BK Murli 31 May 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 May 2016 Tamil

    31.05.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! இராவணன் உங்களை மிகவுமே வேதனைக்குள்ளாக்கியுள்ளான். இப்பொழுது பக்தர்களாகிய உங்களை ரட்சிக்கும் பகவான் உங்களுடைய வேதனையை நீக்குவதற்காக வந்துள்ளார்.



    கேள்வி:

    நல்ல குழந்தைகளின் முக்கியமான இரண்டு அடையாளங்களைக் கூறுங்கள்?



    பதில்:

    (1) நல்ல குழந்தைகள் எப்பொழுதும் தாய் தந்தையரைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமருபவர்களாக ஆவார்கள். முழுமையாக முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். (2) அவர்கள் தந்தையிடம் உண்மையான உள்ளம் கொண்டிருப்பார்கள். உண்மையான அன்புள்ளம் உடையவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத்படி நடப்பார்கள். ஒரு வேளை உள்ளுக்குள் நேர்மை இல்லை என்றால் நினைவில் இருக்க முடியாது.



    பாடல்:

    போலநாத்தை விட தனிப்பட்டவர் ...



    ஓம் சாந்தி.

    இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்த பக்தி மார்க்கத்தின் பாடலைக் கேட்டீர்கள். பக்தர்களுக்கு இந்த பாடலின் பொருள் தெரியாது. நீங்கள் பகவானின் குழந்தைகள் ஆகி உள்ளீர்கள். பகவான் பக்தர்களை ரட்சிப்பவர் ஆவார். நீங்கள் கூட பக்தர்களின் ரட்சகர்கள் ஆவீர்கள். பக்தர்களை பாதுகாக்கிறீர்கள். பக்தர்கள் மீது ஏதோ ஆபத்து இருக்கும் காரணத்தால் ரட்சிப்பதற்காக பகவானை அழைக்கிறார்கள். பக்தர்களுக்கு இராவணனினால் நிறைய துக்கம் உள்ளது. இராவண சம்பிரதாயம் துக்கங்களால் பீடிக்கப்பட்டுள்ளது. எனவே போலாநாத்தை நினைவு செய்கிறார்கள். அது இராவண சம்பிரதாயம் ஆகும். இது இராம சம்பிரதாயம் ஆகும். நம்மைக் காப்பவர் யார் என்பது பக்தர்களுக்குத் தெரியவே தெரியாது. போலாநாத் ரட்சகர் ஆவார் என்று பாடவும் செய்கிறார்கள். ஆனால் என்ன பாதுகாப்பு அளிக்கிறார் என்பதை அறியாமல் உள்ளார்கள். போலாநாத் சிவபாபா தான். கெட்டுப் போனதை சீரமைப்பவர் ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். பகவான் என்று யார் அழைக்கப்படுகிறார் என்பது உலகத்திற்கோ தெரியாது. பகவானைப் பற்றி தெரிந்திருந்தால் பின் பகவானின் படைப்பின் முதல் இடை கடை பற்றி கூட தெரிந்திருக்க வேண்டும். பகவானைப் பற்றியும் தெரியவில்லை. படைப்பைப் பற்றியும் தெரியவில்லை. எனவே இப்பேர்ப்பட்ட மனித சம்பிரதாயத்திற்கு குருடு என்றும் கூறப்படுகிறது. மறு பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு திவ்ய திருஷ்டி கிடைத்துள்ளது. இப்பொழுது உங்கள் பெயரே பிரம்மா குமார் குமாரிகள் என்பதாகும். பெயர்ப் பலகையில் கூட பிரம்மாகுமாரிகள் ஈசுவரீய விஷ்வ வித்தியாலயம் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. பிரம்மா குமாரிகள் மட்டும் இருக்க முடியாது. பிரஜாபிதா பிரம்மா ஆவார் அல்லவா? தந்தையிடம் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் இருப்பார்கள். பிரஜாபிதா பிரம்மாவிற்குத் தான் இத்தனை அதிகமான குழந்தைகள் இருக்க முடியும். எனவே இவர் எல்லையில்லாத தந்தை ஆவார் என்பதை புரிந்திருக்க வேண்டும். பிரம்மா விஷ்ணு சங்கரரைக் கூட படைப்பவர் தந்தையே ஆவார் என்பதையும் அறிந்துள்ளீர்கள். அவர் நிராகாரமானவர் என்று கூறப்படுகிறார். இவர் எல்லையில்லாத தந்தை ஆகிறார். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக படைப்பை படைக்கிறார் என்பதையும் அறிந்துள்ளீர்கள். முழு படைப்பும் இவருடையதாகும். உண்மையில் அனைத்து மனிதர்களும் சிவ வம்சத்தினர் ஆவார்கள். இப்பொழுது நீங்கள் வந்து பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகி உள்ளீர்கள். இது புதிய படைப்பாகும். பரமபிதா பரமாத்மா, பிரம்மா மூலமாகப் படைப்பை படைக்கிறார். எனவே உங்களுக்கு பிரம்மா குமார் குமாரிகள் என்று கூறப்படுகிறது. இத்தனை எல்லையில்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே அவசியம் எல்லையில்லாத ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். பிரம்மா குமார் குமாரிகளாகிய எங்களை சிவபாபா தத்து எடுத்துள்ளார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நீங்கள் என்னுடைய குழந்தைகள் ஆவீர்கள் என்று சிவபாபா கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்களும் நிராகாரமானவர்களாக இருந்தீர்கள். ஆனால் ஞானமோ சாகாரத்தில் வேண்டும். நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மா மூலமாக படைப்பு இங்கு நடக்கிறது. சிவ ஜெயந்தி கூட இங்கு கொண்டாடப்படுகிறது. இங்கு மகத தேசத்தில் தான் ஜென்மம் எடுத்துள்ளார். இந்த தேசம் மிகவும் தூய்மையான சொர்க்கமாக இருந்தது என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது இதற்கு நரகம், மகத தேசம் என்று கூறப்படுகிறது. மீண்டும் சொர்க்கம் ஆக வேண்டி உள்ளது. சிவபாபா நமக்கு மீண்டும் இராஜயோகம் கற்பித்து தூய்மையாக ஆக்குகிறார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. பதீத பாவனர், பக்தர்களின் ரட்சகர், பகவான் என்று பாடவும் செய்கிறார்கள். பக்தர்கள் தான் அழைக்கிறார்கள். பதீதமாக இருந்தும் கூட தங்களை பதீதர்கள் என்று உணர்ந்திருப்பதில்லை. நீங்கள் எல்லோருமே பதீதமானவர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பாவன உலகம் என்று சத்யுகத்திற்கும், பதீத உலகம் என்று கலியுகத்திற்கும் கூறப்படுகிறது. தந்தை உங்களுக்கு எல்லாமே சரியானதைக் கூறுகிறார். எந்த பொருளும் லட்சக்கணக்கான வருடங்களுடையதாக இருக்காது. மனிதர்கள் கோரமான இருளில் இருக்கிறார்கள். கலியுகமோ இப்பொழுது சிறிய குழந்தை என்று நினைக்கிறார்கள். மேலும் நீங்கள் சாவு எதிரிலேயே உள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். இருள் மற்றும் வெளிச்சத்தின் வர்ணனை சங்கமத்தில் தான் செய்யப்படுகிறது. இப்பொழுது நீங்கள் மிகுந்த பிரகாசத்தில் வந்துள்ளீர்கள். சத்யுகத்தில் நீங்கள் இந்த வர்ணனை செய்ய முடியாது. அங்கு இந்த ஞானமே இருக்காது. இச்சமயம் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். நீங்கள் சத்யுகத்தில் சூரியவம்ச குடும்பத்தினராக இருந்தீர்கள். பிறகு கடைசியில் வந்து, சூத்திர வம்ச குடும்பத்தினராக ஆகி உள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் பிராமண வம்சத்தினர் ஆகி உள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் சர்வோத்தம பிராமண குலத்தினராக இருக்கிறீர்கள். நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவீர்கள். இது ஈசுவரிய குலமாகும் அல்லவா? தந்தையிடம் வரும் பொழுது யாரிடம் வந்துள்ளீர்கள் என்று பாபா கேட்கிறார். பின் தந்தையிடம் வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். தந்தை இருவர் ஆவார்கள் - ஒருவர் லௌகீக தந்தை மற்றொருவர் பரலோக தந்தை. அனைத்து சாலிகிராமங்களின் தந்தை ஒரே ஒரு சிவன் ஆவார். உங்கள் புத்தியில் இது பதிகிறது. நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவோம். அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். நிராகார மானவர் ஆஸ்தியை சாகாரமானவரின் மூலமாகத் தான் அளிப்பார் அல்லவா? நான் சாதாரண உடலில் வந்து பிரவேசம் செய்கிறேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். குழந்தைகளே, ஆத்ம உணர்வில் இருப்பீர்களாக ! என்று இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார். தன்னை ஆத்மா என்று உணருங்கள். இந்த உடல் அழியக் கூடியதாகும். ஆத்மா அழியாததாகும். ஆத்மா தான் 84 பிறவிகள் எடுக்க வேண்டி உள்ளதேயன்றி தேகம் அல்ல. தேகமோ மாறிக் கொண்டே இருக்கிறது. பிறகு வேறு நண்பர்கள் உறவினர்கள் கிடைக்கிறார்கள். இப்பொழுது ஆத்மா பரமபிதா பரமாத்மா மூலமாக எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டி உள்ளது. நீங்கள் தான் கேட்டு பிறகு தாரணை செய்கிறீர்கள். சம்ஸ்காரம் உங்களது ஆத்மாவில் உள்ளது. ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் இருக்கும். அப்படியின்றி சரீரத்தின் சம்ஸ்காரம் என்று கூறமாட்டார்கள். உங்களுடைய ஆத்மாவின் சம்ஸ்காரம் தமோ பிரதானமாக உள்ளது. அதை இப்பொழுது மாற்ற வேண்டும். காயா கல்ப தரு என்று கூறப்படுகிறது. காயா (உடல்) கல்ப விருட்சத்திற்குச் சமானமாக ஆகிறது. ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். இங்கு ஆயுள் மிகக் குறைவாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிறிய ஆயுளிலேயே உட்கார்ந்தபடியே அகால மரணம் ஆகி விடுகிறது. இப்பொழுது நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். அங்கு காலன் ஒரு பொழுதும் உயிரைக் குடிக்க மாட்டான். காலம் தவறி ஒரு பொழுதும் சரீரம் விடுபடாது. இப்பொழுது இந்த சரீரம் முதுமை அடைந்துள்ளது. இதை விட்டு விட்டு புதியதை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சரீரம் விடும் பொழுது கூட வாத்தியங்களை இசைப்பார்கள். ஜன்மம் எடுக்கும் பொழுதும் கூட இசைப்பார்கள். அங்கு அழ வேண்டிய விஷயமே இருக்காது. உங்களுக்கு வண்டினுடைய உதாரணம் கூட புரிய வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிராமண பிராமணிகள் ஆவீர்கள். பிராமணி மற்றும் பிரமரி (வண்டு) - ராசி ஒத்து வருகிறது. வண்டு என்ன காரியம் செய்கிறதோ அதையே நீங்களும் செய்கிறீர்கள். அதிசயம் அல்லவா? வண்டினுடைய உதாரணம், ஆமையின் உதாரணம், பாம்பினுடையது இவை எல்லாம் சாஸ்திரங்களில் உள்ளது. சந்நியாசிகள் ஆகியோரும் இந்த உதாரணத்தை அளிக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மூலமாக இவை அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவோ பக்தி மார்க்கமாகும். கடந்து விட்டதிற்கு மகிமை பாடுவது. இதற்கு, பிறகு பின்னால் மகிமை உண்டாகும். இச்சமயத்தில் தான் தந்தை இந்த உடலுக்குள் வருகிறார். இவர் (பிரம்மாவிற்கு) பகவான் என்று கூறப்படுவதில்லை. அது பிறகு குருட்டு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இராமரை கிருஷ்ணரை பகவான் என்று நினைக்கும் அப்பேர்ப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். கிருஷ்ணரையும் இராமரையும் கூட சர்வ வியாபி என்று கூறி விடுகிறார்கள். ஒருவர் கிருஷ்ண வழியினர். ஒருவர் இராதை வழியினராக இருப்பார்கள். இராதை வழியினர் எங்கும் இராதையே இராதை என்று கூறுவார்கள். கிருஷ்ணர் வழியினர் எங்கு பார்த்தாலும் கிருஷ்ணரே கிருஷ்ணர் ! என்பார்கள். இராமரின் வழியினர் இராமரே இராமர் என்பார்கள். இராமரை கிருஷ்ணரை விட பெரியவர் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் இராமரை திரேதாவிலும், கிருஷ்ணரை துவாபரத்திலும் எடுத்துச் சென்றுள்ளார்கள். எவ்வளவு அறியாமை! இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை ஏராளமான பிரம்மாகுமார் குமாரிகள் இருக்கிறார்கள். அவசியம் எல்லையில்லாத தந்தையும் இருப்பார். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம் – எப்பொழுதாவது பிரஜாபிதா பிரம்மாவின் பெயரைக் கேட்டிருக்கிறீர்களா? தந்தை சொர்க்கத்தின் புதிய படைப்பை படைத்துள்ளார். பிரம்மா மூலமாக பிராமணர்கள் என்றும் பாடப்பட்டுள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாவின் முகவம்சாவளி ஆகாத வரை பாட்டனாரின் ஆஸ்தியை எடுக்க முடியாது. எல்லையில்லாத குழந்தைகள் எல்லையில்லாத ஆஸ்தியை தந்தையிடமிருந்து தான் எடுக்கிறார்கள். உண்மையில் எடுத்திருந்தீர்கள். உண்மையில் சொர்க்கவாசியாக இருந்தீர்கள். இப்பொழுது நரகவாசி ஆகி விட்டுள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் பிரஜாபிதா பிரம்மா மூலமாக பரமபிதா பரமாத்மா விஷ்ணுபுரி சொர்க்கத்தைப் படைத்து கொண்டிருக்கிறார். எவ்வளவு சுலபமானது. இதற்கு முன்பு உங்களுக்கு இந்த ஞானம் இருந்ததா? என்று சிவபாபா கேட்கிறார். எனக்குள் இந்த ஞானம் இருக்கவில்லை என்று இவருடைய ஆத்மா தான் கூறுகிறது. நான் கூட விஷ்ணுவின் பூசாரியாக இருந்தேன். பூஜைக்குரியவராக இருந்த நாம் தான் இப்பொழுது வந்து பூசாரி ஆகி உள்ளோம். இப்பொழுது மீண்டும் பாபா வந்து பூசாரியிலிருந்து பூஜைக்குரிய தேவதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்குள் குஷி இருக்க வேண்டும். பரமபிதா பரமாத்மா வந்து நம்மை சுவீகாரம் செய்துள்ளார். மனிதர்கள் மனிதர்களைத் தத்து எடுக்கிறார்கள் அல்லவா? நிறைய மனிதர்கள் அவ்வாறு இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று குழந்தைகள் இல்லாத பொழுது தத்து எடுக்கிறார்கள். என்னுடைய குழந்தைகள் இராவணனினுடையவராக ஆகி விட்டுள்ளார்கள் என்பதை இப்பொழுது தந்தை அறிந்துள்ளார். எனவே நான் வந்து மீண்டும் தத்து எடுக்க வேண்டியுள்ளது. பிரம்மா மூலமாக தன்னுடைய குழந்தைகளை தத்து எடுக்கிறார். இந்த தத்து எடுப்பது எவ்வளவு அதிசயமாக உள்ளது. சிவபாபா நம்மை பிரம்மா மூலமாக சுவீகாரம் செய்துள்ளார் என்பதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தியை அளிப்பதற்காக குழந்தைகளாகிய உங்களை தத்து எடுத்துள்ளேன் என்று சிவபாபா கூறுகிறார். இந்த பிரம்மாவோ அளிக்க முடியாது. இவரும் மனிதர் தானே, பிரஜாபிதா பிரம்மா. மனிதர்கள் இந்த ஞானத்தை அளிப்பதில்லை. ஞானக் கடலான நிராகார பரமபிதா பரமாத்மா தான் வந்து இந்த ஞானத்தை அளிக்கிறார். பிரம்மாவையோ அல்லது விஷ்ணுவையோ ஞானக் கடல் என்று கூறப்பட மாட்டாது. இந்த மூவருடைய மகிமையும் தனியாகும். ஞானக் கடல், பதீதபாவனர் ஒரு தந்தை ஆவார். முழு உலகத்தின் மனிதர்கள் அனைவரும் அவரை அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூட அவரை லிபரேட்டர் என்று கூறுகிறார்கள். யாரிடமிருந்து துக்கம் கிடைக்கிறதோ அவரிடமிருந்து (லிபரேட்) விடுவிக்கப்படுகிறார்கள். தந்தை கூட இங்கு வந்து இராவணனிடமிருந்து (லிபரேட்) விடுவிக்கிறார். இராவண இராஜ்யம் கூட இங்கு ஆகியுள்ளது. இங்கு தான் இராவணனை எரிக்கிறார்கள். எரித்து விட்டு பிறகு தங்கத்தின் இலங்கையை கொள்ளையடிக்கச் செல்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கோ ஒன்றுமே தெரியாது. இராவணன் என்பது என்ன பொருள் - எப்பொழுதிலிருந்து அவர் எதிரி ஆவார். இராமனுடைய சீதை திருடப்பட்டு விட்டாள் என்று நினைக்கிறார்கள். நாம் அனைவருமே சீதைகள் ஆவோம். நாம் இராவணனினுடைய சிறையில் மாட்டி இருக்கிறோம் என்று நினைப்பது இல்லை. இந்த ஞானம் யாரிடமும் இல்லை. உட்கார்ந்து கதைகளாகக் கூறுகிறார்கள். நான் தூர தேசத்தில் இருப்பவன். இந்த அந்நிய தேசத்தில் வந்துள்ளேன் என்று சிவபாபா கூறுகிறார். இது பதீதமான பழைய உலகம் ஆகும் அல்லவா? இது இராவணனின் உலகமாகும். ஹே ! பாபா வாருங்கள் ! நாங்கள் பதீதமாக ஆகி விட்டுள்ளோம் என்று அழைக்கவும் செய்கிறார்கள். நான் பாவனமாக ஆக்குவதற்காக இந்த பதீத உலகத்தில் வர வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். மேலும் நான் எந்த உடலில் வர வேண்டி இருக்கிறது என்றால், யார் முதல் நம்பரில் பாவனமாக இருந்தாரோ, யார் அழகாக (சுந்தர்) இருந்து இப்பொழுது (μயர்ம்) கருமையாக ஆகி உள்ளரோ அவர் உடலில். எவ்வளவு அதிசயமான விஷயங்கள் ! கிருஷ்ணரை μயர்ம் சுந்தர் என்று ஏன் கூறுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு கிருஷ்ணரைத் தான் பாம்பு கொத்தியதா என்ன? சத்யுகத்தில் பாம்புகள் ஆகியவை இருக்குமா என்ன? இந்த கடைசி பிறவியில் எனக்காக தூய்மை ஆகுங்கள். அப்பொழுது தூய்மையான உலகிற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். என்னை நினைவு மட்டும் செய்யுங்கள் மற்றும் பவித்திரமாக ஆகுங்கள். தந்தையை (அல்ஃப்) நினைவு செய்யுங்கள் ! அப்பொழுது (பே) அரசாட்சி உங்களுடையது ஆகும். இது சகஜ இராஜயோகம், சகஜ ராஜ்யம் ஆகும். குழந்தை பிறந்த உடனேயே ஆஸ்திக்கு உரிமையாளர் ஆகி விடுகிறார். இங்கு கூட நாம் தந்தையினுடையவராக ஆகி உள்ளோம். எனவே சொர்க்கத்தின் இராஜ்யத்திற்கு நாம் உரிமையாளர் ஆவோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இப்பொழுது சதோபிரதான நிலையிலிருந்து நீங்கள் தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். யோகம் மற்றும் ஞானத்தை கற்பிப்பதற்கு ஒரு நொடி பிடிக்கிறது. குழந்தை பிறந்த உடனேயே வாரிசு என்று நிச்சயம் செய்தார்.நீங்கள் தந்தையினுடையவர் ஆகி உள்ளீர்கள் என்றால் ராஜாங்கத்தில் ஆஸ்தி உங்களுடையது. ஆனால் எல்லோருமே ராஜா ராணி ஒன்றும் ஆக மாட்டார்கள். இது இராஜயோகமாகும். ராஜா ராணி பிரஜைகள், செல்வந்தர்கள், ஏழைகள் எல்லோருமே வேண்டும். எனவே ருத்ரமாலை கூட அமைக்கப்பட்டுள்ளது. அதை பக்தி மார்க்கத்தில் ஜபிக்கிறார்கள். நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொள்ள வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தாய் தந்தையரைப் பின்பற்றி முதன் முதலில் சூரியவம்சத்தினர், பிறகு சந்திர வம்சத்தினர் ஆவீர்கள். யார் தாய் தந்தையைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமர்கின்றவர்களாக ஆகிறார்களோ அவர்களே நல்லகுழந்தைகள். முயற்சி நிறைய செய்ய வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆனால் செய்வது இல்லை. ஸ்ரீமத்படி நடப்பவர்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்பார்கள். ஸ்ரீமத்படி தான் உங்களுக்கு பாட்டனாரிடன் ஆஸ்தி கிடைக்கிறது. பிரம்மா சொர்க்கத்தின் ஆஸ்தியை அளிக்க முடியாது. பாட்டனாரின் சம்பாத்தியத்தின் மீது பேரனுக்கு உரிமை இருக்கிறது. தந்தையின் சம்பாத்தியத்திற்கு குழந்தைகள் பங்குதாரர்களாக ஆகிறார்கள் என்றால், உரிமையாளர்கள் ஆவார்கள். இங்கு உங்களுக்கு சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது.ஞான ரத்தினங்கள் தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. பிராமணர்களாகிய நாம் தான் பிறகு தேவி தேவதை ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஜகதம்பா யார்? இவர் பிராமணியாக இருந்தார். ஞான ஞானேஷ்வரியாக இருந்தார். பிறகு இராஜ இராஜேஷ்வரி ஆகிறார் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்களும் அவ்வாறே ஆகிறீர்கள்.நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. ஆத்மாவில் இருக்கும் தமோபிரதான தன்மையின் சம்ஸ்காரத்தை நினைவின் பலத்தால் மாற்ற வேண்டும். சதோபிரதானமாக ஆக வேண்டும்.



    2. தந்தையிடமிருந்து இராஜ்யத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்றால், சதா நல்ல குழந்தையாகி ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். உண்மையான தந்தையிடம் உண்மையாக இருக்க வேண்டும். தாய் தந்தையரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். ஞான ரத்தினங்களை தானம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.



    வரதானம்:

    தனது அவ்யக்த சாந்த சொரூபத்தின் மூலமாக வாயுமண்டலத்தை அவ்யக்தமாக ஆக்கக் கூடிய சாட்சாத் மூர்த்தி ஆவீர்களாக!



    எப்படி சேவைகளுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறீர்களோ அதே போல அதிகாலை முதல் இரவு வரை நினைவு யாத்திரையில் எப்படி மற்றும் எப்பொழுதும் இருப்போம் என்ற இந்த நிகழ்ச்சி நிரலையும் அமையுங்கள். மேலும் நடு நடுவில் இரண்டு மூன்று நிமிடத்திற்கு எண்ணங்களின் போக்குவரத்தை நிறுத்தி விடுங்கள். யாராவது வ்யக்த பாவத்தில் (உடல் நினûவில்) அதிகமாகத் தென்படுகிறார் என்றால், தங்களது அவ்யக்த சாந்த ரூபத்தை அம்மாதிரி தாரணை செய்யுங்கள், அதன் மூலம் அவர் சமிக்ஞையினாலேயே (நீஙகள் சொல்லாமலேயே) புரிந்து கொண்டு விட வேண்டும். இதனால் வாயு மண்டலம் அவ்யக்தமாக இருக்கும். விந்தையான தன்மை தென்படும்.மேலும் நீங்கள் சாட்சாத்காரம் செய்விக்கும் சாட்சாத் மூர்த்தி ஆகி விடுவீர்கள்.



    சுலோகன்:

    முழுமையான சத்திய தன்மையே தூய்மையின் ஆதாரம் ஆகும்.




    ***OM SHANTI***