BK Murli 11 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 11 October 2016 Tamil

    11.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! யோக பலத்தினால் விகாரங்கள் என்ற இராவணன் மீது வெற்றி அடைந்து உண்மையிலும் உண்மையான தசரா கொண்டாடுங்கள்.



    கேள்வி:

    இராமயணம் மற்றும் மகாபாரதத்திற்கிடையே என்ன சம்பந்தம் உள்ளது? தசரா எந்த விஷயத்தை நிரூபிக்கிறது?



    பதில்:

    தசரா ஆவது என்றால் இராவணன் அழிந்து விடுவது மற்றும் சீதைகளுக்கு விடுதலை கிடைப்பது. ஆனால் தசரா கொண்டாடுவதால் ஒன்றும் இராவணனிடமிருந்து விடுதலை கிடைப்பதில்லை. மகாபாரதம் ஏற்படும் பொழுது அனைத்து சீதைகளுக்கும் விடுதலை கிடைத்து விடுகிறது. மகாபாரத போரினால் இராவண இராஜ்யம் முடிவடைகிறது. எனவே இராமாயணம், மகாபாரதம் மற்றும் கீதை இவற்றிற்கிடையே மிகவும் ஆழமான சம்பந்தம் உள்ளது.



    பாடல்:

    கூட்டத்தில் ஒளி பிரகாசித்து எழுந்தது, விட்டில் பூச்சிகளுக்காக.. .. .. ..



    ஓம் சாந்தி.

    நீங்கள் பிராமண சம்பிரதாயத்தினர் ஆவீர்கள். உங்களை இப்பொழுது தெய்வீக சம்பிரதாயத்தினர் என்று கூற முடியாது என்று தந்தை தெரிவிக்கிறார். இப்பொழுது நீங்கள் பிராமண சம்பிரதாயத்தினர் ஆவீர்கள். பின்னால் தெய்வீக சம்பிரதாயத்தினர் ஆகப் போகிறவர்கள் ஆவீர்கள். இன்று (தசரா நாளன்று) எப்படி இவர்களது இராமாயணம் முடிவடையப் போகிறது போல உள்ளது. ஆனால் முடிவடைவதில்லை. ஒரு வேளை இராவணன் இறக்கிறான் என்றால் இராமாயணத்தின் கதை முடிந்து விட வேண்டும். ஆனால் அவ்வாறு ஆவதில்லை. மகாபாரதத்திலிருந்து விடுதலை ஆகிறது. இப்பொழுது இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இராமாயணம் என்றால் என்ன? மற்றும் மகாபாரதம் என்றால் என்ன? உலகம் இந்த விஷயங்களை அறியாமல் இருக்கிறார்கள். இராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டிற்குமிடையே சம்பந்தம் உள்ளது. மகாபாரதப் போரினால் *9இராவண இராஜ்யம் முடிவடைகிறது. பிறகு இந்த தசரா ஆகியவை கொண்டாட வேண்டியதே இல்லை. கீதை அல்லது மகாபாரதம் கூட இராவண இராஜ்யத்தை முடித்து விடக் கூடியதாகும். இப்பொழுது நேரம் இருக்கிறது. ஏற்பாடுகளும் ஆகிக் கொண்டிருக்கிறது. அது ஹிம்சையின் யுத்தம். உங்களுடையது அஹிம்சையினுடையதாகும். உங்களுடையது கீதை ஆகும். நீங்கள் கீதையின் ஞானம் கேட்கிறீர்கள். அதனால் என்ன ஆகப் போகிறது? இராவண இராஜ்யம் முடிவடையப் போகிறது. அவர்கள் இராவணனைக் கொல்கிறார்கள் என்றாலும் கூட இராம இராஜ்யமோ ஆவதில்லை. இப்பொழுது இராமாயணம் மற்றும் மகாபாரதம் இருக்கிறது அல்லவா? எனவே மகாபாரதம் இராவணனை அழிப்பதற்காக உள்ளது. இது மிகவுமே ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இதில் விசால புத்தி வேண்டும். மகாபாரத போரினால் இராவண இராஜ்யம் முடிவடைகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். அப்படி இன்றி இராவணனைக் கொல்வதால் மட்டும் இராவண இராஜ்யம் முடிந்து போய்விடும் என்பதல்ல. அதற்காகவே சங்கமம் வேண்டும். இப்பொழுது சங்கமம் ஆகும். இப்பொழுது நீங்கள் இராவணன் மீது வெற்றி அடைவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். இதில் ஞானத்தின் அஸ்திர சஸ்திரங்கள் (ஆயுதங்கள்) வேண்டும். அவை இல்லை. எப்படி இராவணனுக்கும் இராமருக்கும் யுத்தம் ஏற்பட்டது என்று காண்பிக்கிறார்கள். இந்த சாஸ்திரங்கள் எல்லாமே பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். இப்பொழுது நீங்கள் யோக பலத்தினால் இராவண இராஜ்யத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். இது மறைமுகமான விஷயங்கள் ஆகியது. 5 விகாரங்கள் என்ற இராவணன் மீது உங்களது வெற்றி ஏற்படுகிறது. எதன் மூலம்? கீதையினால். பாபா உங்களுக்கு கீதையைக் கூறிக் கொண்டிருக்கிறார். பாகவதமோ கிடையாது. பாகவதத்தில் கிருஷ்ணரின் சரித்திரத்தைக் காண்பிக்கிறார்கள். கிருஷ்ணரின் சரித்திரமோ எதுவும் கிடையாது. விநாசம் ஏற்படும் பொழுது மகாபாரத போர் நிகழும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதனால் தான் இராவண இராஜ்யம் முடிந்து போய் விடும். ஏணிப்படியில் கூட காண்பிக்கப்பட்டுள்ளது. எப்பொழுது முதற் கொண்டு இராவண இராஜ்யம் ஆரம்பமாகியதோ அப்பொழுது முதற் கொண்டு பக்தி மார்க்கம் ஆகி உள்ளது. இதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். கீதையின் சம்பந்தம் மகாபாரத போருடன் உள்ளது. நீங்கள் கீதையைக் கேட்டு இராஜ்யத்தை அடைகிறீர்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்காக போர் நிகழ்கிறது. மற்றபடி பாகவத சரித்திரம் ஆகியவை எல்லாமே வீணானது ஆகும். சிவபுராணத்தில் ஒன்றுமே இல்லை. இல்லையென்றால் கீதையின் பெயர் தான் சிவபுராணம் என்றிருக்க வேண்டும். சிவபாபா அமர்ந்து ஞானம் அளிக்கிறார். எல்லாவற்றையும் விட உயர்ந்தது கீதை ஆகும். கீதை எல்லா சாஸ்திரங்களையும் விட சிறியது ஆகும். மற்ற எல்லா புத்தகங்களையும் மிகவும் பெரியதாக அமைத்துள்ளார்கள். மனிதர்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களைக் கூட மிகவும் பெரியதாக அமைத்துள்ளார்கள். நேரு சரீரத்தை விட்டார். அவருடைய எத்தனை பெரிய புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சிவபாபாவினுடைய கீதையின் இந்த புத்தகங்கள் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். ஆனால் கீதை எவ்வளவு சிறியதாக உள்ளது. ஏனெனில் தந்தை கூறுவதே ஒரு விஷயம் ஆகும் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும். மேலும் சக்கரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவே! அதனால் கீதையை சிறியதாக அமைத்து விட்டுள்ளார்கள். இந்த ஞானம் மனப்பாடம் செய்வதற்கானதாகும். கீதையின் லாக்கெட் அமைக்கிறார்கள். அதில் சிறிய வார்த்தைகள் இருக்கும். இப்பொழுது பாபா கூட உங்கள் கழுத்தில் திரிமூர்த்தி மற்றும் இராஜ்யத்தின் லாக்கெட் அணிவிக்கிறார். கீதை என்பது அ (அப்பா) ஆ (ஆஸ்தி) என்ற இரண்டு வார்த்தைகளினுடையது ஆகும். இது மன்மனாபவ என்ற மறைமுகமான மந்திரத்திற்கான லாக்கெட் ஆகும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும். உங்களுடைய வேலை, யோகபலத்தினால் வெற்றி அடைவது. பிறகு உங்களுக்காக சுத்தமும் தேவை. உங்கள் யோக பலத்தினாலேயே இராவண இராஜ்யம் விநாசம் ஆகப் போகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். இராவண இராஜ்யம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பது கூடத் தெரியாது. இந்த ஞானம் மிகவுமே சுலபம் ஆகும். ஒரு நொடியின் விஷயம் ஆகும் அல்லவா? 84 பிறவிகளின் படியில் கூட இத்தனை இத்தனை பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்றுள்ளது. எவ்வளவு சுலபம் ஆகும். தந்தை ஞானக் கடல் ஆவார். ஞானம் கூறிக் கொண்டே வருகிறார். நீங்கள் எல்லா முரளியின் காகிதங்களை ஒன்று சேர்த்தீர்கள் என்றால் ஏராளமாக ஆகி விடும். தந்தை விளக்கமாகப் புரிய வைக்கிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று சுருக்கமாகக் கூறுகிறார். அவ்வளவே! மீதி நேரம் எதில் ஈடுபடுத்துகிறீர்கள். உங்கள் தலை மீது பாவங்களின் சுமை நிறைய உள்ளது. அது நினைவினால் தான் இறங்கும். இதில் உழைப்பு பிடிக்கிறது. அடிக்கடி நீங்கள் மறந்து விடுகிறீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் தடைகள் ஏற்படாது.



    தேக அபிமானியாக ஆகி விடும் பொழுது தடைகள் ஏற்படுகின்றன. கடைசியில் தான் ஆத்ம உணர்வுடையவராக ஆகிறீர்கள். பிறகு அரை கல்பம் எந்தத் தடைகளும் ஏற்படுவதில்லை. இது புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான விஷயங்கள் ஆகும். ஆரம்ப முதற் கொண்டு எவ்வளவு கூறிக் கொண்டே வந்துள்ளார். பிறகும் அ, ஆ (தந்தை, ஆஸ்தியை) மட்டும் நினைவு செய்யுங்கள் என்றே கூறுகிறார். அவ்வளவே! விருட்சத்தினுடையது விஸ்தாரம் ஆகும். விதையோ சிறியதிலும் சிறியதாக இருக்கும். விருட்சம் எவ்வளவு பெரியதாக வெளிப்படுகிறது. இன்று தசரா ஆகும் அல்லவா? இப்பொழுது இராமாயணத்திற்கு மகாபாரதத்துடன் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை பாபா புரிய வைக்கிறார். இராமாயணமோ பக்தி மார்க்கத்தினுடையதாகும். அரைகல்பமாக நடந்து வருகிறது. அதாவது இப்பொழுது இராவண இராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு மகாபாரதம் வந்த உடன் இராவண இராஜ்யம் முடிந்து போய் இராம இராஜ்யம் ஆரம்பமாகிவிடும். இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் என்ன வித்தியாசம் உள்ளது? இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை மற்றும் இராவண இராஜ்யத்தின் விநாசம் ஆகப் போகிறது. கீதையை கேட்டு நீங்கள் உலகின் அதிபதி ஆவதற்குத் தகுதியுடையவர் ஆகிறீர்கள். கீதை மற்றும் மகாபாரதம் கூட இப்பொழுதிற்காக உள்ளது. இராவண இராஜ்யம் முடியும் தருவாயில் உள்ளது. மற்றபடி அவர்கள் காண்பித்துள்ள போர் தவறாகும். யுத்தமானது 5 விகாரங்கள் மீது வெற்றி அடைவதற்கானது ஆகும். உங்களுக்கு தந்தை மன்மனாபவ மத்யாஜி பவ என்று கீதையின் இரண்டு வார்த்தைகள் கூறுகிறார். கீதையின் ஆரம்பத்திலும் மற்றும் முடிவிலும் இந்த இரண்டு வார்த்தைகள் வருகின்றன. உண்மையில் கீதையின் சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது என்று குழந்தைகள் புரிந்துள்ளார்கள். ஆனால் யாருக்காவது கூறினீர்கள் என்றால் கிருஷ்ணர் எங்கே என்பார்கள். பாபாவினுடைய விளக்கவுரை மற்றும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது. இந்த இராமாயணம் என்பது என்ன? மகாபாரதம் என்பது என்ன? என்பது யாருக்குமே தெரியாது. மகாபாரத போருக்குப் பின்னர் தான் சொர்க்கவாசல் திறக்கிறது. ஆனால் மனிதர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. எனவே நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதை தந்தை முழு உலகிற்காகக் கூறுகிறார். ஒரு கீதையையே குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். எல்லா மொழிகளிலும் கீதையின் பிரச்சாரம் உள்ளது. உங்களுடைய இராஜ்யத்தில் ஒரு மொழி தான் இருக்கும். அங்கு எந்த ஒரு சாஸ்திரம், புத்தகம் ஆகியவை இருக்காது. அங்கு பக்தி மார்க்கத்தின் எந்த விஷயமும் இருக்காது. பாரதத்தின் சம்பந்தமே இராமாயணம், மகாபாரதம் மற்றும் கீதையுடன் உள்ளது. பகவானோ குழந்தைகளுக்குக் கீதை கூறுகிறார். அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆகிறீர்கள். மகாபாரத போர் அவசியம் நிகழ வேண்டி உள்ளது. அதன் மூலம் பதீத உலகம் முடிந்து போய் விடும். கீதையினால் நீங்கள் பாவனம் ஆகிறீர்கள். பதீத பாவன பகவான் கடைசியில் தான் வருகிறார். காமம் மகா எதிரி ஆகும். இதன் மீது வெற்றி அடைய வேண்டும் என்று கூறுகிறார். காம விகாரத்தில் ஒரு பொழுதும் தோல்வி அடையக் கூடாது. இதனால் நிறைய தீமை ஏற்படுகிறது. விகாரங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய புகழ் பெற்ற மந்திரிகள் ஆகியோர் கூட தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். காமத்திற்கு பின்னால் மிகவும் மோசமாகி விடுகிறார்கள். எனவே பாபாவிடம் இளைஞர்களாகிய குழந்தைகள் வருகிறார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இது போல நிறைய பேர் பிரம்மச்சரியத்தில் இருக்கிறார்கள். முழு ஆயுள் திருமணம் புரிவதில்லை. பெண்கள் கூட இருக்கிறார்கள். நன்ஸ் (கிறித்துவ சகோதரிகள்) ஒரு பொழுதும் விகாரத்தில் செல்வதில்லை. ஆனால் அதனால் எந்த ஒரு பிராப்தியும் கிடையாது. இங்கோ தூய்மையாக ஆகி ஜன்ம ஜன்மாந்திரமாக சொர்க்கத்தின் அதிபதியாக ஆகக் கூடிய விஷயம் ஆகும். ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்களின் சுமை தலை மீது இருக்கிறது. அவை நீங்கும் பொழுது தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். இங்கு மனிதர்கள் பாவம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஏதோ ஒரு பிறவியில் ஒருவர் சந்நியாசி ஆகிறார் என்றாலும் கூட, பிறவியோ விகாரத்தினால் தானே எடுக்கிறார்கள். இராவண இராஜ்யத்தில் விகாரம் இன்றி பிறவி ஆவதில்லை. அங்கு பிறவி எப்படி ஆகும்? என்று கேட்கிறார்கள். யோகபலம் என்று எதற்குக் கூறப்படுகிறது? இது கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பதே இது சம்பூர்ண நிர்விகாரி உலகமாக. இராவண இராஜ்யமே இல்லை. எனவே கேள்வி எழ முடியாது. எல்லாமே சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகும். முதியவர் ஆகும் பொழுது நான் போய் குழந்தையாக ஆகப் போகிறேன் என்ற சாட்சாத்காரம் ஆகும். தாயின் கர்ப்பத்தில் செல்லப் போகிறேன். குறிப்பிட்ட இந்த வீட்டிற்குப் போகப் போகிறேன் என்பது தெரியாது. இப்பொழுது சிறிய குழந்தையாக வேண்டும். அவ்வளவே ! ஆண் மயில் மற்றும் பெண் மயிலின் உதாரணம் உள்ளது. கண்ணீரின் மூலமாக கர்ப்பம் ஆகிறது. பப்பாளி மரத்தில் கூட ஒரு ஆண் செடி, ஒரு பெண் செடி இருக்கும். ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் பொழுது பழம் கொடுக்கிறது. இதுவும் அதிசயம் ஆகும். ஜடப் பொருட்களிலேயே அவ்வாறு இருக்கும் பொழுது உயிரூட்டமாக சத்யுகத்தில் என்ன ஆக முடியாது. இந்த எல்லா விளக்கங்களும் இனி போகப்போக புரிய வரும். முக்கியமான விஷயமாவது நீங்கள் தந்தையை நினைவு செய்து தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அங்கு எந்த வழக்கம் இருக்குமோ அதைப் பார்ப்பீர்கள். நீங்கள் யோகபலத்தினால் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள் என்றால் குழந்தைகள் ஏன் பிறக்க முடியாது? இது போன்ற கேள்விகள் நிறைய கேட்கிறார்கள். பிறகு ஏதாவது ஒரு விஷயத்தில் முழுமையாக பதில் கிடைக்கவில்லை என்றால், விழுந்து விடுகிறார்கள். சிறிய விஷயத்தில் கூட சந்தேகம் வந்து விடுகிறது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தினுடையவை ஆகும். பரமபிதா பரமாத்மா வந்து பிராமண தர்மம், சூரிய வம்ச சந்திர வம்ச தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். பிராமணர்கள் சங்கமயுகத்தினர் ஆவார்கள். பாபா சங்கமயுகத்தில் வர வேண்டி உள்ளது. ஹே பதீத பாவனரே ! வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். அந்த பக்கம் இருப்பவர்கள் (வெளிநாட்டினர்) ஹே லிபரேட்டர், துக்கத்திலிருந்து லிபரேட் செய்யுங்கள் (விடுவியுங்கள்) என்று கூறுகிறார்கள். துக்கம் கொடுப்பது யார் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இராவண இராஜ்யம் முடிவடைகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு பாபா இராஜயோகம் கற்பிக்கிறார். படிப்பு முடிவடையும் பொழுது விநாசம் ஆகிறது. அதற்கு மகாபாரதம் என்று பெயர் வைத்துள்ளார்கள். மகாபாரதத்தில் இராவண இராஜ்யம் முடிவடைந்து விடுகிறது. தசராவில் ஒரு இராவணனை அழிக்கிறார்கள். அவை எல்லைக்குட்பட்ட விஷயங்கள் ஆகும். இவை எல்லையில்லாத விஷயங்கள் ஆகும். இந்த முழு உலகமே முடிந்து போய் விடும். எனவே இவ்வளவு சிறிய பெண் குழந்தைகள் எவ்வளவு பெரிய ஞானம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த உலகியல் ஞானம் எண்ணெய் போல. இது உண்மையான நெய் ஆகும். எனவே இரவு பகலிடையேயான வித்தியாசம் உள்ளது. இராவண இராஜ்யத்தில் நீங்கள் எண்ணெய் சாப்பிட வேண்டி வருகிறது. முன்பெல்லாம் இவ்வளவு மலிவான உண்மையான நெய் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு விலை அதிகமாக ஆகி விடும் பொழுது எண்ணெய் சாப்பிட வேண்டி வருகிறது. இந்த கேஸ், மின்சாரம் ஆகியவை முதலில் எதுவும் இருக்கவில்லை. ஒரு சில வருடங்களுக்குள் எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. எல்லாமே அழிந்து விடப் போகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா நம்மை இலட்சுமி நாராயணர் போல ஆக்குவதற்காக கற்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த போதை இந்த பாபாவிற்கோ நிறைய இருக்கிறது. குழந்தைகளை மாயை மறக்க வைத்து விடுகிறது. நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுக்க வந்துள்ளோம் என்று கூறுகிறீர்கள் என்றால், பின் அந்த போதை ஏன் ஏறுவதில்லை. இனிமையான இல்லம், இனிமையான ராஜதானி மறந்து விடுகிறது. யார் யார் ஆழமான சேவைகள் செய்கிறார்களோ அவர்களே மகாராஜ குமார் ஆவார்கள் என்பதை பாபா அறிந்துள்ளார். உங்களுக்கு இந்த போதை ஏன் இருப்பதில்லை? ஏனெனில், நினைவில் இருப்பதில்லை. சேவையில் முழுமையாக மும்முரமாக இருப்பதில்லை. ஒரு சில நேரங்களில் சேவையில் துள்ளிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நேரங்களில் மந்தமாகி விடுகிறார்கள். இவ்வாறு ஆகிறது தானே என்று ஒவ்வொருவரும் தங்களையே கேளுங்கள். சில நேரங்களில் அவ்வப்பொழுது தவறுகள் கூட ஆகி விடுகின்றன. எனவே பாபா புரிய வைக்கிறார். நாக்கு மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும். யாருக்கும் ஆவேசம் வரக் கூடாது. தந்தை எவ்வளவு அன்பின் கடலாக இருக்கிறார். இப்பொழுது பசு வதையை நிறுத்துவதற்காக எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறார்கள். காமவாளைச் செலுத்துவது எல்லாவற்றையும் விட பெரிய வதை ஆகும் என்று பாபா கூறுகிறார். முதலில் அதை நிறுத்துங்கள். மற்றபடி அதெல்லாம் ஒன்றும் நின்று விடப் போவதில்லை. எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறார்கள். இந்த காமவாளை இருவரும் செலுத்தக் கூடாது. மனிதர்களின் விஷயங்கள் எங்கே? தந்தை கூறும் விஷயங்கள் எங்கே? யார் காம விகாரத்தை வெல்வார்களோ அவர்களே தூய்மையான உலகிற்கு அதிபதி ஆவீர்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. தந்தைக்குச் சமானமாக அன்பின் கடலாக வேண்டும். ஒரு பொழுதும் ஆவேசத்தில் வரக் கூடாது. தங்களது நாக்கினை மிகவும் இனிமையாக வைத்திருக்க வேண்டும்.



    2. தீவிரமாக சேவை செய்ய வேண்டும். இப்பொழுது இந்த பழைய உடலை விடுத்து போய் இளவரசர், இளவரசி ஆகிடுவோம் என்ற போதையில் இருக்க வேண்டும்.



    வரதானம்:

    கர்மாதீத நிலையில் நிலைத்திருந்து நாலா புறங்களின் சேவைகளை கையாளக் கூடிய சித்தி சொரூபம் ஆகுக !



    மேற்கொண்டு நாலாபுறங்களின் சேவைகளின் விஸ்தாரத்தை நடத்துவதற்கு பல்வேறு சாதனங்களை கையாள வேண்டி வரும். ஏனெனில் அந்த நேரத்தில் கடிதப் போக்குவரத்து, தந்தி, தொலைபேசி ஆகியவை வேலை செய்யாது. அப்பேர்ப்பட்ட நேரத்தில் வயர்லெஸ் செட் வேண்டும். இதற்காக இப்பொழுதே கர்மயோகி, கர்மாதீத நிலையில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள். அப்பொழுது நாலா புறங்களிலும் சங்கல்பத்தின் சித்தி மூலமாக சேவையில் சகயோகி ஆக முடிந்தவர்களாக இருப்பார்கள்.



    சுலோகன்:

    பரமாத்ம அன்பின் பாலனையின் சொரூபம் உங்களுடைய சகஜயோகி வாழ்க்கை ஆகும்.



    ***OM SHANTI***