும் அனுப்புங்கள். இதன் மூலம் முதல் தரமான சேவை நடக்க முடியும். நேருக்கு நேர் போய் புரிய வைக்க முடியும். இது கூட ஞானம் தானே! கல்லூரிகளில் கூட இதை வைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கும் எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியல் ஞானம் கிடைக்கும். யார் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்களுக்கு அம்பு பாய்ந்து விடும். வித விதமான வழிகளை பாபா கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.

        

        குழந்தைகளுக்கு சில நேரங்களில் வேகம் வருகிறது பிறகு தணிந்து சோடா நீர் போல் ஆகிவிடுகிறார்கள். பெரிய-பெரிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த படத்தைக் கொடுங்கள். படம் சென்றால் தானே யாருக்காவது அம்பு தைக்கும். வெளிநாட்டிலுள்ள பெரிய-பெரிய மனிதர்களுக்கு இனாமாக படத்தைக் கொடுங்கள். நீங்கள் இலவசமாகக் கொடுக்கலாம் என்று எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை சொல்கிறார். ஆனால் அதற்காக இப்படி அர்த்தம் இல்லை டிராம் (ஒருவித வாகனம்) அல்லது பஸ்ஸில் யார் கிடைக்கிறார் களோ அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள் என்பது இல்லை. தகுதியையும் பார்க்க வேண்டும். இவரிடத்தில் நல்ல அதிக ஞானம் இருக்கிறது. பெரிய-பெரிய கடைகளுக்குக் கூட கொடுக்கலாம். உழைக்க வேண்டும் அல்லவா? சேவாதாரி குழந்தைகள் சேவை செய்ய முடியும். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சேவை இருக்கிறது. தாய்மார்கள் கூட வீட்டில் சேவை செய்ய வேண்டும். படத்தை எடுத்துக் கொண்டு அன்போடு அமர்ந்து புரிய வையுங்கள். சின்ன-சின்ன குழந்தைகளுக்கு படத்தை வைத்து சொல்லித்தரப் படுகிறது அல்லவா? சிலர் 4 மாத குழந்தையாக இருப்பார்கள், சிலர் 6 மாத குழந்தையாக இருப்பார்கள், சிலர் இரண்டு மாத குழந்தையாக இருப்பார்கள். இப்போது உங்களுடைய புத்தியில் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பது இருக்கிறது. இப்போது பிராமணர்களாக ஆகியுள்ளோம், பிறகு தேவதையாவோம். பிறகு சத்திரியர்களாக ஆவோம். இப்படி- இப்படியெல்லாம் தன்னுடன் பேச வேண்டும். நீங்கள் பரலௌகீக தந்தையிடம் பேசக்கூடியவர்கள். இது தான் விசார் சாகர் மந்தனம் (ஞான சிந்தனை) செய்வதாகும். எவ்வளவு சேவை செய்வீர்களோ, அவ்வளவு வளர்ச்சி கிடைக்கும். நீங்கள் இறை சேவையில் இருக்கிறீர்கள். குடும்ப விவகாரங்களை பராமரியுங்கள், எட்டு மணி நேரம் இந்த சேவையில் ஈடுபடுத்துங்கள், என்று பாபா கூறுகின்றார். உங்களுக்கு எல்லையற்ற பொக்கிஷம் கிடைக்கிறது. முழு நாளும் புத்தியில் இந்த சுயதரிசன- சக்கரம் சுற்ற வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் நினைவு வர வேண்டும். இதை ஏன் மறந்து விடுகிறீர்கள்? எவ்வளவு சிந்தனை செய்வீர்களோ அந்தளவு பாபாவின் கழுத்தின் மாலை ஆவீர்கள். பிறகு விஷ்ணுவின் கழுத்தின் மாலையாவீர்கள். அடிக்கடி குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது, இங்கே நன்றாக தாரணை ஆகும், ஏனென்றால், இங்கே எந்த நண்பர்களோ-உறவினர்கள் போன்றவர்களோ இல்லை. முழு நாளும் யார் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் தான் சேவாதாரிகள், முரளி கேட்க வேண்டும், திரும்பி படியுங்கள், குறிப்பெடுங்கள். நம்முடைய பள்ளியில் அதிகம் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் அரசாங்கம் வளர்ச்சி ஏற்படுத்தும் என்று டீச்சர் புரிந்திருக்கிறார்கள். பிராமணர்களாகிய நீங்களும் கூட அப்படி இருக்க வேண்டும். நாம் கூட்டம் கூட்டமாக தயார் செய்து பாபாவிடம் கூட்டிச் செல்ல வேண்டும். இதைத் தான் விவேகம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை யாராவது உழைக்கவில்லை என்றால் புகார் வருகிறது. ஓய்வு எடுப்பதை விட்டுவிட வேண்டும். 10 செண்டர்களைப் பராமரிக்கும் அளவிற்கு டீச்சருக்கு சுறுசுறுப்பு வேண்டும். இங்கே-அங்கே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 5-6 மணி நேர உறக்கம் போதுமானதாகும். மற்றபடி உழைக்க வேண்டும். நல்ல விவேகமுள்ள குழந்தைகள் முயற்சி செய்து போஜனம் கூட தன்னுடைய கைகளாலேயே செய்வார்கள். பாபாவை நினைவு செய்து அன்போடு அமர்ந்து போஜனம் செய்து சாப்பிட்டால் மனோநிலை மிக நன்றாக இருக்கும். தன்னுடைய கைகளினால் சமைக்க வேண்டும் என்று பாபாவும் கூட விரும்புகிறார். பாபாவை நினைவு செய்து சமைத்தால் பாபாவுக்கும் கூட வாசனை கிடைக்கும். பாபாவின் நினைவு மூலம் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுய தரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருங்கள். நல்லது.

        

        இனிமையிலும் இனிமையான காணாமல் போய் பின் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

        

        தாரணைக்கான முக்கிய சாரம்:

        (1) தனக்குத் தானே அல்லது பரலௌகீக தந்தையிடம் பேசி விசார் சாகர் மந்தனத்தில் (ஞான சிந்தனையில்) புத்தியை சுறுசுறுப்பாக வைக்க வேண்டும். சுயதரிசன சக்கரதாரியாக ஆக வேண்டும்.

        

        (2) இப்போது நாம் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம், இது சோகவனமாகும், இதன் மீதிருந்து பற்றுதலை நீக்க வேண்டும். புதிய உலகத்தின் மீது தன்னுடைய மனதை ஈடுபடுத்த வேண்டும்.

        

        வரதானம்:

        பல வகையான நெருப்பிலிருந்து தப்பித்து மற்றும் அனைவரையும் காப்பாற்றக் கூடிய உண்மையான கருணை உள்ளம் உடையவர் ஆகுக.


        

        இன்றைய மனிதர்கள் பல விதமான நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்றனர், பல வகையான துக்கம், கவலை, பிரச்சனைகள்.... இவ்வாறு வித விதமான முறையில் ஆத்மாவிற்கு அடி விழுகிறது, இந்த அக்னி உயிருடன் இருக்கும் போதே எரியும் அனுபவம் செய்விக்கிறது. ஆனால் நீங்கள் இந்த மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உயர்ந்த வாழ்க்கையில் வந்து விட்டீர்கள். நீங்கள் குளிர்ந்த கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்கள். அதீந்திரிய சுகம், அமைதியின் பிராப்திகளில் மூழ்கியிருக்கிறீர்கள். ஆக கருணையுள்ளம் உடையவர்களாக ஆகி மற்ற ஆத்மாக்களையும் பல வகையான நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள். ஒவ்வொரு தெருவிலும் ஞானத்திற்கான இடத்தை உருவாக்கி அனைவருக்கும் அடைகலம் கொடுங்கள்.

        

        சுலோகன்:

        யாருக்கு ஒரு தந்தையிடத்தில் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்களுக்கு அசரீரி ஆவது எளிதாகும்.

        

       

     

    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs