BK Murli 19 September 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 19 September 2016 Tamil

    19.09.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இப்போது ஆன்மீக செயல்களைச் செய்ய வேண்டும். ஆத்மா என்று புரிந்துக் கொண்டு ஒவ்வொரு செயளையும் செய்வதால், ஆத்மா நிர்விகாரியாக மாறிக் கொண்டே போகின்றது.



    கேள்வி :

    சொர்க்கத்தின் சொத்து அடைவதற்கு மற்றும் சொர்க்கத்தில் உயர்ந்த பதவி பெறுவதற்கு ஆதாரம் என்ன?



    பதில்:

    பிரம்மா குமார், பிரம்மா குமாரி சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். ஆனால் உயர்ந்த பதவிக்கு ஆதாரம் படிப்பாகும். ஒரு வேளை பாபாவின் குழந்தையாகி நன்கு படிப்பை படித்துக் கொண்டே இருந்தால், முழுமையாக தூய்மையாக மாறினால் இராஜ்ய பதவி கிடைக்கும். சிலர் முழுமையாகப் படிப்பதில்லை. கர்ம பந்தனம் இருக்கிறது, முழுமையாக தூய்மையாவதில்லை. சரீரத்தை விட்டு விட்டால் பிரஜையில் சாதாரண பதவி பெறுவார்கள்.



    ஓம் சாந்தி.

    ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இங்கே ஆன்மீகப் பணி நடக்கிறது. மற்றபடி முழு உலகத்திலும் உடல் சம்மந்த செயல் நடைபெறுகின்றன. உண்மையில் ஆத்மாக்களுக்கான பணிகள் தான் நடக்கிறது. ஆத்மா தான் இந்த உடல் மூலமாகப் படிக்கிறது, நடக்கிறது, விகர்மம் செய்கிறது. ஆகவே அழுக்கான ஆத்மா, பாவ ஆத்மா என கூறப்படுகிறது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. இச்சமயம் அனைத்து மனிதர்களும் தேக உணர்வில் இருக்கிறார்கள். நான் ஆத்மா என்று நினைப்பதற்குப் பதிலாக நான் இன்னார் என நினைக்கிறார்கள். இந்த வியாபாரம் செய்கிறேன். இன்னார் காமத்தை உடையவர், கோபக்காரர் என்கின்றனர். சரீரத்தின் பெயரைக் கூறுகிறார்கள். இதற்குத் தான் தேக உணர்வுடைய உலகம், இறங்கும் கலையின் உலகம் என கூறப்படுகிறது. சத்யுகத்தில் இவ்வாறு நடக்காது. அங்கே ஆத்ம உணர்வுடையவராக இருக்கிறார்கள். நீங்களும் ஆத்ம உணர்வுடையவராக மாற்றப்படுகிறீர்கள். தன்னை ஆத்மா என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நான் ஆத்மா இந்த உடல் என்ற ஆடையை அணிந்து நடிக்கின்றேன். அந்த நடிகர்கள் விதவிதமான உடைகளை மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் முதலில் சாந்திதாமத்தில் இருந்தீர்கள் என பாபா கூறுகின்றார். உங்களுடைய வீடு சாந்திதாமம் ஆகும். அந்த எல்லைக்குட்பட்ட நாடகம் இருப்பது போன்று இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம் ஆகும். அனைத்து ஆத்மாக்களும் பரந்தமாத்தில் இருந்து வந்து சரீரத்தை ஏற்று நடிக்கின்றது. ஆத்மாக்களின் உண்மையான வீடு பரந்தாமம் ஆகும். அந்த நடிகர்களின் வீடு இங்கு தான் இருக்கிறது. வெறும் உடையை மட்டும் மாற்றிக் கொண்டு வந்து நடிக்கிறார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். தந்தையோ குழந்தைகளே ! குழந்தைகளே ! என்று தான் கூறுவார். சன்னியாசிகள் குழந்தைகளே ! என்று கூற மாட்டார்கள். நான் பதீத பாவனர். அனைத்து ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை என்று பாபா கூறுகின்றார். அவரைத் தான் நீங்கள் காட்ஃபாதர் என்கிறீர்கள். காட்ஃபாதர் நிராகாரராக இருக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட காட் ஃபாதர் என்று கூறமாட்டார்கள். அவர்களுக்குள்ளும் கூட ஆத்மா இருக்கிறது. பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ...... என்று கூறுகிறார்கள். தேவதைகள் என்ன செய்கிறார்கள். இது யாருக்கும் தெரிவில்லை. நீங்கள் நாடகத்தின் படி எப்படி நடிக்கிறீர்கள் என்பதை பாபா தான் வந்து புரிய வைக்கின்றார். உலகம் ஒன்று தான் கீழே பாதாளத்திலோ அல்லது மேலேயோ உலகம் இல்லை. உலகம் ஒன்று தான். அதனுடைய சக்கரம் சுழன்றுக் கொண்டிருக்கின்றது. நிலவில் இடம் வாங்கலாம் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் எவ்வளவு இழந்து ஏழைகளாகிவிட்டனர் என பாபா புரிய வைக்கிறார். பாரதவாசிகளைத் தான் சொல்கின்றார்-நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக புத்திசாலிகளாக இருந்தீர்கள். இந்த லஷ்மி நாராயணரின் இராஜ்ஜியம் உலகம் முழுவதும் இருந்தது. அதை யாரும் கொள்ளை அடிக்க முடியாது. அங்கே எந்த ஒரு பிரிவும் இல்லை. இங்கேயோ எத்தனை பிரிவுகள் உள்ளன. தங்களுக்குள் சிறு சிறு துண்டுகளுக்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவருமே உலகத்திற்கே அதிபதியாக இருந்தீர்கள். இப்போது துண்டாகிவிட்டது. இது யாருக்கும் தெரியவில்லை. பாரதம் தான் உலகத்திற்கே அதிபதியாக இருந்தது.



    ஆத்மாவிற்கு என்ன பாகம் கிடைத்திருக்கிறதோ அது ஒரு போதும் அழியாது, நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என பாபா புரிய வைத்திருக்கிறார். இப்போது நீங்கள் மீண்டும் மனிதனிலிருந்து தேவதையாகிக் கொண்டிருக்கின்றீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். உங்களுடைய நடிப்பு நடந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு போதும் முடிவதில்லை, யாரும் மோட்சத்தைப் பெறுவதில்லை. எத்தனை பல்வேறு குழுக்கள் இருக்கிறார்களோ பல்வேறு சாஸ்திரங்கள் இருக்கிறதோ அவ்வாறு பல்வேறு வழிகள் உள்ளன. மனிதர்களுக்குள் எவ்வளவு அசாந்தி இருக்கிறது. எங்கு சென்றாலும் மனசாந்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். தேக உணர்வில் வந்து இவ்வாறு கூறுகிறார்கள். மனம் மற்றும் புத்தி என்பது ஆத்மாவின் பகுதிகள் என பாபா புரிய வைக்கிறார். மற்றவை அனைத்தும் இந்த உடலின் இந்திரியங்கள் (உறுப்புகள்) ஆகும். ஆத்மா எனது மனதிற்கு அமைதி எப்படி கிடைக்கும் என்று கூறுகிறது : உண்மையில் இப்படிக் கூறுவது தவறாகும். நீங்கள் ஆத்மா உங்களுடைய சுய தர்மமே அமைதியாகும். நீங்கள் இவ்வாறு கூறுங்கள்- ஆத்மாவாகிய எனக்கு அமைதி எப்படி கிடைக்கும். இதில் கர்மம் செய்து தான் ஆக வேண்டும். இந்த விசயங்களை பாபா தான் புரிய வைக்கின்றார். உலகத்தின் இந்த ஞானம் யாருக்கும் இல்லை. அது பக்தி மார்க்கமாகும். அவர்களுக்கு ஞானத்தைப் பற்றித் தெரியவில்லை. ஞானத்தை ஒரு தந்தை தான் அளிக்கிறார். நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று பாபாவே கூறுகின்றார். கலியுகத்தின் முடிவில் அனைவரும் பதீதமாக இருக்கிறார்கள். இது இராவண இராஜ்ஜியம் ஆகும். இராவணனை பாரத வாசிகள் தான் எரிக்கிறார்கள். பாபா பதீத பாவனரின் பிறவியும் இங்கே தான் என்றால் இராவணனின் பிறவியும் இங்கே தான் ! இராவணன் அனைவரையும் அழுக்காக மாற்றுகிறான். ஆகவே அவனை எரிக்கிறார்கள். இந்த விசயங்கள் யாருடைய புத்தியிலும் இல்லை. இப்போது பாரதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணரின் லீலை, பஜன் போன்றவைகளை செய்கிறார்கள். உண்மையில் கிருஷ்ணரின் லீலை எதுவும் இல்லை என்று பாபா கூறுகின்றார். கிருஷ்ணர் என்ன செய்தார். கம்ச புரியில் ஜென்மம் எடுத்தாகக் கூறுகிறார்கள். இப்போது கம்சன் என்று பேய்க்குக் கூறப்படுகிறது. சத்யுகத்தில் அசுரன் எங்கிருந்து வந்தான். சத்யுகத்தில் இருந்த கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகளை அனுபவித்து இச்சமயம் அழுக்கிலிருந்து தூய்மையாக மாறிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறிகிறீர்கள். தன்னுடைய பதவியை மீண்டும் அடைந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறே நீங்களும் கிருஷ்ணபுரியில் இருந்தீர்கள் 84 பிறவிகளை எடுத்து இப்போது மீண்டும். தனது பதவியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் சிவபாபாவின் ஜெயந்தி தான் கொண்டாட வேண்டும். சிவபாபா அனைவரையும் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய லீலை எதுவும் இல்லை. பதீத பாவனா பாபா வாருங்கள் வந்து எங்களை நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். தாங்கள் எங்களுடைய தந்தை என்றால் நாங்கள் சொர்க்கத்தில் இருகக வேண்டும். நாங்கள் விகார உலகத்தில் ஏன் இருக்கிறோம். ஆகவே தான் ஓ, காட்ஃபாதர் எங்களை இந்த துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என அழைக்கிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தை யாரும் அறியவில்லை என பாபா கூறுகின்றார். சாஸ்திரங்களில் நாடகத்தின் ஆயுள் மிக நீளமாக எழுதப்பட்டுள்ளது. புது உலகம் பழையதாக ஆகத்தான் வேண்டும். சதோ, ரஜோ, தமோவில் வந்து தான் ஆக வேண்டும். இது எல்லையற்ற விசயம் ஆகும். இப்போது நீங்கள் மீண்டும் உலகத்திற்கு அதிபதியாகிக் கொண்டிருக்கிறீர்கள். பாரத வாசி யார் உலகத்தில் இருந்தனரோ அவரே 84 பிறவியின் நடிப்பை நடிப்பார்கள். இப்போது நீங்கள் தூய்மை ஆகிறீர்கள். மற்ற அனைத்து மனிதரும் அழுக்காக இருக்கிறார்கள். அப்போது தான் தூய்மையானவர்கள் முன் சென்று வணங்குகிறார்கள். தூய்யைமானவரை தூய்மையானவர் ஏன் வணங்குவார்கள்? சன்னியாசிகள் தூய்மையாக இருக்கிறார்கள். ஆகவே தான் அழுக்கான மனிதர்கள் அவர்களுக்கு முன் தலை வணங்குகிறார்கள். கன்னியானவள் தூய்மையாக இருப்பதால், அனைவருமே அவர்களுக்கு முன் தலை வணங்குகிறார்கள். அதே கன்னி திருமணம் செய்து மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டால் அவர் தலை வணங்க வேண்டியிருக்கிறது. இப்போது அனைவரையும் தூய்மையாக்குவதற்காக எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். அவர்கள் அனைவருமே கலியுகத்தில் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அழுக்கான உலகத்திற்குப் போகக் கூடாது. இதுவே கல்யாணகாரி யுகம் ஆகும். தந்தை வந்து அனைவருக்கும் நன்மை செய்கிறார். இப்போது நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். இல்லை என்றால் இவர்கள் நாஸ்திகர்கள் என்று மனிதர்கள் நினைப்பார்கள். யார் தனது தந்தையையும், படைப்பின் முதல், இடை, இறுதியையும் அறியவில்லையோ அவர்களை தான் நாஸ்திகர்கள் என்று உண்மையில் கூறலாம். இச்சமயம் ஏழையாகி அனாதியாகி இருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் சண்டை, ஒருவருக்கொருவரை அடிப்பதில் தாமதம் ஆவதில்லை. ஆகவே இதற்கு நாஸ்திகர்களின் உலகம் என்று கூறப்படுகிறது. அதாவது தந்தையை அறியாதவர்கள். நீங்களோ அறிந்தவர்கள். நாம் கல்புத்தியாக இருந்தோம். இப்போது பாபா நம்மை தங்க புத்தி உடையவராக மாற்றிக் கொண்டிருக்கிறார். வேறு எந்த துன்பமும் இல்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். ஒரு மணி நேரம் மட்டும் படியுங்கள் என்று பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை மட்டும் நினையுங்கள். சரீரத்தை நினைத்தால் லௌகீக உறவுகளின் நினைவு வரும். ஆத்ம உணர்வில் இருந்தால் தந்தையாகிய எனது நினைவு மட்டும் வரும். இது விகார உலகம் ஆகும். விஷக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். விஷ்ணுவை பாற்கடலில் காண்பிக்கிறார்கள். அங்கே நெய்யாறு ஓடியதாகக் கூறுகிறார்கள். இங்கேயோ மண்ணென்ணை கூட கிடைப்பதில்லை. வித்தியாசம் இருக்கிறது அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தந்தை தான் படகோட்டி அல்லவா? எனது படகை கரை சேருங்கள் என்று பாடுகிறார்கள். அனைவரும் படகுகள் ஆவீர்கள். படகோட்டி ஒரு தந்தை ஆவார். இந்த உடலை இங்கேயே விட வேண்டும். மீதம் ஆத்மாக்களை இவ்வுலகை விட்டு சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்வார். அங்கிருந்து சுகதாமத்திற்கு அனுப்புவார். பரம்பிதா பரமாத்மாவிற்குத் தான் படகோட்டி என்று கூறப்படுகிறது. பல விதமாக பாபாவின் மகிமைகளைப் பாடுகிறார்கள். இப்போது நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். ஸ்ரீஸ்ரீசிவபாபா உயர்ந்தவராக மாற்றுவதற்காக வந்திருக்கின்றார். இது கீழான உலகம் என்று பகவானே கூறுகின்றார். இப்போது நீங்கள் பரம்பிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் படி நடந்து உயர்ந்தவர்கள் ஆகின்றீர்கள். இது எவ்வளவு ரமணீகரமான விசயங்கள் ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் புரிகிறது. மற்றவர்களுக்குப் புரிவதில்லை. இப்போது தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் யாரெல்லாம் வேறு தர்மத்தில் சென்றிருக்கிறார்களோ அவர்களே மீண்டும் பிராமணர் ஆவார்கள். பிரம்மா குமார்-குமாரி ஆகாமல் பாபாவிடமிருந்து சொத்தை அடைய முடியாது. இப்போது நீங்கள் பிரம்மா குமார்-குமாரிகள் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ செய்விக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். அனைவரும் இவ்வளவு செய்ய முடியாது. முழுமையாகப் படிக்கவில்லை என்றால், அதன் பலன் என்ன கிடைக்கும். ஒருவேளை சரீரத்தை விட்டுவிட்டால் சொர்கத்திற்கு வரலாம். ஆனால் முற்றிலும் சாதாரண பிரஜையாக வருவர். ஒரு வேளை பாபாவினுடையவராகி நன்கு படித்தால் இராஜ்ய பதவி பெறலாம். படிக்கவில்லை என்றால் அவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்துக் கொள்ளலாம். தூய்மையாக இருப்பார்கள், படிப்பார்கள் என்றால் உயர்ந்த பதவி பெறுவார்கள். அசுத்தமாக இருந்தால் பாபாவை நினைக்க முடியாது. கர்ம பந்தனத்தின் கணக்கு எப்போது நீங்கும்? இவ்வாறு பலர் இருக்கிறார்கள். வண்டியின் இரண்டு சக்கரமும் தூய்மையாக இருந்தால் சரியாக ஓடும். இருவரும் தூய்மையாக இருந்தால் ஞான சிதையில் அமர்ந்து விடுவார்கள். இல்லையென்றால் பூசல்கள் ஏற்படும்.



    பாபா, ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவசரன் என நாங்கள் அறிகிறோம், அதை ஏன் சிறிது கொண்டாடக் கூடாது என்று சில குழந்தைகள் கூறுகின்றார்கள். சரி, நாம் கிருஷ்ணரின் ஆத்மாவைக் கூட கூப்பிட முடியும். அவர் வந்து விளையாடலாம், நடனமாடலாம், வேறு என்ன செய்வார்? கோப கோபிகையர்கள் இங்கே தான் இருக்கிறார்கள், அங்கேயோ இளவரசன் இளவரசிகள் தங்களுக்குள் சேரும் போது நடனமாடுகிறார்கள். தங்க புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். இந்த விளையாட்டுகளை எல்லாம் நீங்கள் கடைசியில் பார்ப்பீர்கள். இந்த நடிப்பு அனைத்தும் நடக்கும். ஆரம்பத்தில் பார்த்தீர்கள். பிறகு நீங்கள் முயற்சியில் ஈடுபட்டு விட்டீர்கள். இப்போது மீண்டும் கடைசியில் சாட்சாத்காரம் கிடைப்பது ஆரம்பம் ஆகும். யார் யார் எந்த பதவியை பெறுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை வந்து இந்த ரகசியங்கள் அனைத்தையும் புரிய வைக்கிறார். வேதங்கள், சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா என உங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் ஏன் ஏற்க மாட்டோம் என கூறுங்கள். இது பக்தி மார்க்கத்தின் பொருளாகும். இதில் ஞானம் எதுவும் இல்லை. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஒருவர் தான். ஞானம் கிடைத்ததும் பக்தி தானாகவே விடுபட்டுப் போகிறது. இப்போது நீங்கள் கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால், இந்த லஷ்மி நாராயணன் மீண்டும் புது உலகை ஆட்சி செய்வார்கள் என்பது புத்தியில் தோன்றுகிறது. இருபுறமும் சீராக உறவுகளைப் பராமரிக்க வேண்டும் என்று பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இல்லறத்தில் இருந்துக் கொண்டே தூய்மையாக வேண்டும். முழுமையாக தூய்மையாகுங்கள், முழுமையாக வைஷ்ணவர் ஆகுங்கள், மேலும் விஷ்ணுபுரியின் இராஜ்யத்தை அடையுங்கள் என ஸ்ரீமத் கூறுகிறது. நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. யோகத்தின் மூலமாக கர்ம பந்தனத்தின் கணக்கு வழக்கை முடித்து விட்டு தூய்மையாக வேண்டும். ஞான சிதையில் அமர வேண்டும். முழுமையிலும் முழுமையான வைஷ்ணவர் என்றால், தூய்மையாக வேண்டும்.



    2. தனது சாந்த சுய தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் சாந்தி தாமத்தின் நினைவை ஏற்படுத்த வேண்டும் ஒரு போதும் அசாந்தி அடையக் கூடாது.



    வரதானம் :

    மாயாவின் தடைகளை விளையாட்டுப் பொருள் என அனுபவம் செய்யக் கூடிய மாஸ்டர் உலகை உருவாக்குபவர் ஆகுக.



    வயதானவர்கள் முன்பு சிறிய குழந்தைகள் தங்களின் குழந்தைத் தனத்தால் கவனக்குறைவான காரணங்களினால் ஏதாவது பேசிவிட்டால், அதுபோன்ற காரியங்களை செய்து விட்டால், பெரியவர்கள் இவர்கள் குற்றம் இல்லை, அறியாதவர்கள், சிறு குழந்தைகள் என நினைப்பர். எந்த ஒரு தாக்கமும் இருக்காது. எப்போது தாங்கள் தங்களை மாஸ்டர் உலகை உருவாக்குபவர் என நினைக்கிறீர்களோ அப்போது இந்த மாயாவின் தடை குழந்தைகளுக்கு விளையாட்டு போல தோன்றும். மாயை எந்த ஒரு ஆத்மா மூலமாகவும் பிரச்சனை, தடைகள் மற்றும் தேர்வுத்தாளாக மாறி வந்தாலும் அதில் பயப்பட மாட்டார்கள், அவர்களை குற்றமற்றவர்கள் என கூறுவார்கள்.



    சுலோகன் :

    அன்பு, சக்தி மற்றும் ஈஸ்வரிய ஈர்ப்பை தனக்குள் நிரப்பிக் கொண்டால் அனைவரும் சகயோகியாக ஆகிவிடுவர்.



    ***OM SHANTI***